உன்னில் நன் என்னை நம்பு
Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

உன்னில் நான் என்னை நம்பு

உன்னில் நான் என்னை நம்பு

காயம் கொஞ்சம் நீ தந்தால்
கண்ணீர் நான் தருவேன்
காலம் எல்லாம் நீ வாழும்
கவிதை யான் வடிப்பேன்

புத்தகத்தில் உனை புதைத்து
புது முகம் நான் தருவேன்
புயலாகி வீசி விடும்
புத்துயிர் நான் இடுவேன்

எழுத சொன்னால் நானும் கொஞ்சம்
ஏற்றே எழுதிடுவேன்
என் உயிரில் கலந்து விட்டால்
ஏணி நான் தருவேன்

மூச்சு தந்து உன்னை கொஞ்சம்
முன்னே வாழ வைப்பேன்
முன் பகலில் காயும் புடவை
போல உனை மடிப்பேன்

காட்டு வழியில் நீ நடந்தால்
காவல் நான் வருவேன்
கை தொழும் கடவுளாக – உன்
கண்ணில் நான் இருப்பேன் …!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 03-08-2022

Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

கோபம் தவிர்

கோபம் தவிர்

என்னை அடித்தாயா – நீ
என்னை அடித்தாயா
எரிமலை ஒண்ணை – நீ
ஏறி அணைத்தாயா ..?

உச்சி வெயில் போல – என்
உள்ளம் எரியுதே
கந்தல் உடல் தேயுதே – உன்
கதை கேட்டு விழி உருகுதே

எத்தனை முறை என்னை இழிப்பாய்
எனக்கு பதில் சொல்லாய்
தோற்று போனது நீயே – இந்த
தோல்வி எல்லாம் போலியே

உள்ளம் மாசடைந்தால்
உயிரும் வாழ்ந்திடுமா
கள்ளம் மனம் படுத்தால்
கருணை பிறந்திடுமா

ஏதும் செய்தும் இன்றென்ன
எல்லாம் வீண் தானே
என்னை வீழ்த்த முடியாது
ஏற்று தெளிந்தாயே

கோபம் தவிர்த்தால் வாழ்வாயே
கொடி நாட்டி ஆள்வாயே
கொள்கை நட்டு எழுந்தால்
கோட்டை ஆள்வாயே …!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 28-07-2022

    Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

    இவளுடன் வாழ விடு ..!

    இவளுடன் வாழ விடு ..!

    காத்திருந்தேன் நேற்று வரை
    காணவில்லை நீ மயிலே
    கண் விழித்து நானெழுந்தேன்
    கண்ணெதிரே நீ குயிலே

    முந்தினத்து கற்பனைகள்
    முத்த மழை பொலிந்து விட
    வெட்கத்தில நீ தவித்தாய்
    வேர்வையில உடல் குளித்தாய்

    பக்கத்தில நீ இருக்க
    பகலிரவு தெரியவில்லை
    சொர்க்க மதாய் நீ விளங்க
    சோகமதை காணவில்லை

    இறக்கும் வரை உன்னுடனே
    இதயமே இருக்க வேண்டும்
    இத்தனை நாள் வேண்டுதலை
    இறைவா நீ தர வேண்டும் ..!

    வன்னி மைந்தன் ( ஜெகன் )
    ஆக்கம் 19-05-2022

    வன்னி மைந்தன் கவிதைகள்

      Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

      கைவிடப்பட்ட தேசத்தின் ஓலம் ..!

      கைவிடப்பட்ட தேசத்தின் ஓலம் ..!

      அழுகுரல் ஓசை வானை கிழிக்க
      அவலம் நடக்கிறது
      ஆடி வரும் குண்டு துளைத்து
      அரை உடல் கிழிகிறது

      போரும் விரட்ட போக்கிடம் கலைய
      பொழுதும் விடிகிறது
      போர்வெறி பிடித்தான் ஆணை முழங்க
      பெரும் நகர் வீழ்கிறது

      தேடி சேர்த்த பொருளில் பாதி
      தெருவில் மிதக்கிறது
      தேடுவார் இன்றி வீதியில் மக்கள்
      தேம்பி அழுகிறது

      குஞ்சும் கதற பிஞ்சும் பதற
      குரல் வளை அறுகிறது
      கூவி திரிந்தவர் கூடுபிரிய
      குறட்டை விடுகிறது

      உன்பலம் அறிந்தே ஊளையிட்டால்
      உனக்கு கவலையில்லை
      ஊரைநம்பி ஊதி திரிந்தால்
      உனக்கு இழி நிலையே …!

      வன்னி மைந்தன் ( ஜெகன் )
      ஆக்கம் 05-03-2022

      உக்கிரேன் ரஷியா போர் எண்ணியபொழுது

        தவிக்கிறேன்
        Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

        உன்னை எண்ணி தவிக்கிறேன் ..!

        உன்னை எண்ணி தவிக்கிறேன் ..!

        என்ன செய் தாயோ
        என்னை ஏங்க வைத்தாயோ
        என்னை ஏங்க வைத்தேனோ
        என் இதயம் பறித்தாயோ

        முன் பனியாய் பின்னிரவில்
        முன்னே வாராயோ – நான்
        முழு நிலவில் குளித்திட
        முழு உலா வாராயோ

        எதுகை மோனை எனதாகும் – என்
        ஏக்கம் வாங்கு உனதாகும்
        படித்து பாரு புதிராகும்
        படைக்க முனை விழிப்பாகும்

        சந்தம் இல்லா பாட்டுக்குள்ளே
        சங்கதி இருக்காதே
        அந்தி சாயும் வேளையிலே
        ஆள் மனம் தூங்காதே

        முத்தம் தரவா முன்னே வரவா
        முழு நிலவே பதில் தர வா
        நித்தம் வரவா நீளும் இரவா
        நினைவில் வைத்திட வா

        உன்னை எண்ணி தவிக்கிறேன்
        உருகி மெழுகாய் அழுகிறேன்
        வின் விட்டு வாராயோ
        விழுந்து உடல் தழுவாயோ ..?

        வன்னி மைந்தன்
        ஆக்கம் 03-01-2022

        Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

        நீயே என் உயிர் வந்து விடு …!

        நீயே என் உயிர் வந்து விடு …!

        நீயும் நானும் கூடனும்
        நீளும் காலம் வாழனும்
        உயிரே வா வா
        உள்ளம் தா தா

        அசைந்து வரும் காற்றாய்
        ஆடி விழும் மின்னலாய்
        ஓடி நாளும் வருவாய்
        ஓராயிரம் இன்பம் தருவாய்

        மின்னல் அடி கண்ணில் ஊறுதடி
        யன்னல் வழி காற்று ஓடுதடி
        கொட்டும் மழையில் உடல் நனையுதடி
        ஓட்டும் உடையில் உடல் தெரியுதடி

        வானம் கறுத்ததோ மேனி சிலிர்த்ததோ
        வானம் பாடி மழை பொழிந்ததோ
        அட டா இது தான் விதியோ
        ஆண்டவன் இட்டான் சதியோ

        ஓடும் நதியிலே ஆடும் அலையிலே
        ஓடும் படகாய் ஆடும் மயிலே
        நீதானே நிதம் வேண்டும்
        நீயே என் உயிர் வரணும் …!

        வன்னி மைந்தன்
        ஆக்கம் 22-11-2021