Category: உலக செய்திகள்
உலக செய்திகள்,இன்றைய உலக செய்திகள் ,Today World News In Tamil ,சுட சுட இதே எதிரி உலகத்தின் நியூஸ் பக்கத்தில் பார்வையிடலாம்
அமெரிக்காவில் கறுப்பினத்தவரை கொன்ற பொலிஸ் காரனுக்கு 22 1/2 வருடம் சிறை
அமெரிக்காவில் கறுப்பினத்தவரை கொன்ற பொலிஸ் காரனுக்கு 22 1/2 வருடம் சிறை
அமெரிக்காவில் இனவெறி பிடித்த காவல்துறை சிப்பபாய் ஒருவர் கறுப்பினத்தவர் , ஒருவரை கழுத்தில் நெரித்து படுகொலை செய்தார்
,இவர் மேற்கொண்ட இந்த கொலை வெறி செயலினால் நாடே கொந்தளித்தது ,அந்த கொலை வழக்கு விசாரணைகள்
முடிவு அறிவிக்க பட்டுள்ளது ,அதன் பிரகாரம் இவருக்கு இருபத்தி இரண்டரை வருடம் சிறை
தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது ,அனால் மரண தண்டனை வழங்க படவில்லை என்பது குறிப்பிட தக்கது
பிரிட்டன் போர் கப்பல் மீது ரசியா தாக்குதல்
பிரிட்டன் போர் கப்பல் மீது ரசியா தாக்குதல்
பிரித்தானியாவின் ராயல் கடற்படையின் போர் கப்பல் ஒன்று கருங்கடல் அண்மித்து ரசியா எல்லைக்குள் நுழைந்துள்ளது
மேற்படி கப்பலை கண்காணித்த ரசியாவின் பாதுகாப்பு கப்பல் ,அதில் இருந்து பறந்து சென்ற Su-24M போர் விமானம் பிரிட்டன் கப்பலின் அருகில் நான்கு குண்டுகளை வீசியது
இதனால் அங்கு பெரும் போர் பதட்டம் ஏற்பட்டுள்ளது ,பிரித்தானியாவின் இந்த அத்துமீறல் நாடுகளுக்கு இடையில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது
லண்டன் லூசியத்தில் பெண் படுகொலை
லண்டன் லூசியத்தில் பெண் படுகொலை
லண்டன் லூசியம் Cressingham Road, south-east London. பகுதியில் 53 வயதுடைய பெண்மணி ஒருவர் படுகொலை செய்யபட்டுள்ளார்
வீட்டுக்குள் இறந்த நிலையில் மீட்க பட்ட பெண்ணின் சடலம் மருத்துவ பரிசோதனைக்கு
உட்படுத்த பட்டது ,இதில் 54 வயது நபர் ஒருவர் இந்த படுகொலையை புரிந்தார் என்ற குற்ற சாட்டில் கைது செய்ய பட்டுள்ளார்
மேற்படி கொலை தொடர்பான வழக்கு புறம்பிளி நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு உள்ளாக்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது
- குவைத் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்
- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்து குறைவு
- ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடி
- ஈரான் அரசாங்கத்தைக் கவிழ்க்க இஸ்ரேல் செயல்பட்டு வருகிறது என நெதன்யாகு
- மோட்டார் சைக்கிள் திருட்டு
- டெங்கு அபாயம் தொடர்கிறது
- ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் எராஜ் பெர்னாண்டோவின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை
- இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு பாராளுமன்ற அதிகாரிகள் ஆஜரானார்கள்
கவிழ்ந்த பேரூந்து இருவர் மரணம் – பலர் காயம்
கவிழ்ந்த பேரூந்து இருவர் மரணம் – பலர் காயம்
ஈரான் West Azarbaijan பகுதியில் ஆடம்பர சொகுசு பேரூந்து ஒன்று சாரதியின் காட்டு பாட்டை
இழந்து விபத்தில் சிக்கியதில் அதில் பயணித்த இரண்டு ஊடக நபர்கள் பலியாகினர் ,மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்
