Posted in உலக செய்திகள்

பெர்லினில் மக்களுக்குள் புகுந்த கார் -ஒருவர் பலி -14 பேர் காயம்

பெர்லினில் மக்களுக்குள் புகுந்த கார் -ஒருவர் பலி -14 பேர் காயம்

இன்று பிற்பகல் பெர்லின் பகுதியில் வேகமாக பயணித்த கார் மக்களுக்குள் புகுந்தது
இந்த சம்பவத்தில் ஒருவர் பலியாகியும் 14 பேர் படுகாயமடைந்துள்ளனர்

90 கிலோ மீட்டர் வேகத்தில் காரை செலுத்திய சாரதி மக்களுக்குள் திட்டமிட்டு மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளார்

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நிலைமையை கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன் காயமடைந்தவர்கள் உலங்குவானூர்தி மூலம் மருத்துவமனைக்கு எடுத்து செல்ல பட்டனர்

மாணவர்களை விடுமுறைக்கு அழைத்து வந்த டீச்சரே இந்த சம்பவத்தில் பலியாகினர் ,மேலும் அவருடன் தரித்து இன்ற மாணவர்கள் 14 பேர் படுகாயமடைந்துள்ளனர்

மக்களுக்குள் காரை வேகமாக செலுத்தியவர் அல்பேனியாவை சேர்ந்த 29 வயதுடையவர் என அடையாளம் காண பட்டுள்ளது

பெர்லினில் மக்களுக்குள் புகுந்த கார் -ஒருவர் பலி -14 பேர் காயம்

இது ஒரு தீவிரவாத செயல் என எதிர்பார்க்க படுகிறது ,பெர்லினில் மக்களுக்குள் புகுந்த கார் கொலை வெறி தாக்குதல் சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மக்களுக்குள் புகுந்த கார் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

குறித்த சம்பவத்தை மேற்கண்ட விபரிக்கையில் வேகமாக வந்த கார் மக்களுக்குள் புகுந்து தாக்குதலை நடத்தியது அதன் பின்னர் அங்கிருந்த காடுகள் மேலெழ ஏற்ற பட்டு மேலேயும் தாக்குதலை நடத்த முயன்றார் என்ற தகவல் பீதியை கிளப்பியுள்ளது

90 கிலோ மீட்டர் வேகத்தில் காரை செலுத்தி வந்தவர் மக்களுக்குள் மோதினர் ,இதன் செயல்பாடு திட்டமிடப்பட்ட தாக்குதல் ஒன்றாகபார்க்கலாம் என அவர் தெரிவித்தார்

விடுமுறை கழிக்க டீச்சருடன் அங்கே காத்து நின்ற அப்பாவி மாணவர்கள் மீது மோதி

அவர்களை பலி எடுக்க முனறற அனால் காயத்துடன் உயிர் தப்பி விட்டனர் என அவர் தெரிவித்தார்

மக்களுக்கு புகுந்த கார் தாக்குதல் தொடர்பான காணொளிகள் போலீசார் மீட்டு அதனை ஆய்வு செய்து வருகின்றனர்

விரைவில் மக்களுக்குள் புகுந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான மேலதிக தகவல் வெளிவரலாம் என எதிர் பார்க்க படுகிறது .

  • வன்னி மைந்தன் –
    Posted in Uncategorized

    ஏலத்திற்கு வரும் உலகின் மிகப்பெரிய விஸ்கி பாட்டில்

    ஏலத்திற்கு வரும் உலகின் மிகப்பெரிய விஸ்கி பாட்டில்

    இந்த பாட்டில் விற்கப்பட்டவுடன் இதன் 25 சதவீத தொகை மேரி கியூரி தொண்டு நிறுவனத்திற்கு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

    ஏலத்திற்கு வரும் உலகின் மிகப்பெரிய விஸ்கி பாட்டில்
    உலகின் அதிகம் உயரவும் உடைய விஸ்கி பாட்டில்

    உலகின் மிகப்பெரிய விஸ்கி பாட்டில் இந்த மாதம் 25-ஆம் தேதி ஏலத்திற்கு வருகிறது. மெக்கலன் நிறுவனத்தின் ஸ்காட்ச் விஸ்கி ரகத்தை சேர்ந்த இந்த பாட்டில் 5 அடி, 11 இன்ச் அளவையும், 311 லிட்டர் கொள்ளவை கொண்டுள்ளது. இந்த விஸ்கிக்கு ‘தி

    இண்ட்ரிபிட்’ என பெயரிடப்பட்டுள்ளது. எய்டன்பெர்க்கில் உள்ள ல்யான் அண்ட் டார்பிள் என்ற ஏல விடுதியில் இந்த பாட்டில் ஏலத்திற்கு வருகிறது. இது சாதாரண 444 சாதாரண விஸ்கி பாட்டில்களுக்கு ஒப்பான மதுவை கொண்டுள்ளது.

