Tag: america
329மில்லியனுக்கு ஆயுதம் வழங்கும் அமெரிக்கா
329மில்லியனுக்கு ஆயுதம் வழங்கும் அமெரிக்கா
329மில்லியனுக்கு ஆயுதம் வழங்கும் அமெரிக்கா வின் நடவடிக்கை ரஷ்யாவை கொதிப்பில் உறைய வைத்துள்ளது. America to provide weapons to 329 million
பட்ரியாட் ஏவுகணைகள் மற்றும் அதனுடைய தொழில்நுட்பம் மேம்படுத்தல் போன்றவை உள்ளடங்களாக ,
இந்த ஆயுத உபகரணங்கள் வழக்க ,அமெரிக்கா தயாராகி உள்ளதாக உக்ரைன் அரசு அறிவித்துள்ளது.
ரஷ்யா உக்கிரனுக்கு இடையில் நீண்ட கால யுத்தம்
ரஷ்யா உக்கிரனுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற .நீண்ட கால யுத்தத்தை அடுத்து. மேலும் இந்த யுத்தத்தை நீடிக்கவும்
தமது நாட்டை பாதுகாத்துக் கொள்ளவும் .அமெரிக்காவிடம் இருந்து இந்த ஆயுத உபகரணங்களை பெற்றுக் கொள்வதாக உக்ரைன் நாடு அறிவித்துள்ளது.
மிகப்பெரும் தொகையிலான ஆயுத விற்பனை
டிரம்ப் நிர்வாகம் ஆட்சி அரியணையில் ஏறிய பின்னர், வழங்கப்படும் மிகப்பெரும் தொகையிலான ஆயுத விற்பனை விடயமாக இது பார்க்கப்படுகிறது.
நான் ஆட்சி பீடம் ஏறியதும் ரஷ்யா யுக்ரேன் யுத்தத்தை நிறுத்தி விடுவேன் என டிரம்ப் தெரிவித்து இருந்தார் .
இப்பொழுது மீளவும் இந்த ஆயுதங்களை வழங்க முன் வந்திருப்பது பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கை என்பது விளாதிமீர் புட்டினை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- இஸ்ரேலுக்கு எதிராக கருது உரைத்தால் அமெரிக்கா கிரீன் கார்ட் இரத்து

- ஈரான் கடல் மூடல் உணவு தட்டு பாடு ஐநா

- ஈரான் எண்ணெய் வயல்கள் முடக்கம் அமெரிக்கா அறிவிப்பு

- லெபனானிலிருந்து ட்ரோன் ஊடுருவலுக்குப் பிறகு கலிலேயாவில் எச்சரிக்கை ஒலிகள்

- ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் இஸ்ரேலிய ராணுவ வீரர் நிகழ்வை மாணவர் முடக்கினார்

- ஊடகங்கள் மூலம் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தாது

- புட்டீன் ஈரன் சந்திப்பு

- நெதன்யாகு தனது தோல்வியை இராணுவத்தின் மீது சுமத்தல்

- கொலம்பியா சாலை குண்டுவெடிப்பில் பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு

- வெள்ளை மாளிகை இரவு விருந்து தாக்குதல் தாரி கைது

- துப்பாக்கி சூட்டில் தப்பிய டிரம்ப்

- போனில் பேசி கர்ப்பமான பெண் அதிசயம் ஆனால் உண்மை

இஸ்ரேலை கவிழ்த்த அமெரிக்கா|America U turn|isreal Stop the ground attack|israel news
இஸ்ரேலை கவிழ்த்த அமெரிக்கா|America U turn|isreal Stop the ground attack|israel news
இஸ்ரேல் தரைவழியாக தாக்குதலை நடத்துவதா இல்லையா என்பதை இஸ்ரேல் முடிவு செய்ய வேண்டும் என அமெரிக்கா தெரிவித்து கவிழ்த்துவிட்டுள்ளது .அமெரிக்கா செயலினால் பிரதமர் நெதன்யாகு பெரும் பொறியில் சிக்கியுள்ளார் .
gaza
- செல்லப்பா எங்க செல்லப்பா |705| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa
- தேசம் மறக்குமா எங்க தேசம் மறக்குமா செல்லப்பா |704| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa
- தேனிசை செல்லப்பா நிகழ்வு காட்சிகள்
- வீரத்தின் குரலோனே வீரவணக்கம் | தேனிசை செப்பாவின் நினைவு பாடல் |பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG
- ஒரு முறை எழுவாயா | இந்த குரல் இனி ஒலிக்காதோ | பாசறை பாணர் செல்லப்பா பாடல் Thenisai Chellappa SONG
- தேனிசை உறங்கியதோ |கண்ணீர் பாடல் | பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG
- பாயும் புலியே செல்லப்பா |கண்ணீர் பாடல் | பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEWSONG
- வீரவணக்கம் செல்லப்பா| கண்ணீர் பாடல் | செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEWSONG
- தேனிசை செல்லப்பா மரணம் | கண்ணீர் பாடல் | செல்லப்பா பாடல் |Thenisai Chellappa’s Death
- தேனிசை செல்லப்பா வீரமரணம்
அமெரிக்காவில் ஒரே நாளில் 3700 பேர் பலி – தொடரும் பேரபாயம்
அமெரிக்காவில் ஒரே நாளில் 3700 பேர் பலி – தொடரும் பேரபாயம்
அமெரிக்காவில் பரவி வரும் கொரனோ வைரஸ் நோயின் தாக்குதலில் சிக்கி ஒரே நாளில் 3700 பேர் பலியாகியுள்ளனர் என
முக்கிய ஊடகம் ஒன்று பர பரப்பு தகவலை காட்சிகளுடன் வெளியிட்டுள்ளது
இந்த மக்கள் இறப்பை கட்டு படுத்த முடியாத நிலையில் அமெரிக்கா தினறி வருகிறது .
எதிர் வரும் நாட்களில் மக்கள் அதிக அழிவை சுமக்க வேண்டி வரும் என அமெரிக்கா அதிபர் டிரம்ப் அறிவித்திருந்தார்
அது இவை என தற்பொழுது அம்பலமாகியுள்ளது ,முன்னரே மக்கள் பலி அதிகாமாக இருந்துள்ளது எனவும் அதனை மூடி மறைத்த அரசு
வேறு வழி இல்லாத நிலையில் தற்பொழுது அதில் ஒரு பகுதியை அறிவித்து வருவதாக தெரிவிக்க பட்டுள்ளது
தொடர்ந்து சடலங்கள் வைப்பதற்கு இடம் இல்லாத நிலையிலும் சுடலையில் நிறைந்துள்ளதாலும் எரிக்கும் நிலைக்கு தள்ள பட்டுள்ளனர்
இதுவரை 630,000 பேர் இந்த நோயினால் பாதிக்க பட்டுள்ளனர் ,24,000 பேர் பலியாகியுள்ளனர்
உலகளாவிய 137,000 பேர் பலியாகும் 20 லட்சம் மக்கள் பாதிக்க பட்டுள்ளனர்
அமெரிக்காவில் கொரனோவின் கோரத் தாண்டவம் மக்களை அதிர வைத்த வண்ணம் நகர்ந்து செல்கிறது

