நாமல் ராஜபக்சவின் வழக்கை விசாரிக்க நீதிமன்றம் தேதி
Posted in இலங்கை செய்திகள்

நாமல் ராஜபக்சவின் வழக்கை விசாரிக்க நீதிமன்றம் தேதி

நாமல் ராஜபக்சவின் வழக்கை விசாரிக்க நீதிமன்றம் தேதி

நாமல் ராஜபக்சவின் வழக்கை விசாரிக்க நீதிமன்றம் தேதி , ‘கிரிஷ்’ ஒப்பந்தம் தொடர்பாக நாமல் ராஜபக்சவின் வழக்கை விசாரிக்க நீதிமன்றம் தேதி நிர்ணயித்துள்ளது

சர்ச்சைக்குரிய ‘கிரிஷ்’ திட்ட ஒப்பந்தம்

சர்ச்சைக்குரிய ‘கிரிஷ்’ திட்ட ஒப்பந்தம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின்

விசாரணையை ஏப்ரல் 02, 2026 அன்று கொழும்பு உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி

இந்த வழக்கு இன்று கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி நதி அபர்ணா சுவந்துருகொட முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.

விசாரணைகளின் போது, ​​பிரதிவாதியான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நீதிமன்றத்தில் ஆஜரானார்.

ஈரான் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Posted in உலக செய்திகள்

ஈரான் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ஈரான் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ஈரான் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு தாக்குதல் நடத்தியவர்கள் உடனடி நீதியை எதிர்கொள்ள வேண்டும் என்று ஈரானின் உயர் நீதிபதி கூறுகிறார்.


தலைமை நீதிபதி கோலம்-ஹொசைன் மொஹ்சேனி-எஜேய், “மக்களின் தலையை துண்டித்தவர்கள் அல்லது தெருக்களில் மக்களை எரித்தவர்கள்”

“விசாரணை செய்யப்பட்டு விரைவில் தண்டிக்கப்பட வேண்டும்” என்று கூறுகிறார்.

ஈரானிய அரசாங்கத்திற்கு எதிராக

ஈரானிய அரசாங்கத்திற்கு எதிராக “எதிரிக்கு” உதவுபவர்களுக்கு எந்தவிதமான கருணையும் இருக்காது என்று மொஹ்சேனி-எஜேய் கடந்த வாரம் கூறினார்.

“கலவரங்களுக்காகவோ அல்லது பாதுகாப்பின்மையை உருவாக்கவோ அல்லது அவர்களுக்கு ஆதரவளிக்கவோ யாராவது தெருக்களுக்கு வந்தால்,

அவர்களுக்கு எந்த சாக்குப்போக்கும் இல்லை.

விஷயம் மிகவும் தெளிவாகவும் வெளிப்படையாகவும் மாறிவிட்டது. அவர்கள் இப்போது ஈரான் இஸ்லாமியக் குடியரசின் எதிரிகளுடன் இணைந்து செயல்படுகிறார்கள்,” என்று அவர் கூறினார்.

ஆர்ப்பாட்டங்களில் வன்முறை

ஆர்ப்பாட்டங்களில் வன்முறையைத் தூண்டவும், பாதுகாப்புப் படைகள் மற்றும் போராட்டக்காரர்களை குறிவைக்கவும் “முகவர்களுக்கு”

உத்தரவிட்டு ஆயுதம் வழங்கியதாக அமெரிக்காவும் இஸ்ரேலும் குற்றம் சாட்டியுள்ளன.

விமல் வீரவன்சவுக்கு எதிராக நீதிமன்றம் கைது வாரண்ட்
Posted in இலங்கை செய்திகள்

விமல் வீரவன்சவுக்கு எதிராக நீதிமன்றம் கைது வாரண்ட்

விமல் வீரவன்சவுக்கு எதிராக நீதிமன்றம் கைது வாரண்ட்

விமல் வீரவன்சவுக்கு எதிராக நீதிமன்றம் கைது வாரண்ட் விமல் வீரவன்சவுக்கு எதிராக நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.

கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி

கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி முகமது மிஹால் இன்று முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவை கைது செய்ய உத்தரவிட்டார். லஞ்சம் அல்லது.

ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், ரூ.75 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்களை

சட்டவிரோதமாகச் சேர்த்ததாகக் கூறப்படும் வழக்கில்

சட்டவிரோதமாகச் சேர்த்ததாகக் கூறப்படும் வழக்கில், நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதால், அவரைக் கைது செய்ய அவர் இன்று பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளார்.

குற்றம் சாட்டப்பட்டவர்களின் பிணையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும், அடுத்த தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடவும் நீதிபதி உத்தரவிட்டார்.

அவசரகால சட்ட மனித உரிமைகள் மீறல் உயர் நீதிமன்றம் தீர்ப்பு
Posted in இலங்கை செய்திகள்

அவசரகால சட்ட மனித உரிமைகள் மீறல் உயர் நீதிமன்றம் தீர்ப்பு

அவசரகால சட்ட மனித உரிமைகள் மீறல் உயர் நீதிமன்றம் தீர்ப்பு

அவசரகால சட்ட மனித உரிமைகள் மீறல் உயர் நீதிமன்றம் தீர்ப்பு ,2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17 ஆம் திகதி போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த அப்போதைய பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் பொது மக்கள்

பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால சட்ட விதிமுறைகளின் ஊடாக அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க

பதில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கவால் பொது மக்கள் பாதுகாப்பு சட்டத்தின் இரண்டாவது சரத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்ட அவசரகால சட்ட

விதிமுறைகள் தன்னிச்சையானவை மற்றும் அதிகாரமற்றவை என்று மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வின் பெரும்பான்மையான நீதியரசர்கள் தீர்ப்பளித்தனர்.

தலைமை நீதியரசர் முர்து பெர்னாண்டோ மற்றும் யசந்த கோத்தாகொட ஆகிய பெரும்பான்மை நீதியரசர்கள் இந்த தீர்ப்பை வழங்கினர்.

