தேர்தல் பிரச்சாரத்திற்காக மொசாடிடம் 1 மில்லியன் டாலர் கோரியஜே.ஆர்.
Posted in இலங்கை செய்திகள்

தேர்தல் பிரச்சாரத்திற்காக மொசாடிடம் 1 மில்லியன் டாலர் கோரியஜே.ஆர்.

தேர்தல் பிரச்சாரத்திற்காக மொசாடிடம் 1 மில்லியன் டாலர் கோரியஜே.ஆர்.

தேர்தல் பிரச்சாரத்திற்காக மொசாடிடம் 1 மில்லியன் டாலர் கோரியஜே.ஆர். ,தேர்தல் பிரச்சாரத்திற்காக மொசாடிடம் இருந்து 1 மில்லியன் டாலர் கோரியதாக ஜே.ஆர். ஜெயவர்தனவுக்கு ஆவணம் மூலம் தகவல்

இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சகத்திடமிருந்து

கறுத்த அம்மா வாரா கலர் கலரா பேசுறா | KARUTHTHA AMMA VAARAA kALAR KALARA PESURAA|604|
கறுத்த அம்மா வாரா கலர் கலரா பேசுறா | KARUTHTHA AMMA VAARAA kALAR KALARA PESURAA|604|கறுத்த அம்மா வாரா கலர் கலரா பேசுறா | KARUTHTHA AMMA VAARAA kALAR KALARA PESURAA|604|

இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சகத்திடமிருந்து வகைப்படுத்தப்படாத ஆவணங்கள், முன்னாள் இலங்கை ஜனாதிபதி ஜூனியஸ் ரிச்சர்ட் ஜெயவர்தன 1987-ஆம் ஆண்டு தனது தேர்தல் பிரச்சாரத்திற்கு

நிதியளிப்பதற்காக இஸ்ரேலின் உளவு நிறுவனமான மொசாடிடம் இருந்து 1 மில்லியன் டாலர் கோரியிருந்ததை வெளிப்படுத்தியுள்ளன.

ஆகஸ்ட் 6 மற்றும் ஆகஸ்ட் 14, 1987 தேதியிட்ட தந்திச் செய்திகளின்படி, கொழும்பில் உள்ள இஸ்ரேலிய நலன்கள் பிரிவை மூடுமாறு அரபு நாடுகள் மற்றும் உள்ளூர் எதிர்ப்புகளிடமிருந்து இலங்கை அரசாங்கம் பெருகிவரும்

அழுத்தத்தை எதிர்கொண்டிருந்த நேரத்தில், மொசாட் பிரதிநிதி ஒருவருடனான சந்திப்பின்போது இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

1980-களின் நடுப்பகுதியில் இலங்கைக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான உறவு

1980-களின் நடுப்பகுதியில் இலங்கைக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான உறவுகளை விவரிக்கும், இஸ்ரேலிய அரச ஆவணக்காப்பகத்திலிருந்து

பகுதியளவு வகைப்படுத்தப்படாத கோப்புகளை அடிப்படையாகக் கொண்ட ‘தி வயர்’ பத்திரிகையின் ஒரு கட்டுரையில் இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரபு நாடுகளின் அழுத்தத்தின் காரணமாக இலங்கை 1970-ல் இஸ்ரேலுடனான தூதரக உறவுகளைத் துண்டித்திருந்தது.

இருப்பினும், தீவின் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்த நிலையில், 1984-ல் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் இஸ்ரேலிய நலன்கள் பிரிவு

திறக்கப்பட்டதன் மூலம் உறவுகள் ஓரளவு மீட்டெடுக்கப்பட்டன.

தமிழ் தீவிரவாதத்தை எதிர்கொள்ள இலங்கை இஸ்ரேலிய உதவியை நாடியதாக ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.

1980-களின் பிற்பகுதியில், இஸ்ரேல் இலங்கைக்கு சுமார் 30 மில்லியன் டாலர் மதிப்புள்ள இராணுவ உபகரணங்களை வழங்கியிருந்தது.

இதில் துவோரா வகை அதிவேக ரோந்துப் படகுகள், மினி-உசி துணை இயந்திரத் துப்பாக்கிகள், மின்னணு வேலிகள், தகவல் தொடர்பு அமைப்புகள்

மற்றும் வெடிமருந்துகள் ஆகியவை அடங்கும். இஸ்ரேலியப் பணியாளர்கள் இலங்கை இராணுவப் பிரிவுகளுக்கும் ஜனாதிபதியின் பாதுகாப்புப் படையினருக்கும் பயிற்சி அளித்தனர்.

சில சமயங்களில் விவசாய ஆலோசகர்களாகக் காட்டப்பட்ட இஸ்ரேலியப் பயிற்றுவிப்பாளர்கள், குறிப்பாக வடக்கில் இலங்கைப் படைகளை

வலுப்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்ட பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததாகத் தந்திச் செய்திகள் வெளிப்படுத்துகின்றன.

யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளில் உள்ளூர் படைகள் தாக்குதல்களைத் தொடுக்க இத்தகைய பயிற்சி உதவும் என்று இஸ்ரேலிய அதிகாரிகள் நம்பினர்.

மனித உரிமை மீறல்கள் குறித்த கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டிருந்த ஒரு உயரடுக்கு காவல் பிரிவான சிறப்பு அதிரடிப்

படைக்கும் (STF) இஸ்ரேலிய உதவி வழங்கப்பட்டதாக அந்த ஆவணங்கள் மேலும் காட்டுகின்றன. சிறப்பு அதிரடிப்படைக்கு (STF) ஆதரவளிப்பதன்

நீண்டகால விளைவுகள் குறித்து அமெரிக்க அதிகாரிகள் எச்சரித்த போதிலும், 1987-ல் ஜனாதிபதி மீதான படுகொலை முயற்சிக்குப் பிறகு புதிதாக

உருவாக்கப்பட்ட முக்கிய பிரமுகர்கள் பாதுகாப்புப் பிரிவுக்குப் பயிற்சி அளித்தது உட்பட, இஸ்ரேல் தனது ஈடுபாட்டைத் தொடர்ந்தது.

ஜெயவர்தனவின் தேர்தல் பிரச்சார நிதி கோரிக்கையை தந்திச் செய்திகள் உறுதிப்படுத்தினாலும், இஸ்ரேல் 1 மில்லியன் டாலரை வழங்கியதற்கான எந்த

ஆதாரமும் வெளியிடப்பட்ட ஆவணங்களில் இல்லை. இருப்பினும், எதிர்க்கட்சியின் வெற்றி இலங்கையிலிருந்து இஸ்ரேலியப் பிரதிநிதிகளை

வெளியேற்றுவதற்கு வழிவகுத்திருக்கக்கூடும் என்று குறிப்பிட்டு, அவரது அரசியல் பிழைப்பில் தங்களுக்கு இருந்த மூலோபாய ஆர்வத்தை இஸ்ரேலிய அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர்.

உள்நாட்டுப் போரின் போது இலங்கையில் மோசமடைந்து வந்த மனித உரிமைகள் நிலைமை, பொதுமக்கள் உயிரிழப்புகள், கட்டாயக் காணாமல் போதல் மற்றும் சித்திரவதைக் குற்றச்சாட்டுகள் உள்ளிட்டவை குறித்து

இஸ்ரேலிய இராஜதந்திரிகளிடையே இருந்த கவலைகளையும் இந்தக் கோப்புகள் எடுத்துக்காட்டுகின்றன. இந்தக் கவலைகள் இருந்தபோதிலும்,

இருதரப்பு உறவுகளைப் பேணுவதற்கு இது மிகவும் முக்கியமானது எனக் கருதி, இஸ்ரேல் தனது இராணுவ மற்றும் உளவுத்துறை உதவிகளைத் தொடர்ந்தது.

