எனக்கு என்ன ஆச்சு
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

எனக்கு என்ன ஆச்சு

எனக்கு என்ன ஆச்சு

உயிரே உன்னை பிடிக்குதே – ஏனோ
உன்னால் உள்ளம் துடிக்குதே
கண் இரண்டில் காட்சிகளாய் நீ விழ
கவலை மெல்ல கலையுதே

ஏனோ உன்னால் இரவும் விடியுதே
ஏதோ மாற்றம் எனக்குள் நிகழுதே
புரிய முடியா தவிக்கிறேன்
புகலிடமாய் மனம் தவிக்குதே

விடியும் பொழுதில் விழியோரம்
விடயம் சொல்கிறாய் –
கனவில் வந்தே கதைகள் சொல்ல
கண் உறக்கம் தொலைக்கிறேன்

நிலவரம் என்னவோ – இந்த
நிகழ்வு என்னவோ
தெரிந்தவளே பதில் சொல்லு
தெரியா கேட்கிறேன்

எனக்கு என்ன ஆச்சு
என்னை கேள்வி கேட்கிறேன்
ஆனால் அமைதியாகும் மனதால்
அவதி படுகிறேன்

புரிந்தவளே புதிர் சொல்லு
புரியும் மொழியில் சொல்லு
ஏன் இப்படியானேன்
எனக்கு ஏதும் தெரியலையே …!

அக்கம் – 28-04-2025

  • வன்னி மைந்தன் –

உன்னை பார்க்கையில
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

உன்னை பார்க்கையில

உன்னை பார்க்கையில

உன்னை நானும் பார்க்கையில
உள்ளம் மெல்ல துள்ளுதடி
கள்ளம் இல்லா பேரழகை
கட்டி அணைக்க துடிக்குதடி

கொஞ்சி பேசும் மொழியழகில்
கொள்ளை பிரியம் வைக்குதடி
அச்சம் இல்லா பேசிடவே
அல்லும் பகலும் துடிக்குதடி

இடையின் அளவை அளக்கையில
இதயம் மெல்ல வெட்குதடி
தாளம் போடும் தாமரையை
தழுவ மோகம் துடிக்குதடி

துடையின் மேலே புருவமது
துரத்தி மெல்ல முறைக்கையில
மெல்ல வாலிபம் துடிக்கிறதே
மெழுகாய் உருகி அழுகிறதே

சொல்ல முடியா சுகமதனை
சொர்க்கமே நீ தருவாயா
அள்ளி பருகிட நாளுமே
அன்பே என்னை விடுவாயா …!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 24-05-2024

உடைந்த காதல்
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

உடைந்த காதல்

உடைந்த காதல்

இதயம் கனக்கும் இரவுக்குள்ளே
இதயமே உன்னை தேடுகிறேன்
வடியும் கண்ணீர் துளிகளுக்கு
வார்த்தைகள் தேடி அலைகின்றேன்

உடைந்த உள்ள நின்மதிக்கு
உயிரே காரணம் தேடுகிறேன்
அடர்ந்த காட்டின் நடுவினிலே
அலைவதாய் எனக்குள் உணர்கின்றேன்

வழியில் வந்து சதி செய்தார்
வகையை இங்கே தேடுகிறேன்
வலியில் நெஞ்சு துடிக்கையிலே – உன்
வார்த்தைகள் வருடி துடிக்கின்றேன்

இல்லா இந்த இடைவெளியில்
இதயமே உன்னை புரிகின்றேன்
அதிகம் அன்பை பொழிந்ததுவே
அன்பே அது நீ என்கின்றேன்

இடையில் நுழைந்த இடையூறால்
இதயம் இரண்டு பிரிந்ததுவே
புரிதல் ஒன்றில் கிழிந்ததினால்
புண்ணாய் இதயம் மாறியதே ….!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 08-04-2024

என்னை விட்டு விடு
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

என்னை விட்டு விடு

என்னை விட்டு விடு

பக்கத்தில் நீ இருக்க
பகலும் இங்கு இருளுதடி
சொர்க்கத்தில் இருப்பதுவாய்
சொல்லி மனம் துடிக்குதடி

அத்தனை கோள்களும்
அழகி உன்னை சுற்றுதடி
வெப்ப மாணிக்கும்
வேர்த்து இன்று கொட்டுதடி

மஞ்சள் வெயில் சூரியனும்
மணி கணகக்காய் காத்திருக்க
காணாமல் நடப்பவளே
கட்டழகி நீ தானோ ..?

வீதியில நீ போகையில
விபத்துக்கள் கூடுதடி
வெடிக்கின்ற எரிமலையே
வெப்பத்தை தணிக்காயோ

சத்தியமாய் சொல்கிறேன்
சம்மதம் சொல்லிடாதே
பிடிவாத காறியே – என்னை
பிடித்து போக வந்திடாதே …!

வன்னி மைந்தன்
ஆக்கம் -33-03-2024

ஏன் வர மறுக்கிறாய்
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

ஏன் வர மறுக்கிறாய்

ஏன் வர மறுக்கிறாய்

காலை வந்து எனை எழுப்பும்
கதிரவன் போல் நீ இருந்தால்
நெஞ்சம் எல்லாம் உன்னை சுமக்கும் – உன்
நினைவுடனே மனம் வாழும்

மெல்ல வந்து தாலாட்டும்
மெல்லிசை தென்றல் போல
எனை வந்து நீயணைத்தால்
என் ஏக்கம் தீர்ந்து போகும்

சின்ன மீசை மெல்ல வந்து
சீக்கிரமே குற்றும் என
எண்ணியிருக்கும் இக் காலம்
ஏக்கமின்றி தீர்ந்து போகும்

மஞ்சம் மட்டும் உன்னை எண்ணி
மணி கணக்காய் காத்திருக்க
நெஞ்சே வர மறுப்பதென்ன – என்
நியம் காண தவிர்ப்பதென்ன ..?

