Tag: அகதிகள்
கடல்வழியாக லண்டனுக்குள் நுளைந்த 738அகதிகள்
கடல்வழியாக லண்டனுக்குள் நுளைந்த 738அகதிகள்
கடல்வழியாக லண்டனுக்குள் நுளைந்த 738அகதிகள் ,737 புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் செல்லும் சிறிய படகுகள் 28 நாட்கள் இடைநிறுத்தப்பட்டு கால்வாயைக் கடந்தன
சனிக்கிழமை 700க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் ஆங்கிலக் கால்வாயைக் கடந்தனர்,
இந்த ஆண்டில் இதுவரை மொத்தம் 40,029 ஆக உயர்ந்துள்ளது
இதன் மூலம் இந்த ஆண்டில் இதுவரை மொத்தம் 40,029 ஆக உயர்ந்துள்ளது, மேலும் 28 நாட்கள் படகுகள் கடக்காத நிலையும் முடிவுக்கு வந்தது.
டிசம்பர் 13 அன்று 737 பேரை ஏற்றிச் சென்ற மொத்தம் 11 படகுகள் கடக்கத் தொடங்கின என்று உள்துறை அலுவலக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
கடைசியாக 2022 ஆம் ஆண்டில் ஒரு வருடத்தில் 40,000க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் கடக்கப்பட்டது, அப்போது அந்த ஆண்டில் மொத்தம் 45,755
பேர் இருந்தனர், 2023 ஆம் ஆண்டில் மொத்தம் 29,347 பேரும் 2024 ஆம் ஆண்டில் 36,816 பேரும் இருந்தனர்.
புலம்பெயர்ந்தோர் படகுகள்
புலம்பெயர்ந்தோர் படகுகள் இல்லாமல் 28 நாட்கள் இருப்பது 2018 க்குப் பிறகு மிக நீண்ட இடையூறு இல்லாத ஓட்டமாகும்.
சனிக்கிழமை பல புலம்பெயர்ந்தோர் கப்பல்கள் புறப்பட்டதாக அறிக்கைகள் கிடைத்ததாக பிரெஞ்சு கடல்சார் தலைமையாசிரியர் கூறினார்.
- லெபனானில் இஸ்ரேலிய இராணுவ நிலையைத் தாக்க ஹிஸ்புல்லா முயற்சி

- தென் கொரியா 270 மில்லியன் பீப்பாய் எண்ணெயைப் பெற்றுள்ளது

- புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்

- புத்தாண்டில் இருவர் படுகொலை

- புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன

- இந்திய கடலில் மூழ்கிய அகதி கப்பல் 250 பேர் மாயம்

- புட்டால சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலி

- கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம் நாமல்

- ஈரானின் கடல்வழி வர்த்தகத்தை அமெரிக்கா நிறுத்தியது

- வட கொரியா தனது அணு ஆயுதத் திறனை அதிகரித்து வருவதாக ஐ.நா. கண்காணிப்பு அமைப்பு கூறுகிறது.

