வெளிநாட்டு தமிழர் காணிகளை பறிக்கும் அனுரா அரசு
Posted in இலங்கை செய்திகள்

வெளிநாட்டு தமிழர் காணிகளை பறிக்கும் அனுரா அரசு

வெளிநாட்டு தமிழர் காணிகளை பறிக்கும் அனுரா அரசு

வெளிநாட்டு தமிழர் காணிகளை பறிக்கும் அனுரா அரசு நடவடிக்கை வெளிநாடு தமிழர்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .

வெளி நாட்டில் வசிக்கும் தமிழர்கள்

வெளி நாட்டில் வசிக்கும் தமிழர்கள் காணிகள் வடக்கு பகுதியில் அதிகம் காணப்படுகிறது .

காடுகள் படர்ந்ந்துள்ள காணிகள் ,மற்றும் பராமரிப்பு அற்று கிடைக்கும் காணிகள் யாவும் அரசு உடமையாக்க படுகிறது .

இந்த காணிகள் அரசு உடமையாக்க பட்டு அரசின் தேவைகளிற்கு வழங்க பட உள்ளதாக அறிவிக்க பட்டுள்ளது .

வெளிநாட்டு தமிழர் காணிகளை பறிக்கும் அனுரா அரசு

இதற்கு பிரதேச சபைகள் முன் அறிவித்தல் இன்றி இந்த காணிகள் பறிக்க படும் என என நோட்டீஸ் ஓட்ட பட்டுள்ளது .

இந்த பிரதேசசபைக்குள் ஆளும் அனுரா அரசு மற்றும் இலங்கை தமிழரசு கட்சி ,சயிக்கிள் கட்சி உறுப்பினர்களும் உள்ளனர் .

இவர்களின் ஆதரவுடன் தமிழர்கள் காணிகள் பறிக்க படுகின்றன .

புலம்பெயர்ந்த வெளிநாட்டு தமிழர்

எனவே புலம்பெயர்ந்த வெளிநாட்டு தமிழர்களை இந்த தமிழ் காட்சிகள் கபட நாடகத்தை உற்று நோக்குங்கள் .

அனுரா அரசுடன் இணைந்து தமிழர்களை ஏமாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள செயலையும் கவனிக்க .

இவர்கள் வெளிநாட்டுட வருகை தரும் பொழுது விரட்டி அடியுங்கள் ,மேலும் இந்த பிரேச சபையில் உள்ள மக்களுக்கு வெளிநாட்டு தமிழர்கள் உதவிகள் எதுவும் செய்யாதீர்கள் .

இவர்களுக்கு எதிரான நடவடிக்கை ஒன்றை வெளிநாட்டது தமிழர்கள் முன்னெடுத்தால் மட்டுமே இவர்களின் அடக்குமுறை காணி பறிப்புக்களை தடுக்கலாம் ,

அனுரா அரசின் இனவெறி நடவடிக்கைக்கு எதிராக தமிழர்களே கிளர்ந்து எழுங்கள் .

காணிகளை விடுவிக்கக் கோரி போராட்டம்
Posted in இலங்கை செய்திகள்

காணிகளை விடுவிக்கக் கோரி போராட்டம்

காணிகளை விடுவிக்கக் கோரி போராட்டம்

காணிகளை விடுவிக்கக் கோரி போராட்டம் ,வலிகாமம் வடக்கிலுள்ள 2400 ஏக்கர் காணிகளை விடுவிக்கக் கோரிய தொடர் போராட்டம் ஒன்று இன்று (21) முதல் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

மயிலிட்டிச் சந்தியில் காணி உரிமையாளர்களால் முன்னெடுக்கப்படும் போராட்டத்தில் பதாதைகளைத் தாங்கியவாறு இராணுவத்தின் கட்டுப்பாட்டில்

கடந்த 30 வருடங்களுக்கு மேலாக இருந்து வருகின்ற காணிகளை விடுவிக்க கோரிய அமைதி வழிப் போராட்டம் இடம்பெற்று வருகிறது.

மக்களின் விவசாய நிலங்கள், குடியிருப்பு நிலங்கள் மற்றும் தொழில் நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு காணிகள் யுத்தம் காரணமாக கடந்த 30 வருடங்களுக்கு மேலாக உயர் பாதுகாப்பு வலயமாக இருந்து வருகிறது.

ஆனால் யுத்தம் நிறைவிற்கு வந்த பின்னராக ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு ஆட்சியாளர்களும் மக்கள் காணிகளை படிப்படியாக சிறிய சிறிய துண்டுகளாக விடுவித்தனர்.

இருப்பினும் விடுவிக்கப்பட்ட காணிகளில் மக்கள் சுயமாக தமது வாழ்வாதாரத்தை முன்னெடுக்க முடியாத நிலையில் 2400 ஏக்கர்

காணிகளையும் முழுமையாக விடுவிப்பதே தமது வாழ்வியலை முன்னெடுக்க முடியும் என்ற நோக்கில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

தமிழர்கள் விடயத்தில் காணி அமைச்சரின் உருட்டு
Posted in இலங்கை செய்திகள்

தமிழர்கள் விடயத்தில் காணி அமைச்சரின் உருட்டு

தமிழர்கள் விடயத்தில் காணி அமைச்சரின் உருட்டு

தமிழர்களின் காணி அபகரிப்பு தொடர்பில் காணி அமைச்சு வெளியிட்டுள்ள தகவலைப் பார்த்து அரசியல்வாதிகள் உட்பட மக்கள் கோபமடைந்துள்ளனர்.

“வடக்கு மக்களின் சொந்தக் காணிகளை அவர்களுக்கு உரித்துடன் வழங்கவே அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

ஆனால், வர்த்தமானி அறிவித்தலைத் தவறாகப் புரிந்துகொண்டுள்ள தமிழ் அரசியல்வாதிகள் சிலர், மக்களையும் தவறாக வழிநடத்தும் முயற்சியில் ஈடுபடுகின்றனர்.”

