பாகிஸ்தான் எல்லைக்குள் இந்தியா போர்க்கப்பல்
Posted in இந்தியா செய்திகள் உலக செய்திகள்

பாகிஸ்தான் எல்லைக்குள் இந்தியா போர்க்கப்பல்

பாகிஸ்தான் எல்லைக்குள் இந்தியா போர்க்கப்பல்

பாகிஸ்தான் எல்லைக்குள் இந்தியா போர்க்கப்பல் தரித்துள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் கராச்சி பகுதியை முற்று முழுதாக தாக்கி அழிக்கும் நோக்குடன் ,இந்தியாவுடைய ராட்சத போர்க் கப்பல்கள் ,தற்பொழுது தரித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தியா பாகிஸ்தானுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற யுத்தத்தை அடுத்து ,தற்பொழுது மேலதிக பாதுகாப்புக்காக தற்பொழுது இந்தியா பாகிஸ்தானுடைய கராச்சி

பகுதியை முடக்கும் நோக்குடன் ,இந்த கப்பல் படையை அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கப்பல்களில் ராட்சத ஏவுகணைகள் மற்றும் படைகள் விசேட கமாண்ட படைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவுக்குள் நுழைந்து பாகிஸ்தான் தொடர் அட்டூழிய தாக்குதலை நடத்தினால் அதற்கு பதிலடி தருவோம் என்கிறது இந்தியா.

இது போன்று பாக்கிஸ்தானுக்குள் நுழைந்து இந்தியா தாக்குதல் நடத்திட முற்பட்டால் ,அதேபோன்று பலத்த அடியை தாங்களும் தருவோம் என இப்படி சொல்கிறது பாகிஸ்தான்.

இரு நாடுகளும் ஏட்டிக்கு போட்டியாக தமது கருத்துக்களை தெரிவித்து வருவதால் மக்கள் மத்தியில் பதட்டம் நிலவுகிறது.

இந்தப் போர் மீள எப்போது முடிவுக்கு வரும் என்பதே இந்தியா பாகிஸ்தான் மக்கள் பேச்சாக இருக்கிறது .

400 விமானங்கள் இந்தியாவை தாக்கின
Posted in உலக செய்திகள்

400 விமானங்கள் இந்தியாவை தாக்கின

400 விமானங்கள் இந்தியாவை தாக்கின

400 விமானங்கள் இந்தியாவை தாக்கின அதிர்ச்சியில் உறைந்துள்ள இந்திய ராணுவம் ஆளுகின்ற அரசு.

என்றும் இல்லாதவாறு வளமைக்கு மாறாக பாகிஸ்தான் மீது இந்தியா திடீர் தாக்குதலை நடத்தியது.

அதனை எடுத்து அதற்கு பதிலடியாக, முதன்முதலாக இந்தியாவிற்குள் நுழைந்து தாக்குதலை பாகிஸ்தானும் நடத்தியது.

நானூறுக்கும் மேற்பட்ட தற்கொலை உளவு ரக விமானங்களை அனுப்பி ,இந்தியாவுடைய 30 க்கு மேற்பட்ட நிலைகளை இலக்கவைத்து தாக்குதல் நடத்தி இருக்கின்றன.

இவ்வாறான நிலைகள் இராணுவ முக்கிய நிலையங்கள் கேந்திர நிலையங்கள் மற்றும் பொருளாதார வர்த்தக மையங்கள் என பலதரப்பட்டவை மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

எனினும் இந்தியாவோ தமது தாக்குதல் யாவும் முறியடிக்கப்பட்டு விட்டதாகவும் ,பாகிஸ்தானுக்கு பெரும் இழப்பு என , மீசையில் மண் ஒட்டாத கதையாக கூறி வருகிறது.

ஆனால் சற்று எதிர்ப்பாராத இந்த பாகிஸ்தானின் தாக்குதளினால் ,தற்பொழுது இந்தியா பெரும் சேதங்களையும் இடங்களையும் சந்தித்து வருவதாக நோக்கப்படுகிறது.

உக்கிரேன் ரஷ்யா போர் என்பதே உலக நாடுகளுக்கு இது போன்ற தாக்குதல் வரும் நாட்களில் இடம்பெறும் என்பதற்கான முன் அறிகுறியாக இருந்தது.

