Tag: Army
காசாவுக்குள் நுழைய தயராகும் இஸ்ரேல் இராணுவம்|Israel army prepares to enter Gaza|isreal Gaza war
காசாவுக்குள் நுழைய தயராகும் இஸ்ரேல் இராணுவம்|Israel army prepares to enter Gaza|isreal Gaza war
காசாவுக்குள் நுழைய தயராகும் இஸ்ரேல் இராணுவம்,
கடல் ,தரை ,வான்வெளி தாக்குதலுக்கு தயாரான நிலையில் ,
களம் திறக்க பட்டுள்ளது ,Israel army prepares to enter Gaza|isreal Gaza war.
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு

- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா

- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது

- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி

- தரமற்ற மலசல கூடம் |ஆவேசமான மக்கள் |சிக்கிய வன்னி மைந்தன் tIKtOK தளம்

- மாணவர்களுக்கு அள்ளி கொடுத்த தம்பதிகள் |பிரான்ஸ் உறவுகள் செய்த பெரும் உதவி

- சீதனம் வாங்கிய ஆண்கள் படும் பாடு |கண்ணீர் கதறல்

- பழிவாங்கும் அர்ச்சுனா |மிரளும் எதிரிகள்

- வன்னி மைந்தன் உதவி திட்டத்தை குழப்ப சதி

- தங்கத்தை சிறுநீரை குடிக்கவும் அர்ச்சுனா சர்ச்சை பேச்சு

முல்லைத்தீவில் ஏழை குடும்பத்திற்கு வீடு கட்டி கொடுக்கும் இராணுவம்
முல்லைத்தீவில் ஏழை குடும்பத்திற்கு வீடு கட்டி கொடுக்கும் இராணுவம்
வணக்கத்துக்குறிய கல்கமுவ சாந்தபோதி தேரர் மற்றும் பிலியந்தல அமிதகொஸா தேரர் ஆகியோரின் நிதியுதவியின் மூலம், முல்லைத்தீவு மன்னங்கடல் பிரதேசத்தில் வசிக்கும் ஒரு வறிய
குடும்பத்திற்காக நிர்மாணிக்கப்பவுள்ள புதிய வீட்டிற்கான தொழில்நுட்ப நிபுணத்துவ மற்றும் மனித வள வசதிகள், முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 64 வது
படைப் பிரிவின் 641 வது பிரிகேடின் கீழ் உள்ள 14 வது இலங்கை சிங்கப் படையணியின் படையினரால் வழங்கப்பட்டுள்ளன.
இந்த திட்டமானது பாதுகாப்பு பதவி நிலை பிரதானி மற்றும் இராணுவ தளபதியின் எண்ணகருவிற்கமைய அந்தந்த பகுதிகளில் உள்ள ஏழைக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை
உயர்த்துவதற்கும், பாதுகாப்புப் படையினர் மற்றும் பொது மக்களிடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காகவும் முன்னெடுக்கப்பட்டது.
இந்த வீட்டை நிர்மாணிப்பதற்காக பிக்குகள் மற்றும் 64 வது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் மஞ்சுள கருணாரத்ன ஆகியோரால் சனிக்கிழமை (12) ஆம் திகதி அடிகல் நாட்டப்பட்டது.
இந்த திட்டமானது முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் உபாலி ராஜபக்ஜ அவர்களின் வழிக்காட்டலுக்கமைய 14 வது இலங்கை சிங்க படையணியின் கட்டளை
அதிகாரி லெப்டினன் கேணல் சி.டி.அதுல்தொல்ஆராச்சி அவர்களின் ஒருங்கிணைப்பில் மேற் கொள்ளப்பட்டது.
மனித வெடிகுண்டு தாக்குதல் -வெடித்து சிதறிய இராணுவ முகாம்
மனித வெடிகுண்டு தாக்குதல் -வெடித்து சிதறிய இராணுவ முகாம்
சோமாலியா General Dhagabadan இராணுவ பயிற்சி தளத்தின் மீது மனித வெடி குண்டு தாக்குதல் நடத்த பட்டுள்ளது
இதில்; அந்த முகாம் பலத்த சேதமடைந்துள்ளதுடன் பலர் காயமடைந்து உள்ளனர்
வெடி குண்டு நிரப்ப பட்ட கார் ஒன்றை ஒட்டி சென்று நடத்த பட்ட தாக்குதலில் ,இராணுவ
தரப்பிற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது ,எனினும் இதுவரை அங்கு இடம்பெற்ற சேத விபரங்கள் தெரியவரவில்லை
இராணுவம் – போராளிகள் சண்டை 165 கிளர்ச்சி படைகள் மரணம்
இராணுவம் – போராளிகள் சண்டை 165 கிளர்ச்சி படைகள் மரணம்
ஆப்கானிஸ்தானில் அரச இராணுவத்திற்கும் கிளர்ச்சி படைகளிற்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களில் ,அரச இராணுவத்தினர் நாற்பது பேர் பலியாகியுள்ளனர்
மேலும் 165 தலிபான்கள் படுகொலை செய்ய பட்டுள்ளதாக அரச இராணுவம் அறிவித்துள்ளது
ஆனால் தாலிபான்களோ அரச இராணுவத்தில் இருநூறுக்கு மேற்பட்டவர்கள் பலி என தெரிவித்துள்ளனர்
குறித்த நாட்டை விட்டு அமெரிக்கா படைகள் விலகி வரும் நிலையில் அங்கு தலிபான்கள் தாக்குதல்கள் தீவிரம் பெற்று வருகின்றமை குறிப்பிட தக்கது
ஈராக் அமெரிக்கா இராணுவ தளம் மீது தாக்குதல் – ,முக்கிய உளவாளிகள் காயம்
ஈராக் அமெரிக்கா இராணுவ தளம் மீது தாக்குதல் – ,முக்கிய உளவாளிகள் காயம்
வடக்கு ஈராக் பகுதியில் அமைந்துள்ள அமெரிக்கா இராணுவத்தின் முக்கிய தலைமையமாக
விளங்கும் இராணுவ தளம் மீது கடந்த இரவு ஆள் இல்லா உளவு விமானம் மூலம் தாக்குதல் நடத்த பட்டுள்ளது
இதில் அமெரிக்கா CIA and US Special Operations units.பகுதியை சேர்ந்த முக்கிய நபர்கள் காயமடைந்துள்ளனர்
மேற்படி தகவலானது அங்கு உள்ள அந்த முக்கிய நபர்கள் குடும்பங்கள் வாயிலாக கசிந்துள்ளது
மத்திய கிழக்கு நாடுகளை விட்டு அமெரிக்கா இராணுவம் வெளியேறும் வரை தமது தாக்குதல்கள் தொடரும் என ஈரான் அறிவித்திருந்தமை இங்கே குறிப்பிட தக்கது
இலங்கையில் மக்களை பிடிக்கும் பறக்கும் படை – படங்கள் உள்ளே
இலங்கையில் மக்களை பிடிக்கும் பறக்கும் படை – படங்கள் உள்ளே
இலங்கையில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ ,தனிமை படுத்தல் விதிகளை மீறி
செயல் படுபவர்களை இலங்கை இராணுவத்தின் பறக்கும் படையினர் களத்தில் இறக்கி விடப்பட்டுள்ளனர்
இவர்கள் இலங்கையின் அணைத்து பகுதிகளிலும் இந்த படையினர் களத்தில் இறக்கி விட பட்டுள்ளனர்
நவீன ஊந்துருளிகள் மூலம் ,வோக்கிகள் சகிதம் உலா வரும் இவர்கள் ,மக்களை கைது செய்யும் வேட்டையிலும் ,கண் காணிப்பு பணியிலும் ஈடுபடுத்த பட்டுள்ளனர்



