காணி அபகரிப்பு வர்த்தமானி கேள்வி கேட்ட சிறிதரன்
Posted in இலங்கை செய்திகள்

காணி அபகரிப்பு கேள்விகேட்ட சிறிதரன்

காணி அபகரிப்பு கேள்விகேட்ட சிறிதரன்

காணி அபகரிப்பு கேள்விகேட்ட சிறிதரன் வடக்கு, கிழக்கில் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானியின் உள்நோக்கம் என்ன என நாடாளுமன்றில் சிறீதரன் எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள 5 ஆயிரத்து 700 ஏக்கருக்கும் அதிகமான தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சுவீகரிப்பதற்காக,

2025.03.28 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலின் உள்நோக்கம் என்ன என்பதை, கமத்தொழில், கால்நடை வளங்கள்,

காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால்காந்த சபைக்குப் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்,

என்று நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

இன்றைய சபை அமர்வில், நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 27.2 இன் கீழ், நாடாளுமன்றக் குழுத் தலைவராக, துறைசார் அமைச்சரிடம்,

வாய்மொழி மூல விடைக்கான வினாக்களை முன்வைக்கும்போதே இந்த விடயம் குறித்து சிறீதரன் எம்.பி. கேள்வி எழுப்பினார். இதன்போது அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

“குறித்த வர்த்தமானி அறிவித்தல் மூலம் கோரப்பட்டுள்ள காணிகள் என்ன தேவைக்காகக் கோரப்பட்டுள்ளன என்பதையும்,

6000 ஏக்கர் வரையான காணிகளை அவசரமாகச் சுவீகரிப்பதற்கான காரணம் என்ன என்பதையும் அமைச்சர் இந்தச் சபைக்கு அறிவிக்க வேண்டும்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நீண்டகாலம் நடைபெற்ற யுத்தம் காரணமாக மக்கள் இடம்பெயர்ந்து, உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும், உறவினர் நண்பர்களின் வீடுகளிலும் வாழும்போது

அவர்களது காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்காமல், மக்களின் காணிகளை சுவீகரிக்கும் இந்த வர்த்தமானி அறிவித்தலின் உள்நோக்கம் என்ன என்பதையும்,

தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நீண்டகால யுத்தம் காரணமாக அவர்களது காணி ஆவணங்கள் தவறவிடப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலகங்கள் தெரிவிக்கும் நிலையில்,

இந்தப் புதிய வர்த்தமானி அறிவித்தல் மூலம் காணி உரிமையை உறுதிப்படுத்துமாறு எவ்வாறு கோர முடியும் என்பதையும் அமைச்சர் இந்த உயரிய சபைக்கு அறிவிக்க வேண்டும்.” என்று வலியுறுத்தினார்.

நாடாளுமன்றக் குழுத் தலைவர்களால் கேட்கப்படும் வாய்மொழி மூல வினாக்களுக்கு, துறைசார் அமைச்சர் உரிய காலத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழர் காணி அபகரிப்பு இரகசியமாக ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் வர்த்தமானி கடந்த வாரம் வெளியாகி இருந்தது.

வடக்கு மாகாணத்தில் மருதங்கேணி முதல் முள்ளிவாய்க்கால் வரை யாழ்ப்பாணம் மாவட்டம், கிளிநொச்சி மாவட்டம், முல்லைத்தீவு மாவட்டம் ஆகியவற்றின்

பெரும்பாலும் கடற்கரையோரப் பிரதேசங்களை அண்டி,5 ஆயிரத்து 940 ஏக்கர் நிலம் அரச உடமையாக்கப்படுவதற்கான வர்த்தமானி அறிவித்தல் காணி ஆணையாளர் நாயகத்தால் சத்தம் சந்தடியின்றி வெளியிடப்பட்டுள்ளது.

அரசு அடையாளப்படுத்திய காணிகளை எதிர்வரும் முன்று மாதங்களுக்குள் ஒருவரும் உரிமை கோராவிட்டால் அவை அரச காணிகளாக பிரகடனப்படுத்தப்படும் வர்த்தமானி அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பிலேயே இன்று நடந்த பாராளுமன்ற அமர்வில் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கேள்வி எழுப்பி இருந்தார்.

திட்டமிடப்பட்ட செயலாக இந்த காணி அபகரிப்பு இரகசிய வர்த்தமானி வெளிவந்தமை அதிர்ச்சிக்குரியதாகும்.

சிங்கள பெளத்த பேரினவாதம் தமிழர்கள் நிலைகளை வளைத்து அதனை ஏப்பமிட துடிப்பதை இந்த காணி அபகரிப்பு விடயம் மீளவும் எடுத்துக் காட்டுகிறது.

ரணில் ஆடம்பரசெலவு அதிர்ச்சியில் மக்கள்
Posted in இலங்கை செய்திகள்

ரணில் ஆடம்பரசெலவு அதிர்ச்சியில் மக்கள்

ரணில் ஆடம்பரசெலவு அதிர்ச்சியில் மக்கள்

ரணில் ஆடம்பரசெலவு அதிர்ச்சியில் மக்கள் உறைந்துள்ள செய்தி தற்பொழுது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா , 2022 முதல் 2024 வரை ,பயணித்த அவரது வெளிநாட்டு பயணங்கள் தொடர்பான ,விடயங்கள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கா , 23 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

இதற்காக 1. 27 பில்லியன் அவர் செலவு செய்துள்ளதாக, வெளிவந்துள்ள தகவல் மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

நாடு வாங்குரோத்து நிலையில் செல்கின்ற பொழுது, இவ்விதமான ஆடம்பரமான வாழ்க்கைச் செலவுகளை, அவர் மேற்கொண்டு நாட்டை கீழ் நிலைக்குத் தள்ளி உள்ளதாக ,மக்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் குற்றம் சுமத்துகின்றனர்.

ஆடம்பர வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டு, அதன் ஊடாகவும் பல மில்லியன்களை மோசடி செய்துள்ளதான, தகவலும் வெளியாகி இருக்கிறது.

சிங்கப்பூராக மாற வேண்டிய இலங்கை ,இவ்வாறான லஞ்ச ஊழல் பெருச்சாளிகள் வசம் சிக்கி ,இன்று சீரழிந்து வருவதாக அவர் கண்ணீர் மல்கினார் .

எனவேதான் இலங்கை மக்கள் விழிப்புணர்வு கொண்டு ,எழுந்து இவ்வாறான லஞ்ச ஊழல் பெருச்சாளிகளுக்கு எதிராக ,குரல் கொடுத்து போராட வேண்டுமென, தற்பொழுது மக்கள் தமது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர் .

முன்னாள் தமிழின படுகொலையாளி ,மஹிந்த ராஜபக்,ஷ கோத்தபாய ராஜபக்,ஷ மைத்திரிபால சிறிசேன ,உள்ளிட்டவர்களும் இவ்வாறான ஆடம்பரமான பயணங்களை மேற்கொண்டு இருந்தமை இங்கே குறிப்பிடத்தக்கது.

அர்ச்சுனா தங்கம் தப்பியோட திட்டம்
Posted in இலங்கை செய்திகள்

அர்ச்சுனா தங்கம் தப்பியோட திட்டம்

அர்ச்சுனா தங்கம் தப்பியோட திட்டம்

அர்ச்சுனா தங்கம் தப்பியோட திட்டம், போட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் சமூக ஊடக போராளிகள் தமது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

தேர்தல் பரப்புரைக்க கூறி உலக மக்களிடமிருந்து பல மில்லியன் கணக்கான பணத்தை கொள்ளையடித்த பாராளுமன்ற உறுப்பினர்.

