Tag: நீதி
நீதி கிடைக்க வேண்டும் எம் பி அடைக்கலநாதன்
நீதி கிடைக்க வேண்டும் எம் பி அடைக்கலநாதன்
நீதி கிடைக்க வேண்டும் எம் பி அடைக்கலநாதன் ,நான்கு பேர் தடை தொடர்பில் பிரித்தானியாவின் நிலைப்பாடு சர்வதேச நீதிமன்றம் வரை செல்ல வேண்டும். அதன் ஊடாக நீதி கிடைக்க வேண்டும் என ஜனநாயக
தமிழ்த் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
வவுனியா, வைரவ புளியங்குளம் பகுதியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (30) இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
பிரித்தானியா மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக நான்கு பேருக்கு தடை விதித்துள்ளது. இதனை நாம் முதலில் வரவேற்கின்றோம். ஆனால் வினோதம்
நடைபெறுகிறது. தென்னிலங்கையில் தற்போது உள்ளஅரசு சார்ந்தவர்கள் உட்பட எல்லா அரசியல் கட்சிகளும் ஒன்றாக நின்று இவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கின்றார்கள்.
ஜேவிபி அரசாங்கம் ஆரம்பத்தில் எமது இனப்பிரச்சினை தொடர்பில் ஐ.நா தீர்மானம் எடுக்கப்பட்ட உடனேயே அதை நடை முறைப்படுத்துவதற்கான ஆதரவை கொடுக்கவில்லை. இப்பொழுது நான்கு பேருக்கு தடை விதித்ததை
வைத்துக் கொண்டுஅமைச்சர் அனைவரும் கூக்குரல் போடுவது இனவாதத்தின் அடிப்படையில் இந்தஅரசாங்கம் செயற்படுவதை தெட்டத் தெளிவாக காட்டுக்கின்றது.
ஆகவே,எங்களைப் பொறுத்தவரை எப்படி சிங்கள தேசத்தில் ஒருவருக்கு பிரச்சனை என்றால் ஆட்சியாளர்கள், கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட்டு
அதற்குஎதிராக குரல்கொடுக்கின்ற விடயத்தை நாம் வரலாற்று ரீதியாக பார்க்கின்ற விடயம்.தற்போதும் பார்க்கின்றோம். ஆனால் எங்களுக்குள் ஒற்றுமையீனத்தை பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.
எங்களது போராட்டங்களும் ஒருமித்த போராட்டமாக நடைபெறுவதில்லை. ஆகவே தொடர்ந்து, மனித உரிமை மீறல்கள் செய்தவர்களுக்கு ஐ.நா சபை கூட
அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் என்று கூறுகின்ற நிலையில், தமிழ் மக்கள் அனைவரும் இதனைஆதரிக்க வேண்டும்.
மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களுக்கு சர்வதேச நீதமன்றத்தின் மூலம் நீதி வருவதற்கு நாம் அதனை செயற்படுத்த வேண்டும். நாங்கள் ஒற்றுமையாக இல்லை என்றால் தென்னிலங்கையில் உள்ளவர்கள் ஒற்றுமையாக இருந்து
எம்மை அழிக்கின்ற செயற்பாட்டை முன்னெடுப்பார்கள். புதிய அரசாங்கம் கூட போராட்ட இயக்கம் என்கின்ற நிலை மாறி ஒரு இனவாதஅரசாக பார்க்க
கூடியநிலையில் உள்ளது.பிரித்தானியாவின் நிலைப்பாடு சர்வதேச நீதிமன்றம் வரைசெல்ல வேண்டும். அதன் மூலம் நீதி கிடைக்க வேண்டும்.
எங்களுக்குள் இருக்கும் பகைமைகளை மறந்து எங்களுக்காக மரித்த மக்கள்,போராளிகள் அனைவருக்காகவும், தொடர்ந்தும் தமிழர் பகுதிகளில்