இருப்பினும், மூவரடங்கிய நீதியரசர்கள் அமர்வின் உறுப்பினரான நீதியரசர் அர்ஜுன ஒபேசேகர, தனது தீர்ப்பை வழங்கும்போது, பதில் ஜனாதிபதியின்

அவசரகாலச் சட்ட பிரகடனம்

அவசரகாலச் சட்ட பிரகடனம் ஊடாக அடிப்படை மனித உரிமைகளை மீறப்படவில்லை என்று கூறினார்.

மாற்றுக் கொள்கை மையம், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையளார் அம்பிகா சற்குணநாதன் மற்றும் லிபரல் இளைஞர்

இயக்கம் ஆகியவை இந்த அடிப்படை உரிமைகள் மனுக்களை தாக்கல் செய்திருந்தன.

மனுதாரர்களின் வழக்கு கட்டணங்களை அரசாங்கம் செலுத்துமாறும் உத்தரவிடப்பட்டது.

அமெரிக்காவில் விழுந்த பஷில் நீதிமன்ற உத்தரவு
Posted in இலங்கை செய்திகள்

அமெரிக்காவில் விழுந்த பஷில் நீதிமன்ற உத்தரவு

அமெரிக்காவில் விழுந்த பஷில் நீதிமன்ற உத்தரவு

அமெரிக்காவில் உள்ள முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை எதிர்வரும் நவம்பர் மாதம் 21 ஆம் திகதி மாத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜராகுமாறு மாத்தறை நீதவான் அருண புத்ததாச வெள்ளிக்கிழமை (23) உத்தரவிட்டுள்ளார்.

சட்டவிரோதமாக சம்பாதித்தாக கூறப்படும் 500 இலட்சம் ரூபா பணத்தை பயன்படுத்தி மாத்தறை பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றை வாங்கியமை தொடர்பில்

பசில் ராஜபக்ஷ உட்பட நால்வருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்த இரண்டு சந்தேக நபர்கள்

நீதிமன்றில் ஆஜராகியுள்ள நிலையில் பசில் ராஜபக்ஷவும் அவரது மனைவியின் சகோதரியான அயோமா கலப்பத்தி என்பவரும் நீதிமன்றில் ஆஜராகவில்லை.

இதன்போது நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணி, பசில் ராஜபக்ஷவுக்கு கடந்த 2024 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 18 ஆம் திகதி முதல் மே மாதம் 23 ஆம் திகதி வரை மாத்திரமே வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றினால் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

ஆனால் பசில் ராஜபக்ஷ வெள்ளிக்கிழமை (23) நீதிமன்றில் ஆஜராகவில்லை.

இதனால் பசில் ராஜபக்ஷவின் பிணையை இரத்து செய்து அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்க வேண்டும் என சட்டத்தரணி கோரிக்கை விடுத்தார்.

இதன்போது பசில் ராஜபக்ஷ சார்பில் நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணி, பசில் ராஜபக்ஷ இலங்கைக்கு வருவதற்காக மே மாதம் 18 மற்றும் 19 ஆம் திகதிக்கு விமான பயணச்சீட்டை முன்பதிவு செய்திருந்தார்.

ஆனால் எதிர்பாராத விதமாக அவர் கதிரையிலிருந்து கீழே விழுந்து காயமடைந்ததால், அவர் 6 மாத காலத்துக்கு விமானத்தில் பயணிக்க கூடாது என வைத்தியர்கள் கூறியுள்ளனர என தெரிவித்தார்.

பசில் ராஜபக்ஷவின் வைத்திய அறிக்கைகளை பரிசீலித்த நீதவான் அவரை எதிர்வரும் நவம்பர் மாதம் 21 ஆம் திகதி மாத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளார்.

மாணவி படுகொலை ஆசிரியர்எங்கே நீதிமன்றம்
Posted in இலங்கை செய்திகள்

மாணவி படுகொலை ஆசிரியர்எங்கே நீதிமன்றம்

மாணவி படுகொலை ஆசிரியர் எங்கே நீதிமன்றம்

மாணவி படுகொலை ஆசிரியர்எங்கே நீதிமன்றம்மாணவி படுகொலை ஆசிரியர்எங்கே நீதிமன்றம் ,மாணவி படுகொலை ஆசிரியர் எங்கே நீதிமன்றம் எடுத்த கேள்வியினால் விசாரணை குழு வீதியில் உறைந்திருக்கிறது.

கொட்டஞ்சேனை பகுதியில் பாடசாலை மாணவியர்வர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட விசாரணையை அடுத்து ,

சந்தேகம் நபரான பாடசாலை ஆசிரியர் தொடர்பான விடயத்தில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதா என கேள்வி கேட்டு குடைந்துள்ளது .

குறித்த ஆசிரியர் ஆளுகின்ற அனுராக் கட்சிக்கு ஆதரவானவர் எனவும் ,அதனாலயே இவ்வாறான சித்து விளையாட்டில் அவர் ஈடுபட்டு வருவதான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது .

அதனை அடுத்து தற்போது நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த பொழுது ,ஆசிரியர் தொடர்பான விசாரணை அவரது நடவடிக்கை தொடர்பாக ஏதாவது வழக்கல் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கேள்வி எழுப்ப பட்டுள்ளது

.அரசியல் காரணங்களை காட்டி குடும்பத்தை மிரட்டி அந்த வழக்கிலிருந்து அவரை தப்பிவிக்க நடவடிக்கையில் விசாரணை குழுக்கள் ஈடுபடுகிறதா, அல்லது தவறான முறையில் அவர் குற்றம் சாட்டப்பட்டது உள்ளாரா என்கின்ற விடயம் தான் இப்பொழுது விசாரணையில் பேச பொருளாக உள்ளது.

குறித்த ஆசிரியருக்கு எதிராக பெருமளவான மக்கள் திரண்டு போராட்டத்தை நடத்தினர்.

போர்ட்டங்கள் நடத்துவதன் ஊடாக இவர் என விடயங்களை தடுத்துவிட முடியுமா என்றால் கிடையாது.

