Tag: மரபுக்கவிதைகள்
வென்றுவிட ஒன்று படு
வென்றுவிட ஒன்று படு
வென்றுவிட ஒன்று படு …!
சிங்கள தனி சட்டம் நாட்டினிலே
சிறுபாண்மை வாடுது வீட்டினிலே
சில்லறை காவடி தோள்களிலே
சிலுக்காக ஆடுது வேட்டிகளே
தன் மானம் இங்கே விற்று விட்டார்
தமிழரை காலடி வைத்து விட்டார்
தான் ஒங்க வீட்டை வளர்த்து விட்டார்
தமிழரே தாமெனே கூவி நின்றார்
வந்தேறி குந்திட வைத்து விட்டார்
வலிகளை அள்ளியே வைத்து விட்டார்
துயர் போக்க இன்று என் செய்வார்
தூர பார்வை என்று கொள்வார்
வேங்கைகள் தாமென முழங்கி வந்தார்
வேரோடு வீரத்தை சாய்த்து விட்டார்
ஓட்டுக்கு மட்டும் வீடும் வந்தார்
ஓடமாய் கரை ஏறி ஓடி விட்டார்
இவர் தான் எங்கள் தலைவர் என்றால்
இடி மின்னல் இவரை கொல்லாதோ
இன்றே தமிழர் விழித்து விட்டால்
இன்றே நல் தீர்வு கிட்டாதோ …?
வன்னி மைந்தன்
ஆக்கம் 24-10-2021
இவளை எனக்கு தா
இவளை எனக்கு தா
உருண்டு வரும் நீரலைகள்
உன் உடலில் மோதி விழ
என் உடலோ நடுங்குதடி
ஏக்கத்தில தவிக்குதடி
கட்டியணைத்து பேரலைகள்
கண்ட படி முத்தமிட
விட்டு உடல் இருப்பவளே
விடை கூறு என் செய்வேன்
அங்கமதை தொட்டு விழி
ஆடை உருவி பார்க்குதடி
வேர்க்காத என் உதடும்
வேர்த்து இன்று கொட்டுதடி
வான் நிலவு அருவியில
வளைந்து நீராட
நாள் எழுதி கொடுத்தவரே
நான் உனக்கு மாலையிட
தேதி ஒன்று தருவீரா – என்
சேதி சொல்லி போவீரா
புகழ் மாலை பாடிடுவேன் – இந்த
பூவை எனக்கு தருவீரா ..?
வன்னி மைந்தன்
ஆக்கம் 22-10-2021
வன்னி மைந்தன் கவிதைகள்
உயிர் பிரியும் மர்மம்
உயிர் பிரியும் மர்மம்
ஏ மனிதா உன் உடலில்
ஏழடுக்கு தோலிருக்கு
ஓர் அடுக்கு தடுத்து விட்டால்
ஓர் உயிரும் பிரியாது
கட்டை விரல் ஊடக
கடைசி உயிர் பிரிந்திடுமாம்
கட்டை விரல் கட்டி போடும்
காரணங்கள் இதுவொன்றாம்
நாடி பிடித்து பார்த்த பின்னே
நல்ல மனிதன் செத்தான் என்பார்
இறந்து விட்டால் கருவிழியோ
இரண்டாக வெடித்திடுமாம்
அரவம் மனிதன் தீண்டி விடின்
அட இரண்டரை மணி முன் பிழைப்பார்
கவிழ் தும்பை சாறெடுத்து
காதோடு மூக்கு வழி
உயிர் பிரியும் மர்மம்
விட்டு பாரு பிழைத்திருப்பான்
வீரனாக உயிர்த்தெழுவான் – இல்லை
ஒற்றை காது உள் புகுந்து மறு காது வடிந்து விடின்
மரணித்தான் என்பாராம்
இறந்தவர்கள் மூன்று நாளின்
இடைவெளிக்குள் உயிர்த்திடுவார்
அதனாலே மூன்று நாள்
அவர் உடலை வைத்திருப்பார்
பண்டைய மருத்துவத்தின்
பறை சாற்றல் இதில் இருக்கு
இக்குறிப்பை எடுத்து வைத்து
இரண்டொருவர் பகிர்ந்து விடு
விலங்குகள் உயிர் பிழைக்கும்
விசித்திரம் இதில் இருக்கு
கானகத்தில் இம் மூலிகையை
கண்டு உண்டு உயிர் வாழும்
பார்த்தாயா என் மனிதா
படைத்தவனின் படையலதை
வீரப்பன் காட்டில் வாழ்ந்த
விசித்திரம் இது தானோ ..?
