Tag: சிறிதரன்
தமிழ் கட்சிகள் ஒன்று சேரவேண்டும் சிறிதரன்
தமிழ் கட்சிகள் ஒன்று சேரவேண்டும் சிறிதரன்
தமிழ் கட்சிகள் ஒன்று சேரவேண்டும் சிறிதரன் எம்பி அவர்கள் இப்படி உரைத்துள்ளார் .
முள்ளி வாய்க்கால் படுகொலை
முள்ளி வாய்க்கால் படுகொலை இடம்பெற்று 16 வருடங்கள் கடக்கிற பொழுது இதுவரை பாதிக்க பட்ட மக்களுக்கு தீர்வை இவர்கள் வழங்கவில்லை .
பாராளுமன்றத்தில் எட்டு உறுப்பினர்கள் வெற்றி பெற்றுளளர்கள் ,அவர்கள் எவரும் தமிழருக்கு எதுவித நல திட்டங்களையும் மேற் கொள்ளவில்லை .
மீளவும் ஒன்று சேர வேண்டும்
இவ்வாறான சூழ் நிலையில் ஒன்றாக இருந்து பிரிந்து சென்ற இவர்கள் மீளவும் ஒன்று சேர வேண்டும் என்கின்ற இந்த கூற்று மிக பெரும் அபத்தமான ஏமாற்று நாடகம் என்பது அம்பல படுகிறது .
தமிழர்களினால் ஒதுக்க பட்டு புறம் தள்ள பட்டவர்களை மீளவும் ஒன்றிணைக்க வேண்டும் என்கின்ற ஸ்ரீதரன் இந்த கூற்று காலம் பிந்திய சுடு காட்டு சிந்தனையாக உள்ளது .
ஆக மக்கள் மதிப்பை பெற்று விளங்கும் ஸ்ரீதரன் இந்த கருத்தை தமிழர்கள் ஏற்று கொள்ளவில்லை .
இது ஸ்ரீதரன் மீது மக்கள் வைத்திருக்கும் நன் மதிப்பை சீர்குலைக்கும் செயலக பார்க்க முடிகிறது .
மீளவும் ஒருமுறை தமிழ் தேசியத்தின் பெயரால் மக்களை ஏமாற்ற நடக்கும் அரசியல் சதுரங்க ஆட்டம் என்பது புலனாகிறது
விரோத கட்சியுடன் கூட்டணியா சிறிதரனின் கருத்து
விரோத கட்சியுடன் கூட்டணியா சிறிதரனின் கருத்து
விரோதக் கட்சி உறுப்பினர்களுடன் கூட்டணி சேர பேசியதாக வரும் செய்திகள் பற்றி எனக்கு எதுவும் தெரியாது என சிறிதரன் தெரிவித்துள்ளார்.
உள்ளுராட்சி மன்றங்களில் கூட்டணி அமைப்பது குறித்து தமிழ்த்தேசியக்கட்சிகளுடன் பேசுவதற்கே கட்சி தீர்மானித்திருந்ததாக
சுட்டிக்காட்டிய இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக்குழுத் தலைவர் சிவஞானம் சிறிதரன்,
அவ்வாறிருக்கையில் தமிழ்த்தேசியத்துக்கு விரோதமான கட்சியின் தலைவரான டக்ளஸ் தேவானந்தாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது பற்றி தனக்கு எதுவும் தெரியாது எனத் தெரிவித்தார்.
உள்ளுராட்சி மன்றங்களில் இணைந்து ஆட்சியமைப்பது தொடர்பில் இலங்கைத் தமிழரசுக்கட்சியும், டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியும்
வியாழக்கிழமை (5) சந்தித்துப் பேசவிருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
இதுவரை காலமும் அரசாங்கத்தை ஆதரித்துவந்த ஈழமக்கள் ஜனநாயகக் கட்சிக்கும் இலங்கைத் தமிழரசுக்கட்சிக்கும் இடையில் அடிப்படை கொள்கையிலேயே வேற்றுமை நிலவும் பின்னணியில்,
இச்சந்திப்புக் குறித்து வினவியபோது வியாழக்கிழமை (5) சந்திப்பு நடைபெறவிருப்பதை தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் உறுதிப்படுத்தினார்.
இவ்விருதரப்பு சந்திப்பில் தமிழரசுக்கட்சியின் சார்பில் அதன் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானமும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பில் அதன் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவும் கலந்துகொள்வர் எனவும் அவர் தெரிவித்தார்.
இதுபற்றி கேசரியிடம் கருத்து வெளியிட்ட தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக்குழுத் தலைவர் சிவஞானம் சிறிதரன், உள்ளுராட்சி மன்றங்களில் கூட்டணி அமைப்பது குறித்து டக்ளஸ் தேவானந்தாவுடன் கலந்துரையாடுவது பற்றி
கட்சியின் உயர்மட்டக்குழுவில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை எனவும், ஆகவே இச்சந்திப்பு தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது எனவும் குறிப்பிட்டார்.
அதுமாத்திரமன்றி கூட்டணி அமைப்பது குறித்து தமிழ்த்தேசியக்கட்சிகளுடன் பேசுவதற்கே கட்சி தீர்மானித்திருந்ததாகவும், அவ்வாறிருக்கையில் தமிழ்த்தேசியத்துக்கு விரோதமான கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதெனில்,
அதுபற்றி கட்சியின் உயர்மட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருக்கவேண்டியது அவசியம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
