Tag: கஞ்சா
பிரபாகரன் கஞ்சா பத்தினார் அர்ச்சுனா
பிரபாகரன் கஞ்சா பத்தினார் அர்ச்சுனா
பிரபாகரன் கஞ்சா பத்தினார் அர்ச்சுனா ,பிரபாகரன் கஞ்சா பத்தினார் அர்ஜுனா பேச்சு தமிழ் மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுயேச்சை குழுவாக நின்று போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவான அர்ச்சனா இராமநாதன் தொடர்ந்து பேசி வரும் கருத்துக்கள் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழருடைய தேசியவாதம் தொடர்பில் அவருடைய தேசிய அபிலாசைகள் தொடர்பில் பேசும் அளவிற்கு அர்ச்சனா இவ்வாறான அவதூறுகளை பரப்புகிறார்.
தமிழர்கள் இந்த உலகப் பந்தில் தலை நிமிர்ந்து வாழ காரணமாக விளங்கியவர் தலைவர் பிரபாகரன்.
அவ்வாறான ஆளுமையும் அறநெறியும் , தமிழர்களின் நம்பிக்கையும் கடவுளாக இருக்கக்கூடிய தலைவர் பிரபாகரன் ,தொடர்பாக அர்ச்சனா ராமநாதன் அவதூறை கட்டவிழ்த்து விட்டு வருகிறார்.
தமிழினம் விடுதலை மூலம் எழுந்து விடாதபடி ,அதை அடக்கும் நடவடிக்கையில் சிங்கள பேரினவாதம் செயலாற்றி வருகிறது.
இதற்கு உகந்தது போல் தன்னை உருவாக்கி, சிங்கள கூலியாகவும் சிங்களத்தின் வாடகை வாயாகவும் அர்ச்சுன இராமநாதன் கூவி வருகிறார்.
தமிழ் பெண்கள் தமிழர் நிலம் தமிழருடைய கொள்கை கோட்பாடு தமிழர் தேசியத்துக்கு எதிராக எல்லாம் இவர் பேசிய வண்ணம் இருக்கிறார் .
சிங்கள மக்கள் மட்டுமே வாழ வேண்டும் என்கின்ற வாதத்தில் இவர் தனது கருத்துக்களை பரப்பி தமிழர்களை தொடர்ந்து அவமதித்து வருகிறார்.
இவருக்கு உடந்தையாக இவரது உடன்பிறந்த சகோதரரும் செயலாற்றி வருவதும் ,
அவரும் இவ்விதமான பேச்சுகளில் ஈடுபட்டு வருவதாக சம்பவங்கள் சமூக வலைத்தளங்களில் குரல்வலியூடாக வெளியாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேற்படி விடயம் தமிழர்கள் மத்தியில் அர்ச்சனா இராமநாதருக்கு எதிரான கோபத்தை கிளப்பி இருக்கிறது.
- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 70000ஐ நெருங்குகின்றன

- பொதுமக்களுக்கு பொலிஸ் எச்சரிக்கை

- பள்ளிகளுக்கான இரண்டாம் பருவத் தேர்வு தேதி

- பொலிஸ் அதிகாரி போல வேடமிட்டு மோசடி செய்த மூவர் கைது

- ஏர்பஸ் கையூட்டு விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு

- நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் 31பேர் பலி

- பலத்த காற்றுக்கான வானிலை எச்சரிக்கை

- ஐ நா அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்திய விமல் வீரவன்ச மீதான வழக்கு

