Tag: கண்டி
கண்டி கொழும்பு பிரதான சாலை திறப்பு
கண்டி கொழும்பு பிரதான சாலை திறப்பு
கண்டி கொழும்பு பிரதான சாலை திறப்பு ,கண்டி கொழும்பு பிரதான சாலை போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டது.
கண்டி கொழும்பு பிரதான சாலை
கண்டி கொழும்பு பிரதான சாலை வாகன போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
முன்னர் மூடப்பட்டிருந்த பஹல கடுகன்னாவ பகுதியில் உள்ள சாலையின் ஒரு வழிப்பாதை நேற்று பிற்பகல் மீண்டும்
திறக்கப்பட்டதாக சாலை மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
சாலையில் வாகனப் போக்குவரத்து
அதன்படி, சாலையில் வாகனப் போக்குவரத்து காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.
மாட்டு படுத்த பட்ட சேவைகள் இது போன்று நாடளாவிய ரீதியில் இடம்பெறுகிறது .
தொடர்ந்து பருவமழை பொழிவு ஏற்படும் நிலை உள்ளதால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
- ஈரான் குடி நீர் பகுதியை இலக்கு வைத்து அமெரிக்கா தாக்குதல்

- பஹ்ரைன் மீது ஈரான் தாக்குதல்

- 13 பில்லியன் தேசிய அபிவிருத்தி வங்கி மோசடி

- மீன் விநியோகத்தை மேம்படுத்த ரூ. 200 மில்லியன் மதிப்புள்ள குளிரூட்டப்பட்ட சரக்குந்துகளை ஜப்பான் நன்கொடையாக வழங்கியது

- நீதிமன்றத்திற்கு நீதிபதிகளை நியமிப்பதில் தாமதம் குறித்து சஜித் கவலை

- சல்லேயின் நீட்டிக்கப்பட்ட தடுப்புக்காவல் குறித்து கம்யூனிஸ்ட் கட்சி கவலை

- ஈரான் தாக்குதல்களுக்குப் பிறகு குவைத் வான்வெளி மீண்டும் திறப்பு

- மூன்று நாள் டெங்கு பிரச்சாரத்தின் போது 2000-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு

- சசி வீரவன்சவின் மேல்முறையீட்டை உயர் நீதிமன்றம் நிராகரித்து

- வெளிநாட்டு இலங்கையர் கட்டடம் வங்கிக்கு பணம் அனுப்ப வேண்டுமாம் பிச்சை எடுக்கும் இலங்கை

