பிரேமதாசா படுகொலை நினைவுகூர்ந்த சஜித்
Posted in இலங்கை செய்திகள்

பிரேமதாசா படுகொலை நினைவுகூர்ந்த சஜித்

பிரேமதாசா படுகொலை நினைவுகூர்ந்த சஜித்

பிரேமதாசா படுகொலை நினைவுகூர்ந்த சஜித் பிரேமதாசாவின் மகனும் இன்றைய எதிர் கட்சி தலைவரான சஜித் பிரேமதாசா .

மே ஒன்று 1993 ஆம் ஆண்டு மே தின கூட்டத்தில் கலந்து கொண்ட இலங்கையின் அந்த நாள் ஜனாதிபதியான ரணசிங்க பிரேமதாசா மீது கார் குண்டு தாக்குதல் இடம் பெற்று அவர் படுகொலை செய்யப்பட்டார்.

அவர் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 32 வருடங்கள் ஆகிறது.

அவ்வாறு படுகொலை செய்யப்பட்ட தந்தையான ரண சிங்க பிரேமதாசாவின் நினைவிடம் சென்ற மகன் சஜித் அவருக்கு மாலை அணிவித்து தனது வணக்கத்தை தெரிவித்துக் கொண்டார்.

இலங்கையில் இரண்டாவது ஜனாதிபதியாக விளங்கிய ரணசிங்க பிரேமதாசா தமிழர்களுடன் மிக நெருக்கமாக பழகி வந்தார்.

விடுதலை புலிகளை காப்பாற்றியதிலும் இந்திய ராணுவம் இலங்கையில் அகல கால் பதித்த நிலையில், அவர்களை விரட்டி அடித்த சாதனைக்குரிய நாயகனாகவும் ரணசிங்க பிரமதாசா காணப்பட்டார்.

இந்திய ராணுவம் அந்த மண்ணில் இருந்து வெளியேற்றப்பட்ட கடுப்பில் அவர் படுகொலை இடம்பெற்றது.

எனவே இந்தப் படுகொலையின் பின்புறத்தில் இந்தியாவுடைய ரோவின் கைகள் படிந்து இருக்கலாம் என்ற குற்றச்சாட்டு இப்பொழுது பேசப்படுகிறது.

ஆகவே இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரண சிங்க பிரேமதாசா சபை படுகொலை செய்து விட்டு ,அந்தப் படுகொலை பலியினை ,விடுதலைப் புலிகள் மீது இலங்கை ஆளுமரசுகள் இன்றுவரை சுமத்தி வருகின்றது வேதனை தரக் கூடிய விடயம்.

சலவை தொழிற்சாலை வைத்து நடத்திவைந்த ரணசிங்க பிரேமதாசாவை அந்த ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என சிங்கள ஏகாதிபத்தியமும் துடித்து வந்தது.

இவ்வாறான முக்கூட்டு பரிமாண நிகழ்விலேயே ரணசிங்க பிரேமதாசா படுகொலை செய்யப்பட்டிருந்தார் என்பது கவனிக்க தக்கது .

வரலாறுகள் மாற்றி திணிக்க பட்டு பேசப்பட்டு வருவது கவலை தான் .

சுவிஸ் தூதர் வீட்டில் திருட்டு
Posted in இலங்கை செய்திகள்

சுவிஸ் தூதர் வீட்டில் திருட்டு

சுவிஸ் தூதர் வீட்டில் திருட்டு

சுவிஸ் தூதர் வீட்டில் திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக கொள்ளு பட்டிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

இலங்கையில் இருக்கக்கூடிய சுவிஸ் தூதரகத்தின் தூதர் கொள்ளுப்பிட்டி பகுதியில் வசித்து வந்ததாகவும் ,அவரது தங்குமிட வீட்டில் 4:30 மில்லியன் பெறுமதியான நகைகள் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திருட்டில் ஈடுபட்டதாக அங்கு பணிபுரிந்த இருவர் மீது போலீசார் சந்தேகம் கொண்டுள்ளதாகவும், அவர்கள் மீது விசாரணைகள் இடம் பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்க நகைகள் வைரம் உள்ளிட்டவையே அங்கு அதிகளவில் திருட்டு போயுள்ளது .

இவ்வாறு காணாமல் போன அல்லது திருட்டு போன நகைகள் வைரங்கள் மணிக்கூடுகள் என்பனவற்றை மீட்கும் நடவடிக்கை காவல்துறை ஈடுபட்டு வருகின்றனர்.

நன்கு திட்டமிட்ட முறையில் சுவிஸ் தூதரது இல்லத்தில் இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், ஆதனால் சுவிஸ் தூதர் அதிர்ச்சியில் உறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவரது வீட்டில் இத்தனை மில்லியன் பெறுமதியான நகைகள் வைரங்கள் எப்படி வந்தன என்கின்ற கேள்வியும் தற்பொழுது எழுப்பப்பட்டுள்ளது.

மேற்படி சம்பவம் தற்பொழுது சமூக வலைத்தளங்கள் முதல் உலக நாடுகள் வரை பேசு பொருளாக மாற்றம் பெற்றுள்ளது.

நாள்தோறும் இலங்கையில் நாடளாவிய ரீதியில் இவ்வாறான குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருகின்றமையும்,

இவ்வாறன திருட்டு சம்பவங்கள் தொடராக பெருகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கோடாரியால் வெட்டி ஒருவர் படுகொலை
Posted in இலங்கை செய்திகள்

கோடாரியால் வெட்டி ஒருவர் படுகொலை

கோடாரியால் வெட்டி ஒருவர் படுகொலை

கோடாரியால் வெட்டி ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக நுணுகா விஹாரா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிள் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த நபரை பின் தொடர்ந்து சென்ற நபர்கள் திடீரென அவரை வழிமறித்து கோடாரியால் தாக்கி படுகொலை செய்துள்ளனர் .

இந்தக் கோடாரி வெட்டு தாக்குதலில் குறித்த 67 வயது நபர் சம்பவ இடத்திலேயே பலியானதாக காவல்துறை தெரிவிக்கின்றனர்.

பலத்த கோடாரி வெட்டு காயங்களுக்கு உள்ளாட நிலையில் .மீட்கப்பட்ட நபர் அது சடலம் தற்பொழுது மருத்துவ பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது.