கடத்திய பெண் தப்பிக்க முயற்சி – தலையில் சுட்டு கொன்ற கொலையாளி
கடத்திய பெண் தப்பிக்க முயற்சி – தலையில் சுட்டு கொன்ற கொலையாளி
அமெரிக்கா லூசியான பகுதியில் 37 வயதுடைய நபர் ஒருவர் இளம் பெண் ஒருவரை ஆயுத முனையில் கடத்தினார் ,அந்த பெண் இவரது
கடத்தலில் இருந்து தப்பிக்க முயன்ற பொழுது அவரை தலையில் சுட்டு சென்றுள்ளார்
குறித்த அப்பார்ட் மென்ட் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக ஏதோ நடை பெறுவதாக எண்ணிய அயலவர்கள் காவல்துறைக்கு தகவல்
தரவும் விரைந்து வந்த போலீசார் நடத்திய சோதனையில் பெண் இரத்த வெள்ளத்தில் கிடந்தார் .கடத்தல்காரன் கைது செய்ய பட்டுள்ளார்
தலை சிதறிய நிலையில் பெண் சடலம் மீட்க பட்டது
மேற்படி கொலை சம்பவம் அந்த பகுதி மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியது
கடத்தல் காரன் கூறியது படி நடந்திருப்பின் இவர் உயிர் தப்பி இருக்க கூடும் என நம்ப படுகிறது

ஈராக்கில் இருந்து அமெரிக்கா இராணுவம் அவசரமாக வெளியேறுகிறது
ஈராக்கில் இருந்து அமெரிக்கா இராணுவம் அவசரமாக வெளியேறுகிறது
ஈராக்கின் வடக்கு மாகாணமாக விளங்கும் Kirkuk பகுதியில் நிலை
கொண்டு இருந்த அமெரிக்கா படைகள் தற்பொழுதுஇம்மாதம்
முடிவில் அங்கிருந்து விலக்க படவுள்ளதாக அந்த அரசு
தெரிவித்துள்ளது
ஈராக்கின் தலைநகர் பக்தாத்தில் உள்ள அமெரிக்காவின் விமான
தளங்கள் இரண்டின் மீது தொடர் ஏவுகணை தாக்குதலை ஈரான்
,மற்றும் அதன் ஆதரவு படைகள் நடத்தி வரும் நிலையில் இந்த
படைகள் விலகல் ஆரம்பிக்க பட்டுள்ளது
கிக்கிரீத் பகுதி என்பது குருதீஸ்தான் போராளிகள் நிலை கொண்டு போராடி வரும் பகுதி என்பதும் அந்த போராளி குழுவுக்கு
அமெரிக்கா அரணாக நின்று செயல் பட்டது
தற்போது அங்கிருந்து தமது படைகளை திடீரென விலக்கி கொள்கிறோம் என அறிவித்துள்ளது ஏன் என்ற கேள்வி எழுகிறது
ஈராக்கி உள்ள மூன்று இராணுவம் முகாம்களில் இது முக்கியமானது என்பது குறிப்பிட தக்கது
ஈரானின் அச்சுறுத்தலா ..? அல்லது வேறு நாடுகள் மீது ஆக்கிரமிப்பை மேற்கொள் வதற்கா என்ற கேள்வி எழுகிறது

