Tag: விமான
விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு
விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு
விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு ,விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுப் பிரச்சினையால் இங்கிலாந்து விமான நிலையங்கள் பாதிக்கப்பட்டன.
விமான நிலையங்களில் விமானப் போக்குவரத்து
லண்டன் மற்றும் நாட்டின் பிற இடங்களில் உள்ள முக்கிய விமான நிலையங்களில் விமானப் போக்குவரத்துப் பிரச்சினை ஏற்பட்டதாக
புதன்கிழமை பிரிட்டனின் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் தெரிவித்தனர், ஆனால் பின்னர் அந்தப் பிரச்சினை தீர்க்கப்பட்டதாகக் கூறினர்.
தேசிய விமானப் போக்குவரத்து சேவைகளின்படி, இங்கிலாந்து வான்வெளியில் இருந்து விமானங்கள் வெளியேறுவதில் குறிப்பிடத்தக்க
தாமதத்தை ஏற்படுத்திய ஒரு தொழில்நுட்பப் பிரச்சினை மீட்டெடுக்கப்பட்டுள்ளது என்று உள்ளூர் இங்கிலாந்து ஊடகங்கள் தெரிவித்தன.
தொழில்நுட்பப் பிரச்சினை விசாரிக்கப்படும் வரை, ஹீத்ரோ, கேட்விக் மற்றும் எடின்பர்க் விமான நிலையங்கள் உட்பட இங்கிலாந்து முழுவதும் உள்ள விமான நிலையங்களில் விமானங்கள் தரையிறக்கப்பட்டன.
சிக்கலைச் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டதால் ஏற்பட்ட தாமதங்களுக்கு தேசிய விமானப் போக்குவரத்து சேவைகள் மன்னிப்பு கேட்டுள்ளன.
“இன்று மதியம் பாதிக்கப்பட்ட அமைப்பை எங்கள் பொறியாளர்கள் இப்போது மீட்டெடுத்துள்ளனர்” என்று NATS ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
லண்டன் பகுதியில் வழக்கமான செயல்பாடு
“லண்டன் பகுதியில் வழக்கமான செயல்பாடுகளை மீண்டும் தொடங்கும் பணியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம்.
“இடையூறுகளைக் குறைக்க விமான நிறுவனங்கள் மற்றும் விமான நிலைய வாடிக்கையாளர்களுடன் நாங்கள் தொடர்ந்து நெருக்கமாகப் பணியாற்றி வருகிறோம்.”
இந்த தொழில்நுட்பக் கோளாறு இங்கிலாந்து முழுவதும் வெளிச்செல்லும் அனைத்து விமானங்களையும் பாதித்துள்ளதாக கேட்விக் விமான நிலையம் தெரிவித்துள்ளது.
இங்கிலாந்து விமான நிலையங்களுக்கு வரவிருந்த பல விமானங்கள் நிறுத்தி வைக்கும் முறைகளைப் பின்பற்றவோ அல்லது வேறு இடங்களுக்குத் திருப்பி விடவோ கட்டாயப்படுத்தப்பட்டுள்ளன.
எரியும் உக்ரைன் 100விமான தாக்குதல்
எரியும் உக்ரைன் 100விமான தாக்குதல்
எரியும் உக்ரைன் 100விமான தாக்குதல். சுக்ரின் நாட்டின் உள்காட்ட மைப்புக்களை இலக்கு வைத்து கடந்த 24 மணி நேரத்தில் ரஷ்யாவின் 100 போன்ற விமானங்கள் கடும் தாக்குதலை நடத்தின.
ரஷ்யா ராணுவத்தின் கெமிக்காசி தற்கொலை தாக்குதல் விமானங்கள் கடுமையான தாக்குதலை நடத்தின.
இந்த தாக்குதலின் பொழுது பலத்த இழப்பினை தற்பொழுது படைகள் சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்து துல்லியமான தாக்குதலை தாங்கள் நடத்தியது .
இதன் பொழுது பல அடுக்குமாடி கட்டிடங்கள் தீயில் எரிந்தும் இடிந்தும் காணப்படுகின்றன.
கடும் சமர் தற்பொழுது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற இந்த காலப்பகுதியில் மின்சாரம் கீட்டர்கள் ஏதுமின்றி மக்கள் குளிரில் தத்தளித்து வருகின்றனர் .