- 200க்கும் மேற்பட்ட ஈரானிய கடற்படை வீரர்கள் இலங்கையிலிருந்து புறப்பட்டனர்

- யாழில் சடலம் மீட்பு

- அமெரிக்க இராணுவ ஆதரவைச் சார்ந்திருப்பதைக் குறைக்க ஸ்வீடன் அழைப்பு

- வளைகுடா நாடுகளின் இறையாண்மையை மதிக்க வேண்டும் என சீன

- இன்று வரையறுக்கப்பட்ட பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள்

அகதிகள் குடும்பங்களை பிரிட்டன் அழைக்க தடை
அகதிகள் குடும்பங்களை பிரிட்டன் அழைக்க தடை
அகதிகள் குடும்பங்களை பிரிட்டன் அழைக்க தடை ,அகதிகள் தங்கள் குடும்பங்களை பிரிட்டனுக்கு அழைத்து வரும் உரிமையை தானாகவே இழப்பார்கள்.
அகதிகள் சலுகைகளை கோராமல்
அகதிகள் சலுகைகளை கோராமல் தங்கள் பராமரிப்புக்கு போதுமான அளவு சம்பாதிக்கிறார்கள் என்பதைக் காட்ட முடியாவிட்டால், அவர்கள் தங்கள்
குடும்பங்களை இங்கிலாந்துக்கு அழைத்து வருவதில் இருந்து தடை செய்யப்படுவார்கள்.
வெற்றிகரமான புகலிடம் கோருபவர்கள் தங்கள் வருமானத்தைப் பொருட்படுத்தாமல், தங்கள் வாழ்க்கைத் துணைவர்களையும்
குழந்தைகளையும் நாட்டிற்கு அழைத்து வருவதற்கான தற்போதைய தானியங்கி உரிமையை ஷபானா மஹ்மூத் முடிவுக்குக் கொண்டுவருவார்.
இந்த நடவடிக்கைகள் – திங்களன்று அறிவிக்கப்படும் – உள்துறை செயலாளரின் புகலிட முறையை மாற்றியமைப்பதன் ஒரு பகுதியாகும், இது
சட்டவிரோதமாக இங்கிலாந்துக்குள் நுழையும் அகதிகள்
சட்டவிரோதமாக இங்கிலாந்துக்குள் நுழையும் அகதிகள் நிரந்தர தீர்வுக்கு விண்ணப்பிக்க 20 ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தும்.
பிரிட்டனின் “மிகவும் தாராளமான” குடியேற்ற அமைப்பின் “தங்கச் சீட்டு” என்று அவர் கூறுவதை திருமதி மஹ்மூத் முடிவுக்குக் கொண்டுவருவார், இது
தற்போது புலம்பெயர்ந்தோருக்கு நிரந்தர வதிவிடத்தையும், ஐந்து ஆண்டுகள் இங்கிலாந்தில் கழித்த பிறகு நிபந்தனையற்ற சலுகைகளுக்கான அணுகலையும் உறுதி செய்கிறது.
அகதி நிலை தற்காலிகமாக மாறும் என்றும், ஒவ்வொரு 30 மாதங்களுக்கும் மதிப்பாய்வு செய்யப்படும் என்றும் அவர் எம்.பி.க்களிடம் கூறுவார்.
ஒரு புகலிடம் கோருபவரின் நாடு எந்த நேரத்திலும் பாதுகாப்பானதாகக் கருதப்பட்டால், அவர்கள் உடனடியாகத் திருப்பி அனுப்பப்படுவார்கள்.
தற்காலிக புகலிடம் வழங்கப்பட்ட புலம்பெயர்ந்தோர் இனி தங்கள் வாழ்க்கைத் துணைவர்களையோ அல்லது குழந்தைகளையோ தானாகவே மற்றும் நிபந்தனையின்றி UKக்கு அழைத்து வர முடியாது.
பிரிட்டன் அல்லது திறமையான வேலை விசாக்களில் குடியேறுபவர்களைப் போலவே ஆங்கில மொழியின் அதே நிதி நிலைமைகள் மற்றும்
தரநிலைகளைப் பூர்த்தி செய்தால் மட்டுமே அவர்கள் அவ்வாறு செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
UKக்கு கூட்டாளர்களை அழைத்து வர விரும்பும் பிரிட்டன்கள் £29,000 கூட்டு வருமானத்தைக் காட்ட வேண்டும்.
இந்தியாவலியுறுத்து இலங்கை அகதிகளின் பாதுகாப்பு
இந்தியாவலியுறுத்து இலங்கை அகதிகளின் பாதுகாப்பு
