Posted in Uncategorized

முல்லைத்தீவில் ஏழை குடும்பத்திற்கு வீடு கட்டி கொடுக்கும் இராணுவம்

முல்லைத்தீவில் ஏழை குடும்பத்திற்கு வீடு கட்டி கொடுக்கும் இராணுவம்

வணக்கத்துக்குறிய கல்கமுவ சாந்தபோதி தேரர் மற்றும் பிலியந்தல அமிதகொஸா தேரர் ஆகியோரின் நிதியுதவியின் மூலம், முல்லைத்தீவு மன்னங்கடல் பிரதேசத்தில் வசிக்கும் ஒரு வறிய

குடும்பத்திற்காக நிர்மாணிக்கப்பவுள்ள புதிய வீட்டிற்கான தொழில்நுட்ப நிபுணத்துவ மற்றும் மனித வள வசதிகள், முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 64 வது

படைப் பிரிவின் 641 வது பிரிகேடின் கீழ் உள்ள 14 வது இலங்கை சிங்கப் படையணியின் படையினரால் வழங்கப்பட்டுள்ளன.

இந்த திட்டமானது பாதுகாப்பு பதவி நிலை பிரதானி மற்றும் இராணுவ தளபதியின் எண்ணகருவிற்கமைய அந்தந்த பகுதிகளில் உள்ள ஏழைக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை

உயர்த்துவதற்கும், பாதுகாப்புப் படையினர் மற்றும் பொது மக்களிடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காகவும் முன்னெடுக்கப்பட்டது.

இந்த வீட்டை நிர்மாணிப்பதற்காக பிக்குகள் மற்றும் 64 வது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் மஞ்சுள கருணாரத்ன ஆகியோரால் சனிக்கிழமை (12) ஆம் திகதி அடிகல் நாட்டப்பட்டது.

இந்த திட்டமானது முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் உபாலி ராஜபக்ஜ அவர்களின் வழிக்காட்டலுக்கமைய 14 வது இலங்கை சிங்க படையணியின் கட்டளை

அதிகாரி லெப்டினன் கேணல் சி.டி.அதுல்தொல்ஆராச்சி அவர்களின் ஒருங்கிணைப்பில் மேற் கொள்ளப்பட்டது.

    Posted in சினிமா

    உங்க வேலைய பாருங்க… ரசிகருக்கு பதிலடி கொடுத்த வனிதா

    உங்க வேலைய பாருங்க… ரசிகருக்கு பதிலடி கொடுத்த வனிதா

    தனக்கு அட்வைஸ் செய்த நெட்டிசன் ஒருவருக்கு நடிகை வனிதா விஜயகுமார் பதிலடி கொடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    நடிகை வனிதா விஜயகுமார் சமீபத்தில் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ’தான் இப்போது சிங்கிள் என்றும் ’அவைலபிள்’ என்றும் குறிப்பிட்டு தனது திருமணம் குறித்து வதந்திகளை யாரும்

    நம்ப வேண்டாம் என்று தெரிவித்திருந்தார். இதற்கு கமெண்ட் செய்த நெட்டிசன் ஒருவர் ’அவைலபிள்’ என்ற வார்த்தை தேவையா? என்றும் உங்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள்

    இருக்கிறார்கள் என்பதை ஞாபகம் வைத்துக் கொண்டு இனிமேலாவது இதுபோன்ற அசிங்கத்தை நிறுத்தி விடுங்கள் என்று கமெண்ட் செய்திருந்தார்.

    அதற்கு பதிலடி கொடுத்த வனிதா விஜயகுமார் ’நாங்கள் அனைவரும் வளர்ந்து வருகிறோம், எங்கள் வாழ்க்கையை பார்த்துக் கொள்ள எங்களுக்கு தெரியும். எங்கள் கடமை என்ன என்பதும்

    தெரியும். எங்களுக்கு தேவைப்படும் போது நீங்கள் வந்து உதவி செய்யப் போகிறீர்களா? உங்களுடைய வாழ்க்கை எதுவோ அதை நீங்கள் வாழ்ந்து கொள்ளுங்கள். நான் ஒரு நடிகை, என்

    நடிப்பு பிடித்திருந்தால் என் படங்களை பாருங்கள், மற்றபடி உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள்’ என்று பதிவு செய்திருக்கிறார்.

      Posted in சினிமா

      மீண்டும் திருமணமா? – நடிகை வனிதா விளக்கம்

      மீண்டும் திருமணமா? – நடிகை வனிதா விளக்கம்

      பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் வனிதா. ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து பெற்ற இவர், கடந்தாண்டு கொரோனா ஊரடங்கு சமயத்தில் பீட்டர்பால் என்பவரை 3

      -வது திருமணம் செய்து சர்ச்சையில் சிக்கினார். பின்னர் சில தினங்களிலேயே அவரை குடிகாரர் என்று உதறித் தள்ளி மேலும் பரபரப்பு ஏற்படுத்தினார். இதையடுத்து தொலைக்காட்சி

      தொடர்களில் நடித்து வந்த வனிதா, தற்போது சினிமாவில் தீவிர கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார்.

      இதனிடையே, நடிகை வனிதா, கொல்கத்தாவை சேர்ந்த பைலட் ஒருவரை அண்மையில் ரகசியமாக திருமணம் செய்துகொண்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தது.

      இந்நிலையில், இதுகுறித்து விளக்களித்து நடிகை வனிதா டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “உங்கள் அனைவருக்கும் ஒன்றை தெரியப்படுத்த விரும்புகிறேன். நான் இப்போதும் சிங்கிளாகவே

      இருக்கிறேன். அப்படியே இருக்க விரும்புறேன். எந்தவொரு வதந்தியையும் பரப்பவோ, நம்பவோ வேண்டாம்” எனக்கூறி திருமண வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

      Posted in சினிமா

      நடிகையின் 5 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நடிகர் கைது

      நடிகையின் 5 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நடிகர் கைது

      சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள நடிகரை, 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்துள்ளனர்.

      நடிகையின் 5 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நடிகர் கைது
      பியர்ல் புரி


      நாகின் 3- என்ற இந்தி சீரியலில் நடித்து பிரபலமானவர் நடிகர் பியர்ல் புரி. மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று உள்ளார். 31 வயதாகும் இவர் மும்பையில் வசித்து வருகிறார்.

      இந்நிலையில், இவருடன் நடிக்கும் சக நடிகை ஒருவர் சம்பவத்தன்று தனது 5 வயது மகளுடன் படப்பிடிப்பு தளத்துக்கு வந்துள்ளார். அப்போது நடிகர் பியர்ல் புரி, அந்த 5 வயது சிறுமிக்கு

      பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் கடந்த 2019-ம் ஆண்டு நடந்துள்ளது.

      இதுதொடர்பாக சிறுமியின் தந்தை சமீபத்தில் மும்பை போலீசில் புகார் அளித்தார். சம்பவம் வசாய் பகுதியில் நடந்தது என்பதால், வழக்கு அங்குள்ள வாலிவ் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. இது பற்றி வாலிவ் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

      இந்நிலையில் மும்பையில் இருந்த நடிகரை அம்போலி போலீஸ் உதவியுடன் வாலிவ் போலீசார் கைது செய்தனர். அவர் மீது கற்பழிப்பு மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

      இவரை வசாய் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது நடிகர் பியர்ல் புரியை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க கோர்ட்டு உத்தரவிட்டது.

