Tag: பொருளாதாரம்
இலங்கை ரூபாய்வீழ்ச்சி தள்ளாடும் பொருளாதாரம்
இலங்கை ரூபாய்வீழ்ச்சி தள்ளாடும் பொருளாதாரம்
இலங்கை ரூபாய்வீழ்ச்சி தள்ளாடும் பொருளாதாரம் ,இலங்கை ரூபாய் பாரிய வளர்ச்சி அடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது .
இன்றைய நாணயமாற்றின் படி ஒரு அமெரிக்க டாலர் 296 ரூபாய்கி 56 சதமாக உள்ளதாக தெரிவித்தார்.
ஈரான் இஸ்ரேல் யுத்தத்தம்
இதன் அடிப்படையில் ஈரான் இஸ்ரேல் யுத்தத்தினால் தற்போது இலங்கையின் பொருளாதாரம் பலமான வீழ்ச்சியை சந்தித்து வருவதாக காணப்படுகிறது.
மேலும் ஒரு மாதங்கள் இஸ்ரேல் ,ஈரானுக்கு இடையிலான போர் நீடித்தால் இலங்கையின் பொருளாதாரம் மிகப் பெரும் மாற்றத்தை, காண்பதுடன் ஆளும் அனுர ஆட்சிக்கு மிகப் பெரும் ஆபத்தை அது ஏற்படுத்தும் என எதிர் பார்க்க படுகிறது .
அதனால் தான் தற்பொழுது இரு நாடுகளையும் உடனடியாக சமரச பேச்சுக்கு வருமாறு அமெரிக்க அழைப்பு விடுத்துள்ளது .
உலக நாடுகளின் பொருளாதாரம்
உலக நாடுகளின் பொருளாதாரம் இந்த யுத்தம் நீடித்தால் மிகப்பெரும் ஆட்டம் காண்பதுடன் ,அந்த அரசாட்சிகள் காணாமல் போகக்கூடிய வாய்ப்பு உள்ளது.
இவ்வாறான நிலையில் தற்பொழுது வீழ்ந்து போய் கிடக்கிற இலங்கையின் ஆட்சி அதிகாரமும் பொருளாதாரமும் ,மீளவும் எழுந்து படுத்தாள் அனுரா ஆட்சி ,கோத்தாவை போல தூக்கி எறியப்படக்கூடிய வாய்ப்பு உள்ளதாக நம்பிக்கை வெளியிடப்படுகிறது.
- புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்