மின்சாரம் குடிநீர் இல்லாமல் மக்கள் தற்பொழுது அவதியுற்று வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இடைவிடாத தொடரும் இரண்டு வருடத்திற்கு மேலான இந்த யுத்தத்தில் தற்பொழுது உக்கிரைன் உள் கட்டமைப்புகள் பலமாக பாதிக்கப்பட்டு , மக்கள் சொல்லென்ன துயரை சாதித்த வண்ணம் உள்ளமை இங்கே கவனிக்கத்தக்கது.
- இஸ்ரேலுக்கு எதிராக கருது உரைத்தால் அமெரிக்கா கிரீன் கார்ட் இரத்து

- ஈரான் கடல் மூடல் உணவு தட்டு பாடு ஐநா

- ஈரான் எண்ணெய் வயல்கள் முடக்கம் அமெரிக்கா அறிவிப்பு

- லெபனானிலிருந்து ட்ரோன் ஊடுருவலுக்குப் பிறகு கலிலேயாவில் எச்சரிக்கை ஒலிகள்

- ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் இஸ்ரேலிய ராணுவ வீரர் நிகழ்வை மாணவர் முடக்கினார்

பிரிட்டன் விமான தாங்கி கப்பலில் தீ 10 கடற்படை காயம்
டுபாய் -கொழும்புக்கிடையிலான நேரடி விமான சேவைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
டுபாய் -கொழும்புக்கிடையிலான நேரடி விமான சேவைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
அடுத்த மாதம் 1 ஆம் திகதி தொடக்கம் நாளாந்தம் டுபாய் கொழும்புக்கிடையான நேரடி விமான சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு எமிரேட்ஸ் நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இந்த நேரடி விமான சேவையில் 2 சேவைகள் மற்றும் மாலைத்தீவின் தலைநகரில் இருந்து ஒரு விமான சேவையும் உள்ளடங்கும். டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி தொடக்கம் 30 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியை தவிர்ந்த
ஏனைய அனைத்து நாட்களிலும் இந்த விமான சேவை இடம்பெறும் என்று எமிரேட்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
Featured
கையில் குழந்தை, மறுகையில் சூட்கேஸ் – விமான பயணிகளை மிரளவைத்த தாய்
கையில் குழந்தை, மறுகையில் சூட்கேஸ் – விமான பயணிகளை மிரளவைத்த தாய்
விமானத்தில் கைக்குழந்தையுடன் ஒரு பெண் தனது காலால் விமானத்தின் கேபின் கதவை அசால்ட்டாக மூடியது பார்ப்பவரை மிரள வைத்துள்ளது.
ஒரு கையில் குழந்தை, மறுகையில் சூட்கேஸ் – விமான பயணிகளை மிரளவைத்த தாய்
பெட்டியை எடுக்கும் பயணி
வெளிநாட்டு விமானத்தில் கைக்குழந்தையுடன் பயணித்த ஒரு பெண் தனது காலால் விமானத்தில் உள்ள கேபின் கதவை அசால்ட்டாக மூடிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
விமானம் ஒன்றில் பயணம் முடிந்து அனைத்துப் பயணிகளும் இறங்க தயாராகிக் கொண்டிருக்கின்றனர். அப்போது அந்த விமானத்தில் பயணம் செய்த ஓர் இளம்பெண்
ஒரு கையில் தனது கைக்குழந்தையை வைத்துள்ளார். மறு கையில் இருக்கைக்கு மேலிருக்கும் கேபினில் இருந்து மற்றொருவர் உதவியை நாடாமல் தனது பெட்டியை எடுத்துள்ளார்.
அதன்பின், அந்த பெண் கேபின் கதவை மூட தனது காலை நேர் மேலே தூக்கி கேபினை அசால்ட்டாக மூடுகிறார். பார்ப்பதற்கு அவர் ஜிம்னாஸ்டிக் வீராங்கனையாக
இருக்கிறார். இந்தக் காட்சியைக் கண்ட சக பயணிகள் மிரட்சி அடைந்தனர். இதுதொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகியது.