        Posted in Uncategorized

        கிளறப்படும் மகிந்த இன அழிப்பு – அமெரிக்காவிடம் கெஞ்சும் இலங்கை

        கிளறப்படும் மகிந்த இன அழிப்பு – அமெரிக்காவிடம் கெஞ்சும் இலங்கை

        இலங்கை அரசு இவ்வாறு சடைந்து வெளியிட்டுள்ளது ,அதாவது தங்கள் இன படுகொலை புரியவில்லை புலிகளே செய்தார்கள் ள் என்பது தான் அது

        காங்கிரஸின் பெண் உறுப்பினரான டெபொரா ரோஸ் (ஜனநாயகக் கட்சி / வட கரோலினா) அவர்களால் 2021 மே 18ஆந் திகதி கொண்டு வரப்பட்ட இலங்கை தொடர்பான எச். ஆர்.இ.எஸ். 413

        என்ற தீர்மானத்தை தொடர வேண்டாம் என அமெரிக்க சபையின் வெளிநாட்டு உறவுகள் குழுவிடம் வொஷிங்டனில் உள்ள இலங்கைத் தூதுவர் ரவிநாத ஆரியசிங்க அவர்களினூடாக இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது.

        அமெரிக்க சபையின் வெளிநாட்டு உறவுகள் குழுத் தலைவரான பிரதிநிதி கிரெகரி மீக்ஸ் (ஜனநாயகக் கட்சி / நியூயோர்க்) மற்றும் தரவரிசை உறுப்பினரான பிரதிநிதி மைக்கேல்

        மெக்கவுல் (குடியரசுக் கட்சி / டெக்சாஸ்) ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்ட தொடர்பாடலில், தவறான, பக்கச்சார்பான மற்றும் ஆதாரமற்ற வகையில் இலங்கை மீதான குற்றச்சாட்டுக்களைக்

        கொண்டுள்ளதும், தீர்மானத்தின் நோக்கம் குறித்து கடுமையான சந்தேகத்தை எழுப்புவதுமான இந்தத் தீர்மானத்தின் உள்ளடக்கங்களை இலங்கை கடுமையாக எதிர்க்கின்றது’ என இலங்கை அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

        தீர்மானத்தின் பாரபட்சமற்ற தன்மையை ஒவ்வொரு பந்தியிலும் விரிவாக பகுப்பாய்வு செய்யும் வகையில் இந்தத் தொடர்பாடல் அமைந்திருந்தது.

        1997ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவால் தடைசெய்யப்பட்ட மற்றும் 2008ஆம் ஆண்டு முதல் எஃப்.பி.ஐ யால் ‘உலகின் மிக ஆபத்தான மற்றும் கொடிய தீவிரவாதிகளின் மத்தியிலான’ ஒரு ‘சுதந்திர ஆயுத அமைப்பாக’ பெயரிடப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளை சமப்படுத்தும்

        வகையில் முன்மொழியப்பட்டுள்ள இந்தத் தீர்மானமானது, அதன் தோற்றம் மற்றும் நோக்கத்தை அம்பலப்படுத்துவதாக அவதானிக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானமானது, ‘பாரம்பரிய தமிழ் தாயகங்கள்’ பற்றிய குறிப்புக்களின் மூலமாக, பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கும் அதே வேளை,

        இலங்கையின் அரசுக்கான தன்மையையும் கூட கேள்விக்குள்ளாக்குகின்றது. இது நிறுவப்பட்ட வரலாற்று உண்மைகளையும், இன்றைய யதார்த்தங்களையும் தவறாக சித்தரிப்பதுடன்

        மட்டுமல்லாமல், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மற்றும் அதன் ஆதரவாளர்களின் இறுதி இலக்கான இலங்கையை சிதைக்கும் நோக்கத்தை ஆதரிப்பதற்கும் பங்களிப்புச் செய்கின்றது.

        தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் அதன் முன்னணி அமைப்புக்கள் மற்றும் பயங்கரவாதத்தை மகிமைப்படுத்துவதற்கான முயற்சிகள் பற்றிய அமெரிக்காவின் சொந்த பாதுகாப்புக் கவலைகள் பற்றிய தீர்மானத்தின் அறியாமையானது, தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் அமெரிக்காவிலும், உலகெங்கிலும் உள்ள அதன் பல முன்னணி அமைப்புக்களின் கூர்மையான கூறுகளுக்கு உத்வேகம் அளிக்கும்.

        ‘பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் உட்பட இலங்கையின் நிலையானதொரு பாதுகாப்புப் பங்காளியாக’ அமெரிக்கா விளங்குவதாகத் தெரிவித்துள்ள இலங்கை அரசாங்கம், ‘ஜனநாயக

        மற்றும் குடியரசுக் கட்சியின் நிர்வாகங்கள் முழுவதும், குறித்த ஐக்கிய அமெரிக்கக் கொள்கைக்கு மாறுபட்டதாக உள்ள இந்தத் தீர்மானம், அரசியல் இலக்குகளை அடைந்து கொள்வதற்காக ஆயுதமேந்திய செயல்களை சபை ஆதரிக்கின்றது என்ற தவறான முடிவுக்கு வழிவகுக்கும். இது

        ஜனநாயக விழுமியங்களில் வேரூன்றியிருக்கும் அமெரிக்க நிர்வாகத்தின் சொந்த வெளியுறவுக் கொள்கையின் அடித்தளத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் அதே வேளை, இலங்கைக்கும்

        அமெரிக்காவிற்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை எதிர்மறையாகப் பாதிக்கும்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

        தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்தைத் தோற்கடிப்பதற்காக கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக போராடிய இலங்கை அரசாங்கம், அனைத்து இலங்கையர்களையும் பாதுகாத்து, விடுவிப்பதற்காக இனம், மதம், மொழி, சாதி, பாலினம், அரசியல் கருத்து அல்லது பிறந்த இடம்

        ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் தனது பிரஜைகளைப் பாதுகாப்பதற்கான அரசியலமைப்பு சார்ந்த கடமைகளுடன் ஒத்துப்போகின்றது என வலியுறுத்தப்பட்டுள்ளது. மே 2009 இல் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டதிலிருந்து அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளையும்,

        மோதலில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உட்கட்டமைப்பை மீண்டும் கட்டியெழுப்பி, அபிவிருத்தி செய்யவும், தமிழீழ விடுதலைப் புலிகளினால் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தப்பட்ட உள்நாட்டில் இடம்பெயர்ந்த 300,000 பேரின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவும், மறுவாழ்வு

        அளிக்கப்பட்டு, சமூகத்தில் மீண்டும் ஒருங்கிணைக்கப்பட்ட 596 சிறுவர் படையினரைக் கொண்ட 12,000 க்கும் மேற்பட்ட முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் போராளிகள் உட்பட பலருக்கு வழங்கப்பட்ட வாழ்வாதார வாய்ப்புக்களையும் இந்தத் தொடர்பாடல் கோடிட்டுக் காட்டியது.

