Posted in இலங்கை செய்திகள்

நீர்கொழும்பில் போதைப் பொருட்களுடன் ஒருவர் கைது

நீர்கொழும்பில் போதைப் பொருட்களுடன் ஒருவர் கைது

நீர்கொழும்பில் போதைப் பொருட்களுடன் ஒருவர் கைது பெரியமுல்ல – ஏத்துகல ரயில் கடவைக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான வாகனத்தை

​​போதைப்பொருள் புதையலை

A L தேர்வுகளுக்கான திருத்தப்பட்ட அட்டவணை
A L தேர்வுகளுக்கான திருத்தப்பட்ட அட்டவணைA L தேர்வுகளுக்கான திருத்தப்பட்ட அட்டவணை

சோதனை செய்தபோது, ​​போதைப்பொருள் புதையலை போலீசார் கண்டுபிடித்ததை அடுத்து, நீர்கொழும்பைச் சேர்ந்த 32 வயது நபர் கைது செய்யப்பட்டார்.

நீர்கொழும்பு பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் நேற்று (09) அதிகாலை வழக்கமான குற்றத்

தடுப்பு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ​​இந்தக் கைது மேற்கொள்ளப்பட்டது.

முதற்கட்ட வாகனச் சோதனை

முதற்கட்ட வாகனச் சோதனையில் சந்தேக நபரிடம் இருந்து 10 கிராம் கஞ்சா, ஒரு கிராம் கோகைன் மற்றும் 100 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் தங்கியிருந்த இடத்தில் மேலும் விசாரணைகள் நடத்தப்பட்டன, அங்கு அதிகாரிகள் கூடுதலாக 29.24 கிராம் குஷ் கஞ்சாவையும் 2.23 கிராம்

அடையாளம் தெரியாத போதைப் பொருளையும் மீட்டனர். விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

கொழும்பில் போக்குவரத்து போதைக்கு அடிமை
Posted in இலங்கை செய்திகள்

கொழும்பில் போக்குவரத்து போதைக்கு அடிமை

கொழும்பில் போக்குவரத்து போதைக்கு அடிமை

கொழும்பில் போக்குவரத்து போதைக்கு அடிமை கொழும்பில் போக்குவரத்து குற்றங்களுக்காக பிடிபடும் 43% ஓட்டுநர்கள் ICE போதைக்கு அடிமையாகியுள்ளனர்.

கொழும்பில் போக்குவரத்து

கொழும்பில் போக்குவரத்து குற்றங்களைச் செய்து பிடிபடும் 43% ஓட்டுநர்கள் ICE போதைக்கு அடிமையாகி இருப்பதாக ஒரு ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது

என்று அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஓட்டுநர்கள் கஞ்சா

கொழும்பில் 25% ஓட்டுநர்கள் கஞ்சாவுக்கு (கஞ்சா) அடிமையாகி இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீரராச்சி மேலும் தெரிவித்தார்.

370மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருட்களை பறிமுதல்
Posted in இலங்கை செய்திகள்

370மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருட்களை பறிமுதல்

370மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருட்களை பறிமுதல்

370மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருட்களை பறிமுதல் 2025 ஆம் ஆண்டில் கடலோர காவல்படை ரூ. 370 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருட்களை பறிமுதல் செய்தது.

இலங்கை கடலோர காவல்படை

இலங்கை கடலோர காவல்படை (SLCG), பிற சட்ட அமலாக்க நிறுவனங்களின் உதவியுடன், 2025 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள்

எதிர்ப்பு நடவடிக்கைகளின் போது ரூ. 370 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள சட்டவிரோத போதைப்பொருட்களை

பறிமுதல் செய்துள்ளது மற்றும் 71 சந்தேக நபர்களை கைது செய்துள்ளது.

தொடர்ச்சியான புலனாய்வுப் பகிர்வு மற்றும் கூட்டு அமலாக்க நடவடிக்கை மூலம் இலங்கை கடற்படை, இலங்கை காவல்துறை, காவல்துறை

போதைப்பொருள் தடுப்புப் பிரிவு, மாநில புலனாய்வுப் பிரிவு மற்றும் காவல்துறை சிறப்புப் பணிக்குழு ஆகியவற்றுடன் நெருக்கமான ஒருங்கிணைப்பில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன் விளைவாக, 5 கிலோகிராமுக்கு மேல் ஐஸ் (படிக மெத்தம்பேட்டமைன்), 710 கிலோகிராமுக்கு மேல் கேரள கஞ்சா, 205 கிலோகிராமுக்கு மேல்

