Posted in Uncategorized

லண்டன் லூசியம் பகுதியில் தீயில் எரிந்த தமிழர் கடை – வீடியோ

லண்டன் லூசியம் பகுதியில் தீயில் எரிந்த தமிழர் கடை – வீடியோ

லண்டன் Randlesdown Road, Bellingham பகுதியில் உள்ள தமிழர் மொத்த கொள்வனவு வாணிபம் ஒன்று புதன்கிழமை தீயில் எரிந்து நாசமாகியுள்ளது

நேற்று பிற்பகல் ஐந்து மணியளவில் திடிரென தீ பற்றி கொண்டது ,இதன் பொழுது அந்த

வாணிபம் முற்றாக எரிந்து அழிந்துள்ளதுடன் ,வான்,மற்றும் அயலவர்கள் இரு கார்களும் எரிந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது

குறித்த தீ சம்பவம் தொடர்பாக அவசர அழைப்புக்கு சுமார் 45 அழைப்புக்கள் சென்றுள்ளன ,பன்னிரெண்டு தீயணைப்பு இயந்திரங்களுடன் ,எண்பது தீயணைப்பு வீரர்கள் பல மணிநேரம் போராடி தீயினை கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவந்தனர்

இந்த தீயின் புகையானது பல மைல்கள் தொலைவுக்கு வானில் தெரிந்ததாக அயலவர்கள் தெரிவித்துள்ளனர்

அருகில் உள்ள பெலிங்கம் ரயில்வே போக்குவரத்து சில மணிநேரம் தடை பட்டது ,முற்றாக பூட்ட பட்டுள்ளது

மேலும் இந்த சம்பவத்தின் பொழுது இரண்டு காஸ் சிலிண்டர்கள் அகற்ற பட்டதாகவும் ,அதிக வெப்பம் காரணமாக அது வெடித்து சிதறியதாக ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது

( Call handlers at the brigade’s 999 control centre took 45 calls about the fire.

“During the fire, two gas cylinders were removed and cooled to ambient temperatures, as some cylinders can explode when exposed to heat
)

Bellingham fire destroys

மேலும் அயல் வீட்டாரின் முதல் அடுக்கு மாடிகள் இரண்டும் பாதிக்க பட்டுள்ளதக தெரிவிக்க படுகிறது

தொடர்ந்து இதுகுறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

Bellingham fire destroys

குறித்த வணிக நிறுவனமானது ,சிக்கன் கடைகளுக்கு உரிய உணவுகளை விநியோகிக்கும் பேல்மெட் புகழ் வாய்ந்த ஒன்று என்பது இங்கே குறிப்பிட தக்கது

இந்த தீ பரவல் சம்பவத்தினால் பல்லாயிரம் பவுண்டுகள் இழப்பு ஏற்பட்டுள்ளது,தெய்வாதீனமாக எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை

குறித்த சம்பவம் தமிழர்கள் மத்தியில் துயரை ஏற்படுத்தியுள்ளது

    Posted in Uncategorized

    இஸ்ரேல் ஏவுகணைகளினால் அழிக்க படும் – கடும் எச்சரிக்கை video

    இஸ்ரேல் ஏவுகணைகளினால் அழிக்க படும் – கடும் எச்சரிக்கை

    இஸ்ரேல் நாட்டின் முக்கிய மையங்கள் மீது சமவேளை பல நாடுகளில் இருந்து ரொக்கட்

    தாக்குதல் நடத்த படும் என ஈராக்கை தளமாக கொண்டு இயங்கும் முக்கிய போராளிகள் அமைப்பு எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது

    இந்த தாக்குதலானது ,ஈராக்,ஈரான்,லெபனான்,ஏமன் ,சிரியா ,பகுதியில் இருந்து

    சமவளே ஒருங்கிணைந்த தாக்குதலாக மேற்கொள்ள படும் என கடும் எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது

    காமாஸ் போராளிகள் நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் நிலை குலைந்ததுடன் , நெத்தன்யாகு பதவி கவிழ்க்க பட்டது

    அதனை அடுத்து மீள இஸ்ரேல் இராணுவம் நடத்தி வரு வலிந்து தாக்குதல் மற்றும்

    ,மேற்கு கரையில் மக்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து இந்த காணொளி வெளியிட பட்டுள்ளது