ஆனால் அதனை புரிந்து கொள்ளாது தற்பொழுது இந்தியா இந்த விளையாட்டை நடத்தியுள்ளதால், இப்பொழுது பாஸ்தாளிடம் அடி வாங்கி நொந்து கொண்டிருப்பதாகவே சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தான் விமானங்கள் நானூறுக்கு மேற்பட்டவை நடத்திய தாக்குதினால் ,இந்தியாவுக்கு ஏற்பட்ட முழுமையான சேத விபரங்கள் தெரியவில்லை.

வீழ்ந்த இடத்தில்இருந்தே வீறு கொண்டெழுவோம்
Posted in இலங்கை செய்திகள்

வீழ்ந்த இடத்தில்இருந்தே வீறு கொண்டெழுவோம்

வீழ்ந்த இடத்தில்இருந்தே வீறு கொண்டெழுவோம்

வீழ்ந்த இடத்தில்இருந்தே வீறு கொண்டெழுவோம் ,தென்னிந்திய திரைப்பட, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் கவர்ச்சி அலைகளுக்குள் சிக்குண்டு கிடக்கும் புலம் பெயர் தமிழ்ச் சமூகத்தில்,

எங்கள் தாயகப் பாடல்களை மட்டும் இசைக்கும், அதை எங்கள் இளையோரிடையே எடுத்துச் செல்லும் ஒரு முன் மாதிரியான நிகழ்வு..,,,

விடியலின் விதைகள்
“கலை மாலை”
இம்மாதம் 10ம் திகதி,
மாலை 6 மணிக்கு,

Hazelwick school,
Crawley,
RH10 1SX

பாடசாலை மண்டபத்தில் நடைபெற உள்ளது.

அனுமதி இலவசம்

வாய்ப்புள்ளவர்கள் கலந்து கொள்ளவும்.

நிகழ்வின் இடைவேளை நேரம் “தன்னுரிமையும் தனியரசு” நூல் அறிமுக நிகழ்வும் இடம் பெறும்.

கவலைப் படுகிறேன்
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

கவலைப் படுகிறேன்

கவலைப் படுகிறேன்

எதுகை மோனை எடுத்துவா
எழுத வா கவிதை வா
பாடலாம் இங்கு வா
பா வை ஒண்ணு பாட வா

ஆட இங்கு கூட்டி வா
ஆட வரா விட்டு வா
ஆடலாம் பார்க்க வா
ஆடு களம் திறக்க வா

அரியணையில் உள்ள வரா
அடுக்கு மாடி கொண்டவரா
திறன் இருந்தால் எடுத்து வா
திராணி இருந்தால் படிக்க வா

முதுமையில வாலிபத்தை
முன்னே தேட முடியாது
இளமையில தொலைத்தவற்றை
இன்று பெற முடியாது

அன்று செய்த தவறுகளோ
ஆள் மனதில் வலிக்கிறது
இந்த வலி ஆறுமா
இதயமது தேறுமா

ஆக்கம் – 09-05-2025
வன்னி மைந்தன்

யார் மேல் குற்றம்
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

யார் மேல் குற்றம்

யார் மேல் குற்றம்

உன்னை நானும் பார்க்கல
உன் உறவை நானும் கேட்கல
என்னை நீயும் தேடல
என்ன கேட்டாய் கேடில

பொல்லா வார்த்தை போடுறாய்
போலியாக தூவுறாய்
கண்ணா என்ன கேட்கிறாய்
காதில் என்ன ஓதுறாய்

விண்ணில் ஏறி பறக்கத்தான்
விண் வெளியை அளக்கத்தான்
காடு மலை ஏறுறேன்
கண்ணாம் பூச்சி ஆடுறேன்

ஓடுகிற ஆற்றில -காற்று
ஆடும் அந்த ஆற்றிலே
ஓங்கி எழும் அலையிலே
ஓர் தேசம் நனையுதே

எல்லாம் இங்கு ஒண்ணுதான்
ஏழை இங்கு பாவம் தான்
சொன்னா இங்கு கேடுதான்
சொல்லாம தூங்குறான் ……

ஆக்கம் – 09-05-2025
வன்னி மைந்தன்

Select கத்தி முனையில் மாணவியை கடத்த முயன்றவர் கைது கத்தி முனையில் மாணவியை கடத்த முயன்றவர் கைது
Posted in இலங்கை செய்திகள்

மாணவி கடத்தல் கத்தி முனையில்

மாணவி கடத்தல் கத்தி முனையில்

மாணவி கடத்தல் கத்தி முனையில் கத்தி முனையில் தாயாருடன் சென்ற மாணவியை கடத்த முயற்சித்த நபர் கைது செய்யபப்ட்டுள்ளார்.

