தோற்று போன காதல்
Posted in கவிதைகள்

தோற்று போன காதல்

தோற்று போன காதல்

முற்றத்தில் நீ இருக்க
முகம் கழுவா உன்னை பார்க்க
பக்கத்தில நான் வந்தேன்
பார்க்க என்னை மறந்ததேன்

சொர்க்கத்தில் இருப்பதுவாய்
சொல்லிவிட முடியாத
பாசத்தில் நான் துடிக்க
பாவை என்னை மறந்ததேன்

தேன் மலரும் பூ விழியால்
தேடுதல் செய்தவளே
ஒத்தை வரி சொல்லமால்
ஓடி போனதென்ன

மெத்தையில நீ இருந்து
மேனி வருட கண்ட கனா
பக்கத்தில கூடலையே
பார் விழி நோகுதடி

ஆசை பட்ட வாழ்வதனை
அப்படியே தந்து விட
வெளிநாடு போனேண்டி
வெற்றிடமாய் நின்றேண்டி

மணமகளாய் நீ யிருக்க
மாலையதை சூடிவிட
வீடு வந்து பார்த்த போது
விசரணாய் ஆனேண்டி

ஏன் நினைத்தேன் நான் அன்று
எனை மறப்பாய் நீ என்று
உன் நினைவை நான் சுமந்து
ஒத்தையாக வாழ்கிறேனே .

ஆக்கம் =- 29-04-2025

  • வன்னி மைந்தன் –
  • 0044 7536707793

லண்டன் அண்ணன் ஒருவரது உண்மை காதல் கேட்ட பொழுது என் பேனா முனையில் இப்படி உதிர்ந்து .

எனக்கு என்ன ஆச்சு
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

எனக்கு என்ன ஆச்சு

எனக்கு என்ன ஆச்சு

உயிரே உன்னை பிடிக்குதே – ஏனோ
உன்னால் உள்ளம் துடிக்குதே
கண் இரண்டில் காட்சிகளாய் நீ விழ
கவலை மெல்ல கலையுதே

ஏனோ உன்னால் இரவும் விடியுதே
ஏதோ மாற்றம் எனக்குள் நிகழுதே
புரிய முடியா தவிக்கிறேன்
புகலிடமாய் மனம் தவிக்குதே

விடியும் பொழுதில் விழியோரம்
விடயம் சொல்கிறாய் –
கனவில் வந்தே கதைகள் சொல்ல
கண் உறக்கம் தொலைக்கிறேன்

நிலவரம் என்னவோ – இந்த
நிகழ்வு என்னவோ
தெரிந்தவளே பதில் சொல்லு
தெரியா கேட்கிறேன்

எனக்கு என்ன ஆச்சு
என்னை கேள்வி கேட்கிறேன்
ஆனால் அமைதியாகும் மனதால்
அவதி படுகிறேன்

புரிந்தவளே புதிர் சொல்லு
புரியும் மொழியில் சொல்லு
ஏன் இப்படியானேன்
எனக்கு ஏதும் தெரியலையே …!

அக்கம் – 28-04-2025

  • வன்னி மைந்தன் –

Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

நீயே என் கவிதை

நீயே என் கவிதை

இன்றொரு கவிதை கண்டேன்
இதயம் மகிழ்ந்து நின்றேன்
நுண்ணுயிர் போல நுழையும் – உன்
நுணுக்கம் கண்டு மகிழ்ந்தேன்

விண்ணது எழுந்து ஆடும்- உன்
வீரிய குரலது கண்டால்
பொன் மனம் எழுந்து ஆடும் – உன்
பொடி படும் தமிழது கண்டால்

பாவையர் கூடி வந்தால் – அட
பாவும் உனக்குள் மோதும்
பாவையர் கூடி பாடின் – அட
பகலும் உனக்குள் இருளும்

வைர முத்து குரலோ
வந்து காதில் வீழ்ந்தால்
துள்ளி ஆடும் புல்லும் – மழை
துளியை தூவும் வானம்

கவியின் அழகும் நீதான் – அந்த
கடலின் அலையும் நீதான்
மொழியின் மலர்வு நீதான் – உன்னை
மொழிந்தேன் இன்று நான்தான் …!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 17-07-2022

வன்னி மைந்தன் கவிதைகள்