    இதுகுறித்து வேல்ஸ் ஆன்லைன் என்ற இணையதளம் கூறுகையில், இந்த பாட்டிலின் விலை இந்திய மதிப்பில் 14 கோடி விலையை கொண்டது. அதிக விலைக்கு விற்கப்படும்

    விஸ்கி என்ற உலக சாதனையை இந்த பாட்டில் படைத்துள்ளது. கடந்த வருடம் கின்னஸ் உலக சாதனை பட்டியலிலும் இந்த பாட்டில் இடம்பிடித்தது. இந்த பாட்டில் விற்கப்பட்டவுடன்
    இதன் 25 சதவீத தொகை மேரி கியூரி மருத்துவ தொண்டு நிறுவனத்திற்கு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

      கண்ணீரில் மக்கள்
      Posted in Uncategorized

      தீயில் எரிந்த 100 வீடுகள் – கண்ணீரில் மக்கள்

      தீயில் எரிந்த 100 வீடுகள் – கண்ணீரில் மக்கள்

      வடக்கு சில்லி slum பகுதியில் உள்ள கிராமங் புரத்தில் திடீரென தீ பற்றி கொண்டது ,இந்த தீயில் சிக்கி சுமார் நூற்றுக்கு மேற்பட்ட வீடுகள் தீயில் எரிந்தன

      இங்த தீ விபத்தில் சிக்கி வீடுகளை இழந்து 400 மக்கள் அகதிகளாகியுள்ளனர்,


      அணைத்து பொருட்களையும் தீயில் பறி கொடுத்து கண்ணீருடன் இவர்கள் உள்ளனர்

        Posted in Uncategorized

        நீதிமன்றில் பெண் தலைவரை போட்டு தாக்கிய வக்கீல்கள்


        நீதிமன்றில் பெண் தலைவரை போட்டு தாக்கிய வக்கீல்கள்


        பாகிஸ்தான் கோர்ட்டில் வக்கீல்கள் அனைவரும் சேர்ந்து ஆளும் கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் பெண் தலைவரை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

        பாகிஸ்தானின் ஆளும் கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் பெண் தலைவர்

        லைலா பர்வீன். இவர் தனது முன்னாள் கணவரும், வக்கீலுமான ஹஸ்னைன் தனக்கு வழங்கிய ‘செக்’ போலியானது என கூறி அவர் மீது வழக்கு தொடர்ந்தார்.

        இந்த வழக்கு சிந்து மாகாணத்தின் தலைநகர் கராச்சியில் உள்ள கோர்ட்டில் விசாரணைக்கு

        வந்தது. இதையொட்டி விசாரணைக்கு ஆஜராகுவதற்காக லைலா பர்வீன் தனது சகோதரருடன் கோர்ட்டுக்கு சென்றார்.

        அப்போது அங்கிருந்த ஹஸ்னைன் மற்றும் சக வக்கீல்கள் லைலா பர்வீனிடம் தகராறில்

        ஈடுபட்டனர். இதை தட்டி கேட்ட அவரது சகோதரரை வக்கீல்கள் அனைவரும் சேர்ந்து அடித்து, உதைத்தனர். இதை லைலா பர்வீன் தடுக்க முயன்றார்.

        அப்போது வக்கீல்கள் அவரையும் சரமாரியாக அடித்து உதைத்ததாகவும், இதில் அவர்

        மயங்கியதாகவும் கூறப்படுகிறது. கோர்ட்டுக்குள் நடந்த இந்த வன்முறையால் அங்கு பெரும் பரரப்பு ஏற்பட்டது.

        இதை தொடர்ந்து தன்னையும், தனது சகோதரரையும் தாக்கிய முன்னாள் கணவர் ஹஸ்னைன் உள்பட அனைத்து வக்கீல்கள் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி லைலா பர்வீன் போலீசில் புகார் அளித்தார்.