- வட சீனாவில் ஏற்பட்ட கடும் வெள்ளம்

- இலங்கையின் மிக வயதான பெண்மணி 114 வயதில் காலமானார்

- டெங்கு பாதிப்பு மாணவருக்கு பாதுகாப்பு ஆடை

- 12 நாட்களில் இலங்கையில் 13,292 டெங்கு வழக்குகள்

யாழ்ப்பாணக் கடற்கரையில் புதைக்கப்பட்டிருந்த 85 கிலோ கேரள கஞ்சா
யாழ்ப்பாணக் கடற்கரையில் புதைக்கப்பட்டிருந்த 85 கிலோ கேரள கஞ்சா
யாழ்ப்பாணக் கடற்கரையில் புதைக்கப்பட்டிருந்த 85 கிலோ கேரள கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது
யாழ்ப்பாணத்தின் கட்டைக்காடு பகுதியில் இராணுவப் புலனாய்வுப் படை (MIC) மற்றும் மரதன்கேணி காவல்துறையினர் இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில் சுமார் 85 கிலோகிராம் எடையுள்ள கேரள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் MIC க்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், மரதன்கேணி காவல்துறையினர் MIC உடன் இணைக்கப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்தியாவில் இருந்து கடத்தப்பட்டு அலியாவெளி கடற்கரையில் சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட கேரள கஞ்சாவில் சுமார் 85 கிலோகிராம் எடையுள்ள 40 பார்சல்கள் இருந்தன, அதே நேரத்தில் அது கடற்கரையில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் தெரு மதிப்பு சுமார் 17 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து மரதன்கேணி காவல்துறையினர் மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- இந்தியா ஈரான் மோதல் உச்சம்

- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 70000ஐ நெருங்குகின்றன

- ஈராக்கில் தீவிர ஊழல் ஒழிப்பு நடவடிக்கையில் 375 கிலோ தங்கம் பறிமுதல்

- பொதுமக்களுக்கு பொலிஸ் எச்சரிக்கை

- மொஜ்தபா கமெனி 90% அழிந்துவிட்டார் டிரம்ப்

- 20% என்பது மிக அதிகம், ஈரான் நியாயமாக நடந்துகொள்ளும்

- பள்ளிகளுக்கான இரண்டாம் பருவத் தேர்வு தேதி

- பொலிஸ் அதிகாரி போல வேடமிட்டு மோசடி செய்த மூவர் கைது

- ஏர்பஸ் கையூட்டு விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு

- நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் 31பேர் பலி

கஞ்சா கற்பழிப்பு தமிழ் ஊடகங்களின் தலைப்பு
கஞ்சா கற்பழிப்பு தமிழ் ஊடகங்களின் தலைப்பு
கஞ்சா கற்பழிப்பு தமிழ் ஊடகங்களின் தலைப்பு ,இலங்கையில் கஞ்சா போதைவஸ்து ஊடாக கற்பழிப்பு படுகொலைகள் இடம் பெற்று வருவதான தகவல் மறுபடியும் இலங்கையை ஆட்கொண்டுள்ளது .
இலங்கை ஒரு கஞ்சா கற்பழிப்பு தேசமாக உள்ளதான தோற்றப்பாட்டை தமிழர் புலம்பெயர் ஊடகங்கள் முதல் இலங்கையினுடைய ஊடகங்கள் ஏற்படுத்தி வருகின்றன.
இலங்கைக்கு சுற்றுலா பயணத்தை மேற்கொள்ளும் மக்களுடைய வருகையை அதிகரித்து அதனை மேம்படுத்த நடவடிக்கையில் இலங்கை உல்லாசத்துறை பல்வேறுபட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது .
தமிழ் ஊடகங்கள் முதல் சிங்கள ஊடகங்கள் வரை
ஆனால் அவ்வாறான நடவடிக்கைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் இலங்கை போத வஸ்து கஞ்சாவுக்கு அடிமையான ஒரு தேசமாக தற்பொழுது தமிழ் ஊடகங்கள் முதல் சிங்கள ஊடகங்கள் வரை செய்திகளை தாராளமாக எழுதி வருகின்றன.
இதன் ஊடாக இலங்கையிலுள்ள வாலிபங்களுக்கு கஞ்சா போதை செய்திகளை ஊட்டி ,அதன் ஊடாக கஞ்சா வியாபாரங்களை நடத்துவதற்கு இந்த தமிழ் ஊடகங்கள் தலைப்புச் செய்திகளை இடுகின்றன .
மக்களாகிய நீங்கள் இந்த ஊடகங்களை காணுகின்ற பொழுது நாள்தோறும் கற்பழிப்பு கஞ்சா போன்ற தலைப்புச் செய்திகளை இவர்கள் எழுதி வருகின்றன.
சமூக பார்வையில் எத்தனையோ நல்ல விடயங்கள் காணப்படுகின்ற பொழுதும் அதனை எல்லாம் தட்டிக் கழித்து விட்டு நாள்தோறும் கஞ்சாவை போத வஸ்து தலைப்புச் செய்திகளை ஈட்டு வருகின்றது .
இதன் ஊடாக இலங்கையில் கொடி கட்டி கஞ்சா வியாபாரம் நடைபெறுகிறது என்கின்ற பெயரை இலங்கையின் மகுடமாக இவர்கள் சூட்டி வருகின்றனர் .
இதனையே ஆளும் அரச அதிகார வர்க்கங்களும் மகிழ்வோடு ஏற்று மகிழும் நிலையில் காணப்படுகின்ற்ன .
அதனால் தான் தமிழ் ஊடகங்கள் தலைப்புகளாக இந்த் செய்திகளை ஒட்டி வருகின்றன.
இவர்கள் காட்டில் நல்ல வியாபாரம்
இதன் ஊடாக இவர்கள் காட்டில் நல்ல வியாபாரம் நடக்கிறது போலும் .
சமூகம் சமூக அக்கறை தொடர்பாக பேசுகின்ற ஊடகங்களில் சமூகத் தலைப்புகள் இதுவாக பகிர முடியுமா என்கின்ற கேள்வியை தற்போது நாங்கள் முன்வைக்கின்றோம்.
பல்வேறுபட்ட மூத்த ஊடக யாம்பவான்கள் பத்திரிகையில் இவ்வாறான தலைப்புக்களை காண முடிவதில்லை .
அவ்வாறு வந்தாலும் ஆங்காங்கே ஒன்று இரண்டாக காணப்படுகின்றன .
ஆனால் தமிழ் இணைய வலைத்தளங்களை பார்க்கின்ற பொழுது ,இதனை ஆக்கிரமித்து செய்திகளை வெளியிடுவது ,அவர்கள் கஞ்சா போதை கற்பழிப்புக்கு ஆளாகி உள்ளார்கள் என்பதையே இந்த செய்திகள் காணப்படுகின்றன.
இனியேனும் இந்த கஞ்சா செய்தியாளர்கள் கஞ்சா செய்தியை நிறுத்துவார்களா ..?
கஞ்சா விற்பனை செய்த பெண் கைது
கஞ்சா விற்பனை செய்த பெண் கைது
திருகோணமலை – மொரவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரொட்டவெவ பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவரை இன்று (29) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
