Posted in Uncategorized

சூடானில் கலவரம் 160 பேர் மரணம் – 46 பேர் காயம்

சூடானில் கலவரம் 160 பேர் மரணம் – 46 பேர் காயம்

சூடான் டார்பூர் பகுதியில் இரு இனங்களுக்கு இடையில் ஏற்பட்டுளள கலவரத்தில் சிக்கி

இதுவரை நூற்றி அறுபது மக்கள் பலியாகியுள்ளனர்

மேலும் நாற்பத்தி ஆறு பேர் படுகாயமடைந்துள்ளனர்

பல நூறு வீடுகள் தீக்கிரையாக்க பட்டுள்ளன ,மக்கள் தமது சொத்துக்களை இழந்து

மரங்களின் கீழ் வசித்து வருகின்றனர் ,

தொடர்ந்து கலவரம் வெடித்து பறக்கிறது ,அச்சத்தில் மக்கள் சிதறி ஓடிய வண்ணம் உள்ளனர்

    Posted in Uncategorized

    ரஷியாவில் பற்றி எரியும் எண்ணெய் கூடம்

    ரஷியாவில் பற்றி எரியும் எண்ணெய் கூடம்

    ரசியாவின் Bryansk பகுதியில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்று பற்றி எரிந்த வண்ணம் உள்ளது


    அங்கிருந்த இரு கூதங்களில் இந்த தீ பற்றல் இடம் பெற்றுள்ளது

    குறித்த தீயானது வேகமாக பரவிய பொழுதும் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்க படுகிறது ,

    மேற்படி தீ பற்றலினால் பல ஆயிரம் டொலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக ரசியா செய்திகள் தெரிவிக்கின்றன

    இந்த தீ பற்றலுக்கான காரணம் உடனடியாக தெரிவிக்கவிலை ,உக்கிரேன் தாக்குதலாக இருக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது

      Posted in Uncategorized

      இஸ்ரேல் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஹிஸ்புல்லா

      இஸ்ரேல் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஹிஸ்புல்லா

      லெபனானான் எல்லையோர பகுதியில் பறந்து கொண்டிருந்த இஸ்ரேலியா உளவு

      விமானம் ஒன்றினை லெபனான் ஹிஸ்புல்லாக்கள் சுட்டு வீழ்த்தியுள்ளனர்

      குறித்த விமானம் இயந்திர கோளாறு காரணமாக வீழ்ந்து நொறுக்கியுள்ளதாக இஸ்ரேல்

      தெரிவித்துள்ளது ,லெபனானான் மீது இஸ்ரேல் இராணுவம் வலிந்து தாக்குதல்களை


      நடத்திய வண்ணம் உள்ள நிலையில் இந்த விமானம் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது குறிப்பிட தக்கது

        Posted in Uncategorized

        துருக்கி இராணுவ முகாம் மீது ரொக்கட் தாக்குதல் – முகாம் பலத்த சேதம்

        துருக்கி இராணுவ முகாம் மீது ரொக்கட் தாக்குதல் – முகாம் பலத்த சேதம்

        கிழக்கு ஈராக் மொசூல் பகுதியில் அமைந்துள்ள துருக்கிய இராணுவத்தின் Zelikan”


        இராணுவ தளம் மீது ஏழு ரொக்கட் தாக்குதல் நடத்த பட்டுள்ளது

        இதில் அந்த முகாம் பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது

        எனினும் துருக்கிய இராணுவம் சேதங்கள் தொடர்பில் தெரிவிக்கவில்லை

          Posted in Uncategorized

          பிரான்சில் இமானுவல் மேக்ரான் அமோக வெற்றி

          பிரான்சில் இமானுவல் மேக்ரான் அமோக வெற்றி

          பிரான்சில் ஆளும் இமானுவல் மேக்ரான் மீண்டும் அதிபராக தெரிவு செய்ய பட்டுள்ளார்

          ,இவர் 58 சதவீத வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார் ,அதேபோல குடியேற்ற

          வாசிகளுக்கு எதிராக கடும் சட்டங்களை அமூல் படுத்தி அவர்களுக்கு எதிரான

          பார்ப்புரை மேற்கொண்டு போட்டி போட்ட பெண் வேட்பாளர் பலத்த தோல்வியை சந்தித்துள்ளார்

          ஆளும் அதிபர் மீளவும் அதிபராக தெரிவு செய்ய பட்ட நிலையில் உலக நாட்டு தலைவர்கள் அவருக்கு வாழ்த்துக்களை
          தெரிவித்த வண்ணம் உள்ளனர்