தீவின் வரலாற்றில் மிகவும் கொந்தளிப்பான காலகட்டங்களில் ஒன்றில் இலங்கைக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான ஒத்துழைப்பின் ஆழம் மற்றும்

அந்த உறவுகளை வடிவமைத்த புவிசார் அரசியல் காரணிகள் குறித்த அரிதான பார்வையை இந்த ஆவணங்கள் வழங்குகின்றன.

அடுத்தவருடம் மாகாண சபை தேர்தல்
Posted in இலங்கை செய்திகள்

அடுத்தவருடம் மாகாண சபை தேர்தல்

அடுத்தவருடம் மாகாண சபை தேர்தல்

அடுத்தவருடம் மாகாண சபை தேர்தல் ,மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்ட பின்னர் அரசியலமைப்புத் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தற்போதுள்ள சட்டச் சிக்கல்கள்

தற்போதுள்ள சட்டச் சிக்கல்கள் தீர்க்கப்பட்ட பின்னர், அடுத்த ஆண்டு முதல் 6 மாதங்களுக்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

கிளிநொச்சி பகுதியில் நேற்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் பிமல் ரத்நாயக்க இவ்வாறு தெரிவித்தார்.

“நாங்கள் 2025 இல் தேர்தலை நடத்தினோம். 2024 நவம்பரிலும் தேர்தலையும் நடத்தினோம்.

6 மாதங்களில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவோம்

அடுத்த ஆண்டு முதல் 6 மாதங்களில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவோம் என்று நம்புகிறோம்.

சட்டத் தடைகள் உள்ளன. அவற்றை அகற்ற முயற்சிக்கிறோம்.

அரசியலமைப்பைக் கொண்டுவருவது குறித்து எங்களிடம் கொள்கை முடிவு உள்ளது.

அரசியலமைப்பைக் கொண்டுவருவது ஒரு விரிவான செயல்முறை.

அதற்கு முன்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதே எங்கள் இலக்கு.

மாகாண சபைத் தேர்தலை நடத்திய பிறகு அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் குறித்த விரிவான அரசியல் திட்டத்தைத் தொடங்குவோம்.” என்றார்.

தேர்தல் ஆணைக்குழுவின் சேவைகள் இடைநிறுத்தம்
Posted in இலங்கை செய்திகள்

தேர்தல் ஆணைக்குழுவின் சேவைகள் இடைநிறுத்தம்

தேர்தல் ஆணைக்குழுவின் சேவைகள் இடைநிறுத்தம்

தேர்தல் ஆணைக்குழுவின் சேவைகள் இடைநிறுத்தம் ,தேர்தல் ஆணைக்குழுவின் சேவைகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இன்று (07) முதல் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக, ஆணைக்குழுவின் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக தேர்தல் ஆணைக்குழு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, வாக்காளர் பதிவு தகவல்களைச் சரிபார்த்தல், இணையவழி பதிவு, வாக்காளர் அறிக்கைகளைப் பெறுதல் மற்றும் ஏனைய மாவட்டங்களுடனான

அனைத்து இணைவழி சேவைகளும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவித்தல்
Posted in இலங்கை செய்திகள்

தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவித்தல்

தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவித்தல்

தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவித்தல் இலங்கைத் தேர்தல் ஆணைக்குழு விஷேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அவ் அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது,

உள்ளூராட்சி சபைகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தொடர்பான தகவல்களை இந்த வாரத்திற்குள் வழங்குமாறு அனைத்துக் கட்சிகள்

மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கு தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

உறுப்பினர்களின் பெயர்களை வர்த்தமானியில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஒவ்வொரு கட்சியும் வென்ற இடங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டிய விதம் குறித்து

தேர்தல் ஆணைக்குழு அனைத்துக் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கு எழுத்துப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அதற்கமைய, உள்ளூராட்சி சபைகளுக்கான உறுப்பினர்களின் விபரங்களை ஒரு வாரத்திற்குள் வழங்க வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு கட்சிகளுக்கு அறிவித்துள்ளது.

மேலும், பெரும்பான்மை அதிகாரம் கொண்ட உள்ளூராட்சி சபைகளுக்கான மேயர்கள், நகரசபை தலைவர்களின் பெயர்களையும் சமர்ப்பிக்குமாறும்

கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கும் தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

உள்ளூராட்சி சபைகளுக்கு தெரிவான உறுப்பினர்களின் பெயர்கள் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்ட பிறகு, பெரும்பான்மை அதிகாரங்களைப் பெற்ற உள்ளூராட்சி சபைகளுக்கான மேயர்கள்,

நகரசபை தலைவர்களின் பெயர்கள் உள்ளடக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்படும் எனவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இவர்களுக்கு EPDP ஆதரவு வழங்காது
Posted in இலங்கை செய்திகள்

இவர்களுக்கு EPDP ஆதரவு வழங்காது

இவர்களுக்கு EPDP ஆதரவு வழங்காது

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கு ஆதரவில்லை என EPDP தெரிவித்துள்ளது.

காத்திரமான எதிர்தரப்பாக உள்ளூராட்சி சபைகளை எதிர்கொள்ளவே கட்சி தீர்மானித்து இருப்பதாகவும்

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் பன்னீர்செல்வம் ஸ்ரீகாந் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக மையத்தி்ல் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

வெளிப்படைத் தன்மையோடு நடைமுறைச் சாத்தியமான அரசியலை முன்னெடுக்கின்ற தனித்துவமான அரசியல் தரப்பான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியாகிய நாம்,

சொல்லுக்கும் செயலுக்கும் சம்மந்தமில்லாமல், நடைமுறைச் சாத்தியமற்ற வெறும் வீராப்பு அரசியலை முன்னெடுத்து வருகின்ற தமிழ் தேசிய முன்னணியினருக்கு ஆதரவளிப்பதும் நடைமுறையில் சாத்தியமற்றது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரைப் பொறுத்த வரையில் இப்போதுகூட கொள்கை ரீதியான உடன்பாடு கொள்கை ரீதியான கூட்டிணைவு என்று திரும்ப திரும்ப சொல்லி வருகின்றார்கள்.

அவர்களுடைய கொள்கை என்ன என்பது அவர்களுக்கே விளங்கவில்லை என்பதையே அவர்களின் செயற்பாடுகள் வெளிப்படுத்துகின்றன.

உதாரணமாக தூய நகரம் தூய்மையான நிர்வாகம் என்கிறார்கள். கடந்த மாகாண சபையிலே ஊழல் மோசடியில் ஈடுபட்டார் என்று குற்றஞ்சாட்டப்பட்டு குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டவர்களையும்,

கடந்த காலங்களில் நிதி நிறுவனம் நடாத்தி எமது மக்களின் பணத்தை கொள்ளையிட்டவர்கள் என்ற வலுவான குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டவர்களையும்

இணைத்து வைத்துக் கொண்டு தூய்மையான நிர்வாகம் பற்றி பேசுகிறார்கள்.

ஒற்றையாட்சியையும் ஏக்கிய இராச்சியத்தினையும் நிராகரிக்கின்றோம் என்று கற்பூரம் கொளுத்தி சத்தியம் செய்யாத கட்சிகளோடு ஒட்டவும் மாட்டோம் உறவாடவும் மாட்டோம் என்கிறார்கள்.