இவ்வாறு காணி அமைச்சர் கே.டி. லால் காந்த தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

“வடக்கில் மக்களின் காணிகளை அபகரிக்கும் நோக்கம் அரசுக்குக் கிடையாது. கைவிடப்பட்டிருக்கும் அவர்களின் சொந்தக் காணிகளை அவர்களுக்கு உரித்துடன் வழங்கவே அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதற்கமையவே வர்த்தமானியை அரசு வெளியிட்டுள்ளது.

இந்த வர்த்தமானி அறிவித்தலைத் தவறாகப் புரிந்துகொண்டுள்ள தமிழ் அரசியல்வாதிகள் சிலர், மக்களையும் தவறாக வழிநடத்தும் முயற்சியில் ஈடுபடுகின்றனர்.

தமிழ் மக்களின் சொந்தக் காணிகளை ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான அரசு சுவீகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளது என்று

பொய்யான கோஷத்தை முன்வைத்து வடக்கு மக்களை வீதியில் களமிறக்கி அரசுக்கு எதிராகப் போராட வைக்கத் தமிழ் அரசியல்வாதிகள் சிலர் எத்தனிக்கின்றனர்.

எனவே, வடக்கு மக்கள் உண்மையை நிலைமையைப் புரிந்துகொள்ள வேண்டும். போலி வேடம் போட்டு உங்களைத் தவறாக வழிநடத்தும் தமிழ் அரசியல்வாதிகளை நம்ப வேண்டாம் என்று வடக்கு மக்களிடம் கேட்டுக்கொள்கின்றோம்.” – என்றார்.

தமிழர் காணி அபகரிப்பு
Posted in இலங்கை செய்திகள்

தமிழர் காணி அபகரிப்பு

தமிழர் காணி அபகரிப்பு

தமிழர் காணி அபகரிப்பு நடவடிக்கை தொடர்பாக ஆழம் பிரதமருடன் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதான செய்திகள் வெளியாகி உள்ளது.

ஆளும் அனுரா ஆட்சியில் வர்த்தகமாணி அறிவிப்பின் பிரகாரம் வட கிழக்கு பகுதியில் உள்ள தமிழ் காணிகள் அபகரிக்கப்பட்டு வருகின்றன.

வடகிழக்கில் தமிழர் காணிகள் அபகரிப்பு

தமிழருடைய பூர்வீக நிலங்கள் பூர்வீக குடிகளுக்கு சொந்தமானதாகும் , எனவே அவர்களுடைய காணிகளை அபகரிக்க இவ்வாறான நடவடிக்கையை மேற்கொள்ளும், இந்த செயல் திட்டத்திற்கு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பேச்சுவார்த்தை நடத்தினயுள்ளனர் .

எனினும் இந்த பேச்சுவார்த்தை உரிய முறையில் செயல்படுத்தப்படுமா அல்லது ,கண்துடைப்பு ஒன்றாக காணப்படுமா என்பது தற்போது பேசு பொருளாக இருக்கிறது.

ஒன்றிணைந்த இலங்கையில் வாழ்வாக கூறிக் கொள்ளும், அனுர ஆட்சியானது, தமிழ்கள் மீது வன்மத்தை காக்கும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.

தமிழர் தேசியத்துக்கு ,எதிரான செயல்பாடுகள்

தமிழர் நிலங்களை அபகரித்தல் ,தமிழர் தேசியத்துக்கு ,எதிரான செயல்பாடுகள், வெளிநாட்டிலிருந்து வருகின்ற தமிழர்கள் தடை போடுதல்,

இவ்வாறான பல்வேறுபட்ட சொல்லெண்ணாத ,ஏற்றுக்கொள்ள முடியாத ,செயல் திட்டங்களை நடத்தி வருகிறது .

அளவே அவற்றை அவை சரியென அவர்கள் வாதிட்டு வருவதும் ,அதற்கு எதிராகதமிழர்கள் கொந்தளித்து நிற்பதுமே இப்பொழுது பிரச்சனையாகி உள்ளது.

தமிழர் பிரதிநிதிகளுடன் பேச்சு தமிழர் தரப்பை வலுப்படுத்தும் நிகழ்வாக இருக்குமா என்பதே எமது கேள்வியாகவும் .

காணி அபகரிப்பு வர்த்தமானி கேள்வி கேட்ட சிறிதரன்
Posted in இலங்கை செய்திகள்

காணி அபகரிப்பு கேள்விகேட்ட சிறிதரன்

காணி அபகரிப்பு கேள்விகேட்ட சிறிதரன்

காணி அபகரிப்பு கேள்விகேட்ட சிறிதரன் வடக்கு, கிழக்கில் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானியின் உள்நோக்கம் என்ன என நாடாளுமன்றில் சிறீதரன் எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள 5 ஆயிரத்து 700 ஏக்கருக்கும் அதிகமான தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சுவீகரிப்பதற்காக,

2025.03.28 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலின் உள்நோக்கம் என்ன என்பதை, கமத்தொழில், கால்நடை வளங்கள்,

காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால்காந்த சபைக்குப் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்,

என்று நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

இன்றைய சபை அமர்வில், நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 27.2 இன் கீழ், நாடாளுமன்றக் குழுத் தலைவராக, துறைசார் அமைச்சரிடம்,

வாய்மொழி மூல விடைக்கான வினாக்களை முன்வைக்கும்போதே இந்த விடயம் குறித்து சிறீதரன் எம்.பி. கேள்வி எழுப்பினார். இதன்போது அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

“குறித்த வர்த்தமானி அறிவித்தல் மூலம் கோரப்பட்டுள்ள காணிகள் என்ன தேவைக்காகக் கோரப்பட்டுள்ளன என்பதையும்,