கோடரியால் வெட்டி படுகொலை செய்த நபர்கள், கொலையாளிகள் தப்பி சென்றுள்ளதாகவும் ,அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையில் காவல்துறை ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் இடம்பெற்ற பகுதிகளில் கோடரிகள் தாக்குகின்ற காட்சிகள் காணொளியில் பதிவாகி உள்ளதான தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேற்படி காணொளி ஆதாரங்களை வைத்து .கோடாரியால் வெட்டி படுகொலை செய்த குற்றவாளிகளை. போலீசார் விரைவில் கைது செய்து விடுவார்கள் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையில் நாள்தோறும் இவ்வாறான படுகொலைகள் அதிகரித்து வருவதும் .அதனால் மக்கள் ஒருவகை அச்சத்தில் உறைந்துள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது.

பயங்கரவாத தடைச்சட்டம் அவசியம்
Posted in இலங்கை செய்திகள்

பயங்கரவாத தடைச்சட்டம் அவசியம்

பயங்கரவாத தடைச்சட்டம் அவசியம்

பயங்கரவாத தடைச்சட்டம் அவசியம் பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் நிகழ்நிலை காப்பு சட்டம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிக்கமைய செயற்பட வேண்டியது தற்போது அத்தியாவசியமானதாகும்.

2027இல் மீண்டும் ஜி.எஸ்.பி. பிளஸ் வரி சலுகைக்காக விண்ணப்பிப்பதில் இது நேரடியாக தாக்கம் செலுத்தும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழுவினருடன் புதன்கிழமை (30) சந்தித்த பின்னரே கலாநிதி ஹஷ்ஷ இதனைத் தெரிவித்துள்ளார்.

‘இலங்கைக்கான ஜி.எஸ்.பி. பிளஸ் வரி சலுகை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழுவுடன் சிறந்த சந்திப்பொன்று இடம்பெற்றது.

நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல வரி சலுகை 2027 ஆம் ஆண்டுக்குள் முடிவடையும். நாம் அதற்கு மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

நான் இருமுறை சரிபார்த்தேன். அதிகரிப்பு கோர எந்த ஒதுக்கீடும் இல்லை.

எனவே நாம் செய்ய வேண்டியது பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் நிகழ்நிலை காப்பு சட்டம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாகும்.’ என ஹர்ஷ டி சில்வா மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை இது தொடர்பில் கொழும்பில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கருத்து வெளியிட்ட அவர்,

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கேள்வியெழுப்புவதை வரையறுக்கவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிடுகின்றார்.

நிகழ்நிலை காப்பு சட்டத்தின் ஊடாக ஊடக சுதந்திரம் பறிக்கப்படக் கூடாது என ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்துகின்ற நிலையில்,

அமைச்சரவை பேச்சாளரின் இந்த கூற்று எதனை வெளிப்படுத்துகிறது நாம் இது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேசுவோம் என்றார்.

சாராயம் விற்க தடை
Posted in இலங்கை செய்திகள்

சாராயம் விற்க தடை

சாராயம் விற்க தடை

சாராயம் விற்க தடை விதிக்கப்படுவதாக இளைஞருடைய அமைச்சு ஆரம்பித்துள்ளது.

எதிர்வரும் மே தினத்தை மேற்கோள்காட்டி அன்றைய தினத்திற்கு நாடு தழுவிய ரீதியில் சாராயங்கள் விற்பதற்கு தடை செய்யப்படுகிறது .

அவ்வாறு அத்துமறிவிட்டால் அவர்கள் கைது செய்யப்பட்டு தண்ட அறவிடப்படும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை அடுத்து தற்பொழுது குடிப்பிரியர்கள் போத்தல்களை வாங்கி வீடுகளில் பதுக்குவதாகவும் அதனால் தாராளமாக குடித்து வருவதாகவும் செய்திகள் வருகின்றன.

இலங்கையில் அதிக வருமானத்தை பெற்றுக் கொடுக்கின்ற முதலாவது வர்த்தகமாக சாராயம் காணப்படுகிறது.

இலங்கையில் அதிகமாக சாராய விற்பனை இடம்பெறுவதால். அதிக லாபத்தையும் அந்த நாட்டையும் வழிநடத்தவும் செயல்படுத்தவும் இந்த சாராயங்களை உதவுகின்றன.

நாட்டினை வாழ வைப்பதற்க்காவே குடிகாரர்கள் அதிகமாக குடிக்கின்றனர்.

குடிமகன்கள் இலங்கையில் இல்லாவிட்டால் இலங்கை குடிமக்களால் கைவிடப்பட்டு விலை காணப்படும் .

அதனால்தான் குடிக்கிறோம் என குடிகார மக்கள் இப்படி விளக்கம் அளித்து வருகின்றனர்.

எனவே மே மாதம் குடிகாரர்கள் கவனமாக இருங்கள் சாராயக்கடைகள் பூட்டப்படுவதால் இப்பொழுது சாராயங்களை வாங்கி பதுக்கி கொள்ளுங்கள்.

இலங்கை பேருந்துகளில் வங்கி அட்டை பயன்படுத்த நடவடிக்கை
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை பேருந்துகளில் வங்கி அட்டை

இலங்கை பேருந்துகளில் வங்கி அட்டை

இலங்கை பேருந்துகளில் வங்கி அட்டை ,இலங்கையிலுள்ள பேருந்துகளுக்கு வாங்கி அட்டை பயன்படுத்த தற்பொழுது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ,இலங்கை போக்குவரத்து அமைச்சர் அறிவித்துள்ளது.

இலங்கை பேருந்துகளில் இடம்பெறுகின்ற மோசடிகளை தடுக்க வாங்கி அட்டை இந்த விடயங்கள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது,

வெளிநாடுகளைப் போன்று இலங்கையிலும் வாங்கி அட்டைகளை பயன்படுத்துவதால் மோசடிகளையும்

ஊழல்களையும் தடுக்கலாம் எனவும் ,அதனால் பல மில்லியன் பணத்தை மீதப்படுத்தலாம் என அவர்கள் தெரிவிக்கிறார்கள்,

அனைத்து பேருந்துகளிலும் இந்த வாங்கி அட்டை வசதிகள் நடைமுறைக்கு வந்தால் ,பணக்கையாடல் பண மோசடிகள் தடுக்கப்படும் நடவடிக்கை தீவிர படுத்தப்படும் எனவும்,

அதனால் அரசு பல மில்லியனை வருமானமாக பெற்றுக்கொள்ளும் என நம்பப்படுகிறது.