யார் உதவியையும் எதிர்பாராமல் தானாகவே கேபின்
கதவை அசால்ட்டாக மூடிய அந்தப் பெண்ணின் திறமைக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
அரசியல் கொள்ளையர்கள் தப்பிக்காது இருக்க – விமான நிலையம் மூடிவிட கோரிக்கை
அரசியல் கொள்ளையர்கள் தப்பிக்காது இருக்க – விமான நிலையம் மூடிவிட கோரிக்கை
இலங்கையில் அளவும் அடச்சியில் அங்கம் வகித்த பல அரசியல் பிரமுகர்கள் லஞ்ச ஊழலில் ஈடுபட்டனர்
இவ்வாறானவர்கள் நாட்டை விட்டு தப்பி செல்லாமல் இருக்க இலங்கை விமான
நிலையங்களை மூடிவிட வேண்டும் என விஜித ஹேரத் பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்
மிகவும் பர பரப்பன வேளையில் பாரளுமன்றம் கூடியபோது மிக காரசாரமான வாதங்கள் அங்கு இடம்பெற்றுள்ளது
அத்துமீறி நுழைந்த – இஸ்ரேலிய விமானங்கள்
அத்துமீறி நுழைந்த – இஸ்ரேலிய விமானங்கள்
லெபனான் நாட்டின் வான் பரப்பிற்குள் இஸ்ரேல் நாட்டின் போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்துள்ளது ,
மேற்படி சம்பவம் நாடுகளுக்கு இடையில்முறுகளை ஏற்படுத்தியுள்ளது
லெபனான் மீது பெரும் தாக்குதல் ஒன்றை நடத்த இஸ்ரேல் வெளியாக உணவுத்துறை நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிட தக்கது
தாய்வான் மேலாக பறந்த சீன விமானங்கள்
தாய்வான் மேலாக பறந்த சீன விமானங்கள்
தாய்வான் நாட்டின் மேலாக சீன விமானங்கள் பறந்துள்ள நிலையில் நாடுகளுக்கு இடையில் பெரும் போர் பதட்டம் இடம்பெற்று வருகிறது
சீனாவின் இந்த அத்துமீறலுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது
தாய்வான் தொடர்ந்து தங்களின் நாட்டின் ஒரு பகுதி என சீனா தொடர்ந்து கூறி வரும் நிலையில் இந்த சர்ச்சை வெடித்துள்ளது
இலங்கை சுவிஸ் விமான சேவைகள் மீள ஆரம்பம்
இலங்கை சுவிஸ் விமான சேவைகள் மீள ஆரம்பம்
இலங்கைக்கும் சுவிஸர்லாந்திற்கும் இடையிலான விமான சேவைகள் மீள் ஆரம்பிக்க பட்டுள்ளதாக இலங்கை தெரிவித்துள்ளது
நிகழ்கால கொரனோ நிலைகளை அடுத்து இடம்பெற்ற இந்த தடைகள் தற்போது தளர்த்த பட்டு
மட்டு படுத்த பட்ட சேவைகள் ஆரம்பிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது
தேசிய நெடுஞ்சாலையில் விமானப்படை விமானங்களை தரையிறக்கி ஒத்திகை
தேசிய நெடுஞ்சாலையில் விமானப்படை விமானங்களை தரையிறக்கி ஒத்திகை
சுகோய்-30எம்கேஐ போர் விமானம், ஏஎன்-32 ராணுவ போக்குவரத்து விமானம், எம்ஐ-17வி5 ஹெலிகாப்டர் ஆகியவற்றையும் நெடுஞ்சாலையில் வெற்றிகரமாக தரையிறக்கி சோதனை செய்தனர்.
எல்லை அருகே இறங்குதளம்… தேசிய நெடுஞ்சாலையில் விமானப்படை விமானங்களை தரையிறக்கி ஒத்திகை
அவசரகால இறங்குதளத்தில் தரையிறங்கும் போர் விமானம்
அவசர காலங்களில் இந்திய விமானப் படையின் போர் விமானங்கள் மற்றும் இதர விமானங்களை தரையிறக்கும் வகையில், ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலை
மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், தேசிய நெடுஞ்சாலை-925ல் சத்தா-காந்தவ் இடையிலான 3 கிமீ பகுதியை அவசர காலங்களில் விமானங்களை தரையிறக்கும் பகுதியாக மாற்றி உள்ளது.