உள்ளூரில் வளர்க்கப்படும் கஞ்சா

உள்ளூரில் வளர்க்கப்படும் கஞ்சா, 2 கிலோகிராமுக்கு மேல் ஹாஷிஷ், 970 ப்ரீகபலின் காப்ஸ்யூல்கள், 5,054 மதன மோடக மாத்திரைகள், 2,933 வெளிநாட்டு

சிகரெட்டுகள் மற்றும் 9,800 கிலோகிராமுக்கு மேல் கெண்டு இலைகள் உள்ளிட்ட கணிசமான அளவு சட்டவிரோத பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், கடல் வழியாக சட்டவிரோதமாக நாட்டிற்கு கடத்தப்பட்ட 60,794 விவசாய இரசாயனப் பொட்டலங்கள் மற்றும் பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த நடவடிக்கைகளின் போது, ​​கடத்தல் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்ட 19 உள்ளூர் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்தக் குற்றங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட 71 சந்தேக நபர்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

போதை கடைபக்கதில அருளினி பாடல்
Posted in பாடல்கள்

போதை கடைபக்கதில அருளினி பாடல்

போதை கடைபக்கதில அருளினி பாடல்

போதை கடைபக்கதில அருளினி பாடல் ,போதை கடை பக்கதில அருளினி அவர்கள் எழுதிய பாடல் பாடியவர் =- பாவேந்தன்
இசை – இளங்கோ செல்லப்பா


பாடல்வரிகள் – அருளினி லண்டன்
வெளியீடு – எதிரி இணையம்

வன்னிமைந்தன் எதிரி இணையம் என்பன இணைந்து உருவாக்கும் 100 பாடல் உருவாக்கத்தில் அட்டகாசமான நிகழ்காலத்தை பறை சாற்றும் பாடலாகவும் ,போதையில் உலவுகிறவர்களுக்கு சாட்டை அடியாக ,இந்த போதை கடை பக்கதில பாடல் வெளிவந்துள்ளது குறிப்பிட தக்கது.

அருளினி அவர்களுக்கு எமது வாழ்த்துக்கள் ,மற்றும் பாடல் ஆசிரியர்களை தொடராக அறிமுகம் செய்து வைக்க உதவிடும் இசை அமைப்பாளர் இளங்கோ செல்லப்பா மற்றும் பாடகர் பாவேந்தன் ஆகியோருக்கும் எமது பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறோம் .

பாடியவர் =- பாவேந்தன்
இசை – இளங்கோ செல்லப்பா
பாடல்வரிகள் – அருளினி லண்டன்
வெளியீடு – எதிரி இணையம்

இதில் அழுத்தி காணொளி பார்க்க

போதையில் நபரொருவர் தற்கொலை
Posted in இலங்கை செய்திகள்

போதையில் நபரொருவர் தற்கொலை

போதையில் நபரொருவர் தற்கொலை

போதையில் நபரொருவர் தற்கொலை ,யாழ்ப்பாணம், கொட்டடி பகுதியைச் சேர்ந்த பற்றிக்கிளே ஜோபாஸ் (வயது 48) என்பவர், நேற்று (25) இரவு அளவுக்கு அதிகமாக மதுபானம் அருந்தி, தவறான முடிவெடுத்து தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் நேற்றிரவு மதுபானம் அருந்திவிட்டு வீட்டுக்கு வந்து உணவு உண்ட பின்னர் உறங்கியுள்ளார்.

தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு

இந்நிலையில், அதிகாலை 4:15 மணியளவில் அவர் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

உடனடியாக அவரை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் உறுதிப்படுத்தினர்.

திடீர் மரண விசாரணை அதிகாரி

சடலத்தின் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

அளவுக்கு அதிகமாக மதுபானம் அருந்தியதால் தன்நிலை மறந்து இவர் உயிரை மாய்த்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

சாரதிகளுக்கு இலங்கை எடுத்த அதிரடி நடவடிக்கையா
Posted in இலங்கை செய்திகள்

சாரதிகளுக்கு இலங்கை அதிரடி நடவடிக்கை எடுத்ததா

சாரதிகளுக்கு இலங்கை அதிரடி நடவடிக்கை எடுத்ததா

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களுக்கு 5 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்படும் என சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.

