இவளை எனக்கு தா
உருண்டு வரும் நீரலைகள்
உன் உடலில் மோதி விழ
என் உடலோ நடுங்குதடி
ஏக்கத்தில தவிக்குதடி
கட்டியணைத்து பேரலைகள்
கண்ட படி முத்தமிட
விட்டு உடல் இருப்பவளே
விடை கூறு என் செய்வேன்
அங்கமதை தொட்டு விழி
ஆடை உருவி பார்க்குதடி
வேர்க்காத என் உதடும்
வேர்த்து இன்று கொட்டுதடி
வான் நிலவு அருவியில
வளைந்து நீராட
நாள் எழுதி கொடுத்தவரே
நான் உனக்கு மாலையிட
தேதி ஒன்று தருவீரா – என்
சேதி சொல்லி போவீரா
புகழ் மாலை பாடிடுவேன் – இந்த
பூவை எனக்கு தருவீரா ..?
வன்னி மைந்தன்
ஆக்கம் 22-10-2021
வன்னி மைந்தன் கவிதைகள்