பாகிஸ்தான் எல்லை அருகே அமைந்துள்ள இந்த இறங்குதளத்தை மத்திய பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை மந்திரி நிதின்
கட்கரி ஆகியோர் இன்று திறந்து வைத்தனர். அதன்பின்னர், மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி மற்றும் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் ஆகியோரை விமானப்படை
விமானத்தில் அமர வைத்து, விமானத்தை அவசரகால இறங்குதளத்தில் தரையிறக்கி ஒத்திகை பார்த்தனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற ராஜ்நாத் சிங்
சுகோய்-30எம்கேஐ போர் விமானம், ஏஎன்-32 ராணுவ போக்குவரத்து விமானம், எம்ஐ-17வி5 ஹெலிகாப்டர் ஆகியவற்றையும் நெடுஞ்சாலையில் வெற்றிகரமாக தரையிறக்கி சோதனை
செய்தனர். இதன்மூலம், அந்த நெடுஞ்சாலையானது, துணை ராணுவ விமான தளமாக செயல்படுவதற்கு தயார் நிலையில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விமானப்படை
விமானங்களை அவசரமாக தரையிறக்க பயன்படுத்தப்படும், முதல் தேசிய நெடுஞ்சாலை இது என்பது குறிப்பிடத்தக்கது..
இந்நிகழ்ச்சியில் பேசிய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், பார்மரில் உள்ளதைப் போன்று மொத்தம் 20 அவசரகால தரையிறக்கும் வசதிகள் நாடு முழுவதும் உருவாக்கப்படுகின்றன
என்றார். மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகத்தின் உதவியுடன் பல ஹெலிபேடுகளும் உருவாக்கப்படுவதாக கூறிய ராஜ்நாத் சிங், நமது பாதுகாப்பு உள்கட்டமைப்பை வலுப்படுத்த இது ஒரு முக்கியமான படியாகும் என்றார்.
‘சர்வதேச எல்லைக்கு அருகில் இதுபோன்ற அவசரகால இறங்கு தளங்களை உருவாக்குவதன் மூலம், நமது நாட்டின் ஒற்றுமை, பன்முகத்தன்மை மற்றும் இறையாண்மையை பாதுகாக்க, என்ன
விலை கொடுத்தாலும் துணிந்து நிற்போம் என்ற செய்தியை வழங்கியுள்ளோம். அவசரகாலத்தில் விமானங்களை தரையிறக்கும் வசதியை உருவாக்குவது மிகுந்த நம்பிக்கையை உருவாக்குகிறது.
போர்க் காலங்களில் மட்டுமல்லாமல் இயற்கை பேரிடர் காலங்களிலும் இது உதவியாக இருக்கும்’ என்றும் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார்.
இலங்கையில் இருந்து பிரான்சுக்கான விமான சேவைகள் மீள ஆரம்பம்
இலங்கையில் இருந்து பிரான்சுக்கான விமான சேவைகள் மீள ஆரம்பம்
இலங்கையில் இருந்து மீள் பிரான்சுக்கான இலங்கை எயார் லங்கா விமான சேவைகள் மீள
ஆரம்பிக்க பட உள்ளதாக விமான போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது
கட்டம் கட்டமாக முழுமையான பயண சேவைகள் இடம்பெறும் என அதில் தெரிவிக்க பட்டுள்ளது
சர்வதேச விமான நிறுவனங்கள் இலங்கையுடன் புதிய விமான சேவைகளை ஆரம்பிப்பது தொடர்பான பேச்சுவார்த்தை
சர்வதேச விமான நிறுவனங்கள் இலங்கையுடன் புதிய விமான சேவைகளை ஆரம்பிப்பது தொடர்பான பேச்சுவார்த்தை
சில சர்வதேச விமான நிறுவனங்கள் இலங்கையுடன் புதிய விமான சேவைகளை ஆரம்பிப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளன.
தற்போது 32 சர்வதேச விமான நிறுவனங்கள் இலங்கையுடன் விமான சேவைகளில் ஈடுபட்டு வருவதுடன், மேலும் புதிய நான்கு விமான சேவைகளை ஆரம்பிப்பது தொடர்பாக
கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
பிரான்ஸ் விமான நிறுவனம் மற்றும் மத்திய கிழக்கு விமான நிறுவனம் ஒன்றும் இலங்கையுடன் விரைவில் விமான சேவைகளை ஆரம்பிக்க இணங்கியுள்ளன. கட்டுநாயக்க பண்டார நாயக்க
சர்வதேச விமான நிலையம் மற்றும் மத்தள சர்வதேச விமான நிலையம் ஆகியவற்றை உள்ளடக்கி விமான சேவைகளை ஆரம்பிக்க இணங்கியுள்ளன.