- BharathirajaPassedAway பாரதிராஜா மறைவு சோகத்தில் மூழ்கி பேசிய ரஜினி

- ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பன்னிரண்டு பேர் பலி

- முறையான உரிமம் இல்லாமல் 17 ஆண்டுகளாக விமானம் ஓட்டியகனடா விமானி

- ஈஸ்டர் ஞாயிறு விசாரணை உருட்டும் அனுரா பயங்கரவாத அரசு

- தெற்கு ஆசியாவில் இலங்கை அமைதியான நாடாம்

கண்டி மக்களுக்கான முக்கிய அறிவிப்பு
கண்டி மக்களுக்கான முக்கிய அறிவிப்பு
கண்டி மக்களுக்கான முக்கிய அறிவிப்பு ,கண்டி நகரில் தற்போதுள்ள நிலத்தடி சுரங்கப் பாதைகள் வழியாக வீதியைக் கடக்காத பாதசாரிகளுக்கு
எதிர்காலத்தில் கடுமையான நடவடிக்கை
எதிராக எதிர்காலத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
பாதசாரிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள மலர் விற்பனைக் கடைகள் அமைந்துள்ள
இடங்கள் குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
கண்டி நகருக்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்ட போதே பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.
வீதியைக் கடக்க நிலத்தடி சுரங்கப்பாதை
இது தொடர்பில் அவர் கருத்து வௌியிடுகையில், கண்டி நகரில் குறைந்தளவான மக்களே வீதியைக் கடக்க நிலத்தடி சுரங்கப்பாதைகளை
பயன்படுத்துகின்றனர். மக்கள் இதை பயன்படுத்தாமல் இருப்பதற்கு நிலத்தடி சுரங்கப் பாதைக்குள் அமைக்கப்பட்டுள்ள மலர் விற்பனைக் கடைகளும்
காரணமாக அமைந்துள்ளதை அவதானிக்க முடிந்தது. மக்கள் பாதுகாப்பான முறையில் வீதியை கடக்க வேண்டியது அவசியம் என்பதோடு, மலர்
விற்பனையாளர்களின் வாழ்வாதாரத்திற்கு தீங்கு விளைவிக்காத வகையில் எமது தீர்வு பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்றார்.
கண்டியில் விபத்து நால்வர் படுகாயம்
கண்டியில் விபத்து நால்வர் படுகாயம்
கண்டியில் இன்று இடம்பெற்ற விபத்து ஒன்றில் நால்வர் படுகாயம் அடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
கண்டி, கட்டுகஸ்தோட்டை வலயக் கல்விக் காரியாலயத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து இன்று புதன்கிழமை (11) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த சொகுசு பஸ் ஒன்று வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டியுடன் மோதியதில்
இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தின் போது நான்கு பேர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- ஈரான் குடி நீர் பகுதியை இலக்கு வைத்து அமெரிக்கா தாக்குதல்

- பஹ்ரைன் மீது ஈரான் தாக்குதல்

- 13 பில்லியன் தேசிய அபிவிருத்தி வங்கி மோசடி

- மீன் விநியோகத்தை மேம்படுத்த ரூ. 200 மில்லியன் மதிப்புள்ள குளிரூட்டப்பட்ட சரக்குந்துகளை ஜப்பான் நன்கொடையாக வழங்கியது

- நீதிமன்றத்திற்கு நீதிபதிகளை நியமிப்பதில் தாமதம் குறித்து சஜித் கவலை

திடீர் குழி கண்டியில் போக்குவரத்து பாதிப்பு
திடீர் குழி கண்டியில் போக்குவரத்து பாதிப்பு
திடீரென தண்டவாளத்தில் ஏற்பட்ட குழியினால் போக்குவரத்து சேவைகள் ஸ்தம்பித்துள்ளது.
கண்டியில் ரயில் மார்க்கத்தில் திடீரென குழி ஒன்று ஏற்பட்டுள்ளமையினால் கண்டி மற்றும் பேராதனை நிலையங்களுக்கு இடையிலான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
கண்டி நோக்கிச் செல்லும் ரயில்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கண்டி நிலையத்திலிருந்து பயணத்தை ஆரம்பிக்கும்
ரயில்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ரயில் திணைக்கள கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
இந்த திடீரென தோன்றிய குழியை உடனே கவனித்ததனால் எந்த பிரச்சினையும் இல்லை எனவும், இதனைக் கவனிக்காது விட்டிருக்கப்படுமாயின் விபத்துக்கள் ஏற்பட்டிருக்கும் என மக்கள் விசனம் தெரிவித்திருந்தனர்.
அந்தக் குழியை சீர்திருத்தி, மீண்டும் போக்குவரத்து சேவைகளை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் ஏற்பட்டு வருவதாக அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
- ஈரான் குடி நீர் பகுதியை இலக்கு வைத்து அமெரிக்கா தாக்குதல்

- பஹ்ரைன் மீது ஈரான் தாக்குதல்

- 13 பில்லியன் தேசிய அபிவிருத்தி வங்கி மோசடி

- மீன் விநியோகத்தை மேம்படுத்த ரூ. 200 மில்லியன் மதிப்புள்ள குளிரூட்டப்பட்ட சரக்குந்துகளை ஜப்பான் நன்கொடையாக வழங்கியது