ஏக்கிய இராச்சியம் என்ற சொல்லாடல் பயன்படுத்தப்பட்ட புதிய அரசியலமைப்பை உருவாக்க ஆதரவு கொடுத்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனை அரவணைத்து உறவாடிக் கொண்டு,

குறித்த அரசியலமைப்பு உருவாக்கத்திற்கு பங்களிப்பு செய்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்தனுடனும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனுடனும் டீல் பேசுகின்றனர்.

இன்னொமொரு வேடிக்கை என்னவென்றால், ஈ.பி.டி.பி. தமிழ் தேசிய பரப்பில் செயற்படாத கட்சியாம். எங்களோடு பேசுவது தங்களுடைய கொள்கைக்கு மாறான செயற்பாடாம்.

ஆனால்,ஈ.பி.ஆர்.எல்.எப். புளொட், ரெலோ, சமத்துவக் கட்சி உள்ளங்கிய ஜனநாயகக் தமிழ் தேசியக் கூட்டணியோடு பேசுவார்களாம். அவர்கள் தமிழ் தேசியப் பரப்பிலே செயற்படுகிறார்களாம்

தமிழ் தேசியத்திற்கு புறம்பான தரப்பாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியை அடையாளப்படுத்துகின்றவர்கள், 2015 ஆம் ஆண்டு வரையில் எமது கட்சியை வழி நடத்திய தலைவர்களுள் ஒருவரான

தோழர் அசோக் என்று அறியப்பட்ட சந்திரகுமாருடன் இணைந்து உள்ளூராட்சி சபைகளை அமைக்க டீல் பேசுகின்றனர்.

மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களோடு இணக்க அரசியலில் ஈடுபட்டமையினால் ஈ.பி.டிபி. ஒட்டுக் குழுவாம்.

தென்னிலங்கை அரசாங்கத்தோடு இணக்க அரசியல் செய்கின்ற கட்சி ஒட்டுக் குழு என்றால், டி.எஸ் சேனநாயக்கா காலத்திலேயே இணக்க அரசியல் செய்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தானே Most senior ஒட்டுக்குழு

இவ்வாறு தங்களுடைய செயலுக்கும் சொல்லுக்கும் சம்மந்தமில்லாமல் செயற்பட்டுக் கொண்டு, மக்களின் பிரச்சினைகளை தீராப் பிரச்சினைகளாக வைத்திருந்து

சுயலாப அரசியல் செய்கின்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கு ஆதரவளிப்பதும் சாத்தியமற்றது என்ற அடிப்படையிலேயே எமது தீர்மானம் அமைந்திருக்கின்றது என மேலும் தெரிவித்தார்.

தேர்தல் முடிவுகள் ஒரு அபாய எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

தேர்தல் முடிவுகள் ஒரு அபாய எச்சரிக்கை

தேர்தல் முடிவுகள் ஒரு அபாய எச்சரிக்கை

தேர்தல் முடிவுகள், அதாவது நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் முடிவுகள் ஒரு அபாய எச்சரிக்கை என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

முல்லைத்தீவிலும் காலூன்றிய இலங்கை தமிழரசு
முல்லைத்தீவிலும் காலூன்றிய இலங்கை தமிழரசு

ஊடகக் கண்காட்சியை’ நடாத்துவதன் ஊடாக எப்போதும் நாட்டை ஆழமுடியும் என கருதியிருந்தால், அது முற்றிலும் தவறானதாகும்.

இலங்கையின் கடந்தகால அரசாங்கங்கள் அடுத்தடுத்து தோல்வி கண்டிருக்கும் நிலையில், மீண்டுமொரு தோல்வியடைந்த அரசாங்கத்தை எதிர்கொள்வதற்கு இலங்கைக்குத் திராணியில்லை.

எனவே தற்போதைய அரசாங்கம் சிறப்பாக செயற்படவேண்டுமாயின், அவர்கள் பேசுவதைக் குறைத்து, அதனை செயலில் காண்பிக்கவேண்டும் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி வலியுறுத்தியுள்ளார்.

நடைபெற்றுமுடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களில் ஆளும் தேசிய மக்கள் சக்தி தெற்கில் வெற்றி பெற்றிருந்தாலும், பல சபைகளில் ஆட்சியமைப்பதற்குரிய பெரும்பான்மையைப் பெறத்தவறியிருக்கிறது.

இந்நிலையில் தேர்தல் முடிவுகள் தொடர்பில் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் அலி சப்ரி, அப்பதிவில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:

‘ஊடகக் கண்காட்சியை’ நடாத்துவதன் ஊடாக எப்போதும் நாட்டை ஆழமுடியும் என நீங்கள் கருதியிருந்தால், அது முற்றிலும் தவறானதாகும்.

நீங்கள் கூறும் விடயங்களுக்கு செயல் வடிவம் கொடுப்பதன் ஊடாக வீதிகளில் இருக்கும் மக்களால் உணரக்கூடிய மாற்றத்தை உருவாக்குங்கள்.

சாதாரண மக்கள் மெச்சக்கூடியவகையில் சட்டம் மற்றும் ஒழுங்கு, செயற்திறன்மிக்க பொதுநிர்வாகம் மற்றும் பொருளாதார வளர்ச்சி என்பவற்றை நிலைநிறுத்துங்கள்.

காலவோட்டத்தில் மக்கள் கடந்தகாலத்தைப் பற்றிய பேச்சுக்களில் ஆர்வம் இழப்பார்கள்.

அவர்கள் கடந்தகால அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் மகிழ்ச்சியடையவில்லை என்பதனாலேயே தற்போதைய அரசாங்கம் தெரிவு செய்யப்பட்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.

அன்றேல் இதுவும் வெறுமனே ‘நல்லாட்சி அரசாங்கம் – 2’ ஆக மாறிவிடும்.

இந்த உள்ளுராட்சிமன்றத்தேர்தல் முடிவுகள் ஒரு அபாய எச்சரிக்கையாகும்.

மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப்பெற்ற கோட்டாபய ராஜபக்ஷ 18 மாதங்களில் பதவியை இராஜினாமா செய்யவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

இலங்கையின் கடந்தகால அரசாங்கங்கள் அடுத்தடுத்து தோல்வி கண்டிருக்கும் நிலையில், மீண்டுமொரு தோல்வியடைந்த அரசாங்கத்தை எதிர்கொள்வதற்கு இலங்கைக்குத் திராணியில்லை.

எனவே தற்போதைய அரசாங்கம் சிறப்பாக செயற்படவேண்டுமாயின், அவர்கள் பேசுவதைக் குறைத்து, அதனை செயலில் காண்பிக்கவேண்டும்.

நாமனைவரும் தேர்தல்களில் அரசியல் செய்வோம். இருப்பினும் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு சகலரும் ஒன்றிணைந்து செயலாற்றுவோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

உண்மையிலேயே இத் தேர்தல் முடிவுகள் ஒரு அபாய எச்சரிக்கை தான். ஏனெனில் வடக்கு கிழக்கு பகுதிகளில் கூட NPP அதிக வாக்குகளைப் பெற்று அனைத்து இடங்களிலும் தமது ஆட்சி தான் நிலைநிறுத்தப்படும் என,

கொக்கரித்துக் கொண்டு இருந்தனர். ஆனால் அநேகமான தேர்தல் பிரதேசங்களில் தமிழரசுக் கட்சி வென்றமை, அரசுக்கு ஒரு அபாய எச்சரிக்கை என தெரிகின்றது.

