வன்னிமைந்தன் தளத்தின் முதலாவது ஆலய அன்னதானம்
Posted in வன்னி மைந்தன் உதவி

மாணவர்களுக்கு அள்ளி கொடுத்த காரை சேனாதி அண்ணா லண்டன்

மா0ணவர்களுக்கு அள்ளி கொடுத்த காரை சேனாதி அண்ணா லண்டன்

மாணவர்களுக்கு அள்ளி கொடுத்த காரை சேனாதி அண்ணா லண்டன்.வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தின் ஊடக வழங்கிய பங்களிப்பில் முதலாவது இடத்தில் காரை சேனாதி அண்ணா அவர்கள் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார் .

அவ்விதம் இன்று கிளிநொச்சி கரடிப்போக்கு பகுதியில் உள்ள மாணவர்களுக்கு இந்த உதவி வழங்க பட்டுள்ளது .

மிக்க நன்றி காரை சேனாதி அண்ணா .

இதில் அழுத்தி காணொளி பார்க்க

ஏழை மக்கள் வாழ்த்து மழையில் நனைந்த பிரான்ஸ் பிரதீப் ரவீந்திரன் அண்ணா
Posted in வன்னி மைந்தன் உதவி

ஏழை மக்கள் வாழ்த்து மழையில் நனைந்த பிரான்ஸ் பிரதீப் ரவீந்திரன் அண்ணா

ஏழை மக்கள் வாழ்த்து மழையில் நனைந்த பிரான்ஸ் பிரதீப் ரவீந்திரன் அண்ணா

ஏழை மக்கள் வாழ்த்து மழையில் நனைந்த பிரான்ஸ் பிரதீப் ரவீந்திரன் அண்ணா அவர்களின் 7500 ரூபாய் செலவில் இந்த அன்னதானம் வழங்க பட்டுள்ளது .

முல்லைத்தீவு மாவாட்டத்தில் வறுமைக்கு உள்ளாக்க பட்ட மக்களுக்கு இந்த உணவு வழங்க பட்டுள்ளது .

இந்த அன்னதானம் வழங்கிய உங்களுக்கு மிக்க நன்றி .

இதில் அழுத்தி காணொளி பார்க்க

https://www.youtube.com/watch?v=Z60PXUWdrt4
பிறந்த நாளில் சுவிஸ் தர்மராஜா அண்ணா செய்த செயல்
Posted in வன்னி மைந்தன் உதவி

பிறந்த நாளில் சுவிஸ் தர்மராஜா அண்ணா செய்த செயல்


பிறந்த நாளில் சுவிஸ் தர்மராஜா அண்ணா செய்த செயல்

பிறந்த நாளில் சுவிஸ் தர்மராஜா அண்ணா செய்த செயல் ,தனது 53 வது பிறந்த நாளில் சுவிஸ் தர்மராஜா அண்ணா நுவரெலியா ஹட்டன் தலவாக்கலை பகுதியில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றுக்கு உணவு வழங்கி தனது மகிழ்வை பகிர்ந்துள்ளார் .

இன்று பிறந்த நாள் கொண்டாடி கொண்டு இருக்கும் தர்மராஜா அண்ணாவுக்கு எதிரி இணையம் மற்றும் வன்னி மைந்தன் டிக் டாக் தளம் என்பன வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது .today my happay birthday.

இதில் அழுத்தி காணொளி பார்க்க

டிக் டாக் இணைப்பு பார்க்க இதில் அழுத்துங்க

எம்மோடு தொடர்பு கொள்ள 0044 7536707793

14 வருடம் கழிப்பறை இன்றி தவித்த குடும்பம் |உதவிய கனடா அண்ணா
Posted in வன்னி மைந்தன் உதவி

14 வருடம் கழிப்பறை இன்றி தவித்த குடும்பம் |உதவிய கனடா அண்ணா

14 வருடம் கழிப்பறை இன்றி தவித்த குடும்பம் |உதவிய கனடா அண்ணா

14 வருடம் கழிப்பறை இன்றி தவித்த குடும்பம் |உதவிய கனடா அண்ணா செயல் வியந்து மகிழ்ந்த குடும்பம் .