கடாறிந்த பழங்குடியின
கை வைத்தியம் இதுவன்றே
ஏ மனிதா கை கூப்பி
எமை படைத்தவனை வணங்கி விடு …!
வன்னி மைந்தன்
ஆக்கம் 21-10-2021
வன்னி மைந்தன் கவிதைகள்
இன்றே மன்னித்து விடு
இன்றே மன்னித்து விடு
வாயோடு வாய் வைத்து
வந்து வழி பேசி நின்றேன்
நீயுரைத்த மொழி கேட்டு
நீர் விழியோடு யான் தவித்தேன்
ஆறாத என் மொழிகள்
ஆறாண்டாய் வாட்டியதோ …?
சுட்டெரிக்கும் வார்த்தை என்றால்
சூட்டோடே சொல்லி விடு
வார்த்தையால் உனை கொன்று
வாழ்வதென்ன வாழ்வோ …?
வளர் பிறையின் முழு நிலவே
வாழும் போதே புரிந்து விடு
திட்டமிட்டு வாயில் வந்து
திட்டுவது யான் அல்ல
திட்டங்களை மூழ்கடிக்க
திரிபுகளாய் வீழ்ந்திருக்கும்
உச்சி முதல் உள்ளம் வரை
உயிரே வலிக்குதடி
பகுத்தறிவை படித்து வைத்து
பக்குவத்தை நட்ட பின்னர்
உன்னை வசை பாட
உயிரே நான் நினைத்ததில்லை
என் உயிலில் மாற்றமதை
எண்ணுறவே கண்டு விடு
எட்டாண்டு உயிர் வாழும்
என் உடலோ புரிந்து விடு
இறக்கும் முன்னர் ஒரு முறை
இன்றே மன்னித்து விடு
வன்னி மைந்தன்
ஆக்கம் 19-10-2021
இன்றே இவரை விரட்டு
இன்றே இவரை விரட்டு
சுட்டு வீழ்த்தடா பகைவனை – இந்த
சுட்டு காட்டை ஒழியடா நாட்டிடை
ஒற்றுமை பேனா தமிழனை – தலை
ஒடித்து போடடா காட்டிடை
லட்சங்கள் வீசும் பகைவனின் – கால்
நக்கியே பிழைக்கும் நாய்களை
கொத்தியே எறிதல் முறையடா – தமிழ்
கோடிகள் வாழ்ந்திட புரியடா
அறத்தினை கொன்றவன் நாட்டிடை
அண்டியே வைத்தால் தீட்டடா
வாலாட்டும் இந்த நாய்களால்
வையத்தில் முளைக்குத்து கேடடா
வீடே முதலெனே நினைப்பவர் – இன
விடியலுக்கு வேலியாய் நிற்பவர் – முகத்தில்
தூவெனெ துப்படா – இந்த
துரோகியை இன்றே வீழ்த்தடா
கோபத்தில் களையாய் பொங்கடா
கொடியோர் செயல் விழ பாயடா
நாளை தமிழர் ஆளவே
நம்பிக்கை நட்டு வையடா ….!
வன்னி மைந்தன்
ஆக்கம் 18-10-2021
உன்னை காதலிக்கிறேன்
உன்னை காதலிக்கிறேன்
குப்பையில கிடந்த என்னை
குளிப்பாட்டி எடுத்தவளே
மனிதனாக நட்டு வைத்து
மறந்தின்று போவதெங்கே ..?
இதய வங்கியில
இன் முகத்தை வைத்தேனே
அங்கமெல்லாம் உனை தொடர
அன்பே சிறை பட்டனே
சுட்டெரிக்கும் வெயில் பட்டு
சுடுகின்ற என் உடலில்
குளிர்கின்ற உன் நினைவு
குழந்தை போல் கத்துதே
தேகமதில் தென்பு தந்து
தேர்வெழுத வெல்ல வைத்து
நட்பை நட்டவளே – உனை
நான் மறந்து போவதுவோ ..?
