Posted in Uncategorized

தாய்வான் எல்லையில் சீனா போர் விமானங்கள் – பதட்டம் அதிகரிப்பு

தாய்வான் எல்லையில் சீனா போர் விமானங்கள் – பதட்டம் அதிகரிப்பு

தாய்வான் நாட்டின் எல்லை மிக அருகில் சீனாவின் போர் விமானங்கள் பறப்பில் ஈடுபட்டுள்ளன ,இதனால் எல்லையோர தாய்வான் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்

தாய்வான் தமது நாட்டின் ஒரு பகுதி என சீனா தொடராக கூறி வருகின்ற நிலையில் இந்த விமானங்கள் பறப்பில் ஈடுபட்டுள்ளது ,நாடுகளுக்கு இடையில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ள்து

Posted in Uncategorized

இராணுவம் – போராளிகள் சண்டை 165 கிளர்ச்சி படைகள் மரணம்

இராணுவம் – போராளிகள் சண்டை 165 கிளர்ச்சி படைகள் மரணம்

ஆப்கானிஸ்தானில் அரச இராணுவத்திற்கும் கிளர்ச்சி படைகளிற்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களில் ,அரச இராணுவத்தினர் நாற்பது பேர் பலியாகியுள்ளனர்

மேலும் 165 தலிபான்கள் படுகொலை செய்ய பட்டுள்ளதாக அரச இராணுவம் அறிவித்துள்ளது

ஆனால் தாலிபான்களோ அரச இராணுவத்தில் இருநூறுக்கு மேற்பட்டவர்கள் பலி என தெரிவித்துள்ளனர்

குறித்த நாட்டை விட்டு அமெரிக்கா படைகள் விலகி வரும் நிலையில் அங்கு தலிபான்கள் தாக்குதல்கள் தீவிரம் பெற்று வருகின்றமை குறிப்பிட தக்கது

    Posted in Uncategorized

    கிளறப்படும் மகிந்த இன அழிப்பு – அமெரிக்காவிடம் கெஞ்சும் இலங்கை

    கிளறப்படும் மகிந்த இன அழிப்பு – அமெரிக்காவிடம் கெஞ்சும் இலங்கை

    இலங்கை அரசு இவ்வாறு சடைந்து வெளியிட்டுள்ளது ,அதாவது தங்கள் இன படுகொலை புரியவில்லை புலிகளே செய்தார்கள் ள் என்பது தான் அது

    காங்கிரஸின் பெண் உறுப்பினரான டெபொரா ரோஸ் (ஜனநாயகக் கட்சி / வட கரோலினா) அவர்களால் 2021 மே 18ஆந் திகதி கொண்டு வரப்பட்ட இலங்கை தொடர்பான எச். ஆர்.இ.எஸ். 413

    என்ற தீர்மானத்தை தொடர வேண்டாம் என அமெரிக்க சபையின் வெளிநாட்டு உறவுகள் குழுவிடம் வொஷிங்டனில் உள்ள இலங்கைத் தூதுவர் ரவிநாத ஆரியசிங்க அவர்களினூடாக இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது.

    அமெரிக்க சபையின் வெளிநாட்டு உறவுகள் குழுத் தலைவரான பிரதிநிதி கிரெகரி மீக்ஸ் (ஜனநாயகக் கட்சி / நியூயோர்க்) மற்றும் தரவரிசை உறுப்பினரான பிரதிநிதி மைக்கேல்

    மெக்கவுல் (குடியரசுக் கட்சி / டெக்சாஸ்) ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்ட தொடர்பாடலில், தவறான, பக்கச்சார்பான மற்றும் ஆதாரமற்ற வகையில் இலங்கை மீதான குற்றச்சாட்டுக்களைக்

    கொண்டுள்ளதும், தீர்மானத்தின் நோக்கம் குறித்து கடுமையான சந்தேகத்தை எழுப்புவதுமான இந்தத் தீர்மானத்தின் உள்ளடக்கங்களை இலங்கை கடுமையாக எதிர்க்கின்றது’ என இலங்கை அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

    தீர்மானத்தின் பாரபட்சமற்ற தன்மையை ஒவ்வொரு பந்தியிலும் விரிவாக பகுப்பாய்வு செய்யும் வகையில் இந்தத் தொடர்பாடல் அமைந்திருந்தது.

    1997ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவால் தடைசெய்யப்பட்ட மற்றும் 2008ஆம் ஆண்டு முதல் எஃப்.பி.ஐ யால் ‘உலகின் மிக ஆபத்தான மற்றும் கொடிய தீவிரவாதிகளின் மத்தியிலான’ ஒரு ‘சுதந்திர ஆயுத அமைப்பாக’ பெயரிடப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளை சமப்படுத்தும்

    வகையில் முன்மொழியப்பட்டுள்ள இந்தத் தீர்மானமானது, அதன் தோற்றம் மற்றும் நோக்கத்தை அம்பலப்படுத்துவதாக அவதானிக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானமானது, ‘பாரம்பரிய தமிழ் தாயகங்கள்’ பற்றிய குறிப்புக்களின் மூலமாக, பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கும் அதே வேளை,

    இலங்கையின் அரசுக்கான தன்மையையும் கூட கேள்விக்குள்ளாக்குகின்றது. இது நிறுவப்பட்ட வரலாற்று உண்மைகளையும், இன்றைய யதார்த்தங்களையும் தவறாக சித்தரிப்பதுடன்

    மட்டுமல்லாமல், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மற்றும் அதன் ஆதரவாளர்களின் இறுதி இலக்கான இலங்கையை சிதைக்கும் நோக்கத்தை ஆதரிப்பதற்கும் பங்களிப்புச் செய்கின்றது.

    தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் அதன் முன்னணி அமைப்புக்கள் மற்றும் பயங்கரவாதத்தை மகிமைப்படுத்துவதற்கான முயற்சிகள் பற்றிய அமெரிக்காவின் சொந்த பாதுகாப்புக் கவலைகள் பற்றிய தீர்மானத்தின் அறியாமையானது, தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் அமெரிக்காவிலும், உலகெங்கிலும் உள்ள அதன் பல முன்னணி அமைப்புக்களின் கூர்மையான கூறுகளுக்கு உத்வேகம் அளிக்கும்.