இடம்பெற்ற பௌத்தமயமாக்கல், நிலஅபகரிப்பு தொடரும் அரசஅடக்கு முறைகளுக்கு எதிராக ஓரணியில் செயல்பட வேண்டும்.
புதிதாக வந்தஅரசாங்கம் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோருகின்ற போது அரசியல் கைதிகள் இல்லை எனக் கூறினார்கள்.
தற்போது அரசியல் கைதிகள் விடுதலை சம்பந்தமாக நாட்கள் செல்லும் என கூறியுள்ளது. ஆகவே,அரசியல் கைதிகள் இருக்கிறார்கள் என்பதைஇந்தஅரசுஒத்துக் கொண்டுள்ளது.
தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் கைதிகள் தொடர்பில் பேசுவதை கவனத்தில் கொள்ளவேண்டும். தேர்தல் காலங்களில் மாவட்டஅபிவிருத்திக்
குழுக் கூட்டங்கள் நடைபெறுகிறது. என்ன வேலைத்திட்டங்களை செய்யப் போகின்றோம் எனக் கூறுகிறார்கள்.
பாராளுமன்றத்தில் கூடுதலான ஆசனங்களை பெற எவ்வாறு செயற்பட்டார்களோ அதேபோல் வடக்கு,கிழக்கில் பல சபைகளை
கைப்பற்றும் நோக்கில் செயற்படுகிறார்கள் என தெரிகின்றது எனத்தெரிவித்தார்.
சிந்துயாவிற்கு நீதி கேட்டு போராட்டம்
சிந்துயாவிற்கு நீதி கேட்டு போராட்டம்
சிந்துயாவிற்கு நீதி கேட்டு போராட்டம் ,மன்னாரில் சிந்தியாவுக்கு நீதி கேட்டு போராட்டம் உண்டு இந்த இடம் பெற்று கொண்டுள்ளது மன்னார் மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றியம் அளிப்பு கொடுத்துள்ளது.
மன்னர் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடந்த 28-ம் தேதி உள்ள திருமதி சிந்து யா வருடம் தொடர்பாக வழக்கில் இடம்பெற்று வந்துள்ள நிலையில் அது மருத்துவ தவறு காரணமாக இறக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது
அவர் தெரிவிக்கப்பட்டு அந்த மருத்துவ தவறை புரிந்து கொள்வதற்கு இடம் மாற்றம் செய்வதாக மருத்துவமனை அறிவிப்பு இருந்தது
ஆனால் படுகொலைக்கு உடந்தையாக இருந்தவர்கள் இவ்வாறு பணி நீக்கம் செய்யாமல் வேறு இடங்களுக்கு மாற்றுவது ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர்கள் நீதிமன்ற முன்னிலையில் நிறுத்தப்பட்டு அவருக்கு தண்டனை வழங்கப்பட்ட வேண்டுமென மக்கள் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்றனர்
இன்று மன்னர் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாக இடம்பெறவுள்ள அந்த போராட்டத்தில் மக்கள் கலந்து கொண்டு தமது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
மருத்துவ மாபியாக்கள் ஆதிக்கமும் அடக்குமுறையும் உச்சம் பெற்றுள்ளதையும் ,மன்னர் மாவட்ட வைத்தியசாலையில் தொடர்ந்து பல்வேறுபட்ட தகாத நடவடிக்கை இடம்பெற்று வருவதை பாதிக்கப்பட்ட ஊழியர்கள் ,மக்கள் தெரிவித்து வருகின்றனர்.
அதனை அடுத்து தற்போது இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் ,தற்பொழுது மக்கள் மத்தியில் கொந்தளிப்பும் பதட்டமும் மேற்பட்டுள்ளதால் அரசியல்வாதிகளும் ஆர்வியாக குழுக்களும் செய்வதறியா திணறிய வண்ணம் உள்ளனர்.
- மத்திய கிழக்கு மோதல்களுக்குப் பிறகு முதல் கச்சா எண்ணெய் கப்பல் இன்று வருகை