மனித வெடி குண்டு தாரி உறவினர்கள் இராணுவத்தால் கைது
மனித வெடி குண்டு தாரி உறவினர்கள் இராணுவத்தால் கைது
இலங்கையில் தேவாலயங்கள் மீது தொடர் குண்டு தாக்குதலை நடத்திய சகரான் உறவினர்கள்
இருவர் பயங்கரவாத குற்ற தடுப்பு பிரிவினரால் கைது செய்ய பட்டுள்ளனர்
கைதானவர்கள் தொடர்ந்து தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளனர் ,
மேலும் புலிகள் பெயரை பாவித்து வெளிநாடு செல்ல முற்பட்ட நபர் ஒருவரும் கைது செய்ய பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது
64 முன்னாள் போராளிகளுக்கு கை ,கால்களை வழங்கும் சிங்கள இராணுவம்
64 முன்னாள் போராளிகளுக்கு கை ,கால்களை வழங்கும் சிங்கள இராணுவம்
சிங்கள இராணுவத்துடன் போராடி தமது அவையவங்களை பறி கொடுத்த முன்னாள் போராளிகள்
அறுபத்தி நான்கு பேருக்கு செயற்கை கை ,கால்களை வழங்கவுள்ளது ,
இவ்வாறு வழங்க படும் அனைவரும் அதே சிங்கள இராணுவ கட்டமைப்புக்குள் உள்வாங்க பட்டு
பணியாற்றி வருகின்றமை குறிப்பிட தக்கது
ஐநா தொடரணி மீது தாலிபான்கள் தாக்குதல் – முக்கியஸ்தர்கள் படுகொலை
ஐக்கிய நாடுகள் வாகன அணிமீது தலிபான்கள் பதுங்கி தாக்குத்தல் -பலர் மரணம்
அமெரிக்கா இராணுவம் விலகல் காரணமாம்
ஆப்கனிஸ்தான் தலைநகர் பகுதியில் பயணித்து கொண்டிருந்த ஐக்கிய
நாடுகள் சபையின் வாகன தொடரணியை இலக்கு வைத்து தாலிபான்
போராளிகள் பதுங்கி தாக்குத்தல் நடத்தினர் ,இதில் பலர் மரணமாகியுள்ளதாக தெரிவிக்க படுகிறது
அமெரிக்கா இராணுவம் குறித்த நாட்டில் இருந்து விலகி செல்லும் என டிரம்ப்
நிர்வாகம் அறிவித்திருந்ததன் பின்னர் அரச இராணுவதை இலக்கு
வைத்து தலிபான்கள் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றமை குறிப்பிட தக்கது
வன்னி பகுதி எங்கும் சிங்கள இராணுவம் குவிப்பு – தமிழர்களை கைது செய்ய திட்டம்
வன்னி பகுதி எங்கும் சிங்கள இராணுவம் குவிப்பு – தமிழர்களை கைது செய்ய திட்டம்
இலங்கை வடக்கு தமிழர் பகுதியில் ,தமிழ் மக்களை மிக கோரமாக அழித்து
ஒழித்த சிங்கள இனவழிப்பு நாளினை ,முள்ளி வாய்க்கால் பகுதியில் நினைவு கூறுவது வழமை
கொடிய கொரனோ நோயின் காரணமாக மக்கள் வெளியில் நடமாட
ஊரடங்கு தடை விதிக்க பட்டுள்ளதால் ,இம்முறை அதனை நினைவு கூறிட தமிழர்கள் முயற்சிக்கவில்லை
ஆனால் இவ்வாறான போக்கினை காண்பித்து விட்டு மக்கள் முள்ளிவாய்க்கால்
பகுதியில் ஒன்று கூடுவார்கள் என்ற நிலையில் ,சிங்கள இராணுவம் ,மற்றும்
புலனாய்வு துறையினை முள்ளிவாய்க்கால் முதல் கிளிநொச்சி வரை சிறப்பு காவல் பணியில் ஈடு பட்டுள்ளனர்
தமிழர்கள் அத்துமீறி வெளியில் சென்றனர் என்ற போர்வையில் கைது
செய்திட சிங்களம் தயாராகி வருவதாக அங்கிருந்து வரும் கசிவுகள் தெரிவிக்கின்றன