6000 ஏக்கர் வரையான காணிகளை அவசரமாகச் சுவீகரிப்பதற்கான காரணம் என்ன என்பதையும் அமைச்சர் இந்தச் சபைக்கு அறிவிக்க வேண்டும்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நீண்டகாலம் நடைபெற்ற யுத்தம் காரணமாக மக்கள் இடம்பெயர்ந்து, உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும், உறவினர் நண்பர்களின் வீடுகளிலும் வாழும்போது

அவர்களது காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்காமல், மக்களின் காணிகளை சுவீகரிக்கும் இந்த வர்த்தமானி அறிவித்தலின் உள்நோக்கம் என்ன என்பதையும்,

தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நீண்டகால யுத்தம் காரணமாக அவர்களது காணி ஆவணங்கள் தவறவிடப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலகங்கள் தெரிவிக்கும் நிலையில்,

இந்தப் புதிய வர்த்தமானி அறிவித்தல் மூலம் காணி உரிமையை உறுதிப்படுத்துமாறு எவ்வாறு கோர முடியும் என்பதையும் அமைச்சர் இந்த உயரிய சபைக்கு அறிவிக்க வேண்டும்.” என்று வலியுறுத்தினார்.

நாடாளுமன்றக் குழுத் தலைவர்களால் கேட்கப்படும் வாய்மொழி மூல வினாக்களுக்கு, துறைசார் அமைச்சர் உரிய காலத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழர் காணி அபகரிப்பு இரகசியமாக ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் வர்த்தமானி கடந்த வாரம் வெளியாகி இருந்தது.

வடக்கு மாகாணத்தில் மருதங்கேணி முதல் முள்ளிவாய்க்கால் வரை யாழ்ப்பாணம் மாவட்டம், கிளிநொச்சி மாவட்டம், முல்லைத்தீவு மாவட்டம் ஆகியவற்றின்

பெரும்பாலும் கடற்கரையோரப் பிரதேசங்களை அண்டி,5 ஆயிரத்து 940 ஏக்கர் நிலம் அரச உடமையாக்கப்படுவதற்கான வர்த்தமானி அறிவித்தல் காணி ஆணையாளர் நாயகத்தால் சத்தம் சந்தடியின்றி வெளியிடப்பட்டுள்ளது.

அரசு அடையாளப்படுத்திய காணிகளை எதிர்வரும் முன்று மாதங்களுக்குள் ஒருவரும் உரிமை கோராவிட்டால் அவை அரச காணிகளாக பிரகடனப்படுத்தப்படும் வர்த்தமானி அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பிலேயே இன்று நடந்த பாராளுமன்ற அமர்வில் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கேள்வி எழுப்பி இருந்தார்.

திட்டமிடப்பட்ட செயலாக இந்த காணி அபகரிப்பு இரகசிய வர்த்தமானி வெளிவந்தமை அதிர்ச்சிக்குரியதாகும்.

சிங்கள பெளத்த பேரினவாதம் தமிழர்கள் நிலைகளை வளைத்து அதனை ஏப்பமிட துடிப்பதை இந்த காணி அபகரிப்பு விடயம் மீளவும் எடுத்துக் காட்டுகிறது.

ஜனாதிபதிக்கு சுமந்திரன் அனுப்பிய கடிதம்
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதிக்கு சுமந்திரன் அனுப்பிய கடிதம்

ஜனாதிபதிக்கு சுமந்திரன் அனுப்பிய கடிதம்

ஜனாதிபதிக்கு சுமந்திரன் அனுப்பிய கடிதம் மக்களின் காணிகளைப் பிடுங்கும் செயற்பாடு வடக்கு தெற்கு உறவை மேலும் பாதிக்கும். வர்த்தமானியைக் கைவாங்கக் கோரி ஜனாதிபதிக்கு சுமந்திரன் கடிதம்.

வர்த்தமானி அறிவித்தல் மூலம் வடக்கு மக்களின் காணிகளைப் பிடுங்கும் நடவடிக்கை ஏற்கனவே பாதிக்கப்பட்டிருக்கின்ற வடக்கு தெற்கு உறவை மேலும் பாதிக்கச் செய்யும்.”

இவ்வாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்குக் கடிதம் மூலம் தெரிவித்திருக்கின்றார் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன்.

மேற்படி விடயம் தொடர்பான வர்த்தமானியை மீளக் கை வாங்குமாறு கோரி ‘காணிகள் நிர்ணய கட்டளைச் சட்டத்தின் 4ஆம் பிரிவின் கீழ் 28.03.2025 திகதியிட்டு வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி பிரசுரம்

என்ற தலைப்பில் அமைந்த இந்தக் கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பவை வருமாறு:

“மேற்சொன்ன வர்த்தமானி இல: 2,420 சம்பந்தமாக தங்களது கவனத்தை ஈர்க்கின்றேன்.

இந்த அறிவித்தலின் பிரகாரம் தங்களது உரித்து சார்ந்த கோரிக்கைகளை உரிமையாளர்களும் மற்றவர்களும் வர்த்தமானியின் திகதியிலிருந்து 3 மாத காலங்களுக்குள் முற்படுத்த வேண்டும்.

இல்லாவிடில் அந்தக் காணிகள் அக்கட்டளைச் சட்டத்தின் பிரிவு 5(1) இன் கீழ் அரச காணி என்று பிரகடனப்படுத்தப்படும்.

இச் சட்டம் எப்போதோ அகற்றப்பட்டிருக்க வேண்டும்.

எது, எப்படியாக இருப்பினும் வடக்கு, கிழக்கு மக்கள் கடந்த 50 ஆண்டு காலத்தில் ப‌‌‌ல தடவைகள் இடம்பெயர்ந்து இன்னமும் முழுமையாக தங்கள் நிலங்களில் மீள் குடியேற்றப்படாத நிலையில் இருக்கின்றார்கள்.