    ‘பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் உட்பட இலங்கையின் நிலையானதொரு பாதுகாப்புப் பங்காளியாக’ அமெரிக்கா விளங்குவதாகத் தெரிவித்துள்ள இலங்கை அரசாங்கம், ‘ஜனநாயக

    மற்றும் குடியரசுக் கட்சியின் நிர்வாகங்கள் முழுவதும், குறித்த ஐக்கிய அமெரிக்கக் கொள்கைக்கு மாறுபட்டதாக உள்ள இந்தத் தீர்மானம், அரசியல் இலக்குகளை அடைந்து கொள்வதற்காக ஆயுதமேந்திய செயல்களை சபை ஆதரிக்கின்றது என்ற தவறான முடிவுக்கு வழிவகுக்கும். இது

    ஜனநாயக விழுமியங்களில் வேரூன்றியிருக்கும் அமெரிக்க நிர்வாகத்தின் சொந்த வெளியுறவுக் கொள்கையின் அடித்தளத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் அதே வேளை, இலங்கைக்கும்

    அமெரிக்காவிற்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை எதிர்மறையாகப் பாதிக்கும்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

    தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்தைத் தோற்கடிப்பதற்காக கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக போராடிய இலங்கை அரசாங்கம், அனைத்து இலங்கையர்களையும் பாதுகாத்து, விடுவிப்பதற்காக இனம், மதம், மொழி, சாதி, பாலினம், அரசியல் கருத்து அல்லது பிறந்த இடம்

    ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் தனது பிரஜைகளைப் பாதுகாப்பதற்கான அரசியலமைப்பு சார்ந்த கடமைகளுடன் ஒத்துப்போகின்றது என வலியுறுத்தப்பட்டுள்ளது. மே 2009 இல் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டதிலிருந்து அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளையும்,

    மோதலில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உட்கட்டமைப்பை மீண்டும் கட்டியெழுப்பி, அபிவிருத்தி செய்யவும், தமிழீழ விடுதலைப் புலிகளினால் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தப்பட்ட உள்நாட்டில் இடம்பெயர்ந்த 300,000 பேரின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவும், மறுவாழ்வு

    அளிக்கப்பட்டு, சமூகத்தில் மீண்டும் ஒருங்கிணைக்கப்பட்ட 596 சிறுவர் படையினரைக் கொண்ட 12,000 க்கும் மேற்பட்ட முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் போராளிகள் உட்பட பலருக்கு வழங்கப்பட்ட வாழ்வாதார வாய்ப்புக்களையும் இந்தத் தொடர்பாடல் கோடிட்டுக் காட்டியது.

    மோதல் முடிவடைந்ததைத் தொடர்ந்து, வடக்கு மக்களின் உரிமைகளையும், ஜனநாயக சுதந்திரங்களையும் உறுதி செய்வதற்காக, 2013ஆம் ஆண்டில் வட மாகாண சபைத் தேர்தல் நடாத்தப்பட்டதாக நினைவு கூரப்பட்டுள்ளது. 2017 முதல், ஒருபோதும் நிறைவேற்றப்படாத

    மாகாண சபைத் தேர்தல்களை நடாத்துவதற்கு முன்னர் தேர்தல் சீர்திருத்தத்தைத் தேவைப்படுத்தும் ஒரு தீர்ப்பின் மூலம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்து சிறுபான்மைக் கட்சிகளும் தேர்தல்களை ஒத்திவைப்பதை ஆதரித்தன.

    ஏறக்குறைய 3 ஆண்டுகளாக, மனித உரிமைகள் சபை அல்லது மேற்கத்தேய நாடுகள், வட மாகாணம் உட்பட மாகாண சபைகளின் தேர்தல்கள் தாமதமடைவது குறித்த பிரச்சினையை எடுத்துக்கொள்ளவில்லை. எவ்வாறாயினும், தற்போதைய அரசாங்கம் இந்த விடயத்தில்

    பரிந்துரைகளை வழங்குவதற்காக பாராளுமன்றக் குழுவை நியமிப்பதற்கான முன்முயற்சியை எடுத்து வரும் ஒரு நேரத்தில், இது ஒரு முக்கிய பிரச்சினையாக முன்வைக்கப்பட்டுள்ளது.

    2015 ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் புலனாய்வு ஆணையாளர் அலுவலகத்தின் இலங்கை தொடர்பான அறிக்கை உட்பட இந்தத் தீர்மானத்தில் மேற்கோள் காட்டப்பட்ட இலங்கை பற்றிய அறிக்கைகள், ‘மேசையளவில் மதிப்பாய்வு செய்யப்பட்ட’ தகவல்கள், நிகழ்வுகள் பற்றிய

    வெறும் வெளிப்படை நிலையான விவரிப்பாகவே அமைவதுடன், இந்த ஆவணங்கள் ஆதாரங்களை வெளிப்படுத்தத் தவறிவிட்டன. மாறாக, ஏனையவற்றுக்கு இடையில், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு, ‘பரணகம ஆணைக்குழு’, ஐ.நா.

    மற்றும் யு.என்.டி.பி, யுனிசெப் மற்றும் ஐ.சி.ஆர்.சி. உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்களின் அறிக்கைகள், மற்றும் பிரித்தானிய பிரபுக்கள் சபையின் பிரபு நேஸ்பி வழங்கிய தகவல்கள் ஆகிய சரிபார்க்கப்பட்ட பல சான்றுகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. சர்வதேச சட்டவியலாளர்கள்

    உள்ளிட்ட நிபுணர்களின் கருத்துக்கள், மற்றும் யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் அனுப்பப்பி வைக்கப்பட்ட கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத்தின் இராணுவ

    இணைப்பாளரான கேர்னல் அன்டன் காஷ் மற்றும் ஐக்கிய அமெரிக்கத் தூதரகத்தின் பாதுகாப்பு இணைப்பாளரான லெப்டினன்ட் கேர்னல் லோரன்ஸ் ஸ்மித் ஆகியோரின் அறிக்கைகள் இந்த விவரிப்புக்கு சவால் விடுக்கின்றன.

    அக்டோபர் 2015 இல் ஐ.நா. தீர்மானம் 30/1 இற்கு இலங்கை இணை அனுசரணை வழங்கி, அரசியலமைப்பிற்கு முரணான வகையிலான வெளிநாட்டு நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளை உள்ளடக்கிய ஒரு பொறுப்புக்கூறல் பொறிமுறையை இலங்கை ஆரம்பிக்கும் என்ற

    உறுதிப்பாட்டை முந்தைய அரசாங்கம் வழங்கியிருந்த போதும், 5 ஆண்டுகளாக ஐ.நா. மற்றும் அமெரிக்கா மற்றும் இந்தத் தீர்மானத்தின் ஏனைய ஆதரவாளர்கள் அந்த வாக்குறுதிகளை முந்தைய அரசாங்கம் நிறைவேற்றுவதற்கான அழுத்தத்தை எந்த வகையிலும் கொடுக்கவில்லை.

    எழுப்பப்பட்டுள்ள விடயங்களை நிவர்த்தி செய்வதற்காக தற்போதைய அரசாங்கம் நம்பகமான, வெளிப்படையான உள்நாட்டு செயன்முறையை வழங்கும் வகையில், ஜனவரி 2021 இல் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை நிறுவி, அதன் மூலம் 2021 மார்ச் 04ஆந் திகதி ‘விசாரணை

    செய்வதற்காக எழுதப்பட்ட பிரதிநிதித்துவங்கள் அல்லது தகவல்கள் அல்லது மேற்கூறியவற்றுடன் தொடர்புடைய வேறு எந்தவொரு பொருளையும் சமர்ப்பிப்பதற்கு எந்தவொரு நபர், நபர்கள்

    அல்லது அமைப்புக்களும் ஆணைக்குழுவிற்கு வருகை தருவதற்காக அழைப்பு விடுக்கப்பட் டுள்ள’ இந்த நேரத்தில் ஒரு ‘சர்வதேசப் பொறிமுறையை’ கோருவது மிகவும் மோசமானது. ஆணைக்குழு

    ஏப்ரல் முதல் விசாரணைகளை நடாத்தி வருவதுடன், சாட்சிகளிடமிருந்து சாட்சியங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது.