ஹிஸ்புல்லா தலைவரை கொல்ல இஸ்ரேல் சதி -ஈரான் எச்சரிக்கை
ஹிஸ்புல்லா தலைவர் கொல்ல இஸ்ரேல் சதி -ஈரான் எச்சரிக்கை
ஈராக் நாட்டின் தலைநகர் அருகில் வைத்து ஈரானிய இராணுவ தளபதி முக்கிய ஐந்து சகாக்கள் , ஹிஸ்புல்லா உபதலைவர்,ஈராக்கிய இராணுவ தளபதி ,மேலும்
துணைப்படை குழு தலைவர் .
என பெரும் தலைவர்களை ஒரே ஏவுகணை தாக்குதலில் அமெரிக்கா,இஸ்ரேல் , இணைந்து கூட்டாக படுகொலை புரிந்தது .
ஈரானின் மூளையை கொன்று விட்டோம் இனி ஈரானால் எழுந்து நடக்கவே முடியாது என இஸ்ரேல்,அமெரிக்கா துள்ளி குதிக்கின்றன .
சமீப நாட்களாக கிஸ் புல்லா எம்மை முற்றாக அழிக்க போகிறது ,அவர்களிடம் 130 ஆயிரம் ரொக்கட்டுக்கள்
உள்ளன ,அதைவிட நீண்ட தூர ஆட்லொறிகள் ,பல்குழல் எறிகணைகள் என்பன உள்ளன .
இஸ்ரேலை இல்லாது அழிக்கும் நகர்வில் இவர்கள் ஈடுபட உள்ளனர் என இஸ்ரேல் அறிவித்தது,அத்துடன் நிற்காது
,லேசர் ஆயுத உற்பத்தியை எதிர்வரும் ஆண்டுக்குள் நாம் நிறுவி விடுவோம் எனவும் அது சபதம் இட்டது .
இவை ஏவுகணைகளை இடை மறித்து சுட்டு வீழ்த்த இந்த லேசர் ஆயுத பயன் பாடு உதவும் என இஸ்ரேல் கருதுகிறது .
இப்பொழுது ஈரானை ஒரு முற்றுகைக்குள் வைத்து அந்த நாட்டையும் ,அதன் தலைவரையும் இல்லாது அழிக்கின்ற நகர்வில் இஸ்ரேல் அமெரிக்கா தீவிரமாக ஈடுபட்டுள்ளன .
ஹிஸ்புல்லா தலைவரை கொல்ல இஸ்ரேல் சதி -ஈரான் எச்சரிக்கை
அடுத்து வரும் நாட்களில் இந்த முக்கியஸ்தர்களை படுகொலை புரியும் தாக்குதலை இஸ்ரேல் ,அமெரிக்கா கூட்டாக நடத்த போகின்றன .
அதற்கு அமைவாக ஈரானின் முக்கிய நேச குழுக்களை அழித்து ஒழிக்கும் நகர்வில் இஸ்ரேல் ஈடுபட்டுள்ளது ,அதன்
அடுத்த குறியாக கிஸ்புல்லா தலைவர் Sheik Hassan Nasrallah குறி வைக்க பட்டுள்ளார்
இவர் இஸ்ரேலினால் இலக்கு வைக்க பட்டுள்ளார் எனவும் இவரை எச்சரிக்கையாக இருக்கும் படி ஈரான் அவசரமாக அறிவித்துள்ளது
இஸ்ரேல் எப்பொழுதும் முக்கிய அமைப்புகளின் முதன்மை மூளைகளை கொல்வதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது ,
அதுபோலவே இதன் தொடர் தாக்குதல்கள் ஈரான்,மற்றும் அதன் நேச படைகள் மீதுஅதன் பார்வை திரும்பியுள்ளது .
ஈரான் மீது மருத்துவ தடையை விதித்து அதன் ஊடக அந்த மக்களை பட்டினி மற்றும் ,நோயால் கொலை செய்யும்
விடயத்தில் அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகள் களத்தில் குதித்துள்ளன .
தாம் செய்யும் சர்வாதிகார போக்கை ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்டவையால் கண்டிக்க முடியவில்லை ,அமெரிக்காவின் ஒரு முகவராக ஐக்கிய நாடுகள் சபை
இயங்கிய வண்ணம் உள்ளது ,அது போன்றே சர்வதேச நீதிமன்றும் என கருத படுகிறது .
போர் குற்றங்கள் புரிந்தவர்கள் ,இன பாடுகொலை புரிந்தவர்கள் உல்லாசமாக திரிகின்றனர் .
அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இவர்கள் மேற்கொள்ளவில்லை .
பலவீனமான விடுதலைக்கு போராடும் , அமைப்புகளை ,சிறிய நாடுகளை இல்லாது அழிக்கும் நகர்விலேயே இந்த
மேற்குலகமும் ,அதன் செயல் இயக்கமும் தீவிரம் பெற்று வருகிறது .