காணி அபகரிப்பு கேள்விகேட்ட சிறிதரன்
காணி அபகரிப்பு கேள்விகேட்ட சிறிதரன்
காணி அபகரிப்பு கேள்விகேட்ட சிறிதரன் வடக்கு, கிழக்கில் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானியின் உள்நோக்கம் என்ன என நாடாளுமன்றில் சிறீதரன் எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள 5 ஆயிரத்து 700 ஏக்கருக்கும் அதிகமான தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சுவீகரிப்பதற்காக,
2025.03.28 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலின் உள்நோக்கம் என்ன என்பதை, கமத்தொழில், கால்நடை வளங்கள்,
காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால்காந்த சபைக்குப் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்,
என்று நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.
இன்றைய சபை அமர்வில், நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 27.2 இன் கீழ், நாடாளுமன்றக் குழுத் தலைவராக, துறைசார் அமைச்சரிடம்,
வாய்மொழி மூல விடைக்கான வினாக்களை முன்வைக்கும்போதே இந்த விடயம் குறித்து சிறீதரன் எம்.பி. கேள்வி எழுப்பினார். இதன்போது அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
“குறித்த வர்த்தமானி அறிவித்தல் மூலம் கோரப்பட்டுள்ள காணிகள் என்ன தேவைக்காகக் கோரப்பட்டுள்ளன என்பதையும்,
6000 ஏக்கர் வரையான காணிகளை அவசரமாகச் சுவீகரிப்பதற்கான காரணம் என்ன என்பதையும் அமைச்சர் இந்தச் சபைக்கு அறிவிக்க வேண்டும்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நீண்டகாலம் நடைபெற்ற யுத்தம் காரணமாக மக்கள் இடம்பெயர்ந்து, உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும், உறவினர் நண்பர்களின் வீடுகளிலும் வாழும்போது
அவர்களது காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்காமல், மக்களின் காணிகளை சுவீகரிக்கும் இந்த வர்த்தமானி அறிவித்தலின் உள்நோக்கம் என்ன என்பதையும்,
தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நீண்டகால யுத்தம் காரணமாக அவர்களது காணி ஆவணங்கள் தவறவிடப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலகங்கள் தெரிவிக்கும் நிலையில்,
இந்தப் புதிய வர்த்தமானி அறிவித்தல் மூலம் காணி உரிமையை உறுதிப்படுத்துமாறு எவ்வாறு கோர முடியும் என்பதையும் அமைச்சர் இந்த உயரிய சபைக்கு அறிவிக்க வேண்டும்.” என்று வலியுறுத்தினார்.
நாடாளுமன்றக் குழுத் தலைவர்களால் கேட்கப்படும் வாய்மொழி மூல வினாக்களுக்கு, துறைசார் அமைச்சர் உரிய காலத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழர் காணி அபகரிப்பு இரகசியமாக ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் வர்த்தமானி கடந்த வாரம் வெளியாகி இருந்தது.
வடக்கு மாகாணத்தில் மருதங்கேணி முதல் முள்ளிவாய்க்கால் வரை யாழ்ப்பாணம் மாவட்டம், கிளிநொச்சி மாவட்டம், முல்லைத்தீவு மாவட்டம் ஆகியவற்றின்
பெரும்பாலும் கடற்கரையோரப் பிரதேசங்களை அண்டி,5 ஆயிரத்து 940 ஏக்கர் நிலம் அரச உடமையாக்கப்படுவதற்கான வர்த்தமானி அறிவித்தல் காணி ஆணையாளர் நாயகத்தால் சத்தம் சந்தடியின்றி வெளியிடப்பட்டுள்ளது.
அரசு அடையாளப்படுத்திய காணிகளை எதிர்வரும் முன்று மாதங்களுக்குள் ஒருவரும் உரிமை கோராவிட்டால் அவை அரச காணிகளாக பிரகடனப்படுத்தப்படும் வர்த்தமானி அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பிலேயே இன்று நடந்த பாராளுமன்ற அமர்வில் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கேள்வி எழுப்பி இருந்தார்.
திட்டமிடப்பட்ட செயலாக இந்த காணி அபகரிப்பு இரகசிய வர்த்தமானி வெளிவந்தமை அதிர்ச்சிக்குரியதாகும்.
சிங்கள பெளத்த பேரினவாதம் தமிழர்கள் நிலைகளை வளைத்து அதனை ஏப்பமிட துடிப்பதை இந்த காணி அபகரிப்பு விடயம் மீளவும் எடுத்துக் காட்டுகிறது.
கிளிநொச்சியை தன்வசமாக்கிய இலங்கை தமிழரசு
கிளிநொச்சியை தன்வசமாக்கிய இலங்கை தமிழரசு
கிளிநொச்சியை தன்வசமாக்கிய இலங்கை தமிழரசு நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தின் 3 பிரதேச சபைகளையும் இலங்கை தமிழரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது.