    வெளிநாட்டு அமைச்சு
    கொழும்பு

      Posted in உளவு செய்திகள்

      இலங்கையில் உருவாகும் இரு ஆயுத குழு – வெடிக்க தயாராகும் குண்டுகள்

      இலங்கையில் உருவாகும் இரு ஆயுத குழு – வெடிக்க தயாராகும் குண்டுகள்

      இலங்கையில் தமிழர் தேசிய விடுதலைக்காக போராடி வந்த விடுதலை புலிகள் அந்த மண்ணில் இருந்து முற்று முழுதாக அழிக்க பட்டனர் ,அதன் பின்னர் தமிழர்கள் சிங்கள அரச பயங்கரவாதத்தின் காலடியில் சிக்கி நசுக்க பட்டு வருகின்றனர்

      புலிகள் ஆளும் பொழுது சிங்கள அரசுடன் இணைந்து அந்த போராட்டத்தை காட்டி கொடுத்து வந்த முஸ்லீம்கள் தற்பொழுது ஆளும் அரசுகளினாலேயே வேட்டையாட படுகின்றனர்

      இவ்வாறன கூட்டு நகர்வு நடந்தேறிய வண்ணம் இருக்க ,இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் அனைத்து நகர்வுகளை பவுத்த பேரினவாதம் எடுத்து வருகிறது ,அதற்கு தமிழர் பகுதிகள் உள்ளிட்ட முக்கிய கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் சீனாவுக்கு சிங்கள அரசு வழங்கியுள்ளது

      வன்னி புலிகள்

      இதனை அடுத்து இரு மாகாணங்களாக வடக்கு ,கிழக்கை சிங்கள அரசு பிரித்துள்ளது ,சிங்களம் எதனை செய்ததோ அதை வைத்து அதே அரசுக்கு ஆட்டத்தை கற்பிக்க மத்திய பிராந்திய

      உளவுத்துறை ஒன்று கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது ,அதற்கு வன்னியில் தமிழர்களை மைய படுத்தி புதிய புலிகள் என்ற அணியும் ,அதே போல கிழக்கில் முஸ்லீம்களை மைய படுத்தி முஸ்லீம் ஆயுத கு ஒன்றை உருவாக்க முயற்சிகள் இடம்பெறுகிறது

      சிக்கும் இலங்கை

      இது இரண்டு வகையான உள்நோக்கம் கொண்ட நகர்வாக அமைய பெறுகிறது ,அதாவது ,இவ்விதம் இரு குழுக்களும் இரு வேறு திசையில் தாக்குதல் நடத்துவர் ,அதில் ஒன்று முஸ்லீம்கள் ,இப்பொழுது ,சிங்கள அரசு முஸ்லீம் ,தமிழர்கள் இருவரையும் பந்தாட வேண்டிய நிலை

      முஸ்லீம்கள் ,சிங்களவர்கள் வசிக்கும் அனைத்து பகுதியிலும் வசிக்கின்றனர் ,முஸ்லீம் களை யெடுப்பை சிங்கள அரசு மேற்கொள்ள முனைந்தால் நாடு சுடுகாடாகும் என்பதற்கு இவை உதாரணமாக உள்ளது

      இந்திய நுழைவு

      இவ்விதமான தாக்குதல்கள் நடக்க பின்புலத்தில் இந்திய தனது பயிற்றுவிக்க பட்ட தமிழர்கள் ,அல்லது தமிழ் பேசும் இராணுவத்தை
      முழுமையாக வன்னிக்குள் இறக்கி, அதனை தமது கட்டுப் பாட்டுக்குள் வைத்திருக்க முனைகிறது

      ராஜன் குழு

      இந்த விடயங்களின் பின்னால் புலிகளினால் தேட பட்டு வந்த பரந்தன் ராஜன் என்பவர் செயல்பட்டு வருகிறார் ,இவர் இந்தியா இலங்கை ஒப்பந்தத்தை நடைமுறை படுத்தி இலங்கைக்குள் ஒன்றிணைந்த ஒரு தீர்வை பெற்று விடலாம் ,என்பதும் ,தமது தலைமையில் ஒரு அதிகார ஆட்சியை நிறுவிட முனைகிறார் .

      தமிழர்களினாலே விரோதியாக பார்க்க படும் பரந்தன் ராஜன் இந்த கனவு பலிக்குமா ..?,அடித்தட்டு தமிழ் மக்கள் கருத்துக்கள் அப்டி அவை செல்லுபடியற்ற ஒன்றாக மற்றம் பெறும்

      இந்தியா மேற்கொள்ள போகும் இந்த ஆயுத போராளிகள் உருவாக்கம் ,இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு தேவையான ஒன்றாக உள்ளது

      இலங்கை அரசை அடக்க தமிழர் இனஅழிப்பை கையில் எடுத்தாலேஇந்தியாவுக்கு போதுமானது ,ஆனால் அதனை செய்து கொள்ள மறுத்து ,ஆயுத குழுவை உருவாக்க இந்திய உளவுத்துறை முயல்வது சாத்தியமான ஒன்றா ..?

      அல்லது அமெரிக்கா தலைமையில் இலங்கையில் புதிய ஆயுத குழு ஒன்று ஆரம்பிக்க படும் நிலை ஏற்பட போகிறதா ..?

      இரண்டில் ஒன்று இலங்கையில் நடக்க போகிறது ,இதற்கு ஆளும் சிங்கள அரசுகள் வழியமைத்து கொடுக்கின்றன ,சிங்கள பவுத்த பேரினவாதிகளின் சிந்தனையில் மாற்றங்கள் ஏற்படவில்லை ,
      அது பெரும் பேரழிவை ஏற்படுத்த போகிறது என்பதை இந்த விடயங்கள் கோடிட்டு காட்டுகின்றன

      வரும் காலங்கள் இந்த ,வலி தோய்ந்த வரலாற்று சிறப்பு மிகு ,திருப்ப விடயத்தினை பகிரும் என அடித்து கூறலாம் –

      • வன்னி மைந்தன்
      Posted in உளவு செய்திகள்

      வடகொரியாவாக உருவெடுக்கும் ஈரான் – தாக்கி அழிக்க துடிக்கும் இஸ்ரேல்

      வடகொரியாவாக உருவெடுக்கும் ஈரான் – தாக்கி அழிக்க துடிக்கும் இஸ்ரேல்

      ஈரானின் பரம எதிரி நாடாக இஸ்ரேல் விளங்கி வருகிறது ,ஈரான் மீது தொடர் வலிந்து

      தாக்குதல்களை இஸ்ரேல் தொடுத்த வண்ணம் உள்ளது ,இஸ்ரேலின் நரித் தந்திரத்தை அறிந்த ஈரான் தனது நீண்ட இலக்கு நோக்கி நகர்ந்து வருகிறது