பொறுத்திருந்து பார்க்கலாம், எதிர்கால அரசியல் மாற்றம் பெறுமா, இத் தேர்தல் முடிவினால் அரசுக்கு மக்கள் கூறியது என்ன என அரசு புரிந்துகொள்வார்களா..

ஆட்சியிலும், அரசின் நடவடிக்கையிலும் ஏதாவது மாற்றம் வருமா இல்லையேல் அடுத்த ஐந்தாண்டு காலத்தின் பின் மக்கள் இன்னுமொரு மாற்றத்தை எதிர்பார்த்து தேர்தலுக்காக காத்திருக்க வேண்டும்.

முல்லைத்தீவிலும் காலூன்றிய இலங்கை தமிழரசு
Posted in இலங்கை செய்திகள்

முல்லைத்தீவிலும் காலூன்றிய இலங்கை தமிழரசு

முல்லைத்தீவிலும் காலூன்றிய இலங்கை தமிழரசு

முல்லைத்தீவிலும் காலூன்றிய இலங்கை தமிழரசு நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் முல்லைத் தீவில் நான்கு பிரதேச சபைகளையும் இலங்கை தமிழரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது.

நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன.

இதற்கமைய மாந்தை கிழக்கு பிரதேச சபை, துணுக்காய் பிரதேச சபை, புதுக்குடியிருப்பு பிரதேச சபை மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச சபை ஆகிய 4 பிரதேச சபைகளையும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது.

மாந்தை கிழக்கு பிரதேச சபையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி – 1,364 வாக்குகளைப் பெற்று 4 உறுப்பினர்களையும் கரைதுறைப்பற்று பிரதேச சபையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி – 6,306 வாக்குகளைப் பெற்று 7 உறுப்பினர்களையும்,

புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி – 10,816 வாக்குகளைப் பெற்று 11 உறுப்பினர்களையும் துணுக்காய் பிரதேச சபையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி – 1,594 வாக்குகளைப் பெற்று 4 உறுப்பினர்களையும் பெற்றுள்ளது.

மிக பெரும் வரலாற்று சாதனையாக எந்த வெற்றி அங்கு இடம் பெற்றுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிங்கள இனவாதத்திற்கு மிகப் பெரும் அடியை வழங்கி இருக்கிறார்கள்.

வடக்கு பகுதியில் அதிகமான பகுதிகளை இலங்கை தமிழர் கட்சி சுருட்டி மிகப்பெரும் சாதனையை படைத்துள்ளது வரலாற்று நிகழ்வாக இது உள்ளது.

தமிழ் மக்கள் வடக்கு பகுதியில் விழுந்து விட்டார்கள் ,அவர்கள் மீளவும் எழுந்து விட மாட்டார்கள் என எண்ணி கொக்கரித்த, எதிராளிகள் தற்பொழுது தோற்றுப் போயுள்ளார்கள்.

கடந்த காலங்களில் எமது விடுதலையை நசுக்கி தமிழர்களை அடக்கி ஒடுக்கி ஆர்ப்பரித்த ,சிங்கள பேரினவாதம் தற்பொழுது இலங்கை தமிழர் கட்சியிடம் அடி வாங்கி நொந்து சுருண்டு இருக்கிறது.

இது மக்கள் வழங்கிய மிகப்பெரும் வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. இந்த வெற்றியுடன் தமிழர்கள் மீளவும் சோர்ந்து விடாமல் பயணிக்கிறார்கள் என்பதை இதற்கான காட்டுகிறது.

எதிர்வரும் காலங்களில் வெற்றி சூடிய அத்தனை வேட்பாளர்களும் தமிழ் மக்களுக்கு உரிய வேலைகளில் பணிகளில் ஈடுபட்டு அவர்கள் வெல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிளிநொச்சியை தன்வசமாக்கிய இலங்கை தமிழரசு
Posted in இலங்கை செய்திகள்

கிளிநொச்சியை தன்வசமாக்கிய இலங்கை தமிழரசு

கிளிநொச்சியை தன்வசமாக்கிய இலங்கை தமிழரசு

கிளிநொச்சியை தன்வசமாக்கிய இலங்கை தமிழரசு நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தின் 3 பிரதேச சபைகளையும் இலங்கை தமிழரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது.

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன.

இதற்கமைய பச்சிளைப்பள்ளி பிரதேச சபை, கரைச்சி பிரதேச சபை மற்றும் பூநகரி பிரதேச சபை ஆகிய 3 பிரதேச சபைகளையும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது.

கரைச்சி பிரதேச சபையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி 20,962 வாக்குகளைப் பெற்று 20 உறுப்பினர்களையும் பச்சிளைப்பள்ளி பிரதேச சபையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி 3,040 வாக்குகளைப் பெற்று 6 உறுப்பினர்களையும்,

பூநகரி பிரதேச சபையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி 5,171 வாக்குகளைப் பெற்று 10 உறுப்பினர்களையும் பெற்றுள்ளது.

மிக பெரும் வரலாற்று சாதனையாக எந்த வெற்றி அங்கு இடம் பெற்றுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சிறிதரனின் தலைமையில் நடத்தப்பட்ட அணிகள் மிகப் பெரும் வெற்றியை தன தாக்கிய மிகப்பெரும் வரலாற்று பதிவை நிலைநாட்டியுள்ளது .

சிங்கள இனவாதத்திற்கு மிகப் பெரும் அடியை வழங்கி இருக்கிறார்கள். கரைச்சியில் தங்களது வாக்குகள் மூலமாக சிங்கள இனவாதத்தையும் சிங்கள தேசியவாதத்தையும் துடைத்து எறிந்த மக்கள் நாட்டிய சாதனை இதுதான்.

வடக்கு பகுதியில் அதிகமான பகுதிகளை இலங்கை தமிழர் கட்சி சுருட்டி மிகப்பெரும் சாதனையை படைத்துள்ளது வரலாற்று நிகழ்வாக இது உள்ளது.

தமிழ் மக்கள் வடக்கு பகுதியில் விழுந்து விட்டார்கள் ,அவர்கள் மீளவும் எழுந்து விட மாட்டார்கள் என எண்ணி கொக்கரித்த, எதிராளிகள் தற்பொழுது தோற்றுப் போயுள்ளார்கள்.

கடந்த காலங்களில் எமது விடுதலையை நசுக்கி தமிழர்களை அடக்கி ஒடுக்கி ஆர்ப்பரித்த ,சிங்கள பேரினவாதம் தற்பொழுது இலங்கை தமிழர் கட்சியிடம் அடி வாங்கி நொந்து சுருண்டு இருக்கிறது.

இது மக்கள் வழங்கிய மிகப்பெரும் வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. இந்த வெற்றியுடன் தமிழர்கள் மீளவும் சோர்ந்து விடாமல் பயணிக்கிறார்கள் என்பதை இதற்கான காட்டுகிறது.