இந்தியாவலியுறுத்து இலங்கை அகதிகளின் பாதுகாப்பு ,இந்தியாவிலிருந்து இலங்கைக்கு செல்லும் அகதிகள் குறித்து இந்தியா தனது கருத்தை தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு அனுப்பப்படும் தமிழ் அகதிகள் பாதுகாப்பாக அவர்களது இல்லத்துக்கு போய்ச்சேர உரிய நடவடிக்கைகளை
இந்திய அரசும், தமிழக அரசும் மேற்கொள்ள வேண்டும் என்று திருமாவளவன் எம்பி தெரிவித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்பியின் சகோதரர் நடேசன் (வயது 92) புதுச்சேரி லாஸ்பேட்டை அவ்வைநகரில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று காலமானார்.
அவரது உடலுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நேற்று மாலை அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் திருமாவளவன் எம்பி செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில்,
இந்திய அரசை நம்பி, தாயகம் திரும்பியவர்களை இலங்கை அரசு கைது செய்வது மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது.
அவர்களுக்கான பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டிய பொறுப்பு இந்திய அரசுக்கு உள்ளது. இந்திய அரசு உடனடியாக இதில் தலையிட வேண்டும்.
தமிழகத்தில் இருந்து அல்லது இந்தியாவில் எந்த மாநிலத்தில் இருந்தும் இலங்கைக்கு அனுப்பப்படும் தமிழ் அகதிகளை பாதுகாப்பாக
அவர்களது இல்லத்துக்கு போய்ச்சேர உரிய நடவடிக்கைகளை இந்திய அரசும், தமிழக அரசும் மேற்கொள்ள வேண்டும் என்றார்.
அமெரிக்காவில் 200அகதிகள் நாடு கடத்தல்
அமெரிக்காவில் 200அகதிகள் நாடு கடத்தல்
அமெரிக்காவில் 200அகதிகள் நாடு கடத்தல் நடவடிக்கை இடம் பெற்றுள்ளதாக அமெரிக்கா அரசு அறிவித்துள்ளது .
அமெரிக்காவின் ஆளும் ஜனாதிபதி டிரம்ப் அவர்களின், கடும் போக்கு நடவடிக்கை காரணமாக ,அமெரிக்காவில் நுழைந்த வெனிசுவேலா நாட்டைச் சேர்ந்த 200 பேர் அங்கிருந்து நாடு கடத்தப்பட்டிருக்கின்றனர் .
சிறப்பு அமெரிக்கா விமானத்தின் ஊடாக ,அவர்கள் அமெரிக்கா நாட்டிலிருந்து கைது செய்யப்பட்டு, வலுக்கட்டாயமாக அமெரிக்காவிலிருந்து வெனிசுவேலா நாட்டுக்கு கடத்தப்பட்டுள்ளனர்.
கடந்த ஜுபைடன் ஆட்சி காலத்தில் ,பல வெளிநாட்டவர்களை அமெரிக்காவுக்கு உள்ளே நுழைய அனுமதி அளித்திருந்தது.
அதனை அடுத்து ,அதற்கு எதிராக தனது ஆட்சி அதிகாரம் இருக்கும் என்பதை காண்பிப்பதற்காக ,தற்போது ,பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் ,வெனிசுவலா நாட்டைச் சேர்ந்த 200 பேர் அவசர அவசரமாக நாடு கடத்தப்பட்டு இருக்கின்றனர்.
ஆளும் அமெரிக்கா அரச நிர்வாக மேற்கொள்ளும் இந்த நடவடிக்கையால் , அமெரிக்காவில் வெளிநாட்டு மக்கள் மத்தியில் பரபரப்பை கிளப்பி இருக்கிறது.
எவ்வளையும் தாங்கள் கைது செய்யப்பட்டு ,நாடு கடத்தப்படுவோம் என்கின்ற அச்சத்தில் அமெரிக்காவில் அகதி மக்கள் இருக்கிறார்கள்.
அதேபோன்ற நிலையில் தமிழர்களும் தமிழ் மாணவர்களும் சிக்கி தவித்து வருவதாக அங்குள்ள தமிழர்கள் இப்படி தெரிவிக்கின்றனர்.
- லெபனானில் இஸ்ரேலிய இராணுவ நிலையைத் தாக்க ஹிஸ்புல்லா முயற்சி