      அணுகுண்டு சோதனை

      இஸ்ரேல்,அமெரிக்காவை அடக்க வேண்டும் எனின் அது அணு குண்டு தயாரிப்பின் மூலமே சாத்தியம் என கருதிய ஈரான் அந்த அணுகுண்டு சோதனையை நடத்தும் திட்டம் நோக்கி நகர்ந்து வருகிறது

      இவ்வாறு அணு சக்தி தொழில் நுட்பத்தில் ஈரான் வளர்ந்து விட்டால் அது தொடராக வடகொரியா போல் மாறிவிடும் பேராபத்து உள்ளது என இஸ்ரேல் உளவுத்துறை தெரிவித்து வருகிறது ,

      அதற்கு முன்னர் அதனை வேரோடு அழித்துவிட வேண்டும் என இஸ்ரேல் துடிக்கிறது ,அதனை கருத்தில் வைத்தே தொடர் தாக்குதல்களை ஈரான் உள்ளே நடத்திய வண்ணம் உள்ளது

      எனினும் ஈரான் வெளியுலகிற்கு தெரியாத உருமறைப்பு செய்ய பட்ட பகுதி ஒன்றில் அணுசக்தி செறிவை திறம்பட செய்து வருவதான தகவல் ஒன்றும் கசிந்துள்ளது

      அமெரிக்கா விமானம் சிறை பிடிப்பு

      அமெரிக்காவின் மூன்று முதல் தர உளவு விமானங்களை உயிரோடு கைப்பற்றி அதன் தொழில் நுட்பத்திற்கு மேலான உளவு விமானத்தை தயாரித்து அசத்தியதன் முதல் தற்போது ஏவுகணை முதலான விமான தயாரிப்புக்கள் வரை ஈரான் அதி திறனுடன் வளர்ச்சி பெற்றுள்ளது

      தற்போது 14 ஆயிரம் மைல் சென்று தாக்கும் ஏவுகணை தயரிப்பில் கவனம் செலுத்தி வருகிறது .,ஈராக்கில் அமெரிக்கா இராணுவ தளம் மீது வீழ்ந்து வெடித்த ஏவுகணை தாக்குதலுடன்

      ,இஸ்ரேல்,அமெரிக்கா வாலை சுருட்டி கொண்டன ,வலிமையான இராணுவத்துடன் இதுவரை அமெரிக்கா தாக்குதல்களை நேரடியாக தொடுக்கவில்லை ,அவ்வாறு எனின் அவர்கள் பார்வையில் ஈரான் வலிமையான நாடக உள்ளது

      இஸ்ரேல் தொடுக்கும் தொடர் வலிந்து தாக்குதல்கள் மூலம் ஈரான் இஸ்ரேல் மீது போரை தொடுக்கலாம் என எதிர்பார்க்க படுகிறது ,தனது ஆதரவு படைகளை இஸ்ரேலை சுற்றி

      அமைத்துள்ள ஈரான் அவர்கள் மூலம் நேரடி தாக்குதல் ஒன்றை நடந்திடும் முற்றுகை வலயமமைப்பை பின்னியுள்ளது

      இதன் ஆபத்தை உணர்ந்தே சொலைமானி கொலை செய்யப்பட்டார் ,அவ்விதமான பட்டியலில் இப்பொழுது மூன்று ஈரான் இராணுவ உயர் அதிகாரிகள் இடம்பிடித்துள்ளனர்

      முக்கிய மூளைகளை கொலை செய்வதன் மூலம் அந்த போரை முடக்கிவிடலாம் என்பது இஸ்ரேல் மொசாட்டின் கோட்பாட்டு கொள்கையாக உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது ,இவாறான இஸ்ரேல் கொடிய இலக்கில் இருந்து

      ஈரான் வென்று நிமிருமா ..? இஸ்ரேல் உலக வரைபடத்தில் இருந்து காணாமல் போகுமா ..? என்பதே இன்றைய கேள்வியாக உள்ளது

      மூன்றாம் உலகம் போரும் இங்கிருந்து வெடிக்கலாம் என்பது எதிர்பார்ப்பு .

      -வன்னி மைந்தன் –

      Posted in முக்கிய செய்திகள்

      இஸ்ரேலினால் குறிவைக்க பட்டுள்ள – முக்கிய ஈரான் தளபதி

      இஸ்ரேலினால் குறிவைக்க பட்டுளள – முக்கிய ஈரான் தளபதி

      ஈரானின் இரண்டாவது நிலை தலைவராகவும் ,தளபதியாக வும் போற்ற பட்டு வந்த சுலைமானியை

      அமெரிக்கா படைகள் படுகொலை புரிந்தது ,இவரது இழப்பு ஈரானுக்கு பெரும் இடியாக அமைந்துள்ள நிலையில்

      தற்பொழுது ஈரானின் மூன்றாம் நிலை தளபதியாகவும் ,சுலைமானிக்கு அடுத்த இடத்தில் இடம் பிடித்து நிற்கும் முக்கிய சகாவான Abdul Reza Shahlai, தற்போது இஸ்ரேல் மொசாட் குறியில் இருந்து தப்பித்துள்ளார் .

      சுலைமானியை போட்டு தள்ள முன்னர் இவரே yeman பகுதியில் நிறுவ பட்டுள்ள ஈரானிய படைகளை கட்டளை

      தளபதியாகவும் ,தாக்குதல் தளபதியாகவும் விளங்கி வருகிறார் .

      அவர்கள் வைத்த குறி தவறியதன் பின்னரே சுலைமானி படுகொலை செய்யப் பட்டுள்ளார் .

      இஸ்ரேலினால் குறிவைக்க பட்டுள்ள – முக்கிய ஈரான் தளபதி


      ஈரானுக்கு வெளியில் தமது படை முகாமை நிறுவி அதன் ஊடாக இஸ்ரேல் மீதும் அமெரிக்கா மீதும் ஈரான் தாக்குதலை நடத்தி வந்தது .

      அவ்விதம் சிரியா,ஏமான் ,பாலஸ்தீனம் ,ஈராக் போன்ற நாடுகளில் தமது படைகள் ,மற்றும் ஆதரவு படைகள் மூலாம் தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளது .

      சிரியாவில் ,கடல் படை ,விமான படை ,தரைப்படை என்பனவற்றை ஈரான் அமைத்து அங்கிருந்து மிக பெரும்

      தாக்குதலை தொடுக்க சுலைமானி முகாம் அமைத்து தாக்குதல் நகர்வுகளை தீவிர படுத்தி இருந்தார் .

      இஸ்ரேல் வெளியாக தாக்குதல் அமைப்பு போலவே ,அதே பாணியில் சுலைமானியும் தமது ஈரானிய படைகளை ஈரானுக்கு வெளியில் நிறுவி தாக்குதலை தீவிர படுத்தி இருந்தார் .

      இவ்வாறான பெரும் போர் முற்றுக்குகையில் இஸ்ரேல் சிக்கி தவித்த வேளையே சுலைமானி வெற்றிகரமாக அமெரிக்காவினால் படுகொலை செய்ய பட்ட நிலையில்

      தற்பொழுது இந்த தளபதி இஸ்ரேல் ,அமெரிக்கா முக்கிய பட்டியலில் இணைக்க ப்பட்டுளளார் .