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன.
இதற்கமைய பச்சிளைப்பள்ளி பிரதேச சபை, கரைச்சி பிரதேச சபை மற்றும் பூநகரி பிரதேச சபை ஆகிய 3 பிரதேச சபைகளையும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது.
கரைச்சி பிரதேச சபையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி 20,962 வாக்குகளைப் பெற்று 20 உறுப்பினர்களையும் பச்சிளைப்பள்ளி பிரதேச சபையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி 3,040 வாக்குகளைப் பெற்று 6 உறுப்பினர்களையும்,
பூநகரி பிரதேச சபையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி 5,171 வாக்குகளைப் பெற்று 10 உறுப்பினர்களையும் பெற்றுள்ளது.
மிக பெரும் வரலாற்று சாதனையாக எந்த வெற்றி அங்கு இடம் பெற்றுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சிறிதரனின் தலைமையில் நடத்தப்பட்ட அணிகள் மிகப் பெரும் வெற்றியை தன தாக்கிய மிகப்பெரும் வரலாற்று பதிவை நிலைநாட்டியுள்ளது .
சிங்கள இனவாதத்திற்கு மிகப் பெரும் அடியை வழங்கி இருக்கிறார்கள். கரைச்சியில் தங்களது வாக்குகள் மூலமாக சிங்கள இனவாதத்தையும் சிங்கள தேசியவாதத்தையும் துடைத்து எறிந்த மக்கள் நாட்டிய சாதனை இதுதான்.
வடக்கு பகுதியில் அதிகமான பகுதிகளை இலங்கை தமிழர் கட்சி சுருட்டி மிகப்பெரும் சாதனையை படைத்துள்ளது வரலாற்று நிகழ்வாக இது உள்ளது.
தமிழ் மக்கள் வடக்கு பகுதியில் விழுந்து விட்டார்கள் ,அவர்கள் மீளவும் எழுந்து விட மாட்டார்கள் என எண்ணி கொக்கரித்த, எதிராளிகள் தற்பொழுது தோற்றுப் போயுள்ளார்கள்.
கடந்த காலங்களில் எமது விடுதலையை நசுக்கி தமிழர்களை அடக்கி ஒடுக்கி ஆர்ப்பரித்த ,சிங்கள பேரினவாதம் தற்பொழுது இலங்கை தமிழர் கட்சியிடம் அடி வாங்கி நொந்து சுருண்டு இருக்கிறது.
இது மக்கள் வழங்கிய மிகப்பெரும் வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. இந்த வெற்றியுடன் தமிழர்கள் மீளவும் சோர்ந்து விடாமல் பயணிக்கிறார்கள் என்பதை இதற்கான காட்டுகிறது.
எதிர்வரும் காலங்களில் வெற்றி சூடிய அத்தனை வேட்பாளர்களும் தமிழ் மக்களுக்கு உரிய வேலைகளில் பணிகளில் ஈடுபட்டு அவர்கள் வெல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கேதீஸ்வரனுக்கு ஆதரவாக சிறிதரன் பேச்சு
கேதீஸ்வரனுக்கு ஆதரவாக சிறிதரன் பேச்சு
கேதீஸ்வரனுக்கு ஆதரவாக சிறிதரன் பேச்சு ,பாரளுமன்றில் அமைந்துள்ளது ,பாரளுமன்றில் பேசிய சிறிதரன் அவர்கள் இவ்வாறு உரைத்துள்ளார் .
சாவகச்சேரி மருத்துவமனைக்கு மத்திய அரசு எவ்வாறு ஒரு மருத்துவ பொறுப்பதிகாரியை நியமிக்கும் முடியும் என கேள்வி எழுப்பினார் .
வீடியோ பார்க்க இதில் அழுத்துங்கள்
அது தவறு என்பதாகும் ,சட்ட அத்துமீறல் இடம் பெற்றுள்ளதாக ஸ்ரீதரன் பேச்சு இப்படி சுட்டி காட்டுகிறது .
மாநகர சபைக்கு என அதிகார பகிர்வு
மாநகர சபைக்கு என அதிகார பகிர்வு காணப்படுகிறது . அதன் அடிப்படையில் அந்த பிராந்திய சுகாதார அமைச்சரே அதன் பிராந்தியத்திற்கு உரியவரை தெரிவு செய்யவேண்டும் எனப்படுகிறது .என்பதாக அவர் பேச்சு அறிவிக்கிறது .
இரண்டாவதாக மருத்துவர் கேதீஸ்வரன் மீது வைக்க பட்ட போதைவஸ்து மாத்திரை விற்பனை என்பது விசாரிக்க பட வேண்டும் என்கிறார் .ஸ்ரீதரன் .
போதைவஸ்து மாத்திரை தொடர்பாக பேச படவில்லை ,சாவகச்சேரி மருத்துவமனை ஊழல் மோசடிகள் தொடர்பாக பேச பட வேண்டும் ,ஆனால் அதனை ஸ்ரீதரன் எடுத்து விளக்க மறுத்து விட்டார் .
ஊழல் வாதிகளை ஸ்ரீதரன் காப்பாற்றுகிறார்
ஊழல் வாதிகளை ஸ்ரீதரன் காப்பாற்றுகிறார் என மக்கள் இப்பொழுது சிறிதரன் மீது கோபத்தில் உறைந்துள்ளனர் .
ஊழல்வாதிகளைம் காப்பாற்ற ஸ்ரீதரன் முயல்வதாக பல மக்கள் சமூக ஊடகங்களில் பேசிகொண்டுள்ளனர் .
ஆக மொத்தம் பல நல்ல சேவைகளை புரிந்து வரும் ஐயா ஸ்ரீதரன் இந்த பாரளுமன்ற பேச்சு ,அவருக்கு எதிராக திசை திரும்பியுள்ளது ,அவரது ஒட்டு வங்கியை பாதிக்கும் என எதிர் பார்க்க படுகிறது .
- பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது

- கெஹெலிய மருந்து வழக்குச் சான்றுகள் குறித்து கிடங்குத் தீ விபத்து

- கச்சா எண்ணெய் விலை 106 டாலராக உயர்வு

- அதிக விலையில் கீரி சம்பா அரிசி

- அமைதிக்கான நடைப்பயணம் அரச விழா நாளை கொழும்பில்

- தட்டம்மை நோய் பரவும் அபாயம் குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை

- ஷம்மி சில்வா இந்த வாரம் பதவி விலக உள்ளார்

- வாகன இறக்குமதியில் பல ஆயிரம் கோடிகளை அள்ளிய அனுரா

- இன்டர்போல் மாநாட்டில் உரையாற்றுகிறார் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர்

- நௌலாவில் பேருந்து மோதலில் 11 பேர் காயம்

சிறிதரனுக்கு முகமூடி ரவுடிகள் மிரட்டல்
சிறிதரனுக்கு முகமூடி ரவுடிகள் மிரட்டல்
சிறிதரனுக்கு முகமூடி ரவுடிகள் மிரட்டல் விடுத்துள்ளனர் .யார் இந்த குழு என்ற மிரட்டினார்கள் இதன் பின்புலம் என்ன என்பதை ஸ்ரீதரன் அவர்கள் பின்வருமாறு தெரிவித்துள்ளார் .
எனது பதில் இரண்டு பேர் வீதமாகவும் ஒன்பது பேர் முகங்களை மூடிய கவசங்களால் முகங்களை மூடியபடி .
தங்களுடைய மோட்டார் சைக்கிள் முகம்களை மூடிய படி யாழ்ப்பாணத்தில் இந்து கல்லூரியில் ஒழுங்கையின் ஊடாக இவர்கள் சென்று வந்ததை என்னுடைய வீட்டினுடைய சிசிடிவி கேமரா மூலமாக எடுக்கப்பட்டது .
வாள்களோடு பட்டப்பகலில் முகமூடி ரவுடிகள்
ஒன்பது பேர் வாள்ககளோடு ,பட்டப்பகலில் முகமூடி அணிந்தவாறு கையிலே தாங்கியவாறு திரிகிறார்கள் என்றால் ,
யாழ்ப்பாணத்தின் நடவடிக்கையும் யாழ்ப்பாணத்தில் போலீசார் மற்றும் ராணுவத்தினர் கடற்படை விமானப்படையினுடைய செயல்பாடுகளும் எவ்வாறு இருக்கிறது என்பதற்கு இது ஒரு சின்ன உதாரணம் .
யாழ்ப்பாணத்தில் நடக்கின்ற பல்வேறுபட்ட இடங்களில் நடைபெறுகின்ற வாள்வெட்டு சம்பவங்கள்.
மக்களுக்கு எதிரான குற்ற நடவடிக்கைகள் என்பதில், நடவடிக்கைகளுக்கு பின்னால் ராணுவ புலனாய்வாளர்களும், மற்றொரு ஏனைய கடற்கரை விமானப்படை போலீஸ்சாருடைய ,உளவுத்துறையினரும் இருக்கிறார்கள் என்பதை இது மிக துலாம் புறமாக வெளிப்படுத்துகின்றன .
இந்த காலத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்திலே பல்வேறுபட்ட இடங்களில் பீல்பைக் என சொல்லப்படுகிற மோட்டார் சைக்கிள்களில் இவ்வாறு கறுத்த துணிகளை கட்டியவாறு .
பீல் பைக்கில் இராணுவ புலனாய்வாளர்கள்
பீல் பைக்கில் வந்து ,பலரை சுட்டு விட்டு சென்றதும் பல இடங்களில் தாக்குதல்களைச் செய்ததும் ராணுவ புலனாய்வாளர்களும் ராணுவத்தை சேர்ந்தவங்களும் செய்திருந்தார்கள் .பயன்படுத்தி இவ்வாறான வேலையை செய்கிறார்கள் .
என்றால் இது ஏன் இந்த ராணுவ புலனாய்வாளர்கள் அல்லது அங்கு இருக்கின்ற ஏனைய கடற்கரை விமானப்படையினுடைய புலனாய்வாளர்கள் செய்யக்கூடாது என்கிற கேள்வி எங்களுக்கு எழுகிறது .
என்னை அச்சமூட்டும் வகையிலே ,இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது.
சபாநாயகருக்கு எழுத்து மூலமாக கொடுத்து அதனை நான் உரிய தரப்புகளுக்கும் தெரியப்படுத்த இருக்கின்றேன்.
ஆகவே இது என்னுடைய வீட்டுக்கு முன்னால் நடைபெற்று இருக்கிறது என்றால் யாழ்ப்பாணத்தில் ஏனைய இடங்களும் ஏனையவர்களுக்கும் இதில் அச்சுறுத்தலாக அமைந்திருக்கிறது .
உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க தவறினால், யாழ்ப்பாணம் இன்னும் ஒரு மோசமான நிலைக்கு செல்லும் என்பது தான் ,என்னுடைய கருத்து.
- பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது

- கெஹெலிய மருந்து வழக்குச் சான்றுகள் குறித்து கிடங்குத் தீ விபத்து

- கச்சா எண்ணெய் விலை 106 டாலராக உயர்வு

- அதிக விலையில் கீரி சம்பா அரிசி

- அமைதிக்கான நடைப்பயணம் அரச விழா நாளை கொழும்பில்

- தட்டம்மை நோய் பரவும் அபாயம் குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை

- ஷம்மி சில்வா இந்த வாரம் பதவி விலக உள்ளார்

- வாகன இறக்குமதியில் பல ஆயிரம் கோடிகளை அள்ளிய அனுரா

- இன்டர்போல் மாநாட்டில் உரையாற்றுகிறார் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர்