        மோதல் முடிவடைந்ததைத் தொடர்ந்து, வடக்கு மக்களின் உரிமைகளையும், ஜனநாயக சுதந்திரங்களையும் உறுதி செய்வதற்காக, 2013ஆம் ஆண்டில் வட மாகாண சபைத் தேர்தல் நடாத்தப்பட்டதாக நினைவு கூரப்பட்டுள்ளது. 2017 முதல், ஒருபோதும் நிறைவேற்றப்படாத

        மாகாண சபைத் தேர்தல்களை நடாத்துவதற்கு முன்னர் தேர்தல் சீர்திருத்தத்தைத் தேவைப்படுத்தும் ஒரு தீர்ப்பின் மூலம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்து சிறுபான்மைக் கட்சிகளும் தேர்தல்களை ஒத்திவைப்பதை ஆதரித்தன.

        ஏறக்குறைய 3 ஆண்டுகளாக, மனித உரிமைகள் சபை அல்லது மேற்கத்தேய நாடுகள், வட மாகாணம் உட்பட மாகாண சபைகளின் தேர்தல்கள் தாமதமடைவது குறித்த பிரச்சினையை எடுத்துக்கொள்ளவில்லை. எவ்வாறாயினும், தற்போதைய அரசாங்கம் இந்த விடயத்தில்

        பரிந்துரைகளை வழங்குவதற்காக பாராளுமன்றக் குழுவை நியமிப்பதற்கான முன்முயற்சியை எடுத்து வரும் ஒரு நேரத்தில், இது ஒரு முக்கிய பிரச்சினையாக முன்வைக்கப்பட்டுள்ளது.

        2015 ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் புலனாய்வு ஆணையாளர் அலுவலகத்தின் இலங்கை தொடர்பான அறிக்கை உட்பட இந்தத் தீர்மானத்தில் மேற்கோள் காட்டப்பட்ட இலங்கை பற்றிய அறிக்கைகள், ‘மேசையளவில் மதிப்பாய்வு செய்யப்பட்ட’ தகவல்கள், நிகழ்வுகள் பற்றிய

        வெறும் வெளிப்படை நிலையான விவரிப்பாகவே அமைவதுடன், இந்த ஆவணங்கள் ஆதாரங்களை வெளிப்படுத்தத் தவறிவிட்டன. மாறாக, ஏனையவற்றுக்கு இடையில், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு, ‘பரணகம ஆணைக்குழு’, ஐ.நா.

        மற்றும் யு.என்.டி.பி, யுனிசெப் மற்றும் ஐ.சி.ஆர்.சி. உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்களின் அறிக்கைகள், மற்றும் பிரித்தானிய பிரபுக்கள் சபையின் பிரபு நேஸ்பி வழங்கிய தகவல்கள் ஆகிய சரிபார்க்கப்பட்ட பல சான்றுகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. சர்வதேச சட்டவியலாளர்கள்

        உள்ளிட்ட நிபுணர்களின் கருத்துக்கள், மற்றும் யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் அனுப்பப்பி வைக்கப்பட்ட கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத்தின் இராணுவ

        இணைப்பாளரான கேர்னல் அன்டன் காஷ் மற்றும் ஐக்கிய அமெரிக்கத் தூதரகத்தின் பாதுகாப்பு இணைப்பாளரான லெப்டினன்ட் கேர்னல் லோரன்ஸ் ஸ்மித் ஆகியோரின் அறிக்கைகள் இந்த விவரிப்புக்கு சவால் விடுக்கின்றன.

        அக்டோபர் 2015 இல் ஐ.நா. தீர்மானம் 30/1 இற்கு இலங்கை இணை அனுசரணை வழங்கி, அரசியலமைப்பிற்கு முரணான வகையிலான வெளிநாட்டு நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளை உள்ளடக்கிய ஒரு பொறுப்புக்கூறல் பொறிமுறையை இலங்கை ஆரம்பிக்கும் என்ற

        உறுதிப்பாட்டை முந்தைய அரசாங்கம் வழங்கியிருந்த போதும், 5 ஆண்டுகளாக ஐ.நா. மற்றும் அமெரிக்கா மற்றும் இந்தத் தீர்மானத்தின் ஏனைய ஆதரவாளர்கள் அந்த வாக்குறுதிகளை முந்தைய அரசாங்கம் நிறைவேற்றுவதற்கான அழுத்தத்தை எந்த வகையிலும் கொடுக்கவில்லை.

        எழுப்பப்பட்டுள்ள விடயங்களை நிவர்த்தி செய்வதற்காக தற்போதைய அரசாங்கம் நம்பகமான, வெளிப்படையான உள்நாட்டு செயன்முறையை வழங்கும் வகையில், ஜனவரி 2021 இல் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை நிறுவி, அதன் மூலம் 2021 மார்ச் 04ஆந் திகதி ‘விசாரணை

        செய்வதற்காக எழுதப்பட்ட பிரதிநிதித்துவங்கள் அல்லது தகவல்கள் அல்லது மேற்கூறியவற்றுடன் தொடர்புடைய வேறு எந்தவொரு பொருளையும் சமர்ப்பிப்பதற்கு எந்தவொரு நபர், நபர்கள்

        அல்லது அமைப்புக்களும் ஆணைக்குழுவிற்கு வருகை தருவதற்காக அழைப்பு விடுக்கப்பட் டுள்ள’ இந்த நேரத்தில் ஒரு ‘சர்வதேசப் பொறிமுறையை’ கோருவது மிகவும் மோசமானது. ஆணைக்குழு

        ஏப்ரல் முதல் விசாரணைகளை நடாத்தி வருவதுடன், சாட்சிகளிடமிருந்து சாட்சியங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது.

        வெளிநாட்டு அமைச்சு
        கொழும்பு

          Posted in உளவு செய்திகள்

          இலங்கையில் உருவாகும் இரு ஆயுத குழு – வெடிக்க தயாராகும் குண்டுகள்

          இலங்கையில் உருவாகும் இரு ஆயுத குழு – வெடிக்க தயாராகும் குண்டுகள்

          இலங்கையில் தமிழர் தேசிய விடுதலைக்காக போராடி வந்த விடுதலை புலிகள் அந்த மண்ணில் இருந்து முற்று முழுதாக அழிக்க பட்டனர் ,அதன் பின்னர் தமிழர்கள் சிங்கள அரச பயங்கரவாதத்தின் காலடியில் சிக்கி நசுக்க பட்டு வருகின்றனர்

          புலிகள் ஆளும் பொழுது சிங்கள அரசுடன் இணைந்து அந்த போராட்டத்தை காட்டி கொடுத்து வந்த முஸ்லீம்கள் தற்பொழுது ஆளும் அரசுகளினாலேயே வேட்டையாட படுகின்றனர்

          இவ்வாறன கூட்டு நகர்வு நடந்தேறிய வண்ணம் இருக்க ,இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் அனைத்து நகர்வுகளை பவுத்த பேரினவாதம் எடுத்து வருகிறது ,அதற்கு தமிழர் பகுதிகள் உள்ளிட்ட முக்கிய கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் சீனாவுக்கு சிங்கள அரசு வழங்கியுள்ளது