இதேவேளை, ஓமானுக்கு சொந்தமான சலாம் விமான நிறுவனம் மத்தள சர்வதேச விமான நிலையத்துடன் மீண்டும் விமான சேவைகளை ஆரம்பிக்க பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
அத்துடன், சினமன் விமான நிறுவனம் இலங்கை முழுதும் உள்ள உள்நாட்டு விமான நிலையங்களை உள்ளடக்கிய விமான சேவைகளை ஆரம்பிக்க உடன்பட்டுள்ளது.
மேலும், புதிய வேலைத்திட்டத்தின் கீழ், இலங்கையை விமான சேவைத் துறையில் ஒரு கேந்மிர நிலையமாக மேம்படுத்துவதுட் விமான சேவையில் சாதகமான போட்டியை உருவாக்குவதன்
மூலம் இலங்கையின் விமான நிலையங்களின் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
நாட்டின் சுற்றுலாத் துறையை மேம்படுத்த சர்வதே சுற்றுலா ஊக்குவிப்பு பிரச்சாரத்திற்கு ஏற்ப விமான நேரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
உலகெங்கிலும் உள்ள நாடுகளுக்கு விமான சேவைகளை விரிவுபடுத்துவதால், எதிர்காலத்தில்
நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளொன்றிற்கு ஆயிரத்துக்கும் அதிகமாக இருக்கும் என்றும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
சவூதி விமான நிலையம் மீது தாக்குதல்
சவூதி விமான நிலையம் மீது தாக்குதல்
சவூதி நாட்டின் Abha விமான தளம் மீது ஏமான் நாட்டு இராணுவத்தினர் திடீர் தாக்குதலை
நடத்தியுள்ளனர் .இதில் அந்த விமான நிலையம் பலத்த சேதமடைந்துள்ளது
இரு நாட்டு இராணுவத்தினருக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது
இலங்கை இந்தியா விமான பயணங்கள் இடை நிறுத்தம்
இலங்கை இந்தியா விமான பயணங்கள் இடை நிறுத்தம்
இலங்கை இந்தியாவுக்கு இடையில் மீள ஆரம்பிக்கப் படவிருந்த விமான பயணங்கள் தபோது இடைநிறுத்தம் செய்ய பட்டுள்ளது
இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலை அடுத்து இந்த இடைக்கால தடை விதிக்க பட்டுள்ளது
மேற்படி இந்த தடை உத்தரவினால் இரு நாடுகளுக்கு இடையிலான பயண போக்குவரத்தில் நெரிசல் ஏற்பட்டுள்ளது
யாழ் – சென்னை விமான சேவைகள் மீள ஆரம்பம்
யாழ் – சென்னை விமான சேவைகள் மீள ஆரம்பம்
கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக இடைநிறுத்தப்பட்ட யாழ்ப்பாணம் மற்றம் சென்னைக்கு இடையிலான நேரடி விமான சேவைகள் விரைவில் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.
சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனை கூறியுள்ளார்.
அத்துடன், இரத்மலானை – யாழ்ப்பாணம் – மட்டக்களப்பு இடையிலான உள்ளக விமான சேவையை விரைவில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
அனைத்து விமான நிறுவனங்களும் மீண்டும் இலங்கைக்கான விமான சேவையை ஆரம்பிக்க இணக்கம்
அனைத்து விமான நிறுவனங்களும் மீண்டும் இலங்கைக்கான விமான சேவையை ஆரம்பிக்க இணக்கம்
கொவிட் தொற்றுக்கு முன்னர் பயணிகள் விமான சேவையை மேற்கொண்ட அனைத்து சர்வதேச விமான நிறுவனங்களும்
மீண்டும் இலங்கைக்கான விமான சேவையை ஆரம்பிப்பதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
சுற்றுலா பயணிகளுக்காக மீண்டும் நாடு திறக்கப்படுவதை உத்தியோகபூர்வமாக
அறிவிக்கும் வைபவத்தில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், அடுத்த 6 மாதங்களில்
சுற்றுலா பயணிகளின் வருகை இயல்பு நிலைக்கு திரும்பும் என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
விமான நிலையங்கள் மீண்டும் திறப்பு
விமான நிலையங்கள் மீண்டும் இன்று திறக்கப்பட்டுள்ளன.
இன்று 17 விமானங்கள் இலங்கைக்கு வரவுள்ளது. முதலாவது விமானம் 55 பயணிகளுடன் ஓமானிலிருந்து கட்டுநாயக்க விமான
நிலையத்தை வந்தடைந்ததாக விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ சந்ரசிறி தெரிவித்துள்ளார்.