இது தொடர்பில் ​​விசாரணைகளை மேற்கொண்ட போக்குவரத்து பிரதி பொலிஸ் கண்காணிப்பாளர் இந்திகா ஹபுகோட, இந்த செய்தி முற்றிலும் தவறானது எனத் தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற தவறான செய்தி விளம்பரங்களை உருவாக்குபவர்கள் பதிவிடுபவர்கள் மீது சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தி தவறானது என்று இலங்கை பொலிஸார் உத்தியோகபூர்வ பக்கத்திலும் ஒரு குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இருப்பினும், பது போதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு ஏன் அபராதம் விதிக்கக் கூடாது என மக்கள் மத்தியில் விசனம் ஏற்பட்டுள்ளது.

நாட்டில் தினந்தோறும் அதிகரித்துவரும் வீதி விபத்துக்கள் பெரும்பாலனவை மதுபோதையில் வாகனம் ஓட்டும் சாரதிகளால் ஏற்படுவதாக அறிக்கைகள் தெரிவித்த போதிலும் அதற்கான நடவடிக்கையை அரசாங்கம் எடுத்துள்ளதா?

மது போதையில் வாகனம் ஓட்டுவது என்பது ஒரு பொறுப்பற்ற செயலாகும். இது ஓட்டுனரின் விழிப்புணர்வைக் குறைத்து, பாதையைப் புரியாமல் தவறாக திருப்புவதற்கும், வேகக் கட்டுப்பாட்டை இழப்பதற்கும் வழிவகுக்கும்.

இதன் காரணமாக ஆபத்தான சாலை விபத்துகள், உயிரிழப்புகள், சிக்கல்கள் மற்றும் சட்ட நடவடிக்கைகள் ஏற்படுகின்றன. இப்படிப்பட்ட செயல்கள் மற்ற உயிர்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் ஒரு சமூக குற்றமாகவும் கருதப்படுகின்றன.

இதற்கான தீர்வாக, ஓட்டுநர்கள் மது அருந்திய நிலையில் வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும். அவசியமாயின், மாற்று ஓட்டுநரை தேர்ந்தெடுக்க வேண்டும் அல்லது பொது போக்குவரத்து சேவைகளை பயன்படுத்த வேண்டும்.

விழிப்புணர்வு முக்கியம் என்பதால், அரசு மற்றும் சமூக அமைப்புகள் விழிப்புணர்வு முகாம்களை ஏற்பாடு செய்து, இளைஞர்கள் மத்தியில் பாதுகாப்பான ஓட்டுமுறை பற்றிய அறிவை ஏற்படுத்த வேண்டும்.

இதுதான் சாலைகளில் உயிரைக் காக்கும் சிறந்த வழி.

ஆனாலும் அபராதம் விதிக்கப்படும் என்ற செய்தியைக் கூட அரசு எதிர்த்துள்ளமை யோசிக்கவே வைக்கின்றது.

நாடு முழுவதும் விஷேட சுற்றிவளைப்பு
Posted in இலங்கை செய்திகள்

நாடு முழுவதும் விஷேட சுற்றிவளைப்பு

நாடு முழுவதும் விஷேட சுற்றிவளைப்பு

இலங்கை நாடுமுழுவதும் விஷேட சுற்றிவளைப்பு மேற்கொண்டு பொலிஸார் சோதனை நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் நேற்று வெள்ளிக்கிழமை (23) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது

போதைப்பொருட்களுடன் 475 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, ஹெரோயின் போதைப்பொருளுடன் 178 பேரும், ஐஸ் போதைப்பொருளுடன் 131 பேரும், கஞ்சா போதைப்பொருளுடன் 158 பேரும்,

மதனமோதக போதைப்பொருளுடன் 03 பேரும், கஞ்சா செடிகளுடன் 05 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 208 கிராம் 870 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 289 கிராம் 962 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும்,

01 கிலோ 118 கிராம் 761 மில்லிகிராம் கஞ்சா போதைப்பொருளும், 26 கிராம் 400 மில்லிகிராம் மதனமோதக போதைப்பொருளும், 9072 கஞ்சா செடிகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

சுற்றிவளைப்பின்போது கைதானோர் எந்தெந்த மாவட்டத்தின் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பது பொலிஸார் இதுவரையில் வெளியிடவில்லை.

ஆனாலும் குறைவானவர்களையே கைது செய்திருக்கின்றார்களோ என எண்ணத்தோன்றுகின்றது,. ஏனெனில் நாடு முழுவதும் கஞ்சா பாவனையில் இருக்கும்போது,

கைதானவர்களின் எண்ணிக்கையும் கைதான போதைப்பொருட்களின் அளவுகளும் குறைவாகவே காணப்படுகின்றது.

