Posted in உலக செய்திகள்

இந்தியாவில் ஆண்டுக்கு 7 லட்சம் இறப்பு

இந்தியாவில் ஆண்டுக்கு 7 லட்சம் இறப்பு

உலகமெங்கும் ஆண்டுக்கு 50 லட்சத்துக்கும் அதிகமான இறப்புகளுக்கு அசாதாரணமான வெப்ப நிலை காரணம் ஆகலாம்.

இந்தியாவில் ஆண்டுக்கு 7 லட்சம் இறப்புக்கு அசாதாரண வெப்ப நிலை காரணம் – ஆய்வு தகவல்

பருவ நிலை மாற்றம் தொடர்பாக ஆஸ்திரேலியாவின் மோனாஷ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வு நடத்தி அதன் முடிவுகளை ‘தி லேன்செட் பிளேனட்டரி ஹெல்த்’ பத்திரிகையில் வெளியிட்டுள்ளனர்.

இதில் இடம் பெற்றுள்ள முக்கிய தகவல்கள் வருமாறு:-

  • உலகமெங்கும் ஆண்டுக்கு 50 லட்சத்துக்கும் அதிகமான இறப்புகளுக்கு அசாதாரணமான வெப்ப நிலை காரணம் ஆகலாம்.
  • 2000-2019 ஆண்டுகளில் எல்லா பிராந்தியங்களிலும் சுட்டெரிக்கும் வெப்ப நிலை அதிகரித்து வந்துள்ளது. இது உலக வெப்பமயமாதல், எதிர்காலத்தில் அதிகளவிலான உயிரிழப்புகளுக்கு காரணமாகும் என காட்டுகிறது.
  • இந்தியாவில் அசாதாரண குளிரானது ஆண்டுக்கு 6 லட்சத்து 55 ஆயிரத்து 400 பேர் இறக்கவும், சுட்டெரிக்கும் அதிக வெப்பம் 83 ஆயிரத்து 700 பேர் உயிரிழக்கவும் காரணம் ஆகலாம்.
  • உலகளவில் நிகழப்போகிற இறப்புகளில் 9.43 சதவீதம் அதிக குளிர் மற்றும் மிதமிஞ்சிய வெப்பத்தால் நிகழும்.
  • இது ஒவ்வொரு ஒரு லட்சம் பேரிலும் 74 கூடுதலான இறப்புகள் நேர்வதற்கு சமமானது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

    அமெரிக்கா விமானத்தை துரத்திய ரசிய விமானம் – வானில் நடந்த பயங்கரம்

    அமெரிக்கா விமானத்தை துரத்திய ரசிய விமானம் – வானில் நடந்த பயங்கரம்

    அமெரிக்கா போயிங் ரக இராணுவ விமானத்தை கருங்கடல் பகுதியில் வைத்து ரசியாவின் Russian Sukhoi Su-30 fighter jets விமானம் வழிமறித்து துரதியுள்ளது

    இதனால் வானில் பலத்த பர பரப்பு ஏற்பட்டுள்ளது

    ரசியாவின் விமானங்கள் இவ்விதம் தொடராக செயல் பட்டு வருகின்மை நாடுகளுக்கு இடையில் பெரும் முறுகளை ஏற்படுத்தியுள்ள்து

      Posted in Uncategorized உலக செய்திகள்

      ஈரான் தரைப்படையில் புதிய ஏவுகணை

      ஈரான் தரைப்படையில் புதிய ஏவுகணை

      ஈரான் தரைப்படையில் புதிதாக ஏவுகணை இணைக்க பட்டுள்ளது ,இந்த ஏவுகணை சோதனை

      இடம்பெற்ற நிலையில் தற்பொழுது தரைப்படையில் இணைக்க பட்டுள்ளது

      இஸ்ரேல் அமெரிக்காவின் மிரட்டல் அதிகரித்து வரும் நிலையில் எல்லை பகுதிகளில் இந்த

      ஏவுகணை குவிக்க பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

        Posted in உலக செய்திகள்

        மம்தாவுக்கு ரூ.5 லட்சம் அபராதம்

        மம்தாவுக்கு ரூ.5 லட்சம் அபராதம்

        மம்தா பானர்ஜியின் நீண்ட கால உதவியாளராக இருந்த சுவேந்து அதிகாரி திடீரென பா.ஜனதா கட்சிக்கு தாவினார். அவருக்கு நந்திகிராமில் போட்டியிட பா.ஜனதா சீட் வழங்கியது.