கட்டுநாயக்க, மத்தள சர்வதேச விமான நிலையங்கள் இன்று தொடக்கம் முழுமையாக திறக்கப்படுவதாக ஜி.ஏ சந்ரசிறி குறிப்பிட்டார்.
சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட சுகாதார வழிமுறைகளுக்கு அமைவாக கட்டுநாயக்க விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் பின்பற்ற வேண்டிய சுகாதார வழிமுறைகள் குறித்த வழிகாட்டல்களை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.
நாட்டுக்கு வருகை தந்த பின்னர் ஹோட்டல் அறை முன்பதிவு, பி.சீ.ஆர் பரிசோதனைகள் மற்றும் பார்வையிட வேண்டிய இடங்கள்
உட்பட பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் என்பன இந்த சுகாதார வழிகாட்டலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விமான நிலையம் திறந்த பின்பு இலங்கையர்கள் இரண்டை பிரஜா உரிமையுள்ளவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு எவ்வித தடைகளும் இன்றி நாட்டிற்கு வருகை தர முடியும்.
நாட்டுக்கு வருகை தருகின்ற வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கை சுற்றுலா அதிகார சபையின் www.srilanka.travel என்ற
இணையத்தளத்தின் ஊடாக அதிகார சபையின் அனுமதியுடன் பதிவு செய்யப்பட்ட 53 ஹோட்டல்களில் ஒன்றை தெரிவு செய்ய வேண்டும்.
அத்துடன் நாட்டுக்கு வருகைத்தரும் சுற்றுலா பயணிகள் 40 அமெரிக்க டொலர்களை செலுத்தி இலங்கையில் பி.சீ.ஆர் பரிசோதனை செய்வதற்கான பற்றுச்சீட்டை பெற்றிருக்க வேண்டும்.
சுற்றுலா பயணி இலங்கையில் 1 முதல் 6 நாட்கள் தங்குவாராயின், ஒரு பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். மேலும் ஒருவர் 7 நாட்களுக்கு மேல் தங்குவாராயின், அவர் இன்னுமொரு பி.சீ.ஆர் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.
இதற்கு மேலதிகமாக இலங்கைக்கு வர எதிர்ப்பார்த்திருக்கும் சுற்றுலா பயணிகள் 12 அமெரிக்க டொலர்களை செலுத்தி கொவிட் காப்புறுதி திட்டம் ஒன்றையும் பெற்றிருக்க வேண்டும்.
அதேபோல் நாட்டிற்கு வருகைத்தருகின்ற வெளிநாட்டில் உள்ள இலங்கையர்கள் அல்லது இரண்டை பிரஜா உரிமை உள்ளவர்கள் இந்த காப்புறுதி திட்டத்தை பெறவேண்டிய அவசியம் இல்லை என சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு வர இருக்கின்ற சுற்றுலா பயணிகள் விமான டிக்கெட், இலங்கையில் தங்கியிருப்பதற்கான ஹோட்டல் பற்றிய விபரம் மற்றும் ஒதுக்கப்படும் இலக்கம், இலங்கையில் பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட செலுத்தப்பட்ட பணம் தொடர்பான பற்றுச்சீட்டு, கொவிட் காப்புறுதி பத்திரம் இத்துடன், இலங்கைக்கு வர 72 மணித்தியாலத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனை அறிக்கை என்பவற்றை முன்வைக்க வேண்டும்.
மேலும் இலங்கை வரும் அனைத்து விமான பயணிகளும் முகக்கவசம் அணிந்திருத்தல் வேண்டும்.
அத்தோடு இந்த பயணிகளுக்கு வழங்கப்பட்ட சுகாதார அறிக்கைகளை விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள சுகாதார அறிக்கை கருமபீடத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறான சுகாதார அறிக்கை சமர்ப்பிக்க 10 கருமபீடங்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பாடு செய்திருப்பதுடன், மத்தள விமான நிலையத்திலும் 2 கருமபீடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் இந்த விமான பயணிகளின் உடல் வெப்பநிலை 37.5 க்கு மேல் இருக்குமாயின் அவர்கள் விமான நிலைய சுகாதார வைத்திய அதிகாரியிடம் அனுப்பப்படுவர்.