- தென் கொரியா 270 மில்லியன் பீப்பாய் எண்ணெயைப் பெற்றுள்ளது

- இந்திய கடலில் மூழ்கிய அகதி கப்பல் 250 பேர் மாயம்

- வட கொரியா தனது அணு ஆயுதத் திறனை அதிகரித்து வருவதாக ஐ.நா. கண்காணிப்பு அமைப்பு கூறுகிறது.

- அமெரிக்க இராணுவ ஆதரவைச் சார்ந்திருப்பதைக் குறைக்க ஸ்வீடன் அழைப்பு

- வளைகுடா நாடுகளின் இறையாண்மையை மதிக்க வேண்டும் என சீன

- லிபரல் கட்சி பெரும்பான்மையைப் பெற்றது கனடா பிரதமர் கார்னி

- நேட்டோவை மிரட்டும் அமெரிக்கா

- 7600க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் காயம்

- லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதல்களில் 1953 பேர் பலி

- இஸ்ரேல் லெபனான் நகரங்கள் மீது குண்டுவீச்சு

- கச்சா எண்ணெய் விலை சரிவு

மக்கள் அகதிகளாக ஓட்டம்
மக்கள் அகதிகளாக ஓட்டம்
லெபனான்எல்லையில் இருந்து மக்கள் அகதிகளாக ஓட்டம், மேற்கு லெபனான் பகுதி எல்லையோரமாக உள்ள மக்கள் அகதிகளாக தற்பொழுது இடம் பெயர்ந்த வண்ணம் உள்ளதாக லெபனான் செய்திகள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் ,ஹிஸ்புல்லா இரு தரப்பும் மோதலில் ஈடுபாடுள்ளதால் ,இரு தரப்பு மக்களும் அகதிகளாக ஓடிய வண்ணமுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இஸ்ரேல் ஆக்கிரமிப்பு குடியேற்றவாசிகளும் அங்கிருந்து தற்பொழுது அகதிகளாக ஓடிய வண்ணம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
ஹிஸ்புல்லா போர் படை
தெற்கு லெபனான் ஹிஸ்புல்லா போர் படைகளுக்கும், இஸ்ரேல் அரச ராணுவத்தினருக்கும் ,மிக பெரும் போர் ஏற்படலாம் என்ற நிலையில் பெரும் பதட்டம் காணப்படுகிறது .
இதன் அச்சம் காணப்படுவதால் தற்பொழுது மக்கள் தமது உயிர் பாதுகாப்பு கருதி அந்த எல்லையோரங்களில் இருந்து தற்போது அகதிகளாக ஓடிய வண்ணம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு உள்ள இரண்டு லட்சத்துக்கு மேற்பட்ட இஸ்ரேல் ஆக்கிரமிப்பு குடியேற்றவாசிகள் அகதிகளாக ஓட்டம் பிடித்திருந்தனர் .
அவ்வாறு அகதிகளாக ஓடிய இஸ்ரேலியர்கள் மீளவும் லெபன எல்லையோரத்தில் காசா எல்லையோரங்களிலும் மீளவும் கூடியமர முடியாத நிலையை ஏற்படுத்துவோம் என தெற்கு லெபனான் ஹிஸ்புல்லா போர்படைகள் தெரிவித்திருந்தன .
அந்தகூற்றுக்கு அமைப்பாக தற்பொழுது போர் பதட்டத்தை ஆரம்பித்துள்ளதால் ,இஸ்ரேலியா படைகள் மற்றும் ஆக்கிரமிப்பு ராணுவத்தினர்,
அதற்கு ஆதரவளித்த மக்கள் அகதிகளாக ஓட வேண்டிய துப்பாக்கி நிலையில் உள்ளதாகவே தெரிய வருகிறது.
- லெபனானில் இஸ்ரேலிய இராணுவ நிலையைத் தாக்க ஹிஸ்புல்லா முயற்சி

- தென் கொரியா 270 மில்லியன் பீப்பாய் எண்ணெயைப் பெற்றுள்ளது

- இந்திய கடலில் மூழ்கிய அகதி கப்பல் 250 பேர் மாயம்

- வட கொரியா தனது அணு ஆயுதத் திறனை அதிகரித்து வருவதாக ஐ.நா. கண்காணிப்பு அமைப்பு கூறுகிறது.