அருமையான சட்டங்கள் கடுமையான தண்டனைகள் ஊடாகத்தான் அவருடைய தடுத்த நிறுத்தலாம் என்பது இயல்பு .

ஆனால் அதை அனுரா ஆட்சி அதிகாரம் செய்து முடிக்குமா? இவ்வாறான படுகொலைகள் தடுத்து நிறுத்துமா ,பகிடி வதைகள் தடுத்து நிறுத்தப்படுமா மாணவர் கல்வி தலை நிமிர்ந்த படுமாஎன்ற கேள்வி எழுப்ப பட்டுள்ளது .

இவ்வாறான கேள்விகள் எழுகின்ற நிலையில் உப்புக்கே தட்டப்பாடு வருகின்ற நிலையில் ,உப்புக்கு உதவாத இந்த விடயங்கள் என்ன செய்யப் போவது என்பதே மக்கள் கேள்வியாக இருப்பதாக சில குசும்பர்கள் சமூகவலைத்தளங்கள் இப்படியும் செய்திகளை பரப்பி வருகிறார்கள்.

அரியாலை மயான விவகாரம் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
Posted in இலங்கை செய்திகள்

அரியாலை மயான விவகாரம் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

அரியாலை மயான விவகாரம் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

அரியாலை மயான விவகாரம் நீதிமன்றம் அதிரடி உத்தரவு ,யாழ்ப்பாணம், அரியாலை பகுதியில் உள்ள சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்ட பகுதிக்கு பொலிஸ் பாதுகாப்புக்கு

மேலதிகமான கண்காணிப்பு பணிக்கு மயான அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் ஐவரை நியமிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டமை தொடர்பான வழக்கினுடைய கலந்தாய்வு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா தலைமையில், செவ்வாய்க்கிழமை (04) நடைபெற்றது

குறித்த கலந்துரையாடலில் காணாமல் ஆக்கப்பட்டோர் சார்பில் சட்டத்தரணி தற்பரனும் முறைப்பாட்டாளர் சார்பில் சட்டத்தரணி சுகாசும், நல்லூர் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மயான அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட துறைசார் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

குறித்த எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்ட மயானத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு உரிய வகையில் வழங்கப்பட வேண்டும் என்றும் பொலிஸ் பாதுகாப்புக்கு மேலதிகமாக குறித்த மயானத்தினுடைய அபிவிருத்தி சங்கத்தின்

உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பு பணியை மேற்பார்வை செய்வதற்கான அனுமதி வழங்கப்பட வேண்டும் என சட்டத்தரணிகளால் கோரப்பட்டது.

இதனை ஆராய்ந்த நீதவான், மயான அபிவிருத்தி சங்கத்தின் சார்பில் ஐந்து உறுப்பினர்களை பணியில் ஈடுபடுத்த அனுமதி வழங்கினார். வழக்கு தொடர் விசாரணைக்காக திகதியிடப்பட்டது

மின்சார சபைக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
Posted in இலங்கை செய்திகள்

மின்சார சபைக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

மின்சார சபைக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

மின்சார சபைக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு ,மின்சார இணைப்புகளை வழங்கும்போது அனைத்து நுகர்வோரிடமிருந்தும் வசூலிக்கப்படும் பாதுகாப்பு

வைப்புத்தொகைக்கான வருடாந்த வட்டியை இலங்கை மின்சார சபை (CEB) செலுத்த வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

நெதன்யாகுவுக்கு எதிராக பிடியாணை பிறப்பித்த சர்வதேச நீதிமன்றம்
Posted in உலக செய்திகள்

நெதன்யாகுவுக்கு எதிராக பிடியாணை பிறப்பித்த சர்வதேச நீதிமன்றம்

நெதன்யாகுவுக்கு எதிராக பிடியாணை பிறப்பித்த சர்வதேச நீதிமன்றம்

நெதன்யாகுவுக்கு எதிராக பிடியாணை பிறப்பித்த சர்வதேச நீதிமன்றம் ,இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், நேற்று (21), பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.

2023ஆம் ஆண்டு, ஒக்டோபர் 7ஆம் திகதியன்று, இஸ்ரேல் ஹமாஸ் கிளிர்ச்சியாளர்கள் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். இதில் இஸ்ரேலியர் 1300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அத்துடன், இஸ்ரேலியர்கள் உள்பட

சிலர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டனர். பிணைக் கைதிகளில் சொற்பமானவர்களே இதுவரை விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், காசா மீது இஸ்ரேல் கடுமையான பதிலடி கொடுத்து வருகிறது. காசா மீதான தாக்குதல், ஹமாஸ் ஆதரவு அமைப்புகள் மீது நீண்டுள்ளது. லெபனானில்

ஹிஸ்புல்லாக்கள், சிரியாவில் ஈரான் ஆதரவு கிளர்சிப் படைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. காசாவில் மட்டும் பெண்கள், குழந்தைகள் உள்பட 44,000 பேர் உயிரிழந்துள்ளனர். லெபனான் உயிர்ழப்புகள் 3,500ஐ கடந்துள்ளது.

இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நேற்று (21) பிடியாணை உத்தரவை பிறப்பித்துள்ளது.

இஸ்ரேல் மீது போர்க்குற்ற புகார்கள் முன்வைக்கப்பட்டு சர்வதே குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. இந்த வழக்கில்தான், இப்போது இஸ்ரேல்

பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது செய்வதற்கான பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை, இஸ்ரேலின் முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் யோவ் கேலன்ட்டுக்கு எதிராகவும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. போர்க்

குற்றச்சாட்டுகள் நிமித்தமாக, குறிப்பாக உயிரிழப்புகள் தொடர்பாக இஸ்ரேல் அளித்த விளக்கங்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

நீதிமன்றம் பொலிஸ்மா அதிபருக்கு தடை
Posted in இலங்கை செய்திகள்

நீதிமன்றம் பொலிஸ்மா அதிபருக்கு தடை

நீதிமன்றம் பொலிஸ்மா அதிபருக்கு தடை

நீதிமன்றம் பொலிஸ்மா அதிபருக்கு தடை ,இலங்கையின் பொலிஸ்மா அதிபராக கடமை ஆற்றி வரும் தென்ன கோணுக்கு தற்பொழுது நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது .

தேசப்பந்து அதிபராக நியமித்த ஜனாதிபதியின் தீர்மானத்தை ரத்து செய்யும்படி உத்தரவை பிறப்பித்து இந்த அதிரடி உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது .

இவரது நியமனம் சட்டபூர்வமானது அல்ல என நீதிமன்றம் தெரிவித்ததை அடுத்தே இவருக்கு ,தற்பொழுது போலீஸ் மா அதிபராக பதவி வகிக்க சிக்கல் இருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் போலீஸ்மா அதிபராக போலீஸ் தலைமை அதிகாரி ஒருவர் பதவி வகிக்க முடியாது என நீதிமன்றம் வழங்கிய இந்த உத்தரவு ,ஆனது இலங்கை வரலாற்றில் இடம்பெற்ற முதலாவது வேடிக்கை வினோத வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பாக காணப்படுகின்றது.

இலங்கை அரசியலில் இவ்வாறான விடயங்கள் பல்வேறுபட்ட சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகின்ற நிலையில், தற்போது இந்த விடயம் பேசி பொருளாக மாற்றம் பெற்று இருக்கின்றது.

மஹிந்தாவுடைய ஆட்சி காலத்தில் வழங்கியவர் பல்வேறுபட்ட படுகொலைகளை புரிந்ததை அடுத்து அவர் தற்பொழுது சிறையில் வசித்து வருகின்றார்.

அவ்வாறான நிலையில் தற்போது இந்த அதிபருக்கு இவ்விதமான ஒரு நெருக்கடி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது, அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றது.

பொலிஸ் மா அதிபர் தேசப்பந்துக்கு விதிக்கப்பட்டுள்ள இந்த தடையானது மக்கள் மத்தியில் இன்று பேசு பொருளாகவும் அதிர்ச்சியையும் வியப்பையும் ஏற்படுத்தியிருக்கின்றது.

தமிழக மீனவர்கள் இந்தியா பிரஜைகள் நீதிமன்றம் அறிவிப்பு
Posted in இலங்கை செய்திகள்

தமிழக மீனவர்கள் இந்தியா பிரஜைகள் நீதிமன்றம் அறிவிப்பு

தமிழக மீனவர்கள் இந்தியா பிரஜைகள் நீதிமன்றம் அறிவிப்பு

தமிழக மீனவர்கள் இந்தியா பிரஜைகள் நீதிமன்றம் அறிவிப்பு ,தமிழக மீனவர்களும் இந்தியா குடிமக்கள் தான் தமிழகம் பாதுகாப்பு முக்கியமானது என மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற கிளை அறிவித்தல் விடுத்துள்ளது

இலங்கை கடற்படை கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 26 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி மத்திய அரசுக்கு நீதிமன்ற முத்தரவிட்டது இராமநாதபுரம் மாவட்டம் சேர்ந்த தீரன் முருகன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மறுத்தார்கள் செய்து இப்படியும் தொடர்பாக பேசி இருந்தார்

அந்த மனுவில் இளங்குடைப்படையினால் தமிழக வேறு ஒரு சிறப்பிக்கப்படுவதுடன் படகுகள் பறிமுதல் செய்யப்படும் சம்பவங்கள் 34 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருவதாக அவர் குற்றம் சுமத்தினார்

தமது வாழ்வாதாரத்திற்காக மீன்பிடி தொழிலை செய்து வரும் இந்த மீனவர்கள் இலங்கை தடுப்பது நடக்கும் என பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

தமிழகம் சென்னை கிளை உயர்நீதிமன்றம்

இவ்வாறான நிலையிலே தமிழகம் சென்னை கிளை உயர்நீதிமன்றம் மத்திய அரசுக்கு இவ்வாறு கட்டளை இட்டுள்ளது அந்த மீனவர்களுடைய உரிமைகளை பாதுகாத்து அந்த மீனவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்கின்ற படி எத்தனை மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் கட்டளை பிறப்பித்துள்ளது

வடநாட்டின் உடைய ஆளுமைக்கு உள்ளானவர்களுடைய அழுத்தம் காரணமாக இவ்வாறு தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படை கைது செய்யப்படுவதை அவர்கள் மறந்து ஆதரித்து வருவதாகவும் அதனால் இதை நீதிமன்ற கட்டளை இந்திய ஆளும் மோடி அரசுக்கு மிகப்பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் விடியமாக இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது

இலங்கைக்கு IMF உதவி பெற உத்தரவாதம்
Posted in இலங்கை செய்திகள்

500 ரூபா லஞ்சம் பெற்ற பொலிஸூக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

500 ரூபா லஞ்சம் பெற்ற பொலிஸூக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

முச்சக்கரவண்டி சாரதி ஒருவரிடம் இலஞ்சம் பெற்ற பொலிஸ் சார்ஜன்ட் ஒருவருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று (28) சிறைத்தண்டனை விதித்துள்ளது.

போக்குவரத்து விதிமீறல் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பதைத் தவிர்ப்பதற்காக, முச்சக்கரவண்டி சாரதி ஒருவரிடம் 500 ரூபாவை பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில் சந்தேகத்திற்குரிய பொலிஸ் சார்ஜன்ட் குற்றவாளியாக இனம்காணப்பட்டார்.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அவருக்கு எதிராக 4 குற்றச்சாட்டுகளின் கீழ் நீதிமன்றில் கருத்துக்களை முன்வைத்திருந்தது.

இதன்படி 4 குற்றச்சாட்டுக்களிலும் குற்றவாளியாக இனம்காணப்பட்ட பொலிஸ் சார்ஜன்ட், குற்றவாளி என நீதவான் நீதிமன்ற நீதிபதி பிரசன்ன அல்விஸ் அறிவித்துள்ளார்.

ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் தலா 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், சிறைத்தண்டனையை ஒரே நேரத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபரான பொலிஸ் சார்ஜன்ட் மீது ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் தலா 5,000 ரூபா வீதம் 20,000 ரூபா அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அத்துடன், லஞ்சமாகப் பெற்றுக் கொள்ளப்பட்ட 500 ரூபாவை பண அபராதமாக மீளப் பெற்றுக் கொள்ளுமாறும் நீதிமன்றம் மேலும் உத்தரவிட்டுள்ளது.

குற்றச் செயலில் ஈடுபட்ட 5 பொலிஸார் இடைநிறுத்தம் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு - திருகோணமலை மாவட்டங்களில் பொலிஸார் ஒழுக்கம் தவறி மேற்கொண்ட குற்றச் செயல் தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 பொலிஸார் பணியில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக இன்று (23) பொலிஸ் உயர் அதிகாரி தெரிவித்தார். மட்டக்களப்பு, வாகரை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த இரு பொலிஸாருக்கிடையே கடந்த 6 ஆம் திகதி மாலை ஏற்பட்ட கைகலப்பில் கல்லால் தாக்கிய சம்பவத்தில் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் காயமடைந்ததையடுத்து தாக்கிய பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் வெளிவந்த பின் பணியில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து கடந்த 11 ஆம் திகதி ஏறாவூரைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் மட்டக்களப்பு நகரில் வேலைபார்த்து வரும் கடையில் வேலை முடித்து கொண்டு இரவு 11 மணிக்கு நடந்து வீடுதிரும்பிக் கொண்டிருந்த இளைஞனை முச்சக்கரவண்டியில் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 3 பொலிஸார் இளைஞனை நிறுத்தி அச்சுறுத்தி அவரிடம் இருந்து 6,500 ரூபாவை பறித்தெடுத்தனர். இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த 3 பொலிஸாரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட 3 பேரையும் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டனர். அதேவேளை கடந்த 20 ஆம் திகதி கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் கடமையற்றி வந்த அதேபிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் 150,000 ரூபா பெறுமதியான மாடு ஒன்றை திருடிய குற்றத்தில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற பிணையில் வெளிவந்த நிலையில் அவரும் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டார். இவ்வாறு குற்றச் செயல் காரணமாக கிழக்கு மாகாணத்தில் கடந்த 15 நாட்களில் 5 பொலிஸார் கைது செய்யப்பட்டு பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் உயர் அதிகாரி தெரிவித்தார்.
Posted in இலங்கை செய்திகள்

யுக்திய சுற்றிவளைப்பு;நீதிமன்றம் அதிரடி உத்தரவு

யுக்திய சுற்றிவளைப்பு;நீதிமன்றம் அதிரடி உத்தரவு

யுக்திய’ விசேட நடவடிக்கையின் போது பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட பல வாகனங்களை பதிவு செய்யப்பட்ட உரிமையாளர்களிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடுவல நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதுடன், ஏறக்குறைய 100 மில்லியன் ரூபா பெறுமதியான வாகனங்களை அதன் பதிவு செய்யப்பட்ட உரிமையாளர்களிடம் ஒப்படைக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) அறிவுறுத்தியுள்ளது.

விசாரணைக்காக வாகனங்களை மேலும் தடுத்து வைக்க பொலிஸார் விடுத்த கோரிக்கையையும் நீதவான் நிராகரித்துள்ளார்.

வழக்கு விசாரணையின் போது, ​​மேற்படி சொத்துக்களை கையகப்படுத்துவதற்கு உயர் நீதிமன்றத்தில் முறையான உத்தரவுகள் பெறப்படவில்லை என பாதுகாப்பு சபை குற்றம் சாட்டியது.

யுக்திய சுற்றிவளைப்பு;நீதிமன்றம் அதிரடி உத்தரவு

இலங்கையில் போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் பொலிஸாரால் ‘யுக்திய’ விசேட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.

இந்த நடவடிக்கையின் போது போதைப்பொருள் கடத்தல்காரர் என்று கூறப்படும் மலலகே சுதத் கித்சிறி என்றழைக்கப்படும் “வெலிவிட்ட சுத்தா”வின் சகோதரிக்கு சொந்தமான பல வாகனங்களை கடுவெல பொலிஸார் கைப்பற்றி குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளதாக தெரியவருகிறது .

குறித்த பெண்ணிடம் இருந்து ஐந்து சொகுசு பஸ்கள், சொகுசு வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றை கடுவெல பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

நீதிமன்ற அவமதிப்பு-ஓய்வு பெற்ற மேஜருக்கு 4 ஆண்டுகள் சிறை
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை பொலிசாருக்கு நெத்தியடி வழங்கிய நீதிமன்றம்

இலங்கை பொலிசாருக்கு நெத்தியடி வழங்கிய நீதிமன்றம்

யுக்திய நடவடிக்கை கீழ் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ள சுமார் 10 கோடி ரூபா பெறுமதியான வாகனங்களை அவற்றின் பதிவு செய்யப்பட்ட உரிமையாளர்களிடம் ஒப்படைக்குமாறு கடுவெல நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வாகனங்களை தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளுக்கு அவகாசம் வழங்குமாறு விடுத்த கோரிக்கையை நிராகரித்து கடுவெல நீதவான் திருமதி சனிமா விஜேபண்டார இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.

இலங்கை பொலிசாருக்கு நெத்தியடி வழங்கிய நீதிமன்றம்

இந்தச் சொத்தை கையகப்படுத்துவதற்கு உயர் நீதிமன்றத்திடம் இருந்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் முறையான உத்தரவுகளைப் பெறவில்லை என பிரதிவாதி சட்டத்தரணி நீதிமன்றில் கடும் ஆட்சேபனையை முன்வைத்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

கடந்த வருடம் டிசெம்பர் மாதம் போதைப்பொருள் கடத்தல்காரரான ‘வெலிவிட்ட சுத்தா’ என்பவரின் சகோதரிக்கு சொந்தமான 5 சொகுசு பஸ்கள்,

நவீன கார் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றை கடுவெல பொலிஸார் கைப்பற்றி குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைத்தமை குறிப்பிடத்தக்கது.