- புத்தாண்டில் இருவர் படுகொலை

- புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன

- புட்டால சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலி

- கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம் நாமல்

- 200க்கும் மேற்பட்ட ஈரானிய கடற்படை வீரர்கள் இலங்கையிலிருந்து புறப்பட்டனர்

- யாழில் சடலம் மீட்பு

- இன்று வரையறுக்கப்பட்ட பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள்

- புலிகள் ஆயுதக் கிடங்கில் வீழ்ந்த அனுரா

- பண்டிகைக் காலத்தில் சாலை விபத்து மரணங்கள்

- சூரிய மின்சக்தி பயனர்களுக்கு இன்று ஆப்பு

- சிங்களப் புத்தாண்டின் புனிதமான நாளாம்

- ஜனாதிபதியின் புத்தாண்டுச் செய்தி ஒற்றுமை செழிப்பு

- எரிஎண்ணெய் சரக்கு இலங்கைக்கு வந்து சேர்ந்தது

இலங்கைக்கு ஏற்படவிருக்கும் ஆபத்து
இலங்கைக்கு ஏற்படவிருக்கும் ஆபத்து
இலங்கைக்கு ஏற்படவிருக்கும் ஆபத்து ,ஈரான் இஸ்ரேல் போர் மிகவும் மோசமடைந்து வரும் நிலையில், அமெரிக்காவும் தாக்குதலை ஆரம்பித்திருக்கும் நிலையில், இலங்கைக்கு பேராபத்து ஏற்படப்போவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
உலக சந்தையில் எரிபொருள் விலை
உலக சந்தையில் எரிபொருள் விலையுடன் இலங்கையின் எரிபொருள் விலையை சமநிலைப்படுத்த வேண்டிய கட்டாயம் காணப்படுகிறது.
இவ்வாறான நிலைமைகளால் இலங்கையில் பொருளாதார மந்த நிலைமை ஏற்படக் கூடிய அபாயமும் காணப்படுகிறது.
எனவே பொருளாதாரத்தை மேம்படுத்தக் கூடிய பொருளாதார மறுசீரமைப்புக்களை முன்னெடுக்க வேண்டியது அத்தியாவசியமானதாகும் என பொருளாதார ஆய்வாளர் தயநாத் பெர்னாண்டோ தெரிவித்தார்.
கொழும்பில் திங்கட்கிழமை (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
எரிபொருள் இறக்குமதி
தற்போது சுமார் நான்கரை பில்லியன் டொலர் எரிபொருள் இறக்குமதிக்காக செலவிடப்படுகிறது.
மத்திய கிழக்கு மோதலால் உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்தால், எமக்கும் இறக்குமதி செலவு அதிகரிக்கும்.
எனவே மாத இறுதியில் எரிபொருள் விலைகள் சடுதியாக அதிகரிக்கக் கூடிய அபாயம் காணப்படுகிறது.
அத்தோடு மத்திய கிழக்கு நாடுகளிலிருந்தே எமக்கு அதிகளவான அந்நிய செலாவணியும் கிடைக்கின்றது.
2024 முதல் காலாண்டில் இஸ்ரேலிலிருந்து 20 – 25 மில்லியன் டொலர் அந்நிய செலாவணி கிடைத்துள்ளது.
வருடத்துக்கு சுமார் 100 மில்லியன் டொலர் இஸ்ரேலிலிருந்து மாத்திரம் கிடைக்கப் பெறுகின்றது.
இவ்வாறு மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து கிடைக்கும் அந்நிய செலாவணியில் ஸ்திரமற்ற நிலைமை ஏற்படக் கூடும்.
அமெரிக்காவின் தலையீட்டுடன் இந்த பூகோள மோதல் நிலைமைகளில் இலங்கையும் பாதிக்கப்படக் கூடிய வாய்ப்புக்களும் காணப்படுகின்றன.
இலங்கையின் ஏற்றுமதிகளில் அமெரிக்கா முன்னிலை வகிக்கிறது.
அதனையடுத்து ஐரோப்பிய பிராந்தியம் மற்றும் சீனா என்பன காணப்படுகின்றன.
எனவே தான் இந்த மோதல்கள் இலங்கையில் நேரடிய தாக்கத்தை செலுத்தும் எனக் குறிப்பிடுகின்றோம்.
ஈரானுக்கு பெருமளவில் தேயிலை ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதிலும் பாதிப்பு ஏற்படக் கூடிய அபாயமும் நிலவுகிறது.
இஸ்ரேலுக்கும் குறிப்பிட்டளவு உற்பத்திகள் ஏற்றுமதி செய்யப்படுவதோடு, இறக்குமதிகளும் உள்ளன.
இவ்வாறு ஏற்படக் கூடிய பாதிப்புக்களை குறைத்துக் கொள்வதற்கு முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும்.