காணொளியில் முழுமையான விபரம் பார்க்க

கனடா அண்ணா செய்த செயல் |நன்றி சொல்ல வார்த்தை இல்லை
Posted in வன்னி மைந்தன் உதவி

கனடா அண்ணா செய்த செயல் |நன்றி சொல்ல வார்த்தை இல்லை

கனடா அண்ணா செய்த செயல் |நன்றி சொல்ல வார்த்தை இல்லை

கனடா அண்ணா செய்த செயல் |நன்றி சொல்ல வார்த்தை இல்லை,மலசலகூடம் இன்றி தவித்த குடும்பம் ,தெரிவித்த கண்ணீர் கதை ,காணொளியை முழுமையாக பாருங்கள் மக்களே

CLICK HERE FULL VIDEO

Posted in வன்னி மைந்தன் உதவி

பெயர் சொல்ல மறுத்து உதவிய லண்டன் அண்ணா |Vanni mainthan

பெயர் சொல்ல மறுத்து உதவிய லண்டன் அண்ணா |Vanni mainthan

பெயர் சொல்ல மறுத்து உதவிய லண்டன் அண்ணா |Vanni mainthan மலசலகூடம் இன்றி தவித்த குடும்பம் ,தெரிவித்த கண்ணீர் கதை ,காணொளியை முழுமையாக பாருங்கள் மக்களே.

CLICK HERE VIDEO

இப்படி ஒன்றை எதிர்பார்க்கவில்லை கண்ணீர் விட்ட குடும்பம் |பிரான்ஸ் அண்ணா செய்த செயல்
Posted in வன்னி மைந்தன் உதவி

இப்படி ஒன்றை எதிர்பார்க்கவில்லை கண்ணீர் விட்ட குடும்பம் |பிரான்ஸ் அண்ணா செய்த செயல்

இப்படி ஒன்றை எதிர்பார்க்கவில்லை கண்ணீர் விட்ட குடும்பம் |பிரான்ஸ் அண்ணா செய்த செயல்

இப்படி ஒன்றை எதிர்பார்க்கவில்லை கண்ணீர் விட்ட குடும்பம் |பிரான்ஸ் அண்ணா செய்த செயல்

video

வன்னி மைந்தன் தளத்தில் பெண் பிள்ளைகளுக்கு நடந்த சம்பவம் | கனடா சாந்தன் அண்ணா செய்த செயல்
Posted in வன்னி மைந்தன் உதவி

வன்னி மைந்தன் தளத்தில் பெண் பிள்ளைகளுக்கு நடந்த சம்பவம் | கனடா சாந்தன் அண்ணா செய்த செயல்

வன்னி மைந்தன் தளத்தில் பெண் பிள்ளைகளுக்கு நடந்த சம்பவம் | கனடா சாந்தன் அண்ணா செய்த செயல்

வன்னி மைந்தன் தளத்தில் பெண் பிள்ளைகளுக்கு நடந்த சம்பவம் | கனடா சாந்தன் அண்ணா செய்த செயல்

வீடியோ

புலிகளை ஓட விட்ட அருச்சுனா அண்ணா
Posted in அர்ச்சுனா இலங்கை செய்திகள்

புலிகளை ஓட விட்ட அருச்சுனா அண்ணா

புலிகளை ஓட விட்ட அருச்சுனா அண்ணா

புலிகளை ஓட விட்ட அருச்சுனா அண்ணா ,சர்வதேச ரீதியில் உள்ள புலிகள் கட்டமைப்பு ஏன் இதுவரை அர்ச்சுனாவுக்கு ஆதரவாக அல்லது அது தொடர்பாக பதில் ஏதும் வழங்காததற்கு காரணம் என்ன என்பதை கேள்வியாக எழுப்பியுள்ளார் .

மக்கள் மனங்களில் உள்ள கேள்விகளை அவர் எழுப்பியுள்ள இந்த விடயம் மக்கள் கவனத்தை ஈர்த்துள்ளது .