எல்லாமும் செய்தவளே
என் மனதை காணலையோ ..?
உன்னிடத்தில் வச பட்டேன்
உள் மனதை புரியலையோ ..?
வன்னி மைந்தன்
ஆக்கம் 17-10-2021
வீழ்த்தடா அவன் தான் பகைவன்
வீழ்த்தடா அவன் தான் பகைவன்
முப்படை தாங்கியே எழுந்தார்
முன் தினம் விழ நின்றார்
இப் படை ஆட்சியில் நன்றே
இடை அடி கழுவி நின்றார்
குதிரை குண்டி கழுவி – நெய்தலில் (நெடுந்தீவு )
குலவி வெள்ளைய மகிழ்ந்தான்
இத்தரை தமிழ் நிலம் எங்கும்
இது போல் தொடர்நிலை இன்றேன் ..?
வல்வையில் பிறந்தான் ஒருவன்
வைத்தொரு போரை செய்தான்
இப் புவி தமிழன் ஆழ
இல்லம் வந்து தொழுதான்
முத்தி பெற்றிட முன்னே
முன் நிலை அறியா அவனை
வீழ்த்தினர் கூடி கயவர் – இன்றே
வீழ்த்தடா அவன் தான் பகைவன் …!
வன்னி மைந்தன்
ஆக்கம் 16-10-2021
வெற்றி நிச்சயம் – இது வேத சத்தியம்
வெற்றி நிச்சயம் – இது வேத சத்தியம்
தொடரென பகைவர் உடல் விழ-நிலம்
தொட்டதை விட்டான் கடல் எழ
வன புலி என்றே இவன் எழ
வாடினர் பகைவர் விழி அழ
நெய்தலின் கரையில் பிறந்தவன் – ஈழம்
நெய்திட அன்றே வந்தான்
கொடிய வேந்தர் செயல் விழ- சேனை
கொடி நாட்டே போர் செய்தான்
கடலென தரையென விரிந்தவர்
கடுகதி வானிடை ஏறினர்
முப்படை தாங்கியே விண்ணிடை
முப் போரினை விரித்தனர்
அப்படை தளபதி அரியணை
அத்தனை வந்ததுமே குந்தினர்
எப் படை வந்தும் தோற்றனர் -ஆனையிறவில்
எங்களின் மறவரே தரித்தனர்
இப்படி புலி பலம் விரித்தவர் – ஈற்றில்
இப்படி விழும் படி சிரித்தனர்
இப்பகை வீழ்த்தியே வென்றிடும்
இப் புகழ் நிலை விடியலிடும் …!
வன்னி மைந்தன்
ஆக்கம் 11-10-2021
வன்னி மைந்தன் கவிதைகள்
அழுகுரல் கேட்கிறதா
அழுகுரல் கேட்கிறதா
அந்தி பொழுதில் நந்தி கடலில்
அழுகுரல் கேட்கிறதா?
அவல சாவின் ஆவிகளின்
ஆத்மா துடிக்கிறதா
ஓடிவந்தவர் கூடி நின்றவர்
ஒரு நொடி வீழ்ந்தனரே
ஓடி வந்த கந்தக கூண்டில்
ஓர் நூறாய் கிழிந்தனரே
பகைவர் விட்டு பாவிகள் கொன்றீர்
இது தான் படையெடுப்போ ..?
பகலும் இரவும் மாறி வரும்
பகைமை உணர்வீரா
ஒரு நொடி எங்கள் தமிழர் விழித்தல்
ஓடிடும் பகைமைகளே
ஒரு நாள் எங்கள் அவலம் தரிப்பீர்
ஓடி அழுவீரே
விதைத்தவன் வினையை
விரைவில் அறுப்பான்
விளைச்சல் இது தானே – இந்த
விபரம் தெரிவானே
எங்கள் மண்ணிலே எம்மை அழித்தவன்
எப்படி வாழ்ந்திடுவான்..?
ஏதடா மனிதா நீயெல்லாம் தமிழனா
எப்போ வெடித்திடுவாய்..?