உலக சந்தையில் எரிபொருள் விலையுடன் இலங்கையின் எரிபொருள் விலையை சமநிலைப்படுத்த வேண்டிய கட்டாயம் காணப்படுகிறது.
எரிபொருள் விலை சமநிலைப்படுத்தப்படாவிட்டால் பின்நாட்களில் ஏனைய விளைவுகள் ஏற்படக் கூடிய ஆபத்தும் காணப்படுகிறது.
அத்தோடு இராஜதந்திர ரீதியிலும் திட்டமிடல்களை முன்னெடுக்க வேண்டும்.
குறிப்பாக இவ்வாறான நிலைமைகளால் இலங்கையில் பொருளாதார மந்த நிலைமை ஏற்படக் கூடிய அபாயமும் காணப்படுகிறது. 2028இல் இவ்வாறானதொரு நிலைமை ஏற்படக் கூடும்.
எனவே பொருளாதாரத்தை மேம்படுத்தக் கூடிய பொருளாதார மறுசீரமைப்புக்களை முன்னெடுக்க வேண்டியது அத்தியாவசியமானதாகும்.
எவ்வாறிருப்பினும் இறக்குமதி கட்டுப்பாடுகள் இதற்கு பொறுத்தமான தீர்வாக அமையாது.
ஆனால் உலக சந்தையில் எரிபொருள் விலையுடன் இலங்கையில் எரிபொருள் விலை சமநிலைப்படுத்தப்பட்டால்
, இறக்குமதிகள் இயல்பாகவே மட்டுப்படும். விலைகள் உயர்வடையும் போது அவற்றின் பாவனைகளும் படிபடிப்படியாகக் குறைவடையும்.
எரிபொருள் விலை அதிகரிக்கும் பட்சத்தில் ஏனைய இறக்குமதிகளுக்கான செலவினையும், எரிபொருள் இறக்குமதியில் உள்ளடக்க வேண்டும்.
இவ்வாறான நிலைமையில் முறையான நிதி முகாமைத்துவம் இல்லாவிட்டால் அந்நிய செலாவணி இருப்பிலும் அது தாக்கம் செலுத்தக் கூடிய வாய்ப்புள்ளது.
அதனை விடுத்து நேரடியாக இறக்குமதிகளால் அந்நிய செலாவணி இருப்பிற்கு பாதிப்பு ஏற்படாது.
காரணம் ஏற்றுமதி வருவாய், சுற்றுலாத்துறை வருவாய் உள்ளிட்ட சேவை ஏற்றுமதியூடாக கிடைக்கப் பெறும் டொலர்களே இறக்குமதிக்கும் பயன்படுத்தப்படுகின்றன.
ரூபாவின் பெறுமதியைப் பேணுவதும் இங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். மாறாக ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்தால் பணவீக்கம் அதிகரிக்கும் என்றார்.
ஈரான் – இஸ்ரேல் யுத்தமும் உலக பொருளாதாரமும்
ஈரான் – இஸ்ரேல் யுத்தமும் உலக பொருளாதாரமும்
ஈரான் – இஸ்ரேல் கடும் மோதல் தொடர்ந்து நீடிக்குமானால், அது ஒரு கிளவுப்பெறும் உலக பொருளாதார அதிர்வலை ஏற்படுத்தும்.
அது எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தும் என நோக்குவோமாயின்,
எண்ணெய் விலை உயர்வு, பங்கு சந்தை வீழ்ச்சி, விலைவாசி உயர்வு, மற்றும் வளர்ந்து வரும் நாடுகளின் பொருளாதார நெருக்கடிகள் ஆகியவை மிக முக்கியமான விளைவுகளாக அமையும்.
எரிசக்தி மற்றும் எண்ணெய் விலை
மத்திய கிழக்கு என்பது உலக எண்ணெய் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் பகுதியாகும்.
ஈரான் Hormuz என்ற முக்கிய எண்ணெய் கப்பல் போக்குவரத்து பாதையை கட்டுப்படுத்தும் நிலையில் உள்ளது.
யுத்தம் தீவிரமானால், எண்ணெய் மற்றும் எரிவாயு விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
இது உலகளாவிய மின்சாரம், போக்குவரத்து மற்றும் உற்பத்தி செலவுகளை அதிகரிக்கச் செய்யும்.
பங்கு சந்தை மற்றும் நாணயமாற்று வீதம் பாதிப்பு
முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகள் நோக்கி நகர்வார்கள்.
மொத்த பங்கு சந்தைகள் கீழோங்க வாய்ப்பு உள்ளது.
உள்ளூர் நாணயங்கள் (முதலாவது ஈரான் மற்றும் இஸ்ரேல், பின்பு பிற வளர்ந்து வரும் நாடுகள்) மதிப்பிழக்கும்.
சர்வதேச வர்த்தகம் மற்றும் விலைவாசி
கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டால், கடல் வழி இறக்குமதி/ஏற்றுமதியில் தாமதம் ஏற்படும்.