மீண்டும், தொடர்ந்தும் இவ்வாறான சுற்றிவளைப்புக்களின் மூலமும் திடீர் சோதனைகளின் மூலமும் போதையை ஓரளவேனும் கட்டுக்குள் கொண்டு வரலாமோ என எண்ணத் தோன்றுகின்றது.

பொறுத்திருந்து பார்க்கலாம் அனுர அரசு இந்த போதையை இல்லாதொழிக்க என்ன என்ன எல்லாம் செய்யப்போகின்றார்கள் என

போதையில் பேருந்து ஓட்டிய சாரதிகைது
Posted in இலங்கை செய்திகள்

போதையில் பேருந்து ஓட்டிய சாரதிகைது

போதையில் பேருந்து ஓட்டிய சாரதிகைது

போதையில் பேருந்து ஓட்டிய சாரதிகைது போதையில் பேருந்து ஓட்டிய சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறையினர் தெரிவித்து வருகின்றனர்.

மது போதையில் காணப்பட்ட பேரூந்து சாரதி

கைது செய்யப்படுகின்ற பொழுது .16 மாணவர்களை ஏற்றி சென்று கொண்டிருந்த பொழுது. அவர் அதிக போதையில் காணப்பட்டதாக வீதி போக்குவரத்து போலீசார் தெரிவிக்கின்றனர்.

இலங்கையில் வாகனச் சாரதிகள் அதிகமான போதையில் வாகனங்களை செலுத்துவான் அதிகமான விபத்துக்கள் இடம்பெற்று வருகிறது.

கடந்த ஐந்து மாதத்தில் 1007க்கும் மேற்பட்டவர்கள் வீதி விபத்தில் பலியாகியுள்ளார்கள்.

அவ்வாறு நோக்கின் 200 பேர் மாதந்தோறும் வீதி விபத்தில் இறந்த வண்ணம் இருக்கின்றனர் .

வீதிக்கு வீதி வீதி போலீசார் வீதி சோதனையில் ஈடுபடுகின்ற பொழுதும் இவ்வாறு மது போதையில் வாகனத்தை செலுத்துவர்களை கைது செய்ய முடியவில்லை.

இதனால் அப்பாவி மக்கள் உயிர்கள் பலியாகி வருகிறது.

52 வயதுடைய நபரை போதையில் பேருந்தை செலுத்தி சென்றுள்ளார்.

எனினும் கைதானவர் போலீசார் திடீரென வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட பொழுது அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

காவல்துறையினர் துரிதமாக செயல்பட்ட காரணத்தினால் 16 அப்பாவி மாணவர்கள் காப்பாற்ற பட்டுள்ளதாக இலங்கைச் செய்திகள் தெரிவிக்கின்றன .

சாரதிகள் பொறுப்புணர்வற்றி செயல்படுவதும், மக்கள் உயிர்களுக்கு பாதுகாப்பு அளிக்க மறுக்கின்ற செயலுமே ,இவ்விதமான செயல்பாடு காரணமாகிறது .

என்பதை இந்த கைது நடவடிக்கையும் போதையில் பேருந்தை ஓட்டிய சாரதி நிலைப்பாடு தெளிவுபடுத்தியுள்ளது .

போதை ஊசி வாலிபன் பலி
Posted in இலங்கை செய்திகள்

போதை ஊசி வாலிபன் பலி

போதை ஊசி வாலிபன் பலி

போதை ஊசி வாலிபன் பலி யாழ்ப்பாணம் சாவகச்சேரி நடந்த பரிதாப சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது .

யாழ்ப்பாணத்தில் ஹீரோயின் போதைப் பொருளை ஊசி மூலம் உட்செலுத்திய 27 வயதுடைய வாலிபன் ஒருவர், கடந்த தினம் பலியாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த நபர் 15ம் தேதி காணாமல் போன நிலையில் ,உறவினர்கள் அவரைத் தேடிய பொழுது ,அவர் ஊருக்கு அருகிலிருந்து சுடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்திய போது , போதை வஸ்து ஊசி மூலம் ஏற்படுத்தப்பட்டதை கண்டறிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் வாலிபங்கள் மத்தியில் போதவஸ்து , அதிக பாவனையும் , அதனால் அவர்கள் வாழ்வைச் சீரழித்து, அவன் உயிரைப் பறிக்கின்ற இழிநிலை நடவடிக்கை தொடர்கிறது.

