Tag: அனுர
ஜேர்மனியை சென்றடைந்த அனுர
ஜேர்மனிக்கு உத்யோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்ட இலங்கை ஜனாதிபதி அனுர இன்றைய தினம் ஜேர்மனியை சென்றடைந்துள்ளார்.
ஜெர்மனியக் கூட்டாட்சி குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க,
இன்று முற்பகல் (11) பெர்லினின் பிராண்டன்பேர்க் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார்.
ஜனாதிபதியை வரவேற்கும் உத்தியோகபூர்வ வரவேற்பு நிகழ்வு, ஜெர்மன் ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியரின் (Frank-Walter Steinmeier) தலைமையில் இன்று பிற்பகல் பெர்லினில் உள்ள பெல்வீவ் மாளிகையில் (Bellevue Palace) நடைபெறும்.
இதைத் தொடர்ந்து, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் ஜெர்மன் ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியருக்கும் (Frank-Walter Steinmeier) இடையில்
உத்தியோகபூர்வ சந்திப்பு நடைபெற உள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் ஜனாதிபதியுடன் இந்த விஜயத்தில் கலந்துகொண்டுள்ளனர்.
- என் புருசா நில்லுடா 146 | கௌரி பாடல் |En Purusaa Nilludaa |Tamil love Feeling songs

- என் கண்ணீர் துளியிலே உன்னை தேடுவேனே |621| en kanneer thuliyile unnai theduvene | VANNI MAINTHAN Song

- ஜிந்தா ஜீனுக்கு தான் |966 |காதல் பாடல் | LOVE TAMIL SONG

- சிக்கு சிக்கு தான் | 982|Chikku Chikku Than |

- மறக்க முடியல |964| காதல் பாடல் |Love song | MALA SONGS

அனைவரும் ஒன்றிணையுங்கள் ஜனாதிபதி அழைப்பு
அனைவரும் ஒன்றிணையுங்கள் ஜனாதிபதி அழைப்பு
நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி அனுர அழைப்பு விடுத்துள்ளார்.
பொருளாதார வெற்றிகளை அடைவதன் மூலம் மாத்திரம் ஒரு நாடு அபிவிருத்தி அடைய முடியாது என்றும்,
அத்துடன், சமூக அபிவிருத்தி மற்றும் அரசியல் கலாசாரம் ஆகிய மூன்று தூண்களும் ஒரே நேரத்தில் கட்டியெழுப்பப்பட வேண்டுமென ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.
நிதி அமைச்சில் நேற்று (04) திறைசேரி அதிகாரிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார்.
சீனா, கொரியா மற்றும் வியட்நாம் போன்ற நாடுகள் பல காலகட்டங்களில் பொது மக்களுடன் இணைந்து மேற்கொண்ட
கூட்டு முயற்சியின் பலனாகவே பொருளாதாரத்தில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
ஒரு நாட்டை அபிவிருத்தியை நோக்கி அழைத்துச் செல்வதில் தனிநபர்கள் என்ற ரீதியில் சில பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும்,
அதே நேரம் இலக்குகளை அடைய அனைவரும் ஒன்றிணைந்து முயற்சி செய்ய வேண்டுமெனவும் ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார்.
அரசியல் அதிகாரம் என்ற வகையில் அதிகாரிகள் மீது தனது கருத்தை மாத்திரம் திணிக்க மாட்டேன் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க,
நிபுணத்துவ அறிவு கொண்ட அதிகாரிகள் மற்றும் அரசியல் அதிகாரம் கொண்டவர்களுக்கு இடையே இடம்பெறும் முறையான கலந்துரையாடல்கள் மூலம் தேவையான முடிவுகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
சில தன்னிச்சையான அரசியல் தலையீடுகளால் கடந்த காலங்களில் இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட திட்டங்கள் தோல்வியடைந்த விதம் குறித்தும் இதன்போது ஜனாதிபதி நினைவு கூர்ந்தார்.
மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த துறைகளை அரசாங்கத்தின் கீழ் பேணுவதுடன், அரசாங்கத்தின் அடிப்படைக் கொள்கைகளின் அடிப்படையில் குறித்த நிறுவனங்களில்
கட்டமைப்பு ரீதியான மாற்றங்களைச் செய்வதற்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி இங்கு திறைசேரி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
இலங்கையின் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதித் திட்டம்,
அத்துடன் அமெரிக்கா விதித்துள்ள புதிய வரிகள், 2027 ஆம் ஆண்டுக்கான GSP+ சலுகை குறித்தும் ஜனாதிபதி நிதி அமைச்சின் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.
- என் புருசா நில்லுடா 146 | கௌரி பாடல் |En Purusaa Nilludaa |Tamil love Feeling songs