      இஸ்ரேலினால் குறிவைக்க பட்டுள்ள – முக்கிய ஈரான் தளபதி

      ஈரானின் மிக பெரும் முக்கிய முதுகெலும்பாக விளங்க கூடிய ஐந்து தளபதிகளை தொடராக படுகொலை செய்யும் நோக்கில் இஸ்ரல் ஈடுபட்டுள்ளது

      ஒரு நாட்டின் முக்கிய மூளைகளை படு கொலை செய்வதன் ஊடாக அந்த நாட்டை இலகுவாக தமது கட்டுப்பாட்டுக்குள் அடிமை படுத்தி வந்து விடலாம் என இஸ்ரேல் எண்ணுகிறது .

      ஈராக்கில் சதாமின் ஆட்சியை கவிழ்பதற்கு முன்னராக அங்கிருந்து பத்து மிக பெரும் இராணுவ தளபதிளை மிரட்டி அமெரிக்கா அடிபணிய வைத்தே போரில் வெற்றி கொண்டது .

      அதுபோலவே இப்பொழுது ஈரான் மீது தனது குறியை வைக்கிறது .


      இவ்வாறன அமெரிக்கா ,இஸ்ரேல் கூட்டு சதிகளில் இருந்து ஈரான் தப்புமா என்பதே இன்றைய கேள்வியாக உள்ளது .

      அதாவது எமது விளங்கும் முறையில் எமது பாணியில் கூறிட போனால் இவர் இரண்டாவது பால்றாஜ் போன்ற தளபதியாகும் .

      முதலாவது பால்றாஜ் ஆக சுலைமானி விளங்கினார் ,இவர் இரண்டாவது பால்றாஜ் ,அதனால் தான் இஸ்ரேல் இவரை

      இருமுறை பாடுகொலை புரிய முனைந்து அதில் இருந்து தப்பித்து கொண்டார் ,

      இவருக்கு என்றே சிறப்பு புலானய்வு கட்டமைப்பை இவர் நிறுவியுள்ளார் ,அது தவிர ஈரானின் வெளியாக புலனாய்வு அணியும் செயல் படுகிறதாம் read more

      களமுனை தாக்குதல் தீவிரம் பெற்றுள்ளது என்பதை இந்த விடயங்கள் சுட்டி காட்டுகின்றன – வன்னி மைந்தன்

      இஸ்ரேலினால் குறிவைக்க பட்டுள்ள
      Posted in முக்கிய செய்திகள்

      ஈராக்கில் வெடித்தது போர் -59 பேர் காயம்

      ஈராக்கில் வெடித்தது போர் -59 பேர் காயம்

      ஈராக்கில் வைத்து ஈரானிய புரட்சி படை தளபதி சுலைமானி அமெரிக்கா அரசினால் பாடுகொலை செய்ய பட்ட நிலையில் அமெரிக்கா ஈரானுக்கு இடையில் தொடர் முறுகல் இடம்பெற வண்ணம் உள்ளது .

      இந்த பதட்டம் உக்கிரமடைந்துள்ள நிலையில் இன்று ஞாயிறு ஈராக்கின் தெற்கு பகுதியில் ஐந்து மாகாணங்களில் இடப்பெற்ற அரசுக்கு எதிரான போராடடத்தில் 59 பொதுமக்க படுகாயமடைந்தனர் .

      மேலும் 48 பாதுகாப்பபு படையினர் காயமடைந்தனர் .
      பல கட்டடங்கள் ,சொத்துக்கள் என்பன எரியூட்ட பட்டன.

      மேலும் தொடர்ந்து நாடு எங்கிலும் போராட்டம் வெடித்துள்ளது ,ஈரான் ஆதரவு அமைப்புகளினால் இந்த போராட்டம் இடம்பெறுவதாக ஈராக்கிய தகவல்கள் தெரிவிக்கின்றன .

      அதே போல இன்று ஈரானின் ஆதரவுடன் இயங்கும் முக்கிய துணைப்படை குழு தலைவர் மர்ம நபர்களினால் சுட்டு படுகொலை செய்ய பட்டுளளார் .

      ஈராக்கில் வெடித்தது போர் -59 பேர் காயம்

      ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவு படைகள் முக்கிய நபர்களை கொலை செய்யும் பணியை இஸ்ரேல் மொஸாட் ,மற்றும் அமெரிக்கா ஆரம்பித்துள்ள நிலையில் இந்த போராட்டம்

      இடம்பெறுவது ஈராக்கிய அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது .

      இந்த ஆளும் ஆட்சியை கவிழ்க்கும் நோக்கில் அமெரிக்கா ,இஸ்ரேல் கூட்டாக இணைந்து செயல் படுகின்றன .

      அமெரிக்கா படைகள் நாட்டை விட்டு முற்றாக வெளியேற வேண்டும் என பாரளுமன்றில் சட்டம் நிறைவேற்ற பட்ட நிலையில் அமெரிக்கா இருப்பு கேள்வி குறியாகியுள்ளது

      போராடட்ம மேலும் முற்றி வெடித்தால் ஆளும் அரசாட்சி கவிழ்க்க படும் அபாயம் எழுந்துள்ளது .


      மத்திய கிழக்கு ஈரான் படை தளபதி படு கொலையின் பின்னர் முற்றாக செயல் முடங்கி உள்ள நிலையை இது எடுத்துரைக்கிறது .read more

      ஈராக்கில் வெடித்தது போர் -59 பேர் காயம்

      மேலும் ஈரான் மத்திய கிழக்கு வான் பரப்புக்குள் மக்கள் பயணிகள் விமானங்கள் பறப்பதற்கு சில நாடுகள் தடை விதித்துள்ளன ,

      இதன் தாக்கம் மேலும் அங்கு ஏவுகணை தாக்குதல் எவ்வேளையும் இடம்பெறலாம் எனவும் அதன் அச்சத்தின் வெளிப்பாடே இது என கூற படுகிறது

      ஈராக்கில் வெடித்தது போர்
      Posted in உளவு செய்திகள்

      எம்மை தாக்கினால் -ஈரான் சுக்கு நூறாகும் -இஸ்ரேல் மிரட்டல்

      தாக்கினால் -ஈரான் சுக்கு நூறாகும் -இஸ்ரேல் மிரட்டல் ஈரான் இராணுவ தளபதி ஈராக்கில் வைத்து அமெரிக்காவால் படுகொலை செய்யப் பட்டார் ,


      அதன் பின்னர் ஈரான் அமெரிக்காவிற்கு இடையில் பெரும் முறுகல் ஏற்பட்டுள்ளன .

      இதனை அடுத்து தமது இராணுவ தளபதி சுலைமானி படுகொலைக்கு தகுந்த பதிலடியை அவர் நிர்வகித்த புரட்சி படைகள் நடத்தினர் .

      ஈராக்கில் அமைந்துள்ள இரண்டு அமெரிக்காவின் பிரதான பாதுகாப்பு பலம் பொருந்திய , பலமான இராணுவ

      தளங்களை தெரிவு செய்து அங்கு தமது பழி தீர்க்கும் வெறியை ஈரான் நடத்தியுள்ளது .