காணொளியில் அழுத்தி அர்ச்சுனா இராமநாதன் ஆனா ரகுராம் தெரிவித்த கருத்துக்களை மக்களே கேளுங்கள்

வீடியோ

மிரட்டல் அர்ச்சுனா அண்ணாவுக்கு
Posted in அர்ச்சுனா இலங்கை செய்திகள்

மிரட்டல் அர்ச்சுனா அண்ணாவுக்கு

மிரட்டல் அர்ச்சுனா அண்ணாவுக்கு

மிரட்டல் அர்ச்சுனா அண்ணாவுக்கு இடம்பெற்றுள்ளதாக ரகுராம் இராமநாதன் அவர்கள் வன்னி மைந்தன் டிக் டாக் நேரலையில் தெரிவித்துள்ளார் .

தனது கைபேசிக்கு ,அச்சுறுத்தும் மிரட்டல் பேச்சை மேற்கொண்டதாகவும் ,அதற்குரிய சட்ட நடவடிக்கையை தான் மேற்கொள்ள உள்ளதாக அர்ச்சுனா இராமநாதனின் உடன்பிறந்த அண்ணன் ரகுராம் இராமநாதன் தெரிவித்துள்ளார் .

தம்பி மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் அரசியல் கட்சி ஒன்றை நிறுவி அதன் ஊடக அரசியலில் களம் குதித்துள்ள நிலையில் ,

அதற்கு ஆதரவாக செய்லபடுபவர்கள் குரல்வளையை நசுக்கும் நடவடிக்கையில் விடுதலை புலிகள் என உரிமை கூறி கொள்ளும் குழுக்களினால் தொடர்ந்து அச்சுறுத்தல் விடப்பட்டு வருகிறது .

தமிழீழ காவல்துறையில் அதிகாரியாக பணியாற்றிய ரகுராம் அவர்கள் ,விடுதலை புலிகள் செயல் பாட்டு தளத்தில் இருந்து ஒதுங்கி தனிமனிதா வாழ்வியல் பயணத்திற்கு தன்னை உள்படுத்தி வாழ்ந்து வருகிறார் .

அவ்வாறான நிலையில் அர்ச்சுனா இராமநாதன் முன்னெடுத்து செல்லும் அரசியல் போருக்கு ஆதரவாக தனது குரலை வழங்கி வருகிறார் .

அதனால் அதனை ஜீரணித்து கொள்ள முடியாத இந்த கும்பல் ,இவ்வாறு அச்சுறுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதுடன் ,தேச துரோகி ,துரோகி என பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர் .

துரோகி ரகுராம் என்றால் அதனை கூறும் நபர்களும் துரோகிளியாகத்தானே இருக்க முடியும் ,என்பதை மறந்து இவ்வாறு துரோக பட்டம் வழங்கி வருகின்றனர் .

துரோகி என கூறும் நபர்களின் ஆரம்பம் முதல் இன்று வரையான செயல்பாடுகளை தோலுரித்து தொங்க விட்டால் தான் ,இவ்வாறான துரோகி பட்டம் வழங்கும் செயல் பாடுகள் முடக்க படும் என, மக்கள் மன்றம் தமது கருத்துக்களை தெரிவித்து வருகின்றமை குறிப்பிட தக்கது .

Tiktok Live இல் கழுவி ஊத்தியவருக்கு மைந்தன் அண்ணாவின் பதிலடி
Posted in இலங்கை செய்திகள்

Tiktok Live இல் கழுவி ஊத்தியவருக்கு மைந்தன் அண்ணாவின் பதிலடி

Tiktok Live இல் கழுவி ஊத்தியவருக்கு மைந்தன் அண்ணாவின் பதிலடி

Tiktok Live இல் கழுவி ஊத்தியவருக்கு மைந்தன் அண்ணாவின் பதிலடி,

வீடியோ

https://www.youtube.com/watch?v=aA7kavsF-D8
அன்புள்ள அண்ணா சீமான் அவர்களுக்கு அர்ச்சுனா எழுதிய கடிதம்
Posted in அர்ச்சுனா இலங்கை செய்திகள்

அன்புள்ள அண்ணா சீமான் அவர்களுக்கு அர்ச்சுனா எழுதிய கடிதம்

அன்புள்ள அண்ணா சீமான் அவர்களுக்கு அர்ச்சுனா எழுதிய கடிதம்

வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா
வைத்திய அத்தியட்ச்சகர்
ஆதார வைத்தியசாலை சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
திரு சீமான் அவர்கள்
நாம் தமிழர் கட்சி
தமிழ்நாடு
இந்தியா


அன்புள்ள அண்ணா சீமான் அவர்களுக்கும் எமது தொப்புள்கொடி உலக வாழ்த்தமிழ் மக்களுக்கும் இலங்கையிலிருந்து உங்கள் தம்பி தமிழுள்ள தாயத்தில் இருந்து எமது மக்கள் சார்பாக ஒரு அன்பு கடிதம்…
அண்ணா.