சமீப நாட்களாக இஸ்ரேலின் விட்டு வந்த விடு கதைக்கு இப்பொழுது ஈரான் விடையை அவிழ்த்து விட்டுள்ளது .
ஹிஸ்புல்லா தலைவரை கொல்ல இஸ்ரேல் சதி -ஈரான் எச்சரிக்கை
முன்னரே தெரிவித்தோம் அல்லவா கதை மாற போகிறது என.
ஆம் , ஈரானை முற்றுகைக்குள் வைத்து அதன் தாக்குதல் வீச்சை குறைக்க வேண்டும் எனின்
அதன் ஆதரவு படைகள் ,மற்றும் அதன் முக்கிய
மூளைகளை இல்லாது அழிக்க வேண்டும் ,அதே சமவேளை அந்த மக்களை அதே அரசுக்கு எதிராக திருப்பி விட வேண்டும் .
எதிரிகளின் தாக்குதல் ,மக்கள் புரட்சி இந்த இரண்டுக்குள்ளும் அந்த நாட்டை சிக்க வைக்கும் மரண
விளையாட்டில் அமெரிக்கா,செயல் ,மற்றும் அதன் நேச நாடுகள் ஈடு பட்டு வருகின்றன .
மத்திய கிழக்கில் ஒரு வல்லரசாக நிமிர்ந்து நிற்கும் ஈரானை முற்றாக அழிக்கும் நகர்வில் இந்த மேற்குல வெள்ளையர் சண்டியர்கள் வரிந்து கட்டி போவது ,பயங்கரவாதம் என்ற
போர்வையில் அந்த நாடுகளின் வளங்களை , எண்ணெய் வயல்களை கொள்ளையடிக்கவே .
வள சுரண்டல் ஊடாக நாடுகளை அடக்கி ,ஒடுக்கி ,மிரட்டி கொள்ளை இலாபம் பெறும் இந்த கொழுத்த வெள்ளையர்களை எவர் அடக்குவது ..?
ஆசிய நாடுகளில் ,லஞ்சம் ஊழல் நேர்மையற்ற அரசாட்சி,என்பனவற்றை உருவாக்கி அந்த நாடுகளின் வளர்ச்சியை தடுத்து ,அடக்கி வருகிறது இந்த மேற்குலகம் ,.
அதற்குள் இருந்து அந்த நாடுகள் மீளாத வரை வளர்ச்சி ,மற்றும் அறிவியல் நோக்கி எப்படி அவர்களினால் நகர முடியும் ..?
எனவே முடிவில் ஈரான் நாட்டை அழிக்கும் முடிவில் இஸ்ரேல்,அமெரிக்கா,நேச நாடுகள் முனைப்பு கட்டி விட்டன ,
திட்டங்கள் போட்டு விட்டன. இனி அதற்கு ஏற்ப காரணிகளை கூறிய வண்ணம் கெடு பிடி நடத்த
போகின்றன .அது ஈரானையே வலிந்து தாக்குதல் மேற் கொள்ள வைக்கும் நெருக்கடிக்குள் தள்ளிவிட போகின்றன .
ஈரானின் அணு உலைகள் ,சோதனை ,விமான விபத்து விசாரணை என ,அடுக்கு மொழி நொண்டி சாட்டுகளை
கூறிய வண்ணம் வரிந்து கட்டி படையெடுப்பை நடத்த போகிறது உலக சண்டியர் தலைமையிலான அணிகள் .
இவர்களின் இந்த கொடும் தாக்குதல் ,இராயத்தந்திர வேட்டையில் இருந்து ஈரான் தப்புமா ..?
ஏவுகணைகள் ஈரானை நோக்கி திருப்ப பட்டுள்ளன .
அணு உலைகள் ,ஆயுத கூடங்கள் ,விமான தளங்கள் ,முக்கிய இராணுவ தளங்கள் குறி வைக்க பட்டுள்ளன .
இதில் இருந்து ஈரான் எப்படி தன்னை பாதுகாத்து கொள்ள போகிறது ..?
அமெரிக்காவின் சாதனங்களை செயல் இழக்க வைப்பதே எமது நோக்கு என என்றான் தொடர்ந்து கூறி வருகிறது ,அப்படி எனறால் சைபர் தாக்குதல் மற்றும் GPS
வழிகாட்டுதலில் இயங்கும் பொறிமுறை வழிகாட்டல் கட்டமைப்பை சிதைக்கும் முயற்சியிலும் ஈரான் ஈடுபட்டுள்ளது ,
இதனை சிதைத்தால் ஈரானின் ஏவுகணையாகலி அமெரிக்காவால் சுட்டு வீழ்த்த முடியாது .
எமக்கு உயிர் ஆபத்து இல்லை என கூறி வரும் அமெரிக்கா செய்திகள் ,ஈரானை மீளவும் ஒரு தாக்குதலை நடத்த வைக்கும்
ஆத்திரம் ஊட்டும் செயல் ,இதற்குள் சிக்கி ஈரான் தாக்குதலை நடத்தினால் அதுவே வில்லங்கத்தை உருவாக்கும்
.போர் பதட்டம் மேலும் வெடிக்கிறது ,
காட்டு தீயாக இது கரை தேடி ஓடுகிறது .
- வன்னி மைந்தன்-