- என் கண்ணீர் துளியிலே உன்னை தேடுவேனே |621| en kanneer thuliyile unnai theduvene | VANNI MAINTHAN Song

- ஜிந்தா ஜீனுக்கு தான் |966 |காதல் பாடல் | LOVE TAMIL SONG

- சிக்கு சிக்கு தான் | 982|Chikku Chikku Than |

- மறக்க முடியல |964| காதல் பாடல் |Love song | MALA SONGS

அனுரவுக்கு தற்துணிவு இல்லையாம்
அனுரவுக்கு தற்துணிவு இல்லையாம்
அனுரவுக்கு தற்துணிவு இல்லையாம் ஜனாதிபது அனுரவுக்கு தற்துணிவு என்பது கடுகளவும் இல்லை என விமல் தெரிவித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அநுர அரசு பகிரங்கப்படுத்தும் என்ற நம்பிக்கை கிடையாது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியா தொடர்பான ஒருசில விடயங்களில் தற்றுணிவுடன் செயற்பட்டார். அந்தத் தற்றுணிபு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்குக் கிடையாது.”
இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று திங்கட்கிழமை மத வழிபாட்டில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“தேசிய மக்கள் சக்தி பொய் மற்றும் வெறுப்பை மாத்திரம் முன்னிலைப்படுத்தி ஆட்சிக்கு வந்தது.
நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் தவறான அரசியல் தீர்மானம் எடுத்ததை மக்கள் தற்போது விளங்கிக்கொண்டுள்ளார்கள்.
அதனையே நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வெளிப்படுத்தியுள்ளார்கள். பெரும்பான்மைப் பலம் உள்ளது என்ற ஆணவத்தில் அநுர அரசு தான்தோன்றித்தனமாகச் செயற்படுகின்றது.
2020ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த கோட்டபய ராஜபக்ஷ அரசுக்கும் பெரும்பான்மைப் பலம் இருந்ததையும், அந்தப் பலம் இரண்டாண்டுக்குள் பலவீனமடைந்ததையும் அநுர அரசு நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
இந்தியாவுடன் அரசு அண்மையில் கைச்சாத்திட்ட ஒப்பந்தங்களின் விவரங்கள் இதுவரையில் முழுமையாக வெளிப்படுத்தப்படவில்லை.
இந்த விடயத்தில் அரசு வெளிப்படைத்தன்மையுடன் செயற்படவில்லை. பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தத்தை நாடாளுமன்றத்துக்குச் சமர்ப்பிப்பதாயின்
அதற்கு இந்தியாவின் அனுமதியைப் பெற வேண்டும் என்று ஜனாதிபதி குறிப்பிடுவது வேடிக்கையாகவுள்ளது.
கடந்த காலங்களில் இதனைக் காட்டிலும் இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்ட பல ஒப்பந்தங்கள் நாடாளுமன்றத்துக்குச் சமர்ப்பிக்கப்பட்டன.
இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இந்த அரசு பகிரங்கப்படுத்தும் என்ற நம்பிக்கை கிடையாது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியா தொடர்பான ஒருசில விடயங்களில் தற்றுணிபுடன் செயற்பட்டார்.
அந்தத் தற்றுணிபு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்குக் கிடையாது. சர்வதேச நாணய நிதியத்தின் விவகாரத்தில் அநுர அரசு நாணய நிதியத்தின் சகல நிபந்தனைகளுக்கும் அடிபணிந்துள்ளது.
மின் கட்டண அதிகரிப்பு ஊடாக இதனை எதிர்வரும் மாதமளவில் விளங்கிக்கொள்ள முடியும்.” – என்றார்.
- என் புருசா நில்லுடா 146 | கௌரி பாடல் |En Purusaa Nilludaa |Tamil love Feeling songs

- என் கண்ணீர் துளியிலே உன்னை தேடுவேனே |621| en kanneer thuliyile unnai theduvene | VANNI MAINTHAN Song