          வன்னி புலிகள்

          இதனை அடுத்து இரு மாகாணங்களாக வடக்கு ,கிழக்கை சிங்கள அரசு பிரித்துள்ளது ,சிங்களம் எதனை செய்ததோ அதை வைத்து அதே அரசுக்கு ஆட்டத்தை கற்பிக்க மத்திய பிராந்திய

          உளவுத்துறை ஒன்று கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது ,அதற்கு வன்னியில் தமிழர்களை மைய படுத்தி புதிய புலிகள் என்ற அணியும் ,அதே போல கிழக்கில் முஸ்லீம்களை மைய படுத்தி முஸ்லீம் ஆயுத கு ஒன்றை உருவாக்க முயற்சிகள் இடம்பெறுகிறது

          சிக்கும் இலங்கை

          இது இரண்டு வகையான உள்நோக்கம் கொண்ட நகர்வாக அமைய பெறுகிறது ,அதாவது ,இவ்விதம் இரு குழுக்களும் இரு வேறு திசையில் தாக்குதல் நடத்துவர் ,அதில் ஒன்று முஸ்லீம்கள் ,இப்பொழுது ,சிங்கள அரசு முஸ்லீம் ,தமிழர்கள் இருவரையும் பந்தாட வேண்டிய நிலை

          முஸ்லீம்கள் ,சிங்களவர்கள் வசிக்கும் அனைத்து பகுதியிலும் வசிக்கின்றனர் ,முஸ்லீம் களை யெடுப்பை சிங்கள அரசு மேற்கொள்ள முனைந்தால் நாடு சுடுகாடாகும் என்பதற்கு இவை உதாரணமாக உள்ளது

          இந்திய நுழைவு

          இவ்விதமான தாக்குதல்கள் நடக்க பின்புலத்தில் இந்திய தனது பயிற்றுவிக்க பட்ட தமிழர்கள் ,அல்லது தமிழ் பேசும் இராணுவத்தை
          முழுமையாக வன்னிக்குள் இறக்கி, அதனை தமது கட்டுப் பாட்டுக்குள் வைத்திருக்க முனைகிறது

          ராஜன் குழு

          இந்த விடயங்களின் பின்னால் புலிகளினால் தேட பட்டு வந்த பரந்தன் ராஜன் என்பவர் செயல்பட்டு வருகிறார் ,இவர் இந்தியா இலங்கை ஒப்பந்தத்தை நடைமுறை படுத்தி இலங்கைக்குள் ஒன்றிணைந்த ஒரு தீர்வை பெற்று விடலாம் ,என்பதும் ,தமது தலைமையில் ஒரு அதிகார ஆட்சியை நிறுவிட முனைகிறார் .

          தமிழர்களினாலே விரோதியாக பார்க்க படும் பரந்தன் ராஜன் இந்த கனவு பலிக்குமா ..?,அடித்தட்டு தமிழ் மக்கள் கருத்துக்கள் அப்டி அவை செல்லுபடியற்ற ஒன்றாக மற்றம் பெறும்

          இந்தியா மேற்கொள்ள போகும் இந்த ஆயுத போராளிகள் உருவாக்கம் ,இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு தேவையான ஒன்றாக உள்ளது

          இலங்கை அரசை அடக்க தமிழர் இனஅழிப்பை கையில் எடுத்தாலேஇந்தியாவுக்கு போதுமானது ,ஆனால் அதனை செய்து கொள்ள மறுத்து ,ஆயுத குழுவை உருவாக்க இந்திய உளவுத்துறை முயல்வது சாத்தியமான ஒன்றா ..?

          அல்லது அமெரிக்கா தலைமையில் இலங்கையில் புதிய ஆயுத குழு ஒன்று ஆரம்பிக்க படும் நிலை ஏற்பட போகிறதா ..?

          இரண்டில் ஒன்று இலங்கையில் நடக்க போகிறது ,இதற்கு ஆளும் சிங்கள அரசுகள் வழியமைத்து கொடுக்கின்றன ,சிங்கள பவுத்த பேரினவாதிகளின் சிந்தனையில் மாற்றங்கள் ஏற்படவில்லை ,
          அது பெரும் பேரழிவை ஏற்படுத்த போகிறது என்பதை இந்த விடயங்கள் கோடிட்டு காட்டுகின்றன

          வரும் காலங்கள் இந்த ,வலி தோய்ந்த வரலாற்று சிறப்பு மிகு ,திருப்ப விடயத்தினை பகிரும் என அடித்து கூறலாம் –

          • வன்னி மைந்தன்
          Posted in மருத்துவம்

          கொரோனா நோய்த்-தடுப்பதற்கான சித்த மருத்துவ முறைகள்

          கொரோனா நோய்த்-தடுப்பதற்கான சித்த மருத்துவ முறைகள்

          கொரோனா நோய்த்தொற்றை தடுப்பதற்கான சித்த மருத்துவ முறைகள் குறித்து மதுரை அரசு ஆஸ்பத்திரி சித்த மருத்துவ அதிகாரி விளக்கமளித்துள்ளார்.


          கொரோனாவின் நோய்த்தொற்று பரவலை தடுப்பதில் தமிழகத்தின் பாரம்பரிய சித்த மருத்துவம் முக்கிய பங்காற்றுகிறது.

          இதையடுத்து, தற்போது புதிதாக தமிழகம் முழுவதும் முற்றிலும் சித்த மருத்துவ கொரோனா சிகிச்சை மையங்கள் திறக்கப்பட்டு வருகின்றன.

          இது குறித்து, மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரியின் மாவட்ட சித்த மருத்துவ அதிகாரி டாக்டர் சைரா பானு கூறியதாவது:-

          கொரோனா நோய்த்-தடுப்பதற்கான சித்த மருத்துவ முறைகள்

          கொரோனா நோய்த்தொற்றை ஆரம்ப நிலையில் கண்டறிந்தால், சித்த மருந்துகள் மூலம் சிகிச்சையளித்து குணப்படுத்தலாம்.

          பெரும்பாலானோர் நோய் முற்றிய நிலையில் ஆஸ்பத்திரிகளுக்கு வருகின்றனர்.

          முன்னெச்சரிக்கை

          அவர்களுக்கு சுவாசிக்க ஆக்சிசன் உதவி தேவைப்படுகிறது. ஆனால், நோய்த்தொற்று பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க முடியும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க, வீட்டின்

          சுற்றுப்புறத்தில் வேப்பிலை, மஞ்சள் கலந்த நீர் தெளிக்க வேண்டும். தினமும் காலையில் மிதமான சூட்டில் கல் உப்பால் வாய் கொப்பளிக்க வேண்டும்.

          தொண்டை வறண்டு போகாமல் இருக்க 2 வேளை வெந்நீர் குடிக்க வேண்டும். வேப்பிலை, நொச்சி இலை மற்றும் மஞ்சள் சேர்த்து தினமும் சுவாசத்துக்கான நீராவி பிடிக்க வேண்டும். மஞ்சள்,

          வேப்பிலை, கற்றாழை மற்றும் படிகாரம் கலந்த நீரை கைகழுவ பயன்படுத்தலாம். காலையில் தோல் சீவிய இஞ்சி, எலுமிச்சை தோலுடன் மிளகு சேர்த்து காய்ச்சி தேன் கலந்து குடிக்க வேண்டும்.