- நீதிமன்றத்திற்கு நீதிபதிகளை நியமிப்பதில் தாமதம் குறித்து சஜித் கவலை

கண்டி ரயில் சேவை இடைநிறுத்தம்
கண்டி ரயில் சேவை இடைநிறுத்தம்
கண்டி ரயில் சேவை இடைநிறுத்தம் ,கண்டிக்கும் பேராதனைக்கும் இடையிலான ஆராய்ச்சிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
கண்டி நீதிமன்றத்துக்கு அருகில் உள்ள தண்டவாளத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்போரா காரணமாக இந்த ரயில்கள் தற்பொழுது நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் சீர் செய்யப்பட்ட பின்னர் வளமை போன்று ரயில்வே சேவைகள் ஆரம்பிக்கப்படும் என அந்த துணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த திடீர் சாலை தடைப்பட்டதனால் பயணிகள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்..
தமது தொழில் பற்றி வேகமாக ஈடுபட்டு வருவதாக விரைவில் இந்த சேவைகள் நிகழும் வழமைக்கு இயக்கப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
கொழும்பு கஞ்சி கடையில் இடம் பெற்று வருகின்ற ரயில் சேவை அதிகமான மக்கள் பயணித்து வருவதும் கண்டு கொழும்பு கடையிலான சேவைகளும் பலமான பாதிப்புக்கு உள்ளாக கூடிய வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திடீரென ரயில் பயணங்கள் ரத்து செய்யப்பட்டதால் அங்கு குளிர்ந்த பயணிகள் பெரும் உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன.
- ஈரான் குடி நீர் பகுதியை இலக்கு வைத்து அமெரிக்கா தாக்குதல்

- பஹ்ரைன் மீது ஈரான் தாக்குதல்

- 13 பில்லியன் தேசிய அபிவிருத்தி வங்கி மோசடி

- மீன் விநியோகத்தை மேம்படுத்த ரூ. 200 மில்லியன் மதிப்புள்ள குளிரூட்டப்பட்ட சரக்குந்துகளை ஜப்பான் நன்கொடையாக வழங்கியது

- நீதிமன்றத்திற்கு நீதிபதிகளை நியமிப்பதில் தாமதம் குறித்து சஜித் கவலை

கண்டியிலும் பஸ்விபத்து 20பேர் காயம்
கண்டியிலும் பஸ்விபத்து 20பேர் காயம்
கண்டியிலும் பஸ்விபத்து 20பேர் காயம் கண்டி, அலதெனிய, யட்டியானகலவில் பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் சுமார் 20 பேர் காயமடைந்துள்ளார்கள். இவ் விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ் விபத்து தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்றைய தினம் , கதிர்காமத்திலிருந்து நுவரெலியா வழியாக குருணாகலை நோக்கி பயணித்த போக்குவரத்து சபைக்கு சொந்தமான ,
பேரூந்து ஒன்று விபத்தில் சிக்கி தலைகீழாக கவிழ்ந்ததில் பச்சிளம் குழந்தைகள் உட்பட 21க்கும் மேற்பட்ட பயணிகள் உயிரிழந்துள்ளனர்.
அதேபோன்று, ஹட்டன் வீதியில் 20 அடி பள்ளத்தில் கார் ஒன்று கவிழ்ந்து விழுந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியின் கரோலினா தோட்டம் பகுதியில் நேற்று (11) காலை குடும்பமொன்று பயணித்த காரொன்று வீதியை விட்டு விலகி 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
வெல்லம்பிட்டியவிலிருந்து நுவரெலியாவுக்கு சுற்றுலா சென்று கொண்டிருந்த தாய், தந்தை, மகள் மற்றும் அவரது இரண்டு பிள்ளைகளே இந்த விபத்துக்கு முகங்கொடுத்துள்ளனர்.
ஒரே பிரதேசத்தில் தொடர்ந்து ஒரே நாளில் அடுத்தடுத்து
இலங்கையில் அதிகரித்துச் செல்லும் தொடர் விபத்துகளினால் மக்கள் சொல்லானென்னா துயரை சந்தித்து வருகின்றனர்.
இவ்வாறு வீதி விபத்திலிருந்து மக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள என்ன வழிவகை உள்ளது என்பதே கேள்வியாக உள்ளது.
- ஈரான் குடி நீர் பகுதியை இலக்கு வைத்து அமெரிக்கா தாக்குதல்