நாங்கள் இறைவனின் கிருபையால் நன்றாக இருக்கிறோம். நீங்களும் எமது புலம்பெயர் ஈழ மைந்தர்களின் கிருபையால் மிகவும் நன்றாக இருக்கின்றீர்கள் என்பது எமக்கு நன்றாகவே தெரியும்.


எல்லாம் வல்ல எனது இனத் தலைவனின் இறைவனின் பாதத்திற்கும் சிரம் தாழ்த்தி தாயகனவிலே தங்கள் உயிரையும் உடலையும் வித்திட்டு விதியாகிப்போன எனது அக்கா அண்ணா தம்பி தங்கைகளுக்காக இந்த மடலை உங்களின் கவனத்திற்காக எழுதிக் கொண்டிருக்கிறேன். .


தமிழனாய் பிறந்ததற்காகவும் தமிழனுக்காய் பிறந்ததுக்காகவும் பெருமையாய் தங்களுக்கு ஒரு கடிதம்.


1983 இல் தொடங்கிய தமிழின வேட்கை கடந்த 40 வருடங்கள ஆகியும் எங்கே செல்கின்றோம் இதனை தேடுகின்றோம் எனத் தெரியாமலே பிறந்ததிலிருந்து இன்றுவரை நாடோடியாய் அலையும் ஒரு இனத்தின் ஆண் மகன் இதயத்தில் இருந்து இடத்தினை பிழிந்து எடுத்து கடைசியாய் கண்ணீருடன் எழுதிக் கொண்டிருக்கும் மடல் இது..


உலகமே திரண்டு 2009ல் எனது தலைவணையும் எனது தனயன் களையும் எனது தமிழினத்தையும் கந்தக காட்டில் புதைத்துக் கொண்ட ஒரு இனத்தின் தந்தையை இழந்த ஒரு குழந்தையின் ஏக்க மடல் இது….


நாடினை இழந்தோம் வீடினை இழந்தோம் தாயினை இழந்தோம்..
தந்தையினை இழந்தோம் சுமக்காய் போராடிய 44,000 உறவினை இதே மண்ணில் விட்டுடலாய் புதைத்தோம்..


கடைசியில் எமது தலைவணையும் இழந்து இருந்தால் தலைவன் இல்லையேல் இறைவனின் தேடிக் கொண்டிருக்கிறோம்..
உங்களுக்கும் தமிழக தொப்புள் கொடி உறவுகளுக்கும் எமது கூக்குரல் கேட்காது..
ஏனெனில் நாம் தமிழர் ஆயிற்றே..


எனது இனம் அணுவணுமாய் பிளக்கப்பட்டு ஒரு இனப்படுகொலையை அரங்கேற்றிய பேரினம் உங்களை ஆதரவாக பற்றிக் கொண்டிருப்பதை அறிந்தும் உங்களை நம்பிய எனது புலம்பெயர் இரத்தங்கள் உங்களுக்கு பணம் சேர்த்து அனுப்புவதை தெரிந்தும் தெரியாமல் இங்கும் ஒரு பானை

சோற்றிற்கும் ஓடிக் கொண்டுதான் இருக்கின்றோம்…
ஏனெனில் நாம் தமிழராயிற்றே..


மூன்று தசாப்தங்களாக பேரினம் எம்மை அணு அணுவாய் சிதைத்தது..
இருந்தும் உயிர்ப்புடன் தான் ஓடிக் கொண்டிருக்கிறோம் ஏனெனில் நாமும் தமிழர் ஆயிற்றே…