- 1 ஆம் வகுப்பு கல்வி சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவது குறித்து அமைச்சு அறிவிப்பு

- அஹுங்கல்லாவில் துப்பாக்கிச் சூடு

- புத்தாண்டுக்குப் பிறகு கொழும்பு திரும்பும் பயணிகளுக்காக சிறப்புப் பேருந்து சேவை

- தெதுரு ஓயா நீரில் மூழ்கி 8பேர் பலி

காஸாவுக்கு வழங்கிட நிதி திரட்டிய இலங்கை
காஸாவுக்கு வழங்கிட நிதி திரட்டிய இலங்கை
காஸாவுக்கு வழங்கிட நிதி திரட்டிய இலங்கை முசுலீம் மக்கள் அந்த நிதியை இலங்கை ஜனாதிபதியிடம் கையளித்தனர் .
பாலஸ்தீனம் காசா பகுதியில் பாதிக்க பட்டுள்ள ,பாலஸ்தீன காசா சிறுவர்கள் நலன் கருதி இந்த நிதி திரட்ட பட்டுள்ளது .
காஸாவுக்கு வழங்கிட நிதி
அவ்வாறு காஸாவுக்கு வழங்கிட நிதி திரட்டிய இலங்கைதிரட்ட பட்ட நிதியே தற்போது பாலஸ்தீனம் காசா மக்களுக்கு வழங்கும் முகமாக மட்டக்களப்பு முசுலீம்கள் இணைந்து ,இந்த நிதி சேகரிப்பில் ஈடுபட்டனர் .
இவ்வாறு திரட்ட பட்ட பெரும் தொகை பணமே ,இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவிடம் கையளிக்க பட்டுள்ளது .
இஸ்ரேல் பாலஸ்தீனம் போர்
இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் ஆரம்பிக்க பட்டு ஏழு மாதங்கள் கடந்து செல்கின்ற பொழுதும் ,இதுவரை இஸ்ரேல் அரச பயங்கரவாதம் ,பலஸ்தீன சிறுவர்கள் மீது நடத்தும் தாக்குதல்களை ஐநா கண்டுகொள்ளவில்லை .
இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு நடத்தும் ஆக்கிரமிப்பு ,இனப்படுகொலையை தடுத்து நிறுத்த மறுத்து ,மேற்கு நாடுகள் ,அமெரிக்கா என்பன இஸ்ரேலுக்கு ஆதரவாக இனப்படுகொலைகளை நடத்துவதை ஊக்குவித்து வருகின்றன .
மக்கள் போருக்கு எதிராக குரல்
மக்கள் போருக்கு எதிராக திசை திரும்பியுள்ள பொழுதும் ,அந்த நாடுகளின் அரசியல்வாதிகள் ,தமது பொருளாதரத்தை கைப்பற்றி கொள்ள ,இஸ்ரேலுக்கு ஆதாரவாக செயலாற்றி வருகின்றனர் .
ஒவ்வொரு நாடுகளின் அரசியல் தலைவர்களும் ,இஸ்ரேலுடன் நெருங்கிய பொருளாதார வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதனால் தமது பொருளாதாரத்தை காப்பாற்றிட ,தமது நலன் சார்ந்து செயல் ஆற்றி வருகின்றனர்
இவ்வாறான கால பகுதியில் பாலஸ்தீன சிறுவர்களை காப்பாற்றிட இலங்கை முஸ்லீம்கள் ,சேகரித்த இந்த பணம் பாராட்டை பெற்றுள்ளது .
இலங்கை முஸ்லீம்கள்
ஸ்ரீலங்கா வாழ் முசுலீம்கள் தமது மத அடிப்படையிலும் ,மனிதபாபிமான செயல் பாட்டின் அடிப்படையில் ,பாலஸ்தீன குழந்தைகள் நலன் கருதி ,திரட்டிய பணம் உரிய முறையில் அந்த மக்களுக்கு சென்று சேரும் வகையில் கையளிக்க படும் என தெரிவிக்க பட்டுள்ளது .
காசா மக்களுக்கு ஆதரவாக இலங்கை குரல்
பாலஸ்தீனிய காசா மக்களுக்கு ஆதரவாக இலங்கை குரல் கொடுத்து இருந்ததுடன் ,பல அமைச்சர்களும் தமது ஆதரவை பாலஸ்தீனம் காசா மக்களுக்கு வழங்கி இருந்தனர்.
இவ்வாறான நிலையில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவிடம் இந்த நன்கொடை நிதி கையளிக்க பட்டுள்ளது .
வர்த்தகர்கள் விளையாட்டு குழுக்கள் ,பள்ளிவாசல்கள் என்பனவற்றின் ஊடக சேகரித்த பணமே இலங்கை ஜனாதிபதியிடம் கையளிக்க பட்டுள்ளன .
Featured
கோட்டா கபடி ஆட்டம் – நிதி அமைச்சர் – சட்ட அமைச்சர் ஆனார்
கோட்டா கபடி ஆட்டம் – நிதி அமைச்சர் – சட்ட அமைச்சர் ஆனார்
இலங்கையில் மூன்று வாரத்திற்குள் நிதி அமைச்சராக விளங்கிய அலிசப்ரி மீண்டும்
நீதி அமைச்சராக மாற்றம் பெற்றுள்ளார்
இவர்களின் இந்த அமைச்சு பதவி கபடி ஆட்டம் ,உலகில் சல சலபப்பை ஏற்படுத்தியுள்ளது
முள்ளி வாய்க்கால் நிகழ்வு தடை நிராகரிப்பு – யாழ்ப்பாணம் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
முள்ளி வாய்க்கால் நிகழ்வு தடை நிராகரிப்பு – யாழ்ப்பாணம் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கு தடை விதிக்கக் கோரி கோப்பாய் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பத்தை யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் நிராகரித்தார்.
சம்பவம் இடம்பெறப் போவதைத் தடுக்கக் கோரும் ஏ அறிக்கையை தாக்கல் செய்யாது சட்டம் மீறப்பட்டதாக கண்டறியப்பட்டால் பி அறிக்கையில் தாக்கல் செய்யுமாறு யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.பீற்றர் போல் உத்தரவிட்டார்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை கோப்பாய் பொலிஸ் பிரிவில் தடை செய்யக் கோரி பொலிஸாரால் இன்று ஏ அறிக்கையில் விண்ணப்பம் செய்யப்பட்டது.
இலங்கை குற்றவியல் சட்டம் 106 ஆம் பிரிவு மற்றும் தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த்தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த ஏ அறிக்கையை கோப்பாய் பொலிஸார் முன்வைத்தனர்.
நினைவேந்தல் நிகழ்வுகளால் சட்டம் மீறப்பட்டதாகக் கண்டறியப்பட்டால் பி அறிக்கையின் கீழ் விண்ணப்பம் செய்யுமாறு உத்தரவிட்ட நீதிவான், கோப்பாய் பொலிஸாரால் தடை கோரிய ஏ விண்ணப்பத்தை நிராகரித்தார்

