எதிர்வரும் காலங்களில் வெற்றி சூடிய அத்தனை வேட்பாளர்களும் தமிழ் மக்களுக்கு உரிய வேலைகளில் பணிகளில் ஈடுபட்டு அவர்கள் வெல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய தேர்தல் வாக்கு வீதம்
Posted in இலங்கை செய்திகள்

தற்போதைய தேர்தல் வாக்கு வீதம்

தற்போதைய தேர்தல் வாக்கு வீதம்

தற்போதைய தேர்தல் வாக்கு வீதம் விறு விறுப்பாக இடம்பெற்றுள்ளது .இதன் அடிப்படையில் கொழும்பு மாவட்டத்தில் 38 சதவீத வாக்குகளும் ,கம்பாக மாவாட்டத்தில் 36 சதவிதம் ,களுத்துறை மாவாட்டத்தில் 45 சதவீதம் ,அனுராதபுரம் 40 சதவீதம் பதிவாகியுள்ளது .

மன்னார் மாவட்டத்தில் 54 சதவீத வாக்குகளும் ,இரத்தினபுரி 50 சதவீத வாக்குகளும் ,மொனராகலை 46 சதவீத வாக்குகளும் ,பதிவு செய்ய பட்டுள்ளது .

இதே போன்று கிளிநொச்சி யாழ்ப்பாணம் மட்டக்களப்பு பகுதிகளிலும் 35 வீத வாக்குகளுக்கு மேலே பதிவாகியுள்ளது .

இந்த உள்ளாட்சி சபை தேர்தலில் ஆரா கட்சி மிகப் பெரும் சரிவை சந்திக்க நேரிடும் என்பதாக வாக்கு பதிவுகள் எண்ணிக்கை முடிவுகள் காட்டுவதாக உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றனர்.

மிகப்பெரும் மக்கள் ஆதரவு தனக்கு இருப்பதாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஆளுகின்ற ஆட்சி அதிகாரம் இம்முறை வடகிழக்கு பகுதியில் பெரும் பாதிப்பையும் இழப்பையும் சந்திக்கும் இடம் எதிர்பார்க்கப்படுகிறது.

மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் உரியவரையில் நிறைவேற்றப்படாத மையம் தான்தோன்றித்தனமான நடவடிக்கை காரணமாக அது ஒரு ஆட்சி மீது மக்கள் வெறுப்புக் கொண்டுதான் காரணமாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதை இந்த பாக்கு விதங்கள் பார்க்கின்ற பொழுது மக்கள் அதிகம் இந்த தேர்தலில் அக்கறை காட்டவில்லை என்பதை எடுத்துக்காட்டுகிறது.

ஆகவே தான் தற்பொழுது அது ஒரு ஆட்சி அதிகாரம் மீளவும் பாரிய சரிவு நிலைக்கு செல்ல கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிறப்பாக இடம்பெறும் வாக்குப் பதிவு
Posted in இலங்கை செய்திகள்

சிறப்பாக இடம்பெறும் வாக்குப் பதிவு

சிறப்பாக இடம்பெறும் வாக்குப் பதிவு

சிறப்பாக இடம்பெறும் வாக்குப் பதிவு சம்பவங்கள் தற்பொழுது சமூகவலைத்தளங்களில் வாக்காளர்கள் பதிவிட்டு வருகிறார்கள்.

உள்ளூராட்சி சபை தேர்தல் இன்று தற்பொழுது இலங்கை முழுவது இடம் பெற்று வருகிறது.

இந்த தேர்தலை அடுத்து தற்பொழுது நாடளாவிய ரீதியில் தமிழ் சிங்கள மக்கள் இணைந்து கூட்டாக தமது வாக்குகளை அளித்து வருகிறார்கள்.

வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் 30 வீதத்துக்கு மேற்பட்ட வாக்குப்பதிவுகள் இதுவரை இடம்பெற்றுள்ளதாக அங்கிருந்து வரும் காலம் முனை தகவல்கள் தெரிவிக்கின்றன.

மக்கள் மிகவும் ஆர்வத்துடன் சென்று தமது வரலாற்றுக் கடமையை முடித்ததாக பெருமிதம் தெரிவித்து வருகின்றனர்.

அதன் அடிப்படையில் வடக்கு பகுதியில் அனுராக் கட்சி நிலைக்குமா அல்லது கவிழுமா என்கின்ற கேள்வி இடம் பெற்று வருகிறது.

மக்கள் தருகின்ற கருத்துக்களின் அடிப்படையில் வீட்டு சின்ன முதன்மையான இடத்தில் நிற்பதை காண முடிகின்றது.

கரைச்சி பிரதேசபை மற்றும் கிளிநொச்சி கூட்டங்கள் ஆகியவை ஸ்ரீதரன் தலைமையில் தக்க வைத்துக் கொள்ளப்படும், என்கின்ற விடயம் உறுதிப்படுத்தப்பட்டது உள்ளாக மக்கள் வாக்களிப்பு மையங்கள் காட்டுகின்றது .

வட்டார தேர்தல் என்பதால் அது சார்ந்த மக்களை அதிகமான வாக்குகளை அளித்து அவர்களை வெல்ல வைப்பார்கள் என்பது தெளிவு.

ஆகவே இன்று இடம்பெறுகின்ற இந்த தேர்தல் மிக முக்கியமானதும் வரலாற்று கடமை மிக்கதும் ,அனுரா ஆட்சியினுடைய இயலாமை தன்மையை இந்த தேர்தல் எடுத்து காண்பிக்கும்.

மக்கள் தற்பொழுது விறுவிறுப்பாக பரபரப்பாக தமது சிறப்பாக தமது வாக்குகளை பதிந்து வருகின்ற காட்சி படங்கள் இதோ.

வெல்ல போவது கேள்வியாகிறது .

தேர்தல் ஆணைக்குழு வெளியிட்ட அறிக்கை
Posted in இலங்கை செய்திகள்

இதுவரையில் தேர்தல் நிலவரம்

இதுவரையில் தேர்தல் நிலவரம்

இதுவரையிலான தேர்தல் நிலவரங்கள் தற்போது தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளால் வெளியாகியுள்ளது. அதனடிப்படையில்,

உள்ளூராட்சித் தேர்தலில் இன்று காலை10 மணிவரையிலான இடம்பெற்ற வாக்களிப்பு வீதம்,

நுவரெலியா 22 %, பதுளை 22 %, மொனராகலை 15 %, அனுராதபுரம் – 20 %, யாழ்ப்பாணம் 18 %, மன்னார் 23 %, வவுனியா 31.5 %, திகாமடுல்ல 24%

கம்பஹா 20 %, மாத்தறை 20 %, களுத்துறை 20 %, பொலனறுவை 21 %, கொழும்பு 18 %, புத்தளம் 20 %, காலி 19 %, இரத்தினபுரி 20 %

அம்பாந்தோட்டை 19 %, கிளிநொச்சி 22 %, மாத்தளை 25 %, கேகாலை 20 %, கண்டி 21 %

அனைத்து பிரதேசங்களிலும் சுமூகமாக வாக்களிப்புக்கள் நடைபெற்ற வண்ணம் இருக்கின்றன.

யாழ்ப்பாண மாவட்டத்திலேயே 17 மாநகர சபைகளுக்கு மூவாயிரத்து 519 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 1 மாநகர சபை, 3 நகர சபைகள் மற்றும் 13 பிரதேச சபைகள் என்ற கட்டமைப்பில் உள்ளூர் அதிகார சபைகள் இருக்கின்றன.

மலையகத்தில் மக்கள் ஆர்வமாக சென்று தத்தம் வாக்குப்பதிவினை மேற்கொண்டுவருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

நீர்கொழும்பு மாநகரசபைக்கான தேர்தல் தொகுதியில் மக்கள் மந்தகதியில் வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்ற போதிலும், அதிக எண்ணைக்கையானோர் வாக்களித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மன்னாரில் 114 வாக்களிப்பு நிலையங்களில் வாக்குப்பதிவுகள் இடம்பெற்றுவருகின்றன.