    விரைவில் இஸ்ரேல் மீது ஏவுகணை மழை பொழியும் என எதிர் பார்க்க படுகிறது

      Posted in Uncategorized

      இஸ்ரேல் இராணுவ வண்டிகள் மீது கல் வீச்சு தாக்குதல்

      இஸ்ரேல் இராணுவ வண்டிகள் மீது கல் வீச்சு தாக்குதல்

      பாலஸ்தீனம் மேற்கு கரை பகுதியில் பயணித்த இஸ்ரேல் வாகன தொடரணியை

      இலக்கு வைத்து பால்ஸ்தீன வாலிபர்கள் கல் வீச்சு தாக்குதலை மேற்கொண்டனர்

      ,
      இந்த தாக்குதலை நடத்தியவர்கள் மீது இஸ்ரேலிய வாலிபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர் ,இதில் பலர் காயமடைந்தனர்

      அப்பாவி மக்களை கொன்று குவித்து ஏப்பம் இட்டு வரும் இஸ்ரேல் இனவாத படைகளின் இன


      அழிப்பிற்கு இதுவரை தணடனை வழங்க படவில்லை என்பது குறிப்பிட தக்கது

        Posted in Uncategorized

        தமிழகத்தில் எரிந்த தேர் – 11 பேர் மரணம்

        தமிழகத்தில் எரிந்த தேர் – 11 பேர் மரணம்

        தமிழகம் தஞ்சாவூர் பகுதியில் வீதியுலா வந்த தேர் ஒன்று மின்சாரா கம்பியில் சிக்கி

        மின்சாரம் தாக்கியதில் இரு சிறுவர்கள் உள்ளிட்ட பதினொரு பேர் சம்பவ இடத்தில பலியாகினர்

        மேலும் பலர் காயமடைந்த நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர்

        இந்த தேர் விபத்து மிக பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது . இது குறித்த

        விசாரணைகள் முன்னெடுக்க பட்டு வருகின்றன

        Posted in Uncategorized

        இலங்கையில் தனியார் வங்கிகள்,நிறுவனங்கள் bankruptcy அடிக்க தயார் – அமெரிக்கா கவலை

        இலங்கையில் தனியார் வங்கிகள்,நிறுவனங்கள் bankruptcy அடிக்க தயார் – அமெரிக்கா கவலை

        இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக தனியா

        ர் நிறுவனங்கள் ,மற்றும் தனியார் வங்கிகள் என்பன bankruptcy அடிக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது


        இவ்விதமான கவலையை அமெரிக்கா காங்கிரசும் தெரிவித்துள்ளது

        இலங்கையில் தனியார் வங்கிகளில் பணம் வைப்பில் செய்தவர்கள் பீதியுடன் உள்ளமை குறிப்பிட தக்கது

          Posted in Uncategorized

          உலக வங்கியிடம் 400மில்லியன் கடன் – கடன் கார நாடாகும் இலங்கை

          உலக வங்கியிடம் 400மில்லியன் கடன் – கடன் கார நாடாகும் இலங்கை

          இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து ,இலங்கைக்கு அவசர

          உதவிகளை மேற்கொள்ள உலக வங்கி 400 மில்லியன் அமெரிக்கா டொலர்களை

          இலங்கைக்கு அவசர கடன் உதவியாக வழங்குகிறது

          இந்த பணத்தில் எரிவாயு மற்றும் இதர பொருட்களை கொள்வனவு செய்திட உள்ளதாக தெரிவிக்க படுகிறது

            Posted in Uncategorized

            கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி எதிரணியில் போராட்டம்

            கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி எதிரணியில் போராட்டம்

            இலங்கையில் ஆளும் ராஜபக்ஸ குடும்ப ஆட்சிக்கு எதிராக மக்கள் 22 நாளாக

            போராட்டம் நடத்திய வண்ணம் உள்ளனர் ,இவ்வேளை ஐக்கிய மக்கள் சக்தியினர் கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி


            பெரும் பேரணி ஒன்றை நடத்திய வண்ணம் உள்ளனர்

            இந்த பேரணி இரண்டாவது நாளாக தொடர்ந்த வண்ணம் உள்ளது

              Posted in Uncategorized

              அமெரிக்கா தூதர்-காணாமல் ஆக்கப்பட்டோர் சந்திப்பு

              அமெரிக்கா தூதர்-காணாமல் ஆக்கப்பட்டோர் சந்திப்பு

              வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க

              பிரதிநிதிகள் இன்றைய தினம் அமெரிக்கத் தூதுவர் ஜீலி சுங்கினை சந்தித்து கலந்துரையாடினர்.