புலனாய்வு கட்டமைப்பின் கீழ் கொவிட் 19 (COVID 19) முழுமையாக இல்லாதொழிக்க முடியும். அரச புலனாய்வுப் பிரிவு
புலனாய்வு கட்டமைப்பின் கீழ் கொவிட் 19 (COVID 19) முழுமையாக இல்லாதொழிக்க முடியும். அரச புலனாய்வுப் பிரிவு
30 வருட கால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தது போன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலமைத்துவத்தின்
எண்ணக்கருவிற்கு அமைவாக கொவிட் 19 வைரசை நாட்டில் முழுமையாக இல்லாதொழிக்க முடியும் என்ற நம்பிக்கை உண்டு
என்று அரச புலனாய்வு பிரிவின் உதவிப் பணிப்பாளர் பராக்கிரம சில்வா தெரிவித்தார்.
சுகாதாரத்துடன் தொடர்புபட்ட இந்த நோய் தொற்றை தடுப்பதில் புலனாய்வு பிரிவு மேற்கொண்டு வரும் நடவடிக்கையில்
தனிப்பட்டவர்களின் பிரத்தியோக தகவல்களுக்கு எந்தவித குந்தகமும் ஏற்படாது. இதற்கான உறுதியை எம்மால் தெரிவிக்க
முடியும். எமது பணி நோயை இல்லாதொழிப்பதற்கு சுகாதார பிரிவின் நோயை தடுப்பதற்கான முயற்சிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாகும் என்று அவர் தெரிவித்தார்.
அரசாங்க தொலைக்காட்சி ஒன்றிற்கு இன்று காலை வழங்கிய நேர்காணலில் அவர் இந்த விடயங்களை தெரிவித்தார்.
தற்பொழுது இந்த வைரசு தொற்று நாட்டில் முழுமையாக
கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு பதிலளிக்கையில் இதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளுளோம். நாட்டிலிருந்து இதனை முழுமையாக
இல்லாதொழிப்பதற்கான வலிமை சுகாதார பிரிவைப் போன்று பாதுகாப்பு தரப்பினருக்கும் இருப்பதாகவும் அவர் கூறினார்.
உலகில் புலனாய்வுத் துறையில் முன்னணியில் விளங்கும்
நாடுகளைப் போன்று இலங்கைப் புலனாய்வுப் பிரிவும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதா என்ற கேள்விக்கு அவர் பதிலளித்தார். உலகில் இஸ்ரேல் போன் நாடுகள் புலனாய்வுத்
துறையில் முன்னணியில் திகழ்கின்றன. இருப்பினும் இவ்வாறான நாடுகளின் புலனாய்வு விடயங்களை நாம் பின்பற்றவில்லை. எமது நாட்டுக்கென புலனாய்வு சேவையொன்று எம்மிடம் உண்டு. இதன்
மூலமே எவறாலும் முடிவுக்கு கொண்டு வரமுடியாத என்று தெரிவிக்கப்பட்ட 30 வருட கால யுத்தத்தை நாம் வெற்றிகரமாக நிறைவு செய்தோம். இதற்கு தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய
ராஜபக்ஷ அப்போது தலமை தாங்கினார். அவரது எண்ணக்கருவிற்கு அமைவாக விடயங்களின் அடிப்படையிலே தற்பொழுது இந்த
கொவிட் 19 தொற்றை இல்லாதொழிப்பதற்கு புலனாய்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
குற்றச்செயல்கள் போதைப்பொருள் கடத்தல் போன்றவற்றிலேயே புலனாய்வு பிரிவினர் பாரிய நடவடிக்கைகளில்
மேற்கொள்கின்றனர். கொவிட் 19 எஎன்பது சுகாதார துறையுடன் சம்பந்தப்பட்ட நோய்த தொடர்பான விடயமாகும். இதில் இலங்கை
புலனாய்வு பிரிவு தமது பணியை எவ்வாறு முன்னெடுக்கின்றது குறித்து அவர் விவரித்தார்.
கடந்த ஓரிரு தினங்களில் 400 கொவிட் 19 நோயாளர்கள் அடையாளங் காணப்பட்டிருந்த நிலையில் இந்த எண்ணிக்கை திடீரென 600 ஆக அதிகரித்தது. இதற்கான காரணத்தை
விளக்குகையில், இந்த நோய் மார்ச் மாத காலப்பகுதியிலே இலங்கையில் வேகமாக பரவ ஆரம்பித்தது. இதற்கு முன்னதாக நாம் இந்த நோய் எவ்வாறு எத்துறைகள் மூலம் பரவ ஆரம்பித்தது