பேருந்தில் ஆரம்பிக்கப்படும் இந்த வங்கி அட்டை என்பது புகையிரத்திலும் அறிமுகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

இதனால் இலங்கையினுடைய வர்த்தகம் மேல் நோக்கிச் செல்வதற்கு நடவடிக்கை அவர்கள் சரியான விடயத்தை கடைப்பிடிப்பதாக மக்கள் மகிழ்ச்சியை வெளியிட்டு இருக்கின்றனர்.

மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் அருச்சுனா
Posted in இலங்கை செய்திகள்

மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் அருச்சுனா

மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் அருச்சுனா

மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் அருச்சுனா ராமநாதன் தொடர்பான விடயம் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் மத்தியில் .கொதிப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கைத் தமிழர் வரலாற்றில் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட ஒருவர் இவ்வாறு மக்களை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டு வருகின்ற சம்பவம் முதன்முதலாக பதியப்படுகிறது .

தமிழர்களின் பிரதிநிதிகளாக வருகை தந்த தமிழ் அரசியல்வாதிகள் ,அரசாங்கத்தினுடைய நிதிகளை பெற்று ,தமிழ் மக்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வந்தார்கள்.

ஆனால் அர்ச்சுனா ராமநாதன் என்கின்ற இந்த மர்ம முக மூடி நபர் புலம்பெயர்ந்து வாழுகிற ,வெளிநாட்டு தமிழர்களின் பணத்தை ஆட்டை போடுவதையே தொடர்ந்து வருகிறார்.

அர்ச்சுனா ராமநாதன் அவரது சகோதரர் ஆகியோர் இணைந்து, மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் நடவடிக்கைகளில் தொடராக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த விடயமே தற்பொழுது தமிழ் மக்களை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது

ஆகவே அர்ச்சுனா ராமநாதன் நடத்தி வரும் சாக்கடை அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது.

தோற்றுப் போவோம் என அஞ்சி தேர்தலில், பல தொகுதிகளில் போட்டியிடாது விலகிய இவர், தற்போது அனுராவை வெல்ல வைப்பதற்கான நடவடிக்கையில் களம் குதித்துள்ளதையே இவற்றின் ஊடாக காண முடிகிறது .

ஆகவே பாராளுமன்றத் தேர்தலை போன்று இந்த உள்ளூராட்சி சபை தேர்தலிலும் .

அனுராவி வெல்ல வைப்பதற்கான அனைத்து நடவடிக்கையிலும் ,அர்ச்சனா ராமநாதன் அவர் சார்ந்த ஓட்டுக்குழுக்கள் ஈடுபட்டு வருகின்றன.

எனவே இதனை மானமுள்ள தமிழர்களாகிய நாங்கள் முறியடிப்போம் .

இவ்வாறான நிபுணர்களையும் சிங்கள கூலிகளை ஓட ஓட விரட்டியடிப்போம்.

தமிழனாக ஒன்று இணைந்து தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்த வீட்டுக்கு ஓட்டை போட்டு நாட்டை காப்பாற்றுவோம் ஓடி வாருங்கள் தமிழர்களே.

சிங்கள கூலிகளாக மாறி தமிழர் தேசிய அரசியல் உரிமைகளை குழி தோண்டி புதைக்க வந்திருக்கும் ,இவ்வாறான விஷமிகளை ,தாய் மண்ணில் இருந்து விரட்டுவோம் .

நாங்கள் தமிழர்களாக இந்த மண்ணை ஆளவும் ,தமிழர்களாக வாழவும் இன்றே வீறு கொண்டு எழுவோம் .

வீர தமிழர்கள் தாயக தமிழர்கள் என்பதை காணப்பிப்போம் மக்களே எழுக .

சிக்கிய வன்னி ஊழல் அணி
Posted in இலங்கை செய்திகள்

சிக்கிய வன்னி ஊழல் அணி

சிக்கிய வன்னி ஊழல் அணி

சிக்கிய வன்னி ஊழல் அணி நாடகங்கள் தற்பொழுது அம்பலத்துக்கு வந்துள்ளது

முகநூல் வழியாக போலியான முகமூடி மாயாபிகள் நான் உருவாக்கப்பட்டுள்ள பன்னி ஊழல் அணி எனப்படும் பேஸ்புக் பக்கம் தற்பொழுது மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்த முகநூல் பக்கத்தில் வன்னி ஊழல் அணியினர் அதனை இயக்கி வருவது பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுன இராமநாதன் என்பதை, சந்தேகத்துக்கு இடம் இன்றி பலர் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

இதனூடாக தமிழர்களுக்கு கலங்கத்தை ஏற்படுத்துவது .தமிழ் தேசியத்தின் ஊடாக பயணிப்பவர்களை. ஊடறுத்து தாக்கி அவதூறு செய்வது.

மக்களையும் பொது நல சேவையில் ஈடுபடுபவர்களை மிரட்டி. அடக்கி ஒடுக்கி. தமது பக்கம் அவர்களை திசை திருப்பும் நோக்குடன் .இந்த வன்னி ஊழல் முகநூல் பக்கம் இயங்கி வருவதை காண முடிகிறது.

பத்து மாதமாக அர்ச்சுனா ராமநாதனுக்கு அருகில் இருக்கும் தங்கம் தொடர்பாக இந்த ஊழல் அணி எழுதுவதில்லை.

மேலும் அர்ச்சுனா இராமநாதனுடைய நிதி மோசடிகள் தொடர்பாகவும். அவரது அநாகரீக பேச்சுக்கள் தொடர்பாக .இந்த வன்னி ஊழல் அணி வெளிப்படுத்துவதில்லை .

அர்ச்சுனா ராமநாதன் எழுதுகின்ற எழுத்து நடையும் ,இந்த வன்னி ஊழல் அணியினுடைய எழுத்து நடையும், ஒத்து போகிறது .

ஆகவே இதனை நடத்துவது அவர்தான் என்பது இதனூடாக அம்பலப்படுகிறது.