          Posted in உலக செய்திகள் குற்ற செய்திகள்

          மனைவி 3 பிள்ளைளை கொன்ற கணவனுக்கு சிறை தண்டனை

          மனைவி 3 பிள்ளைளை கொன்ற கணவனுக்கு சிறை தண்டனை

          அமெரிக்கா கலிபோனியா பகுதியில் குழப்பத்தில் காணப்பட்ட கணவர் ஒருவர் தனது மனைவி

          மற்றும் மூன்று பிள்ளைகளை கொன்றுள்ளார்

          மேற்படி குற்ற சாட்டில் கைது செய்ய பட்ட கணவருக்கு சாகும்வரையிலான ஆயூள் தண்டனை

          வழங்க பட்டுள்ளது

          அதி குற்ற செயல்களுடன் தொடர்பு பட்ட சிறையில் இவர் அடைக்க பட்டுள்ளார்

            Posted in Uncategorized

            இருளர் பழங்குடி மாணவர்களின் கல்வி நலனுக்காக ரூ.1 கோடி வழங்கினார் சூர்யா

            இருளர் பழங்குடி மாணவர்களின் கல்வி நலனுக்காக ரூ.1 கோடி வழங்கினார் சூர்யா

            தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா, ஜெய் பீம் படத்தில் பழங்குடி மக்களுக்காக வாதாடும் வழக்கறிஞர் வேடத்தில் நடித்துள்ளார்.

            இருளர் பழங்குடி மாணவர்களின் கல்வி நலனுக்காக ரூ.1 கோடி வழங்கினார் சூர்யா
            முதல்வர் முன்னிலையில் காசோலை வழங்கிய சூர்யா


            சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள ‘ஜெய் பீம்’ திரைப்படம் நாளை நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீசாக உள்ளது. த.செ.ஞானவேல் இயக்கி இருக்கும் இப்படம் இருளர் பழங்குடியினரின் வாழ்க்கை

            மற்றும் பிரச்சனைகளை மையமாக வைத்து இப்படம் உருவாகி உள்ளது. நடிகர் சூர்யா, பழங்குடி

            மக்களுக்காக வாதாடும் வழக்கறிஞர் வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தை நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது.

            இந்நிலையில், இருளர் பழங்குடியை சேர்ந்த மாணவர்களின் கல்வி நலனுக்காக சூர்யாவின் 2டி நிறுவனம் சார்பில் ரூ.1 கோடி வழங்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், ரூ.1

            கோடிக்கான காசோலையை நடிகர் சூர்யா வழங்கினார். அப்போது ஜோதிகா, துர்கா ஸ்டாலின் மற்றும் இருளர் பழங்குடியை சேர்ந்த மக்கள் சிலரும் உடனிருந்தனர். நடிகர் சூர்யாவின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன

              Posted in Uncategorized

              லண்டன் வீட்டுக்குள் நுழைந்த பொலிஸ் – ஒரு லட்சம் பவுண்டு மீட்பு

              லண்டன் வீட்டுக்குள் நுழைந்த பொலிஸ் – ஒரு லட்சம் பவுண்டு மீட்பு

              லண்டன் Chorister Crescent பகுதியில் ஆடம்பர வீடொன்றுக்குள் இடம்பெற்று வந்த போதைவஸ்து ,மற்றும் புடவை விற்பனை என்பன கண்டு பிக்க பட்டுள்ளது

              பொலிசுக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இடம்பெற்ற திடீர் முற்றுகையின் பொழுது குறித்த வீட்டிற்குள் இருந்து ஒரு லட்சம் பவுண்டுகள் மற்றும் ஆடம்பர ஆடை வடிவமைப்பு என்பன மீட்க பட்டுள்ளது

              2 hour 500+ profit-2 மணித்தியாலத்தில் 500 இலாபம் forex trade tamil video

              தந்தை ,மகன் கைது செய்ய பட்டு தடுத்து வைக்க பட்டுள்ளனர் ,கொரனோ லொக் டவுன் காலத்தில் இவ்விதமான பல போதைவஸ்து கும்பல் காவல்துறை வேட்டைக்கு உள்ளாக்க பட்டமை குறிப்பிட தக்கது