போதைப்பொருள் விற்பனை தொடர்பாக புலன் விசாரணைகளை மேற்கொண்ட புலனாய்வு துறையினர் மொரவெவ பொலிஸாருக்கு வழங்கிய தகவலுக்கு அமைவாக சோதனைகளை மேற்கொண்ட போது குறித்த பெண் கைது செய்யப்பட்டதாகவும் தெரிய வருகின்றது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் அதே பகுதியைச் சேர்ந்த ஜே.சமீரா (38 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பெண் பல வருடங்களாக கஞ்சா போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த நிலையில் பல தடவைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில், கஞ்சா போதை பொருட்களை பல தடவைகள் மறைத்து வைத்திருந்த நிலையில் பெண் பொலிஸாரின் உதவியுடன் கைது செய்யப்பட்டு திருகோணமலை நீதிமன்றத்தில் வழக்குகள் இடம் பெற்று வருவதாகவும் தெரிய வருகின்றது.
இதே நேரம் தொடர்ந்தும் குறித்த பெண் கஞ்சா போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டு வருவதாக பொலிஸ் மா அதிபர் திணைக்களத்திற்கு பல கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டதாகவும் பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர்.
அதேநேரம் மொரவெவ பொலிஸ் பொறுப்பதிகாரி நாகத்தன அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் போதைப் பொருள் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி சந்ரசிறி உட்பட அவரின் குழுவினர் மேற்கொண்ட சோதனையின் போது 52,160 மில்லிகிரேம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டதாகவும் தெரிய வருகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரான பெண்ணை விசாரணை செய்து வருவதாகவும் விசாரணையின் பின்னர் திருகோணமலை நீதிமன்றில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்
யாழில் கஞ்சாவுடன் கண்காட்சிக்குள் நுழைந்த பெண்
யாழில் கஞ்சாவுடன் கண்காட்சிக்குள் நுழைந்த பெண்
யாழ்ப்பாணத்தில் நடைபெற்று வரும் இலங்கை விமானப் படையின் கண்காட்சிக்கு கேரள கஞ்சாவுடன் சென்ற பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நயினாதீவைச் சேர்ந்த 26 வயதான பெண்ணே இரண்டு கிலோ கிராம் எடையுள்ள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை விமானப்படையின் 73வது வருட நிறைவை முன்னிட்டு “வான் சாகசம் – 2024” கண்காட்சி நிகழ்வுகள் யாழ்ப்பாணம் – முற்றவெளி மைதானத்தில் இன்று ஜந்தாவது நாளாகவும் இடம்பெற்றுவருகிறது.
இதன்போது கண்காட்சி பிரதான நுழைவாயிலில் கண்காட்சிக்கு பொதியுடன் வந்த பெண்ணை சோதனையிட்டபோதே கஞ்சா இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில் குறித்த பெண் விமானப்படையினரால் யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டநிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
நயினாதீவில் சுமார் 20 கிலோ கஞ்சா மீட்பு
நயினாதீவில் சுமார் 20 கிலோ கஞ்சா மீட்பு
யாழ்ப்பாணம், நயினாதீவில் 20 கிலோ மற்றும் 140 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது, நயினாதீவு கடற்கரையில் கஞ்சா இருப்பதாக முல்லைத்தீவு மாவட்ட விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த புலனாய்வு தகவலுக்கு அமைய சம்பவ இடத்திற்கு கடற்படையுடன் இணைந்து விரைந்த விசேட அதிரடிப் படையினர் 20 கிலோ மற்றும் 140 கிராம் கஞ்சாவினை கைப்பற்றினர்.
இதனை அடுத்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
நேற்று முன்தினம் (13) காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழில் கேரள கஞ்சா மீட்பு
யாழில் கேரள கஞ்சா மீட்பு
யாழ்ப்பாணம் வடமராட்சி வெற்றிலைக்கேணி பகுதியில் 14 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா மீட்கப்பட்டது.
வெற்றிலைக்கேணி கடற்பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் கரை ஒதுங்கிய சாக்கு மூட்டை ஒன்று மீட்கப்பட்டது. அந்த சாக்கு மூட்டையை சோதனை செய்த கடற்படையினர், 16 பொதிகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 35 கிலோ 100 கிராம் கேரள கஞ்சாவை கண்டுபிடித்தனர்.
கேரள கஞ்சா மேலதிக நடவடிக்கைக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
போலீஸிடம் சிக்கிய 1 கோடி 32 லட்சம் பெறுமதியான கேரள கஞ்சா
போலீஸிடம் சிக்கிய 1 கோடி 32 லட்சம் பெறுமதியான கேரள கஞ்சா
விசேட போதை பொருள் ஒழிப்பு திட்டத்தை நேற்று (17) அமுல்படுத்தும் வகையில் பொலிஸ் மா அதிபரால் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டது.