தமிழ் தேச விடுதலைக்கு எதிராகவும், சிங்கள தேசியத்திற்கு ஆதரவாகவும் ,அர்ச்சுனா என்கின்ற பாராளுமன்ற உறுப்பினர், செயலாற்றி வருவதை, சமீப கால நடவடிக்கைகளை அவதானித்தவர்களுக்கு புரிந்திருக்கும்.

இவ்வாறான கருப்பாடுகளை இனம் கண்டு ,தமிழர்கள் அழித்து ஒழிக்க வேண்டியது காலத்தினுடைய கடப்பாடாக உள்ளது.

எனவே புலம்பெயர்ந்து மற்றும் தாயகத்தில் இருக்கக்கூடிய தமிழர்கள் ,இவர்களது எந்த அருவருப்பான செயலையும் ,அநாகரிக நடவடிக்கைகளுக்கும் எதிராக, நீங்கள் திசை திரும்பி உள்ளது வரவேற்கத்தக்கது.

மேலும் சில காலங்களில் இந்த கருப்பு ஆடுகள் யார் என்பதை மக்கள் வெளிப்படையாகவே அறிவீர்கள்.

வெளிநாடுகளில் உள்ள ஒட்டுக் குழுக்கள் .காட்டி கொடுத்த கயவர்களினால் .பணம் கொடுத்து இயக்கப்படுகின்ற. தலையாட்டி பொம்மையாக அர்ஜுனாவும் தங்கமும் காணப்படுகின்றனர் .

எனவே சிங்கள தேசியத்தின் ஊது குழல்களாகவும் ,அவர்களது செயல் திட்டங்களை இலக்கு படுத்த ,களம் இறக்கி விடப்பட்டுள்ள கருணாக்கள் இவை என்பது அம்பலமாகியுள்ளது.

ஆகவே வன்னி ஊழல் என்பது ஒட்டுக்குழு மாவியாக்களின் கூடாரமும், அதை இயக்கி வரும் அர்ச்சனாவின் கொள்கையின் பின்புலத்தில் இயங்குகின்றது.

என்பதை அம்பலப்பட்டு நிற்பதை நாங்கள் இதன் ஊடாக தெரிவித்துக் கொள்கிறோம் நன்றி

– வன்னி மைந்தன் –

மக்களை ஏமாற்றும் அனுரா
Posted in இலங்கை செய்திகள்

மக்களை ஏமாற்றும் அனுரா

மக்களை ஏமாற்றும் அனுரா

மக்களை ஏமாற்றும் அனுரா ,இலங்கையில் நடந்து முடிந்த தேர்தலை அடுத்து அனுரா ஆட்சி அரியணையில்ஏறினார் அதனை எடுத்து அனுரா குமர திசநாயக்காவின் உடைய ஆட்சியானது தமிழ் மக்களுக்கு எதிராக திசை திரும்பி இருக்கிறது.

புதிதாக இலங்கையின் ஜனாதிபதியாக அதிர குமர திசடாயக்கா பதவி ஏற்றுள்ளார் என்கின்ற மகிழ்வில்மக்கள் திகழ்கின்றனர்.

ஆனால் தற்பொழுது அவர் தனது இனவாத போக்கினை கடைப்பிடித்து வருவதால் தமிழ் மக்கள் அவருக்கு எதிராக தமது கருத்துக்களையும் எதிர்ப்பையும் காண்பிக்க ஆரம்பித்துள்ளனர்.

இதனால் எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலில் பலமான பாதிப்பையும் பின்னடைவையும் அனுரா குமர திசநாயக்க சந்திப்பார் என்பதாக கணிக்கப்படுகிறது.

ஆனால் வெளிநாடுகளில் உள்ள அனுர குமர திசநாயக்கா அவருடைய ஆதரவு சக்திகள் அனுராவுக்கு தொடர்ந்து ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

இலங்கையில் ஜனாதிபதி அனுராவின் ஆட்சியை தமிழ் மக்களுடைய பிரச்சனைக்கு தீர்வை காணும் என்கின்ற வகையில் கற்பனை குதிரையில் அவர்கள் ஆடி வருகின்றனர்.

இதனால் இந்த தேர்தலில் அணுக குமர திசநாயக்க படுவியை சந்தித்து மிகப்பெரும் சாட்டை அடியை தமிழ் சிங்கள மக்கள் வழங்குவார்.

என்பதால் அனுரா தற்பொழுது பதட்டத்தில் குறைந்துள்ளதாக மக்கள் கருத்து தெரிவிக்கிறது.

மின் கட்டணங்கள் உயரும் சாத்தியம்
Posted in இலங்கை செய்திகள்

மின் கட்டணங்கள் உயரும் சாத்தியம்

மின் கட்டணங்கள் உயரும் சாத்தியம்

மின் கட்டணங்கள் உயரும் சாத்தியம் ,சர்வதேச நாணய நிதியம் (IMF) அடுத்த தவணையாக 344 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கவுள்ளதால், செலவு மீட்பு விலையை மீட்டெடுப்பதைப் பொறுத்து, அரசாங்கம் மின்சார

கட்டணங்களை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது என்று டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக, தற்போதைய அரசாங்கம் இந்த ஆண்டு ஜனவரியில் மின்சார கட்டணங்களை 20 சதவீதம் குறைத்தது.

இருப்பினும், இது செலவு-மீட்பு விலை நிர்ணயம் அல்ல என்பதால், இந்த நடவடிக்கை குறித்து IMF தனது அதிருப்தியை தெரிவித்தது.

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதியால் ஆதரிக்கப்படும் இலங்கையின் சீர்திருத்தத் திட்டத்தின் நான்காவது

மதிப்பாய்வை முடிக்க, பொருளாதாரக் கொள்கைகள் குறித்த ஊழியர்கள் மட்ட ஒப்பந்தத்தை சர்வதேச நாணய நிதியமும் இலங்கை அதிகாரிகளும் சமீபத்தில் எட்டினர்.

இந்த மறுஆய்வு சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டவுடன், இலங்கைக்கு சுமார் 344 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி கிடைக்கும், இதன் மூலம் இந்த ஏற்பாட்டின் கீழ்

வழங்கப்படும் மொத்த சர்வதேச நாணய நிதிய நிதி உதவி சுமார் 1.7 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருக்கும்.