            Posted in Uncategorized

            இலங்கை அரச பேரூந்து இரண்டாக கழன்று ஓட்டம் – மக்கள் கொதிப்பு

            இலங்கை அரச பேரூந்து இரண்டாக கழன்று ஓட்டம் – மக்கள் கொதிப்பு

            இலங்கை அரசுக்கு சொந்தமான பேரூந்து ஒன்று அனுராத புரத்தில் இருந்து கொழும்பு

            நோக்கி புறப்பட்டது ,இவ்வேளை இந்த பேரூந்து சில்லு அச்சுடன் கழன்று தனியாகவும் ,அதன் பாடி தனியாகவும் ஓடியுள்ளது

            இதனால் அதி பயணித்த மக்கள் பெரும் பீதியடைந்தனர்

            இன்று ஆளும் லஞ்ச ஊழல் பெருச்சாளி கோட்டாவின் ஆட்சியின் அசிங்கத்தில் ஒன்றாக

            இது பார்க்க படுகிறது

              Posted in Uncategorized

              தமிழர்கள் அழிந்த மே மாதத்தில் – பதவி இழக்க தயாராகும் மகிந்த குடும்பம்

              தமிழர்கள் அழிந்த மே மாதத்தில் – பதவி இழக்க தயாராகும் மகிந்த குடும்பம்

              இலங்கையில் மகிந்த ஆட்சியில் தமிழர்கள் படுகோரமாக கொலை செய்ய பட்டு ,அந்த

              விடுதலை அமைப்பு அழிக்க பட்டது ,மேலும் நாற்பது ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்கள் கொன்று குவிக்க பட்டனர்

              கழுத்து வெட்ட பட்டு ,டாங்கி ஏற்றி ,குழிவெட்டி உயிரோடு புதைக்க பட்டனர் ,இவ்வாறன இனப் படு கொலையின் பின்னர் சுமார் 14ஆண்டுகளில் அதே தமிழர்கள்

              அழிந்த நாளில், மகிந்த குடும்பம் தமது அதிகாரத்தை இழந்து சிறை செல்லும் நிலை ஏற்பட போகிறது

              தமிழர்கள் அழிந்த மே மாதத்தில் – பதவி இழக்க தயாராகும் மகிந்த குடும்பம்

              அதற்கான நிகழ்வுகள் திறம்பட அரங்கேற்ற பட்டு வருகின்றன ,எதிர்வரு வைகாசி மாதம் ,


              இதே இரத்த வெறி பிடித்த தமிழ் இனக் கொலையாளிகள் கூண்டோடு பதவி பறிபோகும் வரலாறு இலங்கையில் எழுத பட போகிறது ,

              தமிழர்களின் கண்ணீரும் ,சாபமும் அதே குடும்பத்தை அழிவின் விளிம்பில்


              நிறுத்தியுள்ளது ,ஏனைய அரசியல் இனவாதிகளிற்கு முன்னுதாரணமாக மாற்றம் பெற போகிறது என்பதை அடித்து கூறலாம்

              இரத்த காட்டேறிகள் இலங்கையை விட்டு ஓடும் நாளும் ,ஆட்சி அதிகாரம் இழந்து நிர்வாணமாக உறங்கும் நிலை ,அவர்கள் விரித்த வலையில் அவர்களே சிக்க்கிய பரிதாபம் .
              ஆவிகளின் சாபத்தில் அழிகிறது ,அநீதிகள் அரசு .

              • வன்னி மைந்தன் –
                Posted in Uncategorized

                யாழில் கோடாரி வெட்டு – ரவுடிகள் அட்டூழியம்

                யாழில் கோடாரி வெட்டு – ரவுடிகள் அட்டூழியம்

                யாழ்ப்பாணம் பருத்துறை திக்கம் பகுதியில் 44 வயதான நபர் மீது கோடரி வெட்டு

                தாக்குதல் இடம்பெற்றுள்ளது

                மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரே இந்த தாக்குதலை நடத்தி விட்டு தப்பி

                சென்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது


                பாதிக்க பட்டவர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டுளளார்

                  Posted in Uncategorized

                  மீள உருவெடுக்கும் எபோலா நோய் – பீதியில் உலகம்

                  மீள உருவெடுக்கும் எபோலா நோய் – பீதியில் உலகம்

                  உலக நாடுகளை அச்சுறுத்திய எபோலா காச்சல் நோயானது மீள கொங்கோவில் தற்போது ஆரம்பித்துள்ளது