அமெரிக்காவில் தாக்குதல் நடத்துவோம் -ஈரான் முழக்கம்
அமெரிக்காவில் தாக்குதல் நடத்துவோம் -ஈரான் முழக்கம்
ஈரான் இரண்டாம் நிலை தலைவர்களில் ஒருவராகவும் ,முக்கிய புரட்சி காவல் படையின் தளபதியாகவும் , ஆளும் அதிபரின் வலது கரமாகவும் ,
நேச சக்தியாகவும் விளங்கிய
வீர தளபதி சுலைமானி அமெரிக்கா படைகள் வான் தாக்குதலில் படுகொலை
செய்ய பட்டார் .
இவரது இந்த படுகொலைக்கு அமெரிக்காவுக்கு பழி தீர்க்க படும் ,அமெரிக்கா புரிந்த அரச பயங்கரவாதத்துக்கு ,போர் குற்றத்திற்கும் தகுந்த பதிலடி வழங்க படும்.
அமெரிக்கா இப்பொழுது பாது காப்பற்ற நாடாக மாறியுள்ளது ,உள்ளே மிக ஆபத்துக்களை தேடியுள்ளது
என பிரான்ஸ் அதிபரிடம் ஈரானிய தலைவர் கடும் சீற்றத்துடன் தெரிவித்துள்ளார் .
தம் நாடு மீதோ ,படையினர் மீதோ ,மக்கள் மீதோ ஈரான் தாக்குதல் நடத்தும் எனின் அது பலத்த அழிவை சந்திக்கும் எனவும் , ஈரானில் அதன் கலாச்சார மையங்கள் உள்ளிட்ட முக்கிய 52 நிலைகள் மீது அமெரிக்கா பாரிய தாக்குதலை நடத்தும் என அமெரிக்காவும் மிரட்டல் விடுத்துள்ளது .
300 விமானங்கள் பத்து போர் கப்பல்கள் ஈரானின் எல்லை அருகில் நகர்த்த பட்டுள்ளது .
மிகவும் ஆபத்தான நிலையில் இப்பொழுது நிமிடங்கள் கடந்த வண்னம் உள்ளன ,
ஈரான் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ள நிலையில் ,ஈரான் முந்திட முன்னர் மீளவும் ஈரானின் முக்கிய தலைகளை உள்ளும் ,வெளியிலும் படுகொலை செய்திட இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தீவிரமாக செயல் பட்டு வருகிறது .
மேலும் ஈரானின் ஆதரவு குழுக்கள் ஒன்று கூடும் இடங்கள் மற்றும் அவர்களின் அணைத்து நகர்வுகளையும் தீவிரமாக கண்காணித்த வண்னம் உள்ளது .
ஈரானின் முக்கிய தலைவர்கள் தீவிர கண்காணித்தலுக்குள் அமெரிக்கா இஸ்ரல் உட்படுத்தியுள்ளது ..
அமெரிக்கா காண்பிக்கும் சமிக்கை இதே போல மீளவும் ஒரு முக்கியஸ்தர் அல்லது அதற்கு மேலானவர்களை படுகொலை புரிவதே அமெரிக்காவின் நோக்காக உள்ளது
அமெரிக்காவில் தாக்குதல் நடத்துவோம் -ஈரான் முழக்கம்