இத் தேர்தல் இன்று காலை 7 மணிமுதல் மாலை 4 மணிவரை நடைபெறும் அதேநேரம் ஒவ்வோர் நிலையத்திலும் அதிகூடிய பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

மேலும், வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ள அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்றும், வாக்களித்ததன் பின்னர் அமைதியாக வீடுகளுக்குச் செல்லுங்கள் என்றும்,

நாட்டின் சட்டம் மற்றும் பொது ஒழுங்கை முறையாகக் கடைப்பிடியுங்கள் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளவர்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும். தேர்தல்கள் ஆணைக்குழு தனக்கான பொறுப்பை நிறைவேற்றியுள்ளது. இனி உங்களின் பொறுப்பை நிறைவேற்றுங்கள்.

சுதந்திரமானதும் நீதியானதுமான வகையில் தேர்தலை நடத்த சட்டத்தின் பிரகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

அமைதியான முறையில் தேர்தலை நடத்துவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படும்.

வாக்களிப்பு நிலையத்தினுள் கைத்தொலைபேசிகளைப் பயன்படுத்தல், படம் எடுத்தல், காணொளிகளைப் பதிவு செய்தல், ஆயுதங்களை வைத்திருத்தல், புகைப் பிடித்தல், மதுபானம் அருந்துதல் அல்லது போதைப்பொருட்கள் உபயோகித்தல்,

மதுபானம் அருந்திவிட்டு அல்லது போதைப்பொருள்கள் பாவனையுடன் வாக்கெடுப்பு நிலையத்துக்குச் செல்லுதல் என்பன தடை செய்யப்பட்டுள்ளன.

நாட்டின் சட்டம் மற்றும் பொது ஒழுங்கை நாட்டு மக்கள் அனைவரும் முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும். வாக்கெடுப்பு நிலையத்தில் ஏதேனும் அசம்பாவிதம் நேர்ந்தால் முழு வாக்கெடுப்பு நடவடிக்கைகளுக்கும் பாதிப்பு ஏற்படும்.

ஆகவே, அவதானத்துடன் செயற்பட வேண்டும்.” – என்றார்.

இந்நிலையில், கண்டி – பேராதனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கன்னொருவ பிரதேசத்தில் உள்ள வாக்கெடுப்பு நிலையம் ஒன்றில் தேர்தல் கடமைகளில் ஈடுபட்டிருந்த பெண் அரச உத்தியோகத்தர் ஒருவர்

திடீரென சுகயீனமுற்று உயிரிழந்துள்ளதாக பேராதனை பொலிஸார் தெரிவித்தனர்.


பிரதமரின் சர்ச்சை கருத்து
Posted in இலங்கை செய்திகள்

பிரதமரின் சர்ச்சை கருத்து

பிரதமரின் சர்ச்சை கருத்து

இலங்கை பிரதமர் சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார் என கூறி செய்திகள் வெளியாகியுள்ளன.

உள்ளுராட்சி தேர்தல்கள் அமைதிக் காலத்தில் பிரச்சாரத்தில் ஈடுபடுமாறு தனது ஆதரவாளர்களிற்கு வேண்டுகோள் விடுத்ததன் மூலம்,

ஹரிணி அமரசூரிய தேர்தல் விதிமுறைகளை மீறினாரா என்பது குறித்து விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பிரதமர் தெரிவித்துள்ள விடயங்களை தனது சட்டதிணைக்களத்திற்கு முதலில் அனுப்பி விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாகதேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நாங்கள் இந்த விவகாரம் குறித்து எந்த நடவடிக்கையையும் எடுப்போம் என தெரிவித்துள்ள ஆர்எம்ஏஎல் ரத்நாயக்க எனினும் முதலில் அந்த கூற்றினை சட்ட திணைக்களத்திற்கு அனுப்பவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அவர் என்ன தெரிவித்தார் என்பதை அறிவது முதலில் அவசியம். இதன் காரணமாக அதனை சட்ட பிரிவிடம் சமர்ப்பிக்க வேண்டும். பிரதமரின் கூற்று எந்த வகையில் சட்டத்தை மீறியுள்ளது என்பதை ஆராயவேண்டும்.

பிரதமரின் அறிக்கையில் தேர்தல்கள் தொடர்பிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை நிரூபிக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

உண்மையிலேயே இலங்கைப் பிரதமர் அவ்வாறு கூறினாரா இல்லையா? அவர் கூறியதற்கான சான்று நிரூபிக்கக் கூடிய வகையில் இருக்கின்றதா?

அவ்வாறு இருக்கும் பட்சத்தில் அது தேர்தல் ஆணையகத்திற்கு சமர்ப்பிக்கப்படுமா? சமர்ப்பிக்கப்படுமாயின் சட்டத்தின் முன் பிரதமர் நிறுத்தப்படுவாரா என அரசியல் மட்டத்தில் சலசலப்பு எழுந்துள்ளது.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடைபெற்றும்வரும் இன்றைய நாளில் அதற்கான முடிவுகளும் வெளியாகும். இந்நிலையில் பிரதமர் மீது இவ்வாறான சர்ச்சை கருத்து தொடர்பில் முறைப்பாடு தெரிவித்துள்ளமை,

அரச தரப்பில் மேலும் அதிர்ச்சியை உண்டாகியுள்ளதோடு இதனை யார் தெரிவித்திருப்பார்கள் என்ற விபரங்களை சேகரிக்கும் நடவடிக்கையில் இரகசிய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிய வந்துள்ளது.

வாக்குச் சீட்டில் இப்படி செய்யாதீர்கள்
Posted in இலங்கை செய்திகள்

வாக்குச் சீட்டில் இப்படி செய்யாதீர்கள்

வாக்குச் சீட்டில் இப்படி செய்யாதீர்கள்

வாக்குச் சீட்டில் இப்படி செய்யாதீர்கள் நாளை நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி மன்ற தேர்தலின்போது வாக்களிக்கையில் மக்களே இப்படி செய்யாதீர்கள் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்களிப்புக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க,

வாக்காளப் பெருமக்களே வாக்களிக்க வரும்போது, தேசிய அடையாள அட்டை, வாகன அனுமதி பத்திரம் மற்றும் செல்லுபடியாகும் கடவுச்சீட்டு ஆகியவற்றை எடுத்து வரவேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

வாக்களிப்புக்கான தங்களுடைய ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காக, அலுவலக அடையாள அட்டை,

தேசிய அடையாள அட்டை பெறுவதற்காக விண்ணப்பம் செய்தமைக்கான பிரதி ஆகியவற்றை எடுத்து வரவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

அத்துடன், வாக்குச்சீட்டில் கட்சிகளின் பெயர்களுக்கு எதிரே கட்சிகளின் சின்னங்களும் சுயேச்சைக்குழுக்களின் பெயர்களுக்கு எதிரே சுயேச்சைக் குழுக்களின் சின்னங்களும் இருக்கும்,

அதற்கு எதிராக வெற்றுக்கட்டம் இருக்கும், அதில் புள்ளடி (X) இடவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தால், ஞாயிற்றுக்கிழமை (04) மாலை அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஒலிப்பதிவில், உரையாற்றி உள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க,

வாக்குச்சீட்டில் எழுதவோ, சித்திரம் கீறவோ, கிறுக்கவோ, எண்ணங்களை எழுதவோ, பெயர்களை எழுதவோ வேண்டாம். புள்ளடி (X) இடப்படாத எந்தவொரு வாக்குச்சீட்டும் நிராகரிக்கப்படும் என்றார்.