      தங்கள் நடத்திய 22 ஏவுகணை தாக்குதலில் சுமார் 80 அமெரிக்கா படைகள் பலியாகியும் 200 பேர்வரை

      படுகாயமடைந்துள்ளதாக ஈரான் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன .

      ஆனால் இதுவரை ஈரான் கூறிய இந்த கூட்டல் சேத கணக்கை அமெரிக்கா தலைமையோ அன்றி அமெரிக்கா இராணுவத்தின் இராணுவ தலைமையகமான

      பென்டோகேனோ தெரிவிக்கவில்லை .
      அமெரிக்கா மீது தமது பழிவாங்கும் தாக்குதலை ஈரான் நடத்திய நிலையில் ,அடுத்து இஸ்ரேல் இரண்டாவது

      எம்மை தாக்கினால் -ஈரான் சுக்கு நூறாகும் -இஸ்ரேல் மிரட்டல்

      இலக்காக உள்ளதாகவும் ,அதன் மீதும் ஈரான் திடீர் தாக்குதலை நடத்தும் என இஸ்ரேல் எதிர் பார்க்கிறது .

      நாம் அமெரிக்கா போல் அல்ல எம் மீது குண்டுகள் வீழ்ந்தால்,எம் மக்களோ, படையினரோ பாதிக்க பட்டால்

      ஈரான் சுக்கு நூறாகும் என இஸ்ரேல் நாட்டின் அதிபர் நெத்தன்யாகு சற்று முன்னர் அறிவித்துள்ளார் .

      தாம் அமெரிக்காவின் முடிவுகளையும் ,நகர்வுகளையும் கவனித்த வண்ணம் உள்ளோம், அதன் பின்னர் எமது

      நகர்வுகள் நிகழ்வுக்கு ஏற்ப நகர்த்த படும் என அவர் குறிப்பிட்டுள்ளார் .

      தாமோ போரை விரும்பவில்லை ,எமது பயங்கரவாதிகளை தகக்கினோம் என ஈரான் அறிவித்துள்ளது ,அமெரிக்காவை இப்பொழுது ஈரான் பயங்கரவாதிகள் என்றே அழைக்கிறது .

      உலக சண்டியருக்கு ஈரான் கொடுத்துள்ள இந்த அடி உறைப்பான ஒன்று தான் ,ஆனால் அமெரிக்கா அதிபரின்

      காலில் இப்பொழுது பந்து உள்ளது ,அவரே புகுந்து விளையாட வேண்டும் .

      போரா ..?சமாதானமா ..? இதுவரை அவரிடம் இருந்து பதில்கள் வரவில்லை ,


      ஈராக்கில் உள்ள பிற நாட்டு படைகள் யுத்தம் மூண்டால் அங்கிருந்து முடிச்சுக்களை கட்ட தயராகி வருகின்றன .

      இவ்வாறு அமெரிக்காவோ ,இஸ்ரேலோ பதிலடியை நடத்தினால் ஈராக்கில் இருந்து அமெரிக்கா நேச நாட்டு

      எம்மை தாக்கினால் -ஈரான் சுக்கு நூறாகும் -இஸ்ரேல் மிரட்டல்

      படைகள் விலக நேரிடும் ,அமெரிக்கா தனித்து விடப்படும் என்றே நோக்க படுகிறது .

      நிமிடங்கள் ஒவ்வொன்றும் பரபரப்பை கிளப்புகின்றன ,ஏவுகணை போர் நின்றாலும் மத்திய கிழக்கு கடல்வழியாக

      பயணிப்பதற்கு எண்ணெய் நிறுவன கப்பல்கள் அஞ்சுகின்றன .

      அதனால் அந்த கப்பல்களின் வாடகை அதிகரித்துள்ளதால் ,உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிக்க படுகிறது

      மேலும் சவூதி ,இஸ்ரேல்,ஈரானின் தாக்குதல் வெறிக்குள் சிக்கி உள்ளன .அடி வாங்கிய அமெரிக்கா தனது பலத்தை

      காண்பிக்காது மவுனமாகுமா ..? இல்லை பதிலடியை அள்ளி வழங்குமா ..?

      இந்த கேள்வியை இப்பொழுது எங்கும் வெடித்து பறக்கிறது ,இஸ்ரேல்,பிரிட்டன் ,அமெரிக்கா மூன்று நாடுகளும் கூட்டாக பெரும் தாக்குதல் திட்டத்தை வகுத்துள்ளன ,அவை

      நிறைவேற்ற பட்டால் ,அவர்க்ளின் ஒன்றிணைந்த தாக்குதலை ஈரான் எதிர் கொள்ளுமா ..?

      அவ்வாறான பலம் அதற்கு உள்ளதா …? ஏன் எனின் சிரியாவில் ஈரானின் நிலைகள் மீது இஸ்ரேல் துல்லியமாக

      தாக்கியது ,ஈரானின் விமானத்தை கூட சுட்டு வீழ்த்தியது ,இவ்வாறான கசப்பான அனுபவங்கள் அங்கு இடம் பெற்றுள்ளது .

      இதனை இஸ்ரேல் ஒரு பரீட்ச்சார்த்த நடவடிக்கையாக அதனை செய்திருந்தது .

      அதில் கற்று கொண்ட பாடங்களால் ,ஈரானின் தாக்குத்தல் எல்லை எதுவரை செல்லும் என்பதை அறிந்து

      வைத்துள்ள நிலையில் இஸ்ரேல் அதிபர் கூறிய கருத்து ஈரான் சுக்கு நூறாகும் என்பது சாலம் பொருந்தும் போல் உள்ளது .

      எனினும் அதனையும் தாண்டி இதுவரை ஈரான் வெளியில் அறியமுடியாத முக்கிய ஆயுதங்களை வைத்திருப்பதாகவும்

      அதனை இறுதியில் அது பாவிக்க முனையலாம் எனவும் அது பெரும் அழிவை அந்த பகுதியில் ஏற்படுத்தி விடும் என எதிர் பார்க்க படுகிறது .

      இஸ்ரேல் அதிபரின் , சுக்கு நூறு என்பது, ஈரான் அணு உலைகள் மீது தாக்குதல் நடத்தி அந்த நாட்டை சரணடைய வைக்கும் உள்நோக்கம் கொண்டதாகவே பார்க்க முடியும்

      பலமுறை இஸ்ரேல் ,ஈரானின் அணு உலைகளை தாக்க , முனைந்து தோல்வியில் முடிந்தது ,இப்பொழுது அதனை செய்து முடிக்க இஸ்ரேல்,அமெரிக்கா முயல கூடும் .

      அதற்கான கள முனையை திட்டமிட்டே அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் உருவாக்கி இருந்தார் .
      அப்படியானால் அவர்கள் நிகழ்ச்சி நிரலின் கீழ் ஈரான் சிக்கியுள்ளதா ..?

      நமது கணிப்பு சரி என்றால் இஸ்ரேல் ,அமெரிக்கா கூட்டாக ஈரானை தாக்கும் நேரம் நெருங்கி விட்டது என்றே தெரிகிறது .