- அமெரிக்க இராணுவ ஆதரவைச் சார்ந்திருப்பதைக் குறைக்க ஸ்வீடன் அழைப்பு

பிரிட்டனுக்குள் கடல் வழியாக நுழைந்த 100 அகதிகள்
பிரிட்டனுக்குள் கடல் வழியாக நுழைந்த 100 அகதிகள்
பிரிட்டனுக்குள் ஆங்கில கடல் வழியை கடந்து நுழைந்த 100 அகதிகள்,திணறும் பிரிட்டன் அரசாட்சி .
இங்கிலாந்துக்குள் அகதிகள் நுழைவதை தடுக்க பல்வேறு பட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்க பட்டன .
அவ்வாறான நிலையில் அந்த சட்ட நகர்வுகளை கவனத்தில் கொள்ளாது பிரான்ஸ் வழியாக ஆங்கில கால்வாயை கடந்து நூறு அகதிகள் நுழைந்துள்ள .
ஆளை கொல்லும் குளிர் நிலவும் இவ்வேளையில் ,அதனை கருத்தில் கொள்ளாது ,ஆபத்தான கடல்வழியாக இவ்விதம் நுழைந்துள்ளது ,இங்கிலாந்து அரசை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .
லண்டனுக்குள் நுழைந்த 204 அகதிகள் திணறும் லண்டன்
லண்டனுக்குள் நுழைந்த 204 அகதிகள் திணறும் லண்டன்
பிரிட்டன் லண்டனுக்குள் ஆங்கில கால்வாயை ,
கடந்து 12 படகுகளில் 204 அகதிகள் வந்தடைந்துள்ளனர்
இங்கிலாந்துக்குள் கடல் வழியாக வரும் அகதிகள் யாவரும் ,
ரூவாண்டாவுக்கு அனுப்பி வரும் நிலையில் ,
அதன் பின் விளைவுகளை அறியாது ,அகதிகள் தொடராக ,
லண்டனுக்குள் நுழைந்த வண்ணம் உள்ளனர் .
அகதிகள் வருகையால் பல மில்லியன் பவுண்டுகளை,
அரசு மாதம் தோறும் செலவு செய்து வருகிறது .
இதனை கட்டு படுத்தும் நோக்க்கில் ,
கடல் வழியாக நுழையும் அகதிகள்,
ருவண்டாவுக்கு அனுப்பி வைக்க படுகின்றனர் .
இந்த ஆண்டின் இதுவரையான கால பகுதியில் ,
ஒன்பதாயிரம் அகதிகள் நுழைந்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
கடல் வழியாக லண்டனுக்குள் நுழைந்த அகதிகள் -திணறும் அரசு
கடல் வழியாக லண்டனுக்குள் நுழைந்த அகதிகள் -திணறும் அரசு
லண்டனுக்கு பிரான்சில் இருந்து கடல் வழியாக படகுகள் மூலம் அகதிகள் நுழைந்தனர் .
பலத்த பாதுகாப்பு மற்றும் கடல் கண்காணிப்பு தீவிர படுத்த பட்டுள்ள நிலையிலும் ,அகதிகள் படகுகள் மூலம் ஆபத்தான கடலை கடந்து நுழைகின்றனர் .
இவ்வாறு இந்த வருடத்திற்குள் மட்டும் 40.ஆயிரம் அகதிகள் நுழைந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .
அகதிகள் வருகையை கட்டுப்படுத்த ,இறுக்கமான நடவடிக்கை மேற்கொள்ள பட்டுள்ள பொழுதும் ,அகதிகள் தொடர்ந்து லண்டனுக்குள் நுழைந்த வண்ணம் உள்ளமை அரசுக்கு பெரும் நெருக்கடியாக மாறியுளளது .
இந்தியாவில் இருந்து 11000 அகதிகள் இலங்கை திரும்பினர்
இந்தியாவில் இருந்து 11000 அகதிகள் இலங்கை திரும்பினர்
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு 11000 தமிழ் அகதிகள் மீள தாயகம் திரும்பியுள்ளதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது .
இலங்கையில் இடம்பெற்ற உள் நாட்டு போர் காணமாக ,புலம்பெயர்ந்த தமிழர்களே தற்போது 26 வருடங்கள்,கழித்து இலங்கை திரும்பியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
இவ்வாறு இலங்கை திரும்பும் தமிழர்களுக்கு, இலவச டிக்கட் வழங்கி இலங்கை அழைத்து வந்துள்ளமை ,இங்கே குறிப்பிட தக்கது .
அவுஸ்ரேலியா சென்ற இலங்கையர்கள் 46 பேர் இலங்கைக்கு திருப்பி அனுப்பல்
அவுஸ்ரேலியா சென்ற இலங்கையர்கள் 46 பேர் இலங்கைக்கு திருப்பி அனுப்பல்
இலங்கையில் இருந்து கடல்வழியாக அவுஸ்ரேலியாவுக்கு சென்ற இலங்கையர்கள் மீள இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
அவுஸ்ரேலியாவில் அகதி தஞ்சம் கோரி ஆடம்பர வாழ்க்கையை வாழ ஆசை படும் இலங்கையர்கள் அந்த நாட்டில் விசா பெறும் விதிகளை தெரிந்து கொள்ள மறந்து விடுகின்றனர்.
அவுஸ்ரேலியா சென்றால் உடனே வேலை செய்திடலாம் என இலங்கையர்கள் எண்ணுகின்றனர் .