அப்பணிப்பின் கீழ் விசேட போதை பொருள் ஒழிப்பு குழு ஒன்றை அமைத்து அக் குழுவின் ஊடாக நேற்று காலை கிளிநொச்சி பொலிஸாருக்கு கிடைத்த
போலீஸிடம் சிக்கிய 1 கோடி 32 லட்சம் பெறுமதியான கேரள கஞ்சா
இரகசிய தகவலையடுத்து பாரதிபுரம் பகுதியில் பொலிஸார் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸ் மோப்பநாய் சகிதம் தேடுதல் மேற்கொண்டது.
இதன் போது சுமார் 68 கிலோக்கு மேற்பட்ட 30 கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் வீடு ஒன்றின் கூரை தகடுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கஞ்சா தேசமாகும் இலங்கை எதிரியாகும் போதை
கஞ்சா தேசமாகும் இலங்கை எதிரியாகும் போதை
கஞ்சா தேசமாகும் இலங்கை எதிரியாகும் போதை இலங்கை இன்று கஞ்சா தேசமாக மாற்றம் .
இலங்கை மக்களுக்கு எதிரியாகும் போதை பாவனை அதிகரிப்பும் அதனால் எழும் குற்ற செயல்களும் காணப்படுகின்றன
கைது எதிரொலி
இந்த வருடம் 123. 000 பேர் கைது எதிரொலி ,இலங்கை கஞ்சா தேசமாக மாற்றம் பெற்றுள்ளதை காண்பிக்கிறது .
இதே கஞ்சா பாவனையை அதிகரித்து ,எதிரியானவன் தமிழருக்க்குள் போராடும் திறனை மழுங்கடித்து ,புதிய கலாச்சாரத்தை உருவாக்கி அதன் ஊடாக ,திருட்டு சமூகமாக அல்லது குற்றவியல் சமுகமாக தமிழர் தேசத்தை மாற்றி செல்கிறது .
எதிரிகளின் சூழ்ச்சியில் தமிழர் தேசம்
எதிரிகளின் இந்த சூழ்ச்சியில் இருந்து தமிழர் தேசம் மீண்டெழுந்து சென்றிட என்ன வழி என்பதே கேள்வியாக உள்ளது .
எதிர் வரும் எதிரிகள் சூழ்ச்சிகளை இனம் கண்டு தமிழர்கள் பயணிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது .
தமிழருக்கு எதிரியாகும் இந்த கஞ்சா ,போதைவஸ்தை அடியோடு அழிக்க மீளவும் புலிகள் தேவை படுகின்றனர் என தமிழ் மக்கள் பேசி கொள்கின்றனர் .
பருத்தித்துறையில் கஞ்சாவுடன் இளைஞன் கைது
பருத்தித்துறையில் கஞ்சாவுடன் இளைஞன் கைது
பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொற்றாவத்தை பகுதியில் 28 கிராம் 100 மில்லிகிராம் கஞ்சாவுடன் 27 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காங்கேசன்துறை மாவட்ட பொலிஸ் விசேட குற்றத்தடுப்பு பிரிவினரால் இந்த கைது முன்னெடுக்கப்பட்டது.
பருத்தித்துறையில் கஞ்சாவுடன் இளைஞன் கைது
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
- தரமற்ற மலசல கூடம் |ஆவேசமான மக்கள் |சிக்கிய வன்னி மைந்தன் tIKtOK தளம்
- மாணவர்களுக்கு அள்ளி கொடுத்த தம்பதிகள் |பிரான்ஸ் உறவுகள் செய்த பெரும் உதவி
- சீதனம் வாங்கிய ஆண்கள் படும் பாடு |கண்ணீர் கதறல்
- பழிவாங்கும் அர்ச்சுனா |மிரளும் எதிரிகள்
- வன்னி மைந்தன் உதவி திட்டத்தை குழப்ப சதி
கஞ்சா பயிர்ச்செய்கை விரைவில் சட்டப்பூர்வமாகும்
கஞ்சா பயிர்ச்செய்கை விரைவில் சட்டப்பூர்வமாகும்
கஞ்சா பயிர்ச்செய்கைக்கான அனுமதி வழங்கும் வர்த்தமானி எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் வெளியிடப்படும் என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்தார்.
ஏற்றுமதிக்காக மட்டுமே கஞ்சா பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், இந்த வேலைத்திட்டத்தை சரியாக நடைமுறைப்படுத்தினால், வருடத்திற்கு 06 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்ட முடியும் எனவும் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்தார்.
- இந்தியா ஈரான் மோதல் உச்சம்by நிருபர் காவலன்
- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 70000ஐ நெருங்குகின்றனby நிருபர் காவலன்
- ஈராக்கில் தீவிர ஊழல் ஒழிப்பு நடவடிக்கையில் 375 கிலோ தங்கம் பறிமுதல்by நிருபர் காவலன்
- பொதுமக்களுக்கு பொலிஸ் எச்சரிக்கைby நிருபர் காவலன்
- மொஜ்தபா கமெனி 90% அழிந்துவிட்டார் டிரம்ப்by நிருபர் காவலன்
கஞ்சாத்தோட்டம் அழிப்பு
கஞ்சாத்தோட்டம் அழிப்பு
அம்பாறை – பக்மிட்டியாவ வனப்பகுதியில் ஒரு ஏக்கரில் பயிரிடப்பட்டு வந்த கஞ்சா வெள்ளிக்கிழமை மாலை கட்டுபிடிக்கப்பட்டுள்ளது..