          தினமும் மாலை சுக்கு, கொத்தமல்லி கலந்த பானம் தேனில் கலந்து அருந்த வேண்டும். இரவில் சூடான பாலில் மஞ்சள், மிளகு சேர்த்து குடிக்க வேண்டும். சுண்டைக்காய், பாகற்காய், திணை,

          கொரோனா நோய்த்-தடுப்பதற்கான சித்த மருத்துவ முறைகள்

          சாமை, கேழ்வரகு, குதிரைவாலி, வேப்பம் பூ, தூதுவளை ரசம் ஆகிய உணவுகளை சாப்பிட வேண்டும்.

          நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நெல்லிக்காய், கொய்யாப்பழம், பப்பாளி, ஆரஞ்சு, சாத்துக்குடி உள்ளிட்ட பழங்களை தினமும் சாப்பிட வேண்டும்.

          சித்த மருத்துவம்

          அலர்ஜி, ஆஸ்துமா, சைனஸ் நோயாளிகள், வயதானவர்கள் முள்ளங்கி, சுரைக்காய், பூசணி, வெள்ளரிக்காய் ஆகியவற்றையும், எலுமிச்சை, தயிர், மாதுளை, திராட்சை போன்ற உணவு

          வகைகளை தவிர்க்க வேண்டும். கொண்டைக்கடலை, பாதாம்பருப்பு, நிலக்கடலை ஆகியவற்றை சுண்டல் செய்து சாப்பிடலாம். தினமும் காலை 10 மணிக்குள்ளும், மாலை 4 மணிக்கு பிறகும் உடம்பில் வெயில்படுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

          இதன் மூலம் நோய்த்தொற்று பரவாமல் நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ள முடியும். கபம் தொடர்பான நோய்களுக்கு சித்தர்களின் ஓலைச்சுவடிகளில் பலதரப்பட்ட மருந்து குறிப்புகள்

          சொல்லப்பட்டுள்ளன. அதன்படியே, தற்போது சித்த மருந்துகள் கொரோனா நோயாளிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு வருகிறது.

          கொரோனா நோயாளிகளை அறிகுறிகள் இல்லாதவர்கள், மிதமான பாதிப்பு, சாதாரண பாதிப்பு மற்றும் தீவிர பாதிப்பு என 4 வகையினராக பிரிக்கின்றனர்.

          ஆய்வு

          இதில், மிதமான மற்றும் சாதாரண பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு சித்த மருந்துகள் மட்டும் நோய்த்தொற்றை குணப்படுத்த போதுமானது. பிற பிரிவினருக்கு ஆங்கில மருந்துகளுடன், சித்த

          மருத்துவமும் சேர்ந்து கிடைக்கும் போது விரைவில் குணமடைகின்றனர் என்பது இந்திய மருத்துவத்துறை இயக்குனர் கணேஷ் ஐ.ஏ.எஸ். உத்தரவின் பேரில், தமிழத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெளிவாகியுள்ளது.

          இந்த ஆய்வறிக்கை ஜே.ஏ.ஐ.எம். என்ற சர்வதேச நாளேட்டில் பிரசுரமானது. தற்போது நோய் அதிதீவிரமான நிலையில் இருப்பதால் சித்த மருத்துவத்தையும் சேர்த்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

          இவ்வாறு அவர் கூறினார்.

          நீராவி பிடிக்கும் வழிமுறைகள்

          காலை, மாலை நேரங்களில் தொடர்ந்து சுவாசத்துக்கான நீராவி பிடித்தால் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் இருந்து நிவாரணம் பெற முடியும். இதற்கு கல் உப்பு, விரலி மஞ்சள்தூள்,

          வேப்பிலை, நொச்சி இலை, துளசி இலை மற்றும் ஓமவள்ளி இலை ஆகியவற்றை சுத்தமான தண்ணீரில் நன்றாக கொதிக்க வைத்து வாய் மற்றும் மூக்கு பகுதியில் நீராவி படும்வகையில் 3

          நிமிடம் ஆவி பிடிக்க வேண்டும். அப்போது, காற்றை இழுத்து சுவாசிக்க வேண்டும். இவ்வாறு செய்யும் போது, அவ்வப்போது தொற்றிக்கொள்ளும் வைரஸ் கிருமிகள் அழிக்கப்படும்.

            Posted in சினிமா

            பைக் ஓட்டி அசத்தும் அஜித் பட நடிகை

            பைக் ஓட்டி அசத்தும் அஜித் பட நடிகை

            தமிழில் நடிகர் விக்ராந்த் நடித்த ‘கற்க கசடற’ என்ற படத்தில் அறிமுகமானவர் நடிகை ராய் லட்சுமி.

            அதன் பின், தாம் தூம், அரண்மனை, காஞ்சனா, மங்காத்தா என தொடர்ச்சியாக பல படங்களில் நடித்தார். மேலும், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வந்தார்.


            ற்போது ராய் லட்சுமி நடிப்பில் சிண்ட்ரெல்லா திரைப்படம் உருவாகி உள்ளது. இந்நிலையில் தற்போது கருப்பு

            நிற உடையில் தூம் பாடலுக்கு பைக் ஓட்டும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ அனைவரது கவனத்தையும் ஈர்த்து வைரலாகி வருகிறது.

              Posted in சினிமா

              குழந்தையை உலகிற்கு அறிமுகம் செய்த நடிகை ரிச்சா

              குழந்தையை உலகிற்கு அறிமுகம் செய்த நடிகை ரிச்சா

              செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘மயக்கம் என்ன’ படத்தில் கதாநாயகியாக

              அறிமுகமானவர் ரிச்சா கங்கோபாத்யாய். இப்படத்தை தொடர்ந்து சிம்புவுடன் இவர் நடித்த ‘ஒஸ்தி’ படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது.

              சினிமாவில் பிரபலமாக இருக்கும் போதே ஜியோ என்பவரை திருமணம் செய்துகொண்டார் ரிச்சா. தற்போது வெளிநாட்டில்

              வாழ்ந்து வரும் இவர் கடந்த சில மாதங்களுக்கு முன், தான் கர்ப்பமாக இருப்பதாக தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார்.


              ரிச்சாவின் குழந்தை

              இந்த நிலையில் மே 27-ஆம் தேதி ரிச்சாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தைக்கு ‘லூகா’ என்று பெயர் வைத்து இருக்கிறார்கள்.

              தற்போது குழந்தை புகைப்படத்தை பதிவு செய்து உலகிற்கு அறிமுகம் செய்து வைத்திருக்கிறார் ரிச்சா. இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்

                Posted in உலக செய்திகள்

                அதிக கட்டணம் வசூலிப்பு – 10 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான உரிமம் ரத்து

                அதிக கட்டணம் வசூலிப்பு – 10 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான உரிமம் ரத்து

                தெலுங்கானா மாநிலத்தில் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிடம் சிகிச்சைக்காக அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன.

                இதுதொடர்பாக, தெலுங்கானா அரசு தரப்பில் விசாரணை நடத்தப்பட்டது. அந்த விசாரணையில் அம்மாநிலத்தில் உள்ள 10 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை பெறும்

                நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலிப்பது தெரியவந்தது. மேலும், மருத்துவமனைகள் சரிவர செயல்படாததும் தெரியவந்தது.