வேலை செய்ய வேண்டுமெனின் அங்கு விசா வேண்டும் விசா இலலது எப்படி வேலை செய்ய முடியும் ..?
இவ்வாறான கேள்விகளுக்கு விடையை தெரிந்து கொண்டவர்கள் வெளிநாட்டு வாழ்க்கையை வேண்டாம் என ஒதுங்கி விடுகின்றனர் .
ஆனால் இலங்கையில் இருந்து வெளி நாட்டு வாழ்க்கையில் மோகம் கொண்டுள்ளவர்கள் பல லட்சங்களை செலுத்தி அவுஸ்ரேலியா வந்தும் மீள் இலங்கைக்கு திருப்பி அனுப்பட்டு விடுகின்றனர்.
வெளிநாடுகளில் வாள்பவர்கள் பலர் சோற்றுக்கு வழியில்லாமல் திண்டாடிய வண்ணம் உள்ளனர் .
அவ்வாறான நிகழ்வுகளை தெரிந்து கொள்ளாது வெளிநாட்டு மோகத்தில் ஆபத்தான கடல்வழியாக இலங்கை செல்லும் மக்களுக்கு அவுஸ்ரேலியா சாட்டை அடி வழங்கியுள்ளது.
இவ்வாறு தொடர்ந்து இலங்கைக்கு மக்களை நாடுகடத்த வருகின்ற பொழுதும் சிலரது போலியான ஆசை வார்த்தைகளை நம்பி இவ்விதம் மக்கள் சென்று வருவது கவலை தருகிறது.
ஒரே நாளில் லண்டனுக்குள் கடல் வழியாக நுழைந்த 700 அகதிகள்
ஒரே நாளில் லண்டனுக்குள் கடல் வழியாக நுழைந்த 700 அகதிகள்
பிரான்ஸ் நாட்டில் இருந்து ஆங்கில கால்வாயை கடந்து லாண்டன் டோவர் பகுதிக்குள் ஒரே நாளில் 700 அகதிகள் நுழைந்துள்ளனர் .
பிரிட்டன் வரலாற்றில் சமீப காலங்களில் இடம்பெற்ற அகதிகள் வருகையில் இதுவே அதிகமானதாக பதிவாகியுள்ளது.
லண்டனுக்குள் நுழையும் அகதிகள் ரூவாண்டவனுக்கு அனுப்பி அங்கு சிறை வைக்க படுவார்கள் என்கின்ற அறிவித்தல் விடுக்க பட்டுள்ளது .
அவ்விதம் இருந்தும் அகதிகளின் வருகை தொடர்ந்து அதிகரித்து செல்கின்றமை ஆளும் அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
அவுஸ்ரேலியா பயணித்த அகதிகள் 41 பேர் நாடு கடத்தல்
அவுஸ்ரேலியா பயணித்த அகதிகள் 41 பேர் நாடு கடத்தல்
இலங்கை செய்திகள்.எதிரி செய்திகள் .
இலங்கையில் இருந்து ஆபத்தான கடல் வழியை பயன் படுத்தி அவுஸ்ரேலியா பயணித்த அகதிகள் 41 பேர் மீள இலங்கைக்கு நாடு கடத்த பட்டுள்ளனர்.
இவ்வாறு நாடு கடத்த பட்டவர்களில் பலர் நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டு பிணையில் விடுவிக்க பட்டுள்ளனர்.
அதிக பணத்தை உழைத்திட முடியும் என்ற நிலையில் ஆபத்தான கடல் வழியை பயன் படுத்தி அவுஸ்ரேலியாவுக்கு செல்லும் அகதிகள் கிறிஸ்ம்ஸ தீவில் தடுத்து வைக்க பட்டனர்.
இலங்கையர்கள் 15 பேரை நாடு கடத்திய அவுஸ்ரேலியா
அவ்விதம் கிறிஸ்ம்ஸ தீவில் தடுத்து வைக்க பட்ட அகதிகள் தற்போது அவுஸ்ரேலியா அரசாங்கத்தினால் இலங்கைக்கு நாடு கடத்த பட்டுள்ளனர் .
தொடராக இலங்கை கடல் வாழியை பயன் படுத்தி அவுஸ்ரேலியாவுக்கு அகதிகள் பயணித்த வண்ணம் உள்ளனர் .
ஆனால் அவுஸ்ரேலியா செல்லும் அகதிகள் கிறிஸ்மஸ தனி தீவில் தடுத்து வைக்க பட்டு ,இவ்வாறு இலங்கைக்கு மீள விசேட விமானம் மூலம் நாடு கடத்த பட்டு வருகின்றனர்.
இந்த பாதகமான விடயங்கள் இவ்வாறு உள்ள நிலையில் நம்ம தமிழர்கள்
அவுஸ்ரேலியாவுக்கு கடல்வழியூடாக பயணித்து வருகின்றமை குறிப்பிட தக்கது.
11 படகுகளில் -லண்டனுக்குள் நுழைந்த 169 அகதிகள்
11 படகுகளில் -லண்டனுக்குள் நுழைந்த 169 அகதிகள்
பிரான்ஸ் கடல் பகுதியை பயன் படுத்தி டோவர் துறைமுக பகுதியில் 169 அகதிகள் நுழைந்துள்ளனர்
இவர்கள் யாவரும் பதினொரு படகுகளில் இவ்விதம் நுழைந்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது ,
இவ்விதம் நுழையும் அகதிகளை தடுக்க பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ள
பட்டு வருகிற பொழுதும் அவை பயனளிக்கவில்லை என்பது குறிப்பிட தக்கது
அகதிகள் படகு கவிழ்ந்து ஒருவர் மரணம் – 34 பேரை காணவில்லை
அகதிகள் படகு கவிழ்ந்து ஒருவர் மரணம் – 34 பேரை காணவில்லை
அட்லாட்ன்டிக் கடல் பகுதியில் பயணித்து கொண்டிருந்த அகதிகள் படகு ஒன்று
