Tag: உப்பு
உப்புவிற்கச் சென்ற அமைச்சர் சந்திரசேகர்
உப்புவிற்கச் சென்ற அமைச்சர் சந்திரசேகர்
உப்புவிற்கச் சென்ற அமைச்சர் சந்திரசேகர் ,உப்பு விற்கச் சென்ற அமைச்சர் சந்திரசேகர் செயல்பாடுஆனையிறவு உப்புளத்தில் இடம்பெற்றுள்ளது.
ஆனையிறவு உப்பள கூட்டுத்தாபனம் மூலமும் செயற்பாட்டுக்கு ஆரம்பித்து செயல்பட்டு வருகிறது.
இங்கு உப்பு உற்பத்தி தொடர்பான விடயங்கள் தற்பொழுது பேசுபொருளாக்கப்பட்டு வருகிறது.
மீன்பிடி அமைச்சர் சந்திரசேகர்
மீன்பிடி அமைச்சராக விளங்கும் சந்திரசேகர் அங்கு சென்று அங்குள்ள நடவடிக்கை தொடர்பாக ஆராய்ந்து சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யட்டி விற்பனையை மறந்து தற்பொழுது உப்பு வியாபாரியாக மாறியிருக்கும் அமைச்சர் சந்திரசேகர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
தங்களுடைய பகுதிகளில் உப்பு 700 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுவதாக புதிய தகவல் வழியாக இருக்கிறது.
உப்பு தட்டு பாட்டில் இருந்து மக்களை பாதிப்பில் இருந்து காப்பாற்ற தவறிவரும் மீன்பிடி அமைச்சர் ,மீன்பிடிக்கவும் செல்வதில்லை, அதை விடுத்து இப்பொழுது உப்பு வியாபாரத்தில் உப்பு வியாபாரியாக மாற்றப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் சமீப காலங்களாக ஜட்டி வியாபாரத்தில் அமைச்சர் சந்திரசேகர்
யாழ்ப்பாணத்தில் சமீப காலங்களாக ஜட்டி வியாபாரத்தில் ஈடுபட்ட இவர் தற்பொழுது அதை நிறுத்திவிட்டு, இப்பொழுது உப்பு வியாபாரத்தில் ஒருவராக உப்பு வியாபாரிகள் தெரிவித்து வருகிறார்கள்.
உப்பு பற்றாக்குறை நெருக்கடியில் அரசு
உப்பு பற்றாக்குறை நெருக்கடியில்
உப்பு பற்றாக்குறை நெருக்கடியில் அரசு ,உப்பு பற்றாக்குறை நெருக்கடியில் அரசு சீக்கி திணறி வருகிறது.
மக்கள் அச்சம் காரணமாக உப்பினை அதிக அளவு கொள்வனவு செய்து பதுக்கி வருவதாகவும், அதனால் கடைகள், சந்தைகள் ,வணிக தளங்களில் உப்பு பயன்பாட்டில் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் பல்வேறு பகுதிகளில் உப்பு உற்பத்தி அதிகமாக இடம்பெற்று வருகிறது.
ஆனால் தற்காலத்தில் உப்புக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது மக்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது .
அரசியல்வாதிகளே தற்பொழுது உப்பினை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றன.
இவர்களே திட்டமிட்டு அதிகமான லாபத்தினை உப்பு உற்பத்தி பெற்று ,மக்களிடத்தில் அற விட்டு வருவதற்கான தந்திரபாய நடவடிக்கையின், ஒரு காரணமாக இது காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு கிலோ உப்பு 300 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்ற கேடுகெட்ட நிலை அனுரா ஆட்சியில் இடம்பெற்று வருகிறது.
அதனால் தற்பொழுது உப்பு உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய நிலையில் அரசு திணறியுள்ளது.
மக்களின் அச்சம் காரணமாகவே உப்பு தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், உப்புக்கு மக்கள் அஞ்சத் தேவையில்லை, இவை சிறந்த மலிவு விலையில் மக்களுக்கு கிடைக்கும் என ஆளுகின்ற அரசு தெரிவித்து வருகிறது .
- புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்