கீழே கூறப்படும் காரணங்களுக்காகவும் வேறும் காரணங்களுக்காகவும் இந்தச் சட்டம் தற்போதைய சூழ்நிலையில் உபயோகப்படுத்தப்படக் கூடாது.

பல தொடர்ச்சியான இடம்பெயர்வுகள் சாதாரண வாழ்வை குழப்பியுள்ளதோடு, இன்னமும் அது திருத்தியமைக்கப்படவில்லை.

கட்டாய இடப்பெயர்வுகளாலும் இந்தப் பிரதேசங்களை அழித்தொழித்த சுனாமி பேரலையினாலும் மக்கள் தமது உறுதிகளையும் மற்றைய ஆவணங்களையும் இழந்துள்ளனர்.

இந்தக் காணிகளின் உரித்தாளர்கள் பலருக்கு பல வருடங்களுக்கு முன்னரே மரித்த முன் உரித்தாளர்களிடம் இருந்து முறையாக உரிமை மாற்றம் செய்யப்படவில்லை.

பல இலட்சக்கணக்கான மக்கள் போர்ச் சூழலில் இருந்து தப்பி வெளி நாடுகளில் அகதிகளாக முறையாக ஏற்றுக்கொள்ளப்பட்டு வாழ்ந்து வருகின்றனர்.

இந்தியாவின் தமிழ் நாட்டில் ஐ. நா. அகதிகளுக்கான உயர்ந்த ஸ்தானிகரின் அனுமதியோடு ஒரு இலட்சமளவிலானவர்கள் வாழ்கின்றார்கள்.

இந்தச் சூழ்நிலையில் இந்த வர்த்தமானியில் கேட்கப்பட்வாறு தமது கோரிக்கைகளை முன்வைப்பதென்பது இந்த மக்களால் செய்ய முடியாத ஒன்றாகும்.

இந்த நடவடிக்கை தொடருமாக இருந்தால் வடக்கு, கிழக்கு மாகாணத்தின் தமிழ் மக்கள்,

சட்டத்தின் உரித்தோடு தமது நிலங்களை மீளவும் பெற்றுக்கொண்டு அவற்றைத் தாமாக ஆட்சி செய்யும் உரிமையை இழந்து விடுவார்கள்.

இது வடக்கு, கிழக்கு மக்களின் உரிமைகளை மதிக்காத செயலாகவும், ஏற்கனவே பாதிக்கப்பட்டிருக்கின்ற வடக்கு தெற்கு உறவை மேலும் பாதிக்கப் பண்ணுவதாகவும் அமையும்.

ஆகையால் காலதாமதமின்றி இந்த வர்த்தமானியை மீளக் கை வாங்குமாறு அவசரமாகக் கோருகின்றோம். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவில் ஐந்து லட்சம் ஏக்கர் காணியை அபகரித்த இராணுவம்
Posted in இலங்கை செய்திகள்

முல்லைத்தீவில் ஐந்து லட்சம் ஏக்கர் காணியை அபகரித்த இராணுவம்

முல்லைத்தீவில் ஐந்து லட்சம் ஏக்கர் காணியை அபகரித்த இராணுவம்

முல்லைத்தீவில் ஐந்து லட்சம் ஏக்கர் காணியை அபகரித்த இராணுவம், என முல்லைத்தீவு மாவட்டத்தின் தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் குற்றம் சுமத்தியுள்ளார் .

கடந்த 15 வருடங்களுக்கு மேலாக தமிழர்கள் தொண்ணூறு ஆயிரம் ஏக்கரில் மட்டும் குடி கொண்டுள்ளார்கள் எனவும் ,ஏனைய பகுதிகள் யாவும் இராணுவம் ஆக்கிரமித்து நிலை கொண்டுள்ளதாக ரவிகரன் தெரிவித்தார் .

தொடர்ந்தும் தமிழர் பகுதிகளை ஆக்கிரமித்து சிங்கள குடியேற்றங்களை ஏற்படுத்தி ,சிங்கள பவுத்த பேரினவாத இராணுவம் நிலை கொண்டுள்ளது .

இறுதி போர் முடிவடைந்ததை அடுத்து தமிழர் முதன்மையான பகுதிகளை ஆக்கிரமித்து சிங்கள இராணுவம் அகல கால் ஊன்றியுள்ளது குறிப்பிட தக்கது .

34கோடியில் லண்டனில் புலிகள் காணி 137 ஏக்கர் காணி
Posted in இலங்கை செய்திகள்

34கோடியில் லண்டனில் புலிகள் காணி 137 ஏக்கர் காணி

34கோடியில் லண்டனில் புலிகள் காணி 137 ஏக்கர் காணி

34கோடியில் லண்டனில் புலிகள் காணி ,பிரிட்டன் லண்டன் புறநகர் பகுதியில் 137 ஏக்கர் காணி வாங்கிய தலைமை செயலகம் எனும் வரலாற்று மைய அமைப்பினர் பண மோசடிகள் அம்பலமாகியுள்ளது .

மாவீரர் மயானம் ,ஆலயம் அமைப்பதற்கு என இந்த காணியானது கொள்வனவு செய்யப்பட்டுள்ளது .
இது மாடுகள் மேய்வதற்கான ஒரு மேய்ச்சல் நிலமாக காணப்படுகிறது .

அவ்வாறு வாங்கப்பட்ட மேய்ச்சல் நிலத்தை வாங்கிய தலைமை செயலகம் எனும் வரலாற்று அமைய அதிர்ச்சியில் தமிழர் .


மாவீரர் மயானம்,ஆலயம் அமைப்பதற்காக மக்களிடம் வாங்கிய பணம் ,மக்கள்.