        மம்தாவுக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்த உயர்நீதிமன்றம்
        மம்தா பானர்ஜி

        மேற்குவங்காள மாநிலத்தில் சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் ஆளுங்கட்சியான திரிணாமுல் காங்கிரசுக்கும், பா.ஜனதாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

        மம்தா பானர்ஜி, பவானிபூர் தொகுதியில் போட்டியிடுவதை வழக்கமாக கொண்டு இருந்தார். ஆனால் இந்த தடவை அவர் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டார்.

        மம்தா பானர்ஜியின் நீண்ட கால உதவியாளராக இருந்த சுவேந்து அதிகாரி திடீரென பா.ஜனதா கட்சிக்கு தாவினார். அவருக்கு நந்திகிராமில் போட்டியிட பா.ஜனதா சீட் வழங்கியது.

        தன்னை எதிர்த்து போட்டியிட தயாரா? என்று சுவேந்து அதிகாரி, மம்தா பானர்ஜிக்கு சவால் விட்டார். இதை ஏற்றுக்கொண்ட மம்தா பானர்ஜி, நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டார்.

        ஆனால் அவர் சுவேந்து அதிகாரியிடம் 1,956 ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

        தேர்தல் முறைகேடு காரணமாகத்தான் தோல்வி அடைந்ததாக மம்தா பானர்ஜி கூறினார். எனவே சுவேந்து அதிகாரியின் வெற்றியை எதிர்த்து கொல்கத்தா ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

        மம்தா பானர்ஜி

        இந்த வழக்கு நீதிபதி கவுசிக் சந்தா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. ஆனால் வழக்கை நீதிபதி கவுசிக் சந்தா விசாரிக்க மம்தா எதிர்ப்பு தெரிவித்தார்.

        நீதிபதி கவுசிக் சந்தா பா.ஜனதா தலைவர்களுடன் தொடர்பில் இருக்கிறார். இதனால் எனக்கு சாதகமான தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கவில்லை. எனவே அவர் இந்த வழக்கை விசாரிக்கக்

        கூடாது. வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என்று மம்தா, ஐகோர்ட்டு தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதி இருந்தார்.

        இன்று நீதிபதி கவுசிக் சந்தா தேர்தல் தொடர்பான வழக்கை விசாரணைக்கு எடுத்தார். அப்போது, ‘‘என் மீது தவறான கருத்துக்கள் கூறப்படுகின்றன. இதன் மூலம் நீதித்துறையை இருட்டில் தள்ள

        முயற்சிக்கிறார்கள். இந்த வழக்கை நான் விசாரிக்க முடியாது. எனவே இதில் இருந்து விலகிக்கொள்கிறேன். அதே நேரத்தில் நீதித்துறை பற்றி தவறான கருத்துக்களை கூறிய மம்தா பானர்ஜிக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கிறேன்’’ என்று கூறினார்.

        எனவே மம்தா பானர்ஜி அபராதத்தை செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. நீதிபதி ஒருவர் மாநில முதல்-மந்திரிக்கே அபராதம் விதித்து இருப்பது ஆச்சரியமான வி‌ஷயமாக பார்க்கப்படுகிறது.