                  இந்த நோயினால் பாதிக்க பட்ட டசின் கணக்கானோர் அடையாளம் காணப்பட்ட

                  நிலையில் இந்த நோயானது மிக வேகமாக பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது

                  இந்த நோயின் தாக்கம் மனித உடலின் தசைகள் உதிர்ந்து விழுதல் தன்மை கொண்டது

                  ,
                  நடந்து செல்ல சதைகள் வீழ்ந்து நொறுங்கும் தன்மை கொண்டது என தெரிவிக்க படுகிறது

                    Posted in Uncategorized

                    உயிரோடு தீயில் கருகி 100 பேர் மரணம்

                    உயிரோடு தீயில் கருகி 100 பேர் மரணம்

                    நையீரியா கடற்கரை பகுதி ஒன்றில சட்டவிரோத ஒயில் வியாபர ,அகழ்வில் ஈடுபட்ட சுமார் நூறு பேர்


                    தீயில் கருகி இறந்துள்ள சமபவம் இடம் பெற்றுள்ளது

                    அரச தகவலின் படி ,படகில் வந்திறங்கி சட்டவிரோத செயல் பாட்டில் ஈடுபட்ட நூறு

                    ஊழியர்களே இவ்விதம் மரணமாகியுள்ளதாக தெரிவிக்க படுகிறது

                    அங்கு இடம் பெற்ற வெடி விபத்தில் சிக்கி எழுந்த தீயில் உயிரோடு கருகி அனைவரும் இறந்துள்ளனர்


                    இது குறித்த விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளது

                      Posted in Uncategorized

                      ரஷியா தாக்குதல் அச்சம் – பதட்டத்தில் ரொமேனியா

                      ரஷியா தாக்குதல் அச்சம் – பதட்டத்தில் ரொமேனியா

                      உக்கிரேன் நாட்டின் ஆளுகைக்குள் உள்ள முக்கிய நகர்கள் ரசியாவிடம் வீழ்ச்சியடைந்து வரும் நிலையில் ,உக்கிரேன் தலைநகர் கீவ் நகர் நோக்கி ரசிய இராணுவம் முன்னேறிய வண்ணம் உள்ளது ,

                      உக்கிரேனின் இந்த தலை நகர் எதிரி இராணுவத்திடம் வீழ்ச்சியடைந்தால்
                      ரோமானியா மீது எதிரியாக விளங்கும் ரசியா தாக்குதலை நடத்தலாம் என்ற பதட்டம் ஏற்பட்டுள்ளது

                      உக்கிரேன் எல்லையோர நாடாக உள்ளது ரொமேனியா ,அதுபோலவே போலந்து,ரசியா ஐரோப்பா நாடுகள் மீது .

                      எதிரி நாடாக விளங்கி வரும் ரஷியா போரினை தொடுக்கலாம் என்ற நிலையில் அமெரிக்கா இராணுவம் ,மற்றும் நேட்டோ படைகள் குறித்த நாடுகளில் குவிக்க பட்டுள்ளனர்

                      எனினும் பரம எதிரியான ரசியாவின் ஆயுத பலத்தின் முன்னால் இந்த நாடுகள் தாக்கு பிடிக்குமா என்ற ஐயம் எழுந்துள்ளது

                      ரஷியா தாக்குதல் அச்சம் – பதட்டத்தில் ரொமேனியா


                      உக்கிரேன் மீது ரசியா தன் வசம் உள்ள அதி நவீன ஆயுதங்களை பயன்படுத்தவில்லை,அதனை அது பரம எதிரியாகவும் பார்க்கவில்லை

                      இவ்வாறான நிலையில் அது தவிர்ந்த எதிரிகளாக விளங்கிவரும் நேட்டோ நாடுகள் மீது உக்கிரேன் மீது மேற்கொண்ட தாக்குதல் போன்று நடத்துமா என்ற அச்சம் எழுந்துள்ளது

                      பொருளாதார நிலையில் தள்ளாடி வரும் ஐரோப்பா நாடுகள்மீது ,ரசியா பெரும் படையெடுப்பை மேற்கொண்டால் .அங்கு ஆட்சி கவிழ்ப்புக்கள் இடம்பெறலாம் என எதிர் பார்க்க படுகிறது