அனுர ஆட்சியில் கடத்தல், கொலை கொள்ளை, ஊழல் துப்பாக்கிச் சூடு, கைதுகள் என தொடர்ச்சியாக அதிகரித்த வண்ணமே காணப்படுகின்றது.

இந்நிலையில், கொழும்பு – கறுவாத்தோட்டம் மல்வீதி பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு முன்னால் காரில் இருந்த தாயையும் மாணவியையும் கத்தி முனையில் மிரட்டி,

மாணவியை கடத்திச் செல்ல முயன்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

சந்தேக நபர் கடந்த 02 ஆம் திகதி அன்று கறுவாத்தோட்டம் மல்வீதி பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு முன்னால் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றுக்குள் அத்துமீறி நுழைந்துள்ளார்.

பின்னர் சந்தேக நபர் தாயையும் மாணவியையும் கத்தி முனையில் மிரட்டி காரை செலுத்திச் செல்லுமாறு தாயிடம் கூறியுள்ளார்.

இதன்போது தாயும் மாணவியும் காரில் இருந்து இறங்கி சத்தமிட்டு பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.

இதனையடுத்து சந்தேக நபர் கார் ஒன்றில் ஏறி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இது தொடர்பில் கறுவாத்தோட்டம் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில்,

சந்தேக நபர் கொழும்பு கொலன்னாவை பிரதேசத்தில் வைத்து புதன்கிழமை (07) கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வியாழக்கிழமை (08) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவரை 72 மணிநேரம் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனையடுத்து சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கப்பம் கோரும் நோக்கத்தில் மாணவியை கடத்திச் செல்ல முயன்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

மாணவியை கடத்துவதற்காக சந்தேக நபர் நீண்ட நாட்களாக திட்டமிட்டுள்ளதாகவும் பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தண்ணி விலை அதிகரிப்பு
Posted in இலங்கை செய்திகள்

தண்ணி விலை அதிகரிப்பு

தண்ணி விலை அதிகரிப்பு

தண்ணி விலை அதிகரிப்பு தண்ணிவிலை அதிகரித்து விற்றவருக்கு மில்லியன்தண்டம் மெல்லியன் தண்டம் அறபடப்பட்டுள்ள சம்பவம் இலங்கை கொழும்பு பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சூப்பர் மார்க்கெட் கடை ஒன்றில் தண்ணி போத்தல் ஒன்றின் உடைய விலை 130 ரூபாய்க்கு அதிகமாக விற்ற நிலையில் ,

அந்த விலை நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகமாக விற்ற கூட்டத்திற்காக அவருக்கு ரெண்டு மில்லியன் ரூபாய்கள் தண்ட அறவிடடப்பட்டுள்ளது.

அரசினால் நிர்ணயிக்கப்பட்ட விலையை அதிகரித்து பொருட்கள் விற்பனை செய்தால் அவர்களுக்கு தண்ட அறவிடப்படும் என அரசு அறிவித்திருந்த து .

இவ்வாறான நிலையில் ஒரு தண்ணி போத்தலின் விலை 130 க்கு அதிகமாக ரூபாவாக விற்பனை செய்யப்பட்டதை அடுத்து ,அவருக்கு இரண்டு மில்லியன் ரூபாய்கள் தண்டம் அறுவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆக இந்த விலையை விட அதிகரித்துவிட்ட குற்றச்சாட்டு அடிப்படையிலேயே நீதிமன்றத்தினால் இந்த தண்டம் அறடப்பட்டுள்ளது.

நாளுக்கு ஒரு விலையில் இலங்கையில் கடைகளில் விலை காணப்படுவதால் மக்கள் திணறி வருகின்றனர் .

ஒரு தொகையில் அவர்கள் பொருட்களை வாங்க முடியாத சூழல் அங்கு இருக்கிறது.

விலை நிரணையிப்பு இல்லாத விடயம் இலங்கை அரசின் கையாலாக தன்மை என்பதாக காணப்படுகிறது.

