நீயே என் கவிதை
இன்றொரு கவிதை கண்டேன்
இதயம் மகிழ்ந்து நின்றேன்
நுண்ணுயிர் போல நுழையும் – உன்
நுணுக்கம் கண்டு மகிழ்ந்தேன்
விண்ணது எழுந்து ஆடும்- உன்
வீரிய குரலது கண்டால்
பொன் மனம் எழுந்து ஆடும் – உன்
பொடி படும் தமிழது கண்டால்
பாவையர் கூடி வந்தால் – அட
பாவும் உனக்குள் மோதும்
பாவையர் கூடி பாடின் – அட
பகலும் உனக்குள் இருளும்
வைர முத்து குரலோ
வந்து காதில் வீழ்ந்தால்
துள்ளி ஆடும் புல்லும் – மழை
துளியை தூவும் வானம்
கவியின் அழகும் நீதான் – அந்த
கடலின் அலையும் நீதான்
மொழியின் மலர்வு நீதான் – உன்னை
மொழிந்தேன் இன்று நான்தான் …!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 17-07-2022
வன்னி மைந்தன் கவிதைகள்