விபத்தில் சிக்கிய பேருந்தின் பிரேக் செயல் பட மறுத்தினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக முதல்
கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது
பேரூந்து கவிழ்ந்து பெரும் சேதத்திற்கு உள்ளாகியுள்ளது

பிரிட்டனில் மீள எகிறும் கொரனோ பாதிப்பு தடை வரலாம் என அச்சம்
பிரிட்டனில் மீள எகிறும் கொரனோ பாதிப்பு தடை வரலாம் என அச்சம்
பிரிட்டனில் மூன்றாம் அலையாக கொரனோ நோயானது பரவுதல் அதிகரித்துள்ளது
இதனால் மீளவும் அடித்து பூட்டும் நிலை ஏற்படலாம் என எதிர் பார்க்க படுகிறது
இந்தியா ,இலங்கையில் இந்த நோயானது வேகமாக பரவி வரும் நிலையில் ,தற்பொழுது இந்த
நோயினால் பாதிக்க பட்டவர்கள் எண்ணிக்கை மீள அதிகரித்துள்ளதான அறிவிப்பு மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது
அமெரிக்கா அதிபரை சந்திக்க மறுக்கும் ஈரான் அதிபர்
அமெரிக்கா அதிபரை சந்திக்க மறுக்கும் ஈரான் அதிபர்
ஈரானில் புதிதாக தெரிவு செய்ய பட்ட அதிபர் அமெரிக்கா அதிபரை சந்திக்க மறுப்பு தெரிவித்துள்ளார் ,இவரது இந்த அறிவிப்பு பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது
இஸ்ரேல் ,அமெரிக்கா இணைந்து ஈரானில் பெரும் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ள செய்திகள் கிடைக்க பெற்றுள்ளதும் ,
ஈரானின் ஏவுகணை சோதனைகளை நிறுத்திட கோரிக்கை விடும் முகமாக ஈரான் அதிபர் பேச
உள்ளதாக தெரிவித்துள்ள நிலையில் இந்த சந்திப்பு மறுக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது
ஈரான் ஆப்கான் எல்லைகள் மீள் திறப்பு – ஈரான் புதிய அதிபர் அதிரடி
ஈரான் ஆப்கான் எல்லைகள் மீள் திறப்பு – ஈரான் புதிய அதிபர் அதிரடி
கடந்த கால ஈரானிய ஆட்சியாளரினால் மூட பட்டு இருந்த ஈரான் ஆப்கான் எல்லைகள் மீள தற்பொழுது திறக்க பட்டுள்ளது
இதனால் இரு நாடுகளுக்கு டையிலான வர்த்தகம் ,பொருளாதார நடவடிக்கைகள் துரித படுத்த பட்டுள்ளன ,
அதேவேளை வெளி நாடுகளுடனான ராஜ்ஜிய உறவுகளை தாம் புதுப்பித்து அதன் ஊடக நகர்வோம் என் புதிய அதிபர் அதிரடியாக அறிவித்துள்ளார்
எரிந்த நிலையில் சடலம் மீட்பு – விசாரணை தீவிரம்
எரிந்த நிலையில் சடலம் மீட்பு – விசாரணை தீவிரம்
அவுஸ்ரேலியா விக்டோரியா பகுதியில் எரிந்த நிலையில் ஆணின் சடலம் ஒன்று காருக்குள் இருந்த
நிலையில் கண்டு பிடிக்க பட்டுள்ளது
மேற்படி நபரது மரணம் தொடர்பில் போலீசார் விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்
அமெரிக்கா இராணுவத்தை வழிமறித்த ரசியா இராணுவம்
அமெரிக்கா இராணுவத்தை வழிமறித்த ரசியா இராணுவம்
சிரியாவின் M4 வீதியில் பயணித்து கொண்டிருந்த அமெரிக்கா இராணுவ தொடரணியை ரசியா இராணுவத்தினர் வழிமறித்தனர்
இதனால் அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டது
சமரச விதிகளை மீறி அமெரிக்கா இராணுவத்தினர் அவ்வழியாக பயணித்த நிலையில் இந்த வழிமறிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது
ஆயுததாரி வெறியாட்டம் – 15 பேர் சுட்டு கொலை
ஆயுததாரி வெறியாட்டம் – 15 பேர் சுட்டு கொலை
அமெரிக்கா மெஸ்க்சிக்கோ எல்லையில் ஆயுதாரி நடத்திய துப்பாக்கி சூட்டில் பதின் ஐந்து பேர் பலியாகியுள்ளனர்