        Posted in உலக செய்திகள்

        தாலிபான்கள் மீது இராணுவம் அகோர தாக்குதல் – 30 பேர் மரணம்

        தாலிபான்கள் மீது இராணுவம் அகோர தாக்குதல் – 30 பேர் மரணம்

        ஆப்கானில் அரச இராணுவம் தாலிபான் மீது அகோர தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர் .
        Helmand பகுதியில்

        போராளிகள் நிலைகள் மீது அரச இராணுவ விமானங்கள் நடத்திய தாக்குதலில் முப்பது போராளிகள் படுகொலை செய்ய பட்டுள்ளதாக அரச இராணுவம் அறிவித்துள்ளது

        அமெரிக்கா படைகள் அங்கிருந்து விலகிய நிலையில் ஐம்பதுக்கும் மேற்பட்ட நகரங்களை தலிபான்கள் மீட்டுள்ளமை இங்கே குறிப்பிட தக்கது

          Posted in Uncategorized உலக செய்திகள்

          திமிங்கலம் அருகில் மனிதர் – வைரலாகும் காணொளி

          திமிங்கலம் அருகில் மனிதர் – வைரலாகும் காணொளி

          அவுஸ்ரேலியாவின் கடல் பகுதியில் மனிதர் ஒருவர் நீச்சலில் ஈடுபட்டார் ,அப்பொழுது அவரது

          அருகில் திமிங்கலம் ஒன்று தன் குட்டியுடன் நெருங்கியது ,மேற்படி காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

          அச்சம் இன்றி மிக அருகில் மனிதர் நடமாடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

            Posted in உலக செய்திகள்

            20 வருடஙக்ளின் பின்னர் ஆப்கானில் இருந்து வெளிறிய அமெரிக்கா இராணுவம்

            20 வருடஙக்ளின் பின்னர் ஆப்கானில் இருந்து வெளிறிய அமெரிக்கா இராணுவம்

            ஆப்கானிஸ்தான் நாட்டில் புஸ் ஆட்சியில் அந்த நாட்டை அமெரிக்கா படைகள் ஆக்கிரமித்தனர்

            ,இவர்கள் ஆக்கிரமிப்பு காலத்தில் அந்த நடடில் இதே இராணுவத்தால் பல கொலைகள் மற்றும் கற்பழிப்புக்கள் என்பன இடம்பெற்றுள்ளன

            தற்போது கள நிலவரத்தை அடுத்து இருபது வருடங்களின் பின்னர் ,இந்த நாட்டில் அமைக்க பட்ட

            அமெரிக்காவின் முக்கிய Bagram Air Base, இல் இருந்து அமெரிக்கா படைகள் வெளியேறியுள்ளன

              Posted in உலக செய்திகள்

              பறக்கும் கார் சோதனை வெற்றி – பயணிக்க அனுமதி

              பறக்கும் கார் சோதனை வெற்றி – பயணிக்க அனுமதி

              பறக்கும் கார் சோதனை வெற்றியாக முடிவடைந்துள்ளது ,35 நிமிடங்கள் நடத்த பட்ட பறக்கும்

              சோதனையில் அதன் செயல்பாடு வெற்றிகரமாக இடம்பெற்றுள்ளது ,இதனை அடுத்து தற்போது பறக்கும் கார்கள் வானில் செலுத்திட அனுமதி வழங்க பட்டுள்ளது

              உள் நாட்டுக்குள் பயணிக்கும் பயணிகளுக்கு இந்த கார் ஓட்டம் மகிழ்ச்சியை அளித்துள்ளது

                Posted in உலக செய்திகள்

                இந்தியாவில் கொரானாவுக்கு 400,000 பேர் மரணம்

                இந்தியாவில் கொரானாவுக்கு 400,000 பேர் மரணம்

                இந்தியாவில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி இதுவரை
                நான்கு லட்சம் மக்கள் பலியாகியுள்ளனர்

                மேலும் தொடர்ந்து பரவி வரும் இந்த நோயினால் மக்கள் பெரிதும் பாதிக்க பட்டு வருகின்றனர்

                ,நோயினை கட்டுப்படுத்த பலவேறு பட்ட நடவடிக்கை மேற்கொள்ள பட்ட பொழுதும் மரணத்தை தடுக்க முடியவில்லை என்பது குறிப்பிட தக்கது

                  Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                  லண்டனில் கத்தி வெட்டு – பொலிசார் குவிப்பு

                  லண்டனில் கத்தி வெட்டு – பொலிசார் குவிப்பு

                  லண்டன் Regent’s Street பகுதியில் நபர் மீது கத்தி வெட்டு தாக்குதலை நடத்தியுள்ளனர் ,இதில்