வீடியோ

மக்களுக்கு காணி உறுதிகள்
Posted in இலங்கை செய்திகள்

மக்களுக்கு காணி உறுதிகள்

மக்களுக்கு காணி உறுதிகள்

மக்களுக்கு காணி உறுதிகள் ,முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியேற்றம் என்பது பாரிய செயற்பாடாக மாறியுள்ளது.

எனவே, மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு முழுமையான காணி உறுதிப் பத்திரம் வழங்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

புதுக்குடியிருப்பு மத்திய மகா வித்தியாலயத்தில்

புதுக்குடியிருப்பு மத்திய மகா வித்தியாலயத்தில் நேற்று முற்பகல் நடைபெற்ற வவுனியா மாவட்ட ‘உறுமய’ காணி உறுதி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் 5 பிரதேச செயலாளர் பிரிவுகளை உள்ளடக்கிய 600 முழுமையான காணி உறுதிப் பத்திரங்கள் இங்கு வழங்கப்பட்டதோடு,

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு ‘உறுமய’ வேலைத்திட்டத்தின் கீழ் 1,376 இலவசப் பத்திரங்கள் வழங்கப்பட உள்ளன.

இந்த நிகழ்வில் ஜனாதிபதி மேலும் உரையாற்றுகையில்,

ஜனாதிபதி என்ற வகையில் இன்று முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம் செய்யும் வாய்ப்பு கிடைத்தமைக்கு முதலில் எனது மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறேன்.

உறுமய காணி உறுதிப் பத்திரம் வழங்கும் திட்டத்தில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு முக்கியமானது.

யுத்தம் காரணமாக இப்பிரதேசத்தில் கட்டடங்கள் அழிந்து போனதுடன் பலர் தமது காணிகளை விட்டு வெளியேற வேண்டி ஏற்பட்டது. எனவே முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியேற்றம் என்பது பாரிய செயற்பாடாக மாறியுள்ளது.

எனவே, இந்தப் பிரதேசத்தில் உறுமய திட்டத்தை நடைமுறைப்படுத்துவதுடன், மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு முழுமையான காணி உறுதிப் பத்திரம் வழங்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார்.

காணி உறுதிப்பத்திரங்களை வழங்கும் பணி
Posted in இலங்கை செய்திகள்

காணி உறுதிப்பத்திரங்களை வழங்கும் பணி

காணி உறுதிப்பத்திரங்களை வழங்கும் பணி

காணி உறுதிப்பத்திரங்களை வழங்கும் பணி ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்படும் உறுமய 20 இலட்சம் காணி உறுதிப்பத்திரங்களை

வழங்கும் பணிகளுக்கு அமைவாக முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளுக்கு பொதுமக்கள் தமது ஆவனங்களை வழங்கி உறுதிகளைப்பெற்றுக்கொள்ளுமாறு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே.முரளிதரன் வேண்டுகோள் விடுத்தார்.

ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்படும் 20 இலட்சம் காணி உறுதிப்பத்திரங்களை வழங்கும் உறுமய திட்டத்தினை விரைவில்

நடைமுறைப்படுத்துவது குறித்து ஆராயும் விசேட கூட்டம் இன்று (11) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவர்களான இராஜாங்க அமைச்சர்களுமான சிவனேசதுரை சந்திரகாந்தன் மற்றும்

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்

வியாழேந்திரன் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே.முரளிதரன் ஒழுங்கமைப்பில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட செயலக காணிக்கான மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ந.முகுந்தன்,காணி பிரிவிற்கான பணிப்பாளர்

திருமதி கு.ஈஸ்பரன் மற்றும் பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், திட்டமிடல் பணிப்பாளர்கள்,நில அளவை திணைக்கள அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்படும் 20 இலட்சம் காணி உறுதிப்பத்திரங்களை வழங்கும் உறுமய திட்டத்தின் தற்போதைய நிலைமைகள் குறித்து ஆராயப்பட்டது.

இந்த திட்டத்தின் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 27,595 உறுதிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் அதற்காக முன்னெடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்பட்டது.

அதிகாரிகள் மட்டத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினை

குறிப்பாக இந்த திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்காக அதிகாரிகள் மட்டத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து ஆராயப்பட்டதுடன் அவற்றினை தீர்த்து வைப்பதற்கான நடவடிக்கைகள் தீர்ப்பதற்கான வழிகள் குறித்தும் ஆராயப்பட்டது.

இந்த திட்டத்தினை விரைவில் நினைவுசெய்து மக்களுக்கான உறுதிகளை வழங்க நடடிவக்கைகள் எடுக்குமாறு இங்கு அதிகாரிகளுக்கு பணிப்புரைகள் விடுக்கப்பட்டன.

சுண்டிக்குளம் மக்களுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
Posted in இலங்கை செய்திகள்

சுண்டிக்குளம் மக்களுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

சுண்டிக்குளம் மக்களுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

சுண்டிக்குளம் மக்களுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு என இன்று அறிவிக்க பட்டுள்ளது .

காணி அபகரிப்பு என தெரிவித்து சுண்டிக்குளம் மக்களுக்கு எதிராக வனஜீவராசிகள் அமைச்சினால் வழக்கு தொடுக்க பட்டது .

மக்களுக்கு எதிரான வழக்கு தற்போது ஒத்திவைப்பு என முன்னாள் வடமாகாணசபை சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ள்ளார் .

சிங்கள ஆக்கிரமிப்பு

திட்டமிடப்பட்டு மக்கள் விவசாய காணிகளை அபகரிக்கும் சிங்கள ஆக்கிரமிப்பு நோக்கத்துடன் நடத்த பட்டு வருவதாக ரவிகரன் குற்றம் சுமத்தியுள்ளார் .