                இந்நிலையில், அந்த 10 தனியார் மருத்துவமனைகளுக்கும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வழங்கப்பட்ட உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. எஞ்சிய கொரோனா

                நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து குணமடைந்த பின் புதிதாக எந்த கொரோனா நோயாளியையும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கக் கூடாது என தெலுங்கானா சுகாதாரத்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

                கொரோனா நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலித்ததாக எழுந்த புகாரில் மேலும், 79 மருத்துவமனைகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

                  Posted in சினிமா

                  சர்ச்சையில் சிக்கிய பிரபல ஆபாச பட நடிகை

                  சர்ச்சையில் சிக்கிய பிரபல ஆபாச பட நடிகை

                  சர்வதேச மாடல் அழகியான கிம்கர்தாஷியான் ஆபாச படங்களில் நடித்து பிரபலமானார். ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். வலைத்தளங்களில் அடிக்கடி அறைகுறை உடையில் ஆபாச படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

                  சமூக வலைத்தளத்தில் இவரை பின் தொடரும் ரசிகர்கள் எண்ணிக்கையும் அதிகம். இதன் மூலம் தனது வலைத்தள பக்கங்களிலும் வணிக பொருட்களை அறிமுகம் செய்து பணம் சம்பாதிக்கிறா

                  ர். கிம்கர்தாஷியான் சொத்து மதிப்பு இந்திய மதிப்பில் ரூ.7 ஆயிரத்து 400 கோடி என்று மதிப்பிடப்பட்டு உள்ளது.

                  கிம் கர்தாஷியான்

                  இந்த நிலையில் கிம்கர்தாஷியான் காதில் வடமொழி ஓம் முத்திரை டிசைன் கம்மல் அணிந்து போஸ் கொடுத்து புகைப்படம் எடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

                  இந்துக்கள் புனிதமாக கருதும் ஓம் முத்திரையை கொச்சைப்படுத்தி இருப்பதாகவும் இதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலைத்தளத்தில் பலரும் அவருக்கு கண்டனங்கள் எழுப்பி வருகிறார்கள். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

                    Posted in இலங்கை செய்திகள்

                    கோட்டா கட்சி எம்பிக்கு கொரனோ

                    கோட்டா கட்சி எம்பிக்கு கொரனோ

                    இலங்கையில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி

                    திருமலை மாவாட்டத்தின் பாராளும்னற உறுப்பினராக விளங்கி வரும் Kapila Nuwan Athukorala பாதிக்க பட்டுள்ளார்

                    இவ்வாறு தொற்றுக்கு உள்ளானவர் தனிமை படுத்த பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார் ,இவர் கோத்தபாயவின் இனவெறி கொள்கை கொண்டவர் என்பது குறிப்பிட தக்கது

                      Posted in Uncategorized

                      அமெரிக்காவில் இந்தியர்,ஈரான் உள்ளிட்ட 11 பேர் சுட்டு கொலை

                      உலக

                      அமெரிக்காவில் இந்தியர்,ஈரான் உள்ளிட்ட 11 பேர் சுட்டு கொலை

                      அமெரிக்கா கலிபோனியா பகுதியில் ஒன்றாக வேலை பார்த்த நபர் ஒருவர் தனது சக

                      தொழிலாளிகளை இலக்கு வைத்து துப்பாக்கி சூடு நடத்தினர்
                      இதில் 11 பேர் மரணமாகியுள்ளனர்

                      இவ்வாறு பலியானவர்களில் இந்திய சீக்கியர் மற்றும் ஈரான் நாட்டவர்கள் உள்ளடக்க படுகின்றனர்

                      துப்பாக்கி சூட்டை நடத்தியவர் ,தன்னை தானே சுட்டு தற்கொலை புரிந்துள்ளார் ,இந்த

                      படுகொலைக்கான உடனடி காரணம் தெரியவரவில்லை ,விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது

                        Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

                        தண்ணி பானைக்குள் வீழ்ந்து சிசு மரணம் – சோகத்தில் கிராமம்

                        தண்ணி பானைக்குள் வீழ்ந்து சிசு மரணம் – சோகத்தில் கிராமம்

                        இலங்கை தம்புள்ள பகுதியில் ஒன்றரை வயது சிசு ஒன்று வீட்டின் முன் பகுதியில் நீர் நிரப்பி வைக்க பட்ட பானைக்குள் வீழ்ந்து உயிரிழந்துள்ளது

                        மேற்படி சம்பவம் தொடர்பில் போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் ,இது விபத்தா ,கொலையா என்ற நிலையில் விசாரணைகள் தீவிர படுத்த பட்டுள்ளன

                          Posted in இலங்கை செய்திகள்

                          ஆற்றில் இருந்து துப்பாக்கி மீட்பு

                          ஆற்றில் இருந்து துப்பாக்கி மீட்பு

                          இலங்கை அம்பாறை கல்லிரைச்சல் ஆற்றுக்குள் இருந்து கைத்துப்பாக்கி ஒன்று மீட்க பட்டுள்ளது

                          ,இவ்வாறு மீட்க பட்ட அந்த துப்பாக்கி தற்போது இயங்கு நிலையில் உள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்
                          வெளிநாட்டு தயாரிப்பிலான துப்பாக்கி இவை என தெரிவிக்க படுகிறது

                          இதுவரை இந்த ஆயுத மீட்பு தொடர்பில் எவரும் கைது செய்ய படவில்லை

                            Posted in இலங்கை செய்திகள்

                            கொரனோ விதிகளை மீறிய 793 பேர் கைது

                            கொரனோ விதிகளை மீறிய 793 பேர் கைது

                            இலங்கையில் விதிக்க பட்டுள்ள நிகழ்கால கொரனோ விதிகளை மீறிய 793 பேர் கைது செய்ய பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்

                            நாள் தோறும் இவ்வாறு கைது செய்ய படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது

                              Posted in Uncategorized

                              கிராமத்துக்குள் புகுந்து 38 மக்களை சுட்டு கொன்ற தீவிரவாதி

                              கிராமத்துக்குள் புகுந்து 38 மக்களை சுட்டு கொன்ற தீவிரவாதி

                              நையீரிய நாட்டின் Katsina-Ala பகுதி கிராமத்துக்குள் துப்பாக்கியுடன் புகுந்த பொக்கோ கராம் தீவிரவாதி ஒருவன் அங்கிருந்த அப்பாவி மக்கள் 38 பேரை சுட்டு கொன்றுள்ளான்

                              மேலும் சிலர் காணாமல் போயுள்ளனர்
                              குழுவாகா நுழைந்து பாதுகாப்பை பேணியபடி இந்த தாக்குதலை இவர்கள் நடத்தியுள்ளனர்

                              கடந்த இரு நாளுக்கு முன்னர் இவ்வாறு நடத்த பட்ட துப்பாக்கி சூட்டில் நூறு பேர் பலியாகி இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது

                                Posted in இலங்கை செய்திகள்

                                அந்தியசக்திகளின் நடவடிக்கைகளுக்கும் தாயகமக்களின் சம்மதம் பெறப்பட வேண்டும் : உருத்திரகுமாரன் !