வன்னி மைந்தன்
ஆக்கம் 10-10-2021
இதை சொல்ல உன்னால் முடியுமா
இதை சொல்ல உன்னால் முடியுமா
இன்றே உலகம் படித்து விட
இணையம் வந்திடவா
எதிரி அந்த பகைவன் கொலையை
எழுதி வைத்திடவா
அதிர்வில் ஓடி அந்தபுரத்தை
அலசி வந்திடவா
சூரியன் ஓடி வாசல் வந்திட -சத்தி
சுழற்றி கூட்டிடவா
விண்ணில் ஏறிய தமிழ் விண்ணின்
விடு கதை சொல்லிடவா
அத்தனை கொள்ளையர் ஒன்றாய் கூடிய
ஐ பீ சி கொழுத்திடவா
ஆதவன் அன்றே ஆடி நின்றார்
ஆயுள் முடிந்ததுவோ ..?-அட டா
நெருப்பில் வீழ்ந்து நெறியை கொன்ற
நேர்த்தி இவர் அல்லவா
காலை கதிரில் மாலை மலரில்
கண்ணீர் கதையல்லவா – நீ
வடையுடன் கேசரி வாயில் அவிக்கும்
வீர கேசரியா
இதை சொல்ல உன்னால் முடியுமா
மனிதம் இல்லா மனிதன் அறிவில்
மறதி முதல் அல்லவா
பதிவு செய்தி பதியா மருவும்
பகலவன் இவர் அல்லவா
லங்காசிறியின் லட்சிய நெருப்பில்
லட்சங்கள் பார்த்துவிடு
இறந்தவர் நாளில் பணத்தை அள்ளும்
இழிநிலை செப்பிவிடு
புதின பலகையில் சங்கதி ஏறி
புதினம் தந்திடுமா ..?
தேனியில் ஏறி கூடு கட்டி
தேன் வலம்புரி வந்திடுமா ..?
யாழில் ஏறி அதிரடி ஓட -புது
யாழ் பிறந்திடுமா ..?
உதயனில் ஓடி தினக்குரல் பாட
உதயம் பொங்கிடுமா ..?
இதுவரை படித்ததில் எத்தனை இணையம்
இன்றே எண்ணிவிடு
இந்த துணிவு எவருக்கு வரும்
இருந்தால் சொல்லி விடு …!
வன்னி மைந்தன்
ஆக்கம் 09-10-2021
ஓடும் அந்த அருவி பக்கம்
ஓடும் அந்த அருவி பக்கம்
ஓடம் காத்திருந்தேன்
நீ வருவாயென பார்த்திருந்து
நிமிடங்கள் தொலைத்து நின்றேன்
அருவி பாடிய ஓசையில – உன்
ஆடல் கேட்கவில்லை
அந்த வேளையில் கண்ணுறக்கம்
அன்பே தெளியவில்லை
மூணு நாளா எடுத்து வைத்த
முன்னோட்டம் கரைந்திருச்சு
ஆள் மனதில் முளத்த ஆசை
ஆற்று மண்ணா கரைந்திருச்சு
உன் மீது குற்றமிட
உண்மையில் முடியவில்லை
உள்ள வேதனை மறைத்துவிட
உருளும் விழிக்கு தெரியவில்லை
நான் வரைந்த ஓவியத்தின்
நனையும் மையா நீயிருந்தாய்
உனை வரைய எனை வைத்து- நீ
ஊமையாகி ஏன் போனாய் …?
வன்னி மைந்தன்
ஆக்கம் 08-10-2021
எப்படி வாழ்வில் உயர்வாய்
எப்படி வாழ்வில் உயர்வாய்
மெல்லிய அலைகள் ஓடி விழ- வயலில்
மெலிந்த கடலலை ஆடி எழ
இரட்டை எருதுகள் கால் விழ
இங்கொரு துயர் முளை எழ
உழவு செய்வான் விவசாயி – இந்த
உயர் வதை செய்வான் அவன் பாவி
எருதை வதைத்தால் உயர்ந்திடுமா – உன்
வாழ்வில் ஏற்றம் வந்து பிறந்திடுமா ..?