- பஹ்ரைன் மீது ஈரான் தாக்குதல்

- 13 பில்லியன் தேசிய அபிவிருத்தி வங்கி மோசடி

- மீன் விநியோகத்தை மேம்படுத்த ரூ. 200 மில்லியன் மதிப்புள்ள குளிரூட்டப்பட்ட சரக்குந்துகளை ஜப்பான் நன்கொடையாக வழங்கியது

- நீதிமன்றத்திற்கு நீதிபதிகளை நியமிப்பதில் தாமதம் குறித்து சஜித் கவலை

கண்டி கொழும்பு வீதியில் போக்குவரத்து கட்டுப்பாடுகள்
கண்டி கொழும்பு வீதியில் போக்குவரத்து கட்டுப்பாடுகள்
கண்டி கொழும்பு வீதியில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் ,நிட்டம்புவ ஸ்ரீ விஜேராமய விகாரையில் வருடாந்த “துருது நத” மகா பெரஹெர ஊர்வலம் காரணமாக வீதி போக்குவரத்து மட்டுப்பாடு தொடர்பில் பொலிஸார் அறிவித்தல் விடுத்துள்ளனர்.
அதன்படி, நாளை (24) இரவு 8.30 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை பெரஹெர ஊர்வலம் இடம்பெறவுள்ளது.
இந்த ஊர்வலம் நிட்டம்புவ அத்தனகல்ல வீதியில் உள்ள களுவாகஸ்வில ஸ்ரீ விஜயராமய விகாரையில் இருந்து தொடங்கி, நிட்டம்புவ நகரத்தை அடைந்து, இடதுபுறம் திரும்பி
கொழும்பு-கண்டி பிரதான வீதியில் கொழும்பை நோக்கிச் சென்று, வால்வத்த சந்தியில் வலதுபுறம் திரும்பி ஸ்ரீ போதி விகாரையை சென்றடைய திட்டமிடப்பட்டுள்ளது.
பெரஹெர நிகழ்வைக் காண ஏராளமானோர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், கண்டி-கொழும்பு பிரதான வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே, நிட்டம்புவ நகரத்திலிருந்து மல்வத்த சந்தி வரையிலான வீதியின் ஒரு வழித்தடம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு கொழும்பு-நோக்கியும், கண்டி நோக்கியும் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்படும்.
- ஈரான் குடி நீர் பகுதியை இலக்கு வைத்து அமெரிக்கா தாக்குதல்

- பஹ்ரைன் மீது ஈரான் தாக்குதல்

- 13 பில்லியன் தேசிய அபிவிருத்தி வங்கி மோசடி

- மீன் விநியோகத்தை மேம்படுத்த ரூ. 200 மில்லியன் மதிப்புள்ள குளிரூட்டப்பட்ட சரக்குந்துகளை ஜப்பான் நன்கொடையாக வழங்கியது