சிங்கள மேலாதிக்க பௌத்த அடக்குமுறை யாழர்களினால் ,தமிழர் சிந்தனை தடுக்கப்பட்டு ,அவர்கள் சிந்தனை திசை திருப்பப்படும் ,நடவடிக்கை ஒன்றாக இந்த போதை வஸ்து பாவனை காணப்படுகிறது.

பாடசாலைகள் முதல் வர்த்தகங்கள் அனைத்து பகுதிகளிலும். இந்த போதை வஸ்து திருட்டுத்தனமாக விற்பனை செய்யப்படுகிறது.

இதனை விற்பனை செய்பவர் .ஆளுகின்ற அரசியல்வாதிகள் தான் என்பது மக்கள் அறிந்ததே.

இவ்வாறு போதைகளை பயன்படுத்தி வாலிபங்களை .திசை திருப்பி படுகொலை செய்வது என்பதே , இதுவும் ஒரு இனப்படுகொலை தான் என்பதை மக்கள் மறந்து விடக்கூடாது.

போதை வஸ்துக்கு எதிராக மக்கள் விழித்து எழாத வரைக்கும் ,அதனை மக்கள் எதிர்கொள்ளாத வரைக்கும், இவ்வாறான இளம் இறப்புகளை தடுக்க முடியாது .மக்கள் சீரழிவுகளை தடுக்க முடியாது என்பதே நியமாகிறது .

பேஸ்புக் மூலம் போதை பார்ட்டி 43 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

பேஸ்புக் மூலம் போதை பார்ட்டி 43 பேர் கைது

பேஸ்புக் மூலம் போதை பார்ட்டி 43 பேர் கைது

பேஸ்புக் மூலம் போதை பார்ட்டி 43 பேர் கைது ,நீர்கொழும்பு கடற்கரையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஹெரோயின், கஞ்சா மற்றும் சட்டவிரோத சிகரெட்களுடன் வெவ்வேறு பகுதிகளில் வசிக்கும் 43 பேர் கைது

செய்யப்பட்டுள்ளதாக கலால் திணைக்களத்தின் மேல் மாகாண உதவி ஆணையாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கலால் திணைக்களத்தினால் அமுல்படுத்தப்படும் நூறு நாள் வேலைத்திட்டத்தின் கீழ் குறித்த சுற்றிவளைப்பு செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் 19 முதல் 35 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்றும் அவர்களில் தனியார் பல்கலைக்கழக மாணவர்கள், வர்த்தகர்கள் மற்றும் பல்வேறு தொழில் செய்பவர்களும் அடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தக் குழுவில் 10 இளம் பெண்களும் 33 இளைஞர்களும் இருந்துள்ளனர்.

முகநூல் ஊடாக தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு வந்துள்ள இவர்கள் தங்காலை, மாரவில, கிரிந்திவெல, ஹிகுராக்கொட, பூகொட, நீர்கொழும்பு, ஜாஎல, திகன, ஹொரண ஆகிய பிரதேசங்களில் வசிப்பவர்கள் என தெரியவந்துள்ளது

போதைப் பொருள் வைத்திருந்த காவல்துறை அதிகாரி இடை நீக்கம்
Posted in இலங்கை செய்திகள்

போதைப் பொருள் வைத்திருந்த காவல்துறை அதிகாரி இடை நீக்கம்

போதைப் பொருள் வைத்திருந்த காவல்துறை அதிகாரி இடை நீக்கம்

போதைப் பொருள் வைத்திருந்த காவல்துறை அதிகாரி இடை நீக்கம் ,வெளிக்கடை சிறைச்சாலையில் பணிபுரிகின்ற காவல்துறை அதிகாரி ஒருவர்

போதை பொருளை வைத்திருந்தார் இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டு நடத்தப்பட்ட விசாரணை பின்னர் அவர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் அதிகரித்து வரும்போது பின்னணியில் இலங்கை உடைய போலீசார் ஈடுபட்டுள்ளது அதற்கு அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் துணைபுரிந்து வருவதும் தற்பொழுது வெளியாகி வரும் இந்த செய்திகளுடன் அம்பலப்பட்டுள்ளது

காரில் பயணித்தவருக்கு அவரது காரில் கஞ்சாவை வெட்கம் என்ற போலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டு பின்னர் அவர்கள் பணிகளை நீக்கம் செய்யப்பட்டிருந்தனர்