                      ரசியாவின் போரினால் பல நாடுகள் பதட்டத்தில் உள்ளது ,எதிர் காலத்தில் எதிரிகள் முந்தி தாக்கிட முன் எதிர் தாக்குதலை நடத்திட இப்போதே திட்டங்கள் தீட்ட பட்டு வருகின்றன

                      ரொமேனியா போலந்து ஜேர்மனி பகுதியில் அமெரிக்கா இராணுவம் குவிக்க பட்டு புதிய இராணுவ முகாம்கள் நிறுவ பட்டு வருகின்றன

                      மேலும் இரு நாடுகளும் இணைந்து கூட்டு தாக்குதல் தொடர்பான பயிற்சிகளிலும் ஈடுபட்ட வண்ணம் உள்ளன

                      ரசியாவிடம் உக்கிரேன் முற்றாக வீழ்ச்சியுற்றால் விரைந்து பெரும் இராணுவ படையெடுப்பை ரசியா நடத்தும் என ஐரோப்பியா மற்றும் பிரிட்டன் அமெரிக்கா எதிர் பார்க்கிறது குறிப்பிட தக்கது

                      ரசியாவின் குறியில் இருந்து தப்புமா இந்த எதிரி நாடுகள் ..?

                      -வன்னி மைந்தன் –

                        Posted in Uncategorized

                        ஏமனில் வீழ்ந்து நொறுங்கிய இராணுவ சாட்டிலைட் – சுட்டு வீழ்த்த பட்டதா ..?

                        ஏமனில் வீழ்ந்து நொறுங்கிய இராணுவ சாட்டிலைட் – சுட்டு வீழ்த்த பட்டதா ..?

                        ஏமான் நாட்டு இராணுவத்தின் செய்மதி ஒன்று வீழ்ந்து நொறுங்கியுள்ளது


                        இந்த் செய்மதி சுட்டு வீழ்த்த பட்டு இருக்கலாம் என நம்ப படுகிறது

                        எனினும் ஏமன் இராணுவம் இது தொடர்பில் இதுவரை எதனையும் வெளியிடவில்லை

                        என்பது குறிப்பிட தக்கது

                          Posted in Uncategorized உலக செய்திகள்

                          இஸ்ரேலுக்கு ரசியா எச்சரிக்கை – முறுகல் உச்சம்

                          இஸ்ரேலுக்கு ரசியா எச்சரிக்கை – முறுகல் உச்சம்

                          உக்கிரேனுக்கு இஸ்ரேல் அரசு ஆயுதங்களை வழங்கி வருகிறது ,இஸ்ரேலின் இந்த

                          முடிவிற்கு ரசியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது

                          தொடர்ந்து இஸ்ரேல் இவ்விதம்ஸ் செயல்பட்டால் அது விளைவுகளை சந்திக்கும் என ரசியா எச்சரித்துள்ளது .


                          உக்கிரேன் ரசியாவிடம் வீழ்ச்சியுறும் நிலையில் உள்ள போதும், சர்வதேச முக்கிய நாடுகள்


                          ஆயுதங்களை அள்ளி வழங்கி வருகின்றமை குறிப்பிட தக்கது.

                            Posted in Uncategorized

                            அமெரிக்காவில் துப்பாக்கி சூடு – ஐவர் காயம்

                            அமெரிக்காவில் துப்பாக்கி சூடு – ஐவர் காயம்

                            அமெரிக்கா வாஷிங்க்டன் பகுதியில் நடத்த பட்ட துப்பாக்கி சூட்டில் சிக்கி ஐவர் படுகாயமடைந்துள்ளனர்


                            பாடசாலையில் சிறார்களை மீட்டு வந்தவர்களே இந்த தாக்குதலில் காயமடைந்துள்ளனர்

                            இந்த் சூட்டு சம்பாவத்தை அடுத்து மக்கள் சிதறி ஓடினார்

                            இது குறித்து போலீசார் விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உளளனர்

                              Posted in Uncategorized

                              மசூதியில் வெடித்த குண்டு 33 பேர் பலி

                              மசூதியில் வெடித்த குண்டு 33 பேர் பலி

                              வடக்கு ஆப்கான் Kunduz பகுதியில் உள்ள மசூதியில் குண்டு ஒன்று


                              வெடித்து சிதறியதால் அங்கு தொழுகையில் ஈடுபட்ட முப்பத்தி மூன்று பேர் பலியாகியுள்ளனர்

