Posted in இலங்கை செய்திகள்

இலங்கை வரும் இந்தியா எண்ணெய் கப்பல்

இலங்கை வரும் இந்தியா எண்ணெய் கப்பல்

இலங்கைக்கு இந்தியாவின் உதவி திட்டத்தில் ஐநூறு மில்லியன் அமெரிக்கா டொலர் பெறுமதியான எரிபொருளை தாங்கிய படி இந்தியா எண்ணெய் கப்பல் இலங்கை வருகிறது

இவ்வாறு இலங்கை வரும் இந்தியா எண்ணெய் கப்பல் ஊடாக மக்களுக்கு போதுமான எரிபொருள் நிவர்த்தி பெறும் என அமைச்சர் கஞ்சன விஜயசேகரா தெரிவித்துள்ளார்

இலங்கைக்கு அவசரகால உதவியின் கீழ் இந்திய பாரிய அளவிலான உதவியை வழங்கி வருகிறது ,

இந்திய உதவி திட்டம் நிறுத்த பட்டால் இலங்கை மிக பெரும் நெருக்கடி நிலைக்கு செல்லும் நிலை ஏற்படும் என எதிர் பார்க்க படுகிறது

இலங்கையில் எரிபொருளுக்கு தொடர்ந்து தட்டுப்பாடு நிலவிய வண்ணம் உள்ளது ,மக்கள் பல மைல் தொலைவில் நிரையில் காத்துக் கிடக்கின்றனர்

ஆனால் அவர்கள் எதிர் பார்த்த எரிபொருள் கிடைக்க பெறாத நிலையில் ,நாள்தோறும் எரிபொருள் விலையும் அதிகாரித்துள்ளது

எரிபொருள் விலை உயர்வு காரணமாக பொது போக்குவரத்து முடக்க பட்டுள்ள அதேவேளை உணவு உற்பத்தி பொருட்கள் தயாரிப்பும் தடை பட்டுள்ளது

மின்சாரம் எரிபொருள் இலங்கையில் பாற்றாக்குறை நிலவி வருவதால் இந்த உற்பத்தியிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளன

இவ்வாறான நெருக்கடி நிறைந்த கால கட்டத்தில் இலங்கை வரும் இந்தியா எண்ணெய் கப்பல்இலங்கையின் நெருக்கடியை உடனே தீர்த்து வைக்க போதுமானதாக உள்ளதாக என்ற ஐயம் எழுந்துள்ளது


எதிர் வரும் மூன்று மாதத்திற்குள் நாடு பெரும் பொருளாதார பின்னடைவை சந்திக்கும் என இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்து இருந்தார்

இவரது கூற்று மெய்ப்படும் வண்ணம் இந்தியா உதவிகள் நிறுத்த பட்ட பின்னர் ஏற்படும் அபாயகரமான நிலை தோற்ற பெற போகிறது

தொடரும் இலங்கையின் நெருக்கடிக்கு தீர்வு காண உலக வாங்கி முயற்சிகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளது

ஆனால் அவையும் பயனுள்ள ஒன்றாக மாற்றம் பெறுமா தொடர்ந்து இலங்கைக்கு
எண்ணெய் கப்பல்கள் வந்தடையுமா என்ற கேள்வியோடே மக்கள் அவளை வாழ்வு தொடர்கிறது

உலகவங்கி மேற்கொள்ளும் கடன் வழங்குதல் ஊடாக இலங்கை நெருக்கடி நிலை கட்டுப்படுத்த படுமா ..?

  • வன்னி மைந்தன்
    Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

    உன்னை நினைத்தால் அழுகை வரும் ..!

    உன்னை நினைத்தால் அழுகை வரும் ..!

    இன்றைய பொழுதில் எம் நிகழ்வு
    இதயமே உனக்கு தெரிகிறதா
    இன்றைய நாளில் இணைந்தோம்
    இன்றந்த நாள் புரிகிறதா

    ஆண்டுகள் நூறு கழிந்தாலும்
    அதுபோல் சுகமொன்று மீள்வருமா
    அத்தனை ஆனந்தம் அதிலிருக்கு
    அன்பே உனக்கு தெரிகிறதா

    துளியாய் கழிந்த நிமிடங்களை
    தூசி தட்டி பார்த்திடுவாய் – கண்
    தூரிகையால் எனை வரைந்த
    துடிப்பை நீயும் புரிந்திடுவாய்

    கொட்டிய கண்ணீர் துளிகளையே – ஒரு
    கொள்கலன் கொண்டு நிரப்பிடலாம்
    கொண்டை கலைந்த நிமிடங்களை
    கொட்டி சேதி சொல்லிடலாம்

    பக்கத்தில் நீ இருந்த நிமிடங்களோ – ஒரு
    பட்டி பொங்கல் போலிருக்கும் – இன்று
    பக்கங்கள் திறந்து பார்க்கையிலே
    பார்விழி இரண்டில் நீர் இருக்கும் …!

    வன்னி மைந்தன் ( ஜெகன் )
    ஆக்கம் 02-06-2022

    வன்னி மைந்தன் கவிதைகள்

      Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

      பெண் உலாவும் இரவு வரும் ..!

      பெண் உலாவும் இரவு வரும் ..!

      ஆமி பொலிஸ் வீதியில
      அன்றாடம் நிற்கையில
      வாள் வெட்டு நடக்குதாம்
      வம்புகள் வெடிக்குதாம்

      தலை பா கட்டிகளும்
      தலை தெறிக்க ஓடுதாம்
      வெள்ளை வெட்டிகளோ
      வெறியோடு சிரிக்குதாம்

      குண்டி விழும் காற்சட்டை
      குமரிகள் முன் விழ
      பொக்கை வாய் பாட்டிகளும்
      பொல்லெறிந்து சிரிக்குதாம்

      தன் பதவி தான் காக்க
      தமிழருக்குள் சில்லறைகள்
      நேர்ந்து விட்டதுகள்
      நெடுகிலும் ஆக்கினைகள்

      குடல் பிடுங்கி வெளி எறிந்து
      குரல் ஒடுங்கி சாகடிக்க
      ஆள் இல்லா நிலையின்றோ
      அதனாலோ ஆடுகிறார்

      விடிகின்ற ஆதவனின்
      விடியலின் ஒளியிலே
      காவாலி கரை சேரும்
      கால் தடம் மாறும்

      இரவு வெளிச்சத்தில்
      இளம் மாது உலாவும்
      காலம் அது மலரும்
      கரிகாலன் வருவான் …!

      வன்னி மைந்தன் ( ஜெகன் )
      ஆக்கம் 30-03-2022

      வன்னி மைந்தன் கவிதைகள்