உடையார் கட்டு குளத்தின் கீழ் ,நீர்ப்பாசன விடயத்தை பெற்று மக்கள் விவசாயம் செய்யும் 138 பேரது காணிகளை அபகரித்துள்ளது என பாதிக்க பட்ட மக்கள் குற்றம் சுமத்துகின்றனர் .

காரிய வயல் தொடர்பான வழக்கு, வனஜீவராசிகள் திணைக்களத்தால் இந்த குடும்பங்களுக்கு எதிராக தொடுக்க பட்டுள்ளது என ரவிகரன் சுட்டிகாட்டாடினார் .

காணி அபகரிப்பு

அந்த காணி அபகரிப்பு தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ள பட்ட நிலையில் ,தற்போது இந்த வழக்கு ஒத்திவைக்க பட்டுள்ளது .

அரச காணி சட்டத்தின் கீழ் காணிகளுக்கு உறுதி வழங்க பட்ட நிலையில் ,அந்த காணிகள் அரசுக்கு சொந்தமானது என தெரிவித்து ,வனஜீவராசிகள் திணைக்களம் அபகரிக்க முனைந்துள்ளதாக கண்ணீர் மல்க மக்கள் தெரிவித்துள்ளனர் .

சிங்கள காணி அபகரிப்பு

சமாதான தேவன் என தன்னை அறிமுக படுத்திய ரணில் விக்கிரமசிங்காவின் காலத்தில் ,சிங்கள இனவாத அடிப்படையில் தமிழர் மீது இவ்விதமான நடவடிக்கைகள் நடத்த பட்டு வருகின்றன .

ஆண்டுகளாக தமிழர்கள் அடக்க பட்டு ஒடுக்க பட்டு அவர்களது பூர்வீக குடியேற்றங்கள் சிங்கள இனவாத ஆக்கிரமிப்பு தொடர்ந்த வண்ணம் உள்ளது

பரம்பரை பரம்பரையாக தமிழர் வாழ்ந்த பூமி

பரம்பரை பரம்பரையாக தமிழர் வாழ்ந்த பூமி ,தமது உடமை என தெரிவித்து ,தமிழர்களை அடக்கி ஒடுக்கி வாழும் நிலைக்கு இலங்கை ஆட்சியாளர்கள் செல்கின்றனர் .

சமாதானத்தை ஏற்படுத்துவோம் எனவும் ,ஒன்றித்த இலங்கையில் வாழ்வோம் என தெரிவிக்கும் ஆளும் ஆட்சியாளர்கள் ,தொடராக தமிழ் மக்கள்மீது வன்முறை யை கட்டவிழ்த்து விட்டுள்ள செயல் , மீளவும் ஒரு பேரழிவை நோக்கி இலங்கை செல்ல போகிறது என்பதே காலநிலவரமாக உள்ளது .

மக்களுக்கு காணி உரிமை நிச்சயம் கிடைக்கும்
Posted in இலங்கை செய்திகள்

மக்களுக்கு காணி உரிமை நிச்சயம் கிடைக்கும்

மக்களுக்கு காணி உரிமை நிச்சயம் கிடைக்கும்

மக்களுக்கு காணி உரிமை நிச்சயம் கிடைக்கும் ,இந்த மாத இறுதிக்குள் மக்களுக்காண காணி உரிமை நிச்சயம் கிடைக்கும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் செயலாளரும் அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.,

கொட்டகலை பொது மைதானத்தில் நேற்று இடம்பெற்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜீவன் தொண்டமான் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

மேதினக் கூட்டம் நடத்த முடியவில்லை.

ஆறுமுகன் தொண்டமான் மறைந்த பின்னர் எம்மால் மேதினக் கூட்டம் நடத்த முடியவில்லை.

கொரோனா, பொருளாதார நெருக்கடி என்பவற்றை எதிர்கொள்ள நேரிட்டது. இ.தொ.க முடிந்து விட்டதா என கேள்வி எழுப்பினார்கள். 4 வருடத்தின் பின்னர் பாரிய மேதின கூட்டமொன்றை நடத்துகின்றோம்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பள அதிகரிப்பை பெற்றுக் கொடுப்பதாக உறுதியளித்தோம்.

வாக்குறுதியை நிறைவேற்றியிருக்கிறோம்

அந்த வாக்குறுதியை நிறைவேற்றியிருக்கிறோம். கடந்த 4 வருடங்களாக பல்வேறு அவமானங்களையும் பிரச்சினைகளையும் சந்தித்திருக்கிறோம்.

எமது மக்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். நாம் நில உரிமையற்ற சமூகமாக இருக்கிறோம். இந்த மாத இறுதிக்குள் எமது மக்களுக்கு காணிக்ளுக்கான உரிமை நிச்சயம் கிடைக்கும் என்றார்

மக்கள் காணியை அபகரித்த பிக்கு
Posted in இலங்கை செய்திகள்

மக்கள் காணியை அபகரித்த பிக்கு

காணியை அபகரித்த பிக்கு

மக்கள் காணியை அபகரித்த பிக்கு ,திருகோணமலை குச்சவெளி – திரியாய் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட ஆத்திக்காட்டுவெளி பகுதியில் உள்ள தமிழ் மக்களின் பாரம்பரிய விவசாயக் காணிகளில் பௌத்த பிக்கு ஒருவர்

விவசாயம் மேற்கொண்டு வருவதாகவும் இதனால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றை தமது வாழ்வாதாரத்திற்காக மீட்டுத் தருமாறு விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

ஆத்திக்காடு பகுதியில் உள்ள 88 ஏக்கர் காணி பானாமுரே திலகவங்ச நாயக்க தேரர் என்ற பௌத்த பிக்கு ஒருவரின் பெயரில் தற்காலிக இடாப்பு பதிவு