அதன் பின்னர் தற்பொழுது வெளிக்கடை சிறைச்சாலையில் போதைத்துடன் காணப்பட்ட நிலையில் இந்த அதிகாரி கைது செய்யப்பட்டு தற்போது பணிவிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்

சமூகத்தை சீருடைக்கும் நடவடிக்கையில் அதிக உச்ச வியாபாரத்தில் ஈடுபட்டு இருக்கும் இந்த போதை வைத்து விற்பனை மற்றும் கஞ்சா போன்றவைகள் குற்ற சமூகமாக இலங்கையினுடைய இளையவர்களை மாற்றி வருகின்ற நிலையில் தற்போது இவர்கள் சிக்கி இருக்கின்றனர்

இந்த நிலை தொடர்ந்து சென்றால் பல்வேறுபட்ட இன்னல்களையும் நெருக்கடிகளையும் அவர்கள் சந்திக்க நேரிடும் என்பதாக தெரியவந்துள்ளது

போதைப்பொருளுடன் ஒருவர் கைது
Posted in இலங்கை செய்திகள்

போதைப்பொருளுடன் ஒருவர் கைது

போதைப்பொருளுடன் ஒருவர் கைது

போதைப்பொருளுடன் ஒருவர் கைது ,2 கோடி ரூபாவுக்கும் அதிமான பெறுமதி கொண்ட குஷ் போதைப்பொருளை இலங்கைக்கு கொண்டு வர முயற்சித்த நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலைய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தாய்லாந்தின் பெங்கொக் நகரில் இருந்து இலங்கை வந்துள்ள நிலையில், அவரது பயணப்பையில் சூட்சுமமாக பொதி செய்யப்பட்டிருந்த 5 கிலோ 278 கிராம் குஷ் போதைப்பொருளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

சந்தேக நபர் ஹோமாகம பிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடையவர் என்பதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை இன்று போதைவஸ்து சந்தையாக மற்றம் .

பெற்றுள்ளது ராஜபக்ச ஆட்சிகாலத்தில் போதைவஸ்து மிக அதிகமாக இலங்கையில் பாவனைக்கு உள்ளாக்க பட்டது .

அதன் நீட்சியாகவே இன்று இலங்கை எங்கும் குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்ற்னர் .

அரசியல்வாதிகள் போதை வஸ்து வியாபாரிகளாகவும் மாற்றம் பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது .

Featured

Loading...
மகள் மருமகனை கொன்று ஆற்றில் வீசிய தந்தை
Posted in இலங்கை செய்திகள்

போதையில் வந்த கணவனுக்கு மரண தண்டனை வழங்கிய மனைவி

போதையில் வந்த கணவனுக்கு மரண தண்டனை வழங்கிய மனைவி

மாத்தறை வெலிகம பிரதேசத்தில் மதுபோதையில் வீட்டிற்கு வந்த கணவர், தனது மனைவியால் தாக்கப்பட்டு உயிரிழந்த மற்றுமொரு சம்பவம் பதிவாகியுள்ளது.

42 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

மாத்தறை, வெலிகம, கொஸ்கஹஹேன பிரதேசத்தில் வசிக்கும் இவர், நேற்று இரவு மது போதையில் தனது வீட்டிற்கு வந்துள்ளார்.

குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர், அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியை தாக்கியதால் வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இவர் நேற்று இரவு குடிபோதையில் வந்து மனைவியை தாக்க முயன்றார்.

இதன்போது மனைவி அயலவர்கள் சிலருடன் இணைந்து சேர்ந்து வீட்டின் முன் உள்ள மின்கம்பத்தில் கணவனை கட்டிப்போட்டுள்ளார்.

பின்னர், அவரது மனைவி உள்ளிட்டவர்கள் அவரைத் தாக்கியுள்ளனர்.

தாக்குதலில் மயக்கமடைந்த அவர், வெலிகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கட்டப்பட்ட கயிற்றில் கழுத்து இறுகி இந்த மரணம் ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் உயிரிழந்தவரின் மனைவியை வெலிகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரைகள் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரைகள் மீட்பு

யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரைகள் மீட்பு

யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரைகளை விற்பனை செய்யும் நோக்குடன் உடைமையில் வைத்திருந்த ஒருவர் பொலிஸாரினால் நேற்று (31) கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவரிடமிருந்து இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ். மாநகர எல்லையில் வைத்து 26 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார் என பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் மாவட்ட குற்றதடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமை பொலிஸ் பரிசோதகர் பிறேமதிலக தலைமையிலான குழுவினர் கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

போதையில் வீதியில் உருளும் இந்தியா பொலிஸ்
Posted in உலக செய்திகள்

போதையில் வீதியில் உருளும் இந்தியா பொலிஸ்

போதையில் வீதியில் உருளும் இந்தியா பொலிஸ்

போதையில் வீதியில் உருளும் இந்தியா பொலிஸ் சிப்பாய் ஒருவர் நிலை தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது .

அதிக போதையில் வீதியில் உருண்டு உருண்டு குத்துகாரணம் அடித்த படி நடக்கிறார் நம்ம மன்மத குஞ்சு .

மக்களை காக்கும் காவல்துறையின் பொழைப்பு இப்படி தான் உள்ளது .

இந்த சம்பவம் உபியில் இடம்பெற்றுள்ளது .

சட்டம் ஒழுங்கை காப்பற்ற வேண்டிய காவல்துறை ,சாராயத்தில் குளித்து வீதியை கூட்டி செல்லும் கேவலம் .

இந்தியா வல்லரசு ஆனது எப்படி என்பது இப்பொழுது புரிகிறதா மக்களே .

வீடியோ

கஞ்சா தேசமாகும் இலங்கை எதிரியாகும் போதை
Posted in இலங்கை செய்திகள்

கஞ்சா தேசமாகும் இலங்கை எதிரியாகும் போதை

கஞ்சா தேசமாகும் இலங்கை எதிரியாகும் போதை

கஞ்சா தேசமாகும் இலங்கை எதிரியாகும் போதை இலங்கை இன்று கஞ்சா தேசமாக மாற்றம் .

இலங்கை மக்களுக்கு எதிரியாகும் போதை பாவனை அதிகரிப்பும் அதனால் எழும் குற்ற செயல்களும் காணப்படுகின்றன

கைது எதிரொலி

இந்த வருடம் 123. 000 பேர் கைது எதிரொலி ,இலங்கை கஞ்சா தேசமாக மாற்றம் பெற்றுள்ளதை காண்பிக்கிறது .

இதே கஞ்சா பாவனையை அதிகரித்து ,எதிரியானவன் தமிழருக்க்குள் போராடும் திறனை மழுங்கடித்து ,புதிய கலாச்சாரத்தை உருவாக்கி அதன் ஊடாக ,திருட்டு சமூகமாக அல்லது குற்றவியல் சமுகமாக தமிழர் தேசத்தை மாற்றி செல்கிறது .

எதிரிகளின் சூழ்ச்சியில் தமிழர் தேசம்

எதிரிகளின் இந்த சூழ்ச்சியில் இருந்து தமிழர் தேசம் மீண்டெழுந்து சென்றிட என்ன வழி என்பதே கேள்வியாக உள்ளது .

எதிர் வரும் எதிரிகள் சூழ்ச்சிகளை இனம் கண்டு தமிழர்கள் பயணிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது .

தமிழருக்கு எதிரியாகும் இந்த கஞ்சா ,போதைவஸ்தை அடியோடு அழிக்க மீளவும் புலிகள் தேவை படுகின்றனர் என தமிழ் மக்கள் பேசி கொள்கின்றனர் .

போதையில் மோதல் ஒருவர் மரணம்
Posted in இலங்கை செய்திகள்

போதையில் மோதல் ஒருவர் மரணம்

போதையில் மோதல் ஒருவர் மரணம்

ஜா எல உதம்விட்ட பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் 34 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஜா எல பொலிஸார் தெரிவித்தனர்.

ஜாஎல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட துன்பலிய குருசாவல வீதியைச் சேர்ந்த தனுக சம்பத் சில்வா (வயது 34) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவத்துடன் தொடர்புடைய இரு குழுவினரும் விடுதி ஒன்றில் மது அருந்திக் கொண்டிருந்த போது ஏற்பட்ட தகராறில் குறித்த நபர் கடுமையான

போதையில் மோதல் ஒருவர் மரணம்

தாக்குதலுக்குள்ளாகி ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக ராகம போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம்

தொடர்பில் ஜா எல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வீடியோ

வாகனத் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

பொலிஸாருடன் முறுகல் கைதான பெண் விளக்கமறியலில்

பொலிஸாருடன் முறுகல் கைதான பெண் விளக்கமறியலில்

மதுபோதையில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற இரு இளைஞர்களை அம்பலாங்கொடை பொலிஸார் அண்மையில் கைது செய்திருந்தனர்.