- ஜிந்தா ஜீனுக்கு தான் |966 |காதல் பாடல் | LOVE TAMIL SONG

- சிக்கு சிக்கு தான் | 982|Chikku Chikku Than |

- மறக்க முடியல |964| காதல் பாடல் |Love song | MALA SONGS

விரைவில் மின் கட்டணத்தில் திருத்தம்
விரைவில் மின் கட்டணத்தில் திருத்தம்
மிக விரைவில் இலங்கையில் மின் கட்டணத்தில் திருத்தம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வருடத்திற்கான இரண்டாவது மின் கட்டண திருத்தம் தொடர்பான பிரேரணையை இலங்கை மின்சார சபை எதிர்வரும் வாரத்திற்குள் சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் மின் கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ள வேண்டுமெனில்,
அது தொடர்பான பிரேரணையை மே மாதத்தில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுடம் சமர்ப்பிக்க வேண்டுமென அதன் தொடர்பாடல் பணிப்பாளர் ஜெயநாத் ஹேரத் தெரிவித்தார்.
மின்சார கட்டண திருத்தம் தொடர்பான பிரேரணையைப் பெற்ற பிறகு, 3 முதல் 6 வாரங்களுக்குள் இது தொடர்பில் ஆராய்ந்து பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அதன் தீர்மானத்தை அறிவிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
குறித்த காலப்பகுதியில் தொடர்புடைய திட்டங்கள் குறித்து பொதுமக்களிடமும் யோசனைகள் கேட்கப்படும்.
மின் கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளுமாறு சர்வதேச நாணய நிதியம் கோரியுள்ளது, அதன்படி, எதிர்வரும் காலப்பகுதியில் மின் கட்டணங்கள் திருத்தப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
இருப்பினும், இலங்கை மின்சார சபை இதுவரை பொதுப் பயன்பாட்டுகள் ஆணைக்குழுவிடம் பொருத்தமான பிரேரணையை சமர்ப்பிக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்த வருடத்திற்கான முதலாவது மின் கட்டண திருத்தம் ஜனவரி 17 ஆம் திகதி இடம்பெற்றதோடு, அப்போது மின் கட்டணங்களை 20 சதவீதம் குறைக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நடவடிக்கை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கடந்த வாரம் தேர்தலுக்கு முன்னர், ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா கேள்வி எழுப்பினார், அதாவது,
மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டால் மாத்திரமே அடுத்த கட்ட கடன் தொகை வழங்கப்படும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
அதை ஏன் அரசாங்கம் நாட்டு மக்களிடமிருந்து மறைத்தது என ழுப்பினார்.
மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டால் மட்டுமே அடுத்த நிதியை வழங்குவதாக நாணய நிதியம் முன்வைத்துள்ள நிபந்தனை தொடர்பில் அரசாங்கம் எதுவும் கூறவில்லை.
மின் கட்டணம் அதிகரிக்கப்படாவிட்டால் நிதி வழங்க மாட்டோம் என்று நாணய நிதியம் கூறியுள்ளதாக அரசாங்கம் வெளிப்படுத்தியதா? இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதா? அவர்கள் இதை வெளிப்படுத்தவில்லை.
ஆனாலும் ஜனாதிபதி தனியார் ஊடகம் ஒன்றுக்கு தெரிவிக்கையில்,
2025 ஜூன் மாதத்தில் நடைபெறும் மின்சார கட்டண திருத்தத்தின் போது, இந்த கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி அநுர தெரிவித்துள்ளார்.
இந்த விலை உயர்வு கடந்த டிசம்பர் மாத மின் கட்டணத்தை விட அதிகமாக இருக்காது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஆண்டுக்கு இருமுறை நடைபெறும் மின் விலை திருத்தத்தின்படி இந்த விலை திருத்தம் செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மின்சார சபையின் 220 பில்லியன் கடன் மீள் கட்டமைப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் ஒரு பகுதி மின்சார கட்டணத்தல் சேர்க்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதற்கமைய மின் கட்டணம் அதிகரிக்கப்படுமா இல்லை குறைக்கப்படுமா, மின்சார சபை என்ன முடிவு எடுக்கும் என மக்கள் எதிர்பார்த்த வண்ணம் இருக்கின்றனர்.
- என் புருசா நில்லுடா 146 | கௌரி பாடல் |En Purusaa Nilludaa |Tamil love Feeling songs

- என் கண்ணீர் துளியிலே உன்னை தேடுவேனே |621| en kanneer thuliyile unnai theduvene | VANNI MAINTHAN Song