மேற்படி சூட்டு சம்பவத்தை அடுத்து அங்கு போலீசார் குவிக்க பட்டு பாதுகாப்பு பலப்படுத்த பட்டுள்ளது
போதைவஸ்து குழுக்களுக்கு இடையில் இந்த மோதல்கள் இடம்பெற்று இருக்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது
ஈராக் அமெரிக்கா இராணுவம் தளம் மீது ரொக்கட் தாக்குதல்
ஈராக் அமெரிக்கா இராணுவம் தளம் மீது ரொக்கட் தாக்குதல்
ஈராக் தலைநகர் பகுதியில் அமைந்துள்ள அமெரிக்கா இராணுவத்தின் Ain al-Assad விமான தள படை முகாம் மீது ரொக்கட் தாக்குதல் நடத்த பட்டுள்ளது
இந்த தாக்குதலில் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக ஈராக்கிய தகவல்கள் தெரிவிக்கின்றன
தொடராக இந்த முகாம் மீது ஏவுகணை தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிட தக்கது
ஈரான் அதிபராக வென்றார் – கொதிக்கும் இஸ்ரேல் அமெரிக்கா
ஈரான் அதிபராக வென்றார் – கொதிக்கும் இஸ்ரேல் அமெரிக்கா
உலக
Hardliner Ebrahim Raisi has won Iran’s presidential election
ஈரானில் நடந்து முடிந்த தேர்தலில்
Hardliner Ebrahim Raisi இம்முறை தேர்தலில்
பலத்த வெற்றியை பெற்று சாதனை படைத்துள்ளார்
இவர் உச்ச நீதிம்னற நீதிபதியாக விளங்கியவர்
கடந்த கால ஆட்சியாளர்களின் ஊழல் அரசாட்சிக்கு எதிராக பெரும் பரப்புரை புரிந்து வந்தார்
அவ்வாறான நிலையில் பலத்த மக்கள் வாக்குகள் மூலம் வெற்றியை பெற்று ஆட்சியில் அமர்ந்துள்ளார் ,
இவரது வருகை இஸ்ரேலுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் எனவும் ,இவரது செயல் பாடுகள் மிக மோசமானதாக இருக்கும் எனவும் அணுஆயுத உற்பத்தியில் இவர் வெற்றி பெற்று சாதிப்பார் என எதிர்வு கூற பட்டுள்ளது
இராணுவ துறையில் பெரும் மாற்றம் ஏற்படும் என அடித்து கூறப்படுகிறது
தீவிரவாதிகளினால் 70 பாடசாலை மாணவர்கள் கடத்தல்
தீவிரவாதிகளினால் 70 பாடசாலை மாணவர்கள் கடத்தல்
வடக்கு நையீரியாவின் அரச பாடசாலைக்குள் புகுந்த தீவிரவாதிகள் ,அந்த பாடசாலைக்கு காவல் நின்ற காவல் துறை சிப்பாயை சுட்டு கொன்று விட்டு அங்கிருந்த எழுபது மாணவர்களை கடத்தி சென்றுள்ளனர்
இரண்டாவது வாரத்தில் இடம்பெற்ற இரண்டாவது கடத்தல் இதுவாக பதிய பெற்றுள்ளது
பொக்கோ காராம் அமைப்பினர் மேற்கொண்டு வரும் இந்த கடத்தல் நடவடிக்கையால் மக்கள் பெரிதும் பீதியில் உறைந்துள்ளனர்
மோடியுடன், மு.க.ஸ்டாலின் இன்று சந்திப்பு
மோடியுடன், மு.க.ஸ்டாலின் இன்று சந்திப்பு
சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றதையடுத்து தமிழகத்தின் முதல்-அமைச்சராக கடந்த மாதம் (மே) 7-ந் தேதி மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றார்.
மாநிலம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகம் இருந்ததால், ஆக்சிஜன், கொரோனா தடுப்பூசி மற்றும் மருந்துகள் தேவை பற்றி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்-அமைச்சர்
மு.க.ஸ்டாலின் கடிதங்கள் எழுதி வந்தார். செங்கல்பட்டில் கொரோனா தடுப்பு மருந்து உற்பத்தி மையத்தை விரைவில் தொடங்குவது குறித்தும் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் தற்போது மத்திய அரசு தொடர்புடைய ‘நீட்’ தேர்வு பிரச்சினை, ஹைட்ரோ கார்பன், 7 பேர் விடுதலை ஆகியவை தலைதூக்குகின்றன.