      • வன்னி மைந்தன் –
      Posted in உளவு செய்திகள்

      ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தும்- சிக்னலை வெளியிட்ட டிரம்ப்

      அமெரிக்கா தாக்குதல் நடத்தும்- சிக்னலை வெளியிட்ட டிரம்ப் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் எதிரொலி -ஈராக்கில் உள்ள இரண்டு அமெரிக்காவின் உயர் விமான தளங்கள் மீது ஈரான் திடீர் ஏவுகணை தாக்குதலை நடத்தியது, .


      இந்த ஏவுகணை தாக்குதலில் சுமார் 80 அமெரிக்கா படைகள் பலியாகினர் ,மேலும் நூறுக்கு மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்

      மேற்படி ஈரான் தாக்குதல் தொடர்பாக டுவிட்டரில்

      பதிவிட்ட அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் எல்லாம் நல்லதுக்கே ,ஈரான்

      இரு விமான தளங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது ,அங்கு சேதங்கள் ,மற்றும் இராணுவம் பாதிக்க பட்டுள்ளது .
      இது அதிக தூரம் சென்று விட்டது ,அது நல்லது

      எங்களிடம் மிக பலமான இராணுவ உபகரணங்கள் ,போ ராயுதங்கள் உள்ளன .நாங்கள் உலகத்தில் மிக பலமான இராணுவம்

      நான் காலை எனது அறிக்கையை

      வெளியிடுவேன் என அமெரிக்கா டிரம்ப் தெரிவித்துள்ளார் .

      ஈரான் மீது -அமெரிக்கா தாக்குதல் நடத்தும்- சிக்கனலை வெளியிட்ட டிரம்ப்

      அதாவது இவரது இந்த டுவிட் செய்தியில் இருந்து நாம் பதிலடி தாக்குதலை மிக அகோரமாக நடத்துவோம்

      ,அதன் சேதங்கள் பலமாக இருக்கும் என்பதாக இவரது இராய தந்திர மறை பதில் இதற்குள் ஒளிந்துள்ளது .

      அடுத்து அமெரிக்கா தாக்குதல் நடத்த வேண்டிய நிலையிலும் ,தமது ஈரானிய இராணுவ தளபதி ,ஈராக்கிய இராணுவ தளபதி

      ,படுகொலைகளை நியாய படுத்தி வந்த அமெரிக்காவிற்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது .

      அமெரிக்கா பயங்கரவாதிகள் 80 பேர் பலியாகியும் ,நூறு பேர் படுகாயமடை ந்துள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது .

      அமெரிக்கா பயங்கரவாதிகள் என்ற ர சொல்லை ஈரான் இப்பொழுது பயன் படுத்துகிறது ,இதுவே டிரம்புக்கும் ,அமெரிக்கர்களுக்கு மிக பெரும் நெருடலை ஏற்படுத்தியுள்ளது .

      அமெரிக்காபடைகள் முக்கிய அதி சண்டை விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் என்பன ஈரான் அருகில் நகர்த்த பட்டு

      தயார் நிலையில் உள்ளன ,அமெரிக்கா பதிலடி தாக்குதல் நடத்தினால் அது மீள் ஒரு பெரும் போரை தொடுக்கும் என நம்ப படுகிறது .

      இந்த ஈரான் ஏவுகணை தாக்குதல் நடக்கும் இரண்டு மணித்தியாலங்கள் முன்பாக ஈரானிய இராணுவம் தமது இராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்த போவதாக

      ஈரான் மீது -அமெரிக்கா தாக்குதல் நடத்தும்- சிக்னலை வெளியிட்ட டிரம்ப்

      அமெரிக்காஉளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது ,இந்த செய்தியை அவர் தம் ஊடகங்கள் வாயிலாக வெளியிட்டது .

      அவ்வாறான , உசாராக அமெரிக்கா படைகள் வைக்க பட்ட பொழுதும் ஈரான் தாக்கிய ஏவுகணையால் இத்தனை

      பெரும் அழிவு ஏற்பட்டுள்ளது எவ்வாறு என என்ன தோன்றுகிறது .

      அப்படி என்றால் ஈரான் குறிப்பிட்டது போல அமெரிக்காவின் பலவீனமான 19 இலக்குகள் மீது தாக்குதல் நடத்துவோம்

      என்றது ,மேலும் 290 இலக்குகள் குறிவைக்க பட்டுள்ளன எனவும் அது தெரிவித்தது

      அமெரிக்காஅதிபர் 52 இலக்குகள் என்ற நிலையில் ஈரான் அதற்கு மேல் சென்று 290 இலக்குகள் அதில் 13 முதல் 19 பலவீனமான பகுதிகள் எனவும் சுட்டி காட்டியது .

      தொடர்ந்து இரு நாடுகளும் போருக்கு தயார் நிலையில் உள்ளனர் ,இரண்டு நாட்டு இராணுவமும் உசார் நிலையில்

      வைக்க பட்டுள்ளன ,ஈரான் எம்மீது, அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் ,அதற்கு வெளியில் இருந்து அதன் ஆதரவு அமைப்புக்கள் தாக்குதலை நடத்தும் திட்டங்களை ஈரான் வகுத்துள்ளது

      ஈரான் மீது -அமெரிக்கா தாக்குதல் நடத்தும்- சிக்னலை வெளியிட்ட டிரம்ப்

      தாக்கல் திட்டங்கள் தயார் நிலையிலும் ,அமெரிக்காவின் குறிகள் எங்கு வைக்க பட்டு இருக்கும் என்ற பகுதிகள் மீதும் பலத்த பாதுகாப்பபு ஏற்படுத்த பட்டுள்ளது .

      இந்த மோதலில் ஈரான், தனது இதுவரை வெளியிடாத ,புதிய ஏவுகணைகள் கொண்டு தாக்குதலை தொடுக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது

      அணு ஆயுத உறபத்தியை ஈரான் செய்துவிட முடியாது எனவும் அதன் கனவு அணு குண்டு தயாரிப்பும்

      சாத்தியப்படாது ,அதில் அது வெற்றி பெறாது ,எனவும் அமெரிக்கா அறிவித்திருந்தது ,

      நடக்க போகும் போரில் ஈரான் வெற்றி பெறாது எனவும் அமெரிக்கா இடித்து கூறியுள்ளது .

      ஈரான் மீது  அமெரிக்கா தாக்குதல்

      அப்படி என்றால் ஈரானின் அணு உலைகள் மீது தாக்குதல் நடத்தி பெரும் உயிரழிவை ஏற்படுத்த அமெரிக்கா

      ,இஸ்ரேல் கூட்டாக திட்டம் தீட்டியுள்ளதாகவே இதன் மறை பொருகள் உணர்த்துகின்றன .

      நிமிடங்கள் ஒவ்வொன்றும் பதட்டத்தை அதிகரித்த வண்ணமே செல்கின்றன ,தாக்குதல் விரிந்து பறந்து செல்ல போகிறது

      • வன்னி மைந்தன் –
      • ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்
      ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்
      Posted in உளவு செய்திகள்

      குவிக்க படும் துருக்கி ரசியா படைகள் – வீடியோ

      குவிக்கபடும் துருக்கி ரசியா -அமெரிக்கா படைகளினால் ஈராக்கில் வைத்து ஈரானிய இராணுவ ,ஈராக் இராணுவ தளபதி ,லெபனான் ஹிஸ்புல்லா உப தலைவர்

      உள்ளிட்ட பத்து முக்கியமானவர்களை உளவு விமான மூலம் தாக்கி பாடுகொலை புரிந்தது .

