Posted in Uncategorized

எல்லையில் ஊடுருவிய வெடிகுண்டு டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது

எல்லையில் ஊடுருவிய வெடிகுண்டு டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது

காஷ்மீரில் ஏற்கனவே பறந்த டிரோன்களை பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் அனுப்பியது உறுதி செய்யப்பட்டது.

காஷ்மீர் எல்லையில் ஊடுருவிய வெடிகுண்டு டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது
சுட்டு வீழ்த்தப்பட்ட டிரோனை படத்தில் காணலாம்.

காஷ்மீரில் சமீப காலமாக பயங்கரவாதிகளின் ஊடுருவல் அதிகமாக உள்ளது. அவர்களை பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து வேட்டையாடி வருகிறார்கள்.

இதனால் பல்வேறு சதித்திட்டங்கள் முறியடிக்கப்பட்டுள்ளன. இதில் ஆத்திரம் அடைந்துள்ள பயங்கரவாதிகள் காஷ்மீரில் பெரிய அளவில் தாக்குதல்களை நடத்துவதற்கு முயற்சித்து வருகிறார்கள்.

இதுவரை இல்லாத புது முயற்சியாக டிரோன்கள் (ஆளில்லா குட்டி விமானங்கள்) மூலம் தாக்குதல் நடத்துவதை தொடங்கி இருக்கிறார்கள்.

கடந்த மாதம் 27-ந் தேதி ஜம்முவில் உள்ள விமான படைத்தளத்தில் அதிகாலையில் 2 டிரோன்கள் மூலம் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அடுத்தடுத்து பறந்து வந்த இந்த டிரோன்களில் வெடிகுண்டுகளை பொருத்தி இருந்தார்கள். அது கீழே விழுந்து வெடித்தது.

விமானப்படை ஊழியர்கள் 2 பேர் காயம் அடைந்தனர். இந்த வெடிகுண்டுகள் இரண்டுமே சக்தி குறைந்ததாக இருந்தது. எனவே பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படவில்லை. ராணுவ முகாமில் பயங்கரவாதிகள் டிரோன்கள் மூலம் நடத்தியது இதுவே முதல் முறை ஆகும்.

எனவே பெரிய தாக்குதல்களை நடத்துவதற்காக இது ஒரு ஒத்திகை நிகழ்ச்சியாக இந்த தாக்குதலை பயங்கரவாதிகள் நடத்தி இருக்கலாம் என்று கருதப்பட்டது. எனவே பாதுகாப்புப் படை உஷார்படுத்தப்பட்டது.

சிறிய வகை டிரோன்கள் என்பதால் ரேடார் கண்ணில் மண்ணை தூவிவிட்டு எளிதாக ஊடுருவியது. எனவே சிறிய டிரோன்கள் வந்தாலும் கண்டுபிடிக்கும் கருவிகளை பொருத்தும் பணிகள் நடந்தன.

கடந்த மாதம் நடந்த சம்பவத்திற்கு பிறகு தொடர்ந்து காஷ்மீரில் பயங்கரவாதிகள் டிரோன்களை ஊடுருவ செய்து வருகிறார்கள். குறிப்பாக ஜம்மு பகுதியிலும், ஸ்ரீநகரிலும் அதிகளவில் டிரோன்கள் ஊடுருவி இருக்கின்றன.

எனவே அவை பறந்து வந்தால் சுட்டுவீழ்த்துவதற்கு எல்லைப் பகுதி முழுவதும் பாதுகாப்பு படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டனர்.

இந்தநிலையில் இன்று அதிகாலை ஜம்முவில் உள்ள அக்னூர் பகுதியில் மர்ம டிரோன் ஒன்று பறந்து வந்தது. எல்லையில் இருந்து 8 கி.மீட்டர் தூரத்துக்கு ஊடுருவி வந்து பறந்து கொண்டு இருந்தது. உடனே பாதுகாப்பு படையினர் அதை நோக்கி சுட்டார்கள்.

டிரோனில் 5 கிலோ சக்தி வாய்ந்த வெடிகுண்டு பொருத்தப்பட்டு இருந்தது.

இதில் ஒரு குண்டு டிரோனை தாக்கியது. உடனே டிரோன் கீழே விழுந்தது. அதை பாதுகாப்பு படையினர் ஆய்வு செய்தார்கள். டிரோனில் 5 கிலோ சக்தி வாய்ந்த வெடிகுண்டு பொருத்தப்பட்டு இருந்தது.

இந்த குண்டு வெடித்து இருந்தால் பயங்கர பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கும். சரியான நேரத்தில் சுட்டு வீழ்த்தப்பட்டதால் சதி முறியடிக்கப்பட்டது.

மிக முக்கியத்துவம் வாய்ந்த இடத்தை தகர்க்கும் வகையில் இந்த வெடிகுண்டை அனுப்பி இருக்கிறார்கள். ராணுவம் உஷாராக இருந்ததால் சுட்டு வீழ்த்தப்பட்டது.

காஷ்மீரில் ஏற்கனவே பறந்த டிரோன்களை பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் அனுப்பியது உறுதி செய்யப்பட்டது. இந்த டிரோனையும் அவர்கள்தான் அனுப்பி இருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.

ஏற்கனவே ஜம்மு விமானப் படை தளத்தில் தாக்குதல் நடத்திய டிரோன்களில் சிறிய அளவிலான வெடிகுண்டுகளே இருந்தன. ஆனால் இன்று வீழ்த்தப்பட்ட டிரோனில் 5 கிலோ அளவுக்கு அதிசக்தி வாய்ந்த வெடிமருந்து இருந்துள்ளது.