என்பதை 31 கொத்து அடிப்படையில் வகுத்து கொண்டோம். அதன் அடிப்படையில் சுற்றுலா பயணிகள், இரத்தினக்கல் வர்த்தகம், போதைப்பொருள், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள்,
விசேடமாக இத்தாலி போன்ற நாடுகளில்ருந்து வந்தவர்கள், சுதுவெல்ல பகுதியில் போதைப்பொருள் பாவணையில் ஈடுபட்டிருந்தவர்கள் போனற பிரிவுகளின் அடிப்படையில் நாம்
எமது புலனாய்வு நடவடிக்கைகளை நாம் விரிவுபடுத்தினோம். இதற்கமைவாக விசேடமாக சுதுவெல்ல பகுதியில் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டிருந்தவர்கள் இந்த
நோயினால் பரிக்கப்பட்டிருந்ததை அடையாளங் கண்டோம். இவர்களுள் ஒருவர் கிராண்ட்பாஸ் பகுதியில் போதைப் பொருளை பெற்றுள்ளார். இதனை விற்பனை செய்தவருக்கு கொரோனா
தொற்று இருக்கவில்லை ஆனால் போதைப்பொருளை வாங்கியவருக்கு கொரோனா தொற்று காணப்பட்டுள்ளது. இவர்கள் மூலம் போதைப் பொருள் விற்பனை செய்தவர் தொடர்பு
கொண்டவர்கள் உள்ளிட்ட பல்வேறு மட்டத்தில் நாம் புலனாய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு தகவல்களை பெற்று சுகாதாரப் பிரிவினருக்கு வழங்கினோம் என்றும் அவர் தெரிவித்தார்.
சுதுவெல்ல பகுதியில் அடையாளங் காணப்பட்ட கொவிட் 19 நோயாளி தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் கடற்படையினர் அந்தப் பகுதியை முடக்குவதிலும் பாதுகாப்பு
வேலியை அமைப்பதிலும் தீவிரமாக ஈடபட்டிருந்தனர். இதனாலேயே வெலிசறை கடற்படை வீரர்கள் இந்த நோய்த்தொற்றக்குள்ளார்கள். இவர்களில் சிலர் விடுமுறையில்
வீடுகளுக்குச் சென்றிருந்தனர். இந்த கடற்படை முகாம் தனிமைப்படுத்தப்பட்டது. விடுமுறையில் சென்றிருந்த கடற்படை வீரர்கள் தொடர்புபட்டிருந்த குடும்ப உறுப்பினர்கள், நெருக்கமாக
பழகியவர்கள், அயலவர்கள் உள்ளிட்டவர்கள் அடங்கலாக சுமார் 800 பேரை தனிமைப்படுத்துவதற்கும் சுகாதார நடவடிக்கைகளுக்குமாக சுகாதார அதிகாரிகள் ஒழுங்குகளை
மேற்கொண்டனர். வெலிசறை முகாமில் 2000 வீரர்கள் இருக்கின்றனர். விடுமுறையில் சென்றிருந்தவர்கள் 500 பேர். முகாமைச் சேர்ந்த வீரர்கள் தமது முன்னைய முகவரியில் அல்லாது
வேறு இடங்களில் வசித்து வந்துள்ளனர். அதாவது திருமணத்திற்குப் பின்னர் இந்த இடமாற்றம் இடம்பெற்றுள்ளது. இவர்கள் அனைவரது
தகவல்களும் திரட்டப்பட்டன. என்றும் அவர் விபரித்தார். தற்பொழுது 88 233 பேர் தொடர்பில் நடவடிக்கை மேற்கொண்டோம் என்றும் அவர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் விரைந்த இராணுவ தளபதி – நடந்தது என்ன ..?
யாழ்ப்பாணம் விரைந்த இராணுவ தளபதி – நடந்தது என்ன ..?
இலங்கை இராணுவ தளபதி சவேந்திர சிலாவ் திடீரென யாழ்ப்பாண
கடல் படை கட்டளை தலைமையகத்திற்கு பயணம் செய்தார்
இவரது இந்த திடீர் பயணம் ஏன் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது
வடக்கு
கடற்படை கட்டளை தலைமையகம் சென்ற இவர் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டார்
கொரனோ நோயின் தாக்குதல் எதிர் காலத்தில் அதிகரிக்கலாம் என்ற
நிலையில் இவரது இந்த திடீர் பயணம் அமைந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது

கொரனோ நோயால் 568 அமெரிக்கா இராணுவம் பாதிப்பு – ஒருவர் பலி
கொரனோ நோயால் 568 அமெரிக்கா இராணுவம் பாதிப்பு – ஒருவர் பலி
உலகில் பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி 568 அமெரிக்கா இராணுவத்தினர் பாதிக்க பட்டுள்ளனர் ,
அதில் முதன் முதலாக ஒரு சிப்பாய் பலியாகியுள்ளார்
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 280 இராணுவத்தினர் இந்த
நோயின் தாக்குதலில் சிக்கியுள்ளனர்
என அமெரிக்கா பாதுகாப்பபு அமைச்சு அறிவித்துள்ளது
உலகில் அதிகளவான இராணுவத்தை கொண்ட அமெரிக்கா வெளியிட்டுள்ள இந்த புள்ளி விபரங்களுக்கு மேலான பாதிப்பில்
இராணுவம் சிக்கி இருக்கும் என நம்ப படுகிறது
இழப்புக்கள் இதை விட இருமடங்கு அதிகமாக இருக்கலாம் என கருத படுகிறது

ஈராக்கில் இருந்து அமெரிக்கா இராணுவம் அவசரமாக வெளியேறுகிறது
ஈராக்கில் இருந்து அமெரிக்கா இராணுவம் அவசரமாக வெளியேறுகிறது
ஈராக்கின் வடக்கு மாகாணமாக விளங்கும் Kirkuk பகுதியில் நிலை
கொண்டு இருந்த அமெரிக்கா படைகள் தற்பொழுதுஇம்மாதம்
முடிவில் அங்கிருந்து விலக்க படவுள்ளதாக அந்த அரசு
தெரிவித்துள்ளது
ஈராக்கின் தலைநகர் பக்தாத்தில் உள்ள அமெரிக்காவின் விமான
தளங்கள் இரண்டின் மீது தொடர் ஏவுகணை தாக்குதலை ஈரான்
,மற்றும் அதன் ஆதரவு படைகள் நடத்தி வரும் நிலையில் இந்த
படைகள் விலகல் ஆரம்பிக்க பட்டுள்ளது
கிக்கிரீத் பகுதி என்பது குருதீஸ்தான் போராளிகள் நிலை கொண்டு போராடி வரும் பகுதி என்பதும் அந்த போராளி குழுவுக்கு
அமெரிக்கா அரணாக நின்று செயல் பட்டது
தற்போது அங்கிருந்து தமது படைகளை திடீரென விலக்கி கொள்கிறோம் என அறிவித்துள்ளது ஏன் என்ற கேள்வி எழுகிறது
ஈராக்கி உள்ள மூன்று இராணுவம் முகாம்களில் இது முக்கியமானது என்பது குறிப்பிட தக்கது
ஈரானின் அச்சுறுத்தலா ..? அல்லது வேறு நாடுகள் மீது ஆக்கிரமிப்பை மேற்கொள் வதற்கா என்ற கேள்வி எழுகிறது

கனடா அமெரிக்கா எல்லையில் இராணுவம் குவிப்பு – சோதனைகள் தீவிரம்,
கனடா அமெரிக்கா எல்லையில் இராணுவம் குவிப்பு – சோதனைகள் தீவிரம்
கனடா அமெரிக்கா எல்லை பகுதியில் அமெரிக்கா
இராணுவத்தினர் குவிக்க பட்டு சோதனைகள் தீவிர படுத்த
பட்டுள்ளது
.
கனடாவுக்குள் இருந்து அமெரிக்காவுக்குள் வைரஸ் நோயுடன்
நுழைகின்றனர் எனவும் அதே போல அமெரிக்காவுக்குள் இருந்து
கனடாவுக்குள் நுழைவதால் அதனை தடுக்கும் முகமாக இந்த
இராணுவத்தினர் குவிக்க பட்டுள்ளனர்
அமெரிக்காவில் ஆயிரத்துக்கு மேற்பட்ட உயிர் பலிகள்
இடம் பெற்றுள்ளது ,மேலும் ஒரு லட்சம் பேர் வரை இந்த நோயால்
பாதிக்க படும் அபாயம் உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
எனினும் பங்குனி மாத இறுதிக்குள் இந்த நோயினை கட்டு படுத்தி
விடுவோம் என அமெரிக்கா அறிவித்திருந்தமை குறிப்பிட தக்கது