அக்கரைப்பற்று இராணுவப் புலனாய்வுப்பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் அருகம்பை விஷேட அதிரடிப்படையினர் இணைந்து நடத்திய தேடுதலில் பக்மிட்டியாவ வனப்பகுதியில் பயிரிடப்பட்ட கஞ்சா கைப்பற்றப்பட்டது.
இதன் போது சுமார் 7,500 கஞ்சா செடிகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவை ஒவ்வொன்றும் சுமார் 3-6 அடி என உயரம் வரை வளர்ந்திருந்தது.
கைப்பற்றப்பட்ட கஞ்சா செடிகள் அனைத்தும் பாதுகாப்புத் தரப்பினரால் அழிக்கப்பட்டதுடன்,
மேலதிக விசாரணைகளை தமன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பாடசாலை மாணவர்களை இலக்காக வைத்து கஞ்சா விற்பனை
பாடசாலை மாணவர்களை இலக்காக வைத்து கஞ்சா விற்பனை
பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த ரத்மலானை பிரதேசத்தில் வசிக்கும் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் மோட்டார் சைக்கிளை பயன்படுத்தி பாடசாலை மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த தகவலுக்கு அமைய
பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இந்த சோதனையை நடத்தியுள்ளனர்.
இச்சோதனையின் போது சந்தேகநபரிடம் இருந்து 710 மில்லிகிராம் கேரளா கஞ்சாஇ இலத்திரனியல் தராசு மற்றும் 13500 ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக தலங்கம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
மன்னாரில் 14 மில்லியன் ரூபா கேரளா கஞ்சா மீட்பு
மன்னாரில் 14 மில்லியன் ரூபா கேரளா கஞ்சா மீட்பு
மன்னார் வெலிபர பகுதியில் கடத்தல்காரர்களால் புதைக்கப்பட்ட சுமார் 14 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
வடமத்திய கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பலான தம்மென்னா மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்
போதே குறித்த கஞ்சா பொதி கண்டுபிடிக்கப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
இருபது பொட்டலங்களில் கவனமாக பொதி செய்யப்பட்டு கடத்தல்காரர்களால் புதைக்கப்பட்டிருந்த 49 கிலோ 380 கிராம் கேரள கஞ்சா கையிருப்பு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த கேரள கஞ்சா கையிருப்பு தொடர்பில் மேலதிக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.
கடலில் மிதந்த கஞ்சா பொதிகள்
கடலில் மிதந்த கஞ்சா பொதிகள்
தமிழ்நாடு – இராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடி அடுத்த இரண்டாம் தீடை கடல் பகுதியில் நேற்று முன்தினம் (26) மாலை இந்திய கடலோர காவல்
படையின் ரோந்து கப்பலான ஹோவர் கிராப்ட் கப்பல் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, அப்பகுதியில் சந்தேகத்துக்கிடமாக சாக்கு முடை கடலில் மிதந்து வந்துள்ளது.
இதையடுத்து கடலோர காவல் படையினர் மிதந்து வந்த சாக்கு மூட்டையை கைப்பற்றி பிரித்துப் பார்த்ததில் அதில் கஞ்சா பொதிகள் இருந்தமை தெரியவந்தது.
இதையடுத்து கைப்பற்றப்பட்ட கஞ்சா பொதிகள், சுமார் 50 கிலோகிராம் என்றும் இது எப்படி கடலில் மிதந்து வந்தது, யாரேனும் கடத்தல் காரர்கள்
ரோந்து கப்பலை கண்டதும் கடலில் போட்டுவிட்டு தப்பிச் சென்றார்களா என்ற கோணத்தில்,
இந்திய கடலோர காவல் படையினர் தீவிர விசாரணையை நடத்தி வருகின்றனர்.
லண்டன் – டோவர் பகுதியில் சிக்கிய கஞ்சா பண்ணை
லண்டன் – டோவர் பகுதியில் சிக்கிய கஞ்சா பண்ணை
லண்டன் Folkestone Road, Dover பகுதியில் உள்ள வீடொன்றை போலீசார் திடீரென சுற்றி
வளைத்தனர் ,அப்பொழுது நகு 180 கஞ்சா செடிகள் மற்றும் அது வளர்க்க பயன் படுத்த பட்ட உபகரணங்கள் என்பன மீட்க பட்டன
சட்டவிரோதமாக மேற்கொள்ள பட்டு வந்த இந்த வியாபாரம் தடுத்து நிறுத்த பட்டுள்ளது
பொலிசாருக்கு கிடைக்க பெற்ற புலனாய்வு தகவலை அடுத்து மேற்கொள்ள பட்ட
சுற்றிவளைப்பில் இரண்டு லட்சம் பவுண்டுகள் பெறுமதியான கஞ்சா பண்ணையே இவ்வாறு சிக்கியுள்ளது
தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்க பட்டு வருகின்றன
சிக்கிய 300 மில்லியன் ரூபா கஞ்சா
சிக்கிய 300 மில்லியன் ரூபா கஞ்சா
இலங்கையின தென் ஆழ் கடல் பரப்பில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட ஹெரோயினின்