மேலும், தற்போது தமிழகத்தில் செலவீனம் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்திற்கு மத்திய அரசு தர வேண்டிய ஜி.எஸ்.டி. பாக்கித்தொகை தேவைப்படுகிறது.
இந்த நிலையில் முதல்-அமைச்சராக பதவி ஏற்ற பிறகு முதல் முறையாக மு.க.ஸ்டாலின் இன்று (வியாழக்கிழமை) டெல்லி செல்கிறார்.
அங்கு பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கும் அவர், தமிழகத்திற்கான பல்வேறு கோரிக்கைகளை நேரில் வலியுறுத்துவதோடு, பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் அளிக்கிறார்.
பிரதமர் மோடி
டெல்லி பயணத்திற்காக இன்று காலை 7 மணிக்கு சென்னையில் உள்ள வீட்டில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டு, காலை 7.20 மணிக்கு சென்னை விமான நிலையத்தை வந்தடைகிறார். 7.30 மணிக்கு சிறப்பு விமானம் மூலம் டெல்லிக்கு புறப்படுகிறார்.
காலை 10 மணிக்கு அவர் டெல்லி விமான நிலையத்தை சென்றடைகிறார். அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு தமிழ்நாடு இல்லத்திற்கு செல்கிறார். பின்னர் டெல்லியில் உள்ள தி.மு.க. கட்சி
அலுவலகமான அறிவாலயத்திற்கு சென்று பார்வையிடுகிறார். பின்னர் மீண்டும் தமிழ்நாடு இல்லத்திற்கு திரும்புகிறார்.
அதைத்தொடர்ந்து தமிழ்நாடு இல்லத்தில் இருந்து கார் மூலம் புறப்பட்டு பிரதமர் அலுவலகத்திற்கு செல்கிறார். அங்கு இன்று மாலை 5 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்கிறார்.
அப்போது பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் அவர் கொடுக்கிறார்.
அதில் ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தமிழகத்திற்கு கூடுதல் கொரோனா தடுப்பூசி மருந்துகளை அளிக்க வேண்டும் உள்ளிட்ட சில கோரிக்கைகளை நேரில் மு.க.ஸ்டாலின் வற்புறுத்துவார்.
இந்த சந்திப்பு சுமார் அரை மணி நேரம் நீடிக்கும் என்று கூறப்படுகிறது. பின்னர் அங்கிருந்து புறப்பட்டு தமிழ்நாடு இல்லத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிறார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளிப்பார். இன்று இரவு டெல்லியில் அவர் தங்குகிறார்.
அதனைத்தொடர்ந்து நாளை (வெள்ளிக்கிழமை) காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மற்றும் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசுகிறார்.
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஏற்கனவே டெல்லியில் உள்ளார். டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயனும் அங்கு இருக்கிறார். தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, உள்துறை
செயலாளர், செய்தி மற்றும் மக்கள் தொடர்பு இயக்குனர் உள்ளிட்ட சில அதிகாரிகள் டெல்லி சென்றுள்ளனர். தி.மு.க.வின் அனைத்து எம்.பி.க்களும் அங்கு இருக்கின்றனர்.
முதல்-அமைச்சராக பதவி ஏற்ற பின்னர் டெல்லிக்கு முதல் முறையாக செல்லும் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு இல்லத்தில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்படுகிறது.