இலங்கையில் சீனாவின் இரகசிய இராணுவ முகாம்
இலங்கையில் சீனாவின் இரகசிய இராணுவ முகாம்
இலங்கையில் ஆளும் மகிந்தா ஆட்சியில் இலங்கையில் என்றுமில்லாத வேற்று நாட்டு அரசியல் நுழைவுகள் தீவிரம் பெற்றுள்ளன .
அதன் தொடர்ச்சியாக இந்தியாவுக்கு எதிராக திரும்பிய ,இலங்கை, சீனாவுடன் நல்லுறவு மேற்கொண்டு ஒட்டி கொண்டது .
அதன் வாயிலாக சீனாவின் செல்ல பிள்ளையாக இலங்கை மாற்றம் பெற்றுள்ளது .
இராணுவம் ,பொருளாதரம் ,அரசியல் ,என்ற முக்கூட்டு நகர்வில் இலங்கையை மையம் கொண்டுள்ளது சீனாவின் ஆதிக்க கரங்கள் .
சிங்கள பவுத்த தேசம் இந்தியா ஈழ தமிழர்களை விட்டு விலகி சென்ற நிலையில் ,ராஜீவ் காந்தி படுகொலையுடன் ஆரம்பிக்க பட்ட அந்த சமாச்சாரத்தின் பின் ஈழ தமிழர்கள்
இலங்கையில் சீனாவின் இரகசிய இராணுவ முகாம்
மீது ஒர வஞ்சகம் சுமத்தி வந்த இந்தியா, வழி தவறி பயணிக்க ,அந்த நேரத்தை சரியாக கணக்கு பார்த்து ,,இலங்கை சீனாவுடன் ஒட்டி கொண்டது
இங்கே மிக இரகசியமாக பத்து ஏக்கர் நிலப்பரப்பில் தொழில் சாலை போன்ற மாதிரி அமைப்பில் சீனாவின்
இரகசிய அதி நவீன உருமறைப்பு செய்ய பட்ட இராணுவ முகாம் ஒன்று இயங்கி வருகிறது
இலங்கைக்குள் உல்லாச பயணிகள் போல் வருகை தரும் சீனா இராணுவத்தின் முக்கிய முகம் தெரியாத உளவு
அதிகாரிகள் மற்றும் இராணுவத்தினர் இங்கே பணியில் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர் .
சட் லைட் மூலம் முழு இலங்கையை இவர்கள் கண்காணித்து இலங்கை அரசுக்கு தகவல் வழங்குவது
மட்டுமல்ல இந்தியாவை கண் காணிப்பது போன்ற தீவிர நகர்வில் ஈடுபட்டு வருகின்றது
சிங்களவர்கள் அதிகம் வசிக்கும் இனவெறி பகுதியில்,காட்டு பகுதி சார்ந்த இடத்தில் இந்த இராணுவ முகாம் நிறுவ பெற்றுள்ளது
,,,இந்த இராணுவ முகாமின் முன் காவலாக பாரிய சிங்கள இராணுவ நிறுவ பெற்றுள்ளது
இந்த இராணுவ முகம் கழிந்த பின்னர் சில மைல்கள் தொலைவில் இந்த இரகசிய முகம் இயங்கி வருகிறது
முக்கிய வட்டாரங்கள் ஊடக இந்த தகவல் மெல்ல கசிந்துள்ளது
இலங்கையில் சீனாவின் இரகசிய இராணுவ முகாம்
கொஞ்சம் பின்னோக்கி செல்லுங்கள் ,திருமலையில் நிலத்தடி சுரங்க அறையில் ஐந்தாயிரம் போராளிகளை
தடுத்து வைத்து கோட்டா அரசு கொன்று கடலில் மனித சடலங்களை வீசி வருவதாக கூறி இருந்தோம் அல்லவா .
அது பின்னர் அம்பலமானது ,அதுபோன்றே இந்த விடயமும் அரங்கேற்ற பட்டு வருகிறது .
இது இந்தியாவுக்கு மிக ஆபத்தானது ,
இனியாவது இந்தியா மத்தி , தனது வெளியுறவு கொள்கையை மாற்றி தனது பிராந்தியத்தை சூழ நெருங்கி
வரும் சீனாவின் இரும்பு கரத்தை பலம் பெறும் முன் நொறுக்க வேண்டும்
அதற்கு தமிழர்களே இந்தியாவின் பாதுகாப்பு கவசம் என்பதை இந்தியா கொள்கை வகுப்பாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்
ஈரான் ,ஈராக் பகைமை நாடுகள் அதனை மறந்து இன்று ஒன்று சேர்நது போல ,இந்தியா பழைய வரலாறுகளை மறந்து ஒன்று பட வேண்டிய காலம் நெருங்கி விட்டது
தவறான அரசியல் கொள்கை வகுப்பாளர்கள் கீழ் இந்தியா சுற்றும் எனின் இந்தியா பல நாடுகளாக உடைவதை யராலும் தடுக்க முடியாது .
இந்தியாவின் காவலர்களாக இருந்த புலிகள் அழிவு இந்தியாவுக்கு சொல்லி செல்லும் இந்த பத்து ஆண்டுகளின்
அதிரடி சிங்கள மாற்றங்கள், பலத்தை பலமாக உணர்த்தி இருக்கும் எனலாம்.
கடக்க போகும் நான்கு ஆண்டுகள் இந்தியாவுக்கு சோதனையான ஆடுகளமாக மாற்றம் பெற போகிறது .
,எதிர் வரும் பத்து ஆண்டுகளில் பாரிய தலை கீழ் மாற்றங்கள் இலங்கையை சுற்றி படர போகிறது
அதற்குரிய அறிகுறி நகல்கள் இப்பொழுது தோற்றம் பெற ஆரம்பித்து விட்டன ,திசை மாறும் கால கருவியில் ,திசையறிந்து செல்ல வேண்டிய நேரம் இது .
அரசியல் எப்பொழுதும் ஒரு நேர் கோட்டில் பயணிப்பது இல்லை என்பதை பவுத்த இனவாதிகள் புரிந்து கொண்டால் சரி . இந்த சொல்லாடல் இலங்கையை சுற்ற போகிறது.
- வன்னி மைந்தன் –

தப்பிய ஓடிய 50.000 இராணுவத்தை மீள இணைய வேண்டுதல்
தப்பிய ஓடிய 50.000 இராணுவத்தை மீள இணைய வேண்டுதல்
இலங்கை இராணுவத்தில் இருந்து புலிகளின் கோர தாக்குதலினால் தப்பி ஓடிய சுமார் ஐம்பது லடசத்திற்கு
மேற்பட்ட இராணுவத்தை மீளவும் ,இராணுவத்தில் இணையும் படி சிங்கள அரசு வேண்டுதல் விடுத்துள்ளது .
மகிந்த ஆட்சியில் இதே கோரிக்கைகள் தொடர்ந்து விடுக்க பட்டு வருகிறது .
பல பொது மன்னிப்பு வழங்க பட்ட பொழுதும் இவ்வாறு தப்பி ஓடிய சிப்பாய்கள் மீளவும் இராணுவத்தில் இணைந்து கொள்ள பின்னடித்து வருகின்றமை குறிப்பிட தக்கது