பெறுமதி 3 ஆயிரத்து 300 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஹெரோயினுடன் 11 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலதிக
விசாரணைகளை கடற்படையினரும், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரும் மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 17 ஆம் திகதி தொடக்கம் 22 ஆம் திகதி வரையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
போதைப்பொருள் கடத்தல் தொடர்பான தகவல் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்திருந்த
நிலையில், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரும் கடற்படையினரும் இணைந்து இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்..
முல்லையில் கஞ்சா கடத்திய வாலிபர்கள் கைது
முல்லையில் கஞ்சா கடத்திய வாலிபர்கள் கைது
இலங்கை முல்லைத்தீவில் இருந்து கொழும்புக்கு வாகனம் ஒன்றில் கஞ்சா கடத்தி சென்ற
வாலிபர்கள் இருவரை இராணுவத்தினர் கைது செய்தனர்
இவர்களினால் கடத்தி செல்ல பட்ட 22 கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்ய பட்டுள்ளது
26 மில்லியன் ரூபா பெறுமதியான கஞ்சாவுடன் 05 சந்தேக நபர்கள் கைது
26 மில்லியன் ரூபா பெறுமதியான கஞ்சாவுடன் 05 சந்தேக நபர்கள் கைது
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, சுகந்திபுரத்தில் கடற்படையினரால் நேற்றையதினம் (டிசம்பர், 30) மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது ஐந்து சந்தேக நபர்கள்
கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடமிருந்து 26 மில்லியன் ரூபா பெறுமதியான கஞ்சாவும் மீட்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, கிழக்கு கடற்படை கட்டளையகத்தின் கீழ் உள்ள கோட்டாபய முகாமைச் சேர்ந்த கடற்படை வீரர்கள் முல்லைத்தீவு பொலிஸ் விஷேட அதிரடிப்படையினருடன் இணைந்து
மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது 89 கிலோ மற்றும் 200 கிராம் கேரள கஞ்சாவை கைப்பற்றியதுடன் நான்கு சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர்.
மேலும், இப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மற்றுமொரு தேடுதல் நடவடிக்கையின் போது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சட்டவிரோத துப்பாக்கி ஒன்றுடன் சந்தேக நபர் ஒருவர்
கைதுசெய்யப்பட்டுள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விசேட சோதனை நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் சந்தைப் பெறுமதி ரூ.26 மில்லியனுக்கும் அதிகம் என நம்பப்படுவதாக கடற்படை தெரிவித்துள்ளது.
இந்த முழு நடவடிக்கையும் சுகாதார வழிகாட்டுதல்களுக்கமைய இடம்பெற்றதாக கடற்படை தெரிவித்துள்ளது. இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் விஸ்வமடு தெற்கு,
உடையார்கட்டு, உடையார்கட்டு தெற்கு மற்றும் மூங்கிலாறு ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் 21 முதல் 43 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்டுள்ள சட்டவிரோத பொருட்களுடன் சந்தேக நபர்கள் மேலதிக சட்ட
நடவடிக்கைகளுக்காக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளது
68 மில்லியன் ரூபா கஞ்சா மீட்பு
68 மில்லியன் ரூபா கஞ்சா மீட்பு
நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அச்சங்குளம்-நறுவிலிக்குளம் கடற்கரை
பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 68 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சாப் பொதிகளை நேற்று முன்தினம் (21) வங்காலைக் கடற்படையினர் மீட்டுள்ளனர்.
கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையிலேயே இக்கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.
இதன்போது சுமார் 228 கிலோகிராம் நிறை கொண்ட கேரள கஞ்சாப் பொதிகள் மீட் கப்பட்டுள்ளதாகவும், எனினும் இது தொடர்பில் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.