அர்ஜுனா இராமநாதன் அவரது செயலர் தங்கமாகியோர் , இலங்கையை விட்டு புலம்பெயர் நாட்டுக்கு தப்பியோடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்கான நடவடிக்கையில் அவர்கள் ஈடுபட்டு உள்ளதாக, சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் இப்படி எழுதி வருகிறார்கள்.

இந்த விடயம் என்பது தற்பொழுது புலம்பெயர் வெளிநாட்டு தமிழர்கள் மத்தியில் ,பேசு பொருளாக மாற்றம் பெற்றுள்ளது.

மக்களிடம் பணத்தினை வாங்கிவிட்டு தான் பெற்றுக்கொள்ளவில்லை என, கபட நாடக மாடி, தான் திருடன் என்பதை வசமாக சிக்கினார் அர்ஜுனா.

இதன் பின்னர் நாட்டில் இருக்க முடியாத காரணத்தினால் ,வெளிநாடு தப்பியோட இருப்பதாக அந்த குறிப்பேடுகள் குறிப்பிடுகின்றன.

தொடர்ந்தும் இலங்கை அரசியலில் மக்களை ஏமாற்றி ,அவதூறுபடுத்தி, தமிழ் பெண்களையும், தமிழ் தேசியத்தையும் ,தமிழ் தேச வாதத்தையும் ,இழிவுபடுத்தி வரும் அர்ச்சுனா விரட்டப்பட வேண்டியவர் என மக்கள் தெரிவிக்கின்றனர் .

வன்னி மைந்தன் tiktok தளம் இவரை பாராளுமன்ற உறுப்பின ஆக்கியதிலிருந்து ,இன்று வரை அவர் பல்வேறுப்பட்ட இன்னல்களை செய்து வருவதாகவும் ,வன்னி மைந்தன் tiktok தளம் மீதும் மக்கள் குற்றங்களை சுமத்தி வருகின்றனர் .

எனினும் வன்னி மைந்தன் தளம் தாங்கள் ஆதரிக்கின்ற பொழுது ,இவ்வாறான பேச்சுக்களை அவர் பேசவில்லை என மறுத்து வருகின்றனர் .

அப்படி அவர் உரைத்திருந்தால் இப்போது போன்று அன்றே திருப்பித் தாக்கி இருப்போம் என அவர்கள் வாதம் வைக்கிறார்கள்.

ஆகவேதான் தற்பொழுது 5 மாதத்தில் மக்கள் மனங்களிலிருந்து அர்ச்சுன ராமநாதன் வீழ்த்தப்பட்டுள்ள சம்பவம் காணப்படுகிறது.

பெண்கள் தொடர்பாக அவதூறு அர்ச்சுனா பேசும் பொழுது ,அதனை தட்டிக் கேட்காது தங்கம் பம்மிக் கொண்டுள்ளது, ஏன் என இந்த கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது.

அர்ச்சுனா தங்கமாகிய நாட்டை விட்டு தப்பி ஓடுவார்கள் என இப்படி தெரிவித்து வருகிறார்கள்.

இஸ்ரேல் அட்டூழியம் 38பாலஸ்தீனர் பலி
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் அட்டூழியம் 38பாலஸ்தீனர் பலி

இஸ்ரேல் அட்டூழியம் 38பாலஸ்தீனர் பலி

இஸ்ரேல் அட்டூழியம் 38பாலஸ்தீனர் பலி யாகி உள்ளதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணித்தியாலத்தில் இஸ்ரேல் இராணுவம் நடத்திய திடீர் தாக்குதலில் ,அப்பாவி பலஸ்தீன பொதுமக்கள் 38 பேர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்காலிக முகாம்களில் தங்கி இருந்த மக்களை இலக்கு வைத்து, யூத இராணுவம் ,விமானங்கள் ,ஏவுகணைகள் ,மூலம் தாக்குதலை நடத்தினர்.

இதன் பொழுதே 38 அப்பாவி பலஸ்தீன மக்கள் பலியாகியும், 145க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர் .

இதுவரையான கால பகுதியில் பலஸ்தீன யூத மோதல்களில் ,52,653 பொதுமக்கள் பலியாகியும் ,ஒரு லட்சத்து 18,897 மக்கள் காயம் அடைந்துள்ளனர்.

சர்வதேச விதிகளை மீறி பலஸ்தீன மக்கள் மீது ,இஸ்ரேல் இராணுவம் நடத்தி வரும் தாக்குதலை, தடுத்து நிறுத்த முடியாது உலக நாடுகள் வேடிக்கை பார்து கொண்டுள்ளன .

தொடர்ந்தும் சர்வதேச விதிகளை மீறி ,அப்பாவி பலஸ்தீன மக்களை தாக்குதல் நடத்தி வருவதால் மிகப்பெரும் பர பரப்பு ஏற்பட்டுள்ளது.

இஸ்ரேல் விமான தளம் நொறுங்கியது
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் விமான தளம் நொறுங்கியது

இஸ்ரேல் விமான தளம் நொறுங்கியது

இஸ்ரேல் விமான தளம் நொறுங்கியது ,ஹவுதிகள் நடத்திய தாக்குதலில் மீளவும் யூத படைகள் இரண்டாவது விமான தளம் பாரிய சேதங்களுக்கு உள்ளாகி நொறுங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதிலடி தாக்குதலாக இப்பொழுது இஸ்ரேல் இரண்டாவது விமான தளத்தை இலக்கவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

யூத இராணுவத்தின் மிக முக்கியமான உள்ளூர் விமான சேவைகள் அதிகமாக இடம்பெறும் ராமன் விமானதளத்தை இலக்கு வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ட்ரான் ரக வான் வழி தாக்குதலை அடுத்து, குறித்த விமான தளம் பாரிய சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாக ,தாக்குதலை நடத்திய போர்ப்படைகள் அறிவித்துள்ளன .

இரண்டாவது விமானத்தளம் மீது ஹவுதிகள் துணிகர தாக்குதலை நடத்தி இஸ்ரேலை அலற விட்டிருக்கின்றனர்.

பல மில்லியன் டாலர்களைக் கொட்டி போரை நடத்தி வரும் இஸ்ரேல் தற்பொழுது ஏமன் ஹவுதி அன்சர் அல்லா நடத்தும் திடீர் தாக்குதினால் அதிர்ந்து போய் இருக்கின்றனர் .

ஈரான் வழங்கிய நீண்ட தூர ஏவுகணைகள் ,தற்கொலை தாக்குதல் விமானங்களை பயன்படுத்தி இஸ்ரேலை இடைவிடாது தாக்கி வருகின்றது .

இஸ்ரேல் நடத்தும் கொடூர யுத்தத்திற்கு பதிலடியாக ,இஸ்ரேலையும் நிலைகுலைய வைக்கும் தாக்குதலை ,ஹவுதி அன்சர் அல்லா நடத்தி வருவதால் இஸ்ரேல் அச்சத்தில் உறைந்து இருக்கிறது .

அதனால் கவுதிப்படைகளின் இராணுவ தளபதிகள் ,தலைவர் உள்ளிட்டவர்களை படுகொலை செய்யும் நடவடிக்கையில் ,மொஸாட் அமெரிக்கா தீவிரமாக ஈடுபடும் என அடித்து கூறலாம்.

சொல்வாயா
Posted in கவிதைகள்

சொல்வாயா

சொல்வாயா

உனை நான் பார்த்தேன்
எனையே உடன் மறந்தேன்

காளை உனை நினைத்து
காதல் கொண்டு துடித்து

நீ செல்லும் வழி மீது
நித்தமும் விழி வைத்து

துடிதுடிக்கும் இதயத்தோடும்
படபடக்கும் விழிகளோடும்

கன்னி நான் காதலோடு
உனை எண்ணிக் காத்திருக்கின்றேன்

திருமகனே என் மனமகனே
ஒருமுறையேனும் உன்

உதட்டைக் குவித்து
நெத்தியில் அன்பாக

முத்தம் ஒன்று இட்டு
சத்தமாக சொல்

கன்னி இவளே உன்
காதலி என்று…!