சில அமைப்புகளின் அச்சுறுத்தல் இருப்பதால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு டெல்லியில் ‘இசட்’ பிளஸ் பாதுகாப்பை மத்திய அரசு வழங்குகிறது
சவூதி விமான நிலையம் மீது தாக்குதல்
சவூதி விமான நிலையம் மீது தாக்குதல்
சவூதி நாட்டின் Abha விமான தளம் மீது ஏமான் நாட்டு இராணுவத்தினர் திடீர் தாக்குதலை
நடத்தியுள்ளனர் .இதில் அந்த விமான நிலையம் பலத்த சேதமடைந்துள்ளது
இரு நாட்டு இராணுவத்தினருக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது
ஈரான் இராணுவ தளபதி -சோலைமானியின் பெயரில் புதிய வீதி -photo
ஈரான் இராணுவ தளபதி -சோலைமானியின் பெயரில் புதிய வீதி -photo
ஈரான் நாட்டின் முதன்மைஇ இராணுவ தளபதியும் ,இண்டாம் நிலை தலைவருமான விளங்கிய சோலைமனையின் பெயரில் புதிய மேபலம் அடங்கிய சாலை ஒன்று திறந்து வைக்க பட்டுள்ளது
மிக கோலா கலமாக இந்த சாலை திறந்து வைக்க பட்டுள்ளது ,அந்த சாலை திறப்பில் அவரது குடும்ப உறவினர்கள் அழைக்க பட்டு கவுரவிக்க பட்டனர்
ஈரானிய மக்களின் நெஞ்சங்களில் நீங்காத இடம் பிடித்து வாழ்ந்து கொண்டிருக்கும் தியாக தீபமாக சோலைமானி உள்ளது குறிப்பிட தக்கது
இவர் ஈரானிய மக்களுக்கு ,வீடுதலை புலிகளின் ராணுவ தளபதி பால்றாஜ் போன்றவராகும்



பிரிட்டனில் சுற்றிவளைத்த பொலிஸ் சிக்கிய பெரும் பணம்
பிரிட்டனில் சுற்றிவளைத்த பொலிஸ் சிக்கிய பெரும் பணம்
பிரிட்டனில் போலீசார் நடத்திய திடீர் முற்றுகையில் இரண்டு லட்சம் பவுண்டுக்ளுக்கு அதிகமான
பணமும் ,ஆயுதங்கள் மற்றும் போதைவஸ்து என்பன மீட்க பட்டுள்ளது
பொலிஸாருக்கு கிடைக்க பெற்ற உளவு தகவலை அடுத்து நடத்த பட்ட பெரும் முற்றுகையில் இந்த
போதைவஸ்து கும்பல் சிறை பிடிக்க பட்டுள்ளனர்
வவ்வாலில் இருந்து பரவும் பரவும் புதுவகை கொரனோ
வவ்வாலில் இருந்து பரவும் பரவும் புதுவகை கொரனோ
உலக நாடுகளில் இரண்டாம் கொரனோ அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில்
,தற்போது கொரனோவின் தாயகமாக கூற படும் சீனாவில் தற்போது புதியவகை கொரனோ நோயானது கண்டு பிடிக்க பட்டுள்ளது
இவை வவ்வால்களில் இருந்து பரவி வருகிறது என ஆராய்ச்சியாளர்கள் கணடறிந்துள்ளனர் ,
இந்த நோயானது இதுவரை பரவிய நோய்களை விட மிக ஆபத்தானதும் ,வேகமாக பரவ கூடியது என தெரிவிக்க பட்டுள்ளது
வீடு புகுந்து பெண்ணை அடித்து கொன்ற நபர்
வீடு புகுந்து பெண்ணை அடித்து கொன்ற நபர்
அவுஸ்ரேலியா Nowra பகுதியில் 37 வயது நபர் ஒருவர் 51 வயது பெண்மணி ஒருவரை அடித்து
கொன்றுள்ளார் ,உயிரிழந்த நிலையில் மீட்க பட்ட பெண்ணின் சடலம் மரண பரிசோதைக்கு
உட்படுத்த பட்டுள்ளது ,தற்போது குற்றவாளி கைது செய்ய பட்டு நீதி விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார்
இந்த கொலைக்கான கரணம் உடனடியாக தெரியவரவில்லை
பிரிட்டனில் பரவும் புதிய வகை நோய்
பிரிட்டனில் பரவும் புதிய வகை நோய்
பிரித்தானியாவில் குரங்கு அம்மை (Monkey Pox) என்னும் வைரஸ் பரவுவதால் அங்குள்ள மக்கள் அச்சமடைந்துள்ளனர். வட வேல்ஸில் இரண்டு நோயாளர்களுக்கு ஆட்கொல்லி குரங்கு அம்மை
உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என பிரித்தானிய சுகாதார மற்றும் சமூக பாதுகாப்புச் செயலாளர் மட் ஹென்கொக் (Matt Hancock) தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே கொவிட்-19 தனிமைப்படுத்தலை பராமரித்து வரும் நிலையில், தற்பொழுது இந்த அரிய வகை ஆட்கொல்லிக் கிருமி பிரித்தானிய மக்களை அச்சம் கொள்ளச் செய்துள்ளது.
இந்த நோய்த் தாக்கத்துக்குள்ளாகியுள்ள இருவரும், வெளிநாடொன்றிலிருந்தே இந்தக் கிருமியைக் காவிக்கொண்டு வந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

