                              மேலும் பல டசின் பேர் படுகாயமடைந்துள்ளனர்

                              தலிபான்கள் ஆட்சியில் தொடராக இவ்விதமான குண்டு தாக்குதல்கள் இடம்பெற்ற

                              வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது

                                Posted in Uncategorized

                                இலங்கைக்கு உதவாதீர்கள் ராமதாஸ் கோரிக்கை

                                இலங்கைக்கு உதவாதீர்கள் ராமதாஸ் கோரிக்கை

                                இலங்கைக்கு செய்யப்படும் உதவிகள் ஒரு போதும் இந்தியாவுக்கு எதிராக அமைந்து

                                விடக் கூடாது, எனவே கடல்வழி மின் தடம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்

                                இது குறித்து இன்று ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “இலங்கைக்கு மின்சாரம் வழங்குவதற்கு வசதியாக தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடலுக்கடியில் மின்

                                பாதை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுகள் மீண்டும் தொடங்கியிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள்

                                அதிர்ச்சியளிக்கின்றன. இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் அது நாட்டின்

                                வளர்ச்சியை பாதிக்கும் என்பதை அரசு உணர வேண்டும்.
                                என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்

                                  Posted in Uncategorized

                                  இந்தியாவுக்கு 3,000 கோடி கட​னை திருப்பிச் செலுத்த முடியா தவிக்கும் இலங்கை

                                  இந்தியாவுக்கு 3,000 கோடி கட​னை திருப்பிச் செலுத்த முடியா தவிக்கும் இலங்கை

                                  பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் இலங்கைக்கு உதவும் வகையில், அந்த நாடு

                                  கடனாகப் பெற்ற 40 கோடி டொலா் (ரூ.3,000 கோடி) தொகையை திருப்பிச் செலுத்துவதற்கான அவகாசத்தை இந்தியா நீட்டித்துள்ளது.

                                  இதுகுறித்து கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள ட்விட்டா் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:

                                  இலங்கைக்கு பல்வேறு வழிகளில் இந்தியா உதவி செய்வது தொடா்கிறது. இலங்கை அரசுக்கு அந்த நாட்டு மத்திய வங்கி மூலமாக இந்திய ரிசா்வ் வங்கி 40 கோடி டொலா்

                                  கடனுதவி அளித்துள்ளது. அந்தக் கடன் தொகையை கரன்சி பரிமாற்ற முறையில் இலங்கை அரசு திருப்பிச் செலுத்துவதற்கு அளிக்கப்பட்டிருந்த அவகாசம் கடந்த ஜனவரி மாதத்துடன் முடிந்துவிட்டது. இந்நிலையில், இலங்கை அரசு கடன்

                                  தொகையைத் திருப்பிச் செலுத்துவதற்கான அவகாசத்தை இந்திய ரிசா்வ் வங்கி நீட்டித்துள்ளது என்று அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

                                  முன்னதாக, இந்தியாவுக்கு கடன் தவணையைத் திருப்பிச் செலுத்துவதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ

                                  தலைமையிலான அரசு கடந்த 12 ஆம் திகதி அறிவித்தது. IMF மூலமாக நிதியுதவி கிடைக்கும் வரை கடன் தவணை நிறுத்தி வைப்புத் தொடரும் என்றும் இலங்கை அரசு கூறியது.

                                  இந்த அறிவிப்பு வெளியான பிறகு, சா்வதேச அளவில் கடன் தவணையைத் திருப்பிச் செலுத்த இந்தியா அவகாசம் அளித்திருப்பது இதுவே முதல் முறையாகும்.

                                  இலங்கை மத்திய வங்கியுடன் ‘சாா்க்’ கரன்சி பரிமாற்றத் திட்டத்தின் கீழ் இந்திய ரிசா்வ் வங்கி ஒப்பந்தம் மேற்கொண்டது. அந்த ஒப்பந்தத்தின்படி, இந்திய ரிசா்வ் வங்கியிடம்

                                  அதிகபட்சமாக 40 கோடி டொலா் தொகையை, டொலா் அல்லது யூரோ அல்லது ரூபாய் மதிப்பில் பல தவணைகளில் இலங்கை மத்திய வங்கி கடனாகப் பெற முடியும்.

                                  இதுதவிர, இந்தியாவிடம் இருந்து அத்தியாவசியப் பொருள்கள் வாங்குவதற்காக இலங்கை அரசு 100 கோடி டொலா் (ரூ.7,460 கோடி) கடன் பெற்றுள்ளது. பெட்ரோல், டீசல்

                                  உள்ளிட்ட எரிபொருள் வாங்குவதற்காக 50 கோடி டாலா் ரூ.3,700
                                  கோடி இலங்கை கடன் பெற்றுள்ளது.