ஈரான் பல திசை திருப்பல் தாக்குதலை நடத்தி விட்டே அமெரிக்காவுக்குள் தாக்குதல் நடத்த கூடும் எனவும் ,சமவேளை இஸ்ரேல் ,அமெரிக்கா மீதும் தாக்குதல்கள் நடத்தவும் திட்டமிட்ட பட்டுள்ளதாகவும் கணிக்க பெறுகிறது .
அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலை விட இந்த தாக்குதல் மிக மோசமானதாக இருக்கும் எனஎதிர்பார்க்க படுகிறது .
அப்படி என்றால் அமெரிக்காவின் பயங்கரவாத பட்டியலில் மேலும் பல விடுதலை அமைப்புக்கள் உள்வாங்க பட போகின்றன .
ஜேர்மன் ஈராக்கை விட்டு வெளியேறி வரும் நிலையில் அமெரிக்கா ஈராக்கில் தனித்து விட பட்டால் அது பலத்த எதிர்விளைவுகளை சந்திக்கும் எனவும் எதிர் பார்க்க படுகிறது .
ஈராக்கிவிட்டு நமது படைகள் விலகாது என அமெரிக்காவின் பாதுகாப்பபு அமைச்சர் அதிரடியாக தெரிவித்துளளார் .
முடிந்தால் எங்களை அனுப்பி பார் என அமெரிக்கா சபதம் இட்டு யுத்தத்தை தொடர்வதில் ,ஈரானை அழித்து அதன் தலைவரை சதாம் உசைன் போல படுகொலை செய்வதுமே அமெரிக்காவின் நிலையான கொள்கையாக உள்ளது .
அமெரிக்கா ஜனாதிபதி டிரம்பின் தலைக்கு பல மில்லியன் ஈரான் அறிவித்த நிலையில் தற்போது போர் மேகம் உக்கிரம் பெற்றுள்ளது .
ஈரான் இராணுவ தளபதியின் இறுதி கிரியைகள் முடிவடைந்த நிலையில் தற்போது களமுனை பதட்டத்தில் உள்ளது .
மேலும் ஈராக்கில் இருந்து இராணுவத்தை விளக்குவது மோசமான விளைவை ஏற்படுத்தும் என தற்பொழுது டிரம்ப் கூறியுள்ளார் ,
ஈரானில் உள்ள கலாச்சார மையங்கள் தாக்க படாது எனவும் ,உலக் சட்டத்தை மதித்துச் செயல் படுவேன் என அந்தர் பெல்டி அடித்துள்ளார்
ஆனால் ஈரான் மீது தாக்குதல் நடத்த படும் என்பதில் அவர் உறுதியாக உள்ளார் ,அமெரிக்கா கோடு போட்டு விட்ட்து இனி தாக்குதல் தான் .
குண்டுகளினால் ஈரான் குளிக்க போகிறது .பல ஆயிரம் மக்கள் படுகொலை செய்யப்பட போகின்றனர் ,ஜிகாத் தாக்குதல்கள் தீவிரம் பெற போகின்றன .
தாக்குதல் எங்கே ..? எப்பொழுது ..? இதுவே மக்கள் எதிர் பார்க்கும் பர பரப்பாக உள்ளது .