      இதன் எதிரொலியாக ஈரான் , ஈராக் பாரளுமன்றம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டது ,அதில் ஈராக்கை விட்டு

      அமெரிக்கா அப்படைகள் முற்றாக வெளியேற வேண்டும் என அது அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது .

      இதனால் அமெரிக்காவிற்கு பெரும் இராயத்தந்திர நெருக்கடி ஏற்பட்டுள்ளது .

      அமெரிக்கா படைகள் மட்டுமல்ல ,ஐரோபிய படைகளும் அங்கிருந்து வெளியேற வேண்டிய அபாகயகரம் எழுந்துள்ளது ,

      ஈராக்கிய பாராளுமன்றில் இந்த முடிவை ஏற்று அமெரிக்கா படைகள் அங்கிருந்து வெளியேறுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்

      இது இவ்வாறு இடம்பெற்று கொண்டிருக்க துருக்கியில் துருக்கிய இராணுவம் மற்றும் ரசியா படைகள் ஆகியன அங்கு குவிக்க படுகின்றன .

      குவிக்க படும் துருக்கி ரசியா

      துருக்கி ,ரசியாவுடனும் ஈரான் தீவிர பேச்சில் ஈடு பட்டதன் பின்னர் ஈராக் பாரளுமன்றில் இந்த முடிவுகள் அறிவிக்க பட்டுள்ளது .

      இது டிரம்ப் எடுத்த பிழையான முடிவு என்ற கருத்து வலுத்து வருகிறது .

      குவிக்க படும் துருக்கி ரசியா

      தொடர்ந்து டிரம்ப் போர்குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த படலாம் என்ற வாதமும் வலுப்பெற்று வருகிறது video

      குவிக்க படும் துருக்கி ரசியா
      Posted in உளவு செய்திகள்

      அமெரிக்கா ஈராக்கை விட்டு வெளியேற – ஈராக் உத்தரவு

      அமெரிக்கா ஈராக்கை விட்டு வெளியேறலாம் ஈராக் பாராளுமன்று அதிரடி அறிவிப்பு

      அமெரிக்கா தான் பெரும் சண்டியர் எனவும் ,தனது ஆயுத பலத்தின் முன்னாள் நாடுகளை மிரட்டி அடிபணிய வைக்கலாம் என்ற நிலையில் அது செய்து வரும் நாசகார

      வேலைகளிற்கு ஈரான் இராணுவ தளபதி,ஈராக் இராணுவ தளபதி ,லெபனான் கிஸ் புல்லாவின் உபதலைவர் உள்ளிட்ட பத்து பேர்

      படு கொலையின் பின்னர் ஒன்றினையும் நிகழ்வுகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

      மத்திய கிழக்கில் ஈரான் அகல கால் ஊன்றி இணைப்பு கூட்டணி நாடுகளாக உருவாக்கம் பெறுவதையும் இங்கு

      அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய படைகள் அகல கால் ஊன்றலுக்கு ஆப்பு வீழ்ந்துள்ளது video

      Posted in உளவு செய்திகள்

      அமெரிக்கா தலைநகரில் பாதுகாப்பு இறுக்கம்

      அமெரிக்கா தலைநகரில் பாதுகாப்பு இறுக்கம்

      ஈராக் தலைநகர் பாக்தாத் .சர்வதேச விமான நிலையத்தின் கார்கோ ப்குதியில் வைத்து ஈரானிய இராணுவ தளபதி மேலும் ஒரு முக்கியஸ்தர் மற்றும் ஈராக்கிய இராணுவ தளபதி மற்றும் ,இவர்களுடன் எட்டு பேர் அமெரிக்கா மேற்கொண்ட மூன்று தொடர் ஏவுகணை தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் .

      மேலும் சில பொதுமக்களும் இறந்துள்ளனர் .
      இது தவிர டசின் கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர் .

      ஈராக்கில் அமைந்துள்ள அமெரிக்கா தூதரகம் மீது நடத்த பட்ட தாக்குதல் ,அதனை
      தொடர்ந்து ஈராக்கில் அமெரிக்காவின் முகவர் ஒருவர் படு கொலை அதை அடுத்தே இந்த தாக்குதல் இடம்பெற்றதாம் .

      அமெரிக்கா அங்கு இறந்த முகவருக்கு அதாவது கொண்டேக்ட்டர் ஒருவருக்கு இவ்வளவு அதி முக்கியத்துவம் வழங்க காரணம் என்ன ..?

      அவ்வாறு இறந்தவர் அமெரிக்காவின் முக்கிய உளவுத்துறை அதிகாரியாக இருக்கலாம் என படுகிறது .

      அதனை அறிந்தே ஈரான் வெளியாக உளவுத்துறை இந்த முகவர்களை இலக்கு வைத்து தாக்கியுள்ளனர் .

      அமெரிக்கா தலைநகரில் பாதுகாப்பு இறுக்கம்

      எதிர்வரும் நாட்களில் மேலும் பல மர்மங்கள் உடையும் அதோடு பதட்டம் மேலும் அதிகரிக்கும் ஈரான் உடனடியாக தக்குதலை மேற்கோளாவிட்டதால் காத்திருந்து இதற்க்கு அமெரிக்கா இரட்டை கோபுர தாக்குதல் போன்று ஒன்றை நடத்தலாம் என எதிர்பார்க்க படுகிறது

      அவ்வாறன தாக்குதல் தொடரலாம் என்பதால் அமெரிக்காவின் தலைநகர் நியூ யார்க் பலத்த பாதுகாப்பபு வலயத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது .

      அமெரிக்கா தலைநகரில் பல தடுப்பு பாதுகாப்பபு இறுக்க பட்டுள்ளது ,மேலதிக போலீசார் ,மற்றும் உளவுத்துறையின் சேவையில் ஈடுபடுத்த பட்டுள்ளனர் .


      குறிப்பாக விமான பறத்தல் தீவிரமாக கண்காணிக்க படுகிறது ,போலீசார் குவிக்க பட்டுள்ளனர் தாக்குதல் பீதியில் அந்த மக்கள் உள்ளனர் ,

      அல்லது வைக்க பட்டுள்ளனர் ,டிரம்ப் மேற்கொள்ள போகும் அடுத்த தாக்குதலுக்கு இது காரணம் காண்பிக்க பட போகிறது .

      போர்வெறியில் அலையும் அமெரிக்காவின் முதுகெலும்பு எங்கு முறிக்க பட போகிறது ..? உலக வல்லாதிக்க ஆணவ போக்கு என்று அழிய போகிறது ..?

      நிகழ்கால நிலவரம் கலவரமாகவே உள்ளது ,நிகழ்வுகள் எவ்வேளையு போராக மாற்றம்பெறலாம்
      இதுவே மூன்றாம் உலக போருக்கான திறப்பாக கூட இருக்கலாம் video