                                அந்தியசக்திகளின் நடவடிக்கைகளுக்கும் தாயகமக்களின் சம்மதம் பெறப்பட வேண்டும் : உருத்திரகுமாரன் !

                                தமிழர் தேசத்தின் இறைமை என்பது நிலத்தில் மட்டுமல்ல, நிலத்தை அண்டிய கடலிலும் உண்டென்ற நிலையில் எந்தவொரு அந்தியசக்திகளின் நடவடிக்கைகளுக்கும் தாயகமக்களின்

                                சம்மதம் பெறப்பட வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

                                கடந்த மே 22,23ம் நாட்கள் இடம்பெற்றிருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வின் போது, ‘சுயநிர்ணய உரிமையும், ஈடுசெய்நீதியிலான பிரிந்து செல்லலும்’ , ‘இந்தியப்

                                பெருங்கடலும் இலங்கைத்தீவில் பெருகிவரும் சீன ஆதிக்கமும்’, ‘தமிழ்நாட்டு ஆட்சி மாற்றமும் இந்தியாவை நோக்கிய செயற்பாடும்’ ஆகிய தொனிப்பொருட்களில் பல்வேறு அறிஞர்பெருமக்கள் பங்கெடுத்திருந்த கருத்தமர்வுகள் இடம்பெற்றிருந்தன.

                                இதில் ஈழத்தில் சீனாவின் காலப்பதிப்பு பற்றியும், சிறிலங்காவில் சீன துறைமுக பட்டிணம் பற்றியும் அமர்வில், தமிழர் தேசத்தின் இறையை என்பது நிலத்தில் மட்டுமல்ல நிலத்தை அண்டிய கடலிலும் உண்டென்பது உறுதியாக வலியுறுத்துப்பட்டிருந்தது.

                                தொடர்ந்து மேற்குறித்த நிலைப்பாட்டினை தனது அமர்வின் நிறைவுரையில் வலியுறுத்திய பிரதமர் வி.உருத்திரகுமாரன், தமிழ்மக்களின் சம்மத்தினை பெறாது எந்தவொரு அந்நிய

                                சக்திகளின் நடவடிக்கைகளுக்கும் எதிராக தாயக மக்களும், தாயக தமிழ்அரசியல் தலைவர்களும் போராட வேண்டும் என அறைகூவல் விடுத்துள்ளார்.

                                இதேவேளை இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் குறிப்பாக இலங்கைத்தீவில் அதிகரித்து வரும் சீனாவின் ஆதிக்கத்தை தடுப்பதற்கான மூலோபாயமாக இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்துடன் நமது உறவுகளை சுருக்கிக் கொள்ளாமல், ஆசிய-பசுபிக் பிராந்தியங்களுடன் உறவுகளை

                                வளர்த்துக் கொள்ள கவனம் செலுத்த வேண்டும் என்பதும் வலியுறுத்தப்பட்டது. குறிப்பாக இந்தியாவுடன் மட்டும் ஈழத்தமிழர்களின் செயற்பாடுகளை மட்டுப்படுத்தாமல் ஆசிய-பசுபிக்

                                பிராந்திய பெருங்கடல் நாடுகளுடனும் செயற்பாடுகளை விரிவுபடுத்தப்பட வேண்டும் என்ற அவசியமும் வலியுறுத்தப்பட்டது.

                                கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக நேரடி அமர்வினை நடத்த முடியாத நிலையில், இணையழியே இடம்பெற்றிருந்த இந்த அரசவை அமர்வில், ஈழத்தமிழர்களுக்கான அரசியல் தீர்வுக்கு பொதுவாக்கெடுப்பு பொறிமுறை குறித்த அதிக கவனம் செலுத்தப்பட்டிருந்தது.

                                அமைச்சுக்களின் அறிக்கை, அரசவை உறுப்பினர்களது கருத்துரைகள், மேற்சபை உறுப்பினர்களுடனான கூட்டமர்வு உட்பட பல்வேறு விடயங்களுடன் இடம்பெற்றிருந்த இருநாள்

                                அரசவை அமர்வினை துணை அரசவைத் தலைவர் ரஜனிதேவி செல்லத்துரை அவர்கள் நடாத்தியிருந்தார்.


                                https://youtu.be/ZL0zrrJIX30
                                தமிழர் தேசத்தின் இறைமை என்பது நிலத்தில் மட்டுமல்ல, நிலத்தை அண்டிய கடலிலும் உண்டென்ற நிலையில் எந்தவொரு அந்தியசக்திகளின் நடவடிக்கைகளுக்கும் தாயகமக்களின்

                                சம்மதம் பெறப்பட வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

                                கடந்த மே 22,23ம் நாட்கள் இடம்பெற்றிருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வின் போது, ‘சுயநிர்ணய உரிமையும், ஈடுசெய்நீதியிலான பிரிந்து செல்லலும்’ , ‘இந்தியப்

                                பெருங்கடலும் இலங்கைத்தீவில் பெருகிவரும் சீன ஆதிக்கமும்’, ‘தமிழ்நாட்டு ஆட்சி மாற்றமும் இந்தியாவை நோக்கிய செயற்பாடும்’ ஆகிய தொனிப்பொருட்களில் பல்வேறு அறிஞர்பெருமக்கள் பங்கெடுத்திருந்த கருத்தமர்வுகள் இடம்பெற்றிருந்தன.

                                இதில் ஈழத்தில் சீனாவின் கால்ப்பதிப்பு பற்றியும், சிறிலங்காவில் சீன துறைமுக பட்டிணம் பற்றியும் விவாதிக்கப்பட்ட இந்த அமர்வில், தமிழர் தேசத்தின் இறைமை என்பது நிலத்தில் மட்டுமல்ல நிலத்தை அண்டிய கடலிலும் உண்டென்பது உறுதியாக வலியுறுத்துப்பட்டிருந்தது.

                                தொடர்ந்து மேற்குறித்த நிலைப்பாட்டினை தனது அமர்வின் நிறைவுரையில் வலியுறுத்திய பிரதமர் வி.உருத்திரகுமாரன், தமிழ்மக்களின் சம்மதத்தினை பெறாது நிலத்தில் மட்டுமல்ல,

                                நிலத்தை அண்டிய கடலிலும் எந்தவொரு அந்நிய சக்திகளின் நடவடிக்கைகளுக்கும் எதிராக தாயக மக்களும், தாயக தமிழ்அரசியல் தலைவர்களும் போராட வேண்டும் என அறைகூவல் விடுத்துள்ளார்.

                                இதேவேளை இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் குறிப்பாக இலங்கைத்தீவில் அதிகரித்து வரும் சீனாவின் ஆதிக்கத்தை தடுப்பதற்கான மூலோபாயமாக இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்துடன் நமது உறவுகளை சுருக்கிக் கொள்ளாமல், ஆசிய-பசுபிக் பிராந்தியங்களுடன் உறவுகளை

                                வளர்த்துக் கொள்ள கவனம் செலுத்த வேண்டும் என்பதும் வலியுறுத்தப்பட்டது. குறிப்பாக இந்தியாவுடன் மட்டும் ஈழத்தமிழர்களின் செயற்பாடுகளை மட்டுப்படுத்தாமல் ஆசிய-பசுபிக்

                                பிராந்திய பெருங்கடல் நாடுகளுடனும் செயற்பாடுகளை விரிவுபடுத்தப்பட வேண்டும் என்ற அவசியமும் வலியுறுத்தப்பட்டது.