சொல்வாயானால்,

வெண்ணிலா சிரிக்கும்
விண்மீன் ஒளிரும்

வானம் பூத்தூவும்
வானவில் நிறம்கூடும்

மின்னல் மின்னும்
முகில்கள் நாணும்

இவைக்காக என்றாலும்
அவைமுன் காதலை சொல்

கன்னி இவளே உன்
காதலி என்று…!

ஆக்கம் – ராகவி
08/05/2025

மாகாண சபைத் தேர்தல் விரைவில்
Posted in இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தல் விரைவில்

மாகாண சபைத் தேர்தல் விரைவில்

மாகாண சபைத் தேர்தல் விரைவில் ,மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடாத்த வேண்டி இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் என தமிழ் அரசியல்வாதிகள் தெரிவித்துள்ளனர்.

நிரந்தரமான ஒரு அரசியல் தீர்வை அடைய வேண்டுமென்ற எங்களுடைய இலக்கிற்கு வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் மீண்டும் ஆணையை தந்திருக்கின்றார்கள் என,

இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் இலங்கை தமிழரசுக்கட்சியின் அலுவலகத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனை தெரிவித்தார்.

இந்த ஊடக சந்திப்பில் இலங்கை தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், வைத்தியர் இ.சிறிநாத் ஆகியோரும் கருத்து தெரிவித்தனர்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல்

2025 ஆம் ஆண்டிற்கான உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சியானது வடக்கு கிழக்கிலே அமோகமான வெற்றியைப் பெற்றிருக்கின்றது. நாடு யாரிடமாவது இருக்கட்டும்,

தமிழர் தாயகம் தமிழரசோடு என்பது நாங்கள் தேர்தல் பரப்புரை காலத்தில் சொன்னதற்கமைவாக வடக்கு கிழக்கிலே இருக்கின்ற மக்கள் எங்களுக்கு அமோகமான வெற்றியைத் தந்திருக்கின்றார்கள்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வெற்றி

இது உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வெற்றி என்பதைத் தாண்டி இது தமிழர்களுடைய எதிர்காலத்திற்கான ஆணையொன்றை தமிழ் மக்கள் தமிழரசுக் கட்சியிடம் ஒப்படைத்திருக்கின்றார்கள்.

நிரந்தரமான ஒரு அரசியல் தீர்வை அடைய வேண்டுமென்ற எங்களுடைய இலக்கிற்கு வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் மீண்டும் ஆணையை தந்திருக்கின்றார்கள்.

அந்தவகையிலே விரைவில் மாகாணசபைத் தேர்தலை நடத்த வேண்டுமென்று நாங்கள் அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும்.

மாகாணசபைத் தேர்தலிலும் வடக்கு கிழக்கில் வெல்வோம்

மாகாணசபைத் தேர்தலிலும் வடக்கு கிழக்கில் நாங்கள் கூடுதலான ஆசனங்களைப் பெற்று ஆட்சியமைக்க இருக்கின்றோம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நாங்கள் போட்டியிட்ட பதினொரு சபைகளிலும் ஆசனங்களைப் பெற்றிருக்கின்றோம்.

பெரும்பான்மையாக தமிழர்கள் இருக்கின்ற அனைத்து பிரதேச சபைகளிலும் நாங்கள் பெரும்பான்மையான ஆசனங்களை வென்றிருக்கின்றோம். அனைத்து பிரதேச சபைகளிலும் ஆட்சியமைக்கக்கூடிய சூழல் இருக்கின்றது.

அத்துடன் நாங்கள் சிறுபான்மையாக இருக்கின்ற இரண்டு பிரதேச சபைகளிலும் ஆசனங்களை பெற்றிருக்கின்றோம்.

இன்று மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து முதற்கட்டமாக பட்டியல் ஆசனங்கள், சபை அமைத்தல், யாருடன் இணைவது என்பது பற்றி கலந்துரையாட இருக்கின்றோம்.

இன்று நாங்கள் போட்டியிட்ட அனைத்து பிரதேச சபை உறுப்பினர்களையும் ஒவ்வொரு சபையாக அழைத்து அந்தந்த சபைகளில் பட்டியல் உறுப்பினர்கள் யார் என்றும் தவிசாளர்,

பிரதி தவிசாளர் பற்றி எவ்வாறு தீர்மானம் எடுப்பது என்பது பற்றியும் யாருடன் நாங்கள் இணைந்து ஆட்சியமைப்பது என்பது பற்றியும் மட்டக்களப்பு மாவட்டத்தில் கலந்துரையாட இருக்கின்றோம்.

எதிர்வரும் இரண்டு, மூன்று வாரங்களுக்குள் இலங்கை தமிழரசுக் கட்சி அனைத்து சபைகளிலும் ஆட்சியமைக்கக்கூடிய ஒரு வியூகத்தை நாங்கள் அமைக்கவிருக்கின்றோம்.

இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன்,

உள்ளூராட்சி சபைகளுக்கான பிரதிநிதித்துவ முறை என்பது சற்று சிக்கலான முறை என்பதை நீங்கள் அறிவீர்கள்.

அப்படியான சிக்கலான ஒரு முறை காணப்பட்டபோதிலும் தமிழர்கள் அதிகமாக வாழ்கின்ற அனைத்து சபைகளிலும் நாங்கள் கணிசமான வாக்குகளைப் பெற்றிருக்கின்றோம்.

வாக்குத்தொகை அடிப்படையில் நாங்கள் முதலாவதாக இருக்கின்றோம், சபைகளின் பிரதிநிதித்துவத்தை கைப்பற்றியிருப்பதன் அடிப்படையிலும் நாங்கள் முதலாவதாக இருக்கின்றோம்.

பிரதிநிதித்துவ முறையில் காணப்படுகின்ற சில குறைபாடுகள் காரணமாக நாங்கள் அதிகப்படியான வாக்குகள் பெற்றிருந்தாலும் தொங்கு நிலையான ஆசனங்கள் எனப் பலவாறான ஆசனங்கள் காணப்படுகின்றபடியால்

அவற்றையெல்லாம் கடந்து ஒன்பது உள்ளுராட்சி சபைகளிலும் ஆட்சியமைக்கக்கூடிய அளவிற்கு எமது கட்சி உரிய ஆசனங்களை தக்கவைத்துக்கொண்டிருக்கின்றது.

எதிர்வரும் காலங்களில் சபைகளை அமைத்து சுமுகமான முறையில் அதனை கொண்டுசெல்லக்கூடிய வாய்ப்பினை ஏற்படுத்துவோம்.

சில கட்சிகள் கூட்டணியாகச் சேர்ந்து கடுமையான பிரயத்தனங்கள் செய்தும் கூட அவர்களுடைய முயற்சிகள் வெற்றி பெறவில்லை.

தமிழர்தாயகம் தமிழரசுக் கட்சியின் பக்கம் இருக்கின்றது என்பதை இவ்விடத்தில் கூற முடியும்.

எதிர்காலத்தில் நாங்கள் சிறப்பான செயற்பாடுகளையும் முன்கொண்டு செல்வோம்.

தேசிய மக்கள் சக்தியானது தாங்கள் நடுநிலை வகிப்பதாக கூறியிருப்பதாக அறிய முடிகின்றது.

நாங்கள் தமிழ்த் தேசியம் சார்ந்து சிந்திப்பவர்களாக இருக்கின்றபடியால் தமிழ்த் தேசிய எண்ணத்தோடு இருப்பவர்களுக்குத்தான் முன்னுரிமை கொடுப்போம்.