என் தனையன்..
எம் இன தலைவன் மேதகு..
மற்றும் மறவன் துணை சென்ற என் அண்ணாவும் அக்காவும் என் கொடியும் என் தேசியக் கொள்கையும் உனக்கு..
உன் தமிழ்நாட்டு அரசியலுக்கு பேசுபொருள் தான்..
நீ உண்ட ஆமை கறியும் தலைவனை பாசறையும் உனக்கு அரசியல் ஆணிகள்..
ஏனெனில் நீயும் தமிழன் ஆயிற்றே..
அண்ணனின் காலத்தில்..
ஈழத்தில் பிறந்த இந்த மருத்துவனின் குரல் உனக்கு கேட்கின்றதோ இல்லையோ..
என் தமிழ் இனத்திற்கு கேட்டுக் கொண்டுதான் இருக்கிறது..
என் தமையன் உன்னடி வந்தது..
என் உறவுகள் உன் பால் சிரம் தாழ்த்தியது..
என் தலைவனில் மூச்சுக்காற்றை நீ சுவாசித்து இருக்கிறாய் என்பதற்காக மட்டுமே அன்றி..
தமிழினத்தையும் தலைவனையும் மண் கொண்ட வித்துடல்களையும் மரணித்த வேங்கைகளையும் உனக்கு அடைமானம் வைக்க அல்ல..
உன் அரசியலுக்காய் பாவிக்க அல்ல..
தமிழில் எழுதி இருக்கிறேன்..
முடிந்தால் வாசித்துக் கொள்..
என்னிடம் என் தேசம் என் தேசியத் தலைவன் என் மாவீரர் வரலாறுகளின் உலகத் தமிழர் இனத்திற்குரியது…
என் கொடி அது என் தலைவனுடையது..
என் உயிரிலும் மேலானது..
அதை உன் அரசியலில் இருந்து மீண்டும் எனது மூச்சுக்காற்றுகளுக்கு மீட்கும் ஓர் நன்னாளை பார்த்து ஓடிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு தமிழினதும் நெறிக்கப்பட்ட குரல்வலைகளில் இருந்து அன்புடன் கேட்கிறேன்..
என் இனத்தை எங்களை நாங்களாகவே ஆளவும் வாழவும் இடம் கொடு..
இப்படிக்கு அன்புடன்..
இராமநாதன் அர்ச்சுனா
தலைவனின் பாசறையில் இருந்து.

இவ்வாறு அர்ச்சுனா இராமநாதன் சீமான் அண்ணா அவர்களுக்கு எழுதிய கடிதத்தை முகநூலில் பதிவு செய்துள்ளார் .

அண்ணா
Posted in கவிதைகள் நிலா தமிழ்

அண்ணா

அண்ணா

நஞ்சினை மாலையாய் அணிந்தவர்
பிஞ்சிலே வேங்கையாய் நிமிர்ந்தவர்
துஞ்சிடா வீரத்தைக் கொண்டவர்-நம்
நெஞ்சிலே ஈரத்தை விதைத்தவர்!

கஞ்சியை நாளுமே உண்டேனும்
பஞ்சியை துளியேனும் கொள்ளாமல்
கொஞ்சியே பேசிடும் தமிழுக்காய்- தன்
எஞ்சிய வாழ்வினை அர்ப்பணித்தவர்!

மிஞ்சியே பகை படை கொண்டு வந்தாலும்
அஞ்சியே எங்கேனும் ஓடிடாமல்
விஞ்சியே நின்று பகை எதிர்த்து– எம்
மஞ்சிய தாய் நாட்டைக் காத்தவர்!

கெஞ்சிடும் குடும்பத்தைத் துறந்தவர்
பஞ்சிடும் பஞ்சணையை வெறுத்தவர்
தஞ்சிடும் மக்களைக் காத்தவர் – கடும்
வஞ்சிடும் துரோகிகளை துவைத்தவர்!

வஞ்சியருக்கு சமவுரிமையை கொடுத்தவர்
அஞ்சியவருக்கும் வீரத்தை ஊட்டியவர்
துஞ்சியவரையும் தன்னாற்றலால்
எழ வைத்தவர் – எதிரியாயினும்
கெஞ்சியவருக்கு உயிர்ப்பிச்சை கொடுத்தவர்!

கெஞ்சியே இறைஞ்சுகின்றோம்
எஞ்சிய எம் வாழ்வைக் கழித்திட
விஞ்சிய மனவுரத்தை தந்திட – நம்
நெஞ்சிலே என்றும் இறையாய்
வாழுங்கள் அண்ணா!

-நிலாதமிழ்.
25.05.2024.