                                கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக நேரடி அமர்வினை நடத்த முடியாத நிலையில், இணையழியே இடம்பெற்றிருந்த இந்த அரசவை அமர்வில், ஈழத்தமிழர்களுக்கான அரசியல் தீர்வுக்கு பொதுவாக்கெடுப்பு பொறிமுறை குறித்த அதிக கவனம் செலுத்தப்பட்டிருந்தது.

                                அமைச்சுக்களின் அறிக்கை, அரசவை உறுப்பினர்களது கருத்துரைகள், மேற்சபை உறுப்பினர்களுடனான கூட்டமர்வு உட்பட பல்வேறு விடயங்களுடன் இடம்பெற்றிருந்த இருநாள்

                                அரசவை அமர்வினை துணை அரசவைத் தலைவர் ரஜனிதேவி செல்லத்துரை அவர்கள் நடாத்தியிருந்தார்.

                                Posted in Uncategorized

                                டயிலட் பேப்பருக்கு சண்டை போடும் மக்கள் – 2 க்கு மேல் ஒருவருக்கு இல்லை

                                டயிலட் பேப்பருக்கு சண்டை போடும் மக்கள் – 2 மேல் ஒருவருக்கு இல்லை

                                அவுஸ்ரேலியாவில் மீளவும் இரண்டாவது லொக்கடவுன் பிறப்பிக்க பட்டுள்ளது ,இவ்வேளை

                                கடைகளில் வழமை போன்று டொயிலட் பேப்பருக்கு தட்டு பாடு நிலவுகிறது ,இதனை அடுத்து ஒரு

                                நபருக்கு இரண்டு ரோல்களுக்கு மேல் இல்லை என்ற புதிய கட்டுப்பாடு விதிக்க பட்டுள்ளது

                                பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவு என்பதால் மக்கள் முண்டியடித்து பொருட்களை வாங்கி குவித்து வருகின்றமை குறிப்பிட தக்கது

                                  Posted in Uncategorized

                                  கரையோரப் பகுதிகளில் கூடும் மக்கள் கூட்டத்தை கலைக்கும் இராணுவம்

                                  கரையோரப் பகுதிகளில் கூடும் மக்கள் கூட்டத்தை கலைக்கும் இராணுவம்

                                  பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் அறிவுரைக்கமைய தீப்பரவலினால் ஏற்பட்ட பாதிப்புக்களை அகற்றும் செயற்பாடுகள் இராணுவ

                                  அவசர உதவிக் குழு குண்டு செயலிழக்கும் பிரிவு ட்ரோன் கண்காணிப்பு குழுவின் உதவியுடன் சுமார் 300 படையினரின் பங்கு பற்றலுடன் நீர்கொழும்பு தொடக்கம் பொருதொட்ட வரையான 06

                                  கிலோ மீற்றர் கடற்கரை பகுதியில் இன்று (27) காலை முன்னெடுக்கப்பட்டது. குறித்த பொருட்கள் கொழும்பு துரைமுகப்பகுதியில் தீபற்றி எரியும் சிப் எக்ஸபிரஸ் பேர்ல் கொள்கலன் கப்பலில் இருந்து கரையொதுங்கியவை.

                                  இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு 25 டொன் நைட்ரிக் அமிலத்தை ஏற்றிச் சென்ற சிங்கப்பூர் கொள்கலன் கப்பலில் 2021 மே 25 அன்று கொழும்பு துறைமுகத்திற்கு வட திசையில் வைத்து

                                  தீப்பரவல் ஏற்பட்டதுடன், குறித்த சரக்குக் கொள்கலன்களுக்குள் வெடிப்புக்கு உள்ளானமையால் தீப்பரவலை அணைப்பதற்கான மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன..

                                  இந்நிலையில் கப்பலின் பணியாளர்கள் கப்பலை கைவிட்டு காயங்களுடன் மீட்கப்பட்ட விரைவு நடவடிக்கை குழுக்கள் மற்றும் பாதுகாப்பு படையினரால் வெளியேற்றப்பட்டனர்.

                                  அதன்படி ஜெனரல் சவேந்திர சில்வா, மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் விக்கும் லியானகே அவர்களுக்கு சம்பவ இடத்திற்கு உடனடியாக படையினரை

                                  அனுப்புவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தினார். அத்தோடு பயணத் தடை காலத்தில் மக்களின் அச்சங்களை தனிப்பதற்கும் கரையோர பகுதிகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகளை எடுக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

                                  வடமேற்கு கரையோர பகுதியில் இரசாயன நச்சுத் தன்மை கொண்ட கப்பல் கொள்கலன்களில் இருந்து மிதக்கும் பொருட்களை பொதுமக்கள் சேகரிப்பதாக பொலிஸார்

                                  உறுதிப்படுத்தியிருந்ததோடு அப்பகுதியில் பாதுகாப்பை உறுதிப்படுத்த உதவுமாறு இராணுவ தலைமையகத்திடம் கோரப்பட்டிருந்த நிலையில் கப்பலின் எச்சங்களை சேகரிக்க கூடுவோரை

                                  கலைக்கும் பணிகளில் பொலிஸாராருக்கு உதவிகளை வழங்குவதற்காக படையினர் குறித்த பகுதியில் அமர்த்தப்பட்டனர்.

                                  அதன்படி ஜெனரல் சவேந்திர சில்வா, மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் விக்கும் லியானகே அவர்களுக்கு சம்பவ இடத்திற்கு உடனடியாக படையினரை

                                  அனுப்புவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தினார். அத்தோடு கொவிட்19 பயணத் தடை காலத்தில் மக்களின் நடமாட்டங்களை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸாரிற்கு

                                  ஒத்துழைப்பு வழங்குவதுடன் கரையோர பகுதிகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் அவசியமான நடவடிக்கைகளை எடுக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

                                  இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு 25 டொன் நைட்ரிக் அமிலத்தை ஏற்றிச் சென்ற சிங்கப்பூர் கொள்கலன் கப்பலில் 2021 மே 25 அன்று கொழும்பு துறைமுகத்திற்கு வட திசையில் வைத்து

                                  தீப்பரவல் ஏற்பட்டதுடன், குறித்த சரக்குக் கொள்கலன்களுக்குள் வெடிப்பு உள்ளானமையால் தீப்பரவலை அணைப்பதற்கான மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன..

                                  இந்நிலையில் கப்பல் பணியாளர்களில் இருவர் காயங்களுடனும் ஏனையவர்கள் பாதுகாப்பாகவும் மீட்பதற்கு விரைவு நடவடிக்கை குழுக்கள் மற்றும் பாதுகாப்பு படையினரால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

                                  மேற்படி தீப்பரவலை கட்டுப்படுத்தும் செயற்பாடு மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே மற்றும் 14 ஆவது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ

                                  செனரத் யாப்பா 141 பிரிகேட் தளபதி பிரிகேடியர் லால் விஜேதுங்க உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகளின் ஒருங்கிணைப்பின் கீழ் முன்னெடுக்கப்பட்டது.