மற்றையவர்கள் சிநேகபூர்வமாக எங்களுக்கு ஆதரவு தருவதற்கு முன்வருகின்றபோது பரஸ்பரம் நாங்கள் ஆதரவுகளை வழங்கி சபைகளை அமைக்கவேண்டிய தேவை இருக்கின்றது. நாங்கள் முதலாவதாக இருக்கின்றோம்.

ஏனென்றால் மட்டக்களப்பு பல்லினமும் வாழும் ஒரு பிரதேசமாக இருக்கின்றபடியால் பரஸ்பரம் புரிந்துணர்வு, பரஸ்பர விட்டுக்கொடுப்பு என்பது தவிர்க்க முடியாத விடயமாக இருக்கின்றபடியால்,

அவற்றை கையாளவேண்டிய தார்மீக பொறுப்பு எங்களிடம் இருக்கின்றது என தெரிவித்தார்.

இஸ்ரேல் அட்டூழியம் 38பாலஸ்தீனர் பலி
Posted in உலக செய்திகள்

இஸ்ரேலியர்கள் மீது கத்தி வெட்டு

இஸ்ரேலியர்கள் மீது கத்தி வெட்டு

இஸ்ரேலியர்கள் மீது கத்தி வெட்டு இஸ்ரேலுக்குள் கத்தி வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ள சம்பவம் யூத மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

இஸ்ரேல் நாட்டின் தலைநகர் பகுதியான டெல் அவியில் கத்தியுடன் நுழைந்த நபர் திடீர் காத்து விட்டு தாக்குதலை நடத்தினர் இதன் பொழுதே சிலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கத்திவிட்டு தாக்குதலுக்கான காரணம் .உடனடியாக தெரிய வரவில்லை எனவும் தொடர்ந்து விசாரணைகள் இடம் பெற்று வருவதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

பாலஸ்தீனம் யூத படைகளுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற .நீண்ட நாள் யுத்தத்தினை அடுத்து .அதனால் சீற்றம் கொண்டவர்கள் இந்த தாக்குதலை நடத்தி இருக்க கூடும் என தற்பொழுது தெரிய வருகிறது.

பாலஸ்தீனம் யூத அரசுக்கு இடையில் தற்பொழுது யுத்த நிறுத்த இடம் பெற்று .அது முறிந்து யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இந்த கத்தி வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இந்த கத்தி விட்டு தாக்குதல் சம்பவம் தற்பொழுது, யூத மக்கள் மத்தியில் மீளவும் ஒரு பரபரப்பை அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக, யூத நாட்டில் இருந்து வருகின்ற செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் தாக்குதலுக்கு பதிலடி பாகிஸ்தான்
Posted in உலக செய்திகள்

இந்தியாவின் தாக்குதலுக்கு பதிலடி பாகிஸ்தான்

இந்தியாவின் தாக்குதலுக்கு பதிலடி பாகிஸ்தான்

இந்தியாவின் தாக்குதலுக்கு பதிலடி பாகிஸ்தான் அதிபர் அறிவித்துள்ளார்.இந்தியா ஏவுகணைகள் மூலம் பாகிஸ்தான் எல்லைகளை நோக்கி தாக்குதலை நடத்தியதில் மசூதி உள்ளிட்ட வீடுகள் தாக்கி அழிக்கப்பட்டன.

இந்தியா மேற்கொண்ட இந்த தாக்குதலில் 26 பேர் பலியாகி 46க்கு மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.

இவ்வாறு நிலையில் இரு நாடுகளுக்கும் இடையில் தொடர்ந்து போர் பதற்றம் இடம்பெற்று வருகிறது.

இவ்வாறான காலப்பகுதியில் இந்தியா தமது நாட்டின் மீது நடத்திய தாக்குதலுக்கு பதிலடி தாக்குதல் நடத்தப்படும் என ,பாகிஸ்தான் அதிபர் அவர்கள் திடீர் அறிவிப்பை மேற்கொண்டுள்ளார்.

இவ்விதம் பாகிஸ்தான் அதிபர் அறிவித்த இந்த அறிவிப்பை அடுத்து இது நாடுகளுக்கு இடையில் மீளவும் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

பாரத நாட்டின் ஐந்து விமானங்களை பாகிஸ்தான் இராணுவம் சூட்டு வீழ்த்திய நிலையில் ,

தற்போது இரு நாடுகளுக்கும் இடையில் போர் பதற்றமும் போர் மூளும் அபாயமும் அதிகரித்து காணப்படுவதால் ,தற்பொழுது இருநாட்டு எல்லைகளில் உள்ள மக்கள் அச்சம் கொண்டு வாழ்கின்றனர்.

மசகு எண்ணெய் விலை திடீர் அதிகரிப்பு
Posted in இலங்கை செய்திகள்

மசகு எண்ணெய் விலை திடீர் அதிகரிப்பு

மசகு எண்ணெய் விலை திடீர் அதிகரிப்பு

மசகு எண்ணெய் விலை திடீர் அதிகரிப்பு ,மசகு எண்ணெயின் விலை சர்வதேச சந்தையில் திடீர் விலை அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

உலக சந்தையின் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 58.63 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.

அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 61.61 அமெரிக்க டொலராக வீழ்ச்சி அடைந்துள்ளது.

இதேவேளை உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 3.64 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

கடந்த வாரமே மசகு எண்ணெயின் விலை குறைப்பு ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில், உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 58.04 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 63.12 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.

விலை குறைப்பு, மக்கள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தி அதன் ஊடாக வாக்குகளை கொள்ளையடிக்கின்ற அரசியல் தந்திரபாய நடவடிக்கை சித்து விளையாட்டாக பார்க்கப்படுகிறது.

தேர்தல் வருகின்ற காலப்பகுதியில் அத்தியாவசிய பொருட்கள் திடீரென விலை குறைக்கப்படுவதும் ,தேர்தல் முடிவுற்றதும் அதே கதியில் விலை வானளாவிய உச்சத்தை தொடுவதும் வழக்கமாக உள்ளது.

எனவே இந்த எரிபொருள் விலை குறைப்புகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்புகள் தொடர்பாக மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

ஏமாற்று அரசியலை நடத்திக் கொண்டிருக்கின்ற தற்கால நவீன அரசியல்வாதிகளை ஓட விரட்டி அடிக்க வேண்டும்.

அனுரா அரசின் இந்த விலை குறைப்புகளும் விலை மாற்றங்களும் தமிழ் மக்கள் முதுகில் ஏற்றப்பட போகின்ற .மிகச்சுமையின் முன்னெற்பாட்டு அறிகுறியாகவே காணப்படுகிறது.

ஆகவே இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் சிங்கள மக்கள் யாவரும் தற்பொழுது விழித்துக் கொள்ளவேண்டும்.

எனவே, தேர்தல் காலத்தில் குறைக்கப்பட்ட விலைகள், தேர்தல் முடிவடைந்ததன் பின்னர் மீண்டும் மசகு எண்ணெயின் விலை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சிறை வைக்கப்பட்ட இலங்கையர்கள் விடுதலை
Posted in இலங்கை செய்திகள்

சிறை வைக்கப்பட்ட இலங்கையர்கள் விடுதலை

சிறை வைக்கப்பட்ட இலங்கையர்கள் விடுதலை

சிறை வைக்கப்பட்ட இலங்கையர்கள் விடுதலை ,சிறை வைக்கப்பட்ட இலங்கையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை தெரிவித்துள்ளது

மியான்மர் நாட்டுக்குள் நுழைந்த இலங்கையில் பதினைந்து பேர் பல மாதங்களாக மியன்மார் நாட்டில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர் .

அவ்வாறு சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த, 15 கைதிகளும் தற்பொழுது விடுதலை செய்யப்பட்டு தாயகம் அழைத்துவரப்பட்டனர் .