- ஜிந்தா ஜீனுக்கு தான் |966 |காதல் பாடல் | LOVE TAMIL SONG

- சிக்கு சிக்கு தான் | 982|Chikku Chikku Than |

- மறக்க முடியல |964| காதல் பாடல் |Love song | MALA SONGS

ஜனாதிபதி அனுர தலைமையில் மே தின பேரணி
ஜனாதிபதி அனுர தலைமையில் மே தின பேரணி
ஜனாதிபதி அனுர தலைமையில் மே தின பேரணி ,தேசிய தொழிலாளர் தினத்தன்று தேசிய மக்கள் சக்தி இயக்க அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட மே தின பேரணியை எதிர்வரும் வியாழக்கிழமை (மே 1) கொழும்பில் உள்ள காலி முகத்திடலில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் தலைமையில், அரசாங்கத் தலைவர்களின் பங்கேற்புடன் நடைபெறும் இந்த மே தினக் கூட்டத்திற்கான அணிவகுப்பு நடத்துவது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
இதற்கிடையில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில், அதன் தலைவர்களின் பங்கேற்புடன், தலவாக்கலை நகரில் மே தினக் கூட்டத்தை நடத்த ஐக்கிய மக்கள் சக்தி முடிவு செய்துள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தற்போது நுகேகொடை ஆனந்த சமரகோன் திறந்தவெளி அரங்கில் மே தினக் கூட்டங்களை நடத்த தீர்மானித்துள்ளதுடன், நிமல் சிறிபால டி சில்வா தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் கொழும்பிலும் மே தினக் கூட்டங்களை நடத்தவுள்ளனர்.
மே தினக் கூட்டத்தை ஏற்பாடு செய்வதற்கான நடவடிக்கைகளை ஐக்கிய தேசியக் கட்சி இன்னும் எடுக்கவில்லை.
இந்த நாட்டில் உள்ள பல அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் தீவின் பல்வேறு பகுதிகளில் மே தினக் கூட்டங்களை நடத்த ஏற்கெனவே முடிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
IMF அனுரவின் நிலைப்பாடு
அனுரவின் IMF நிலைப்பாடு
IMF அனுரவின் நிலைப்பாடு ,சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் நாட்டுக்கு பாதிப்பில்லை என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற வர்த்தக கூட்டமொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்து கருத்து வௌியிட்ட அவர், தமது அரசாங்கமானது சர்வதேச நாணய நிதியத்தின் நிதியில் இருந்து ஒருதலைப்பட்சமாக விலக எதிர்பார்க்கவில்லை எனவும் தெரிவித்தார்.
“சர்வதேச நாணய நிதியத்துடனான இந்த திட்டமானது, நமது சர்வதேச உறவுகள் அனைத்தையும் சர்வதேச நாணய நிதியம் என்ற கூடையில் சேர்க்கப்பட்டுள்ளது. இருதரப்பு கடன் பரிவர்த்தனைகள் சர்வதேச நாணய நிதியத்தின் கூடைக்குள் காணப்படுகிறது.
எமது அனைத்து எதிர்கால செயற்பாடுகளும் சர்வதேச நாணய நிதியத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறான தருணத்தில் யாராவது ஒருதலைப்பட்சமாக திட்டத்திலிருந்து விலக நினைத்தால், அது குடிமகன் அல்லது நாட்டிற்கான பொறுப்பை கைவிடுவதாகும்.
எனவே நாங்கள் உங்களுக்கு உத்தரவாதம் தருகிறோம். சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து ஒருதலைப்பட்சமாக விலகும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை. ஆனால் சர்வதேச நாணய நிதியத்தால் நாம் நிறைவேற்ற வேண்டிய பல அளவுருக்கள் உள்ளன.
அடுத்த ஆண்டு முதன்மை கணக்கு இருப்பு 2.3 ஆக இருக்க வேண்டும். 2032இற்குள் நமது கடன் விகிதம் 98% ஆக இருக்க வேண்டும். எங்களுக்கு பல அளவுருக்கள் வழங்கப்பட்டுள்ளன.
அவை ஒரு நாட்டுக்கு தீங்கானவை அல்ல. அவற்றை அடைவது ஒரு மோசமான விடயம் அல்ல.
யார் ஊடாக கொடுத்தாலும் அது மோசமான பொருளாதார இலக்கு அல்ல” என்றார்.






