இதில் முக்கிய பொருட்கள் (பட்ஜெட் எரிவாயு, உலோகங்கள், வேதியியல் பொருட்கள்) பற்றாக்குறை ஏற்படும்.
இது உலகளாவிய விலைவாசி (Inflation) அதிகரிக்க வழிவகுக்கும்.
உற்பத்தி மற்றும் விநியோக சுழற்சி
ஆசியா மற்றும் ஐரோப்பாவில் உள்ள உற்பத்தி நிறுவனங்களுக்கு தேவையான மூலப்பொருட்கள் மற்றும் எரிசக்தி நெருக்கடி ஏற்படும்.
விநியோக சுழற்சி பாதிப்பால், குறிப்பிட்ட தொழில்துறைகள் (அறிவியல் தொழில்நுட்பம், மருந்து, வாகனங்கள்) தடைப்படும்.
உலக அரசியல் மற்றும் பொருளாதார உறவுகள்
பெரும்பான்மையான நாடுகள் ஒரு பக்கம் ஆதரவு கொடுத்தால், பொருளாதார தடைகள் (sanctions) மற்றும் வர்த்தக தடைகள் அதிகரிக்கும்.
சர்வதேச நாணய நிதியம் (IMF), உலக வங்கி போன்ற அமைப்புகள் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு உதவி வழங்கும் நிலையில் தள்ளப்படும்.
பயணம் மற்றும் சுற்றுலா
யுத்தம் நிலவரம் நிலவும்போது விமான போக்குவரத்து மற்றும் சுற்றுலா குறையும்.
இது சுற்றுலாத்துறை மற்றும் ஹோட்டல் துறைக்கு நேரடி பாதிப்பாக இருக்கும்.
இதனால் ஒவ்வொரு நாட்டில் பொருளாதாரமும் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகும்.
அமெரிக்க பொருளாதாரம் தன் கைக்குள் இருக்க திட்டமிட்ட பின்லேடன்
அமெரிக்க பொருளாதாரம் தன் கைக்குள் இருக்க திட்டமிட்ட பின்லேடன்
அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதலுக்கு பின்னர் 2-வது தாக்குதல் ஒன்றையும் நடத்த ஒசாமா பின்லேடன் திட்டமிட்ட ரகசிய தகவல் வெளியிடப்பட்டு உள்ளது.
அமெரிக்க பொருளாதாரம் தன் கைக்குள் இருக்க திட்டமிட்ட பின்லேடன்: ரகசிய தகவல் வெளியீடு
ஒசாமா பின்லேடன்
அமெரிக்காவில் கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ந்தேதி பயணிகள் விமானங்களை கடத்திய அல்-கொய்தா பயங்கரவாதிகள் அவற்றை நியூயார்க்கில்
உள்ள உலக வர்த்தக மையமான இரட்டை கோபுரத்தின் மீதும், வாஷிங்டனில் உள்ள அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் மீதும் மோதி தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் 3 ஆயிரம் பேர் வரை கொல்லப்பட்டனர். இதற்கு பின்னணியில் இருந்து செயல்பட்ட அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா
பின்லேடனை 10 ஆண்டுகளுக்கு பின் அமெரிக்க படைகள் பாகிஸ்தானில் வைத்து சுட்டு கொன்றன. பின்லேடனை பிடிக்கும் பணியில் அமெரிக்காவின் நேவி சீல் படைகள் ஈடுபட்டன.
அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதலுக்கு பின்னர் 2-வது தாக்குதல் ஒன்றையும் நடத்த ஒசாமா பின்லேடன் திட்டமிட்ட ரகசிய தகவல் வெளியிடப்பட்டு உள்ளது. பின்லேடனை உயிருடனோ அல்லது சுட்டு பிடிப்பதற்கான பணிக்காக அமெரிக்காவின்
நேவி சீல் படையை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் கொண்ட குழுவானது, பின்லேடனை கொன்ற பின்பு ஆயிரக்கணக்கான பக்கங்களை கொண்ட தனிப்பட்ட கடிதங்கள் மற்றும் குறிப்புகளை கைப்பற்றி வகைப்படுத்தியுள்ளன.
இவற்றை ஆய்வு செய்த இஸ்லாமிய பெண் பண்டிதரான நெல்லி லகோத் பேட்டி ஒன்றில் கூறும்போது, செப்டம்பர் 11 தாக்குதலுக்கு பின் அமெரிக்கர்கள் எப்படி எதிர்வினையாற்றினர் என்று பின்லேடன் ஆச்சரியப்பட்டு உள்ளார்.
அமெரிக்கர்கள் தெருக்களில் இறங்கி அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி, முஸ்லிம் அதிகம் வசிக்கும் பகுதியில் இருந்து வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தவார்கள் என பின்லேடன் நினைத்து உள்ளார். ஆனால், அவரது கணக்கு தவறாகி விட்டது.