- நௌலாவில் பேருந்து மோதலில் 11 பேர் காயம்

இந்தியத் துணைத் தூதுவருடன் சிறிதரன் சந்திப்பு
இந்தியத் துணைத் தூதுவருடன் சிறிதரன் சந்திப்பு
இலங்கைக்கான யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தின் புதிய தூதுவராகப் பொறுப்பேற்றுள்ள ஸ்ரீ சாய்முரளியை, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மரியாதை நிமித்தம் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது, தமிழ் மக்களில் அரசியல் நலன்சார் விடயங்கள் மற்றும் சமகால நெருக்கடிகள் நிலைமைகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் பேசப்பட்டுள்ளது
Featured
தமிழரசு கட்சிக்குள் குழப்பம் குத்து வெட்டு ஆரம்பம் பறிபோகும் சிறிதரன் தலைவர் பதவி
தமிழரசு கட்சிக்குள் குழப்பம் குத்து வெட்டு ஆரம்பம் பறிபோகும் சிறிதரன் தலைவர் பதவி
தமிழரசு கட்சிக்குள் குழப்பம் குத்து வெட்டு ஆரம்பம் பறிபோகும் சிறிதரன் தலைவர் பதவி ,தமிழரசு கட்சியின் தலைவராக சுமந்திரன் துடிப்பதால் சிறிதரன் பதவியை தட்டி பறிக்க சுமந்திரன் நடவடிக்கை .
சட்டத்தரணி சுமந்திரன் சூத்து மாத்து
இலங்கை ஆளும் ஜனாதிபதியின் சட்டத்தரனியாக விளங்கி வரும் சுமந்திரன் ,இன்றைய புதிய தமிழரசு கட்சியின் தலைவராக தெரிவு செய்ய பட்ட ஸ்ரீதரனுக்கு எதிராக சூழ்ச்சிகளை செய்து வருகிறார் .
தானே தமிழ் மக்கள் தாதாவாக நினைத்து தமிழ் மக்கள் அரசியல் அபிலாஷைகளை குழிதோண்டி புதைத்து வரும் சுமந்திரன் ,தான் சட்டத்தரணி என்ற வகையில் தமிழரசு கட்சிக்கு எதிராக பாரிய சதி நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார் .
தமிழரசு கட்சி மீள் தலைவர் தெரிவு
தமிழரசு கட்சிக்குள் மீள் தலைவர் தெரிவு இடம்பெற வேண்டும் என அந்த கட்சிக்குள் குழப்பங்கள் நிலவி வருவதால் ,மீள ஒரு தேர்தலை நடத்தி அதன் ஊடக தலைவரை தெரிவு செய்திட தயாராக உள்ளதாக ,இன்றைய தமிழரசு கட்சியின் புதிய தலைவர் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார் .
நீதிமன்றத்தினால் வழங்க படும் அறிவுறுத்தல் மற்றும் அவர்களது மேற்பார்வையின் கீழ் ,மீள ஒரு தேர்தலை நடத்தி அதன் ஊடக கட்சியின் தலைவர் பதவியை தெரிவு செய்திட, தான் தயாராக உள்ளதாக சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்து பர .பரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
.இன்றைய இலங்கை செய்திகள் தலைப்பு செய்தி
இந்த விடயம் இன்றைய இலங்கை செய்திகளில் முதன்மை தலைப்பு செய்திகளாக இடம்பிடித்து தமிழரசு கட்சியின் உள்வீட்டு குழப்பத்தை , வெட்டு குத்தை அம்பல படுத்தியுள்ளது ..
இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவராக சிறிதரன் நியமனம்
இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் நியமிக்க பட்டுள்ளார்
இன்று இடம்பெற்ற வாக்கெடுப்பில் கே 184 வாக்குகளை பெற்று தனது வெற்றியை தேடி கொண்டார் .
சுமந்திரன் 137 வாக்குகளினால் பின் தள்ள பட்டுளளார் ,எனினும்ஸ்ரீதரன் தொடர்ந்து நீதியாக செயல் பட்டு சுமந்திரன் அனுமதிப்பாரா என்கின்ற கேள்வி எழுகிறது ,
இலங்கை தமிழரசு கட்சி இனியாவது சிறை பாதையில் பயணித்து மக்களுக்கு நல்வழி படுத்தும் என நம்புவோம் .
M.A.சுமந்திரன் – பெற்ற வாக்குகள் -137
சிறிதரன் பெற்ற வாக்குகள் -184
சி.யோகேஸ்வரன் பெற்ற வாக்குகள்-0
திருகோணமலை நகரமண்டபத்தில் இன்று 21ம் திகதி இடம் பெற்ற கூட்டத்தில் 327
பேர் கலந்து கொண்டு வாக்களிப்பில் கலந்துகொண்டனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக சிறிதரன்|தடுக்கும் சுமந்திரன்
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக சிறிதரன்|தடுக்கும் சுமந்திரன்
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக சிறிதரன் நியமிக்க படவேண்டும் என பலர் விருப்பம் தெரிவித்துள்ளனர் ,ஆனால் அதனை தடுக்கும் நகர்வில் சுமந்திரன் ஈடுபட்டுள்ளார் .
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக செயல்பட்டு வந்த இரா சம்பந்தன் மூப்பாகி விட்ட காரணத்தால் , தலைவர் ஒருவரை நியமிக்க வேண்டிய நெருக்கடியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சிக்கி உள்ளது .
தமிழீழ விடுதலை புலிகளினால் உருவாக்க பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு ,உலக தமிழ் மக்கள் மத்தியில் அதனால் நன்மதிப்பை பெற்றுள்ளது .
ஆனால் இடையில் நுழைந்த எம் ஏ சுமந்திரன் செயல் பாட்டினால் தமிழ் தேசிய கூட்டமைப்பு உடைந்து காணப்படுகிறது .
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக சிறிதரன்|தடுக்கும் சுமந்திரன்
இதே தமிழ் தேசிய கூட்டமைப்பில் சுமந்திரன் தொடர்ந்து நீடித்தால் கட்சி காணாமல் போகும் நிலை ஏற்படும் என மக்கள் தமது கருத்துக்களை முன் வைத்து வருகின்றனர் .