- நீதிமன்றத்திற்கு நீதிபதிகளை நியமிப்பதில் தாமதம் குறித்து சஜித் கவலை

கண்டியில் ஆசிரியர் ஒருவர் கைது
கண்டியில் ஆசிரியர் ஒருவர் கைது
கண்டியில் ஆசிரியர் ஒருவர் கைது ,க.பொ.த சாதாரண தர ஆங்கில மொழி வினாத்தாளை புகைப்படம் எடுத்து, வட்ஸ்அப் குரூப்களில் வெளியிட்ட சம்பவம் தொடர்பாக தனியார் வகுப்பு ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசேட புலனாய்வுப் பிரிவினர்
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட புலனாய்வுப் பிரிவினர் குறித்த ஆசிரியரை கண்டியில் வைத்து இன்று (12) கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முதற்கட்ட விசாரணையில் வாட்ஸ்அப் குழுவில் 1,025 உறுப்பினர்கள் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
க.பொ.த சாதாரண தர பரீட்சையின் ஆங்கில வினாத்தாள் கடந்த 9ம் திகதி நடைபெற்றதுடன், கால அட்டவணைப்படி காலை 8.30 மணிக்கு மாணவர்களுக்கு வினாத்தாள் வழங்கப்பட்டது.
எனினும், சந்தேகத்திற்குரிய இந்த ஆசிரியரால் காலை 9.11 மணியளவில் வாட்ஸ்அப் குழுவில் ஆங்கில வினாத்தாள் வெளியிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தனியார் வகுப்பு ஆசிரியர்
கைது செய்யப்பட்ட சந்தேகநபரான தனியார் வகுப்பு ஆசிரியர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பரீட்சை திணைக்கள அதிகாரிகளிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஹான் பிரேமரத்னவின் மேற்பார்வையில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் விசேட புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சை கடந்த 06 ஆம் திகதி ஆரம்பமாகி எதிர்வரும் 15 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
Featured
கண்டி குடிவரவு குடியகழ்வு அலுவலகத்திற்கு அருகில் பதற்றம்
கண்டி குடிவரவு குடியகழ்வு அலுவலகத்திற்கு அருகில் பதற்றம்
கண்டி குடிவரவு குடியகழ்வு திணைக்கள அலுவலகத்திற்கு முன்பாக கடவுச்சீட்டு பெற வந்தவர்களுக்கு மத்தியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளின் முறையற்ற செயற்பாடுகள் காரணமாக தாம் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
தூர இடங்களில் இருந்து வந்து கடவுச்சீட்டை பெற்றுக் கொள்வதற்காக பல நாட்களாக காத்திருந்த ஒரு குழுவிற்கும் இன்று காலை அந்த இடத்திற்கு வந்த மற்றுமொரு குழுவினருக்கும் இடையில் தீவிர நிலைமை ஏற்பட்டுள்ளது.
கண்டி குடிவரவு குடியகழ்வு அலுவலகத்திற்கு அருகில் பதற்றம்
இதற்கிடையில், வரிசையில் நின்று கடவுச்சீட்டு பெற வரும் நபர்களிடம், திட்டமிட்ட கும்பல் ஒன்று சட்டவிரோதமாக பணம் பறிப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
இதற்கு கண்டியில் உள்ள குடிவரவு குடியகல்வு திணைக்கள அலுவலகத்தில் இருந்தும் ஆதரவு கிடைத்து வருவதாக அங்கு வந்திருந்த மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
ஆயிரத்தெட்டு இன்னல்களுக்கு மத்தியில் தொலைதூரப் பகுதிகளில் இருந்து வந்து நாட்டிற்கு அன்னியச் செலாவணியைக் கொண்டு வரும் இந்த மக்களுக்கு குறைந்தபட்ச சேவையையேனும் வழங்க குடிவரவு அதிகாரிகள் கண் திறப்பார்களா?
கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி எதிரணியில் போராட்டம்
கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி எதிரணியில் போராட்டம்
இலங்கையில் ஆளும் ராஜபக்ஸ குடும்ப ஆட்சிக்கு எதிராக மக்கள் 22 நாளாக
போராட்டம் நடத்திய வண்ணம் உள்ளனர் ,இவ்வேளை ஐக்கிய மக்கள் சக்தியினர் கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி
பெரும் பேரணி ஒன்றை நடத்திய வண்ணம் உள்ளனர்
இந்த பேரணி இரண்டாவது நாளாக தொடர்ந்த வண்ணம் உள்ளது
டீச்சருக்கு கொரனோ – பாடசாலை அடித்து பூட்டு
இலங்கை ,கண்டி காட்டன் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கற்கை நெறி போதித்து வந்த டீச்சர் ஒருவருக்கு கொரனோ
நோயானது உள்ளது கண்டு பிடிக்க பட்ட நிலையில் தற்போது அந்த பாடசாலை அடித்து பூட்ட பட்டுள்ளது
மறு அறிவித்தல் வரும் வரை திறக்க பட மாட்ட்து என தெரிவிக்க பட்டுள்ளது ,சுகாதார முறைமைக்கு உட்படுத்த பட்டு கிருமி
நாசினிகள் கொண்டு பாடசாலை முழுவதுதுமாக சுத்தம் செய்ய பட்டுள்ளது
,மேலும் இங்கு கல்வி பயின்ற மாணவர்கள் அனைவருக்கும் சோதனை மேற்கொள்ள பட்டு வருகிறது
இதுவரை இலங்கையில் நானூருக்கு மேற்பட்டவர்கள் கொரனோ நோயினால் பலியாகியுள்ளமை குறிப்பிட தக்கது
கண்டியில் மக்கள் வீடுகளுக்கு தீ வைத்த விஷமிகள் – 20 வீடு தீக்கிரை
கண்டியில் மக்கள் வீடுகளுக்கு தீ வைத்த விஷமிகள் – 20 வீடு தீக்கிரை
இலங்கை – கண்டி டிக்கோயா மணிக்கவத்தை 3ம் பிரிவு தோட்டத்தில் வறிய மக்கள் வசித்து வந்த இருபது வீடுகள் திடீரென தீ பற்றி எரிந்தன
இதனால் தமது வீடுகளை இழந்து அதில் வசித்த மக்கள் அகதிகளாக உள்ளனர் ,வறுமையில் வாடிய மக்களுக்கு இடம்பெற்றுள்ள இந்த சோகமான செயல் பெரும் துயரை ஏற்படுத்தியுள்ளது
திட்டமிட்டு விசமிகள் இந்த தீவைப்பு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக குற்ற சுமத்த படுகிறது ,தமிழர் பகுதிகளை மைய படுத்தி மர்ம
கொலைகள் இடம்பெற்று வரும் நிலையால் ,காவல்துறையினர் மக்களை தாக்கி வரும் வேளை இந்த வீடுகள் எரியூட்ட பட்டுள்ளது
கோத்தபாயவின் இனவிரோத செயலை அப்பட்டமாக காட்டுவதாக மனித உரிமை நேயவாதிகள் கருத்துரைக்கின்றனர்
தனக்கு வாக்கு போடாத தமிழர்களை இவ்விதம் பழிவாங்கி வருவதான குற்ற சாட்டுக்கள் ,ஆழமாக தமிழர் மனங்களில் நிலைத்துள்ளன