இலங்கை விமானத்தின் ஊடாக இந்த 15 பேரும் தற்பொழுது நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மியன்மார் நாட்டிலிருந்து தடுத்து வைக்கப்பட்டிருந்த, 41 பேர் இலங்கை அரசாங்கம் மேற்கண்ட பேச்சுவார்த்தை அடுத்து இந்த 41 பேரில் விடுதலை செய்யப்பட்டு இருக்கிறனர் .

தற்பொழுது 15 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இவ்விதம் கைதிகள் விடுதலை செய்யப்பட்டத்தை அடுத்து அவர்களது குஉடம்பம் பெரும் மகிழ்வில் உறைந்துள்ளது .

பல சொல்லென்ன சித்தரைவதைகளின் பின்னர் இலங்கையர்கள் பத்திரமாக தாய்நாடு திரும்பிய மகிழ்வில் அவர் தம் குடும்பத்தினர் மகிழ்ச்சியில் உறைந்துள்ளனர் .

இலங்கை பாகிஸ்தான் விமானசேவை இரத்து
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை பாகிஸ்தான் விமானசேவை இரத்து

இலங்கை பாகிஸ்தான் விமானசேவை இரத்து

இலங்கை பாகிஸ்தான் விமானசேவை இரத்து ,இலங்கையிலிருந்து பாகிஸ்தான் லாகூர் செல்லும் விமான பயணங்கள் திடீரென தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை விமானத்துறை அறிவித்துள்ளது.

இந்தியா பாகிஸ்தானுக்கு இடையில் திடீர் யுத்தம் ஒன்று தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளது .

இவ்வாறான நிலையில் எவ்வேளையும் விமானங்களுக்கு பெரும் ஆபத்தை ஏற்படலாம் என்கின்ற வகையில் ,தற்போது இந்த விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை அறிவித்துள்ளது.

இரு நாடுகளுக்கு இடையில் மூண்டுள்ள இந்த திடீர் யுத்தம் காரணமாக ,அங்கு செல்லும் மக்களுக்கு பாதிப்பு வந்துவிடக் கூடாது என்பதற்காக இவை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை அறிவித்துள்ளது.

பாகிஸ்தானின் மிக முக்கியமான பகுதிகளை இலக்கு வைத்து, இந்தியா நடத்திய ஏவுகணை தாக்குதலில் மசூதி உள்ளிட்ட வீடுகள் கட்டடங்கள் இடிந்து அழிந்தன. மேலும் 26க்கு மேற்பட்டவர்கள் பலியாகியம் 46க்கு மேற்பட்டவர்கள் காயாமடைந்தனர் .

இதனை அடுத்து குறித்த விமான நிலையத்தை சர்வதேச விமானங்கள் பயன்படுத்துவதில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ள காரணத்தினால், இந்த தற்காலிக இடைநிறுத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனால் இலங்கையில் இருந்து லாகூர் செல்ல விருந்த பயணிகள் தத்தளித்து வருகின்றனர்.

மறு அறிவித்தல் வரை இந்த விமான சேவைகள் நிறுத்தி செய்யப்பட்டிருக்கும் வரை தெரிவிக்கப்படுகிறது.

பாரிய விபத்து 12பேர் காயம்
Posted in இலங்கை செய்திகள்

பாரிய விபத்து 12பேர் காயம்

பாரிய விபத்து 12பேர் காயம்

பாரிய விபத்து 12பேர் காயம் அக்குருஷ பிரதான வீதியில் நிறுத்தி வைக்க பட்டிருந்த லாரியின் பின்புறத்தில் வான் மோதியதில் பலர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்தை ஏற்பட்ட பொழுதுவேனில் பயணித்த 12 பேர் காயம் அடைந்து அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பேரூந்தில் பயணித்தவர்கள் முல்லட்டியான பகுதியைச் சேர்ந்தவர்கள் என போலீசார் தெரிவிக்கின்றனர்.

சாரதியின் அலட்சியப் போக்கின் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வருகின்றது.

காயம் அடைந்தவர்கள் யாவரும் அதே பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேற்படி லொறி வான் விபத்து தொடர்பான விசாரணைகளை தற்பொழுது இலங்கை காவல்துறை ஆரம்பித்துள்ளனர்.

பாதுகாப்பற்ற வீதியில் இந்த வான் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால் அதை கண்காணிக்க முடியாத நிலையில் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் அதிகரித்துச் செல்லும் இவ்வாறான விபத்துக்களை தடுக்க முடியாது இலங்கை காவல்துறை திணறி வருவதுடன், மக்கள் வாகனங்களில் பயணம் செல்லவே அச்சம் கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

விரைவில் மின் கட்டணத்தில் திருத்தம்
Posted in இலங்கை செய்திகள்

விரைவில் மின் கட்டணத்தில் திருத்தம்

விரைவில் மின் கட்டணத்தில் திருத்தம்

மிக விரைவில் இலங்கையில் மின் கட்டணத்தில் திருத்தம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வருடத்திற்கான இரண்டாவது மின் கட்டண திருத்தம் தொடர்பான பிரேரணையை இலங்கை மின்சார சபை எதிர்வரும் வாரத்திற்குள் சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் மின் கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ள வேண்டுமெனில்,

அது தொடர்பான பிரேரணையை மே மாதத்தில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுடம் சமர்ப்பிக்க வேண்டுமென அதன் தொடர்பாடல் பணிப்பாளர் ஜெயநாத் ஹேரத் தெரிவித்தார்.

மின்சார கட்டண திருத்தம் தொடர்பான பிரேரணையைப் பெற்ற பிறகு, 3 முதல் 6 வாரங்களுக்குள் இது தொடர்பில் ஆராய்ந்து பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அதன் தீர்மானத்தை அறிவிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

குறித்த காலப்பகுதியில் தொடர்புடைய திட்டங்கள் குறித்து பொதுமக்களிடமும் யோசனைகள் கேட்கப்படும்.

மின் கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளுமாறு சர்வதேச நாணய நிதியம் கோரியுள்ளது, அதன்படி, எதிர்வரும் காலப்பகுதியில் மின் கட்டணங்கள் திருத்தப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

இருப்பினும், இலங்கை மின்சார சபை இதுவரை பொதுப் பயன்பாட்டுகள் ஆணைக்குழுவிடம் பொருத்தமான பிரேரணையை சமர்ப்பிக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த வருடத்திற்கான முதலாவது மின் கட்டண திருத்தம் ஜனவரி 17 ஆம் திகதி இடம்பெற்றதோடு, அப்போது மின் கட்டணங்களை 20 சதவீதம் குறைக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நடவடிக்கை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கடந்த வாரம் தேர்தலுக்கு முன்னர், ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா கேள்வி எழுப்பினார், அதாவது,

மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டால் மாத்திரமே அடுத்த கட்ட கடன் தொகை வழங்கப்படும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

அதை ஏன் அரசாங்கம் நாட்டு மக்களிடமிருந்து மறைத்தது என ழுப்பினார்.

மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டால் மட்டுமே அடுத்த நிதியை வழங்குவதாக நாணய நிதியம் முன்வைத்துள்ள நிபந்தனை தொடர்பில் அரசாங்கம் எதுவும் கூறவில்லை.

மின் கட்டணம் அதிகரிக்கப்படாவிட்டால் நிதி வழங்க மாட்டோம் என்று நாணய நிதியம் கூறியுள்ளதாக அரசாங்கம் வெளிப்படுத்தியதா? இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதா? அவர்கள் இதை வெளிப்படுத்தவில்லை.

ஆனாலும் ஜனாதிபதி தனியார் ஊடகம் ஒன்றுக்கு தெரிவிக்கையில்,

2025 ஜூன் மாதத்தில் நடைபெறும் மின்சார கட்டண திருத்தத்தின் போது, இந்த கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி அநுர தெரிவித்துள்ளார்.