நாளை நடைபெறவிருக்கும் தேர்தலுக்கான பரப்புரைகள் மிக விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தபோதிலும்,

தேர்தலுக்கான ஆயத்தப்பணிகளும் அனைத்து மாவட்டங்களிலும் மும்மரமாக நடைபெற்று முடிந்திருக்கின்றது.

தேர்தல் முறைகேடுகளை தவிர்க்கும்பொருட்டு அநேகமான பொலிஸார் களமிறக்கப்பட்டுள்ளமையும் அறியக்கூடியதாக இருக்கின்ற, அதேநேரம்

ஒரு வாக்குகூட செல்லுபடியற்றதாகி விடக்கூடாது என்பதில் தேர்தல் ஆணைக்குழு முழுக் கவனத்தை செலுத்தி , வாக்காளப் பெருமக்களுக்கு வாக்குச் சீட்டில் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

52 தேர்தல் விதிமுறை மீறல்கள் பதிவு
Posted in இலங்கை செய்திகள்

52 தேர்தல் விதிமுறை மீறல்கள் பதிவு

52 தேர்தல் விதிமுறை மீறல்கள் பதிவு

52 தேர்தல் விதிமுறை மீறல்கள் பதிவு ,நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் புதன்கிழமை (23) வரை 52 தேர்தல் விதிமுறை மீறல் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக

யாழ்ப்பாண மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார்.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் புதன்கிழமை (23) அன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இதனைத் தெரிவித்தார்.

பதிவு செய்யப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பாக தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ பிரிவினால் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனுரகுமார திசாநாயக்க மீது கடுமையான தேர்தல் சட்ட மீறல்கள்
Posted in இலங்கை செய்திகள்

அனுரகுமார திசாநாயக்க மீது கடுமையான தேர்தல் சட்ட மீறல்கள்

அனுரகுமார திசாநாயக்க மீது கடுமையான தேர்தல் சட்ட மீறல்கள்

அனுரகுமார திசாநாயக்க மீது கடுமையான தேர்தல் சட்ட மீறல்கள் ,ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மீது கடுமையான தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட குறிப்பிட்ட புகார்கள் மீது தேர்தல்

ஆணையம் (EC) நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டதாக ஐக்கிய குடியரசு முன்னணி (URF) தலைவரும் முன்னாள் அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க குற்றம் சாட்டியுள்ளார்.

கடுவெல மாநகர சபைக்கு போட்டியிடும் ஐக்கிய குடியரசு முன்னணி வேட்பாளர்கள் சனிக்கிழமை (19) அன்று மாநகர சபைக்கு வெளியே நடத்திய

ஆர்ப்பாட்டத்தின் போதே முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளார்.

வரவிருக்கும் தேர்தலில் NPP வெற்றி பெற்ற உள்ளூராட்சி அதிகாரிகளுக்கு மட்டுமே தனது அரசாங்கம் நிதி வழங்கும் என்று ஜனாதிபதி திசாநாயக்க

அறிவித்தமை குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்ததாக ரணவக்க கூறினார்.

பாதிக்கப்படக்கூடிய மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குழுக்களுக்கு உதவுவதற்காக அஸ்வேசும என்ற நலன்புரி திட்டம் இந்த ஆண்டு மேலும் 400,000 குடும்பங்களுக்கு வழங்கப்படும் என்று ஜனாதிபதி திசாநாயக்க

சமீபத்தில் அறிவித்தது குறித்த புகார் குறித்து தேர்தல் ஆணையம் அமைதியாக இருந்ததாகவும் ரணவக்க குற்றம் சாட்டினார்.

உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் JJB வேட்பாளர்களுக்கு ஆதரவாக ஏப்ரல் 17 அன்று மன்னாரில் நடைபெற்ற பேரணியின் போது, ஜனாதிபதி

திசாநாயக்க இந்த அறிவிப்பை வெளியிட்டார். உள்ளூராட்சித் தேர்தல்களின் முதல் கட்டம் மே 06ஆம் திகதி நடைபெற உள்ளது.

இந்த ஆண்டு ஜூன் மாதம் இந்தத் திட்டத்தில் கூடுதலாக 400,000 குடும்பங்கள் சேர்க்கப்படும் என்று ஜனாதிபதி திசாநாயக்க கூறினார்.

ஜனாதிபதியின் வாக்குறுதி தேர்தல் இலஞ்சம் என்று கூறி, தேசிய மக்கள் கட்சி வேட்பாளர்கள் ஜனாதிபதியின் வாக்குறுதியை மீண்டும் கூறும் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்ததாக குற்றம் சாட்டினார்.

புத்த மதத்திலிருந்து வில்பட்டு வனப்பகுதி வழியாக மன்னாருக்கு ஒரு சாலையைத் திறப்பதாக மன்னாரில் ஜனாதிபதி திசாநாயக்க அறிவித்ததைக்

குறிப்பிட்டு, பசில் ராஜபக்ஷவின் திட்டத்தை செயல்படுத்த ஜனாதிபதி முயற்சிப்பதாக ரணவக்க குற்றம் சாட்டினார்.

மே 06ஆம் திகதி நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில் வாக்காளர்கள் தேசிய மக்கள் கட்சி அரசாங்கத்தின் மீது தங்கள் அதிருப்தியைக் காட்டுவார்கள் என்று எதிர்பார்ப்பதாக முன்னாள் எம்.பி. கூறினார்.

ஊடக கேள்விக்கு பதிலளித்த ரணவக்க, ஏப்ரல் 18 முதல் 10 நாள் காலப்பகுதியில் புனித பல் சின்னத்தின் விளக்கத்தைப் பாராட்டிய அதே வேளையில், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை

விளம்பரப்படுத்துவதற்காக அரசாங்கத்தால் நடத்தப்படும் ஊடகங்கள் மத நிகழ்வை சுரண்டிக்கொண்டதாகக் குற்றம் சாட்டினார்,

இதன் மூலம் வரவிருக்கும் தேர்தலில் தேசிய மக்கள் கட்சிக்கு ஒரு நன்மையை அளித்தார். தேர்தல் ஆணையம் மேலும் தாமதமின்றி தலையிட்டு, ஊடகங்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

1988ஆம் ஆண்டு ஜே.வி.பி. அதன் இரண்டாவது தோல்வியடைந்த கிளர்ச்சியின் போது தலதா மாளிகை மீதான தாக்குதலை நினைவு கூறியுள்ளார்.

டிசெம்பர் 2006 இல் கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் எஸ். ரவீந்திரநாத் காணாமல் போனது தொடர்பாக பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் சமீபத்தில் கைது செய்யப்பட்டதைப் பற்றி

கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர், தனது வழக்கை நிரூபிக்க சி.ஐ.டி.யின் பொறுப்பை வலியுறுத்தினார்.

இருப்பினும், இரண்டாவது கிளர்ச்சியின் போது கொழும்பு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் ஸ்டான்லி விஜேசுந்தர மற்றும் மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர்

சந்திரரத்ன படுவதவிதனே ஆகியோரின் படுகொலையையும் அரசாங்கம் விசாரிக்க வேண்டும் என்றும் ரணவக்க கூறினார்.