திடிரென விபத்தில் சிக்கியதில் அதில் பயணித்த ஒருவர் பலியாகியுள்ளார் ,மேலும் முப்பத்தி நான்கு பேர் காணாமல் போயுள்ளனர்
இவ்விதம் காணாமல் போன் யாவரும் இறந்திருக்க கூடும் என அஞ்ச படுகிறது
தொடர்ந்து கடற்படையினர் தேடுதலில் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர் ,ஐரோப்பாவிற்குள் நுழையும் முகமாக பாதுகாப்பற்ற
கடல் வழியூடாக சட்டவிரோத குடியேற்றவாசிகள் பயணித்து வருகின்றமை குறிப்பிட தக்கது
பிரிட்டனுக்குள் நுழையும் அகதிகள் 4000 மைல் தொலைவில் தங்க வைக்க நடவடிக்கை
பிரிட்டனுக்குள் நுழையும் அகதிகள் 4000 மைல் தொலைவில் தங்க வைக்க நடவடிக்கை
பிரிட்டனுக்குள் பிரான்ஸ் டோவர் கடல்வழியாக நுழையும் அகதிகளை பிரிட்டனில் இருந்து நான்காயிரம் மைல்
தொலைவில் உள்ள பகுதி ஒன்றில் தடுத்து வைக்க பிரிட்டன் குடிவரவு திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது
தனித்தீவு ஒன்றில் இவர்களை தடுத்து வைப்பதன் மூலம் ,இவர்களை தனிமைப்படுத்த முடியும் என
இவர்கள் எதிர்பார்ப்பதன் நோக்கமே இதுவென நோக்க படுகிறது
நாளை இது தொட்ரபில் பிரிட்டன் பிரதமர் பேசுவார் என தெரிவிக்க படுகிறது
தமிழகத்திற்கு படகு மூலம் தப்பி சென்ற 39 தமிழர்கள்
தமிழகத்திற்கு படகு மூலம் தப்பி சென்ற 39 தமிழர்கள்
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதாரா நெருக்கடி காரணமாக மன்னார் ஊடாக
ஐந்து குடும்பங்களை சேர்ந்த பத்தொன்பது பேர் தமிழகம் சென்றுள்ளனர்
இவ்வாறு சென்றவர்கள் கியூ பிராஞ்சினால் விசாரணைக்கு உட்படுத்த பட்டு முகாமிற்கு
அனுப்பி வைக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்
மேலும் வரும் நாட்களில் அதிகளவான தமிழர்கள் தமிழகம் செல்ல கூடும் என எதிர் பார்க்க படுகிறது
லண்டனில் லொறியில் இருந்து குதித்து ஓடும் அகதிகள்
லண்டனில் லொறியில் இருந்து குதித்து ஓடும் அகதிகள்
லண்டன் கென்ட் பகுதியில் உள்ள வேக சாலை ஒன்றில் பயணித்த லொறி ஒன்றுக்குள் பதுங்கி
வந்த சட்ட விரோத குடியேற்ற வாசிகள் அதில் இருந்து குதித்து தப்பி ஓடும் காட்சிகள் வெளியாகியுள்ளன
மேற்படி சம்பவம் தொடர்ப்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
பிரிட்டனுக்குள் கடல்வழியாக நுழைந்த இலங்கையர் உள்ளிட்ட 238 அகதிகள்
பிரிட்டனுக்குள் கடல்வழியாக நுழைந்த இலங்கையர் உள்ளிட்ட 238 அகதிகள்
பிரிட்டனுக்கும் பிரான்ஸ் கலை கடல் வழியை பயன்படுத்தி படகுகள் மூலம் 238 அகதிகள்
நுழைந்துள்ளார் இவ்வாறு நுழைந்த அகதிகளில் இலங்கையர் உள்ளிட்டவர்கள் உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
இவ்வாறான அகதிகள் நுழைவை தடுக்க கடலோர பாதுகாப்பு இறுக்க பட்ட நிலையில் இந்த
அகதிகள் நுழைவது பிரிட்டனுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது
ஐந்து படகுகளில் லண்டனுக்குள் நுழைந்த 140அகதிகள்
ஐந்து படகுகளில் லண்டனுக்குள் நுழைந்த 140அகதிகள்
பிரான்சில் இருந்து ஆங்கில கால்வாயை கடந்து ,சட்ட விரோத குடியேற்ற வாசிகள் எழுபது பேர் சனிக்கிழகை காலை 4.30 மணியளவில் லண்டனுக்குள் உள் நுளைந்துள்ளனர்
ஐந்து படகுகளில் டோவர் பகுதிக்குள் நுழைந்த எழுபது அகதிகள் கைது செய்ய பட்டு விசாரணைக்கு உட் படுத்த பட்டுள்ளனர்
இவ்வாறு உள் நுழைந்தவர்களில் ஆண் ,பெண்கள் உள்ளடங்கும் ,கொரனோ
வேளையில் இவ்விதம் அகதிகள் நுழைந்துள்ளதால் அவர்கள் 14 முதல் 21
நாட்கள் தனிமை படுத்தலுக்கு உள்ளாக்க படலம் என தெரிவிக்க பட்டுள்ளதுடன்
,அனைவருக்கும் கொரனோ சோதனை இடம்பெற்றுள்ளது
மேலும் வெள்ளிகிழமையும் இவ்வாறு நுழைந்துள்ளார் .கடந்த 24 மணித்தியாலத்தில் 140 அகதிகள் நுழைந்துள்ளதாக எல்லை பாதுகாப்பு படைகள் அறிவித்துள்ளன

