Tag: jeffna
யாழ்ப்பாண மாவட்டத்தில் இரண்டாம் கட்ட கொவிட் 19 தடுப்பூசி
யாழ்ப்பாண மாவட்டத்தில் இரண்டாம் கட்ட கொவிட் 19 தடுப்பூசி
யாழ்ப்பாண மாவட்டத்தில் இரண்டாம் கட்ட கொவிட் 19 தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் நாளை ஆரம்பமாகவுள்ளது.
எதிர்வரும் பத்தாம் திகதி வரை தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும்.இதற்காக 50 ஆயிரம் சைனாபார்ம் தடுப்பூசி மருந்து கிடைத்திருப்பதாக வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:
இரண்டாவது கட்ட தடுப்பூசி ஏற்றும் பணிகள் யூலை மாதம் 5ம் திகதி முதல் 10ம் திகதி வரை இடம்பெறும். 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நிலையங்கள், திகதிகள் பற்றிய விபரங்கள் அந்தந்த பிரதேசங்களிற்குரிய சுகாதார வைத்திய அதிகாரிகளினால் அறியத்தரப்படும்.
தடுப்பூசி அல்லது வேறு மருந்துகள் தொடர்பில் ஒவ்வாமை உடையவர்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கு யாழ் போதனா வைத்தியசாலையிலும், தெல்லிப்பளை, பருத்தித்துறை, சாவகச்சேரி, ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலைகளிலும், எதிர்வரும் யூலை 10ஆம் திகதி சனிக்கிழமை காலை 8.00 மணி முதல் வழங்குவதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.
அவ்வாறான நிலைமைகள் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டு தடுப்பூசி வழங்கப்படாது திருப்பி அனுப்பபடுபவர்கள், தமது பிரதேசத்திற்குரிய சுகாதார வைத்திய அதிகாரியின் பரிந்துரைக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டு மேற்குறிப்பிட்ட வைத்தியசாலைகள் ஏதாவது ஒன்றில் தமக்குரிய தடுப்பூசியினை பாதுகாப்பாக பெற்றுக்கொள்ள முடியும்.
அவ்வாறே மேற்குறிப்பிடப்பட்ட வகையில் அடங்கும் கர்ப்பிணித்தாய்மார்களுக்கு அவர்களுடைய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் எதிர்வரும் யூலை 10ஆம் திகதி சனிக்கிழமை காலை 8.00 மணி முதல் வழங்குவதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன
தொழிற்சாலைப்பணியாளர்கள், முன்களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை அப்பிரதேசத்திற்குரிய சுகாதார வைத்திய அதிகாரியினால் அறிவிக்கப்படும்.
யாழ் மாவட்டத்தில் முதல் கட்டமாக கடந்த மே மாத இறுதியிலும் யூன் மாத ஆரம்பத்திலும் 49,602 பேருக்கு முதல் தடவை கொவிட் 19 தொற்று நோய்க்கெதிரான தடுப்பூசி வழங்கப்பட்டது. இவர்களுக்கான இரண்டாவது தடுப்பு மருந்தேற்றும் பணிகள் கடந்த யூன் 28 ம் திகதி முதல் யூலை 3 ம் திகதி வரை இடம்பெற்றன. இதில் 46,648 பேர் இரண்டாவது தடுப்பு மருந்தினை பெற்றுக்கொண்டனர்.
முதலாவது தடுப்பு மருந்தினை தடவை பெற்றுக் கொண்டவர்களில் சிலர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் இருப்பதனால் அப்பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் இவர்களுக்கான இரண்டாவது தடுப்பு மருந்து வழங்கப்படும்.
.
சுகாதார அமைச்சின் வழிகாட்டல்களுக்கு அமைவாக முதியோர் இல்லங்களில் உள்ளவர்களுக்கும், 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், 18 வயதிற்கு மேற்பட்ட ஆபத்து நிலை உடைய கர்ப்பிணிதாய்மார்கள், 35 வயதிற்கு மேற்பட்ட அனைத்து கர்ப்பிணிதாய்மார்களுக்கும், முன்களப்பணியாளர்களாக உள்ள கர்ப்பிணிதாய்மார்களுக்கும் இரண்டாவது கட்ட தடுப்பூசி வழங்கப்படும்.