இந்த விலை உயர்வு கடந்த டிசம்பர் மாத மின் கட்டணத்தை விட அதிகமாக இருக்காது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஆண்டுக்கு இருமுறை நடைபெறும் மின் விலை திருத்தத்தின்படி இந்த விலை திருத்தம் செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மின்சார சபையின் 220 பில்லியன் கடன் மீள் கட்டமைப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் ஒரு பகுதி மின்சார கட்டணத்தல் சேர்க்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதற்கமைய மின் கட்டணம் அதிகரிக்கப்படுமா இல்லை குறைக்கப்படுமா, மின்சார சபை என்ன முடிவு எடுக்கும் என மக்கள் எதிர்பார்த்த வண்ணம் இருக்கின்றனர்.

லண்டன் குடும்பம் திருமலையில் நடந்ததுஎன்ன
Posted in இலங்கை செய்திகள்

லண்டன் குடும்பம் திருமலையில் நடந்ததுஎன்ன

லண்டன் குடும்பம் திருமலையில் நடந்ததுஎன்ன

லண்டன் குடும்பம் திருமலையில் நடந்ததுஎன்ன லண்டன் குடும்பம் ஒன்று திருகோணமலையில் ஒரு ஏமாற்று கொள்ளைக்கார குடும்பத்திடம் சிக்கியுள்ளனர். இக் குடும்பத்திற்கு நடந்தது என்ன?

திருகோணமலையிலுள்ள சுலக்சனா (பெயர் மாற்றம்) ஒன்லைன் zoom tuition கிளாஸ் எடுக்க முன்வந்ததன் மூலம் லண்டன் குடும்பம் அறிமுகம் ஆனது.

அதன் மூலம் அறிமுகம் ஆன பின் ஸ்ரீலங்கா வந்த போது இவர்களது வீட்டிற்கு சென்று தங்கினர்.

திட்டமிட்ட சுலக்சனா அவரது அப்பா, அம்மா, தம்பி ஆகியோர் இந்த லண்டன் குடும்பத்திடம் 10 இலக்சம் ரூபாயினை கேட்டுவாங்கியுள்ளனர்,

10 லட்சம் பணம் வாங்கி பின்பு தருவதாய் ஏமாற்றி குடும்பம் ஆக மோசடி செய்தது. பின்பு மொத்த குடும்பமும் wats up இல் லண்டன் நம்பரை Block செய்துள்ளதாக லண்டன் குடும்பம் தெரிவித்துள்ளது.

தற்போது இந்த லண்டன் குடும்பம் யாரையும் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் நிலாவெளி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு கொடுத்திருக்கின்றனர்.

ஆனால் பொலிசார் கருத்தில் எடுப்பதில்லை என மட்டக்களப்பு இரகசியம் உள் பெட்டிக்கு தெரியப்படுத்தி உள்ளனர். இருந்தபோதிலும் இதுவரையில் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரியவருகின்றது.

இவ்வாறு வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் கவனமாய் செயட்படவேண்டும் என்பதே இந்த பதிவின் நோக்கம்.

இந்த குடும்பம் பலரை இவ்வாறு இலக்கு வைத்து செயற்பட்டு வருகிறது என தற்போது தெரியவந்துள்ளது.

முன்பு பிரான்ஸ் இல் இருந்து வந்த ஒரு குடும்பத்தினரிடமும் மேற்படி முறையில் பணம் வாங்கிய குடும்பத்தினர் தலைமறைவாகியுள்ள நிலையில், தற்போது லண்டன் குடும்பம் ஏமாறியுள்ளது.

பொலிசார் மோசடி குடும்பத்திற்கு சார்பாக செயற்பட்டு வருகின்றனர் என பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளதாக முகநூல் பக்க செய்திகள் படங்களோடு செய்திகள் வெளியிட்டுள்ளன.

வாக்குகளால் வலுச் சேர்த்த மக்களுக்கு நன்றி
Posted in இலங்கை செய்திகள்

வாக்குகளால் வலுச் சேர்த்த மக்களுக்கு நன்றி

வாக்குகளால் வலுச் சேர்த்த மக்களுக்கு நன்றி

வாக்குகளை வழங்கி மக்கள் தமக்கான பலத்தை தெரிவுசெய்திருக்கிறார்கள் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார் சிறிதரன்.

நடைபெற்று முடிந்த உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலில், தமிழ்த் தேசியப் பயணத்தை ஏற்று, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்கு மக்கள் வழங்கிய ஆணைக்கு தலைவணங்குகிறேன்,

என பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் மூன்று சபைகளிலும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களுடனான சந்திப்பு,

கட்சியின் மாவட்டப் பணிமனையில் நேற்று நடைபெற்றபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது,

அண்மைய தேர்தல்களைக் காட்டிலும், இந்தத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு எமது மக்கள் வாக்குகளால் வலுச்சேர்த்திருக்கிறார்கள்.

அதிலும் குறிப்பாக கிளிநொச்சி மாவட்டத்தில் எமது கட்சிக்கு வாக்களித்து, கரைச்சி, பச்சிலைப்பள்ளி,

பூநகரி ஆகிய சபைகளில் நாம் ஆட்சியமைக்க காரணமாக இருந்த மக்களுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

மக்களின் ஆணைக்கு மதிப்பளித்து, அவர்களின் மன உணர்வுகளோடு இணைந்த வகையில் எமது தமிழ்த்தேசிய அரசியற் பயணம் தொடரும் – என்றார்.

இந்தச் சந்திப்பில் கலந்துகொண்ட வேட்பாளர்கள், கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்திலும்,

புனித திரேசாள் தேவாலயத்திலும் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையால் ஒழுங்கமைக்கப்பட்ட மத வழிபாட்டு ஆராதனைகளிலும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி மாவட்டத்தின் 3 பிரதேச சபைகளையும் இலங்கை தமிழரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது. பச்சிளைப்பள்ளி பிரதேச சபை,

கரைச்சி பிரதேச சபை மற்றும் பூநகரி பிரதேச சபை ஆகிய 3 பிரதேச சபைகளையும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது.

கரைச்சி பிரதேச சபையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி 20,962 வாக்குகளைப் பெற்று 20 உறுப்பினர்களையும்

பச்சிளைப்பள்ளி பிரதேச சபையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி 3,040 வாக்குகளைப் பெற்று 6 உறுப்பினர்களையும்,

பூநகரி பிரதேச சபையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி 5,171 வாக்குகளைப் பெற்று 10 உறுப்பினர்களையும் பெற்றுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சிறிதரனின் தலைமையில் நடத்தப்பட்ட அணிகள் மிகப் பெரும் வெற்றியை தன தாக்கிய மிகப்பெரும் வரலாற்று பதிவை நிலைநாட்டியுள்ளது .

சிங்கள இனவாதத்திற்கு மிகப் பெரும் அடியை வழங்கி இருக்கிறார்கள். கரைச்சியில் தங்களது வாக்குகள் மூலமாக சிங்கள இனவாதத்தையும் சிங்கள தேசியவாதத்தையும் துடைத்து எறிந்த மக்கள் நாட்டிய சாதனை இதுதான்.

வடக்கு பகுதியில் அதிகமான பகுதிகளை இலங்கை தமிழர் கட்சி சுருட்டி மிகப்பெரும் சாதனையை படைத்துள்ளது வரலாற்று நிகழ்வாக இது உள்ளது.

தமிழ் மக்கள் வடக்கு பகுதியில் விழுந்து விட்டார்கள் ,அவர்கள் மீளவும் எழுந்து விட மாட்டார்கள் என எண்ணி கொக்கரித்த, எதிராளிகள் தற்பொழுது தோற்றுப் போயுள்ளார்கள்.

இலங்கை தமிழரசு கட்சி இல்லாமல்போகும் என நினைத்தோருக்கு இந்த மக்களின் வாக்குப்பதிவு ஒரு நெத்தியடி.