முக்கி வதங்கி மூச்சடக்கி
முக்கால் வயிறு பசியடக்கி
முன்னே வாயால் நுரை தள்ள
முன்னே தன் பலம் அது தள்ள
அரை ஏக்கர் உளவு
அன்றைய தினம் பிளவு
ஓய்வு என்பது ஒரு மணிதான்
ஓல வாழ்வு அனுதினம் தான்
மதத்தில் சைவம் என்பானே
மாதா மாட்டை மிதிப்பானே
இப்படி வதைகள் இவர் விதைத்தால்
எப்படி வாழ்வில் உயர்வு வரும் …!
வன்னி மைந்தன்
ஆக்கம் 07-10-2021
நீ தமிழனா
நீ தமிழனா
தென் திசை பகைவர் வந்தார் – பெரும்
செந்தமிழ் திசை எங்கும் கொன்றார்
வண்டமிழ் எழுச்சியில் தீங்கார் – கூடி
வழியில் பெரும் சதி செய்தார்
விண்ணிலே ஏறி ஆடி – தமிழ்
வீரம் உலகில் சொன்னார்
வேள்வியை இடையிலே கொய்தார் – இந்த
வேளையில் தமிழர் கொதித்தார்
போரிலே வென்றிட வேண்டும்
பெரும் பலம் ஆளணி என்றார்
வரும் பகை வழியில் எய்தே
வாழ்வோம் நலமுடன் என்றார்
நீ தமிழனா
செய் நெறி வாய்மை கேளார்
செந்தணலாகி கொதித்தார்
வந்தனர் பகைவர் வாயில் – இன்றோ
வாளை சுருட்டி கொண்டார்
எம் தமிழ் வாயே எங்கோ – இன்றே
ஏறி பறையடி அங்கே
வந்தனர் பகைவர் வாயில் -கை
வாழ்த்தியே தொழுதாய் நன்றோ ..?
முன் தினம் வீரம் எங்கே
முரசொலி தமிழ் எங்கே
விண் புகழ் ஏறிய வீரம்
வீரரை கொய்தாய் நன்றோ ..?
எம் தமிழ் மானம் இன்றோ
எமனவன் காலில் நன்றோ
இது தான் தமிழ் நில பண்போ
ஏதடா நீயெல்லாம் தமிழோ ..?
வன்னி மைந்தன்
ஆக்கம் 06-10-2021
உண்மை சொல்
உண்மை சொல்
மூச்சு முட்ட மூச்சு முட்ட
முன்னே வந்து நிற்கிறாய்
முத்தத்தாலே உன்னை தைக்க
முன்னே ஏனோ ஊந்துறாய் ..?
ஆலயத்தின் சாமிகளாய்
ஆடை இன்றி நிற்பதா ..?
இயற்கை தந்த பேரழகை
இயமனுக்கே விற்பதா ..?
ஆசைகளை தூண்டி விட்டு
அருகில் வந்து இரசிக்கிறாய்
அந்தரத்தில் தவிக்க விட்டு – ஏன்
ஆராத்தி எடுக்கிறாய் ..?
கலைந்து போன கூந்தலில்
கை வைத்து போனது யார்
கட்டி வைத்த பேரழகை
கடத்தி இன்று விற்றது யார் ..?
விற்பனைக்கு சந்தையில
விண்ணிலவை வைத்தது யார் ..?
விவரமாக சொல்லி விடு
விசாரணைக்கு வருகிறேன் …!
வன்னி மைந்தன்
ஆக்கம் 05-10-2021
தமிழர் வாழ இவர்கள் வருவார்களா
தமிழர் வாழ இவர்கள் வருவார்களா
சோழ பரம்பரை ஆண்ட கடலினுள்
வேங்கை படை இல்லையா ?
கரிகாலன் ஆண்ட பூமியில்
காக்கை வன்னியரா
கொல்லி வைத்தவன் குடிமனை புகுந்து
கொள்கை சொல்லிடவோ
அள்ளி வைத்தவர் ஆக்கினை புரிந்தவர்
அரியணை ஆண்டிடவோ
செந்தமிழ் பாடியே ஆடிய புலவர்
செம்மண் மிதிபடவோ
வந்தேறி ஆரியர் வழங்களை சுரண்டி – தமிழ்
வம்சம் அழிப்பதுவோ
கந்தக தீயில் வெந்திட இலங்கா
கலகம் பிறந்திடுமா
கொன்றவன் வாயிலில் கொலைகள் வீழ்ந்திட
கொடும் பகை தகர்ந்திடுமா
வான் படை காவியே வானில் ஏறிய
வரி புலி வந்திடுமா ?