தொழிற்சாலை பணியாளர்களுக்கும்,, ஏனைய முன்களப்பணியாளர்களுக்கும் தடுப்பு மருந்தினை முன்னுரிமை அடிப்படையில் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
யாழில் பெண்களை தாக்கி திருடர்கள் கொள்ளை – பீதியில் மக்கள்
யாழில் பெண்களை தாக்கி திருடர்கள் கொள்ளை – பீதியில் மக்கள்
இன்று அதிகாலை யாழ்ப்பாணம் சுன்னாகம், கந்தரோடை பகுதியில் திருடர்கள் வீடு புகுந்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்
இதில் மூன்று பெண்கள் உள்ளிட்ட நல்லவர் படுகாயமடைந்துள்ளனர்
மேற்படி சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் மூவர் கைது செய்ய பட்டுள்ளனர்
திருட்டில் ஈடுபட்டவர்கள் கத்திகள் ,வாள்கள்,மற்றும் முகங்களை மூடியவாறு திருட்டில் ஈடுபட்டதாக பாதிக்க பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்
யாழ்ப்பாணம் விரைந்த இராணுவ தளபதி – நடந்தது என்ன ..?
யாழ்ப்பாணம் விரைந்த இராணுவ தளபதி – நடந்தது என்ன ..?
இலங்கை இராணுவ தளபதி சவேந்திர சிலாவ் திடீரென யாழ்ப்பாண
கடல் படை கட்டளை தலைமையகத்திற்கு பயணம் செய்தார்
இவரது இந்த திடீர் பயணம் ஏன் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது
வடக்கு
கடற்படை கட்டளை தலைமையகம் சென்ற இவர் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டார்
கொரனோ நோயின் தாக்குதல் எதிர் காலத்தில் அதிகரிக்கலாம் என்ற
நிலையில் இவரது இந்த திடீர் பயணம் அமைந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது

யாழில் 39 வாலிபர்கள் இராணுவத்தால் அதிரடி கைது
யாழில் 39 வாலிபர்கள் இராணுவத்தால் அதிரடி கைது
யாழ்ப்பாணம் மருதனார்மடம், காங்கேசன்துறை பகுதியில் மைந்துள்ள கொட்டல் ஒன்றுக்குள் வாலிபர்கள் ஒன்றாக கூடுவதாக
கிடைக்க பெற்ற தகவலை அடுத்து அந்த விடுதியை சுற்றிவளைத்த போலீசார் அங்கிருந்த
39 வாலிபர்களை அதிரடியாக கைது செய்து சென்றுள்ளனர் .
இவர்கள் சந்தேகத்திற்கு இடமான முறையில் கூடுவதாக கிடைக்க பெற்ற தகவலை அடுத்தே மேற்படி கைது இடம்பெற்றுள்ளது .
இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது .

யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பதவி ஏற்பு
இலங்கை -யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பதவி ஏற்பு
யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக கபில கடுவத்த பதவியேற்றுள்ளார்.
யாழ்ப்பாணம் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் அவர் தனது கடமைகளை இன்று (03) காலை 7.05 மணிக்கு பொறுப்பேற்றார்.
மூத்த பொலிஸ் அத்தியட்சகராக நீர்கொழும்பில் கடமையாற்றிய அவர், அண்மையில் பிரதிப் பொலிஸ் மா அதிபராக பதவி உயர்த்தப்பட்டார்.
பதவி உயர்வுடன் முதன் முறையாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அவருக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் செம்மணியில் பிரம்மாண்ட நல்லூர் வளைவு
நல்லூர் ஆலயத்தின் வரலாற்றையும் கலை கலாசாரத்தையும் வெளிப்படுத்தும் வகையில்
யாழ்ப்பாணம் செம்மணியில் பிரம்மாண்டமான வகையில் நல்லூர் வளைவு அமைக்கும் பணிகள் துரிதகதியில் இடம்பெற்று வருகின்றன.
இந்த வளைவு அமைப்பதற்காக முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் 6 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து இருந்தார்.
அந்த நிதிக்கு அமையவே இந்த வளைவு அமைக்கும் வேலைத் திட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.