                  ஒருவர பலத்த காயமடைந்த நிலையில் மீட்க பட்டு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளார்

                  மேற்படி விடயம் தொடர்பாக போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்


                  இது தீவிரவாத தாக்குதலா என்பது தொடர்பில் தெரியவரவில்லை

                    Posted in உலக செய்திகள்

                    ஊரடங்கு தளர்வு- உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

                    ஊரடங்கு தளர்வு- உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

                    நாளை அல்லது 4-ந்தேதியில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கூடுதல் தளர்வுகள் பற்றிய அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுவார்.

                    ஊரடங்கு தளர்வு- உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

                    தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த நிலையில் 5-ந்தேதிவரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதில், 3 வகையான மாவட்டங்களாக பிரித்து வெவ்வேறு வகையான தளர்வுகளை அறிவித்துள்ளார்.

                    முதல் வகையில் கோவை, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களும், 2-ம் வகையில் அரியலூர், கடலூர், தர்மபுரி உள்ளிட்ட 23 மாவட்டங்களும், 3-ம் வகையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களும் வருகின்றன.

                    கொரோனா வைரஸ்

                    இந்த நிலையில், 5-ந்தேதி ஊரடங்கு உத்தரவு முடியும் நிலையில், அதை மேலும் நீட்டிப்பதற்கான ஆலோசனை கூட்டத்தை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

                    பொது போக்குவரத்து இயங்கி வரும் நிலையில் தொற்றின் எண்ணிக்கை அதிகரிக்கிறதா? மேலும் தளர்வுகளை அறிவிக்கலாமா? என்பது பற்றி இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் எனத்தெரிகிறது. அதைத் தொடர்ந்து நாளை அல்லது 4-ந்தேதியில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கூடுதல் தளர்வுகள் பற்றிய அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுவார்.

                    Posted in Uncategorized உலக செய்திகள்

                    அதிகூடிய 50C வெப்பம் -250 பேர் மரணம்

                    அதிகூடிய 50C வெப்பம் -250 பேர் மரணம்

                    அமெரிக்கா மற்றும் கனடா ,பசுபிக் பகுதிகளில் தற்போது நிலவி வரும் அதிக கூடிய வெப்பம் காரணமாக 250 பேர் மரணமாகியுள்ளனர்

                    இந்த வெப்பமானது தற்போது 50C நிலையை எட்டியுள்ளது ,இதனால் இந்த மரணங்கள் ஏற்பட்டுள்ளன ,நீர் நிலைகள் வற்றி ,காடுகள் பற்றி எரிகின்றன

                    காட்டு தீயினை அணைக்கும் முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்க பட்டு வருகின்றன

                    உலக

                    Posted in உலக செய்திகள்

                    இந்தியாவில் 798 மருத்துவர்கள் பலி

                    இந்தியாவில் 798 மருத்துவர்கள் பலி

                    கொவிட்-19 இன் இரண்டாவது அலையின் போது இந்தியாவில் 798 மருத்துவர்கள் இறந்தனர்; டெல்லியில் உயிரிழப்பு அதிகமாக இருந்தது என்று இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

                    டெல்லியில் அதிகபட்சம் 128 மருத்துவர்கள் உயிர் இழந்தனர். பீகாரில் 115 பேர், உத்தரப்பிரதேசத்தில் 79 பேர் கொவிடுக்கு பலியானதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

                    .
                    டெல்டா பிளஸ் மாறுபாட்டின் பரவலான இந்திய மாநிலங்களான மகாராஷ்டிரா மற்றும் கேரளா போன்ற மாநிலங்களில் கொவிட் -19 இன் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

                    மகாராஷ்டிராவில் 23 மருத்துவர்களும், கேரளாவில் 24 இறப்புகளும் பதிவாகியுள்ளன. பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தில் ஒரு மருத்துவர் மட்டுமே இறந்துள்ளார். இதுதான் மருத்துவர்களின் பலி எண்ணிக்கையில் மிகவும் குறைவு.

