Tag: சோகக்கவிதை
உன்னை எண்ணி தவிக்கிறேன் ..!
உன்னை எண்ணி தவிக்கிறேன் ..!
என்ன செய் தாயோ
என்னை ஏங்க வைத்தாயோ
என்னை ஏங்க வைத்தேனோ
என் இதயம் பறித்தாயோ
முன் பனியாய் பின்னிரவில்
முன்னே வாராயோ – நான்
முழு நிலவில் குளித்திட
முழு உலா வாராயோ
எதுகை மோனை எனதாகும் – என்
ஏக்கம் வாங்கு உனதாகும்
படித்து பாரு புதிராகும்
படைக்க முனை விழிப்பாகும்
சந்தம் இல்லா பாட்டுக்குள்ளே
சங்கதி இருக்காதே
அந்தி சாயும் வேளையிலே
ஆள் மனம் தூங்காதே
முத்தம் தரவா முன்னே வரவா
முழு நிலவே பதில் தர வா
நித்தம் வரவா நீளும் இரவா
நினைவில் வைத்திட வா
உன்னை எண்ணி தவிக்கிறேன்
உருகி மெழுகாய் அழுகிறேன்
வின் விட்டு வாராயோ
விழுந்து உடல் தழுவாயோ ..?
வன்னி மைந்தன்
ஆக்கம் 03-01-2022
- சீனாவின் அலுமினிய ஏற்றுமதி அதிகரிப்பு
- அமெரிக்காவின் முன்மொழிவுக்கான பதில் ‘பொருத்தமான நேரத்தில்’ வரும் என ஈரான்
- தெற்கு லெபனானில் உள்ள ஒன்பது கிராமங்களுக்கு வெளியேற்ற எச்சரிக்கை
- கபில சந்திரசேன மரணம் தொடரும் அனுரா படுகொலைகள்
- சலாவ எஸ்டேட்டில் கொள்ளை
- இணையவழித் திருட்டுகள் குறித்த விசாரணைக்கு ஆதரவளிக்க அமெரிக்கா தயார்
- அத்தமஸ்தானத்தின் பிரதம மந்திரி கைது
- நீதிமன்றப் பதிவாளர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்
- குருணேகேலா பிரதி மேயரின் கட்சி உறுப்பினர் பதவியை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இடைநீக்கம் செய்தது
- ஹோர்முஸ் ஜலசந்தியில் ஈரானின் நடவடிக்கை
- காலியில் இலங்கையின் முதல் பெண்கள் கருத்தரிப்புக் குறைபாடு மருத்துவப் பிரிவு
- ஈரான் போரினால் வளைகுடாவில் சுமார் 1500 கப்பல்கள் சிக்கியுள்ளன
- மே 15 அன்று இலங்கையில் பேபால் அறிமுகம்
- ஹோர்முஸ் ஜலசந்தியில் 3 கடற்படைக் கப்பல்கள் மீதான ஈரான் தாக்குதல்
- ஐரோப்பாவை மிரட்டும் அமெரிக்கா டிரம்ப்
- நெதர்லாந்தின் மிகப்பெரிய அரசியல் கட்சியின் தலைமையகத்தில் வெடிப்பு
சிரிக்கும் ….வாழ்வு ….!
சிரிக்கும் ….வாழ்வு ….!
சந்தன மேனி வெந்தணல் வேக
சாலையில் போகுதடி ….
சாளரம் வைத்த சட்டை மாட்டி-
சர வெடி போடுதடி-
ஆளை அள்ளும் புயலும் கிள்ள
அந்தோ நெளியுதடி ….
ஆடவர் கண்கள் மேனியில் துள்ள
அடி வாங்கியே மாயுதடி …
கூடு உடைத்து கறைவைகள் ஓட
கூடுது வீதிகளே ….
கூட்டியே அள்ளிட – பார்த்தே
கூடுது சதிகளே ….
ஏங்கி சாகும் வேருக்கின்று
ஏக்கம் புரியாது .
ஏறி பறக்கும் சீட்டுக்கின்று – இந்த
ஏக்கம் தெரியாது ….
அடி வாங்கி நொந்து
அழுகையில் தானே அவலம் புரிகிறது- இப்போ
அழுது புலம்பி என் கண்டாய்
அட வாழ்வு சிரிக்கிறது ….!
வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -24/02/2019