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 24-03-2024

உன்னை அறிந்து உனக்காய் அழுகிறேன்
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

உன்னை அறிந்து உனக்காய் அழுகிறேன்

உன்னை அறிந்து உனக்காய் அழுகிறேன்

நிலவே நிலவே நீ எங்கே
நினைவுகள் மட்டும் ஏன் இங்கே
ஏக்கத்துடன் நான் தவிக்க
ஏங்க வைத்து போனதெங்கே

அந்தி வரும் பொழுதில்
ஆகாயம் தேடுகிறேன்
ஆதரவு இல்லா
அன்பே வாடுகிறேன்

தன்னம் தனி வாடையிலே
தாகம் தவிக்கிறது
தாராளம் செய்தாய் அன்று
தவறிழைத்தேன் நான் இன்று

ஓடும் நதியில் ஆடும் படகாய்
ஓடினாயே அன்று
ஓடி ஆடும் அலையில்
ஓங்கி அடி வாங்கினாயே நன்று

வலி வாங்கி அமைதி கொண்டாய்
வாழ்வின் வழி தெரிந்து நின்றாய்
உன்னை புரியா தவறிழைத்தேன்
உன்னாலே இன்று ஊமை ஆனேன்

படிக்கும் போது தானே பிடிக்கிறதே
பக்குவம் அதில் தானே முளைக்கிறதே
காலம் கடந்து தெளிதல் பிழைதானே
கண்ணீர் வடிக்கிறேன் உனக்காய் நானே ,

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 11-03-2024

கலங்காதே மனமே
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

கலங்காதே மனமே

கலங்காதே மனமே

ஊரு விட்டு ஊரு வந்தா
உன்னை மறப்பேனா
உள்ளமதில் நின்றாய்
உன்னை எறிவேனா

கண்ணுக்குள்ள நீ இருந்து
காட்சிகளை தினம் கொட்ட
கண்ணு மறந்து தூங்குமா
காதலது தாங்குமா

விண்ணும் மண்ணும் உள்ளவரை
விடயங்களை மறப்பேனா
விரதமதை முடித்து வைத்த
விருந்தோம்பல் மறப்பேனா

எந்தனது நெஞ்சுக்குள்ள
என்றும் நீ ஆலயமே
என்றும் உன்னை மறவேனே
ஏன் மனமே கலங்காதே

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 30-11-2023

காதல் நீயே புனிதம்|காதல் கவிதை|வன்னி மைந்தன் கவிதை |tamil kavithai|tamil kavithaikal
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

காதல் நீயே புனிதம்|காதல் கவிதை|வன்னி மைந்தன் கவிதை |tamil kavithai|tamil kavithaikal

காதல் நீயே புனிதம்|காதல் கவிதை|வன்னி மைந்தன் கவிதை |tamil kavithai|tamil kavithaikal

https://youtu.be/qrRGAOBZOng
உன்னில் நன் என்னை நம்பு
Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

உன்னில் நான் என்னை நம்பு

உன்னில் நான் என்னை நம்பு

காயம் கொஞ்சம் நீ தந்தால்
கண்ணீர் நான் தருவேன்
காலம் எல்லாம் நீ வாழும்
கவிதை யான் வடிப்பேன்

புத்தகத்தில் உனை புதைத்து
புது முகம் நான் தருவேன்
புயலாகி வீசி விடும்
புத்துயிர் நான் இடுவேன்

எழுத சொன்னால் நானும் கொஞ்சம்
ஏற்றே எழுதிடுவேன்
என் உயிரில் கலந்து விட்டால்
ஏணி நான் தருவேன்

மூச்சு தந்து உன்னை கொஞ்சம்
முன்னே வாழ வைப்பேன்
முன் பகலில் காயும் புடவை
போல உனை மடிப்பேன்

காட்டு வழியில் நீ நடந்தால்
காவல் நான் வருவேன்
கை தொழும் கடவுளாக – உன்
கண்ணில் நான் இருப்பேன் …!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 03-08-2022

Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

உன்னை தா எனக்கு

உன்னை தா எனக்கு

உனக்குள்ளும் ஒரு காதல் பூத்திருக்குதே – இதை
உணராமல் நீ இன்று மறந்திருக்குதே
வார்த்தைகளை கோர்த்து இன்று பேசிவிடு
வளையல்கள் உடையுமுன்னே நீட்டிவிடு

நாளை என்று காத்திருந்தால் இறந்திடுவாய்
நல்ல காதலை நீயும் இழந்திடுவாய்
இறக்கும் முன்னே வாழ்ந்துவிட வந்துவிடு
இதயமதை ஓடி வந்து தந்துவிடு

நீ சிரிச்சா நான் மகிழ்வேன் ஏற்றுவிடு -அந்த
நீர் உறங்கும் கன்னக்குழி தந்துவிடு
மூச்சிழக்க பேசும் உன் உதடு
முத்தமிட நீ எனக்கு தந்துவிடு

உலகாளும் அத்தனையும் உனக்கிருக்கு – நீ
உறங்குமிடம் ஏனோ இங்கிருக்கு ..?
உன் திறனை ஏன் மறைத்தாய் சொல்லெனக்கு
உலகாள வைத்திடுவேன் உனை தாயெனக்கு …!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 27-07-2022