                    கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் போது மக்களுக்கு உதவி செய்த மருத்துவர்களை பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை பாராட்டிப் பேசினார். மருத்துவர்கள்

                    மதிக்கப்படுவார்கள், பாதுகாக்கப்படுவார்கள் என்று பிரதமர் உறுதி அளித்துள்ளதாக, ஐ.எம்.ஏ தலைவர் டாக்டர் ஜே.ஏ.ஜெயலால் தெரிவித்தார். மேலும் தடுப்பூசி போடுவதன் அவசியத்தையும் பிரதமர் வலியுறுத்தினார்

                    Posted in உலக செய்திகள்

                    தாலிபான்களிடம் வீழ்ந்த ஐந்து நகரங்கள் மீட்பாம் – இராணுவம்

                    தாலிபான்களிடம் வீழ்ந்த ஐந்து நகரங்கள் மீட்பாம் – இராணுவம்

                    ஆப்கனிஸ்தானில் தலிபான்கள் அரச இராணுவத்திடம் சிக்கிய முக்கிய மாகாணங்களில் மூன்றை மீட்டனர்

                    எனினும் இவர்கள் மீட்ட பகுதிகளில் உள்ள மூன்று நகரங்களை தாம் கைப்பற்றியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது

                      Posted in உலக செய்திகள் குற்ற செய்திகள்

                      மனைவியை துடி துடிக்க நான்கு முறை சுட்டு கொன்ற கணவன்


                      மனைவியை துடி துடிக்க நான்கு முறை சுட்டு கொன்ற கணவன்

                      அமெரிக்கா டெஸ்சஸ் பகுதியில் தனது முன்னால் மனைவியை அவரது கணவர் மூன்று முறை துப்பாக்கியால் துடி துடிக்க சுட்டு கொன்றுள்ளார்


                      மேற்படி சம்பவம் தற்போது நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளது

                      கணவனின் இந்த திட்டமிட்ட பட படுகொலைக்கு அவருக்கு மரண தண்டனை கிடைக்க பெறலாம் என எதிர் பார்க்க படுகிறது

                        Posted in உலக செய்திகள்

                        நடிகை கர்ப்பம் – அமைச்சர் சிறையில் அடைப்பு

                        நடிகை கர்ப்பம் – அமைச்சர் சிறையில் அடைப்பு

                        முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை அளித்த புகாரின் பேரில் போலீசார் அவரை பெங்களூருவில் வைத்து கைது செய்தனர்.

                        முன்னாள் அமைச்சர் புழல் சிறைக்கு அதிரடி மாற்றம்- காரணம் என்ன?

                        நடிகை சாந்தினி அளித்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சைதாப்பேட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அங்கு அவர், சொகுசு வசதிகளோடு இருந்ததை போலீசார் நடத்திய சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.

                        முன்னாள் அமைச்சர் மணிகண்டன்

                        இதையடுத்து சைதாப்பேட்டை சிறையில் இருந்து மணிகண்டன் புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.

                        மேலும், மணிகண்டனுக்கு சொகுசு வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்த காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

                          Posted in உலக செய்திகள்

                          அவுஸ்ரேலியாவில் வேகமாக பரவும் கொரனோ – அடித்து பூட்டு ஆரம்பம்

                          அவுஸ்ரேலியாவில் வேகமாக பரவும் கொரனோ – அடித்து பூட்டு ஆரம்பம்

                          அவுஸ்ரேலியாவில் மிக வேகமாக கொரனோ நோயானது பரவி வருகிறது


                          இதனை அடுத்து தலைநகர் சிட்னி பகுதியில் பல்வேறு பட்ட பகுதிகள் அடித்து பூட்ட பட்டுள்ளன

                          மேலும் பல பகுதிகள் இவ்விதம் அடித்து பூட்டும் நிகழ்வு ஆரம்பிக்க படும் என தெரிவிக்க படுகிறது