18 ஆண்டுகளாக தாம்பத்ய உறவு இல்லை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

18 ஆண்டுகளாக தாம்பத்ய உறவு இல்லை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

18 ஆண்டுகளாக தாம்பத்ய உறவு இல்லை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

18 ஆண்டுகளாக, திருமணம் நடந்தும் தாம்பத்ய உறவு இல்லாத சூழலில் அந்நபர் மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரினார். அதற்கு நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பை வழங்கியுள்ளது.

மத்திய பிரதேசத்தில் நீதிபதிகள் ஷீல் நகு மற்றும் வினய் ஷரப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசித்திர வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது.

இதன்படி, மனுதாரருக்கு 2006-ம் ஆண்டு ஜூலையில் திருமணம் நடந்தது. ஆனால், அவருடன் சேர்ந்து வாழ அவருடைய மனைவி மறுத்திருக்கிறார்.

திருமண நிகழ்வை ஏற்று கொள்ள மறுத்ததுடன், கட்டாயப்படுத்தி திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்க வைத்து விட்டனர் என்று அந்த பெண் கணவரிடம் முதலிரவில் கூறியுள்ளார். அந்த பெண் வேறொருவருடன் காதலில் இருந்துள்ளார். இதனால், கணவரிடம் தன்னை காதலரிடம் சேர்த்து வைக்கும்படியும் கெஞ்சியிருக்கிறார்.

இதனை கேட்ட அந்த நபர் அதிர்ச்சி அடைந்து உள்ளார். அதே மாதத்தில், அந்த கணவர் வேலைக்காக அமெரிக்காவுக்கு புறப்பட்டு சென்றிருக்கிறார். இதனால், அவருடைய மனைவி செப்டம்பரில், பிறந்த வீட்டுக்கு சென்றார். அதன்பின் அவர் வீடு திரும்பவேயில்லை.

18 ஆண்டுகளாக தாம்பத்ய உறவு இல்லை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

இதனால், 2011-ம் ஆண்டு போபாலில் உள்ள குடும்ப நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி கணவர் வழக்கு பதிவு செய்திருக்கிறார். 2014-ம் ஆண்டு அவருடைய மனு தள்ளுபடியானது. இதனை தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறார்.

இதுபற்றிய உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், இந்த வழக்கில் அந்நபர் உடல்ரீதியிலான திறனற்றவராக இல்லாதபோது அல்லது குதியான காரணம் எதுவுமின்றி ஒரு குறிப்பிட்ட கால அளவுக்கு, பாலியல் உறவு வைத்து கொள்ள ஒருதலையாக மறுப்பது என்பது, மனதளவில் கொடுமை செய்யும் அளவுக்கு கொண்டு அளவுக்கு கொண்டு செல்லும் என தெரிவித்தது.

இந்த திருமணம் முறைப்படி நடந்துள்ளது. குறுகிய காலத்தில் இந்தியாவை விட்டு கணவர் வெளிநாடு செல்வார் என்பது முன்பே முடிவு செய்யப்பட்டு இருந்தது. இந்த காலகட்டத்தில், திருமணம் முழுமையடைவதற்கான நம்பிக்கையுடன் மனுதாரர் இருந்துள்ளார்.

ஆனால், அதற்கு அவருடைய மனைவி மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த செயல் நிச்சயம் மனதளவில் கொடுமைப்படுத்துவதற்கு ஈடாகும் என்று நீதிமன்றம் தெரிவித்து உள்ளது. தனை அடுத்து அந்த நபருக்கு விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்தது.

இதனால், 18 ஆண்டுகளாக, திருமணம் நடந்தும் தாம்பத்ய உறவு இல்லாத சூழலில் அந்நபர் மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்றிருக்கிறார்.

குருந்தூரில் கட்டளைகளை மதிக்கவில்லை: நீதிமன்றம்
Posted in இலங்கை செய்திகள்

குருந்தூரில் கட்டளைகளை மதிக்கவில்லை: நீதிமன்றம்

குருந்தூரில் கட்டளைகளை மதிக்கவில்லை: நீதிமன்றம்

குருந்தூர் மலை விவகாரத்தில் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் ஏற்கெனவே வழங்கிய கட்டளைகளை மதிக்காது நிர்மானப் பணிகள் இடம்பெற்றுள்ளன எனவும் தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் முல்லைத்தீவு நீதிமன்றக் கட்டளைகளை மதித்து நடைமுறைப்படுத்தவில்லை என்றும் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா, வியாழக்கிழமை (31) அறிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை பகுதியிலே அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரை உள்ளிட்ட கட்டுமான பணிகள் தொடர்பிலான வழக்கு வியாழக்கிழமை (31) திகதியிடப்பட்டிருந்தது.

முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது ஆலய நிர்வாகம் சார்பிலே முல்லைத்தீவு மாவட்டத்தின் சட்டத்தரணிகள் அனைவரும் முன்னிலையாகி இருந்தனர்.

ஆலய நிர்வாகம் சார்பாக நிர்வாகிகள் எம்.பிக்களான செல்வராசா கஜேந்திரன், சிவஞானம் சிறீதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், எம் ஏ சுமந்திரன், முன்னாள் மாகாண சபை விவசாய அமைச்சர் கந்தையா சிவநேசன் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்

குருந்தூரில் கட்டளைகளை மதிக்கவில்லை: நீதிமன்றம்

இதேவேளை, தொல்லியல் திணைக்களம் சார்பாக தொல்லியல் திணைக்களத்தின் வவுனியா, முல்லைத்தீவு,மன்னார் மாவட்டங்களின் உதவி பணிப்பாளர் மற்றும் தொல்லியல் திணைக்கள சட்டத்தரணிகள் பொலிசார் நீதிமன்றத்தில் முன்னிலையாகி இருந்தனர் போதே நீதிபதி மேற்குறித்த விடயத்தை அறிவித்தார்.