அமெரிக்கா அவரை தேடுகிறது என அறிந்ததும், அல்-கொய்தா அமைப்பினருடன் பின்லேடன் 3 ஆண்டுகளாக தொடர்பில் இல்லாமல் இருந்துள்ளார். ஆனால், 2004ல்
மீண்டும் அந்த பயங்கரவாத குழுவில் இணைந்துள்ளார். அமெரிக்காவின் மீது தனது புதிய தாக்குதல் பற்றி குழு உறுப்பினர்களிடம் தெரிவித்து உள்ளார்.
9/11 தாக்குதலை மீண்டும் நடத்த பின்லேடன் ஆர்வம் காட்டினார். ஆனால், விமான நிலையங்களில் கடுமையான பாதுகாப்பு விசயங்கள் கடைப்பிடிக்கப்பட்டன. இதனை கவனத்தில் கொண்டு பயணிகள் விமானத்திற்கு பதிலாக சார்ட்டர் விமானம் ஒன்றை
கொண்டு அமெரிக்கா மீது அடுத்த தாக்குதலை நடத்தலாம் என்று அந்த அமைப்பின் சர்வதேச பயங்கரவாத குழுவுக்கு பின்லேடன் கடிதம் ஒன்றில் தெரிவித்து உள்ளார்.
விமானம் வழியே தாக்குதல் நடத்துவது மிக கடினம் என்றால், அமெரிக்க ரெயில்வே மீது குறிவைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். சிவில் என்ஜினீயரிங் படித்த
பின்லேடன், அமெரிக்கா மீது எப்படி சரியாக தாக்குதல் நடத்த வேண்டும் என திட்டம் தீட்டியுள்ளார். ரெயில் தண்டவாள பகுதியில் 12 மீட்டர் அளவுக்கு வெட்டி எடுக்கும்படி கூறியுள்ளார்.
இதனால் ரெயில் தடம் புரண்டு, நூற்றுக்கணக்கானோர் செத்து மடிவார்கள் என்பது பின்லேடனின் திட்டம். இதற்காக கம்பிரசர்களை பயன்படுத்துங்கள். இரும்பு
கருவிகளையும் பயன்படுத்துங்கள் என்று பின்லேடன் தனது சகாக்களிடம் கூறியுள்ளார்.
எனினும், அதிர்ஷ்டவசத்தில், பின்லேடனால் இந்த திட்டங்களை ஒருபோதும் நிறைவேற்ற முடியாமல் போனது என்று லகோத் கூறியுள்ளார்.
இதுதவிர, கடந்த 2010ம் ஆண்டு மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க பகுதிகளில், கச்சா எண்ணெய் டேங்கர்கள் மற்றும் பெரிய கடல்வழி பகுதிகளிலும் தாக்குதல் நடத்த திட்டம் தீட்டப்பட்டு உள்ளது.
இதற்காக மீனவர்களை போன்று காட்டி கொண்டு துறைமுக பகுதிகளுக்கு செல்ல வேண்டும்.ரேடாரில் இருந்து தப்புவதற்காக குறிப்பிட்ட படகுகளை எங்கு வாங்க
வேண்டும். வெடிபொருட்களை கடத்தி செல்ல அந்த படகுகளை எப்படி பயன்படுத்த வேண்டும் உள்ளிட்ட விவரங்களை தனது குழுவுக்கு பின்லேடன் விவரமுடன் தெரிவித்து உள்ளார். உண்மையில்,
அமெரிக்க பொருளாதாரம் தனது கைக்குள் இருக்க வேண்டும் என்று பின்லேடன் விரும்பினார் என்று லகோத் கூறியுள்ளார்.
இலங்கை பொருளா தாரத்தில் பெரும் இடி – நெருக்கடியில் அரசு
இலங்கை பொருளா தாரத்தில் பெரும் இடி – நெருக்கடியில் அரசு
இலங்கையில் ஏற்பட்டு ஊரடங்கு சட்டத்தை அடுத்து நாடளாவியே ரீதியில் வார்தகங்கள் முடக்க பட்டுள்ளன ,மக்கள் வீடுகளுக்குள்
முடக்க பட்டுள்ள நிலையில் வியாபாரங்கள் இன்றி வர்த்தக நிறுவனங்கள் அடித்து மூட பட்டுள்ளன
இதனால் நாள் தோறும் இலங்கைக்கு பல நூறு மில்லியன் நஷ்டம் ஏற்பட்டுள்ளது ,இதனை
நிவர்த்தி செய்திட அரசு ஊரடங்கு சட்டத்தை தளர்த்திட முனைந்த பொழுதும் அது தோல்வியில் முடிந்துள்ளது
உலக நாடுகளிடம் ஓடி ஓடி கடன்களை பெற்ற இலங்கை அரசு இப்பொழுது அதனை செலுத்திட முடியாது
அரசு திணறி வருகிறது
இந்த பெரும் பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை எவ்வாறு மீண்டு வரப்போகிறது என்பதே இன்று எழுந்துள்ள
கேள்வியாகவும் ,இலங்கை ஆளும் ஆட்சி தப்புமா …? அல்லது கவிழுமா என்பது கொரனோ முடிவில் தெரிய வரும் எனலாம் .

