இதன்போது அங்கு பெண் ஒருவர் பொலிஸ் அதிகாரிகளின் பணிக்கு இடையூறு விளைவித்த சம்பவம் பதிவாகியுள்ளது.

பின்னர், குறித்த பெண்ணும் குறித்த இரு இளைஞர்களும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு இம்மாதம் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர்,

“19ஆம் திகதி நள்ளிரவில் அம்பலாங்கொடை பொலிஸ் நிலையம் இரண்டு பேரை கைது செய்தது. அவர்கள் மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளனர். அவர்கள் மதுபோதையில் வாகனம் செலுத்தினார்கள் என பொலிஸ் நிலையத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.”

பொலிஸாருடன் முறுகல் கைதான பெண் விளக்கமறியலில்

“இருவரும் மதுபோதையில் இருந்ததால், பொலிஸ் அதிகாரிகளால் சம்பவத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. கைது செய்யப்பட்டவர்கள் அம்பலாங்கொடையைச் சேர்ந்த 27 மற்றும் 25 வயதுடைய இரு இளைஞர்கள் ஆகும்.

கைது செய்யப்பட்டதைக் கண்டித்து காவல்நிலையத்துக்கு வந்த ஒரு பெண், பொலிஸ் அதிகாரிகளை மிக மோசமான வார்த்தைகளாலும், கடுமையான வார்த்தைகளாலும் திட்டியுள்ளார்.

எனினும் அந்த பெண்ணை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றபோதும், அவர் செல்லவில்லை.

“இதையடுத்து, குறித்த பெண்ணை கைது செய்ய அம்பலாங்கொடை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பின்னரும், இந்த பெண் பொலிஸ் அதிகாரிகளுடன் சண்டையிட்டு அவர்களை துன்புறுத்தியுள்ளார், கடித்துள்ளார்.”

“ஒருவாறு பெண்ணைக் கட்டுப்படுத்தி, அவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அதன்படி, இம்மாதம் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.” என்றார்.

இலங்கை இராணுவத்தால் 335 மில்லியன் ரூபா போதைவஸ்து மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

கலால் அதிகாரிகள் இருவர் மீது தாக்குதல்

கலால் அதிகாரிகள் இருவர் மீது தாக்குதல்


போதைப்பொருள் சோதனையில் ஈடுபட்ட கலால் அதிகாரிகள் இருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்த அதிகாரி ஒருவர் நேற்று (31) பிற்பகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மத்துகம பொலிஸார் தெரிவித்தனர்.

மாலபே பகுதியில் கடமையாற்றும் 2 கலால் அதிகாரிகள் தாக்கப்பட்டுள்ளதாகவும், வெட்டுக்காயங்களுக்கு உள்ளான உத்தியோகத்தர் ஒருவர் களுத்துறை போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கலால் அதிகாரிகள் இருவர் மீது தாக்குதல்

குறித்த உத்தியோகத்தர்களை மத்துகம, சிறிகடுல பிரதேசத்திற்கு அழைத்துச் சென்ற சந்தேகநபர்கள் உத்தியோகத்தர்களிடம் இருந்த பணத்தை அபகரிக்கச் சென்ற போது இரு குழுக்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அதன்படி, சந்தேகநபர்களை அடையாளம் கண்டு விசாரணை நடத்தி வருவதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்

யாழில் அதிகரிக்கும் போதை பொருள் - போதை பொருள் விற்ற பெண் கைது
Posted in இலங்கை செய்திகள்

மாணவர்களுக்கு போதைப்பொருள் – 55 பேர் கைது

மாணவர்களுக்கு போதைப்பொருள் – 55 பேர் கைது

மேல் மாகாணத்தில் 149 பாடசாலைகளை உள்ளடக்கிய போதைப்பொருள் நடவடிக்கைகளில் ஈடுபட்ட 55 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நேற்று (05) பிற்பகல் 1 மணி முதல் 3 மணி வரை மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையின் போது போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகளை விற்பனை செய்த குற்றச்சாட்டில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது 9 கிராம் 980 மில்லி கிராம் ஐஸ், 16 கிராம் 420 மில்லி கிராம் ஹெரோயின், 2 கிராம் 833 மில்லி கிராம் கஞ்சா, 20 போதை மாத்திரைகள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளை உள்ளடக்கி இந்த போதைப்பொருள் சோதனைகள்
தொடரும் என மேல்மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

No posts found.