வாக்குப் பதிவுகளால் மக்கள் தமக்கான ஒரு அடையாளத்தை மீண்டும் நிலைநிறுத்தி வலுச் சேர்த்துள்ளார்கள், வாக்களித்த மக்களுக்கு நன்றிகள்.

பாராளுமன்றில் கேள்வி கேட்பேன் மனோ ஆவேசம்
Posted in இலங்கை செய்திகள்

பாராளுமன்றில் கேள்வி கேட்பேன் மனோ ஆவேசம்

பாராளுமன்றில் கேள்வி கேட்பேன் மனோ ஆவேசம்

பாராளுமன்றில் கேள்வி கேட்பேன், பாராளுமன்றத்தில் கேள்வி கேட்டு, குற்றவாளிகளை கூண்டுமுன் நிறுத்தி தக்க தண்டனை வாங்கி கொடுத்த அவசியம் என மனோ கணேசன் ஆவேசம் அடைந்துள்ளார்.

பதினாறு வயதுடைய பாடசாலை மாணவியின் தற்கொலைச் சம்பத்துடன் தொடர்புடைய சகல நபர்களும் தண்டிக்கப்படவேண்டும் எனவும்,

இதுகுறித்து தான் ஏற்கனவே நாட்டின் பொறுப்புவாய்ந்த நபர்களின் கவனத்துக்குக் கொண்டுவந்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ள,

தமிழ் முற்போக்குக்கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன், இவ்வாரம் இதுபற்றி பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி பயின்றுவந்த 16 வயதுடைய மாணவியொருவர் அவர் வசிக்கும் தொடர்மாடிக்குடியிருப்பின் 7 ஆவது மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம்,

கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி கொட்டாஞ்சேனையில் பதிவானது. இச்சம்பவம் தொடர்பில் தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே மனோகணேசன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

‘கொழும்பு கொட்டாஞ்சேனையில் கடந்த மாதம் 29 ஆம் திகதி 16 வயதான இளம் தமிழ் மாணவி தனது உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் தொடர்பான விபரங்கள்

எனது கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டு வருகின்றன’ என அவர் அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு அம்மாணவி முதலில் தென் கொழும்பின் பிரபல மகளிர் பாடசாலையொன்றில் கல்வி பயின்றபோது கடந்த வருட இறுதியில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் சம்பவம்,

அதுகுறித்து கல்வி வலயம், பாடசாலை, பொலிஸ், நீதிமன்ற விசாரணை விபரங்களையும் தான் பெற்றுக்கொண்டிருப்பதாக மனோ கணேசன் கூறியுள்ளார்.

அதேவேளை, ‘இத்துயர சம்பவத்தால் பிள்ளையை இழந்து வாடும் பெற்றோருக்கு பிள்ளையை மீண்டும் பெற்றுக்கொடுக்கமுடியாது. அது மிகப்பெரும் துயரம்.

காலம் தான் அவர்களுக்கு ஆறுதலளிக்கவேண்டும்’ எனவும் அவரது பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோன்று 18 வயதை அடையாத அம்மாணவியை மன உளைச்சலுக்கு உள்ளாக்கி, அவரது அகால மரணத்துக்குக் காரணமான சகல நபர்களும் சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும் எனவும்,

இதுகுறித்து தான் ஏற்கனவே நாட்டின் பொறுப்புவாய்ந்த நபர்களின் கவனத்துக்குக் கொண்டுவந்திருப்பதாகவும் மனோகணேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் இவ்வாரம் இதுபற்றி பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பவிருப்பதாகவும், அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவரது கருத்தைத் தொடர்ந்து குறித்த மாணவியின் பகுதியில் வசிக்கும் மக்கள் கருத்து தெரிவிக்கையில்,

பாராளுமன்றத்தில் கேள்வி கேட்டு இதற்கு ஒரு தீர்வு எடுத்தால் தான் இவ்வாறான மாணவ மாணவிகள் சுதந்திரமாகவும், நிம்மதியாகவும் தமது கல்வி கற்கை நெறிகளில் தம்மை ஈடுபடுத்திகொள்ள முடியும்.

மாறாக இலங்கையில் மாணவர்கள் எதிர்கொள்ளும் சமூக பிரச்சினைகளை உடனடியாக இந்த அரசு கண்டறிந்து அதற்கான சட்ட நடவடிக்கைகளை எடுத்தல் அவசியம்.

மனோ கணேசனின் பாராளுமன்ற கேள்விக்கு கல்வி அமைச்சு என்ன நடவடிக்கை எடுப்பார்கள், குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தக்க தண்டனைகள் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் என தெரிவித்திருக்கின்றனர்.

தேர்தல் முடிவுகள் ஒரு அபாய எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

தேர்தல் முடிவுகள் ஒரு அபாய எச்சரிக்கை

தேர்தல் முடிவுகள் ஒரு அபாய எச்சரிக்கை

தேர்தல் முடிவுகள், அதாவது நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் முடிவுகள் ஒரு அபாய எச்சரிக்கை என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

முல்லைத்தீவிலும் காலூன்றிய இலங்கை தமிழரசு
முல்லைத்தீவிலும் காலூன்றிய இலங்கை தமிழரசு

ஊடகக் கண்காட்சியை’ நடாத்துவதன் ஊடாக எப்போதும் நாட்டை ஆழமுடியும் என கருதியிருந்தால், அது முற்றிலும் தவறானதாகும்.

இலங்கையின் கடந்தகால அரசாங்கங்கள் அடுத்தடுத்து தோல்வி கண்டிருக்கும் நிலையில், மீண்டுமொரு தோல்வியடைந்த அரசாங்கத்தை எதிர்கொள்வதற்கு இலங்கைக்குத் திராணியில்லை.

எனவே தற்போதைய அரசாங்கம் சிறப்பாக செயற்படவேண்டுமாயின், அவர்கள் பேசுவதைக் குறைத்து, அதனை செயலில் காண்பிக்கவேண்டும் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி வலியுறுத்தியுள்ளார்.

நடைபெற்றுமுடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களில் ஆளும் தேசிய மக்கள் சக்தி தெற்கில் வெற்றி பெற்றிருந்தாலும், பல சபைகளில் ஆட்சியமைப்பதற்குரிய பெரும்பான்மையைப் பெறத்தவறியிருக்கிறது.

இந்நிலையில் தேர்தல் முடிவுகள் தொடர்பில் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் அலி சப்ரி, அப்பதிவில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:

‘ஊடகக் கண்காட்சியை’ நடாத்துவதன் ஊடாக எப்போதும் நாட்டை ஆழமுடியும் என நீங்கள் கருதியிருந்தால், அது முற்றிலும் தவறானதாகும்.

நீங்கள் கூறும் விடயங்களுக்கு செயல் வடிவம் கொடுப்பதன் ஊடாக வீதிகளில் இருக்கும் மக்களால் உணரக்கூடிய மாற்றத்தை உருவாக்குங்கள்.

சாதாரண மக்கள் மெச்சக்கூடியவகையில் சட்டம் மற்றும் ஒழுங்கு, செயற்திறன்மிக்க பொதுநிர்வாகம் மற்றும் பொருளாதார வளர்ச்சி என்பவற்றை நிலைநிறுத்துங்கள்.

காலவோட்டத்தில் மக்கள் கடந்தகாலத்தைப் பற்றிய பேச்சுக்களில் ஆர்வம் இழப்பார்கள்.

அவர்கள் கடந்தகால அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் மகிழ்ச்சியடையவில்லை என்பதனாலேயே தற்போதைய அரசாங்கம் தெரிவு செய்யப்பட்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.

அன்றேல் இதுவும் வெறுமனே ‘நல்லாட்சி அரசாங்கம் – 2’ ஆக மாறிவிடும்.