                Posted in Uncategorized

                அமெரிக்காவில் கத்தி வெட்டு மூவர் காயம் – சுட்டு கொன்ற போலீசார்


                அமெரிக்காவில் கத்தி வெட்டு மூவர் காயம் – சுட்டு கொன்ற போலீசார்

                அமெரிக்கா Arkansas State பகுதியில் நடத்த பட்ட திடீர் கத்தி வெட்டு தாக்குதலில் சிக்கி மூவர் படுகாயமடைந்துள்ளனர் ,சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை ஊழியர் மீதும் கத்தி

                வெட்டு தாக்குதல் நடத்த பட்டுள்ளது ,இதனை அடுத்து அவர் சுட்டு படுகொலை செய்ய பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது

                சமீப காலங்களாக இவ்வாறான குற்ற செயல்கள் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது

                  Posted in Uncategorized

                  இரண்டாவது தடவையாக இன்ஸ்டாகிராம் சேவை பாதிப்பு

                  இரண்டாவது தடவையாக இன்ஸ்டாகிராம் சேவை பாதிப்பு

                  கடந்த சில தினங்களுக்கு முன் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் ஆகிய மூன்று செயலிகளும் சுமார் 7 மணி நேரத்துக்கும் மேல் முடஙகியது குறிப்பிடத்தக்கது.

                  ஒரே வாரத்தில் இரண்டாவது தடவையாக இன்ஸ்டாகிராம் சேவை பாதிப்பு
                  இன்ஸ்டாகிராம்

                  உலக அளவில் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் ஆகியவை மிகப் பெரிய சமூக வலைத்தளங்களாக விளங்கி வருகின்றன. அவற்றில் மக்கள் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

                  இதற்கிடையே, நேற்று நள்ளிரவு இன்ஸ்டாகிராம் செயலி திடீரென முடங்கியது. இதனால் அதன் பயனாளிகள் அவதிக்குள்ளாகினர்.

                  இந்நிலையில், இன்ஸ்டாகிராம் சேவை முடங்கியதற்கு அந்நிறுவனம் பயனாளர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளது. மேலும், விரைவில் இந்த குறை சரிசெய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

                    Posted in Uncategorized

                    வீழ்ந்து சிதறிய அமெரிக்கா போர் விமானம் – குதித்த விமானி தப்பினார்

                    வீழ்ந்து சிதறிய அமெரிக்கா போர் விமானம் – குதித்த விமானி தப்பினார்

                    அமெரிக்கா கலிபோனியா பகுதியில் அமெரிக்கா கடற்படைக்கு சொந்தமான F/A-18F Super Hornet
                    ரக சண்டை விமானம் ஒன்று திடீரென வீழ்ந்தது ,இவ்வேளை இதனை செலுத்தி சென்ற விமானி பாராசூட் மூலம் குதித்து தப்பினார்

                    பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் அவர் சிகிச்சை பெற்றவண்ணம் உள்ளார், விசாரணைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது

                      Posted in Uncategorized

                      எல்லையில் பதட்டம் இல்லை – ஈரான் அறிவிப்பு


                      எல்லையில் பதட்டம் இல்லை – ஈரான் அறிவிப்பு

                      ஈரானின் வடதெற்க்கு பகுதிகளில் பதட்டம் இல்லை என ஈரானின் மூத்த இராணுவ அத்தளபதி ஒருவ தெரிவித்துள்ளார்

                      தலிபான்கள் ஆட்சியை அமைத்ததன் பின்னர் தமது எல்லைகளை பலப்படுத்தி தொடர் கண்காணிப்பில் ஈரானிய இராணுவம் ஈடுபடுத்த பட்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிட தக்கது .

                        Posted in Uncategorized

                        மோஸ்க்கோவில் 8 தீவிரவாதிகள் கைது – பெரும் முறியடிப்பு

                        மோஸ்க்கோவில் 8 தீவிரவாதிகள் கைது – பெரும் முறியடிப்பு

                        மோஸ்க்கோவில் பெரும் தாக்குதலை நடத்தும் முகமாக ஊடுருவி இருந்த 8 தீவிரவாதிகளை தாம் கைது செய்துள்ளதாக ரசிய உளவுத்துறை தெரிவித்துள்ளது

                        நன்கு திட்டமிட்ட பெரும் தாக்குதலை நடத்திட இவர்கள் தயாராக இருந்த நிலையில் இந்த கைது வேட்டை இடம்பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது

                          Posted in Uncategorized

                          பெங்களூருவில் 60 மாணவர்களுக்கு கொரோனா

                          பெங்களூருவில் 60 மாணவர்களுக்கு கொரோனா

                          ஒரே பள்ளியில் 60 மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், வருகிற 20-ந்தேதி வரை பள்ளியை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

                          பெங்களூருவில் 60 மாணவர்களுக்கு கொரோனா: அக். 20-ந்தேதி வரை பள்ளி மூடல்

                          கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் 6 முதல் 8-ம் வகுப்புகளுக்கான பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவர்கள், ஆசிரியர்கள், ஸ்டாஃப்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

                          இந்த நிலையில் பெங்களூருவில் உள்ள ஒரு பள்ளியில் 500 மாணவர்கள் படித்து வந்தனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் 60 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி

                          செய்யப்பட்டுள்ளது. 60 மாணவர்களில் இரண்டு பேருக்கு அறிகுறி இருந்தது. இதனால்

                          மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

                            Posted in சினிமா

                            இந்திய நடிகருடன் சண்டை போட தயாராகும் மைக் டைசன்

                            இந்திய நடிகருடன் சண்டை போட தயாராகும் மைக் டைசன்

                            உலக புகழ் பெற்ற பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசன், இந்திய நடிகர் ஒருவருடன் சண்டை போட தயாராகி இருக்கிறார்.

                            இந்திய நடிகருடன் சண்டை போட தயாராகும் மைக் டைசன்… ஹீரோ யார் தெரியுமா?
                            மைக் டைசன்


                            விஜய் தேவரகொண்டா, பூரி ஜெகன்நாத், கரண் ஜோகர், சார்மி கவுர் தயாரிப்பில் உருவாகி வரும் படம் லிகர். விஜய் தேவரகொண்டா நாயகனாக நடிக்க, ரம்யா கிருஷ்ணன், ரோனித் ராய், விஷ்ணு

                            ரெட்டி, ஆலி மகரந்த் தேஷ் பாண்டே, கெட்டப் ஶ்ரீனு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பூரி ஜெகன்நாத் இயக்குகிறார்.

                            இந்த படத்தில் உலக புகழ் பெற்ற பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் நடிக்க இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்திய படம் ஒன்றில் இவர் நடிப்பது இதுவே முதல்முறையாகும்.

                            இப்படத்தில் அயர்ன் மைக் என்ற வேடத்தில் மைக் டைசன் நடிக்கிறார். அதிரடி ஆக்‌ஷனாக உருவாகும் இப்படம், தெலுங்கு, தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் உருவாகி வருகிறது.

                            இதுகுறித்து விஜய் தேவரகொண்டா தனது சமூக வலைத்தள பக்கத்தில், “நாங்கள் கொடுத்த வாக்கை, நிறைவேற்ற துவங்கியுள்ளோம்”. இந்திய திரையுலகில் முதன்முறையாக, லிகர் படத்தில்

                            இணையும் முக்கிய பிரபலம். இந்த பிரபஞ்சத்தின் சக்திமிக்க மனிதர், குத்து சண்டையின் கடவுள், லெஜண்ட், பீஸ்ட், காலத்தால் அழிக்கவியலா புகழ் கொண்ட நாயகன், மைக் டைசனை இந்திய

                            திரையுலகிற்கு வரவேற்கிறோம். இன்னும் சில நாட்களுக்கு, உங்கள் ஆர்வத்தை கட்டுபடுத்தி வைத்துகொள்ளுங்கள். இந்த படம் தியேட்டர்களில் வெளியாக தயாராகி கொண்டிருக்கிறது. கொண்டாட்டத்திற்கு தயாராகுங்கள்” என பதிவிட்டுள்ளார்.