வரும் தளிர் செழித்திட மொழியும் விழித்திட
வாயில் வந்திடுமா ..?
வன்னி மைந்தன்
ஆக்கம் 24-09-2021
ஆண்கள் பெறுமை இழந்தால் -இது நடக்கும்
ஆண்கள் பெறுமை இழந்தால் -இது நடக்கும்
கற்புக்கு பெண் என்று சொல்லாதே
காசிற்கு விற்கிறார் மறக்காதே
உவமைக்கும் இவரை காட்டாதே -இந்த
ஊத்தையில் கண்ணை வைக்காதே
பேருக்கு ஆனாய் இருக்காதே – இந்த
பேரிடரை பெண்ணுக்கு வழங்காதே
தன் பசி போக்க என் செய்வாள்
தன்னிடம் உள்ளதை விற்கிறாள்
கற்பிற்கு விலை வைக்கும் கறையானே
கண்ணீரை உறிஞ்சும் உதையோனே
வெப்பத்தை தூவி போகாதே – இந்த
வேட்கையில் பெண்ணை நீ கொல்லாதே
பூலன் தேவியாய் ஆக்காதே – இவள்
புலியாகி எழுவாள் மறக்காதே
எதை வந்து சொன்னாலும் ஏற்கேனே
ஏளன பெண்ணை மிதிப்பேனே
சிந்திக்கும் ஆற்றலை இழந்தாளை
சிந்தைக்குள் வைக்க முனையாதே
பானைக்குள் புகுந்த அகப்பைகள்
பாதியில் முறியும் மறவாதே
ஆண்கள் பெறுமை இழந்தால் -இது நடக்கும்
தோன்றுதல் பிறந்திட வேண்டும் என்றால்
தோலுக்குள் புகுந்திட வேண்டும்
அணைத்து பால் மலர்ந்திட வேண்டும் என்றால் – இந்த
ஆகமம் நடந்திட வேண்டும்
எதை வந்து சொன்னாலும் எற்கேனே
இந்த இழிசாதி பெண்ணை நம்பேனே
ஆணை கொல்லும் எமன் என்பேன்
ஆக்கினை இந்த பெண் என்பேன்
நூற்றுக்கு 90நூறு இழிவென்பேன்
நுண்ணறிவில்லா மலடென்பென்
ஆண்கள் பெறுமை இழந்துவிடின்
அத்தனை குடும்பமும் இரண்டென்பேன் ..!
வன்னி மைந்தன்
ஆக்கம் 19-09-2021
எங்கள் தலைவிதி
எங்கள் தலைவிதி
இளம் காற்று பாடும் ஈழ கரையோரம்
இதயங்கள் நொறுங்கும் சோக துயரம்
எவர் செய்த சதியோ இத்துயர் கோலம்
எங்களின் வாழ்வில் ஏனோ இப் பாரம்
கரும்புகை ஏறி வானை மறைக்கும்
கந்த துகளில் மூச்சு உறையும்
வெடியோசை மண் கிளற வீழ்ந்தே இறந்தோம்
உடன் இருந்தார் விட்டே ஊர் ஏறி கடந்தோம்
வலியில் நெஞ்சு வாடி தவிக்க
வழி தெரியா நின்றோம்
உரிமை போரும் முடிவில் தவிக்க
உதவுவார் இன்றி ஏங்கி தவித்தோம்
தரணியில் நாங்கள் பிறந்தது கேடா
தமிழனாய் இங்கு வாழ்தல் பிழையா
சுதந்திரம் கேட்டோல் சூடு காடா
சுதந்திர தேசமே நீதி இல்லையா
மொத்த தமிழன் அழித்தான் உலகில் நடக்கிறான்
ஒட்டு துணி இல்லா தமிழன் தவிக்கிறான்
இத்துயரில் தினமும் எங்களின் தேசம்
இதயம் இல்லா நடக்கும் உலகம்..!
வன்னி மைந்தன்
ஆக்கம் 25-03-2021