இந்த உள்ளுராட்சிமன்றத்தேர்தல் முடிவுகள் ஒரு அபாய எச்சரிக்கையாகும்.

மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப்பெற்ற கோட்டாபய ராஜபக்ஷ 18 மாதங்களில் பதவியை இராஜினாமா செய்யவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

இலங்கையின் கடந்தகால அரசாங்கங்கள் அடுத்தடுத்து தோல்வி கண்டிருக்கும் நிலையில், மீண்டுமொரு தோல்வியடைந்த அரசாங்கத்தை எதிர்கொள்வதற்கு இலங்கைக்குத் திராணியில்லை.

எனவே தற்போதைய அரசாங்கம் சிறப்பாக செயற்படவேண்டுமாயின், அவர்கள் பேசுவதைக் குறைத்து, அதனை செயலில் காண்பிக்கவேண்டும்.

நாமனைவரும் தேர்தல்களில் அரசியல் செய்வோம். இருப்பினும் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு சகலரும் ஒன்றிணைந்து செயலாற்றுவோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

உண்மையிலேயே இத் தேர்தல் முடிவுகள் ஒரு அபாய எச்சரிக்கை தான். ஏனெனில் வடக்கு கிழக்கு பகுதிகளில் கூட NPP அதிக வாக்குகளைப் பெற்று அனைத்து இடங்களிலும் தமது ஆட்சி தான் நிலைநிறுத்தப்படும் என,

கொக்கரித்துக் கொண்டு இருந்தனர். ஆனால் அநேகமான தேர்தல் பிரதேசங்களில் தமிழரசுக் கட்சி வென்றமை, அரசுக்கு ஒரு அபாய எச்சரிக்கை என தெரிகின்றது.

பொறுத்திருந்து பார்க்கலாம், எதிர்கால அரசியல் மாற்றம் பெறுமா, இத் தேர்தல் முடிவினால் அரசுக்கு மக்கள் கூறியது என்ன என அரசு புரிந்துகொள்வார்களா..

ஆட்சியிலும், அரசின் நடவடிக்கையிலும் ஏதாவது மாற்றம் வருமா இல்லையேல் அடுத்த ஐந்தாண்டு காலத்தின் பின் மக்கள் இன்னுமொரு மாற்றத்தை எதிர்பார்த்து தேர்தலுக்காக காத்திருக்க வேண்டும்.

அர்ச்சுனாவை அடித்துக் கொல்வேன் ஊசிவேட்பாளர்
Posted in இலங்கை செய்திகள்

அர்ச்சுனாவை அடித்துக் கொல்வேன் ஊசிவேட்பாளர்

அர்ச்சுனாவை அடித்துக் கொல்வேன் ஊசிவேட்பாளர்

அர்ச்சுனாவை அடித்துக் கொல்வேன் ஊசிவேட்பாளர் ,வன்னி மைந்தன் tiktok நேரலையில் பங்கேற்று தனது உள்ளக்குமுறலை கொட்டி தீர்த்த முன்னாள் ஊசி கட்சி வேட்பாளர் தனக்கு நடந்த அநீதிக தொடர்பாக பேசினார்.

அப்பொழுது பேசும்பொழுது திட்டமிட்டு தமது வெற்றியை அர்ச்சுனாவே தோற்கடித்த ,அவரது கட்சியின் தலைவர் அர்ச்சனாவை காரணம் எனவும் தனது கட்சிக்காரரை தானே தோற்கடித்த முதலாவது இழிநிலை தலைவராக இவர் உள்ளார் என அவர் சொல்கிறார்.

இவர்களை நாங்கள் என்ன செய்யலாம் என்பதை தமிழ் மக்களே கொஞ்சம் காதில் போட்டுக் கொள்ளுங்கள்.

பெண்களை அவதூறாக பேசி கொச்சைப்படுத்தி அவர்கள் மானபங்கப்படுத்துகின்ற நடவடிக்கையில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் அவரது அடியார்களும் ஈடுபட்டு வருவதாக அவர் பகிரங்க கூட்டம் சுமத்தினார்.

பெண்களை விபச்சாரி என்று சொல்கிற அர்ச்சுனா இராமநாதன் எப்படி தமிழ் மக்களுடைய பிரதிநிதியாகவும் தமிழ் மக்களை வழிநடத்தக்கூடிய ஒருவராகவும் இருப்பார் என அவர் கேள்விகளை தொடுத்தார்.

செருப்பு கழட்டி அடித்திருக்க வேண்டும் இவ்வாறு பேசியதற்கு என அவர் இப்பொழுது ஓங்கி உரைத்தார்.

பெண்களை மிகவும் கொச்சையாகவும் கேவலமாகவும் பேசுகின்ற அர்ச்சனா இராமநாதனை விட்டு வைக்கக் கூடாது என அவர் உறுமினார் .

உள்ளுராட்சி தேர்தலில் படுதோல்வியை அர்ச்சுனா சந்தித்ததற்கு பிற்பாடு முதன்முதலாக பயணித்து வன்னிமைந்தன் டிக்கெட் போட்டியிட்ட வனேஸ்வரி

என்கின்ற ஊசி கட்சியினுடைய வேட்பாளர் அவர்களே இவ்வாறு தனது உள்ளக்குமுறலை கொட்டி தீர்த்தார்.

தற்போது அர்ச்சுனா இராமநாதன் பித்தலாட்டங்கள் அம்பலமாகியுள்ளது குறிப்பிட தக்கது .

5இந்தியா விமானங்கள் சுட்டு விழுத்தல்
Posted in இந்தியா செய்திகள் உலக செய்திகள்

5இந்தியா விமானங்கள் சுட்டு விழுத்தல்

5இந்தியா விமானங்கள் சுட்டு விழுத்தல்

5இந்தியா விமானங்கள் சுட்டு விழுத்தல் ,ஐந்து இந்திய விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார் .

கடந்த இரவு பாகிஸ்தானில் மக்கள் குடியிருப்புகள் பாசுதிகளை இலக்கு வைத்து இந்தியா இராணுவம் ஏவுகணை தாக்குதலை நடத்தியது.

அதற்கு பதிலடியாகவே தற்பொழுது பாகிஸ்தான் இந்தியா இராணுவத்தின் 5 போர் விமானங்களை தாங்கள் சுட்டு வீழ்த்தியதாக அறிவித்துள்ளது.

தொடர்ந்து இந்தியாவுக்கு எதிராக நடவடிக்கைகளை தாங்கள் மேற்கொள்ள தயாராகி வருவதாகவும் ,பதிலடி தாக்குதல் நடத்தப்படும் எனவும் உரிய முறை நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பாகிஸ்தான் ராணுவ பேச்சாளர் உறுமி இருக்கிறார் .

சும்மா கிடந்த சங்கை ஊதிக் கொடுத்த ஆண்டி என்பது போல, மோடி அரசு மேற்கொண்ட இந்த நடவடிக்கை ,மோடி ஆட்சிக்கு எதிராக பல நடவடிக்கையை பாகிஸ்தான் திருப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரே நாளில் ஐந்து இந்தியாவின் யுத்த போர் விமானங்களை, பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய சம்பவம் இந்திய விமானப்படையை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .

எங்களை அடித்தால் உங்களை நாங்கள் திருப்பி அடிப்போம் என்பதாக ,பாகிஸ்தானும் பதிலுக்கு தற்பொழுது இந்தியாவுக்கு தண்ணி காட்டியுள்ளது.

இந்த பரஸ்பர தாக்குதலை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையில் தொடர்ந்து போர் பதற்றம் அதிகரித்து காணப்படுகிறது .

எவ்வளையும் எதுவும் நடக்கலாம் என்பதாகவே நோக்கப்படுகிறது.