- புத்தாண்டில் இருவர் படுகொலை

- புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன

- புட்டால சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலி

- கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம் நாமல்

- 200க்கும் மேற்பட்ட ஈரானிய கடற்படை வீரர்கள் இலங்கையிலிருந்து புறப்பட்டனர்

- யாழில் சடலம் மீட்பு

- இன்று வரையறுக்கப்பட்ட பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள்

- புலிகள் ஆயுதக் கிடங்கில் வீழ்ந்த அனுரா

- பண்டிகைக் காலத்தில் சாலை விபத்து மரணங்கள்

- சூரிய மின்சக்தி பயனர்களுக்கு இன்று ஆப்பு

- சிங்களப் புத்தாண்டின் புனிதமான நாளாம்

உப்புக்கு மீண்டும் விலை ஏற்றம்
உப்புக்கு மீண்டும் விலை ஏற்றம்
உப்புக்கு மீண்டும் விலை ஏற்றம் சந்தையில் உப்புக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு தற்போது அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறக்குமதி செய்யப்பட்ட உப்பு கையிருப்பு நாட்டிற்குள் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் இந்த நிலைமை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சில இடங்களில், ஒரு கிலோகிராம் உப்பு பாக்கெட் சுமார் 450-500 ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும் கூறப்படுகின்றது.
எவ்வாறாயினும், இறக்குமதி செய்யப்பட்ட உப்பு இருப்பு சந்தையை அடைந்தவுடன் இந்த நிலைமை சரியாகிவிடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், இறக்குமதி செய்யப்பட்ட உப்பு வருவதில் தாமதம் ஏற்பட்ட எதிர்காலத்தில் ஒரு பாக்கெட் உப்பு விலை மேலும் அதிகரிக்கும் என்றும் வியாபாரிகள் கூறுகின்றனர்.
இதனிடையே, தற்போதைய உப்பு தட்டுப்பாடு காரணமாக உப்பு இருப்புக்களை மறைத்து வைப்பவர்கள் கைது செய்யப்பட்டு, உப்பு இருப்புக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
உப்புக்கு செயற்கையான பற்றாக்குறையை உருவாக்கி அதிக விலைக்கு விற்பனை செய்யும் மோசடி நடப்பதாக முறைப்பாடுகள் வந்துள்ளதாகவும் நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
ஏற்கனவே உப்பு இருப்புக்களை மறைத்து வைத்திருப்பவர்களையும், அதிக விலைக்கு உப்பை விற்பனை செய்பவர்களையும் கண்டுபிடிக்க நாடு முழுவதும் சோதனைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரசபை கூறுகிறது.
இதற்கிடையில், வர்த்தகர்கள் தங்கள் கடைசி உப்பு இருப்பை தற்போது விற்பனை செய்து வருவதாகவும், மேலும் உப்பு இருப்பு எப்போது கிடைக்கும் என்பதை உறுதியாகக் கூற முடியாது என்றும் கூறுகின்றனர்.
ஆனையிறவு உப்பு தொழிற்சாலை திறப்பு
ஆனையிறவு உப்பு தொழிற்சாலை திறப்பு
ஆனையிறவு உப்பு தொழிற்சாலை திறப்பு தேசிய உப்பு நிறுவனத்தின் தலைவர் கயான் வெல்லால கூறுகையில், இந்த தொழிற்சாலை ஒரு மணி நேரத்திற்கு 5 மெட்ரிக் தொன் உப்பை உற்பத்தி செய்கிறது என்றார்.
இந்த உப்பள நிறுவனத்தால் பல மில்லியன் வருமானம் ஈட்டி கொள்வதுடன் பல நூறு பேருக்கு வேலை வாய்ப்பும் கிடைக்க பெற்றுள்ளது .
கிளிநொச்சி மாவட்டத்தில் இந்த உப்பள கூட்டு தாபனம் முதன்மையான ஒன்று என்பது குறிப்பிட தக்கது .
உப்புத் தட்டுப்பாடு
உப்புத் தட்டுப்பாடு
உப்புத் தட்டுப்பாடு இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் ஊடாக 30,000 மெற்றிக் தொன்கள் வரை பதப்படுத்தப்படாத உப்பை இறக்குமதி செய்வதற்கு இலங்கை அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நாட்டில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் உள்நாட்டு சந்தையில் உள்நாட்டு மற்றும் தொழில்துறை
தேவைகளுக்கான உப்பு விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என அவதானிக்கப்பட்டுள்ளது.
எனவே, தற்போதுள்ள தீர்வை விகிதத்தின்படி, 30,000 மெட்ரிக் டன் கச்சா அயோடின் கலந்த உப்பை இறக்குமதி செய்து, சந்தைக்கு வழங்குவதற்கு அனுமதி வழங்குமாறு, உப்பு உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
2025 ஜனவரி 31 ஆம் திகதிக்குள் இறக்குமதிகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் தெரிவித்தார்


