ஆகையால் இதனை தற்பொழுது பேசு பொருளாக்க வேண்டிய கட்டத்திற்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளதால் ,

இலங்கை நீதிமன்றம் சாட்டையடி தண்டனையை வழங்கி மக்கள் சுமைகளை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளது பாராட்டப்படுகிறது.

இந்த தண்டம் எச்சரிக்கை அடுத்து வரும் நாட்களிலும் இடங்களில் உள்ள கடைகள் இந்த அதிகமான விலைக்கு விற்க படமாட்டது என மக்கள் நம்பிக்கை வெளியிட்டு வருகின்றனர்.

வரியாக 970பில்லியனை அள்ளிய அனுரா
Posted in இலங்கை செய்திகள்

வரியாக 970பில்லியனை அள்ளிய அனுரா

வரியாக 970பில்லியனை அள்ளிய அனுரா

வரியாக 970பில்லியனை அள்ளிய அனுரா ஆட்சியின் சாதனையாக கடந்த மூன்று மாதத்தில் இடம்பெற்றுள்ளது.

இலங்கையில் அதிகமான வரிகளைஅறவிடப்பட்டு வருகின்ற நிலையில், இத்த பெரிய தொகை வரி பணத்தை இலங்கை ஆளும் அனுரா அரசு கடந்த மூன்று மாதத்தில் அறவிட்டுள்ளது .

நாட்டை முன்னோக்கி நகர்த்த வேண்டுமாக இருந்தால், மக்களிடத்தில் இருந்து வரிப்பணத்தை அறவிட்டால் மட்டுமே அதனை செய்ய முடியும்.

இவ்விதம் கடந்த மூன்று மாதத்தில் 970 ,58 பில்லியன் ரூபாய்களை இலங்கை வரியாக அறவிட்டுள்ளது .

அவ்வாறு வரியாக பெற்றுக் கொண்டுள்ள இந்த வருமானத்தை வைத்து தற்பொழுது அரசு இயங்கி வருகிறது.

மக்களிடமிருந்து அதிகமான வரிகளை அறவிடப்படுகின்ற பொழுதும் ,நாடு கடன் சுமையில் இருப்பதாக இலங்கை ஆளுகின்ற அரசுகள் அறிவிப்பது வேடிக்கையாக இருக்கிறது.

மிகப் பெரும் தொகையில் வட்டி விதங்கள் வரிகளாக பெற்றுக்கொள்ளப்படுகிறது.

ஆனால் நாடு மட்டும் ஒரு தலைக்கு நான்கு லட்சம் ரூபாய் கடன் அடிப்படையில் சிக்கித் தவிக்கிறது.

எப்படி அடைப்பது எப்படி நாட்டை மீட்பது என்பது தொடர்பாகவே ,தற்பொழுது மக்கள் மண்டையை பிடித்துக் கொண்டிருக்க ஆளுகின்ற அரசாங்கம் தங்கள் பைகளை நிரப்புவதாக குற்றம் சுமத்தப்படுகிறது.

இலங்கையில் விழுந்து நொருங்கிய உறங்குவானூர்தி
Posted in இலங்கை செய்திகள்

விழுந்து நொருங்கிய உலங்குவானூர்தி

விழுந்து நொருங்கிய உலங்குவானூர்தி

விழுந்து நொருங்கிய உலங்குவானூர்தி இலங்கையில் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான பில் ரக 212 ஹெலிகாப்டர் ஒன்று மாதரு ஓயா பகுதியில் வழக்கமான பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபொழுது விழுந்திருகின்றது.

சிம்ரன் கூட விமானத்தளத்தில் இருந்து புறப்பட்ட ஹெலிகாப்டர் சில நேரத்தில் அங்குள்ள மாதுரு ஓயா நீர் அணையில் விழுந்து மூழ்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உறங்குவான் விபத்து தொடர்புள்ளான விசாரணைகளை தற்பொழுது விமானப்படை ஆரம்பித்துள்ளனர்.

இந்த விமானம் விழுந்த விடயம் இலங்கை ராணுவத்தில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளதுடன் விசாரணை ஆரம்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனுரா ஆட்சி அரியணையில் குந்திய பின்னர் இடம்பெற்ற இரண்டாவது வானூர்தி விபத்தாக இது பார்க்கப்படுகிறது.

ஒரு மாத இடைவெளியில் வீழ்ந்து நொறுங்கிய இரண்டாவது விமானமாக இது காணப்படுகிறது.

இது திட்டமிடப்பட்ட சதியா அல்லது வான் விபத்தா என்பது தான் மக்களுக்கு கல்வியாக உள்ளது.

ஒரு மாதத்தில் இடம்பெற்ற இரண்டாவது வான் விபத்து சம்பவமாக இது காணப்படுகிறது.

34பேர் காவல்துறையால் கைது
Posted in இலங்கை செய்திகள்

34பேர் காவல்துறையால் கைது

34பேர் காவல்துறையால் கைது

34பேர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறை இப்படி அறிவித்துள்ளது.

இலங்கையில் சட்டவிரோதமாக தங்கி இருந்து பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த 34 பேரையே தாங்கள் கைது செய்யப்படுவதாக குடிவரவு குடி அகழ்வு அமைச்சு அறிவித்துள்ளது.

இவ்வாறு இலங்கை தங்கி இருந்தவர்கள் 19 முதல் 54 வயதுக்கு உட்பட்ட பங்களாதேஷ் ஆண்கள் குழுவில் கண்டரிக்கப்பட்டுள்ளது.

விசா காலாவதியானா நிலையில் அது கடந்து நாட்டில் தங்கி இருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே ,இந்த பங்களாதேஷ் பிரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை குடிவரவு அமைச்சர் அறிவித்துள்ளது.

இவர்கள் எதற்காக இலங்கைக்குள் வாழ்ந்து இருந்தார்கள் இந்த விடயம் தெரிவிக்கவில்லை.

கைது செய்யப்பட்டவர்கள் காவல்துறை விசாரணையின் பின்னர் தற்பொழுது நீதிமன்றில் பாரப்படுத்தப்பட்டுள்ளனர்.

இலங்கைக்கு வருகின்ற உல்லாச பயணிகள் பலர் இவ்வாறு விசாக்கள் கால அவதியான நிலையிலும் அங்கு தங்கி வருவதாக போலீசார் இப்படி தெரிவிக்கின்றனர்.

யாழ் மேயர் யார்
Posted in இலங்கை செய்திகள்

யாழ் மேயர் யார்

யாழ் மேயர் யார்

யாழ்ப்பாணத்துக்கான மேயர் யார், மேயரை எப்படி தெரிவு செய்யவேண்டும், மேயர் எப்படியானவராக இருக்க வேண்டும், மேயர் என்ன என்ன செய்ய வேண்டும்

என்ற கேள்விகளோடு யாழ்ப்பாண மேயரை தெரிவு செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைக்கான தேர்தல் முடிவடைந்த பின்னர் இது தொடர்பில் கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில், யாழ்ப்பாணம் மாநகர சபை மேயராக வரக் கூடியவர் விலை போகாதவராகத் தமிழ்த் தேசியப் பற்றுடன் செயற்படக் கூடியவராக இருக்க வேண்டும்.”

இவ்வாறு தமிழ்த் தேசியக் கட்சிகளிடம் வலியுறுத்தினார் தமிழ் மக்கள் கூட்டணியின் முக்கியஸ்தரும் யாழ்ப்பாணம் மாநகர சபையின் முன்னாள் மேயருமான சட்டத்தரணி வி.மணிவண்ணன்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “யாழ். மாநகர சபை மேயர் பதவி என்பது மிக முக்கியமானது. ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை விட முக்கியமானது.

நாடாளுமன்ற உறுப்பினரை விட சிறப்பாகச் செயற்படக் கூடியவராக இருக்க வேண்டும். யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளும் இராஜதந்திரிகள் யாழ். மேயரை நிச்சயம் சந்திப்பார்கள்.

அவ்வாறானவர்களுடன் இராஜதந்திர ரீதியாக உரையாட வேண்டும். யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கக் கூடிய அபிவிருத்தித் திட்டங்கள், தமிழ் மக்களின் அபிலாஷைகள், அவர்களின் பிரச்சினைகள் என்பவற்றை எடுத்துக் கூற வேண்டும்.

எனவே, மேயராக தமது கட்சி சார்பாக முன்னிலைப்படுத்தப்படுவர் சிறப்பானவராக இருக்க வேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கட்சிகள் பொறுப்புடன் உணர்ந்து கொண்டு அதற்கு ஏற்றது போல் மேயரைத் தெரிவு செய்ய வேண்டும்.” – என்றார்.

இந்நிலையில் மூத்த போராளி மனோகர் தெரிவிக்கையில்,

தமிழ்த்தேசியக் கட்சிகளாக இனங்காணப்படுபவர்களுடன் பேசும் போது யார் மேயர் என்பது போன்ற விடயங்களை முன்நிபந்தனையாக வைக்காமல் கூடிக் கலந்தாலோசிப்பதே சிறந்தது.

இம்முயற்சி கைகூடும் வரை சுமந்திரனை ஒதுக்கி வைத்தாலே எல்லாம் சுபமாக முடியும் என மூத்த போராளி மனோகர் தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

உள்ளூராட்சித் தேர்தலின் பின்னரான நிலைமை தொடர்பான விடயத்தில் பதில் செயலாளர் சுமந்திரனை கையாளவிடுவது எதிர்பார்க்கும் நோக்கங்களுக்கு மாறான விளைவையே தரும் என்பதனை

தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்களுக்குக் குறிப்பாக மத்திய குழுவினருக்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

குறிப்பாக யாழ். மேயர் விடயம் கவனத்துக்குரியது. இதனை முன்நிபந்தனைபோன்று வைப்பது ஏற்புடையதல்ல.

சுமந்திரன் கட்சிக்குள் நுழைந்த காலத்தில் இருந்தே தமிழ்த் தேசிய உணர்வாளர்களை நோகடிக்கும் விதத்திலேயே செயற்பட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் சுமந்திரன் தெரிவிக்கையில்,

“யாழ். மாநகர சபையின் எல்லைக்குள் வசிக்காத தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாநகர சபை மேயர் வேட்பாளர் சுந்தரமூர்த்தி கபிலன் மாநகர சபை மேயராக அல்ல,

யாழ். மாநகர சபையின் உறுப்பினராகப் கூடப் பதவி வகிக்க முடியாது. அவர் உறுப்பினராக வந்தால் வழக்குத் தொடர்ந்து அவரை வெளியேற்றுவோம் என தெரிவித்தார்.

கறுப்பு வெள்ளை புகை புதிய பாப்பரசர் தெரிவு
Posted in உலக செய்திகள்

கறுப்புவெள்ளை புகைபுதிய பாப்பரசர் தெரிவு

கறுப்புவெள்ளை புகைபுதிய பாப்பரசர் தெரிவு

கறுப்புவெள்ளை புகைபுதிய பாப்பரசர் தெரிவு முதலில் கறுப்பு புகை, பின்னர் வெள்ளைப் புகை வெளியேற்றப்பட்டு புதிய பாப்பரசர் தெரிவாகியுள்ளார்.

கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மத தலைவரான போப் பிரான்சிஸ் (வயது 88) கடந்த மாதம் 21-ந்தேதி உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவரது உடல் அடக்கம் கடந்த 26-ந்தேதி நடந்தது.

9 நாட்கள் வத்திக்கானில் துக்கம் அனுசரிக்கப்பட்ட நிலையில், புதிய போப் பிரான்சிஸை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் தொடங்கின.

அதன்படி நேற்று வாடிகனில் உள்ள சிஸ்டைன் சேப்பல் தேவாலயத்தில் கார்டினல்கள் பங்கேற்ற ரகசிய வாக்கெடுப்பு நடந்தது.

இதற்காக வாடிகனில் 250 கார்டினல்கள் குவிந்துள்ள நிலையில் 80 வயதிற்கு உட்பட்ட 133 கார்டினல்கள் மட்டுமே புதிய போப்பை தேர்வு செய்யும் தேர்தலில் வாக்களிக்க தகுதியானவர்கள்.

புதிய போப் பிரான்சிஸ் தேர்வு செய்யப்படும் வரை கார்டினல்கள் அங்கேயே தனிமைப்படுத்தப்படுகிறார்கள்.

இதற்காக அவர்களது செல்போன்கள் ஒப்படைக்கப்பட்டும், அவர்களை எந்தவிதத்திலும் தொடர்பு கொள்ளாமல் இருப்பதற்காக ஜாமர் கருவிகள் கொண்டு சிற்றாலயத்தை சுற்றி தொலைத்தொடர்பும் துண்டிக்கப்பட்டு உள்ளன.

இதற்கிடையே சிறப்பு திருப்பலி நடந்த பின்னர் வாக்கெடுப்பில் ரகசியம் காப்பது தொடர்பாக பீடத்தின் முன்பு நின்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

இதைத் தொடர்ந்து புதிய போப் ஆண்டவரை தேர்வு செய்யும் பணிகள் தொடங்கியது. அதில் 3-ல் 2 பங்கு ஆதரவு (89 வாக்குகள்) பெறும் கார்டினல் புதிய போப் ஆண்டவராக தேர்வு செய்யப்படுவார்.

புதிய போப் பிரான்சிஸை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் தொடங்கின. முதல் நாள் நடைபெற்ற வாக்கெடுப்பில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

அதற்கமைய, புதிய போப்பரசர் தெரிவாகவில்லை என்பதை வெளிப்படுத்தும்முகமாக கறுப்பு புகை வெளியேற்றப்பட்டது.

இதற்கிடையே, 2-வது முறையாக கார்டினல்கள் கூடி புதிய போப்பை தேர்வு செய்யும் பணியில் நேற்று ஈடுபட்டனர். இரண்டு நாள் இழுபறிக்குப் பிறகு புதிய போப் ஆண்டவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

உலகளவில் 1.4 பில்லியன் கத்தோலிக்க மக்களின் புதிய தலைவர் சற்றுமுன்னர் வத்திக்கானின் சிஸ்டைன் தேவாலயத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அதனை அடையாளப்படுத்தும் விதமாக, வத்திக்கானில் உள்ள புனித பீட்டர்ஸ் பெசிலிக்காவின் புகைபோக்கியிலிருந்து வெள்ளை புகை வெளியேறியுள்ளது.

அதன்படி, புனித பீட்டர் சதுக்கத்தின் மாடியில் புதிய பாப்பரசர் தோன்றுவார் என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

புகைபோக்கியில் இருந்து வெள்ளை புகை வௌியேறியதால் ​​புனித பீட்டர்ஸ் சதுக்கத்தில் கூடியுள்ள மக்கள் ஆரவாரம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றன

இந்நிலையில், புதிய போப் ஆக அமெரிக்காவைச் சேர்ந்த ராபர்ட் பிரிவோஸ்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட முதல் போப் ராபர்ட் பிரிவோஸ்ட் என்பது குறிப்பிடத்தக்கது.

கொட்டகலையில் துப்பாக்கிச் சூடு
Posted in இலங்கை செய்திகள்

கொட்டகலையில் துப்பாக்கிச் சூடு

கொட்டகலையில் துப்பாக்கிச் சூடு

கொட்டகலையில் துப்பாக்கிச் சூடு சம்பவம் வந்து இடம் பெற்றுள்ளதாக இலங்கை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கொட்டகல பாலபல்ல பகுதியில் உள்ள விகாரைக்கு அருகில் கடந்த இரவு துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

திடீரென நடத்தப்பட்ட இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில். 34 வயதுடைய வாலிபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

வாகனம் ஒன்றில் வந்த மர்ம ஆயுததாரிகள், திடீரென துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இலங்கையில் தொடரும் இவ்விதமான துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் ,அதிகரித்துக் காணப்படுவதால் மக்கள் மத்தியில் அச்ச நிலை காணப்படுகிறது.

இலங்கையில் ஆயுதப் பாவனை தடைவிதிக்கப்பட்டுள்ளது .அவ்வாறு ஆயுதங்கள் பாவித்தால் 20 வருட கடூழிய சிறை தண்டனை என சட்டம் இருக்கிறது.

அவ்வாறான காலப்பகுதியில் இவ்வாறான துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துச் செல்வது ,அனுரா அரசின் திட்டமிடப்பட்ட நிழல் நடவடிக்கையா என்பது தொடர்பாகவே சந்தேகம் வெளியிடப்படுகிறது.

அனுரா ஆட்சி இடம்பெற்ற 30ஆவது சூட்டு சம்பவமாக இது பார்க்கப்படுகிறது.