              நேற்று மதியம் 12 மணியளவில் கொக்குவிலில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

              சந்திப்புக்கு பின்னர் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்

              உறவுகளின் சங்க செயலாளர் லீலாதேவி ஆனந்த நடராஜா கருத்து தெரிவிக்கையில்,

              எமது உறவுகள் காணாமலாக்கப்பட்ட விதம், எமது போராட்டங்கள், எமக்குள்ள பிரச்சினைகள் தொடர்பாக அமெரிக்க


              தூதுவரிடம் நாம் விளக்கிக் கூறி இருந்தோம் என தெரிவித்தார்

                Posted in Uncategorized

                அகதிகள் படகு கவிழ்ந்து ஒருவர் மரணம் – 34 பேரை காணவில்லை

                அகதிகள் படகு கவிழ்ந்து ஒருவர் மரணம் – 34 பேரை காணவில்லை

                அட்லாட்ன்டிக் கடல் பகுதியில் பயணித்து கொண்டிருந்த அகதிகள் படகு ஒன்று

                திடிரென விபத்தில் சிக்கியதில் அதில் பயணித்த ஒருவர் பலியாகியுள்ளார் ,மேலும் முப்பத்தி நான்கு பேர் காணாமல் போயுள்ளனர்

                இவ்விதம் காணாமல் போன் யாவரும் இறந்திருக்க கூடும் என அஞ்ச படுகிறது

                தொடர்ந்து கடற்படையினர் தேடுதலில் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர் ,ஐரோப்பாவிற்குள் நுழையும் முகமாக பாதுகாப்பற்ற


                கடல் வழியூடாக சட்டவிரோத குடியேற்றவாசிகள் பயணித்து வருகின்றமை குறிப்பிட தக்கது

                  Posted in Uncategorized

                  வீழ்ந்து நொறுங்கிய விமானம் – விசாரணைகள் ஆரம்பம்

                  வீழ்ந்து நொறுங்கிய விமானம் – விசாரணைகள் ஆரம்பம்

                  துருக்கி ,வடமேற்கு Bursa மாகாணத்தின் மேலாக பறப்பில் ஈடுபட்ட பயிற்சி விமானம் ஒன்று திடிரென வீழ்ந்து நொறுங்கியது


                  இவ்வேளை அதில் பயணித்த இருவர் பலியாகினர்

                  இந்த விமான விபத்து குறித்து உடனடி விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன ,இந்த விமான


                  விபத்து இயந்திர கோளாறு காரணமாக இடம்பெற்று இருக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது

                  Posted in Uncategorized

                  குருதீஸ் போராளிகளை துரத்தி அழிக்கும் துருக்கிய இராணுவம்

                  குருதீஸ் போராளிகளை துரத்தி அழிக்கும் துருக்கிய இராணுவம்

                  வடக்கு ஈராக் பகுதிகளில் நிலை கொண்டுள்ள குருதீஸ் போராளிகளை துருக்கிய இராணுவம் தேடி அழிக்கும்


                  புதிய தாக்குதலை ஆரம்பித்துள்ளது ,இந்த தாக்குதலானது சுமார் அறுபது கிலோ மீற்றர் வரை சென்றுள்ளது

                  இவை ஈராக் எல்லையோரத்தில் நிறுத்த பட்டுள்ளதாக துருக்கிய இராணுவம் தெரிவித்து வருகிறது

                  தமது மக்களை இன அழிப்பு செய்து வருவதாக குருதீஸ் மக்கள் தெரிவித்துள்ளனர் ,எனினும் அந்த மக்களை காப்பாற்றும் நோக்கில் ஐநா செயல் படவில்லை


                  துருக்கி ,ஈரான் ,சிரியா ,ஈராக் என நான்கு நாடுகளினால்,
                  குருதீஸ் போராளிகள் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றமை குறிப்பிட தக்கது

                    Posted in Uncategorized

                    டுவிட்டரை விலைக்கு வாங்கும் Tesla CEO Elon Musk

                    டுவிட்டரை விலைக்கு வாங்கும் Tesla CEO Elon Musk

                    உலகில் கார் உற்பத்தியில் முக்கிய செல்வந்தராக விளங்கி வரும் Tesla CEO Elon Musk
                    டுவிட்டர் சமூக வலைதளத்தின் புதிய முதலாளியாக வருகிறார்

                    இவர் டுவிட்டரை 42 பில்லியன் டொலர் கொடுத்து விலைக்கு வாங்குகிறார்

                    இதனால் அதன் மதிப்பு உயரும் என எதிர் பார்க்க படுகிறது ,தடைகள் ,திறந்தவெளி விவாதங்கள்


                    என ஐந்து முக்கிய நிகழ்வுகளை மாற்றிட உள்ளதாக அவர் அறிவித்துள்ளார்

                    இது பேஸ்புக்கிற்கு எதிராக டுவிட்டர் உருவெடுக்கும் நிலையை தோற்றுவித்துள்ளது என கூறலாம்

                      Posted in Uncategorized

                      அமைச்சர் வீடு முற்றுகை – போலீசார் மக்கள் மோதல் – video

                      அமைச்சர் வீடு முற்றுகை – போலீசார் மக்கள் மோதல் – video

                      அமைச்சர் கேரத் வீட்டை மக்கள் சுற்றி வளைத்தனர்

                      இதனால் அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டது

                      இவர் மகிந்தவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகிறார்

                      இதனால் சீற்றம் உற்ற மக்கள் அவர் வீட்டை சுற்றிவளைத்தனர் ,இதனால் அங்கு பெரும் பதட்டம் நிலவியது

                      மக்கள் பொலிசாருக்கு இடையில் முறுகல் இடம்பெற்றுள்ளது

                      இதில் அழுத்தி காணொளி பார்க்கவும்

                      https://www.youtube.com/watch?v=6eI29vu1Dlk
                        Posted in Uncategorized

                        கோட்டா கபடி ஆட்டம் – நிதி அமைச்சர் – சட்ட அமைச்சர் ஆனார்

                        கோட்டா கபடி ஆட்டம் – நிதி அமைச்சர் – சட்ட அமைச்சர் ஆனார்

                        இலங்கையில் மூன்று வாரத்திற்குள் நிதி அமைச்சராக விளங்கிய அலிசப்ரி மீண்டும்

                        நீதி அமைச்சராக மாற்றம் பெற்றுள்ளார்

                        இவர்களின் இந்த அமைச்சு பதவி கபடி ஆட்டம் ,உலகில் சல சலபப்பை ஏற்படுத்தியுள்ளது

                          Posted in Uncategorized

                          10 பில்லியன் அமெரிக்கா டாலரில் உகாண்டாவில் உள்ள மகிந்தாவின் கம்பெனி(100 ஆயிரம் கோடி )

                          10 பில்லியன் அமெரிக்கா டாலரில் உகாண்டாவில் உள்ள மகிந்தாவின் கம்பெனி

                          இலங்கை முன்னாள் ஜனாதிபதியும் இன்னாள் பிரதமராக விளங்கி வரும் மகிந்தாவின்

                          பத்து மில்லியன் அமெரிக்காடொலர் பணத்தில் உகாண்டாவில் பெரிய நிறுவனம் ஒன்றை மகிந்தா அநடத்தி வருகிறார்

                          இங்கு பெருமளவில் மக்கள் வேலை வாய்ப்பை பெற்று வருவதுடன் அதிக இலாபத்தை ஈட்டி செல்கிறது ,


                          நாட்டை கொள்ளையடித்து பணத்தை சுருட்டி அதில் ராஜபக்ஸா குடும்பம் பெரும் சுகபோகத்தை அனுபவித்து வருகிறது

                          தற்போது மகிந்தவின் பணத்தில் அந்த நிறுவனம் உள்ளது அம்பலமாகியுள்ள நிலையில் ,பெரும் நெருக்கடியில் மகிந்த குடும்பம் சிக்கியுள்ளது

                          ஆட்சி கவிழ்க்க பட்டு இவர்கள் நீதிமன்றில் விசாரணைக்கு நிறுத்த பட்டு ,ஊழல் மோசடிகள் அம்பல
                          படுத்த படும் என எதிர் பார்க்க படுகிறது

                            Posted in Uncategorized

                            நான் பதவி விலக மாட்டேன் மகிந்தா -தயாராகும் ஆப்பு

                            நான் பதவி விலக மாட்டேன் மகிந்தா -தயாராகும் ஆப்பு

                            இலங்கையில் பிரதமர் நானே தான் ஒருபோதும் பதவி விலக போவதில்லை என
                            மகிந்தா தெரிவித்துள்ளார்

                            மக்களோ இவர்கள் பதவி விலக வேண்டும் என கோரி 19 தவாது நாளாக போராட்டம் நடத்தியவண்ணம் உள்ளனர்

                            ஆனால் அதனை செவி சாய்ப்பதாக இவர்கள் இல்லை

                            தமது சொத்துக்களை காப்பாற்றிட இவர்கள் பதவி விலக மறுத்து வருகின்றமை குறிப்பிட தக்கது

                            இதனை அடுத்து இவர்கள் ஆட்சியை கவிழ்க்க அணைத்து காட்சிகள் இரகசிய பேச்சில் ஈடுபட்டுள்ளனர்

                              Posted in Uncategorized

                              அமெரிக்க பொருளாதாரம் தன் கைக்குள் இருக்க திட்டமிட்ட பின்லேடன்

                              அமெரிக்க பொருளாதாரம் தன் கைக்குள் இருக்க திட்டமிட்ட பின்லேடன்

                              அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதலுக்கு பின்னர் 2-வது தாக்குதல் ஒன்றையும் நடத்த ஒசாமா பின்லேடன் திட்டமிட்ட ரகசிய தகவல் வெளியிடப்பட்டு உள்ளது.

                              அமெரிக்க பொருளாதாரம் தன் கைக்குள் இருக்க திட்டமிட்ட பின்லேடன்: ரகசிய தகவல் வெளியீடு
                              ஒசாமா பின்லேடன்

                              அமெரிக்காவில் கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ந்தேதி பயணிகள் விமானங்களை கடத்திய அல்-கொய்தா பயங்கரவாதிகள் அவற்றை நியூயார்க்கில்

                              உள்ள உலக வர்த்தக மையமான இரட்டை கோபுரத்தின் மீதும், வாஷிங்டனில் உள்ள அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் மீதும் மோதி தாக்குதல் நடத்தினர்.

                              இந்த தாக்குதலில் 3 ஆயிரம் பேர் வரை கொல்லப்பட்டனர். இதற்கு பின்னணியில் இருந்து செயல்பட்ட அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா

                              பின்லேடனை 10 ஆண்டுகளுக்கு பின் அமெரிக்க படைகள் பாகிஸ்தானில் வைத்து சுட்டு கொன்றன. பின்லேடனை பிடிக்கும் பணியில் அமெரிக்காவின் நேவி சீல் படைகள் ஈடுபட்டன.

                              அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதலுக்கு பின்னர் 2-வது தாக்குதல் ஒன்றையும் நடத்த ஒசாமா பின்லேடன் திட்டமிட்ட ரகசிய தகவல் வெளியிடப்பட்டு உள்ளது. பின்லேடனை உயிருடனோ அல்லது சுட்டு பிடிப்பதற்கான பணிக்காக அமெரிக்காவின்

                              நேவி சீல் படையை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் கொண்ட குழுவானது, பின்லேடனை கொன்ற பின்பு ஆயிரக்கணக்கான பக்கங்களை கொண்ட தனிப்பட்ட கடிதங்கள் மற்றும் குறிப்புகளை கைப்பற்றி வகைப்படுத்தியுள்ளன.

                              இவற்றை ஆய்வு செய்த இஸ்லாமிய பெண் பண்டிதரான நெல்லி லகோத் பேட்டி ஒன்றில் கூறும்போது, செப்டம்பர் 11 தாக்குதலுக்கு பின் அமெரிக்கர்கள் எப்படி எதிர்வினையாற்றினர் என்று பின்லேடன் ஆச்சரியப்பட்டு உள்ளார்.

                              அமெரிக்கர்கள் தெருக்களில் இறங்கி அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி, முஸ்லிம் அதிகம் வசிக்கும் பகுதியில் இருந்து வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தவார்கள் என பின்லேடன் நினைத்து உள்ளார். ஆனால், அவரது கணக்கு தவறாகி விட்டது.

                              அமெரிக்கா அவரை தேடுகிறது என அறிந்ததும், அல்-கொய்தா அமைப்பினருடன் பின்லேடன் 3 ஆண்டுகளாக தொடர்பில் இல்லாமல் இருந்துள்ளார். ஆனால், 2004ல்

                              மீண்டும் அந்த பயங்கரவாத குழுவில் இணைந்துள்ளார். அமெரிக்காவின் மீது தனது புதிய தாக்குதல் பற்றி குழு உறுப்பினர்களிடம் தெரிவித்து உள்ளார்.

                              9/11 தாக்குதலை மீண்டும் நடத்த பின்லேடன் ஆர்வம் காட்டினார். ஆனால், விமான நிலையங்களில் கடுமையான பாதுகாப்பு விசயங்கள் கடைப்பிடிக்கப்பட்டன. இதனை கவனத்தில் கொண்டு பயணிகள் விமானத்திற்கு பதிலாக சார்ட்டர் விமானம் ஒன்றை

                              கொண்டு அமெரிக்கா மீது அடுத்த தாக்குதலை நடத்தலாம் என்று அந்த அமைப்பின் சர்வதேச பயங்கரவாத குழுவுக்கு பின்லேடன் கடிதம் ஒன்றில் தெரிவித்து உள்ளார்.

                              விமானம் வழியே தாக்குதல் நடத்துவது மிக கடினம் என்றால், அமெரிக்க ரெயில்வே மீது குறிவைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். சிவில் என்ஜினீயரிங் படித்த

                              பின்லேடன், அமெரிக்கா மீது எப்படி சரியாக தாக்குதல் நடத்த வேண்டும் என திட்டம் தீட்டியுள்ளார். ரெயில் தண்டவாள பகுதியில் 12 மீட்டர் அளவுக்கு வெட்டி எடுக்கும்படி கூறியுள்ளார்.

                              இதனால் ரெயில் தடம் புரண்டு, நூற்றுக்கணக்கானோர் செத்து மடிவார்கள் என்பது பின்லேடனின் திட்டம். இதற்காக கம்பிரசர்களை பயன்படுத்துங்கள். இரும்பு

                              கருவிகளையும் பயன்படுத்துங்கள் என்று பின்லேடன் தனது சகாக்களிடம் கூறியுள்ளார்.

                              எனினும், அதிர்ஷ்டவசத்தில், பின்லேடனால் இந்த திட்டங்களை ஒருபோதும் நிறைவேற்ற முடியாமல் போனது என்று லகோத் கூறியுள்ளார்.

                              இதுதவிர, கடந்த 2010ம் ஆண்டு மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க பகுதிகளில், கச்சா எண்ணெய் டேங்கர்கள் மற்றும் பெரிய கடல்வழி பகுதிகளிலும் தாக்குதல் நடத்த திட்டம் தீட்டப்பட்டு உள்ளது.

                              இதற்காக மீனவர்களை போன்று காட்டி கொண்டு துறைமுக பகுதிகளுக்கு செல்ல வேண்டும்.ரேடாரில் இருந்து தப்புவதற்காக குறிப்பிட்ட படகுகளை எங்கு வாங்க

                              வேண்டும். வெடிபொருட்களை கடத்தி செல்ல அந்த படகுகளை எப்படி பயன்படுத்த வேண்டும் உள்ளிட்ட விவரங்களை தனது குழுவுக்கு பின்லேடன் விவரமுடன் தெரிவித்து உள்ளார். உண்மையில்,


                              அமெரிக்க பொருளாதாரம் தனது கைக்குள் இருக்க வேண்டும் என்று பின்லேடன் விரும்பினார் என்று லகோத் கூறியுள்ளார்.

                                Posted in Uncategorized

                                பீஸ்ட்’ பட வெற்றி.. விஜய் கொடுத்த விருந்து

                                பீஸ்ட்’ பட வெற்றி.. விஜய் கொடுத்த விருந்து

                                சமீபத்தில் வெளியான ‘பீஸ்ட்’ படத்தின் வெற்றிக்கு அப்படக்குழுவினருக்கு நடிகர் விஜய் விருந்து கொடுத்துள்ளார்.

                                ‘பீஸ்ட்’ பட வெற்றி.. விஜய் கொடுத்த விருந்து
                                பீஸ்ட்


                                இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 13-ந்தேதி வெளியான திரைப்படம் ‘பீஸ்ட்’. இந்த திரைப்படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன்,

                                விடிவி கணேஷ், யோகிபாபு, அபர்ணா தாஸ், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

                                பீஸ்ட் திரைப்படம் நல்ல வசூலை குவித்தாலும் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இதனால் நெல்சன் உள்ளிட்ட படக்குழுவினர் கவலையில் இருந்தனர். இந்த நிலையில் நடிகர் விஜய், பீஸ்ட் படக்குழுவினருக்கு விருந்து கொடுத்துள்ளார்.

                                அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள இயக்குனர் நெல்சன், நடிகர் விஜய் மற்றும் படக்குழுவினருக்கு நன்றி

                                தெரிவித்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் குறிப்பிட்டிருப்பது, ‘எங்களுக்கு இந்த விருந்து வழங்கியதற்கு நன்றி விஜய் சார். இது படக்குழுவுடன் வேடிக்கை நிறைந்த மற்றும் மறக்கமுடியாத மாலை நேரம்.

                                விஜய் கொடுத்த விருந்து
                                விஜய் கொடுத்த விருந்து

                                விஜய் சாரின் அன்புக்கும் ஆதரவுக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவருடன் பணியாற்றியது சிறப்பான தருணம். நான் உண்மையிலேயே பெருமைப்படுகிறேன். இந்த அனுபவத்தை என்னுடைய வாழ்நாள் முழுவதும் நான்

                                உண்மையாக மதித்திக்கிறேன். உங்களின் அழகும் கவர்ச்சியும், சூப்பர் ஸ்டார்டமும் இந்தப் படத்தை முழுவதுமாக ஆக்கிரமித்துள்ளது. சன் பிக்சர்ஸ், கலாநிதி மாறன்

                                மற்றும் காவ்யா மாறன் ஆகியோருக்கு இந்த மிகப் பெரிய வாய்ப்பைக் கொடுத்ததற்கும் இந்தப் படத்தை ஒன்றிணைத்ததற்கும் நன்றி.

                                எங்களின் அற்புதமான நடிகர்கள் மற்றும் குழுவினர் இல்லாமல் இது சாத்தியமில்லை. தடைகளை தகர்த்தெறிந்து, அன்பையும் ஆதரவையும் பொழிந்த பார்வையாளர்கள்

                                அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எப்போதும் போல நீங்கள் அனைவரும் விஜய் மற்றும் படக்குழுவினருடன்


                                நின்று இந்தப் படத்தை மாபெரும் வெற்றியடையச் செய்திருக்கிறீர்கள். சியர்ஸ்’ என்று கூறியுள்ளார்.

                                Posted in Uncategorized

                                மகிந்தா கொள்ளையர்கள் ஒன்றா கூடி இரகசிய பேச்சு

                                மகிந்தா கொள்ளையர்கள் ஒன்றா கூடி இரகசிய பேச்சு

                                இலங்கையில் ஆளும் மகிந்த குடும்ப உறுப்பினர்கள் ஒன்றாகா கூடி முக்கிய

                                பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளனர்

                                அலரி மாளிகையில் இந்த பேச்சு இடம்பெற்றுள்ளது

                                இதன் பொழுது பிரதமர் மகிந்தா,பசில்,நாமல் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர்

                                Posted in Uncategorized

                                இலங்கையில் வரியை அதிகரிக்க உத்தரவு – மக்கள் கொதிப்பு

                                இலங்கையில் வரியை அதிகரிக்க உத்தரவு – மக்கள் கொதிப்பு

                                இலங்கையின் நிகழ்கால பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை காப்பற்றி

                                கொள்ள வரிகளை உயர்த்த வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது

                                தற்கால சூழலில் அதிக வரிகள் அதிகரிக்க பட்ட நிலையில் ,பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன

                                மேலும் அதிகரிக்க பட்டால் ,மக்கள் பெரும் சுமைகளை சுமக்க வேண்டிய நிலை

                                ஏற்படும் என்பது மக்களின் நிலையாக உள்ளது ,

                                மேற்படி விடயத்தினை அரசு செய்தாக வேண்டிய நெருக்கடியில் சிக்கியுள்ளது