ஆயினும்கூட, பணியாளர் நிலை ஒப்பந்தம் IMF நிர்வாகக் குழுவின் ஒப்புதலுக்கு உட்பட்டது, இது பின்வருவனவற்றைப் பொறுத்தது: (i) மின்சார செலவு-மீட்பு விலையை மீட்டெடுப்பது மற்றும் தானியங்கி மின்சார விலை

சரிசெய்தல் பொறிமுறையின் சரியான செயல்பாட்டை உறுதி செய்வது தொடர்பான முன் நடவடிக்கைகளை செயல்படுத்துதல்; மற்றும் (ii) பலதரப்பு கூட்டாளர்களின் உறுதியான நிதி பங்களிப்புகள் மற்றும் போதுமான கடன்

மறுசீரமைப்பு முன்னேற்றத்தை உறுதிப்படுத்துவதில் கவனம் செலுத்தும் நிதி உத்தரவாத மதிப்பாய்வை நிறைவு செய்தல் என்று இலங்கைக்கான IMF மிஷன் தலைவர் இவான் பாபகேர்ஜியோ கூறினார்.

இலங்கையின் லட்சிய சீர்திருத்த நிகழ்ச்சி நிரல் தொடர்ந்து பாராட்டத்தக்க விளைவுகளை அளித்து வருகிறது. நெருக்கடிக்குப் பிந்தைய வளர்ச்சி 2024 இல் 5 சதவீதமாக மீண்டது குறிப்பிடத்தக்கது.

வருவாய் திரட்டல் சீர்திருத்தங்கள் 2022 இல் 8.2 சதவீதமாக இருந்த வருவாய்-மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தை 2024 இல் 13.5 சதவீதமாக மேம்படுத்தியுள்ளன.

மத்திய வங்கியின் கணிசமான அந்நியச் செலாவணி கொள்முதல்களைக் கருத்தில் கொண்டு, மொத்த அதிகாரப்பூர்வ இருப்பு 2025 மார்ச் மாத இறுதியில் 6.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியது. கணிசமான நிதி

சீர்திருத்தங்கள் பொது நிதிகளை வலுப்படுத்தியுள்ளன. இலங்கையின் கடன் மறுசீரமைப்பு கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ளதாக அவர் கூறினார்.

இந்த ஆண்டு ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் அடுத்த திருத்தத்தின் கீழ் மின்சார விலை நிர்ணயம் குறித்த அரசாங்கத்தின் நடவடிக்கை குறித்து கேட்டதற்கு, இலங்கை மின்சார சபையின் (CEB) ஊடகத் தொடர்பாளர் ஒருவர்,

விரைவில் இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட உள்ள கட்டணங்களைக் கணக்கிடும் பணியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறினார்.

“நாங்கள் செலவைக் கணக்கிடுகிறோம். மின் உற்பத்திக்கு நாம் சார்ந்திருக்கும் ஆதாரங்களைப் பொறுத்து இது மாறுபடும். சில நேரங்களில், மழை பெய்தால் நீர் மின்சாரத்தையே அதிகம் நம்பியிருக்கிறோம்.

இல்லையெனில், அது பெரும்பாலும் அனல் மின்சாரத்தையே சார்ந்துள்ளது. மேலும், பகல்நேர மின்சாரத் தேவைகளுக்கு சூரிய மின் உற்பத்தியை சார்ந்துள்ளோம்,” என்று அவர் கூறினார்.

நீதிமன்றில் ஆஜரானார் மைத்திரி
Posted in இலங்கை செய்திகள்

நீதிமன்றில் ஆஜரானார் மைத்திரி

நீதிமன்றில் ஆஜரானார் மைத்திரி

நீதிமன்றில் ஆஜரானார் மைத்திரி ,ரோயல் பார்க் கொலை சம்பவம் தொடர்பில் மரணதண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிக்கு பொதுமன்னிப்பு வழங்கியமை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் (FR)

மனுவை விசாரணைக்காக இன்று செவ்வாய்க்கிழமை (29) காலை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

ரோயல் பார்க் கொலை சம்பவம் தொடர்பில் மரணதண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிக்கு பொதுமன்னிப்பு வழங்கியமை தொடர்பில் முன்னாள்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பில் அண்மையில் நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் பேரில் மைத்திரிபால சிறிசேன இன்று செவ்வாய்க்கிழமை (29) நீதிமன்றில் ஆஜராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனது கடிதத் தொடர்பு பற்றி அநுரவுக்கு எப்படித் தெரியும்
Posted in இலங்கை செய்திகள்

எனது கடிதத் தொடர்பு பற்றி அநுரவுக்கு எப்படித் தெரியும்

எனது கடிதத் தொடர்பு பற்றி அநுரவுக்கு எப்படித் தெரியும்

எனது கடிதத் தொடர்பு பற்றி அநுரவுக்கு எப்படித் தெரியும் ,முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சாத்துதல்களை புலனாய்வு

செய்யும் ஆணைக்குழுவின் முன் சாட்சியமளிக்க திகதி குறித்து பேச்சுவார்த்தை நடத்தியது பற்றி எவ்வாறு அறிந்திருந்தார் என்று கேட்டார்.

“ஏப்ரல் 15 ஆம் திகதி இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சாத்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவிற்கு வருமாறு என்னைக் கேட்டுக்

கொண்டனர். ஏப்ரல் 10, 2025 அன்று நான் ஊடகங்களுக்கு வெளியிட்ட அறிக்கை தொடர்பாக என்னிடம் விசாரிக்க வேண்டியிருந்தது என்று ஆணையம் கூறியது.

புத்தாண்டு விடுமுறையின் போது நான் கொழும்பில் இருந்ததால் அதைச் செய்ய முடியாது என்று சொன்னேன். பின்னர் ஏப்ரல் 25 ஆம் திகதி வருமாறு என்னிடம் கேட்டுக் கொண்டனர். எனது சட்டத்தரணி நாட்டிற்கு வெளியே

இருந்ததால் வர முடியாது என்று சொன்னேன். நான் சந்தேக நபராகப் பெயரிடப்பட்டதால், எனது சட்டத்தரணி என்னுடன் இருக்க வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன்.

இருப்பினும், ஏப்ரல் 15 ஆம் திகதி புத்தாண்டைக் கொண்டாடப் போவதால் என்னால் வர முடியாது என்று நான் ஆணைக்குழுவிற்கு கூறியதாக மட்டக்களப்பில் ஜனாதிபதி திசாநாயக்க ஒரு கருத்தை வெளியிட்டார்.