அமெரிக்கா இராணுவம் செல்போன்கள் பாவிக்க தடை
மத்திய கிழக்கில் -அமெரிக்கா இராணுவம் செல்போன்கள் பாவிக்க தடை
ஈராக்கில் ஈரானிய இராணுவத்தளபதி படுகொலை புரிய பட்ட நிலையில் அவசரமாக மத்திய கிழக்கிற்கு அமெரிக்கா மூவாயிரம் இராணுவத்தினரை அனுப்பியது .
அவ்வாறு மத்திய கிழக்கிற்கு அனுப்ப பட்ட இராணுவத்தினரின் 82 வது பராட்ரூப் படைகளால்
செல்போன் ,மற்றும் லாப்டாப் என்பன பாவிக்க தடை விதிக்க பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டு அனுப்பி வைக்க பட்டுள்ளன .
இந்த சம்பவம் இராணுவத்தினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
இவர்கள் ஊடாக ஈரானுக்கு உளவு தகவல்கள் செல்ல கூடும்
மேலும் ஈரானிய படைகள் செய்மதி ஊடாக இவர்களது கைபேசிகள் சிக்னலை வைத்து அந்த இடம் மீது தாக்குதல்
நடத்த கூடும் , லாப்டாப் ஊடாக இராணுவ ரகசியங்கள் கைமாற படாலாமென்பதாலும் ,
ஈரானால் கைக் பண்ண படலாம் என்பதாலும் இந்த முன் எச்சரிக்கை நடவடிக்கையாக இவை பார்க்க படுகிறதாம் .
ஆனால் அவர்கள் சொல்லும் காரணம் அதுவல்ல .இதுவாகவே இருக்கும் வாய்ப்பு அதிகம் .ஈரானிய இராணுவ
தளபதி அவர்களது கைபேசி பாவனை மூலமே கண்காணிக்க பட்டு படுகொலை செய்யப்பட்டதாக ஒரு செய்தியும் உள்ளது ,
அவ்வாறான ஆபத்தான பகுதி ஊடாக ஒரு பிற நாடுகளுக்கு செல்பவர்கள் கைபேசி யையும் ஆப் பண்ணாமலா செல்வார்கள் ..?எடுத்தா செல்வார்கள் ..?
அமெரிக்கா இராணுவ தலைமையகம் இந்த படைகளுக்கு மேற்கொண்ட இந்த திடீர் அதிரடி கட்டுப்பாடு எங்கையோ உதைக்கிறது .
அப்படியானால் அமெரிக்கா ஈரானிடம் இருந்து ஏதோ வித்தியாசமான தாக்குதல்களை எதிர்பார்க்கிறது ,
அமெரிக்கா இராணுவம் செல்போன்கள் பாவிக்க தடை
அது நடத்த படும் சாத்தியம் உள்ளதையே இவை காண்பிக்கிறது ,அமெரிக்கா இராணுவம் இத்தனை
இறுக்கத்தை மேற்கொள்ள காரணம் ஈரான் தாக்குதல் உக்கிரமான ஒன்றாக அமையலாம் என்பதாக கணிக்க பெறுகிறது .
அமெரிக்காவின் இந்த செயல் மத்திய கிழக்கிற்கு செல்லும் இராணுவத்தினரின் உளவியல் உறவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது .
ஒருவேளை இவர்களது குடும்பங்களுக்கு இவர்கள் அங்குள்ள களநிலவரங்களை அறிவிக்க அவை எதிரிகள்
துல்லியமாக தகவல்களை பெற்று விடுவார்கள் என்பதல் தனது இராணுவத்தையே அமெரிக்கா நம்ப மறுக்கிறதே ….
உலக சண்டியருக்கே இந்த நிலையா ..?
இது தோல்வியின் அறிகுறியா..? பாதுகாப்பின் வெளிப் பாடா …? மக்களே நீங்களே முடிவெடுங்கள்
..விடயத்தின் அடர்த்தியை புரிந்து கொள்ளுங்கள் நிலைமை புரியும் .
- வன்னி மைந்தன் –





