தேர்தல் சட்டங்களை மீறும் அறிக்கைகள் வேண்டாம்
Posted in இலங்கை செய்திகள்

தேர்தல் சட்டங்களை மீறும் அறிக்கைகள் வேண்டாம்

தேர்தல் சட்டங்களை மீறும் அறிக்கைகள் வேண்டாம்

தேர்தல் சட்டங்களை மீறும் அறிக்கைகள் வேண்டாம் ,தேர்தல் சட்டங்களை மீறும் அறிக்கைகளை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு தேர்தல் ஆணைக்குழு, ஜனாதிபதியின் செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அளித்த முறைப்பாடுகளைத் தொடர்ந்து ஆணைக்குழு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

அரசு அதிகாரங்கள் இல்லாத உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு நிதி ஒதுக்கீடுகளை வழங்க மாட்டேன் என்று அரசியல் மேடைகளில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கூறியதாக இந்த அமைப்புகள் தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளன.

தேர்தல் சட்ட விதிகளை மீறி சுவரொட்டிகள் ஒட்டிய மூவருக்கு 120 000 தண்டம்
Posted in இலங்கை செய்திகள்

தேர்தல் சட்ட விதிகளை மீறி சுவரொட்டிகள் ஒட்டிய மூவருக்கு 120 000 தண்டம்

தேர்தல் சட்ட விதிகளை மீறி சுவரொட்டிகள் ஒட்டிய மூவருக்கு 120 000 தண்டம்

தேர்தல் சட்ட விதிகளை மீறி சுவரொட்டிகள் ஒட்டிய மூவருக்கு 120 000 தண்டம் ,தேர்தல் சட்ட விதிகளை மீறி சுவரொட்டிகள் ஒட்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூவருக்கும் ஒரு லட்சத்து இருபதாயிரம் ரூபாய் (120,000) தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் சட்ட விதிகளை மீறி மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தில் சுவரொட்டிகள் ஒட்டினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் மூவர்,

செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை ஏறாவூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.

குறித்த சந்தேக நபர்களை செவ்வாய்க்கிழமை (08) ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்த போது சந்தேக நபர்கள்

குற்றத்தை ஒப்புக் கொண்டதால் தலா நாற்பதாயிரம் வீதம் மூவரையும் ஒரு இலட்சத்து இருபதாயிரம் ரூபாய் தண்ட பணம் செலுத்துமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.

அதிகாலை வேளையில் வீதியோர சுவர்களில் சுவரொட்டிகளை ஒட்டி கொண்டிருக்கும் போது இரவு நேர ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் குழுவினர் அவர்களை கைது செய்தனர். குறித்த சந்தேக

நபர்களிடமிருந்து ஒரு தொகுதி சுவரொட்டிகள் கைப்பற்றப்பட்டன. இவற்றில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சின்னம் மற்றும் வேட்பாளரின் படங்கள் அச்சிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் தொடர்பில் 527 முறைப்பாடுகள் பதிவு
Posted in இலங்கை செய்திகள்

தேர்தல் தொடர்பில் 527 முறைப்பாடுகள் பதிவு

தேர்தல் தொடர்பில் 527 முறைப்பாடுகள் பதிவு

தேர்தல் தொடர்பில் 527 முறைப்பாடுகள் பதிவு ,உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் கடந்த 20 ஆம் திகதியிலிருந்து நேற்று வரை 527 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 4 முறைப்பாடுகளும், சட்டத்தை மீறியமை தொடர்பில் 492 முறைப்பாடுகளும் வேறு குற்றங்கள் தொடர்பில் 29 முறைப்பாடுகளும் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

அத்துடன், கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 71 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்

சுயேச்சைக் குழுக்களாலும் தாக்கல் செய்யப்பட்ட கணிசமான வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பாக தேர்தல் வழக்குகளுக்கு இவ்வாரத்தில் தீர்ப்பு
Posted in இலங்கை செய்திகள்

சுயேச்சைக் குழுக்களாலும் தாக்கல் செய்யப்பட்ட கணிசமான வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பாக தேர்தல் வழக்குகளுக்கு இவ்வாரத்தில் தீர்ப்பு

சுயேச்சைக் குழுக்களாலும் தாக்கல் செய்யப்பட்ட கணிசமான வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பாக தேர்தல் வழக்குகளுக்கு இவ்வாரத்தில் தீர்ப்பு

சுயேச்சைக் குழுக்களாலும் தாக்கல் செய்யப்பட்ட கணிசமான வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பாக தேர்தல் வழக்குகளுக்கு இவ்வாரத்தில் தீர்ப்பு ,எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் போட்டியிடுவதற்காக பல சபைகளுக்கு அரசியல் கட்சிகளாலும் ,சுயேச்சைக் குழுக்களாலும் தாக்கல்

செய்யப்பட்ட கணிசமான வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பாக தாக்கல் செய்யப்படும் வழக்குகளை இந்த வாரத்திலேயே விசாரித்து தீர்ப்பு வழங்கும் சாத்தியம் இருப்பதாக ,அவ்வாறான சில வழக்குகளில் உயர் நீதிமன்றத்தில் வாதங்களை

முன்வைக்க உள்ளவர்களில் ஒருவரான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் நம்பிக்கை தெரிவித்துள்ளார் .

அண்மையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட உள்ளூராட்சி திருத்தச் சட்ட மூலத்தில் உள்ள ஏற்பாடுகளுக்கு அமைய எழுந்துள்ள சில சட்டப் சிக்கல்கள் தொடர்பிலேயே பல கட்சிகளாலும், சுயேட்சை குழுக்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் இம்முறை நிராகரிக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ,ஐக்கிய தேசிய கூட்டமைப்பு(United National Alliance) , தமிழரசுக் கட்சி ,தமிழீழ விடுதலை அமைப்பு(TELO) போன்றவை உயர் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (25) மனுக்களை தாக்கல் செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் தாக்கல் செய்யப்படும் வழக்குகளில் கட்சியின் செயலாளர்,பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் மனுதாரராகவும் ,அவ்வாறே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் ஐக்கிய தேசியக்

கூட்டமைப்புக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றின் அடிப்படையில் அக் கட்சிகள் சேர்ந்து போட்டியிடவுள்ள சில சபைகளுக்கான நிராகரிக்கப்பட்டுள்ள வேட்பு மனுக்களை பொறுத்தவரை பிரஸ்தாப கூட்டமைப்பின் செயலாளர் எம்.

நயீமுல்லாஹ் மனுதாரராகவும் இருக்கின்ற நிலையில் அவற்றுக்காகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் உயர் நீதிமன்றத்தில் வாதாட உள்ளார்.

உள்ளூராட்சித் தேர்தல் சிறப்பு சுற்றறிக்கை வெளியீடு
Posted in இலங்கை செய்திகள்

உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் 06 முறைப்பாடுகள்

உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் 06 முறைப்பாடுகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுடன் தொடர்புடைய 06 முறைப்பாடுகள், ஞாயிற்றுக்கிழமை தமக்கு கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தேர்தல் விதிகளை மீறியது தொடர்பில் இந்த முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளதுடன், அதில் தேர்தல் வன்முறை தொடர்பான எந்த முறைப்பாடும் பதிவாகவில்லை என பொலிஸார் கூறியுள்ளனர்.

மாத்தளையில் மூன்று முறைப்பாடுகளும் கெபிதிகொல்லாவ,மொனராகலை மற்றும் பொலன்னறுவையில் இருந்து மூன்று முறைப்பாடுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.

336 உள்ளூராட்சி மன்றங்களுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் 2025 மே 06 ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.