லெபனானில் முன்னாள் சிரிய இராணுவ ஜெனரல் கைது
லெபனானில் முன்னாள் சிரிய இராணுவ ஜெனரல் கைது “மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக” சிரியாவால் தேடப்பட்டு வந்த முன்னாள் சிரிய இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் அடெல் இசாவை, லெபனானின் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு கைது செய்துள்ளது.
பஷார் அல்-அசாத்தின்
பஷார் அல்-அசாத்தின் ஆட்சிக்காலத்தில் சிரிய இராணுவத்தின் 17வது பிரிவின் தளபதியாகப் பணியாற்றிய இசாவுக்கு எதிராக,
அவர் இல்லாத நிலையில் சிரிய நீதித்துறையால் கைது ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்தது என்று லெபனானின் தேசிய செய்தி நிறுவனம் (NNA) தெரிவித்துள்ளது.
இசாவின் கைது குறித்து சிரிய அரசு வழக்கறிஞருக்கு லெபனான் நீதிபதி அஹ்மத் ராமி அல்-ஹஜ் தெரிவித்ததோடு,
சிரிய அதிகாரிகளிடம்
அவரை சிரிய அதிகாரிகளிடம் ஒப்படைக்க முடியுமா என்பதைத் தீர்மானிக்க, நீதித்துறை கோப்பை மறுஆய்வுக்குச் சமர்ப்பிக்குமாறு கோரியுள்ளார் என NNA செய்தி வெளியிட்டுள்ளது.