இவ்வாறான கால பகுதியில் கல்விமானாகவும் ,புத்தியீவியாகவும் விளங்கி வரும் பாராளுமன்ற உறுப்பினர் ,சிவஞானம் சிறிதரன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக பொறுப்பேற்கும் தகமை கொண்டவர் என மக்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
கொழும்பின் முகவராக செயல் பட்டு தமிழ் தேசிய இலக்கை சிதைத்து ,ஒன்று பட்டு பணியாற்றிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைத்தலை குழப்பிய நபர்களில் சுமந்திரன் முதன்மை வைக்கிறார் .
அதனால் சுமந்திரனுக்கு எதிராக சகா உறுப்பினர்கள் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர் .
சுமந்திரன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக அமர்த்த பட்டால் கூட்டமைப்பு என்கின்ற கட்சி காணாமல் போகும் என யோகேஸ்வரன் திறந்த மனதோடு தனது கருத்தை வெளியிட்டு ,ஸ்ரீதரனுக்கு தனது ஆதரவை வழங்கியுள்ளார் .
தமிழர்களை ரணில் விக்கிரமசிங்கா ஏமாற்றுகிறார் சிறிதரன் காட்டம்
தமிழர்களை ரணில் விக்கிரமசிங்கா ஏமாற்றுகிறார் சிறிதரன் காட்டம்
தமிழர்களை இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா
ஏமாற்றி வருவதாக தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் காட்டமாக தெரிவித்துள்ளார் .
திறந்த மனதோடு சிங்கள ஆட்சியாளார்கள் பேச தயாராக இல்லை என சிறிதரன் தெரிவித்துள்ளார் .
இலங்கையில் புரையோடி போயுள்ள தமிழர் அரசியல் பிரச்சனைக்கு தீர்வினை கண்டு ,ஐக்கிய பட்ட இலங்கையை கட்டி எழுப்ப வீழ்ந்து போன பொருளாதாரத்தை நிமிர்த்திட யாரும் தயாராக இல்லை .
லஞ்சம் ஊழல் மோசடி ஏமாற்றில் ஊறிபோயுள்ள இலங்கை இதில் இருந்து விடுபட முடியாது உள்ளது என்பது அவரது கருத்தாக உள்ளது .
இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வேண்டும் எம்பி சிறிதரன் முழக்கம்
இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வேண்டும் எம்பி சிறிதரன் முழக்கம்
இலங்கை புரிந்த தமிழின படுகொலைக்கு இலங்கையை சர்வதேச நீதிமன்றி முன்னிலை படுத்த வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் முழங்கியுள்ளார் .
முல்லைதீவு மாவட்டத்த நீதிபதி சற்குணராஜா நாட்டை விட்டு மிரட்ட பட்டு துரதியடிக்க பட்ட விடயம் தொடர்பில், பாரளுமன்றில் உரையாற்றும் பொழுதே இந்த விடயத்தை முன் வைத்தார் .
இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வேண்டும் எம்பி சிறிதரன் முழக்கம்
ஆண்டுகளாக ஆண்டு வரும் ஆளும் சிங்கள பவுத்த இனவாதிகள் ,தமது நலன்கள் கருதி சட்டங்களை மாற்றுகள் ,தமிழ் நீதிபதிகளை மிரட்டி அடக்கி ஆண்டு வருகின்றனர் .
இது ரணில் அரசாங்கத்தின் வாங்குறோத்து நிலையை காட்டுகிறது .எனவே தமிழர்களை புறம்தள்ளி நசுக்கி ஒடுக்குவதன் மூலம் இலங்கை சுதந்திரமும் நின்மதியாக வாழமுடியாது என இடித்து கூறினார் .
- பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது
- கெஹெலிய மருந்து வழக்குச் சான்றுகள் குறித்து கிடங்குத் தீ விபத்து
- கச்சா எண்ணெய் விலை 106 டாலராக உயர்வு
- அதிக விலையில் கீரி சம்பா அரிசி
- அமைதிக்கான நடைப்பயணம் அரச விழா நாளை கொழும்பில்
- தட்டம்மை நோய் பரவும் அபாயம் குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை
- ஷம்மி சில்வா இந்த வாரம் பதவி விலக உள்ளார்
- வாகன இறக்குமதியில் பல ஆயிரம் கோடிகளை அள்ளிய அனுரா
- இன்டர்போல் மாநாட்டில் உரையாற்றுகிறார் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர்
- நௌலாவில் பேருந்து மோதலில் 11 பேர் காயம்
தமிழ் மக்கள் எதிரானவர்கள் அல்ல
தமிழ் மக்கள் எதிரானவர்கள் அல்ல
இந்தியாவின் அபிவிருத்திகளுக்கு தமிழ் மக்கள் எதிரானவர்கள் அல்ல முதலில் நிரந்தரமாக தமிழர்கள் இந்த மண்ணில் வாழக்கூடிய ஒரு சூழலை இந்தியா உருவாக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் குற்றம் சாட்டியுள்ளார்.
நேற்றைய தினம் (05) யாழ்ப்பாணத்தில் வைத்து ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதில் வழங்கும் போதே அவர் இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தலைமன்னாருக்கும் ராமேஸ்வரத்திற்கும் இடையிலே புதிய பாலம் அமைப்பது தொடர்பாக அண்மையில் ரணில் விக்கிரமசிங்க இந்தியா சென்ற போது அது பற்றி ஆராயப்பட்டதாகவும், அது தொடர்பான தொழில்நுட்ப பேச்சு வார்த்தைகள் இடம் பெற்று வருவதாகவும் செய்திகள் வெளி வருகின்றது.
அந்த விடயத்திலே எங்களுக்கு எந்த விதமான எதிர் மனப்பாங்குகளும் இல்லை அப்படி ஒரு பாலம் அமைக்கப்படுகிறது என்றால் அதுவும் தலைமன்னாருக்கும் ராமேஸ்வரத்துக்கும் இடையில் நாங்கள் அதனை வரவேற்கிறோம்.
ஆனால் ஒரு விடயத்தை தெளிவாக இந்தியாவும் புரிந்து கொள்ள வேண்டும் இந்தியா தமிழர்கள் சார்பாக தமிழர்களுடைய பிரதிநிதியாக 1987 ஆம் ஆண்டிலே இலங்கை இந்தியா ஒப்பந்தத்திலேயே கையொப்பமிட்டு இருந்தது.
தமிழ் மக்கள் எதிரானவர்கள் அல்ல
தமிழர் தரப்பாகத்தான் அவர்கள் அதில் கையொப்பமிட்டு இருந்தார்கள். அந்த காலகட்டத்திலேயே 13 ஆவது திருத்தம் கொண்டு வரப்பட்டது, அல்லது இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக கொண்டு வரப்பட்ட பேச்சு வார்த்தைகள் தீர்வுகள் என்பது சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை,
ஆகவே பொறுப்பு வாய்ந்த ஒரு தரப்பு என்ற வகையில் இந்தியாவினால் நேர்மையாக இதய சுத்தியோடு நடைமுறைப்படுத்தப்படவில்லை என்கின்ற ஆதங்கமும் கேள்வியும் தமிழ் மக்களிடையே நீண்ட காலமாக இருக்கிறது.
புதிதாக நாங்கள் பாலம் அமைக்கிறோம் அல்லது எண்ணை குழாய்களை கொண்டு வருகிறோம் என்பது தமிழர்களுக்கான அரசியல் தீர்வை தருவதாக அமையாது, ஆகவே முதலில் 35 வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக வடக்கு கிழக்கிலே போலீஸ் காணி
அதிகாரங்கள் உட்பட்ட ஒரு அதிகாரப் பகிர்வின் அடிப்படையாகக் கொண்டு வரப்பட்ட அந்த ஒப்பந்தத்தின் ஊடான திருத்தம் என்பதை இந்தியா ஏன் இவ்வளவு காலமும் நடைமுறைப்படுத்தவில்லை,
இப்பொழுதும் கூட 13 மைனசுக்கு போய் இருக்கிறது அதில் பொலிஸ் கூட இல்லை ஆகவே இந்த காலகட்டங்களை எல்லாம் விட்டு, இவற்றையெல்லாம்
தொலைத்து விட்டு இந்தியா ஒரு புதிய பாலம் அமைத்தல் எண்ணை குழாய்களை செய்வதன் ஊடாக தமிழ் மக்களுக்கான ஒரு அரசியல் தீர்வு கிடைக்கும் என்று நாங்கள் நம்பவில்லை,
தமிழ் மக்கள் எதிரானவர்கள் அல்ல
ஆகவே நாங்கள் தெளிவாக ஒன்றை இந்தியாவிலே இருக்கின்ற நிபுணர்கள் அரசியல் ஆய்வாளர்கள், இந்தியாவில் இருக்கின்ற தலைவர்களை நாங்கள் வினையமாக கேட்பது நாங்கள் என்று மெல்ல மெல்ல இங்கு வாழ முடியாமல் இடத்தை விட்டு நகர்ந்து கொண்டிருக்கிறோம்.
முதலில் நிரந்தரமாக நாங்கள் இந்த மண்ணிலே வாழக்கூடிய ஒரு சூழலை இந்தியா உருவாக்கினால் நாங்கள் அடுத்த கட்ட அந்த எண்ணங்களுக்கு எதிர்பு மன பாங்கோடு இல்லை என்பதை தெளிவுபடுத்த நாங்கள் தயாராக இருக்கிறோம் என பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் தெரிவித்துள்ளார்
- பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைதுby நிருபர் காவலன்
- கெஹெலிய மருந்து வழக்குச் சான்றுகள் குறித்து கிடங்குத் தீ விபத்துby நிருபர் காவலன்
- கச்சா எண்ணெய் விலை 106 டாலராக உயர்வுby நிருபர் காவலன்
- அதிக விலையில் கீரி சம்பா அரிசிby நிருபர் காவலன்
- அமைதிக்கான நடைப்பயணம் அரச விழா நாளை கொழும்பில்by நிருபர் காவலன்
இனப்பிரச்சனை தீர்வு தொடர்பில் ரணிலுடன் பேச கூட்டமைப்பு தயார் சிறிதரன் எம்பி
இனப்பிரச்சனை தீர்வு தொடர்பில் ரணிலுடன் பேச கூட்டமைப்பு தயார் சிறிதரன் எம்பி
இலங்கை ,கிளிநொச்சி ; தமிழ்த் தேசிய இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ரணில் விக்கிரமசிங்கவுடனும் பேசத்தயார் என்கிறார் சிறீதரன் எம்.பி
தமிழ்த் தேசிய இனப் பிரச்சினையை தீர்ப்பதற்கு ரணில் விக்கிரமசிங்கவுடனும் பேசத்தயாராகவே நாங்கள் இருக்கிறோம் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் கிளிநொச்சி இராமநாதபுரம் வட்டாரத்தில் மக்களுடனான சந்திப்பு நடைபெற்றது குறித்த சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இனப்பிரச்சனை தீர்வு தொடர்பில் ரணிலுடன் பேச கூட்டமைப்பு தயார் சிறிதரன் எம்பி
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் இந்த மண்ணிலே புரையோடிப்போயிருக்கிற இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு இந்த நாட்டின் ஜனாதிபதியாக யார் இருந்தாலும் நாங்கள் பேசுவோம் அந்த வகையில் ரணில் விக்கிரமசிங்கவோடும் நாம் பேசுவோம்.
ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்சவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 19 தடவைகள் பேசியிருக்கிறோம் கோத்தபாய ராஜபக்ஷவுடனும் ஒரு தடவை
பேசியிருக்கிறோம் இவ்வாறு இந்த நாட்டில் யார் யார் எல்லாம் ஜனாதிபதியாக இருந்திருக்கிறார்களோ அவர்களுடன் எல்லாம் தமிழர் தரப்பு பேச்சுக்களில் ஈடுபட்டிருக்கிறார்கள்
ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 3 ஆம் திகதியன்று பாராளுமன்றில் தனது அக்கிராசன உரையை நிகழ்த்தவுள்ளார் இவர் தனது அக்கிராசன உரையில் புரையோடிப்போயிருக்கிற இனப்பிரச்சினை தொடர்பில் கருத்து தெரிவிப்பாரா?
அல்லது முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச போன்று அனுராதபுரத்தில் பதவியேற்ற போதும் சரி தனது அக்கிராசன உரையிலும் சரி மக்களால்
விரட்டியடிக்கப்படும் வரை தமிழர்களின் பிரச்சினை தொடர்பில் ஒரு வார்த்தை கூட பேசாதது போன்று இவரும் செயற்படுவாரா? எனும் சந்தேகம் இப்போது எழுந்திருக்கிறது
40 வருடங்களுக்கு மேலான அரசியல் அனுபவத்தை கொண்டுள்ள ஜனாதிபதி இந்த நாடு இப்படி பொருளாதார ரீதியில் அதளபாதாளத்திற்கு போவதற்கு பிரதான காரணமாக இருந்தது ஒரு இனத்தின் மீது நடைபெற்ற போர்தான் என்பதை புரிந்து
வைத்திருப்பார் எம் மீது நடைபெற்ற இனவழிப்பின் பங்காளியாக இருந்தவர் எமது விடுதலைப் போராட்டத்தை சூழ்ச்சியால் பிரித்த ரணில் விக்கிரமசிங்க நாட்டின்
பொருளாதார நிலையை சீர் செய்ய வேண்டும் என்றால் முதலில் இனப் பிரச்சினையை தீர்க்க வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்
குறித்த சந்திப்பில் சமகால அரசியல் தொடர்பிலும் பொருளாதார பிரச்சினை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்
அவர்களுடன்
வடக்கு மாகாண சபையின் முன்னாள் கல்வி அமைச்சர் குருகுலராஜாவும் கலந்து கொண்டிருந்தார்.
துப்பாக்கி முனையில் சிந்திக்கின்ற கோட்டா – பொங்கிய சிறிதரன் video
துப்பாக்கி முனையில் சிந்திக்கின்ற கோட்டா – பொங்கிய சிறிதரன்
பொருளாதாரத்தை கட்டி வளர்க்கின்ற ஒரு நல்லெண்ணம் பொருந்திய ஜனாதிபதி இந்நாட்டில்
இல்லை எவ் விடயத்தையும் துப்பாக்கி முனையில் சிந்திக்கின்ற ஜனாதிபதியே
காணப்படுகின்றார்- சி.சிறீதரன்
இதில் அழுத்தி காணொளி பாருங்கள்
https://www.facebook.com/ImShritharan/videos/426069292549340/
மாவீரர் நாளினை மதிக்காத வரை – இலங்கையில் நல்லிணக்கம் ஏற்படாது-சிறிதரன்
மாவீரர் நாளினை மதிக்காத வரை – இலங்கையில் நல்லிணக்கம் ஏற்படாது
இலங்கையில் இறந்த மாவீரர்களை நினைவு கூற இலங்கை ஆளும் அரசுகள் தடை விதித்து
வருகின்றன இவ்வாறு இவர்கள் செல்வார்கள் ஆயின் நாட்டில் எவ்வாறு நல்லிணக்கத்தை
ஏற்படுத்த முடியும் என
சிறிதரன் எம்பி கேள்வி எழுப்பியுள்ளார் .
கோட்டபாய ஒரு முட்டாள் – முழங்கிய சிறிதரன் எம்பி
கோட்டபாய ஒரு முட்டாள் – முழங்கிய சிறிதரன் எம்பி
இலங்கையில் ஆளும் இனவாதியும் தமிழ் இன படுகொலையாளியும் ,ஊழல்வாதியுமாக விளங்கி வரும் கோட்டாபய அடிப்படை கல்வி ,மற்றும் அரசியல் அறிவு அற்ற முட்டாள் என யாழ்ப்பாண
பாரளுமன்ற உறுப்பினரும் விடுதலை விரும்பியும் சமுக நல அக்கறை கொண்ட மா மனிதன் சிறிதரன் அவர்கள் முழங்கியுள்ளார்
வன்னி அல்லது வடக்கு மாகாணம் என்பது விவசாயிகளை உயிர் நாடியாக உள்ள பகுதியாகவும்
இந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் குடி அதிகம் விவசாயத்தை நம்பி வாழ்கின்றவர்களாகும்
,அதன் மண்ணும் ,அதன் வளமும் அத்தகைய ஒற்றுமை கொண்ட பண்பாட்டு வருமானத்தை கொண்ட ஒன்றாக உள்ளது
அவ்வாறான மக்களின் வயிற்றில் சேறடிக்கும் முகமாக கோட்டபாய இந்த உர வளங்களை தடுத்துள்ளதாக அவர் முழங்கியுள்ளார் ,சேதனை பசளை உருவாக்கத்தில் முழுமையாக முன்னேற
மறுத்து விவசாய மக்கள் அரசு அலுவலங்களில் வேலை பார்க்கும் ஒரு அடி முட்டாள் தனத்திற்கு
வைத்துள்ளது இந்த செயல் என அவர் தொலைக்காட்சி நிகழ்ச்கை ஒன்றில் பேசும் போது மன வேதனையுடன் உணர்ச்சி மேலிட காட்டமாக தெரிவித்துளளார்
இலங்கை அரசாங்கத்தின் வக்கிர எண்ணங்கள் நாட்டை உருப்படவிடாது! சிறி எம்பி
இலங்கை அரசாங்கத்தின் வக்கிர எண்ணங்கள் நாட்டை உருப்படவிடாது! (முன்ணோட்டம்)
இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வேண்டும் – சிறிதரன் பாய்ச்சல் video
இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வேண்டும் – சிறிதரன் பாய்ச்சல்
இலங்கையில் பாதிக்க பட்ட தமிழர்களுக்கு தீர்வினை வழங்கி இலங்கையை சிங்கப்பூராக மாற்றி
செல்ல வேண்டிய சூழலை மறந்து தற்போது இனவாதத்தை கக்கி தமது வாக்கு பெறும் நகர்வுகளை
நோக்கி செல்கின்றார்கள் ,தமிழர்களின் அடிப்படை அரசியலை புரிந்து கொள்ள ஆளும் சிங்கள அரசுகள் மறந்து வருகின்றன
இந்த தவறான பார்வை காரணமாக இலங்கையின் பொருளாதாரம் ,சமத்துவம் ,ஒற்றுமை என்பது
தவறி செல்கிறது ,இதனால் தமிழர்கள் தோற்று போனார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்
சர்வதேச விசாரணையில் இருந்து இலங்கை தப்பித்து கொண்டது ,ஆயினும் அதனை அடுத்த
கட்டத்திற்கு நகர்த்தி இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த பட வேண்டும் எனவும் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்
கூட்டமைப்பின் கடத்தி கொடுப்பு ,மற்றும் உள்ள அடி தடிகள் என்பனவற்றையும் இடித்துரைக்கின்றார்
போருக்கு நிதி ஒதுக்கிய கோட்டா அரசு – உறுமிய சிறிதரன் வீடியோ
போருக்கு நிதி ஒதுக்கிய கோட்டா அரசு – உறுமிய சிறிதரன் வீடியோ
ஆளும் கோத்தபாயவின் ஆட்சியின் முதலாவது வரவு செலவு நிதி
ஒதுக்கீட்டில் போருக்கு பல மில்லியன் ஒதுக்கி இருப்பதாக சிறிதரன் முழங்கியுள்ளார்
இது ஏன் என்ற கேள்வியை எழுப்பிய சிறிதரன் ,தமிழ் மக்கள் தொடர்ந்து புறம் தள்ள பட்டு வருவதாக தொடர்ந்து அவர் சுட்டி காட்டியுள்ளார்
முழுமையாக அந்த காணொளியை பாருங்கள் இங்கேஅழுத்துங்க
















