- ஈரான் குடி நீர் பகுதியை இலக்கு வைத்து அமெரிக்கா தாக்குதல்

- பஹ்ரைன் மீது ஈரான் தாக்குதல்

- 13 பில்லியன் தேசிய அபிவிருத்தி வங்கி மோசடி

- மீன் விநியோகத்தை மேம்படுத்த ரூ. 200 மில்லியன் மதிப்புள்ள குளிரூட்டப்பட்ட சரக்குந்துகளை ஜப்பான் நன்கொடையாக வழங்கியது

- நீதிமன்றத்திற்கு நீதிபதிகளை நியமிப்பதில் தாமதம் குறித்து சஜித் கவலை

கொரனோவால் இனம் காணப்பட்ட நபர் கண்டி மருத்துவ மனையில் அனுமதி
கொரனோவால் இனம் காணப்பட்ட நபர் கண்டி மருத்துவ மனையில் அனுமதி
இலங்கை கண்டி பகுதியில் நபர் ஒருவர் கொரனோ வைரஸ் தாக்குதல்
காரணமாக அடையாளம் காணப்பட்ட நிலையில் தற்பொழுது அவர்
கண்டி ஆதர் வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டுள்ளார்
மேலும் இவருடன் பழகிய உறவுகள் ,நண்பர்களை தனிமை
படுத்தும் முயற்சியில் சுகாதார அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்
இலங்கையில் பெருகி வரும் சேதங்களை அரசு மறைத்து வந்த நிலையில்
அது தாண்டி தற்பொழுது அதிக அளவிலான மக்கள் பாதிக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது




