சிறுபோக நெற்செய்கை

மேற்கொள்ளப்பட்டு கிட்டத்தட்ட 3 வருடங்களாக சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதற்காக அரசாங்கத்திடம் இருந்து 20 சிங்கள மக்களின் பெயரில் மானியப் பசளை பெற்று வருவதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

மக்கள் காணியை அபகரித்த பிக்கு

1984 ஆம் ஆண்டுக்கு முன்னர் பல வருட காலமாக பரம்பரை பரம்பரையாக குறித்த காணிகளில் குச்சவெளி மக்கள் விவசாயத்தில் ஈடுபட்டு வந்ததாகவும், யுத்த நிலைமையின் காரணமாக இடம்பெயர்ந்து சென்று மீண்டும்

விவசாயக் காணிகள்

திரும்பும்போது குறித்த பகுதியில் இருந்த உறுதி மற்றும் பேமிட் காணிகள் அடங்கலாக பெருமளவான விவசாயக் காணிகள் வன வள பாதுகாப்பு த் திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்டிருந்ததாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் 2021 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 88 ஏக்கர் மற்றும் அதற்கு மேற்பட்ட காணிகள் அப்பகுதியில் உள்ள சப்தநாக பப்பத வன செனசுன விகாரைக்கரியது என குறிப்பிட்டு ஆக்கிரமிக்கப்பட்டு புத்த பிக்கு ஒருவரின் தலைமையின்கீழ் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

வர்த்தமானி அறிவித்தல்

2018 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டுள்ள சப்தநாக பப்பத வன செனசுன விகாரைக்காக 2020.10.02 வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் பூஜா

கிராண்ட் மூலம் 20.2343 ஹெக்டேயர் காணி 2020.05.26ஆம் திகதியில் இருந்து 30 வருடகால குத்தகைக்கு கொடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இக்காணிக்குள் மக்களுடைய உறுதிக் காணிகளும் உள்டங்குவதாக பிரதேச செயலகத்தினால் சட்டமா அதிபரிடம் ஆலோசனை கோரி கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

காணி உரிமையைப் பெறுவதற்கான Hotline இலக்கம்
Posted in இலங்கை செய்திகள்

காணி உரிமையைப் பெறுவதற்கான Hotline இலக்கம்

காணி உரிமையைப் பெறுவதற்கான Hotline இலக்கம்

உறுமய’ தேசிய வேலைத் திட்டத்தின் அபிலாஷைகளை நனவாக்கி, மக்கள் தமது காணியின் முழுமையான உரிமையை அனுபவிக்கும் வாய்ப்பை வழங்கும் நோக்கில் அதற்காக விண்ணப்பிப்பதற்கு அவசரத் தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தினமும் காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை ஜனாதிபதி அலுவலகம், உறுமய தேசிய செயற்பாட்டு அலுவலகம், 1908 என்ற அவசரத் தொலைபேசி இலக்கம் மற்றும் 0114 354600 / 0114 354601 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பொதுமக்கள் தமது கோரிக்கைகளைப் பதிவு செய்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

www.tinyurl.com/urumaya (டிஜிட்டல் விண்ணப்பப் படிவம்) படிவத்தைப் பூர்த்தி செய்தும் இதற்கான பதிவுகளை மேற்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காணி உரிமையைப் பெறுவதற்கான Hotline இலக்கம்

1935 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க நில மேம்பாட்டுக் கட்டளைச் சட்டத்தின் மூலம் விவசாயிகள் மற்றும் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு நிபந்தனைகளுடன் கூடிய அனுமதிப் பத்திரங்கள் / கொடுப்பனவுப்

பத்திரங்கள் உள்ள அரசாங்கக் காணிகளை நிபந்தனைகளின்றி முழுமையான உரிமையை மக்களுக்கு வழங்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் 2024 வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்ட ஒரு தனித்துவமான முன்மொழிவாகும்.

இந்த ‘உறுமய’ நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக முழுமையான உரிமையுடைய காணி உறுதிப்பத்திரங்களைப் பெறுவதன் மூலம், குறித்த காணிக்கு புதிய

பெறுமதி கிடைப்பதுடன், அவர்களின் உரிமையைப் பாதுகாத்து அவர்களின் குடும்பத்தின் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் வாய்ப்பு உருவாகும்.

காணியை விரைவில் விடுவிக்க நடவடிக்கை
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

காணியை விரைவில் விடுவிக்க நடவடிக்கை

காணியை விரைவில் விடுவிக்க நடவடிக்கை

யாழ்ப்பாணம் – மயிலிட்டி கலைமகள் மகா வித்தியாலயத்திற்கான காணியை விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் தெரிவித்தார்.

இலங்கை விமான படையின் 73 வது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு 73,000 பாடசாலைகளை புனரமைக்கும் வேலை திட்டம் யாழ்ப்பாணத்தில் நேற்று (06) ஆரம்பித்து வைத்தபோதே இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

காணியை விரைவில் விடுவிக்க நடவடிக்கை

205 வருடகால வரலாற்றை கொண்ட யாழ்ப்பாணம் மயிலிட்டி கலைமகள் மகா வித்தியாலயத்திற்கு சொந்தமான 2.5 பர்சஸ் காணி இதுவரை விடுவிக்கப்படாமல் உள்ளதாகவும், விளையாட்டு மைதானம் புனரமைக்கப்படவில்லை எனவும் பாடசாலையின் அதிபர் இதன்போது கூறினார்.

ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், மிக விரைவில் அதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் எனவும் இதன்போது வடக்கு மாகாண ஆளுநர் தெரிவித்தார்.

ஏனைய உட்கட்டமைப்பு பிரச்சினைகள் தொடர்பில் எழுத்துமூலம் கோரிக்கைகளை சமர்பிக்குமாறும், அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆளுநர் தெரிவித்தார்.

மேலும் உரையாற்றிய வடமாகாண ஆளுநர் எதிர்வரும் ஆண்டுக்குள் இலங்கையில் அனைத்து காணி அற்றவர்களுக்கு காணிகளும் வீடுகளும் வழங்குவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாகவும் படிப்படியாக

பொதுமக்களின் அனைத்து காணிகளும் விடுவிக்கப்படும் எனவும் வனவிலங்கு மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களத்திற்கு சொந்தமான காணிகள் காணியற்ற மக்களுக்கு வழங்கப்படும் எனவும் தெரிவித்தா

வீடியோ

கீரிமலையில் காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு
Posted in இலங்கை செய்திகள்

கீரிமலையில் காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு

கீரிமலையில் காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு

யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் காணி அளவீட்டுக்கு சென்ற நில அளவைத் திணைக்களத்தினருக்கு எதிராக காணி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ்ப்பாணம் – கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதியை, நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் கையளிக்கும் நோக்கில் வெள்ளிக்கிழமை (15) அளவீடு செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

கீரிமலையில் காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு

இதனையடுத்து ஒன்றுகூடிய காணி உரிமையாளர்கள் நில அளவை திணைக்களத்தினரின் வாகனத்தை மறித்து கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தெல்லிப்பளை பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள நகுலேஸ்வரம் (ஜே/226), காங்கேசன்துறை (ஜே/233) கிராம சேவகர் பிரிவுகளில் 29 ஏக்கர் நிலம் அளவீடு செய்ய தீர்மானிக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

வீடியோ

தனியார் காணி ஒன்றில் கிளிநொச்சியில் புதையல்
Posted in இலங்கை செய்திகள்

தனியார் காணி ஒன்றில் கிளிநொச்சியில் புதையல்

தனியார் காணி ஒன்றில் கிளிநொச்சியில் புதையல்

கிளிநொச்சி திருநகர் பகுதியில் தனியார் காணி ஒன்றில் புதையல் இருப்பதாக கூறி நேற்று அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டது.

கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றின் அனுமதியுடன் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் குறித்த அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

17 அடிவரை அகழ்வு நடைபெற்ற போதிலும், எவையும் சிக்கவில்லை. அகழ்வுப் பணியின் போது தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள், கிராம சேவையாளர் பொலிஸார், சிறப்பு அதிரடிப்படையினர் முன்னிலையில் இருந்தனர்.

தனியார் காணி ஒன்றில் கிளிநொச்சியில் புதையல்

இரண்டு கனரக இயந்திரங்கள் மூலம் அகழ்வு பணி நடைபெற்றது. இதன் போது எந்தவித தடயங்களும் கிடைக்காத நிலையில் பணி இடைநிறுத்தப்பட்டது.

இதன் தொடர்ச்சியான பணி நாளை 9.00 மணியளவில் மீண்டும் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

காணிப் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல்
Posted in இலங்கை செய்திகள்

காணிப் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல்

காணிப் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல்

காணிப் பிரச்சினைகள் தொடர்பில் வட மாகாண ஆளுநர் தலைமையிலான கலந்துரையாடல், முல்லைத்தீவு – உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்தில், நேற்று (02) மாலை நடைபெற்றது.

மன்னார், வவுனியா, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் காணி விடயங்கள் தொடர்பாகவும், ஏனைய காணி விடையங்களுடன் தொடர்புடைய விடயங்கள் தொடர்பாகவும் இதில் கலந்துரையாடப்பட்டுள்ளன.

காணிப் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல்

இந்த கலந்துரையாடலில் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராசா மற்றும் காணி அமைச்சின் செயலாளரும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளருமான ம.பற்றிக்டிறஞ்சன், மாகாண காணி ஆணையாளர்

ஆ.சோதிநாதன்,உள்ளூராட்சி ஆணையாளர் எஸ்.பிரணவநாதன் மாவட்டங்களின் பிரதேச செயலாளர்கள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டுள்ளார்கள்.

மன்னார், வவுனியா, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு
மாவட்டங்களின் பிரதேச செயலாளர்களும் இதில் கலந்துகொண்டிருந்தனர்.

No posts found.
காணி
Posted in இலங்கை செய்திகள்

பலாலியில் 108 ஏக்கர் காணிகள் விடுவிப்பு

பலாலியில் 108 ஏக்கர் காணிகள் விடுவிப்பு

இலங்கை வடக்கு மாகாணத்தின் மயிலிட்டி பலாலி பகுதியில் இராணுவத்தினர் வசமிருந்த மக்கள் காணிகள் 108 ஏக்கர் தற்போது விடுவிக்க படுகிறது .

அந்த காணிகள் உரிமையாளர்கள் வசம் ஒப்படைக்க படுகிறது .

முப்பது வருடங்களுக்கு மேலாக இந்த காணிகள் இராணுவத்தின் வசம் சிக்கி இருந்தமை குறிப்பிட தக்கது .

No posts found.
காணி
Posted in இலங்கை செய்திகள்

திருமணம் செய்த இளைஞர்களுக்கு அரசாங்கத்தினால் காணி

திருமணம் செய்த இளைஞர்களுக்கு அரசாங்கத்தினால் காணி

புதிதாக திருமணம் செய்த ,குறைந்த வருமானமுடைய இளம் வயதினருக்கு, 2000 காணிகளை

பகிர்ந்தளிப்பதற்கு காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

காணி ஆணையாளர் நாயகம் மற்றும் காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான

காணிகளை குறைந்த வருமானம் பெறும் இளைஞர் யுவதிகளுக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கை

எடுக்கப்படும் என காணி அமைச்சின் செயலாளர் ஆர். டி. ரணவக்க தெரிவித்துள்ளார்.

ஜனவரி மாதம் முதல் அனைத்து பிரதேச செயலகங்களிலிருந்தும் இதற்கான

விண்ணப்பப்படிவத்தை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.