Posted in இலங்கை செய்திகள்

வர்த்தகர்களுக்கு நீதிமன்றங்களினால் அபராதம்

வர்த்தகர்களுக்கு நீதிமன்றங்களினால் அபராதம்

அம்பாறை மாவட்டத்தில் கடந்த ஜுலை மாதம் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தை மீறி வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த வர்த்தகர்களுக்கு நீதிமன்றங்களினால் 99 ஆயிரத்தி 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் அம்பாறை மாவட்ட புலனாய்வு உத்தியோகத்தர் கே.எம்.ஏ. றிஸ்லி இது தொடர்பாக தெரிவிக்கையில் ,

கட்டுப்பாட்டு விலையை மீறி கூடுதலான விலைக்கு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர்கள் செய்த முறைப்பாட்டையடுத்து சுற்றி வளைப்புகளை பாவனையாளர் அலுவலகல்கள் அதிகார சபையின் புலனாய்வு உத்தியோகத்தர்கள் மேற்கொண்டதாக தெரிவித்தார்.

அம்பாறை,தெஹியத்தக்கண்டி,அக்கரைப்பற்று, பொத்துவில், கல்முனை, சம்மாந்துறை ஆகிய நீதிமன்றங்களின் நியாயாதிக்கத்திற்குட்பட்ட பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட 38 சுற்றிவளைப்புகளில், நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட 25 வழக்குகளில் 17 வர்த்தகர்களுக்கு 99 ஆயிரத்தி 500 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதோடு, ஏனைய வர்த்தகர்களுக்கு நீதிமன்றங்களினால்
அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்தெரிவித்துள்ளார்.

    Posted in இலங்கை செய்திகள்

    21 பேருக்கு வெளிநாடு செல்ல தடை

    21 பேருக்கு வெளிநாடு செல்ல தடை

    இலங்கை,கொழும்பு ; ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதான பொருளாதார நிலையங்களின் நுழைவாயிலை மறைத்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகக்

    கூறப்படும் 21 போராட்டக்காரர்களின் வெளிநாட்டுப் பயணத்தை உடனடியாகத் தடை செய்யுமாறு நேற்று (28) பிற்பகல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் குறித்த சந்தேகநபர்கள் வெளிநாடு செல்லத் திட்டமிட்டுள்ளதாக புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த

    தகவலின்படி, கோட்டை பொலிஸ் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

    இவர்கள் வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக உடனடியாக கட்டுநாயக்க மற்றும் மத்தள விமான நிலையங்களுக்கு அறிவிக்குமாறு குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

    21 பேருக்கு வெளிநாடு செல்ல தடை

    சங்கைக்குரிய வீகொடவத்த காஸ்யப தேரர், திசர நுவந்த அனுராத, ருமேஸ் இந்திக்க, எல்.என்.டி பெரேரா, ஆர்.ஏ. ராஜபக்ச, சிறில் மனதுங்க, இசுரு வர்ணகுல, ரொஷான் அலி டானிஷ் அலி, சண்டிமால் கமகே, டி.ஆர்.டி. பெந்தர

    ஆரச்சி, எம். காசிம், என். எம். தௌபிக், நிலந்த சமித் பெர்னாண்டோ, பந்துல பிரபாத், சமீர மதுசங்க சிறிவர்தன, எச். எம். டி. ஜி. மெனிகா, எம்.ஆர். சாரக

    கிம்ஹான், சதுரிகா சரோஜினி, ஜே. நிலந்த, எம். நிஷாந்தி மற்றும் சுதத் லக்ஷ்மன் ஆகிய 21 பேருக்கு வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது.

    கடந்த 13ம் திகதி, தேசிய தொலைக்காட்சி நிறுவனத்தை முற்றுகையிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட ஊழியர்களை மிரட்டி, நேரடி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஈடுபட்ட ரொஷான் அலி டானிஷ்

    அலி மற்றும் சமிந்த கலும்பிரிய அமரசிங்க ஆகியோரின் வெளிநாட்டு பயணத்தை இடைநிறுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்க நேற்று உத்தரவிட்டுள்ளார்.

    கறுவாத்தோட்ட பொலிஸார் விடுத்த கோரிக்கைக்கு அமைய, பிரதான நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

    நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையின் பிரகாரம், பொலிஸாரால் கைது செய்யப்பட்ட டானிஷ் அலியை எதிர்வரும் 1ஆம் திகதி

    நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உத்தரவிடப்பட்டது.சந்தேக நபரின் அடையாளப் பிடியாணையையும் பிரதம நீதவான் இரத்துச் செய்தார்.

    அத்துடன், பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் முன்னாள் அழைப்பாளர் லஹிரு வீரசேகர மற்றும் டெம்பிடியே சுகதானந்த

    தேரரையும் கைது செய்வதற்காக கோட்டை நீதவான் திலின கமகே பிடியாணை பிறப்பித்துள்ளார்.

    கல்வி அமைச்சுக்கு முன்னால் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தின் போது அங்கு சொத்துகளுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பாக கைது செய்யப்பட்ட

    ருஹுணு பல்கலைக்கழகத்தின் முன்னாள் தலைவர் என்னடி வேரங்க புஷ்பக டி சில்வாவை எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவெல நீதவான் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

    இதேவேளை, பாராளுமன்றம் செல்லும் பொல்துவ சந்திக்கு அருகில் (13ஆம் திகதி) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை கலவரச் சூழலுக்கு தூண்டியதாக

    கூறப்படும் போராட்டத்தின் தீவிர உறுப்பினரான பெத்தும் கர்னர் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் நேற்று (28ஆம் திகதி) கைது செய்யப்பட்டுள்ளார்.