                              Posted in Uncategorized

                              சிரியா -ஈராக் எல்லையில் திடீரென நுழைந்த அமெரிக்கா இராணுவம்

                              சிரியா -ஈராக் எல்லையில் திடீரென நுழைந்த அமெரிக்கா இராணுவம்

                              சிரியா ஈராக்கிய எல்லை பகுதியில் திடீரென அமெரிக்கா இராணுவம் நுழைந்துள்ளது ,இந்த இராணுவ படை நகர்வு அவர்களின் இலக்கை எட்டியுள்ளதாக ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது

                              ரசியா ஈரான் ,சிரியா அரசுக்கு ஆதரவு வழங்கி வரும் நிலையில் அமெரிக்கா படைகளின் திடீர் நகர்வு சநதேக த்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்க படுகிறது

                                Posted in Uncategorized

                                ஜெயலலிதா சொத்து கொள்ளை – சிக்குவாரா எடப்பாடி ..?- video

                                ஜெயலலிதா சொத்து கொள்ளை – சிக்குவாரா எடப்பாடி ..?- video

                                எடப்பாடி பழனி சாமியின் ஆட்சியில் இடம்பெற்ற கொட நாடு கொள்ளை வழக்கு மீள கிளற பட்டு வரும் நிலையில்


                                இந்த கொள்ளையில் சசிகலா உள்ளிட்டவர்கள் சிக்குவார்கள் என இந்த ஆய்வு கூறுகிறது பாருங்கள்

                                click here full video

                                  Posted in Uncategorized

                                  சுறா கடித்து நபர் பலி – அவுஸ்ரேலியாவில் பயங்கரம்

                                  சுறா கடித்து நபர் பலி – அவுஸ்ரேலியாவில் பயங்கரம்

                                  அவுஸ்ரேலியா Coffs Harbour பகுதியில் நபர் ஒருவர் சுறா கடித்து பலியாகியுள்ளார்
                                  சம்பவ இடத்திற்கு மருத்துவ குழுக்கள் விரைந்த பொழுதும் அவரை காப்பற்ற முடியவில்லை

                                  குறித்த பகுதியில் இது போன்ற செயல்கள் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது

                                    Posted in உலக செய்திகள்

                                    ஐ எஸ் தீவிரவாதிகளை வேட்டையாடும் இராணுவம்

                                    ஐ எஸ் தீவிரவாதிகளை வேட்டையாடும் இராணுவம்

                                    ஈராக்கின் தியத்தல பகுதியில் பதுங்கி இருக்கும் ஐ எஸ் தீவிரவாதிகளை முற்றாக

                                    துடைத்தளிக்கும் இராணுவ நடவடிக்கை ஒன்றை ஈராக்கிய இராணுவம் மேற்கொண்டுள்ளது

                                    இந்த தாக்குதல் மூலம் இவர்கள் முற்றாக அழித்தொழிக்க படுவார்கள் என இராணுவ தளபதி சூளுரைத்துள்ளார்

                                      Posted in Uncategorized

                                      பாகிஸ்தானில் 11 ஐஸ் தீவிரவாதிகள் படுகொலை

                                      பாகிஸ்தானில் 11 ஐஸ் தீவிரவாதிகள் படுகொலை

                                      பாகிஸ்தான் நாட்டில் ஐஸ் எஸ் தீவிரவாதிகளை இலக்கு வைத்து அரச இராணுவம் நடத்திய தாக்குதலில் சிக்கி 11 தீவிரவாதிகள் படுகொலை செய்ய பட்டுள்ளனர்

                                      தொடர்ந்து அழித்தொழிப்பு நடவடிக்கை மேற்கொள்ள பட்டு வருவதாக இராணுவம் தெரிவித்துள்ளது ,


                                      தாலிபான்கள் மீது தற்கொலை தாக்குதலை நடத்தியது தாமே என ஐ எஸ் தெரிவித்த நிலையில் இந்த தாக்குதலை பாகிஸ்தான் இராணுவம் ஆரம்பித்துள்ளமை குறிப்பிட தக்கது

                                        Posted in Uncategorized

                                        சவுதி விமான தளம் மீது ஏவுகணை தாக்குதல் – 30 பேர் மரணம் -60 பேர் காயம்

                                        சவுதி விமான தளம் மீது ஏவுகணை தாக்குதல் – 30 பேர் மரணம் -60 பேர் காயம்

                                        தெற்கு ஏமன் பகுதியில் அமைந்திருந்த சவூதி இராணுவத்தின் Al Anad விமான தளம் மீது திடீரென

                                        ரொக்கட் தாக்குதல் நடத்த பட்டது ,இதில் அங்கிருந்த முப்பது படைகள் பலியாகியும் மேலும் இருபது பேர் படுகாயமடைந்துள்ளனர்

                                        ஈரான் ஆதரவு படைகளினால் இந்த தாக்குதல் நடத்த பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது