Tag: நகை
புலிகளின் நகைக்கு உரிமைகோரும் ஈபிடிபி
புலிகளின் நகைக்கு உரிமைகோரும் ஈபிடிபி
புலிகளின் நகைக்கு உரிமைகோரும் ஈபிடிபி ,புலிகளின் வைப்பகத்தில் நகைகளை அடைவு வைத்தவர்கள் அதற்கான ஆவணங்கள் சமர்ப்பிக்கும் பட்சத்தில், அவற்றுக்கான தற்போதைய சந்தைப் பெறுமதியை அரசாங்கம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி,
அவ்வாறு அடைவு வைக்கப்பட்டமைக்கான ஆவணங்கள் தங்களுடைய கட்சி உறுப்பினர்களிடமும் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும், மாகாண சபைக்கான அதிகாரங்கள் சூட்சுமமான முறையில் மீளப் பெறுப்படும் செயற்பாடு தொடருகின்ற நிலையில் அதுதடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி
யாழ். ஊடக மையத்தில் நேற்று (31) நடைபெற்ற ஊடகச் சந்திப்பில், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம் மற்றும் கிளிநொச்சி
மாவட்ட செயற்பாட்டாளர்களுள் ஒருவரான எஸ். சுந்தராம்பாள் ஆகியோர் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே குறித்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டன.
இவை தொடர்பாக மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
கடந்த சில நாட்களுக்கு முன்னர் இடம்பெற்ற மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் மன்னார் மாவட்ட வைத்தியசாலையை மத்திய அரசாங்கதிற்கு கையளிப்பதற்கான தீர்மானம் தொடர்பிலே, எமது நிலைப்பாட்டினை தெரிவிக்க வேண்டும்.
மாகாண சபையினை அடிப்படையாக கொண்ட அதிகாரப் பகிர்வே அரசியல் தீர்விற்கான ஆரம்ப கொண்டு முன்னோக்கி செல்ல வேண்டும் என்பதை
வலியுறுத்துகின்ற தரப்பு என்ற அடிப்படையிலே, மாகாணத்தின் அதிகாரங்கள் மத்திய அரசாங்கத்திடம் கையளிக்கப்படுவதை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது.
1987 ஆண்டு உருவாக்கப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் 1988 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட மாகாணசபை சட்டத்தின் அடிப்படையில், மாகாணங்களுக்கு
வழங்கப்பட்ட அதிகாரங்களில் சில காலத்திற்கு காலம் மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களானால் மீளவும் மத்திக்கு எடுக்கப்பட்டிருக்கின்றது. சில முயற்சிகள் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கின்றன.
மாகாண அதிகாரங்களை மத்திக்கு திருப்பி எடுக்கு முயற்சி
ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியினராகிய நாம், எமக்கு கிடைத்த அதிகாரங்களை பயன்படுத்தி, மாகாண அதிகாரங்களை மத்திக்கு திருப்பி எடுக்கு முயற்சிகளை கடந்த காலங்களில் எமது தேசிய நல்லிணக்க வழிமுறைகளின் ஊடாக தடுத்து நிறுத்தி இருக்கின்றோம்.
குறிப்பாக, 2012 ஆம் ஆண்டு காலப் பகுதியில் மாகாண சபையின் முக்கியமான பல அதிகாரங்களை மீளவும் மத்திய அரசாங்கத்திற்கு எடுத்துக் கொள்வதன் மூலம், மாகாணசபை முறைமையை இல்லாமல் செய்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
அப்போது, ஆளுந்தரப்பில் பங்காளிகளாக இருந்த நாம், அந்த அரசாங்கத்தில் அங்கம் வகித்த தமிழ் பேசும் பிரதிநிதிகளையும் மாகாண சபை தொடர்பான நியாயத்தினை
புரிந்து கொண்ட சிங்கள முற்போக்கு சக்திகளையும் ஒருங்கிணைத்து சுமார் 50 மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் எதிர்ப்புக்களை தெரிவித்து அதனை தடுத்து நிறுத்தியிருந்தோம்.
அதேபோன்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் காலப் பகுதியில் நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட மாவட்ட வைத்தியசாலைகளை மத்திய அரசாங்கத்தினுள் எடுக்கின்ற திட்டத்தின் அடிப்படையில் கிளிநொச்சி,
முல்லைத்தீவு, மன்னார் போன்ற மாவட்ட வைத்தியசாலைகளையும் மத்திய அரசாங்கத்தினுள் எடுப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன.
குறித்த விவகாரம் அமைச்சரவைக்கு வந்தபோது, மாகாண சபை அதிகாரத்திற்கு உட்பட்ட குறித்த மூன்று வைத்தியசாலைகளையும் மத்திய அரசாங்கம் பொறுப்பெடுப்பது எமது அரசில் அபிலாசைகள் தொடர்பில் ஏமாற்றத்தினை
ஏற்படுத்தும் என்பதை வலியுறுத்தி அந்த திட்டததினை தடுத்து நிறுத்தியிருந்தோம். அதேபோன்று, 1,000 தேசிய பாடசாலை திட்டத்தின் மூலம்
மாகாண பாடசாலைகளை மத்திய அரசாங்கத்தினுள் எடுப்பதற்கான நடவடிக்கை
எமது பகுதிகளில் பல மாகாண பாடசாலைகளை மத்திய அரசாங்கத்தினுள் எடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
அதனை தடுத்து நிறுத்துவதற்கான அரசியல் சூழல் இல்லாத நிலையில்,
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆட்சிக்கு வந்ததும், அந்த திட்டத்தினையே கைவிடச் செய்ததில் காத்திரமான பங்களிப்பினை வழங்கியிருந்தோம்.
இவ்வாறான பின்னணியிலேயே தற்போது மன்னார் வைத்தியசாலை விவகாரம் பேசுபொருளாக்கப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக நாம் அவதானமாக இருக்க வேண்டும்.
குறிப்பாக மாகாண சபையை அடிப்படையாக கொண்ட அதிகாரப் பகிர்வை ஏற்றுக்கொள்ளாத 6 தரப்பினர் ஆளுந்தரப்பாக இருக்கின்ற நிலையில், எமது அரசியல்
அபிலாசைளுக்கான அடிப்படையாக கொண்ட மாகாண சபை அதிகாரங்களை வலுவிழக்க செய்கின்ற, மத்திய அரசாங்கத்தினால் பிடுங்கி எடுக்கப்படுகின்ற அபாயம் அதிகளவில் இருக்கின்றது.
எனவே தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பாக எமது மக்களின் நலன்சார்ந்த தரப்புக்கள் ஒவ்வொன்றும் கண்ணில் எண்ணெய் ஊற்றி விடயங்களை அவதானிக்க வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.
உள்ளூராட்சி தேர்தல் காலத்தில் புலிகளின் வங்கியில் அடைவு
அதேபோன்று, உள்ளூராட்சி தேர்தல் காலத்தில் புலிகளின் வங்கியில் அடைவு வைக்கப்பட்ட நகைகள் என்று ஒரு தொகுதி தங்க நகைகள் அரசாங்கத்தினால் காண்பிக்கப்பட்டது.
இறுதிக் காலகட்டத்தில் அப்போதைய சந்தைப் பெறுமதிப்படி சுமார் 9 கோடி ரூபாய் பெறுமதியான நகைகள் இருந்ததாக சொல்லப்படுகின்ற போதிலும், அந்தளவு நகைகள் தற்போது காண்பிக்கப்படவில்லை.
அதேபோன்று, நகைகளை அடைவு வைத்தவர்கள் அனைவரும் தற்போது இருக்கின்றார்கள் என்பதற்கோ, இருந்தாலும் அவர்களிடம் உரிய ஆவணங்கள் பாதுகாப்பாக இருக்கும் என்பதோ எதிர்பார்க்க முடியாதது.
எனவே, யாதார்தத்தினை புரிந்து கொண்டு நகைகளை அடைவு வைத்தமைக்கான ஆவணங்களை சமர்ப்பிப்பவர்களுக்கு, அவர்கள் அடைவு வைத்த தங்க நகைகளுக்கான தற்போதைய சந்தைப் பெறுமதியை வழங்குவதற்கு அரசாங்கம்
முன்வர வேண்டும். அடைவு நகை விவகாரத்தினை வெறுமனவே தேர்தல் வாக்குறுதியாக கடந்து செல்லாமல் விரைவான நடவடிக்கை முன்வைக்கப்பட வேண்டும் எனவும் ஈ.பி.டி.பி. வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நகை அணிந்திருந்த பெண்கள் இருவர் கைது
நகை அணிந்திருந்த பெண்கள் இருவர் கைது
நகை அணிந்திருந்த பெண்கள் இருவர் கைது ,22 கரட்டுக்கு மேல் நகை அணிந்திருந்த பெண்கள் இருவர் கைது
22 கரட்டுக்கு மேல் செய்யப்பட்ட நகைகளை சட்டவிரோதமாக நாட்டுக்குள் எடுத்துச் செல்ல முயன்றனர் என்ற குற்றச்சாட்டின் கீழ் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் பெண்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் ரூ. 28 மில்லியன், 85 ஆயிரத்து 820 ரூபா, பெறுமதியான நகைகளை உடலில் அணிந்துகொண்டு, கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் உள்ள ‘கிரீன் சேனல்’ வழியாக நாட்டை விட்டு வெளியேற முயன்றனர்,
அவர்கள் குருநாகல் பகுதியைச் சேர்ந்த 29 மற்றும் 35 வயதுடைய இரண்டு பெண்கள், சவுதி அரேபியாவில் துப்புரவுப் பணியாளர்களாகப் பணிபுரிந்தனர்.
சுங்கக் கட்டளைச் சட்டத்தின்படி, 22 காரட்டுகளுக்கு மேல் மதிப்புள்ள நகைகளை நாட்டிற்குள் கொண்டு வருவது தடைசெய்யப்பட்டுள்ளது, மேலும் இந்த நபர்கள் தங்கள் சேவையிலிருந்து திரும்பும்போது வணிக நோக்கங்களுக்காக இந்த நகைகளை கொண்டு வந்ததாக சுங்க விசாரணைகள் தெரிவிக்கின்றன.
அவர்கள் சவுதி அரேபியாவின் ஜெட்டாவிலிருந்து அபுதாபிக்கு வந்திருந்தனர், அங்கிருந்து, எதிஹாட் ஏர்வேஸ் விமானம் EY-396 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்தனர்.
இருவரும் தங்கள் உடலில் 932 கிராம் எடையுள்ள நெக்லஸ்கள் மற்றும் வளையல்களை அணிந்திருந்தனர்.
பின்னர், இந்த விவகாரம் குறித்து முறையான சுங்க விசாரணை நடத்தப்பட்டு, நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு, அவர்களுக்கு அபராதம் செலுத்த உத்தரவிடப்பட்டது.
14 8 கிலோ கிராம் தங்க நகைகளை கடத்தி வந்தத நடிகை
14 8 கிலோ கிராம் தங்க நகைகளை கடத்தி வந்தத நடிகை
14 8 கிலோ கிராம் தங்க நகைகளை கடத்தி வந்தத நடிகை ,டுபாயில் இருந்து 14.8 கிலோ கிராம் தங்க நகைகளை கடத்தி வந்ததாக நடிகை ரன்யா ராவ் பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடக மாநிலம் சிக்கமகளூருவை சேர்ந்த ரன்யா ராவ் (32) கன்னடம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் நடிகர் விக்ரம் பிரபு நடித்த ‛வாகா’ திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
இந்நிலையில் திங்கட்கிழமை (03) இரவு ரன்யா ராவ் டுபாயில் இருந்து பெங்களூருக்கு எமிரேட்ஸ் விமானத்தில் வந்துள்ளார்.
அவர் அனுமதிக்கப்பட்ட அளவை காட்டிலும் அதிக தங்க நகைகளை அணிந்திருந்தார்.
அவரது உடைமைகளை சோதித்தபோது 25 தங்க கட்டிகள் இருந்துள்ளன. இதனால் சந்தேகம் அடைந்த வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள், அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
கர்நாடக பொலி டிஜிபி அந்தஸ்தில் இருக்கும் ஐபிஎஸ் அதிகாரியின் மகள் எனவும், பெங்களூரு மாநகர பொலிஸார் என்னை வீட்டுக்கு அழைத்துச் செல்வார்கள் எனவும் ரன்யா ராவ் கூறியுள்ளார்.
இருப்பினும் சந்தேகம் அடைந்த அதிகாரிகள், அவரை வருவாய் புலனாய்வு இயக்குநரக அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.
அதில் ரன்யா ராவ் கடந்த 15 நாட்களில் 4 முறை டுபாய்க்கு பயணம் செய்தது தெரியவந்துள்ளது.
ஒவ்வொரு முறையும் தங்கம் கடத்தி வந்திருப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சட்ட விரோதமாக தங்கம் கடத்தியதாக ரன்யா ராவ் மீது அதிகாரிகள் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அவரிடம் இருந்த 14.8 கிலோ கிராம் தங்கத்தையும் பறிமுதல் செய்தனர். அவரை நேற்று பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, 3 நாள் காவலில் எடுத்துள்ளனர்.
நடிகை ரன்யா ராவ் தங்கம் கடத்திய வழக்கின் பின்னணியில் முக்கிய புள்ளிகள் சிலர் இருக்கலாம் என வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
அந்த கும்பல், அவரை தங்கம் கடத்த பயன்படுத்தி இருக்கலாம் என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.
16 பவுண் திருட்டு நகைகளுடன் 5 பேர் கைது
16 பவுண் திருட்டு நகைகளுடன் 5 பேர் கைது
16 பவுண் திருட்டு நகைகளுடன் 5 பேர் கைது ,யாழ். தென்மராட்சியில் சாவகச்சேரிப் பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை மூலம் திருடப்பட்ட 25 லட்சம் ரூபா பெறுமதியான 16 பவுண் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதுடன் ஐந்து சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டனர்.
கடந்த 10 ஆம் திகதி சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெருடாவில் பகுதியில் உள்ள வீடொன்றில் பகல் வேளையில் நுழைந்த கொள்ளையர்கள்
வீட்டில் இருந்த 16 பவுண் நகைகள் மற்றும் தொலைபேசி ஆகியவற்றைத் திருடிவிட்டு தப்பித்திருந்தனர்.
கணவன் – மனைவி இருவரும் பணிக்குச் சென்று வீடு திரும்பிய நிலையிலேயே வீட்டில் திருட்டு இடம்பெற்றிருப்பது கண்டறியப்பட்டு அது
தொடர்பில் பாதுகாப்புக் கமராவின் ஆதாரத்துடன் சாவகச்சேரிப் பொலிஸில் முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், பொலிஸார் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை திருட்டுச் சந்தேகநபர்களான இரண்டு பெண்கள் மற்றும் நகைகளைப் பெற்றுக் கொண்ட வர்த்தகர்கள் இருவர் உட்பட ஐவரைக் கைது செய்துள்ளனர்.
நகை திருடிய பெண் கைது
நகைகள் திருடிய பெண் கைது
நகை திருடிய பெண் கைது, யாழ்ப்பாணம் கன்னா திட்டி காளி கோவில் கும்பாபிஷேகத்துக்கு வருகை தந்திருந்த மக்களிடத்தில் நகை திருடிய பெண் கைது .
பல்வேறுபட்ட மக்கள் மத்தியில் பல பவுன் நகைகளை கொள்ளை அடித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
யாழ்ப்பாணம் பிராந்திய போலீஸ்
யாழ்ப்பாணம் பிராந்திய போலீஸ் குற்ற பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற தகவலினை அடுத்து அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கையில் திருட்டில் ஈடுபட்டிருந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார் .
பெண்ணை கைது செய்து, யாழ்ப்பாணம் போலீஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரித்த பொழுதே ,பெண்ணின் உள்ளாடைகளுக்கு இருந்து திருடப்பட்ட தாலிக்கொடி மற்றும் நகைகள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
போலீசார் விசாரணை அடுத்து தற்பொழுது மேலதிக விசாரணைகள்மேற்கொள்ள நீதிமன்றத்தில் பாரப்படுத்தும் நடவடிக்கையில் யாழ்ப்பாணம் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
நகைகளை திருடுவதற்கென்றே ஒரு கூட்டம்
யாழ்ப்பாணத்தில் ஆலயத்திற்கு செல்லும் மக்களின் நகைகளை திருடுவதற்கென்றே ஒரு கூட்டம் திட்டமிட்டு நகர்ந்து வருகின்றது .
அதே போலவே பேருந்துகளிலும் இவ்விதமான திருட்டு சம்பவங்கள் நூதனமான முறையில் இடம்பெற்று வருகிறது .
அதனை அடுத்து தற்பொழுது இந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார் .மேற்படி சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .
நகைகளை இழந்தவர்கள் அந்த நகைகளை காவல்துறையில் சென்று பெற்றுக்கொள்ள முடியுமா என்கின்ற தகவலும் வெளியாகி இருக்கின்றது.
- புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்

- புத்தாண்டில் இருவர் படுகொலை

- புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன

- புட்டால சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலி

- கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம் நாமல்

- 200க்கும் மேற்பட்ட ஈரானிய கடற்படை வீரர்கள் இலங்கையிலிருந்து புறப்பட்டனர்

- யாழில் சடலம் மீட்பு

- இன்று வரையறுக்கப்பட்ட பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள்

- புலிகள் ஆயுதக் கிடங்கில் வீழ்ந்த அனுரா

- பண்டிகைக் காலத்தில் சாலை விபத்து மரணங்கள்

பரிகார பூஜை செய்வதாக கூறி பெண்ணின் நகைகளை அபகரித்த இந்தியர்கள்
பரிகார பூஜை செய்வதாக கூறி பெண்ணின் நகைகளை அபகரித்த இந்தியர்கள்
உணவக உரிமையாளரது மனைவியான காசாளரான பெண்ணிடம் பரிகாரம் பூஜை செய்வதாக கூறி 8 பவுணுக்கு அதிகமான நகைகளை அபகரித்து தலைமறைவாகியுள்ள இரு இந்தியர்கள் குறித்து கல்முனை தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உணவகம் ஒன்றில் கடந்த புதன்கிழமை (20) இரவு சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் மறுநாள் (21) பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சம்பவ தினமான அன்று இரு இந்தியர்கள் பரிகார பூஜை தொடர்பாக இருவேறு சந்தர்ப்பங்களில் உணவக உரிமையாளரது மனைவியான பெண்ணிடம் உரையாடியுள்ளனர். இதற்கமைய குறித்த பரிகார பூஜை தொடர்பில் சம்பவ
தினமன்று இரவு குறித்த உணவகத்திற்கு வருகை தந்த இரு இந்தியர்களும் தனிமையில் இருந்த பெண்ணை அணுகி பரிகார பூஜை தொடர்பில் குறிப்பிட்டுள்ளனர்.
பரிகார பூஜை செய்வதாக கூறி பெண்ணின் நகைகளை அபகரித்த இந்தியர்கள்
இதன் போது குறித்த பூஜைக்கு இணங்கிய அப்பெண் தன்னிடம் இருந்த தங்க மாலை உள்ளடங்களாக ஏனைய நகைகளை ஒரு மண் சட்டியில் இரு இந்தியர்களும் குறிப்பிட்டபடி மண்சட்டியில் போட்டு மூடி பூஜைக்கு கொடுத்துள்ளார்.
இவ்வாறு பூஜை இடை நடுவில் சென்ற போது பூஜைக்காக கொள்வனவு செய்யப்பட்ட தேசிக்காய் ஒன்றினை வீட்டின் உள்ளே வைக்குமாறு அப்பெண்ணை வேண்டியுள்ளனர்.
உடனடியாக அத்தேசிக்காயை பெற்ற அப்பெண் வீட்டின் உள்ளே சென்று பரிகாரம் நிறைவேற அதை வைத்துவிட்டு வந்துள்ளார்.
அச்சமயம் உடனடியாக செயற்பட்ட இரு இந்தியர்களும் ஏற்கனவே தயாராகி கொண்டு வந்த பிறிதொரு மூடப்பட்ட மண்சட்டியை அவ்விடத்தில் மாற்றியதுடன் பூஜையை நிறுத்தி பின்னர் தங்க நகை அடங்கிய மண்சட்டியை
தம்வசம் எடுத்து கொண்டு உணவக உரிமையாளரது மனைவியான காசாளரான பெண்ணிடம் 3 நாட்களில் பின்னர் மண்சட்டியை திறந்து பார்க்குமாறு கூறி விடை பெற்று சென்றுள்ளனர்.
பின்னர் குறித்த உணவகத்திற்கு வந்த உணவக உரிமையாளர் தனது மனைவியான காசாளரிடம் கழுத்தில் கிடந்த நகை எங்கே என்று கேட்டுள்ளார். இதன்போது நடந்த அனைத்து விடயங்களையும் அப்பெண் கூறியுள்ளார்.
உடனடியாக செயற்பட்ட உணவக உரிமையாளர் 2 இந்தியர்களால் தனது மனைவியிடம் 3 நாட்களின் பின்னர் திறக்க கூறிய மண்சட்டியை திறந்து பார்த்துள்ளார்.
அங்கு அவர்களுக்கு அதிர்ச்சியே மிஞ்சியது. உடனடியாக 2 இந்தியர்கள் குறித்து தேடுதல் மேற்கொண்ட பாதிக்கப்பட்டவர்கள் ஏமாற்றத்துடன் கல்முனை பொலிஸ் நிலையத்தில் இறுதியாக முறைப்பாடு மேற்கொண்டுள்ளனர்.
மனைவி பிள்ளைகளை பணயக்கைதிகளாக்கி நகைகள் திருட்டு
மனைவி பிள்ளைகளை பணயக்கைதிகளாக்கி நகைகள் திருட்டு
கற்பிட்டி – நுரைச்சோலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாவக்கடுவ, கொலனி பிரதேசத்தில் உள்ள மரக்கறி விற்பனையில் ஈடுபடும் வர்த்தகர் ஒருவரின்
வீட்டில் ஆயுத முனையில் 1 கோடியே 50 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் மற்றும் பணம் என்பன திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நாவக்காடு – கொலனி பகுதியில் உள்ள குறித்த வர்த்தகரின் வீட்டிற்கு நேற்று (2) காலை கைத்துப்பாக்கிகள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் அத்துமீறி
நுழைந்த இந்த ஆயுதக் கும்பல் முதலில் அங்கிருந்த தொழிலதிபரையும் , அவரது மனைவி உட்பட குடும்பத்தினரை பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்திருந்தனர் எனக் கூறப்படுகிறது.
மனைவி பிள்ளைகளை பணயக்கைதிகளாக்கி நகைகள் திருட்டு
இவ்வாறு, குறித்த வர்த்தகரின் மனைவி மற்றும் பிள்ளைகளை பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்திருந்த ஆயுதக் குழுவினர், அவர்களை கொலை
செய்யப் போவதாக மிரட்டியதுடன், வீட்டில் இருந்த பாதுகாப்பு பெட்டகத்தை வலுக்கட்டாயமாக திறந்துள்ளனர் என மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என பொலிஸார் குறிப்பிட்டனர்.
இதனையடுத்து, வீட்டின் பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்த சுமார் 70 பவுன் தங்க நகைகள் மற்றும் 30 இலட்சம் ரூபா பணம் என்பனவற்றை
கொள்ளையடித்த ஆயுதக் குழுவினர், அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் நுரைச்சோலை பொலிஸாரும், பொலிஸ் தடயவியல் பிரிவினரும் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- லெபனானில் இஸ்ரேலிய இராணுவ நிலையைத் தாக்க ஹிஸ்புல்லா முயற்சி
- தென் கொரியா 270 மில்லியன் பீப்பாய் எண்ணெயைப் பெற்றுள்ளது
- புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்
- புத்தாண்டில் இருவர் படுகொலை
- புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன
- இந்திய கடலில் மூழ்கிய அகதி கப்பல் 250 பேர் மாயம்
- புட்டால சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலி
- கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம் நாமல்
- ஈரானின் கடல்வழி வர்த்தகத்தை அமெரிக்கா நிறுத்தியது
- வட கொரியா தனது அணு ஆயுதத் திறனை அதிகரித்து வருவதாக ஐ.நா. கண்காணிப்பு அமைப்பு கூறுகிறது.
- 200க்கும் மேற்பட்ட ஈரானிய கடற்படை வீரர்கள் இலங்கையிலிருந்து புறப்பட்டனர்
- யாழில் சடலம் மீட்பு
வங்கியில் 7 கோடி தங்க ஆபரணங்கள் கொள்ளை
வங்கியில் 7 கோடி தங்க ஆபரணங்கள் கொள்ளை
புத்தளம் – வென்னப்புவ கூட்டுறவுச் சங்கத்திற்குட்பட்ட வாய்க்கால, அங்கம்பிட்டிய பிரதேசத்திலுள்ள கூட்டுறவு கிராமிய வங்கிக்குள் புகுந்த
கொள்ளையர்கள் குழுவொன்று வங்கியின் பாதுகாப்பு பெட்டகத்தை உடைத்து அதிலிருந்து சுமார் 7 கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளதாக வென்னப்புவ தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த தங்க நகைகள் திருடப்பட்டமை தொடர்பில் கூட்டுறவு கிராமிய வங்கியின் முகாமையாளர் வென்னப்புவ தலைமையக பொலிஸ் நிலையத்தின் குற்ற விசாரணை பிரிவில் சனிக்கிழமை (30) முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த வங்கியின் ஜன்னல் கம்பியை வெட்டி அதன் வழியாக உள்ளே சென்ற கொள்ளையர்கள், தங்க நகைகள் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு பெட்டகத்தை (சேப்) இயந்திரங்களின் உதவியுடன் உடைத்து அதிலிருந்த தங்க ஆபரணங்களை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாடிக்கையாளர்கள் வங்கியில் அடகு வைத்திருந்த தங்க நகைகளே இவ்வாறு திருடிச் செல்லப்பட்டுள்ளதாகவும், அதன் பெறுமதி 7 கோடி ரூபா எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கியில் 7 கோடி தங்க ஆபரணங்கள் கொள்ளை
குறித்த வங்கியில் சிசிடிவி கெமராக்கள் பொருத்தப்பட்டுள்ள போதிலும், இந்த கொள்ளையின் பின்னர் வங்கியில் பொருத்தப்பட்ட கெமராக்களின் சில
பகுதிகளையும் கொள்ளையர்கள் எடுத்துச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாக, குறித்த வங்கியைச் சுற்றியுள்ள வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கெமராக்களை பரிசோதனை செய்து,
இக்கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய கொள்ளையர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் வென்னப்புவ தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
அரச வங்கியில் ரூ2கோடி பெறுமதியான நகைகள் மாயம்
அரச வங்கியில் ரூ2கோடி பெறுமதியான நகைகள் மாயம்
அரச வங்கியொன்றில் இருந்து 2 கோடி ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியான தங்க நகைகள் காணாமற்போயுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.
மட்டக்களப்பு ஓட்டமாவடியில் உள்ள அரச வங்கியொன்றில் அடகு வைக்கப்பட்டிருந்த தங்க நகைகளே இவ்வாறு மாயமாகியுள்ளன.
கடனைப் பெறுவதற்காக அடகு வைக்கப்பட்ட தங்கப் நகைகளுக்கான வட்டியை புதுப்பிக்க வாடிக்கையாளர் ஒருவர் வங்கிக்குச் சென்றபோது, அவர் அடகு வைத்திருந்த தங்க நகை காணாமல் போயுள்ளமை தெரியவந்துள்ளது.
அந்த வங்கியின் முகாமையாளர் தலைமைக் காரியாலயத்தில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் அரச வங்கியின் மட்டக்களப்பு தலைமை அலுவலக அதிகாரிகள் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட உள்ளகப் பரிசோதனையினை மேற்கொண்டனர்.
அடகு வைக்கப்பட்டுள்ள தங்கப் பொருட்களைத் தவிர, வாடிக்கையாளர், மற்ற 12 வாடிக்கையாளர்களின் தங்க நகைகள் அடங்கிய பொதிகளையும் காணவில்லை என கண்டறியப்பட்டது.
2022 ஜனவரி முதல் டிசெம்பர் வரை அடகு வைக்கப்பட்ட தங்க நகைகளே இவ்வாறு காணாமல் போயுள்ளன.
வாடிக்கையாளர்கள் அடகு வைத்துள்ள தங்க நகை வைக்கப்பட்டிருந்த பெட்டகத்தின் இரண்டு சாவிகள் வங்கியின் இரண்டு அதிகாரிகளின் வசம் இருந்ததாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு கோடி ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியான தங்க நகைகள்
காணாமல் போனமை தொடர்பில் விசேட விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் ஆரம்பித்துள்ளனர்.
மோட்டர் சைக்கிள் திருடர்கள் மடக்கி பிடிப்பு
மோட்டர் சைக்கிள் திருடர்கள் மடக்கி பிடிப்பு
இலங்கை கம்பாக பகுதியில் ஊந்துருளியில்ஸ் என்று நகை வழிப்பறி கொள்ளையில்
ஈடுபட்ட வந்த நபர்கள் பொலிஸாரினால் மடக்கி பிடிக்க பட்டுள்ளனர்
இருவர் மீது சந்தேகம் கொண்ட போலீசார் அவர்களை பிடித்து விசாரித்த பொழுதே
மேற்படி விடயம் தெரிய வந்துள்ளது
வவுனியாவில் நகை திருட்டு அதிகரிப்பு
வவுனியாவில் நகை திருட்டு அதிகரிப்பு
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதர நெருக்கடி காரணமாக திருட்டு சம்பவம் அதிகரித்துள்ளது ,
வவுனியா – குருமண்காடு, யாழ் வீதி, இறம்பைக்குளம், கோவில்குளம் பகுதியில்
நகைகள் திருடர்கள் கத்தி முனையில்
நகைகளை திருடி செல்வதாக தெரிவிக்க படுகிறது
26 லட்சம் ரூபா நகை திருடனை மடக்கி பிடித்த பொலிஸ்
26 லட்சம் ரூபா நகை திருடனை மடக்கி பிடித்த பொலிஸ்
இலங்கை அநுராதபுரம், தலாவையில் உள்ள நகை கடை ஒன்றில் இருபத்தி ஆறு லட்சம்
ரூபா பெறுமதியான நகைகளை கொள்ளையடித்து சென்ற திருடனை
போலீசார் மடக்கி பிடித்தனர்
அவரிடம் கொள்ளையடித்த நகைகளை விற்க இரகசிய முகவர் ஒன்றை பயன் படுத்தி
அதன் ஊடாக இந்த திருடனை கைதுசெய்துள்ளனர்
கைதானவர் நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளார்
கோப்பாயில் சிக்கிய கொள்ளையர்கள் – நகைகள் மீட்பு
கோப்பாயில் சிக்கிய கொள்ளையர்கள் – நகைகள் மீட்பு
யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்து கத்தி முனையில் நகை
கொள்ளையடித்து செல்ல பட்டது
மேற்படி கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று கொள்ளையர்கள் கைது செயய் பட்டதுடன்
இவர்களிடம் இருந்து திருட பட்ட ஆறு லட்சம் ரூபா பெறுமதியான நகைகளும் மீட்க பட்டுள்ளன
போலி நகைகளை அடகு வைத்து லட்சக்கணக்கில் மோசடி
போலி நகைகளை அடகு வைத்து லட்சக்கணக்கில் மோசடி
தனியார் நகைக்கடன் வழங்கும் நிறுவனத்தில் போலி நகைகளை அடகு வைத்து வாடிக்கையாளர்கள் கடன் பெற்று இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக 2 ஊழியர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
காஞ்சிபுரம் தனியார் நிறுவனத்தில் போலி நகைகளை அடகு வைத்து லட்சக்கணக்கில் மோசடி
நகைகள்
மும்பையை தலைமையிடமாகக் கொண்டு எஸ்.பி. எப்.சி. எனும் பெயரில் தனியார் நகைக்கடன் வழங்கும் நிறுவனம் காஞ்சிபுரம் காமராஜர் வீதியில் செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனத்தில் ஆண்டுதோறும் கணக்கு வழக்குகளை தணிக்கை செய்வது வழக்கம். கடந்த சில தினங்களாக நகைக்கடன் வழங்கும் நிறுவனத்தில் தலைமை நிறுவனத்தில் இருந்து வந்த அதிகாரிகள் கணக்குகளை தணிக்கை செய்த போது திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
தனியார் நகைக்கடன் வழங்கும் நிறுவனத்தில் போலி நகைகளை அடகு வைத்து வாடிக்கையாளர்கள் கடன் பெற்று இருப்பது தெரியவந்தது.
இது குறித்து வங்கியில் பணிபுரியும் ஊழியர்களான காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன், மகேஷ் ஆகியோரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அவர்கள் இருவரும் வாடிக்கையாளர்களின் பெயரில் போலி நகைகளை அடகு வைத்து கடன் பெற்றதாக கணக்கு காட்டி பல லட்சம் பணத்தை எடுத்து மோசடி செய்து இருப்பது தெரியவந்தது.
இச்சம்பவம் குறித்து தனியார் நகை கடன் நிறுவன தலைமை அதிகாரி விஷ்ணு காஞ்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் தனியார் நகை கடன் வழங்கும் நிறுவனத்தில் பணிபுரிந்த இரு ஊழியர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நகைக்கடன் தள்ளுபடி- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
நகைக்கடன் தள்ளுபடி- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
உண்மையான ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் நகைக்கடன் தொகை தள்ளுபடி செய்யப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
நகைக்கடன் தள்ளுபடி- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தங்க நகை
இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.
சட்டசபையில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார். அவர் கூறியதாவது:
- கூட்டுறவு வங்கிகளில் ஒரு குடும்பத்திற்கு 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும்.
- உண்மையான ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் நகைக்கடன் தொகை தள்ளுபடி செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ரூ.6 ஆயிரம் கோடி அளவிற்கான நகைக்கடன் தள்ளுபடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
13 லட்சம் ரூபா நகைகளை திருடிய இருவர் கைது
13 லட்சம் ரூபா நகைகளை திருடிய இருவர் கைது
இலங்கை கதிர்காமம் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் வீடுகளுக்குள் புகுந்து நகைகளை திருடிய திருடர்கள் இருவர் காவல்துறையினரால் கைது செய்ய பட்டுள்ளனர்
இவ்வாறு கைதானவர்கள் தீவிர விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளனர்
மேலும் அவர்கள் திருடிய நகைகளும் மீட்க பட்டுள்ளன
விமான நிலைய மாலசல கூடத்திற்குள் இருந்து ஒரு கோடியே 30 லட்சம் ரூபா நகைகள் மீட்பு
விமான நிலைய மாலசல கூடத்திற்குள் இருந்து ஒரு கோடியே 30 லட்சம் ரூபா நகைகள் மீட்பு
இலங்கை கட்டுநாயாக்க விமான நிலையத்தில் உள்ள கழிவறை பகுதிக்குள் கைவிட பட்ட
நிலையில் சுமார் ஒரு கோடியே முப்பது லட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் மீட்க பட்டுள்ளன
இவ்வாறு மீட்க பட்ட நகைகள் அரச உடமையாக்க பட்டுள்ளது
நகைக் கடையில் 3.8 பில்லியன் ரூபா நகை கொள்ளை -திருடர்கள் கைது
நகைக் கடையில் 3.8 பில்லியன் ரூபா நகை கொள்ளை -திருடர்கள் கைது
இலங்கை திருகோணமலையில் உள்ள நகைக்கடை ஒன்றில் ஆயுத முனையில்
புகுந்த திருடர்ககள் அப்கிருந்து சுமார் 3,8 மில்லியன் ரூபா பெறுமதியான நகைகளை திருடி கொண்டு தப்பி ஓடினர்
மேற்படி கொள்ளை சம்பவம் தொடர்பில் போலீசார் மேற்கொண்ட
விசாரணைகளின் பின்னர் தற்போது ஆறு பேர் கைது செய்ய பட்டுள்ளனர்
கைதானவர் தொடர்நது தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டு வருகின்றனர்
நகை கடைக்குள் புகுந்த திருடர்கள் – நகைகளை அள்ளி சென்றனர்
நகை கடைக்குள் புகுந்த திருடர்கள் – நகைகளை அள்ளி சென்றனர்
இலங்கை கிழக்கு திருமலை என்.சீ வீதியில் அமைந்துள்ள நகை
கடை ஒன்றுக்குள் ஆயுத முனையில் புகுந்த முகமூடி கொள்ளையர்கள்
அங்கிருந்த ஊழியர்களை மிரட்டி பெரும் தொகையான நகைகளை திருடி கொண்டு தப்பி சென்றுள்ளனர்
இங்கு இடம்பெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பில் பொலிசாருக்கு தெரிய படுத்த
பட்ட நிலையில் குறித்த குற்றவாளிகளை கைது செய்யும் தீவிர நகர்வில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்
நகைகளை எப்படி பராமரிக்க வேண்டும் தெரியுமா
நகைகளை எப்படி பராமரிக்க வேண்டும் தெரியுமா
தங்க நகைகளை போல் வைர நகைகளை அலட்சியமாக வைத்துவிட
முடியாது. அதற்கென்று தனி பராமரிப்பு முறை இருக்கிறது. வைர நகைகளை தினசரி உபயோகத்துக்கு பயன்படுத்தக் கூடாது.
ஒரு காலத்தில் தங்க நகை கூட நடுத்தர மக்களுக்கு எட்டாத நிலையில்
இருந்தது. இன்று பலரும் வைர நகைகளை தங்கள் வீடுகளில் வைத்திருக்கிறார்கள்.
தங்க நகைகளை போல் வைர நகைகளை அலட்சியமாக வைத்துவிட முடியாது.
அதற்கென்று தனி பராமரிப்பு முறை இருக்கிறது. வைர நகைகளை தினசரி
உபயோகத்துக்கு பயன்படுத்தக் கூடாது. வீட்டில் அதை போட்டுக்கொண்டு
சமைப்பது, துவைப்பது, சுத்தம் செய்வது, பாத்திரம் கழுவுவது போன்றவை செய்யக்கூடாது.
வீட்டில் குளிக்கும் போதும் சரி, சுற்றுலா செல்லும் போது, கடல் மற்றும் நீச்சல்
குளங்களில் குளிக்கும் போதும் கண்டிப்பாக வைரம் அணியக்கூடாது.
நீச்சல் குளத்தில் உள்ள குளோரின் தண்ணீரும், கடலில் உள்ள உப்புநீரும் வைரத்துக்கு ஆகாதது.
நகைகளை எப்படி பராமரிக்க வேண்டும் தெரியுமா
எல்லாவிதமான அலங்காரங்களும் அழகுசாதனங்களும் பயன்படுத்தப்பட்ட
பின் கடைசியாகத்தான் வைர நகைகளை அணிந்து கொள்ளவேண்டும்.
அழகு சாதனங்களில் இருக்கும் ரசாயனங்கள் வைரத்தின் மீது பட்டால்
வைரம் கருத்துவிடு்ம். இப்படி கருத்த நகைகளை சுத்தம் செய்ய சாக் பவுடரை
பஞ்சால் தேய்த்து அழுத்தி துடைத்தெடுத்தால் வைரம் பழைய பளபளப்பு பெற்றுவிடும்.
விழாக்கள் முடிந்து வீடு வந்ததும் வைர நகைகளை கழற்றி வைத்துவிட வேண்டும்.
அதற்கு முன் கழற்றிய நகையை ஒரு பாத்திரத்தில் நல்ல தண்ணீரை வைத்து அதற்குள்
நகையை மூழ்குமாறு அமிழ்த்தி வைத்துவிட வேண்டும். சில நிமிடங்கள்
கழித்து நகையை வெளியே எடுத்து மென்மையான பருத்தி துணியால் துடைத்து, காய்ந்த பின் உள்ளே வைக்க வேண்டும்.
வைர நகைகளை சுத்தம் செய்ய இளம் சூடான நீரில் முக்கி எடுத்து பழைய பல் துலக்கும் பிரஷ்சால், சோப்பை தொட்டு லேசாக
தேய்த்து, பிறகு தண்ணீரில் சுத்தமாக அலசி துடைத்து வைக்கலாம். வைரக்கற்களில் நேரடியாக கை படக்கூடாது. தங்கம் இருக்கும்
நகைகளை எப்படி பராமரிக்க வேண்டும் தெரியுமா
பகுதியை பிடித்துக்கொண்டே சுத்தம் செய்யவேண்டும். வைர நகைகளை குளியலறையிலோ, தோட்டத்திலோ வைத்து சுத்தம்
செய்யக்கூடாது. வைரக்கல் ஏதாவது உதிர்ந்து விழுந்தால் கண்டுபிடிக்க முடியாது. வீட்டினுள் ஏதாவது ஒரு பாத்திரத்தில் வைர
நகைகளை வைத்து சுத்தம் செய்ய வேண்டும். சுத்தம் செய்த பிறகு கற்கள் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பாருங்கள். அதன்பின்னே கழுவிய தண்ணீரை கீழே ஊற்றுங்கள்.
வங்கி லாக்கரில் வைர நகைகளை சும்மா வைத்திருந்தால் கூட நாளடைவில் அது கருத்துவிடும். அதற்காக பிரத்யேகமாக
செய்யப்பட்ட பெட்டிகளில் வைத்து, அதிலும் மென்மையான வெல்வெட் துணியால் சுற்றி வைப்பதுதான் கருகாமல் இருக்க வழி.
தங்க நகைகளுடன் சேர்த்து வைர நகைகளை வைக்கக்கூடாது. தனித்தனி அறை கொண்ட ஜிப் வைத்த நகைப்பை கிடைக்கிறது. அதில் வைத்துக்கொள்ளலாம்.






