                                    Posted in Uncategorized

                                    குஷ்பு மருத்துவமனையில் திடீர் அனுமதி

                                    குஷ்பு மருத்துவமனையில் திடீர் அனுமதி

                                    நடிகை குஷ்பு அண்மையில் அரசியல் காரணங்களுக்காக டெல்லி பயணம் சென்றுள்ள நிலையில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர்சிக்குள்ளாக்கி உள்ளார்.

                                    நடிகை குஷ்பு மருத்துவமனையில் திடீர் அனுமதி
                                    குஷ்பு


                                    சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் குஷ்பு அண்மையில் அரசியல்

                                    காரணங்களுக்காக டெல்லி பயணம் சென்றுள்ளார். அதை முடித்துவிட்டு வீடு திரும்புவார் என்று பார்த்தால் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

                                    திடீரென அவருக்கு என்ன ஆனது என்பது தெரியவில்லை,


                                    ஆனால் கையில் சுற்றிய ஊசியுடன் புகைப்படம் எடுத்து
                                    அதை டுவிட்டரில் பதிவுசெய்து குணமடைந்து வருகிறேன் என பதிவு செய்துள்ளார்.

                                      Posted in Uncategorized

                                      உக்கிரேனுக்கு 800 மில்லியன் டாலரில் ஆயுதம் வழங்கும் அமெரிக்கா

                                      உக்கிரேனுக்கு 800 மில்லியன் டாலரில் ஆயுதம் வழங்கும் அமெரிக்கா

                                      உக்கிரேன் நாட்டின் மீது ரசியா இராணுவம் போர் தொடுத்து வருகிறது இவ்வேளை

                                      உக்கிரேன் முக்கிய நகரானமரியாபோல் பகுதி ரசியா இராணுவத்திடம் வீழ்ச்சியடைந்துள்ளது

                                      இந்த பகுதி வீழ்ச்சியடைந்த பின்னர் அவசர உதவியாக சுமார் 800 மில்லியன்

                                      டொலருக்கு அமெரிக்கா உக்கிரேனுக்கு ஆயுதங்களை வழங்குகிறது

                                      தமது ஆயுத பயன் பாட்டின் ஊடாக ரசியாவுக்கு எச்சரிக்கை விடுக்க அமெரிக்கா

                                      முயல்வதும் ,இவ்வேளை ஆயுதங்களை விற்று தமது பொருளாதாரத்தை கட்டி எழுப்பும் கபட நகர்வில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது ,


                                      உதவி என்ற போர்வையில் தனது வியாபாரத்தை அது செவ்வனே செய்து வருகிறது குறிப்பிட தக்கது

                                        Posted in Uncategorized

                                        ரசியா அணுமின் நிலையம் மீது உக்கிரேன் தாக்குதல் – பற்றி எரியும் காட்சிகள்

                                        ரசியா அணுமின் நிலையம் மீது உக்கிரேன் தாக்குதல் – பற்றி எரியும் காட்சிகள்

                                        ரசியாவின் முக்கிய அணுமின் உற்பத்தி நிலையமான Dmitrievsky Chemical Plant மீது

                                        உக்கிரேன் இராணுவத்தினர் ஏவுகணை தாக்குதலை நடத்தினர் ,இதில் அந்த கூடம் பற்றி எரிந்த வண்ணம் உள்ளது

                                        இந்த தாக்குதலில் அங்கு பணிபுரிந்த ஏழுபேர் பலியாகியும் பலர் படுகாயமடைந்துள்ளனர்

                                        மரியபோல் நகரம் வீழ்ச்சியடைந்து சில மணிநேரத்தில் ரசியாவுக்குள் உக்கிரேன்

                                        தாக்குதலை நடத்தியுள்ளது ,இதற்கு பதிலடியாக ரசியா கெமிக்கல் தாக்குதலை கீவ் நகர் மீது நடத்த கூடும் என எதிர் பார்க்க படுகிறது

                                        வரும் மணித்தியாலங்கள் ரசியாவின் அகோர தாக்குதல்கள் உக்கிரேன் கட்டு பாட்டு

                                        பகுதிகளில் தீவிரமாக இடம்பெறும் என எதிர் பார்க்க படுகிறது