அத்துடன் இலங்கைக்கு வருகின்ற சுற்றுலா பயணிகளுக்கு விமான நிலையத்தில் பி.சீ.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ளாது அவர்கள் தங்கும் ஹோட்டல்களில் மேற்கொள்ள சுற்றுலாத்துறை அமைச்சு தீர்மானித்திருப்பதாக அதன் செயலாளர் ளு.ஹேட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
சுற்றுலா துறையை மேம்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான திட்டமும் தொடர்வதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இத்துடன் விமான நிலையம் திறக்கப்பட்ட பின்னர் இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் செல்லும் முதல் விமானம் நாளை அதிகாலை 2.15 மணிக்கு கட்டாரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வரவுள்ளது.
விமான நிலையங்கள் மீண்டும் திறப்பு
விமான நிலையங்கள் மீண்டும் இன்று திறக்கப்பட்டுள்ளன.
இன்று 17 விமானங்கள் இலங்கைக்கு வரவுள்ளது. முதலாவது விமானம் 55 பயணிகளுடன் ஓமானிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ சந்ரசிறி தெரிவித்துள்ளார்.
கட்டுநாயக்க, மத்தள சர்வதேச விமான நிலையங்கள் இன்று தொடக்கம் முழுமையாக திறக்கப்படுவதாக ஜி.ஏ சந்ரசிறி குறிப்பிட்டார்.
சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட சுகாதார வழிமுறைகளுக்கு அமைவாக கட்டுநாயக்க விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் பின்பற்ற வேண்டிய சுகாதார வழிமுறைகள் குறித்த வழிகாட்டல்களை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.
நாட்டுக்கு வருகை தந்த பின்னர் ஹோட்டல் அறை முன்பதிவு, பி.சீ.ஆர் பரிசோதனைகள் மற்றும் பார்வையிட வேண்டிய இடங்கள் உட்பட பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் என்பன இந்த சுகாதார வழிகாட்டலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விமான நிலையம் திறந்த பின்பு இலங்கையர்கள் இரண்டை பிரஜா உரிமையுள்ளவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு எவ்வித தடைகளும் இன்றி நாட்டிற்கு வருகை தர முடியும்.
நாட்டுக்கு வருகை தருகின்ற வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கை சுற்றுலா அதிகார சபையின் www.srilanka.travel என்ற இணையத்தளத்தின் ஊடாக அதிகார சபையின் அனுமதியுடன் பதிவு செய்யப்பட்ட 53 ஹோட்டல்களில் ஒன்றை தெரிவு செய்ய வேண்டும்.
அத்துடன் நாட்டுக்கு வருகைத்தரும் சுற்றுலா பயணிகள் 40 அமெரிக்க டொலர்களை செலுத்தி இலங்கையில் பி.சீ.ஆர் பரிசோதனை செய்வதற்கான பற்றுச்சீட்டை பெற்றிருக்க வேண்டும்.
சுற்றுலா பயணி இலங்கையில் 1 முதல் 6 நாட்கள் தங்குவாராயின், ஒரு பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். மேலும் ஒருவர் 7 நாட்களுக்கு மேல் தங்குவாராயின், அவர் இன்னுமொரு பி.சீ.ஆர் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.
இதற்கு மேலதிகமாக இலங்கைக்கு வர எதிர்ப்பார்த்திருக்கும் சுற்றுலா பயணிகள் 12 அமெரிக்க டொலர்களை செலுத்தி கொவிட் காப்புறுதி திட்டம் ஒன்றையும் பெற்றிருக்க வேண்டும்.
அதேபோல் நாட்டிற்கு வருகைத்தருகின்ற வெளிநாட்டில் உள்ள இலங்கையர்கள் அல்லது இரண்டை பிரஜா உரிமை உள்ளவர்கள் இந்த காப்புறுதி திட்டத்தை பெறவேண்டிய அவசியம் இல்லை என சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு வர இருக்கின்ற சுற்றுலா பயணிகள் விமான டிக்கெட், இலங்கையில் தங்கியிருப்பதற்கான ஹோட்டல் பற்றிய விபரம் மற்றும் ஒதுக்கப்படும் இலக்கம், இலங்கையில் பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட செலுத்தப்பட்ட பணம் தொடர்பான பற்றுச்சீட்டு, கொவிட் காப்புறுதி பத்திரம் இத்துடன், இலங்கைக்கு வர 72 மணித்தியாலத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனை அறிக்கை என்பவற்றை முன்வைக்க வேண்டும்.
மேலும் இலங்கை வரும் அனைத்து விமான பயணிகளும் முகக்கவசம் அணிந்திருத்தல் வேண்டும்.