இந்த அளவுக்கு பெரிய வெடிகுண்டுகளை டிரோன்கள் மூலம் அனுப்ப முடியும் என்ற நிலை இருப்பதால், இது ஒரு ஆபத்தான வி‌ஷயமாக கருதப்படுகிறது. எனவே பாதுகாப்பு படைகள் மேலும் உஷார்படுத்தப்பட்டு இருக்கின்றன.

இதையும் படியுங்கள்… திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சாந்தனு சென் சஸ்பெண்ட்

Posted in Uncategorized உலக செய்திகள்

ஆயுததாரி வெறியாட்டம் – 15 பேர் சுட்டு கொலை

ஆயுததாரி வெறியாட்டம் – 15 பேர் சுட்டு கொலை

அமெரிக்கா மெஸ்க்சிக்கோ எல்லையில் ஆயுதாரி நடத்திய துப்பாக்கி சூட்டில் பதின் ஐந்து பேர் பலியாகியுள்ளனர்


மேற்படி சூட்டு சம்பவத்தை அடுத்து அங்கு போலீசார் குவிக்க பட்டு பாதுகாப்பு பலப்படுத்த பட்டுள்ளது


போதைவஸ்து குழுக்களுக்கு இடையில் இந்த மோதல்கள் இடம்பெற்று இருக்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது

    Posted in உலக செய்திகள்

    பட்ட பகலில் பிரிட்டனில் பெண் சுட்டு கொலை

    பட்ட பகலில் பிரிட்டனில் பெண் சுட்டு கொலை –

    கடந்த தினம் மதியம் ஒரு மணியளவில் பிரிட்டன் Lancashire town.

    பகுதியில் இளம் பெண் ஒருவர் மர்ம ஆயுத தாரியால் சூப்பர்

    மார்க்கட் பகுதியில் வைத்து சுட்டு படுகொலை செய்ய பட்டுள்ளார் .

    குறித்த சம்பவத்தை அறிந்து விரைந்து வந்த போலீசார் ,இரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்ணின் சடலத்தை மீட்டனர் .

    அவசர காவு உலங்கு வானூர்தி சம்பவ இடத்துக்கு அழைக்க பட்ட பொழுதும் குறித்த பெண்ணை காப்பாற்றிட முடியவில்லை

    இந்த படு கொலைக்கான காரணம் உடனடியாக தெரிய ,வரவில்லை

    தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம், உள்ளது

    பட்ட-பகலில்-பிரிட்டனில்
    பட்ட-பகலில்-பிரிட்டனில்
        Posted in உலக செய்திகள் கனடா செய்திகள்

        கனடாவில் 15வயது சிறுவன் சுட்டு கொலை – தொடரும் கொலைகள்

        கனடாவில் 15வயது சிறுவன் சுட்டு கொலை – தொடரும் கொலைகள்

        கனடாவில் நேற்று முன்தினம் பதின் ஐந்து வயது சிறுவன் ஒருவன் மர்ம நபர்களினால் சுட்டு படுகொலை செய்ய பட்டுள்ளன

        North York பகுதியில் இந்த துப்பாக்கி தாக்குதல் மாலை ஆறு மணியளவில்

        இடம்பெற்றுள்ளது ,குறித்த சம்பவத்தை அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு

          விரைந்த பொழுதும் சிறுவனை காப்பாற்றிட முடியவில்லை,

          கனடாவின் இந்த பகுதியில் தொடர் கொலைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .


          இந்த கொலையினை புரிந்தவர்களை கைது செய்யும் தீவிர நடவடிக்கையில்

          குற்ற புலனாய்வு துறையினர் ஈடுபட்டுள்ளனர்,இந்த கொலைக்கான கரணம் உடனடியாக தெரியவரவில்லை

            Posted in உலக செய்திகள்

            கடத்திய பெண் தப்பிக்க முயற்சி – தலையில் சுட்டு கொன்ற கொலையாளி

            கடத்திய பெண் தப்பிக்க முயற்சி – தலையில் சுட்டு கொன்ற கொலையாளி

            அமெரிக்கா லூசியான பகுதியில் 37 வயதுடைய நபர் ஒருவர் இளம் பெண் ஒருவரை ஆயுத முனையில் கடத்தினார் ,அந்த பெண் இவரது

            கடத்தலில் இருந்து தப்பிக்க முயன்ற பொழுது அவரை தலையில் சுட்டு சென்றுள்ளார்

            குறித்த அப்பார்ட் மென்ட் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக ஏதோ நடை பெறுவதாக எண்ணிய அயலவர்கள் காவல்துறைக்கு தகவல்

            தரவும் விரைந்து வந்த போலீசார் நடத்திய சோதனையில் பெண் இரத்த வெள்ளத்தில் கிடந்தார் .கடத்தல்காரன் கைது செய்ய பட்டுள்ளார்

            தலை சிதறிய நிலையில் பெண் சடலம் மீட்க பட்டது

            மேற்படி கொலை சம்பவம் அந்த பகுதி மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியது

            கடத்தல் காரன் கூறியது படி நடந்திருப்பின் இவர் உயிர் தப்பி இருக்க கூடும் என நம்ப படுகிறது

            கடத்திய பெண் தப்பிக்க
            கடத்திய பெண் தப்பிக்க