அமெரிக்காவில் தாக்குதல் நடத்துவோம் -ஈரான் முழக்கம்
அமெரிக்காவில் தாக்குதல் நடத்துவோம் -ஈரான் முழக்கம்
ஈரான் இரண்டாம் நிலை தலைவர்களில் ஒருவராகவும் ,முக்கிய புரட்சி காவல் படையின் தளபதியாகவும் , ஆளும் அதிபரின் வலது கரமாகவும் ,
நேச சக்தியாகவும் விளங்கிய
வீர தளபதி சுலைமானி அமெரிக்கா படைகள் வான் தாக்குதலில் படுகொலை
செய்ய பட்டார் .
இவரது இந்த படுகொலைக்கு அமெரிக்காவுக்கு பழி தீர்க்க படும் ,அமெரிக்கா புரிந்த அரச பயங்கரவாதத்துக்கு ,போர் குற்றத்திற்கும் தகுந்த பதிலடி வழங்க படும்.
அமெரிக்கா இப்பொழுது பாது காப்பற்ற நாடாக மாறியுள்ளது ,உள்ளே மிக ஆபத்துக்களை தேடியுள்ளது
என பிரான்ஸ் அதிபரிடம் ஈரானிய தலைவர் கடும் சீற்றத்துடன் தெரிவித்துள்ளார் .
தம் நாடு மீதோ ,படையினர் மீதோ ,மக்கள் மீதோ ஈரான் தாக்குதல் நடத்தும் எனின் அது பலத்த அழிவை சந்திக்கும் எனவும் , ஈரானில் அதன் கலாச்சார மையங்கள் உள்ளிட்ட முக்கிய 52 நிலைகள் மீது அமெரிக்கா பாரிய தாக்குதலை நடத்தும் என அமெரிக்காவும் மிரட்டல் விடுத்துள்ளது .
300 விமானங்கள் பத்து போர் கப்பல்கள் ஈரானின் எல்லை அருகில் நகர்த்த பட்டுள்ளது .
மிகவும் ஆபத்தான நிலையில் இப்பொழுது நிமிடங்கள் கடந்த வண்னம் உள்ளன ,
ஈரான் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ள நிலையில் ,ஈரான் முந்திட முன்னர் மீளவும் ஈரானின் முக்கிய தலைகளை உள்ளும் ,வெளியிலும் படுகொலை செய்திட இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தீவிரமாக செயல் பட்டு வருகிறது .
மேலும் ஈரானின் ஆதரவு குழுக்கள் ஒன்று கூடும் இடங்கள் மற்றும் அவர்களின் அணைத்து நகர்வுகளையும் தீவிரமாக கண்காணித்த வண்னம் உள்ளது .
ஈரானின் முக்கிய தலைவர்கள் தீவிர கண்காணித்தலுக்குள் அமெரிக்கா இஸ்ரல் உட்படுத்தியுள்ளது ..
அமெரிக்கா காண்பிக்கும் சமிக்கை இதே போல மீளவும் ஒரு முக்கியஸ்தர் அல்லது அதற்கு மேலானவர்களை படுகொலை புரிவதே அமெரிக்காவின் நோக்காக உள்ளது
அமெரிக்காவில் தாக்குதல் நடத்துவோம் -ஈரான் முழக்கம்
ஈரான் பல திசை திருப்பல் தாக்குதலை நடத்தி விட்டே அமெரிக்காவுக்குள் தாக்குதல் நடத்த கூடும் எனவும் ,சமவேளை இஸ்ரேல் ,அமெரிக்கா மீதும் தாக்குதல்கள் நடத்தவும் திட்டமிட்ட பட்டுள்ளதாகவும் கணிக்க பெறுகிறது .
அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலை விட இந்த தாக்குதல் மிக மோசமானதாக இருக்கும் எனஎதிர்பார்க்க படுகிறது .
அப்படி என்றால் அமெரிக்காவின் பயங்கரவாத பட்டியலில் மேலும் பல விடுதலை அமைப்புக்கள் உள்வாங்க பட போகின்றன .
ஜேர்மன் ஈராக்கை விட்டு வெளியேறி வரும் நிலையில் அமெரிக்கா ஈராக்கில் தனித்து விட பட்டால் அது பலத்த எதிர்விளைவுகளை சந்திக்கும் எனவும் எதிர் பார்க்க படுகிறது .
ஈராக்கிவிட்டு நமது படைகள் விலகாது என அமெரிக்காவின் பாதுகாப்பபு அமைச்சர் அதிரடியாக தெரிவித்துளளார் .
முடிந்தால் எங்களை அனுப்பி பார் என அமெரிக்கா சபதம் இட்டு யுத்தத்தை தொடர்வதில் ,ஈரானை அழித்து அதன் தலைவரை சதாம் உசைன் போல படுகொலை செய்வதுமே அமெரிக்காவின் நிலையான கொள்கையாக உள்ளது .
அமெரிக்கா ஜனாதிபதி டிரம்பின் தலைக்கு பல மில்லியன் ஈரான் அறிவித்த நிலையில் தற்போது போர் மேகம் உக்கிரம் பெற்றுள்ளது .
ஈரான் இராணுவ தளபதியின் இறுதி கிரியைகள் முடிவடைந்த நிலையில் தற்போது களமுனை பதட்டத்தில் உள்ளது .
மேலும் ஈராக்கில் இருந்து இராணுவத்தை விளக்குவது மோசமான விளைவை ஏற்படுத்தும் என தற்பொழுது டிரம்ப் கூறியுள்ளார் ,
ஈரானில் உள்ள கலாச்சார மையங்கள் தாக்க படாது எனவும் ,உலக் சட்டத்தை மதித்துச் செயல் படுவேன் என அந்தர் பெல்டி அடித்துள்ளார்
ஆனால் ஈரான் மீது தாக்குதல் நடத்த படும் என்பதில் அவர் உறுதியாக உள்ளார் ,அமெரிக்கா கோடு போட்டு விட்ட்து இனி தாக்குதல் தான் .
குண்டுகளினால் ஈரான் குளிக்க போகிறது .பல ஆயிரம் மக்கள் படுகொலை செய்யப்பட போகின்றனர் ,ஜிகாத் தாக்குதல்கள் தீவிரம் பெற போகின்றன .
தாக்குதல் எங்கே ..? எப்பொழுது ..? இதுவே மக்கள் எதிர் பார்க்கும் பர பரப்பாக உள்ளது .