அத்தோடு இந்த பயணிகளுக்கு வழங்கப்பட்ட சுகாதார அறிக்கைகளை விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள சுகாதார அறிக்கை கருமபீடத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறான சுகாதார அறிக்கை சமர்ப்பிக்க 10 கருமபீடங்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பாடு செய்திருப்பதுடன், மத்தள விமான நிலையத்திலும் 2 கருமபீடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் இந்த விமான பயணிகளின் உடல் வெப்பநிலை 37.5 க்கு மேல் இருக்குமாயின் அவர்கள் விமான நிலைய சுகாதார வைத்திய அதிகாரியிடம் அனுப்பப்படுவர்.
அத்துடன் இலங்கைக்கு வருகின்ற சுற்றுலா பயணிகளுக்கு விமான நிலையத்தில் பி.சீ.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ளாது அவர்கள் தங்கும் ஹோட்டல்களில் மேற்கொள்ள சுற்றுலாத்துறை அமைச்சு தீர்மானித்திருப்பதாக அதன் செயலாளர் ளு.ஹேட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
சுற்றுலா துறையை மேம்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான திட்டமும் தொடர்வதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இத்துடன் விமான நிலையம் திறக்கப்பட்ட பின்னர் இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் செல்லும் முதல் விமானம் நாளை அதிகாலை 2.15 மணிக்கு கட்டாரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வரவுள்ளது.
22 ஆம் திகதி விமான நிலையங்கள் திறப்பு
22 ஆம் திகதி விமான நிலையங்கள் திறப்பு
வௌிநாட்டு சுற்றுலாப்பயணிகள் உள்ளிட்ட அனைத்து வணிக விமானங்களுக்காக ஜனவரி 22 ஆம் திகதி தொடக்கம் விமான
நிலையங்களை திறக்க நடவடிக்கை எடுப்பதாக இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதாரதம் தொடர்பில் அவதானம் செலுத்தி சுகாதார பிரிவுகளின் விசேட கண்காணிப்பின் கீழ் விமான
நிலையங்களை திறக்க நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், “ஜனவரி 22 ஆம் திகதியின் பின்னர் நாட்டிற்கு வருவதற்கு அனைத்து வர்த்தக
விமானங்களுக்கும் சந்தர்ப்பம் வழங்க நாம் எதிர்ப்பார்த்துள்ளோம்
. பாதுகாப்பு முறைமைகளை கடைப்பிடித்து நாட்டை திறக்க வேண்டும்”. என்றார்
அடேங்கப்பா -விமானங்களை வாங்கி குவிக்கும் அலெக்ஸா விமான நிறுவனம்
அடேங்கப்பா -விமானங்களை வாங்கி குவிக்கும் அலெக்ஸா விமான நிறுவனம்
கொரனோ காலத்தில் வருமானம் இன்றி விமான நிறுவனங்கள் அடித்து பூட்ட
பட்டு வரும் நிலையில் அலெக்ஸ்சா விமான நிறுவனம் தற்போது உலகில் மிக ஆபத்தான பயணங்களை மேற்கொள்ளும் 100 Boeing
737 Max planes விமானங்கள் 63 றை வாங்கி குவித்துள்ளது ,மேலும் இதே போன்ற நூறு விமானங்களை வாங்கி குவிக்கவும் ஏற்பாடுகள் இடம்பெற்று கொண்டுள்ளன
கொரனோ கால பகுதி திறக்க பட்டதும் இந்த விமான நிறுவனம் உலகில்
மலிந்த விலையில் அதிக பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பை தட்டி செல்லும் என எதிர்பார்க்க படுகிறது
பிரிட்டனுக்கும் நுழைவதற்கு 40 நாடுகளுக்கு தடை
பிரிட்டனுக்கும் நுழைவதற்கு 40 நாடுகளுக்கு தடை
பிரிட்டனில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலை அடுத்து ஐரோப்பா உள்ளிட்ட நாற்பது நாடுகளுக்கு
உள்நுழையவும் ,இங்கிருந்து வெளி செல்லவும் பயண தடை விதிக்க பட்டுள்ளது
தற்போது பயணிகள் விமான சேவைகள் யாவும் நிறுத்த பட்டுள்ளன
சரக்கு விமான சேவைகள் வழமை போன்று இடம்பெற்ற வண்ணம் உள்ளன
இந்த தடையானது தை மாதம் வரை நீடிக்க கூடும் என கருத படுகிறது




