                            Posted in உலக செய்திகள்

                            தாலிபான்களிடம் வீழ்ந்த மூன்றாவது முக்கிய மாகாணம் – தப்பி ஓடும் அரச இராணுவம்

                            தாலிபான்களிடம் வீழ்ந்த மூன்றாவது முக்கிய மாகாணம் – தப்பி ஓடும் அரச இராணுவம்

                            ஆப் கானில் இருந்து அமெரிக்கா படைகள் விலகிய நிலையில் தற்பொழுது தாம் இழந்த

                            பகுதிகளை தலிபான்கள் மீட்ட வண்ணம் முன்னேறி தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர்

                            ஒரு வாரத்தில் தற்போது மிக முக்கிய Takhar மாகாணத்தை மீட்டுள்ளனர் ,தலிபான்களின் இந்த

                            தீவிர தாக்குதலில் ஆளும் ஆப்கான் அரசு திணறிய வண்ணம் உள்ளது

                              Posted in உலக செய்திகள்

                              சவுதி மீது ஏமன் படைகள் ஏவுகணை தாக்குதல்

                              சவுதி மீது ஏமன் படைகள் ஏவுகணை தாக்குதல்

                              சவுதி நாட்டின் முக்கிய இலக்கு ஒன்றின் மீது விமான மூலம் ஏமன் இராணுவம் தாக்குதல்

                              நடத்தியுள்ளது ,இந்த வான்வாழி தாக்குதலில் குறித்த இலக்கு சிதறி அழிந்துள்ளதாக குறித்த

                              இராணுவம் தெரிவித்துள்ளதுடன் ,இவ்வாறான தாக்குதல் ஒன்று நிகழ்த்த பட்டுள்ளதாக சவுதியும் தெரிவித்துள்ளமை குறிப்பிட தக்கது

                                Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                                ஒரு முத்தம் பறிபோன பிரிட்டன் அமைச்சர் பதவி

                                ஒரு முத்தம் பறிபோன பிரிட்டன் அமைச்சர் பதவி

                                சுகாதார மந்திரி மாட் ஹான்க் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்ததோடு, பிரதமர் போரிஸ் ஜான்சனிடம் இது தொடர்பாக மன்னிப்பும் கோரினார்.

                                சமூக இடைவெளியை மீறி பெண் உதவியாளரை முத்தமிட்ட இங்கிலாந்து சுகாதார மந்திரி ராஜினாமா

                                இங்கிலாந்தில் அண்மையில் கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பு வரை சமூக இடைவெளியை உறுதி செய்யும் வகையில் பொது இடங்களில் கை குலுக்குதல், கட்டித்தழுவுதல் போன்றவற்றுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில் அந்த நாட்டின்

                                சுகாதாரத்துறை மந்திரி மாட் ஹான்க் கொரோனா சமூக இடைவெளி விதிமுறைகளை மீறி தனது அலுவலகத்தில் வைத்து பெண் உதவியாளரை கட்டியணைத்து முத்தம் கொடுத்த சம்பவம் பெரும்

                                சர்ச்சையை கிளப்பியுள்ளது. சமூக இடைவெளி விதிமுறைகள் அமலில் இருந்த சமயத்தில் மாட் ஹான்க் தனது உதவியாளருக்கு முத்தம் கொடுத்த காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில்

                                பதிவான நிலையில், அந்த நாட்டின் பிரபல தினசரி பத்திரிகை ஒன்று இது தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டது.

                                இதனை தொடர்ந்து சுகாதார மந்திரி மாட் ஹான்க் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்ததோடு, பிரதமர் போரிஸ் ஜான்சனிடம் இது தொடர்பாக மன்னிப்பும் கோரினார். இதையடுத்து மாட்

                                ஹான்க்கின் மன்னிப்பை ஏற்றுக்கொண்டதாகவும், இந்த பிரச்சினை முடிந்து விட்டதாகவும் போரிஸ் ஜான்சன் அறிவித்தார். எனினும் இந்த விவகாரத்தில் சுகாதார மந்திரி மாட் ஹான்க் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

                                இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் வலியுறுத்தல் காரணமாக சுகாதார மந்திரி மாட் ஹான்க் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.