அமெரிக்கா இராணுவம் செல்போன்கள் பாவிக்க தடை
மத்திய கிழக்கில் -அமெரிக்கா இராணுவம் செல்போன்கள் பாவிக்க தடை
ஈராக்கில் ஈரானிய இராணுவத்தளபதி படுகொலை புரிய பட்ட நிலையில் அவசரமாக மத்திய கிழக்கிற்கு அமெரிக்கா மூவாயிரம் இராணுவத்தினரை அனுப்பியது .
அவ்வாறு மத்திய கிழக்கிற்கு அனுப்ப பட்ட இராணுவத்தினரின் 82 வது பராட்ரூப் படைகளால்
செல்போன் ,மற்றும் லாப்டாப் என்பன பாவிக்க தடை விதிக்க பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டு அனுப்பி வைக்க பட்டுள்ளன .
இந்த சம்பவம் இராணுவத்தினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
இவர்கள் ஊடாக ஈரானுக்கு உளவு தகவல்கள் செல்ல கூடும்
மேலும் ஈரானிய படைகள் செய்மதி ஊடாக இவர்களது கைபேசிகள் சிக்னலை வைத்து அந்த இடம் மீது தாக்குதல்
நடத்த கூடும் , லாப்டாப் ஊடாக இராணுவ ரகசியங்கள் கைமாற படாலாமென்பதாலும் ,
ஈரானால் கைக் பண்ண படலாம் என்பதாலும் இந்த முன் எச்சரிக்கை நடவடிக்கையாக இவை பார்க்க படுகிறதாம் .
ஆனால் அவர்கள் சொல்லும் காரணம் அதுவல்ல .இதுவாகவே இருக்கும் வாய்ப்பு அதிகம் .ஈரானிய இராணுவ
தளபதி அவர்களது கைபேசி பாவனை மூலமே கண்காணிக்க பட்டு படுகொலை செய்யப்பட்டதாக ஒரு செய்தியும் உள்ளது ,
அவ்வாறான ஆபத்தான பகுதி ஊடாக ஒரு பிற நாடுகளுக்கு செல்பவர்கள் கைபேசி யையும் ஆப் பண்ணாமலா செல்வார்கள் ..?எடுத்தா செல்வார்கள் ..?
அமெரிக்கா இராணுவ தலைமையகம் இந்த படைகளுக்கு மேற்கொண்ட இந்த திடீர் அதிரடி கட்டுப்பாடு எங்கையோ உதைக்கிறது .
அப்படியானால் அமெரிக்கா ஈரானிடம் இருந்து ஏதோ வித்தியாசமான தாக்குதல்களை எதிர்பார்க்கிறது ,
அமெரிக்கா இராணுவம் செல்போன்கள் பாவிக்க தடை
அது நடத்த படும் சாத்தியம் உள்ளதையே இவை காண்பிக்கிறது ,அமெரிக்கா இராணுவம் இத்தனை
இறுக்கத்தை மேற்கொள்ள காரணம் ஈரான் தாக்குதல் உக்கிரமான ஒன்றாக அமையலாம் என்பதாக கணிக்க பெறுகிறது .
அமெரிக்காவின் இந்த செயல் மத்திய கிழக்கிற்கு செல்லும் இராணுவத்தினரின் உளவியல் உறவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது .
ஒருவேளை இவர்களது குடும்பங்களுக்கு இவர்கள் அங்குள்ள களநிலவரங்களை அறிவிக்க அவை எதிரிகள்
துல்லியமாக தகவல்களை பெற்று விடுவார்கள் என்பதல் தனது இராணுவத்தையே அமெரிக்கா நம்ப மறுக்கிறதே ….
உலக சண்டியருக்கே இந்த நிலையா ..?
இது தோல்வியின் அறிகுறியா..? பாதுகாப்பின் வெளிப் பாடா …? மக்களே நீங்களே முடிவெடுங்கள்
..விடயத்தின் அடர்த்தியை புரிந்து கொள்ளுங்கள் நிலைமை புரியும் .
- வன்னி மைந்தன் –