ஆணைக்குழுவுடனான எனது கடிதத் தொடர்பு குறித்து ஜனாதிபதி திசாநாயக்க எப்படி அறிந்தார் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது,” என்று அவர் கூறினார்.

இலஞ்சம் மற்றும் ஊழல் சாத்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழு ஆரம்பத்தில் ஒரு சட்டத்தரணி தன்னுடன் வர அனுமதி மறுத்ததாகவும் முன்னாள் ஜனாதிபதி கூறினார்.

ஊவா மாகாண சபையின் நிதியை வங்கியில் இருந்து எடுத்து, அவற்றை தொடர்ச்சியான அல்லது மூலதனச் செலவுகளுக்குச் செலவிடுவது குற்றமல்ல என்று ஆணைக்குழுவிடம் மூன்று மணி நேர வாக்குமூலம் அளித்த முன்னாள் ஜனாதிபதி கூறினார்.

முந்தைய ஆட்சியின் போது, ​​ஊவா மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க, ஊவா மாகாண சபை நிதியை ஒரு வங்கியில் இருந்து திரும்பப் பெற்ற சம்பவம் தொடர்பாக திரு.

விக்ரமசிங்க நேற்று இலஞ்சம் மற்றும் ஊழல் சாத்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் முன் அழைக்கப்பட்டார்.

“நான் ஆணைக்குழுவில் ஒரு அறிக்கையை அளித்து எனது கருத்தை விளக்கினேன், அதன் மூலம் வங்கிக் கணக்கில் நிதி வைத்திருப்பது தான் உண்மையான குற்றம் என்று நான் கூறினேன்,” என்று திரு. விக்ரமசிங்க ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

“மத்திய அரசால் மாகாண சபைகளுக்கு ஒதுக்கப்படும் நிதி பல்வேறு நோக்கங்களுக்காக செலவிடப்பட வேண்டும். நிதிகள் தொடர்ச்சியான மற்றும் மூலதன செலவினங்களுக்கு செலவிடப்பட வேண்டும். பணம் புழக்கத்தில் விடப்படும்போது பொருளாதாரம் சுறுசுறுப்பாகிறது.

தொடர்ச்சியான மற்றும் மூலதன செலவினங்களுக்கு நிதி செலவிடுவது பொருளாதாரத்தை தொடர்ந்து இயக்கும். உங்கள் பணத்தை ஒரு வங்கியில் வைப்புச் செய்தால், அது பொருளாதாரத்தில் புழக்கத்தில் விடாது.

உங்கள் நிதியை ஒரு வங்கியில் டெபாசிட் செய்வதன் மூலம் நீங்கள் பொருளாதார வளர்ச்சியைப் பெற முடியாது. அன்றாட செலவுகளுக்கு செலவிடாமல் ஒரு வங்கியில் நிதியை டெபாசிட் செய்வது உண்மையான குற்றம். இந்த விஷயத்தை நான் ஆணைக்குழுவிடம் விளக்கினேன். 2024 ஆம் ஆண்டின் பகிரங்க நிதிசார் முகாமைத்துவ சட்டம் இந்த விஷயத்தை தெளிவாக வரையறுக்கிறது மற்றும் முறையான செலவினங்களுக்கான ஏற்பாடுகளை வழங்குகிறது என்று நான் ஆணைக்குழுவிடம் கூறினேன்,” என்று அவர் கூறினார்.

“கடந்த காலங்களில் ஒரு வங்கியில் அதிக வட்டிக்கு வைப்பு செய்யப்பட்ட அரச நிதிகள் திரும்பப் பெறப்பட்டு, குறைந்த வட்டிக்கு மற்றொரு வங்கியில் டெபாசிட் செய்யப்பட்ட சம்பவங்கள் உள்ளன என்று நான் ஆணைக்குழுவிடம் கூறினேன். இது 2008 இல் நடந்தது.

2002 இல் எங்கள் அரசாங்கம் அதிக வட்டி வழங்கும் வங்கிகளில் அரச நிதிகளை வைப்புச் செய்ய அனுமதித்தது,” என்று அவர் மேலும் கூறினார்.

இளைஞன் படுகொலை ஐவருக்கு மரண தண்டனை
Posted in இலங்கை செய்திகள்

இளைஞன் படுகொலை ஐவருக்கு மரண தண்டனை

இளைஞன் படுகொலை ஐவருக்கு மரண தண்டனை

இளைஞன் படுகொலை ஐவருக்கு மரண தண்டனை ,இளைஞன் படுகொலை: ஐவருக்கு மரண தண்டனை இளைஞன் ஒருவரை கிரிக்கெட் மட்டை மற்றும் பொல்லுகளால் தாக்கிபடுகொலை செய்தனர் என குற்றஞ்சாட்டப்பட்ட

ஏழுவரில் ஐவரை குற்றவாளியாக இனங்கண்டகொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க, ஐவருக்கும் மரண தண்டனைதீர்ப்பளித்து,

ஏனைய இருவருக்கும் வாழ்நாள் சிறை தண்டனை விதித்தார். தற்போது 27 வயதுக்கும் 29 வயதுக்கும் இடைப்பட்ட இருவர், சம்பவம்இடம்பெற்ற போது, 15 மற்றும் 17 வயதுடைய சிறுவர்களாக இருந்தனர். அதனால்,அவ்விருவருக்கும் வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மட்டக்குளிய, மோதரை பகுதியில் இரண்டு கோவில்களுக்கு இடையில் வீடொன்றில் வைத்து, இன்றைக்கு 13 வருடங்களுக்கு முன்னர் 21 வயதான பிரான்சிஸ் சுரஞ்சன் என்ற இளைஞனே படுகொலை செய்யப்பட்டார்.

பிரதிவாதிகளுக்கு எதிரான குற்றங்கள்எவ்விதமான சந்தேகத்துக்கும் இடமின்றி, நிரூபிக்கப்பட்ட மையால், அவர்களைகுற்றவாளியாக இனங்கண்ட கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க,அவர்களுக்கு மேற்கண்டவாறு தண்டனையை, திங்கட்கிழமை (28) விதித்தார்.