500 பேருடன் நடு கடலில் தடுத்து வைக்க பட்டுள்ள அகதிகள் கப்பல்
500 பேருடன் நடு கடலில் தடுத்து வைக்க பட்டுள்ள அகதிகள் கப்பல்
மியன்மாரில் இடம்பெற்று வந்த பவுத்த பேரினவாத அரசின் அடக்கு முறையில் சிக்கி
ரோகினிய மக்கள் பெருமளவு பாதிக்க பட்டுள்ளனர் .
இவ்வாறு அரச வன்முறையில் சிக்கி பாதிக்க பட்ட மக்கள் தமது உயிரை
காப்பாற்றி கொள்ளும் நோக்குடன் அகதிகளாக பங்களாதேஸ் நாட்டுக்குள்
நுழைவதற்கு வருகை தந்த பொழுது அனைவரையும் நுழைய விடாது
தடுத்து வைக்க பட்டுள்ளனர்,இரு மீன்பிடி கப்பல்களில் ஏற்ற பட்ட ஐநூறு மக்கள் இவ்வாறு தடுத்து வைக்க பட்டுள்ளனர்
இந்த அகதிகள் கப்பலில் சிறுவர்கள் ,பெண்கள் உள்ளிட்டவர்கள் உள்ளமை குறிப்பிட தக்கது

