    கடந்த 13ஆம் திகதி ஜனாதிபதி மற்றும் பிரதமரை வெளியேறுமாறு வலியுறுத்தி பொல்துவ சந்திக்கு அருகில் போராட்டம் நடைபெற்றுக்

    கொண்டிருந்த வேளையில் பெரும் கும்பலை அந்த இடத்திற்கு வரவழைத்து பாராளுமன்றத்தை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு குறிப்பிடுகின்றது.

    அன்றைய தினம், ஆர்ப்பாட்டக்காரர்கள் முதலாவது பாதுகாப்பு அரணை உடைத்து, இரண்டாவது பாதுகாப்பு வேலியில் கடமையாற்றிய இராணுவத்தின் பாதுகாப்புப் படையினருடன் மோதலுக்குச் செல்ல முற்பட்டுள்ளனர்.

    அங்கு நிலைமையைக் கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்க நடவடிக்கை

    எடுத்ததுடன், அங்கு 24 பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் தாக்கப்பட்டனர். மேலும், போராட்டக்காரர்கள் இரு இராணுவ வீரர்களை தாக்கி அவர்களிடம் இருந்து இரண்டு துப்பாக்கிகளையும் திருடிச் சென்றதாக தெரிவிக்பட்டது

    இச்சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்காக திரு.பெத்தும் கெர்னர் கடந்த 18ஆம் திகதி குற்றப்புலனாய்வு பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்த

    போதிலும், அவர் அன்றைய தினம் அங்கு ஆஜராகாத போதிலும், நேற்றைய தினம் குற்றப் புலனாய்வு பிரிவிடம் சரணடைந்தார்.

    அதன்படி அவர் கைது செய்யப்பட்டதாக அந்த பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    இராணுவ மருத்துவப் பிரிவில் லெப்டினன்டாக இருந்து வெளியேறி இங்கிலாந்து சென்றுள்ள இவர், அங்கிருந்து இலங்கையில் இளம் சமூகத்தை

    இணையத்தில் போராட்டத்துக்கு தூண்டிவிட்டு வருவது தெரியவந்துள்ளது. காலி முகத்திடல் போராட்டம் ஆரம்பமானதும், இந்நாட்டிற்கு வந்த பெத்தும் கெர்னரை


    போராட்ட களத்தில் இருந்து விரட்டியடிக்க அங்கிருந்த ஒரு குழுவினர் செயற்பட்டுள்ளனர்.

      Posted in சினிமா

      சூர்யா – ஜோதிகா மீது வழக்கு.. அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்

      சூர்யா – ஜோதிகா மீது வழக்கு.. அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்

      தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான சூர்யா – ஜோதிகா மீது வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

      சூர்யா – ஜோதிகா மீது வழக்கு.. அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்
      சூர்யா – ஜோதிகா


      நடிகர் சூர்யா நடிப்பில், கூட்டத்தில் ஒருவன் பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வெளியான திரைப்படம் ஜெய்பீம். இப்படத்தில் கர்ணன் பட நடிகை ரஜிஷா விஜயனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இருளர் பழங்குடியின மக்களின்

      வாழ்க்கை மற்றும் உரிமைகள் பற்றி பேசும் இப்படத்தில் நடிகர் சூர்யா, பழங்குடியின மக்களுக்காக வாதாடும் வழக்கறிஞர் வேடத்தில் நடித்திருந்தார்.

      கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நேரடியாக ஓ.டி.டி.யில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் வெற்றியால் பல, விருதுகளும் கிடைத்தன. இருந்தும் படத்திற்கு பல எதிர்ப்புகள்

      எழுந்திருந்து. இப்படத்தில் வன்னியர் சமூகத்தைத் தவறாகச் சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறி வன்னியர் சங்கம் சார்பில் படக்குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

      அதன்பிறகு சூர்யா மற்றும் இயக்குனர் ஞானவேல் இருவரும், குறிப்பிட்ட சமூகத்தினரை காயப்படுத்தும் எண்ணத்தில் படம் எடுக்கவில்லை என்று விளக்கமளித்தனர்.

      சூர்யா – ஜோதிகா
      சூர்யா – ஜோதிகா

      இதனை தொடர்ந்து ஜெய் பீம் படத்தில் வன்னியர் சமூக மக்களின் உணர்வுகளை புண்படுத்திவிட்டதாக கூறி சூர்யா மற்றும் ஜோதிகா இருவரின் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ருத்ர வன்னியர் சேனா அமைப்பின்

      நிறுவன தலைவர் சந்தோஷ் நாயக்கர் புகார் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். மேலும் அந்த புகாரில் இந்த விவகாரம் தொடர்பாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்

      வேளச்சேரி காவல் ஆய்வாளரிடம் புகார் அளித்ததாகவும், ஆனால் அவர் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை விசாரித்த நீதிமன்றம்,

      படத்தின் தயாரிப்பாளர்கள் சூர்யா மற்றும் ஜோதிகா, இயக்குனர் ஞானவேல்,
      கலை இயக்குனர் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்ய வேளச்சேரி காவல் நிலையத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

        Posted in இலங்கை செய்திகள்

        மகிந்த மகன் நாமலுக்கு எதிராக வழக்கு

        முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட ஆறு சந்தேக நபர்களுக்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை எதிர்வரும் செப்டெம்பர் மாதம்

        14 ஆம் திகதி மேலதிக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

        இந்த வழக்கு இன்று (28) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

        இதன்போது நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட பிரதிவாதிகள் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.

        வழக்கின் மேலதிக சாட்சியங்களை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 14 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு உத்தரவிட்ட நீதிபதி, அன்றைய தினம் சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளார்.

        கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது நாடாளுமன்ற
        உறுப்பினராக இருந்த போது நாமல் ராஜபக்ஷ


        உட்பட ஆறு சந்தேக நபர்களுக்கு எதிராக 30 மில்லியன் ரூபாவை
        கவர்ஸ் கூட்டுத்தாபனத்தில் முதலீடு செய்ததன் மூலம் பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் சட்டமா அதிபர் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார்.