2012 செப்டம்பர் 26 ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த நாளொன்றில், பிரான்சிஸ்சுரஞ்சன் என்ற இளைஞனை கிரிக்கெட் மட்டைமற்றும் பொல்லுகளால் தாக்கி படுகொலை செய்தனர் என ஒன்பது பேருக்கு எதிராக சட்டமாஅதிபரினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கு விசாரணையின் போது, அதில் இருவர் மரணமடைந்துவிட்டனர்.அதனால், ஏழு பேருக்கு எதிராக வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு மேற்கண்டவாறு தீர்ப்பளிக்கப்பட்டது

2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 30 பேர் காயம்
Posted in இலங்கை செய்திகள்

2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 30 பேர் காயம்

2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 30 பேர் காயம்

2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 30 பேர் காயம் ,பெலியத்த, ஹெட்டியாராச்சி வளைவுக்கு அருகில் இன்று அதிகாலை இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 30 பேர் காயமடைந்துள்ளனர்.

பொலிஸாரின் கூற்றுப்படி, டிக்வெல்லவிலிருந்து பெலியத்த நோக்கிச் சென்ற தனியார் பேருந்து, எதிர் திசையில் பயணித்த இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) பேருந்துடன் மோதியது.

விபத்தில் காயமடைந்த பேருந்துகளில் இருந்த பயணிகள் தங்காலை மற்றும் பெலியத்த வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பெலியத்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி
Posted in இலங்கை செய்திகள்

துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி

துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி

துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி ,பாணந்துறையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 35 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொருவர் காயமடைந்துள்ளார்.

மோட்டார் வந்த இருவர் வீட்டிற்குள் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

10 முடிவுகளை அறிவித்தது போக்குவரத்து அமைச்சு
Posted in இலங்கை செய்திகள்

10 முடிவுகளை அறிவித்தது போக்குவரத்து அமைச்சு

10 முடிவுகளை அறிவித்தது போக்குவரத்து அமைச்சு

10 முடிவுகளை அறிவித்தது போக்குவரத்து அமைச்சு ,போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க சமீபத்தில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு

(NTC), இலங்கை போக்குவரத்து சபை (SLTB) மற்றும் ஒன்பது மாகாணங்களின் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரிகளின் தலைவர்களுடன் சிறப்பு கலந்துரையாடல் ஒன்றை நடத்தினார்.

NTC, SLTB மற்றும் மாகாண அமைப்புகளின் அதிகாரிகளுடன் விரிவான கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, இலங்கையின் பயணிகள் போக்குவரத்து அமைப்பை மேம்படுத்தவும் நவீனமயமாக்கவும் பல முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டன.

எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் பின்வருமாறு:

– புத்தளம் பாதையில் ஒருங்கிணைந்த நேர அட்டவணையை உடனடியாக செயல்படுத்துதல்.

  • 138வது வழித்தடத்தில் ஒரு முன்னோடித் திட்டத்தைத் தொடங்குதல், அனைத்து பேருந்துகளையும் ஒரே சங்கத்தின் கீழ் லாபப் பகிர்வு பொறிமுறையுடன் இயக்குதல்.
  • அனைத்து பேருந்துகளிலும் ஜிபிஎஸ் கண்காணிப்பு மற்றும் சிசிடிவி கமராக்களை கட்டாயமாக நிறுவுதல்.
  • டிஜிட்டல் அமைச்சகத்துடன் இணைந்து நிகழ்நிலை பற்றுச்சீட்டு முன்பதிவு முறையை உருவாக்குதல்.
  • பேருந்து ஓட்டுநர்களுக்கு திடீர் போதைப்பொருள் மற்றும் மது சோதனை நடத்துதல்.
  • டிக்கெட் இயந்திரங்கள் மூலம் டிக்கெட் வழங்குவதை கட்டாயமாக்குதல் (சலுகைக் காலம் வழங்கப்படும்).
  • பயணிகள் பேருந்துகளுக்கான விவரக்குறிப்புகளை நிறுவுதல்.
  • பேருந்து ஓட்டுநர்கள் சீட் பெல்ட்களை பயன்படுத்தலை கட்டாயமாக்கல்
  • புதிய பேருந்துகளுக்கு புதிய வழித்தடங்களை ஒதுக்குவதற்கான ஒரு வழிமுறையை அறிமுகப்படுத்துதல்.
  • NTC, SLTB மற்றும் ஒன்பது மாகாணங்களுக்கும் தனித்தனி எண்களாக பயணிகள் விதிமீறல்களைப் முறைப்பாடளிக்க அனைத்து பேருந்துகளிலும் வட்ஸ்அப் எண்களைக் காட்சிப்டுத்தல்.

இந்த முடிவுகளை செயல்படுத்துவதற்குத் தேவையான முதற்கட்ட பணிகளை விரைவுபடுத்துமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் ரத்நாயக்க அறிவுறுத்தினார், மேலும் முன்னேற்றத்தை தொடர்ந்து கண்காணிப்பதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

ஆசிரியையை தாக்கிய ஆசிரியைக்கு சிறை
Posted in இலங்கை செய்திகள்

ஆசிரியையை தாக்கிய ஆசிரியைக்கு சிறை

ஆசிரியையை தாக்கிய ஆசிரியைக்கு சிறை

ஆசிரியையை தாக்கிய ஆசிரியைக்கு சிறை ,துடைப்பக் கைப்பிடி மற்றும் குடையால் தாக்கி ஆசிரியை ஒருவரை காயப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு ஆசிரியையை குற்றவாளி எனக் கண்டறிந்த அனுராதபுரம் மேலதிக நீதவான் பி.கே. திருமதி. சமரசிங்க ​அந்த ஆசிரியைக்கு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

குற்றம் சாட்டப்பட்டு, குற்றவாளியாக இனங்காணப்பட்ட ஆசிரியருக்கு ஐந்து ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட ஆறு மாத சிறை தண்டனை விதித்தார். பாதிக்கப்பட்ட ஆசிரியைக்கு ஆயிரத்து ஐநூறு ரூபாய் அபராதம் செலுத்தவும் உத்தரவிட்டார்.

மேலும், முறைப்பாடு செய்த ஆசிரியைக்கு முப்பதாயிரம் ரூபாய் இழப்பீடு வழங்குமாறு பிரதிவாதியான ஆசிரியைக்கு நீதவான் உத்தரவிட்டார்.

மிஹிந்தலை, கன்னடிய, கல்வல சந்திப்பில் வசிக்கும் ஒரு பெண் ஆசிரியரை துடைப்பக் கைப்பிடி மற்றும் குடையால் தாக்கி காயங்களை ஏற்படுத்தியதாக 54 வயதான ஆசிரியைக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

2021 செப்டம்பர் 30, மிஹிந்தலை, கன்னட்டியவைச் சேர்ந்த 59 வயதான ஆசிரியையின் வீட்டுக்குள் நுழைந்து, இந்த தாக்குதலை ஆசிரியையை மேற்கொண்டுள்ளார்.

குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியையால் தாக்கப்பட்ட ஆசிரியை, மிஹிந்தலை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக நீதிமன்ற விசாரணையின் போது தெரியவந்தது.

தனது தோட்டத்தில் உள்ள ஒரு வெறிச்சோடிய கிணற்றில் இரண்டு காட்டுப்பன்றிகள் விழுந்து இறந்து விட்டதாகவும், அது துர்நாற்றம் வீசுவதாகவும் கூறியதற்காக முறைப்பாட்டாளரான ஆசிரியை திட்டிய பின்னர், குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியை இந்த தாக்குதலை நடத்தியதாகவும் நீதிமன்ற விசாரணையின் போது தெரியவந்தது.

வயல் பகுதியில் இருந்து ஆணின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

வயல் பகுதியில் இருந்து ஆணின் சடலம் மீட்பு

வயல் பகுதியில் இருந்து ஆணின் சடலம் மீட்பு

வயல் பகுதியில் இருந்து ஆணின் சடலம் மீட்பு ,மட்டக்களப்பு , எருவில் கிராமத்தில் உள்ள மாலை வயல் பகுதியில் இருந்து சனிக்கிழமை (26) அன்று ஆண் ஒருவர் சடலமாக மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் எருவில் கிராமத்தை சேர்ந்த 44 வயதுடைய இரத்தினசிங்கம் உத்தமன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அப்பகுதியில் அமைந்துள்ள அவரது வயலுக்குள் வேளாண்மையை பார்ப்பதற்காக துவிச்சக்கர வண்டியில் சென்றுள்ளதுடன் துவிச்சக்கர வண்டியை குளக்கட்டில் வைத்துவிட்டு வயலுக்குள் இறங்கி தனது

வேளாண்மைச் செய்கையை பார்வையிட்ட நிலையில் அவருக்கு ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பாக களுவாஞ்சிகுடி பொலிஸார் விசாரணைகள் முன்னெடுத்துள்ள நிலையில் திடீர் மரண விசாரணை அதிகாரி

வி.ஆர்.மகேந்திரன், சடலத்தை பார்வையிட்டு வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லுமாறு உத்தரவிட்டுள்ளார்.

மருத்துவ அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

A/L சித்தியடையாத மாணவர்களுக்காக புதிய திட்டம்
Posted in இலங்கை செய்திகள்

A/L சித்தியடையாத மாணவர்களுக்காக புதிய திட்டம்

A/L சித்தியடையாத மாணவர்களுக்காக புதிய திட்டம்

A/L சித்தியடையாத மாணவர்களுக்காக புதிய திட்டம் உயர்தரப் பரீட்சையில் சித்தியடையாத மாணவர்கள் இரண்டாவது மற்றும் மூன்றாவது முறையாக பரீட்சை எழுதத் தயாராகி வருவதாகவும், சில மாணவர்களுக்கு அடுத்து என்ன

செய்வது என்பது குறித்து எந்த நோக்கமும் இல்லை என்றாலும், தற்போதைய அரசாங்கத்தின் புதிய திட்டத்தின் கீழ் அனைத்து மாணவர்களுக்கும்

முறையான வழிகாட்டுதலுடன் கூடிய ஒரு திட்டம் 2026 இல் ஆரம்பிக்கப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

அம்பாந்தோட்டை மாவட்டத்தின் சூரியவெவ, ஹூங்கம மற்றும் தங்காலை பகுதிகளில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் எழுபத்தைந்து ஆண்டுகளாக ஊழல் மற்றும் குற்றங்களுக்கு இருந்த அரசியல் பாதுகாப்பை தற்போதைய அரசாங்கம் நீக்கியுள்ளதாக கூறிய பிரதமர் அந்த மக்கள் விரோத ஊழல் மற்றும் குற்றங்களுக்கு பாதுகாப்பு

இல்லாததால், பயந்து குழப்பமடைந்த அரச மற்றும் பாதுகாப்பு சேவையில் உள்ளவர்கள், அரசியல் ஆசீர்வாதத்துடன் இவை அனைத்தையும் தொடர்ந்ததாகவும் கூறினார்.

ஆணைக்குழுவுக்கு வந்தார் ரணில்
Posted in இலங்கை செய்திகள்

ஆணைக்குழுவுக்கு வந்தார் ரணில்

ஆணைக்குழுவுக்கு வந்தார் ரணில்

ஆணைக்குழுவுக்கு வந்தார் ரணில் ,பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க மீது அளித்த வாக்குமூலம் தொடர்பாக மணிக்கு இலஞ்சம் அல்லது

ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சற்றுமுன்னர் ஆஜரானார்.

பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ஊழல் வழக்கு தொடர்பாக அவர் அளித்த வாக்குமூலம் தொடர்பாக, ஏப்ரல் 17ஆம் திகதி இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய

சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுற்கு ரணில் விக்ரமசிங்க முதலில் அழைக்கப்பட்டார்.

முந்தைய சம்மனுக்கு பதிலளிக்கும் விதமாக, ரணில் விக்ரமசிங்க, ஆணையத்தில் ஆஜராகத் தயாராக இருப்பதாகவும், புத்தாண்டு விடுமுறை காலத்தில் தனது வழக்கறிஞர்கள் கொழும்பில் இருக்க மாட்டார்கள் என்பதால்

வேறு திகதியைக் கோருவதாகவும் குறிப்பிட்டிருந்தார். அதனடிப்படையில், இன்று (28) அவருக்கு தினம் வழங்கப்பட்டிருந்தது. அதனடிப்படி ரணில் விக்கிரமசிங்க ஆஜரானார்.