மக்களை நல்வழிப்படுத்த வந்த அது அவருடைய ஆட்சி அதிகாரம், இன்று இப்படி இருப்பது மக்கள் மத்தியில் சந்தேகங்களையும் அவர் மீதான அதிர்த்தியம் அதிகமாக ஏற்படுத்தி வருவதாக ,நோக்கர்கள் தமது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

இவ்வாறு துப்பாக்கி சூட்டு சம்பவம் அதிகரித்து காணப்பட்டால் ,அது மிகப் பெரும் அபாய நிலையில் ,இலங்கையை அழைத்துச் செல்லும் என்பதை மக்கள் கருத்தாக உள்ளது.

பாகிஸ்தான் போர்விமானம் சுட்டு விழுத்தல்
Posted in உலக செய்திகள்

பாகிஸ்தான் போர்விமானம் சுட்டு விழுத்தல்

பாகிஸ்தான் போர்விமானம் சுட்டு விழுத்தல்

பாகிஸ்தான் போர்விமானம் சுட்டு விழுத்தல் , என இந்திய இராணுவம் தற்பொழுது அதிரடி அறிவிப்பை மேற்கொண்டுள்ளது.

சீனா தயாரிப்பான அதி உச்ச போர் விமானம் தற்பொழுது இந்தியாவினால் வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல இந்தியாவினுடைய இரண்டு போர் விமானங்கள் ,சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக அமெரிக்காவும் அறிவித்திருக்கிறது.

அவ்வாறு வீழ்த்தப்பட்ட விமானத்தில் ஒன்று, இந்தியா மற்றும் பிரான்ஸ் தயாரிப்பிளான விமான இடம் பிடித்துள்ளது .

இந்தியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா ஐரோப்பா மற்றும் இஸ்ரேல் என்பன நிற்கின்றன.

பாகிஸ்தானுக்கு ஆதரவாக தற்பொழுது சீனா நிக்கிறது .

அதனால் சீனா பயன்படுத்தும் விமானங்கள் உடைய தரங்களை, பகுப்பாய்வு செய்வதற்காக , போர்க்களம் பலநாட்டு படைகளால் பாவிக்கப்படுவதாக பார்க்கப்படுகிறது.

இருதரப்பின் விமானங்கள் அடுத்தடுத்து சுட்டு வீழ்த்தப்பட்டதால் ,தற்பொழுது பாகிஸ்தான் இந்தியாவுக்கு இடையில் போர் தீவிரப் பெற்றுள்ளது.

வரும் நாட்கள் அல்லது நிமிடங்களில் மிகப்பெரும் போர் வெடித்து, அது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாக மாற்றம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தான் விமானத்திலிருந்து வானிலிருந்து வானுக்கு ஏவக்கூடிய ஏவுகணைகள் பொருத்தப்பட்ட விமானமே, இவ்வாறு வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தப்பட்டதாக இந்தியா அறிவித்துள்ளது.

அதேபோல ரகத்தைச் சேர்ந்ததே இந்தியாவினுடைய விமானங்களாக இந்தியாவுடைய இரண்டிலிருந்து ஐந்து விமானங்களும் சுத்தப்படுத்தப்பட்டுள்ளன.

ஆக மொத்தம் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் தற்பொழுது நீண்ட நெடிய யுத்தம் ஒன்று மூண்டுள்ளது .

இந்த யுத்தம் முடிவுக்கு வராவிட்டால், அது உக்கிரேன் ரசியா போன்ற போர்க்களமாக மாற்றம் பெறும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

மூடியவிமான நிலையங்கள் பயண எச்சரிக்கை
Posted in இந்தியா செய்திகள் இலங்கை செய்திகள்

மூடியவிமான நிலையங்கள் பயண எச்சரிக்கை

மூடியவிமான நிலையங்கள் பயண எச்சரிக்கை

மூடியவிமான நிலையங்கள் பயண எச்சரிக்கை நாடு முழுவதும் 24 விமான நிலையங்கள் மூடப்பட்டு பயணிகளுக்கு பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து கடந்த 36 மணி நேரத்தில் எல்லையில் நிலைமை மோசமடைந்துள்ளது.

டிரோன் தாக்குதல்

மூடியவிமான நிலையங்கள் பயண எச்சரிக்கைமற்றும் டிரோன் தாக்குதக்கலை இந்திய ராணுவம் முறியடித்து வருகிறது.

இந்த சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப், ஜம்மு-காஷ்மீர், லடாக், குஜராத், ராஜஸ்தான் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள 24 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

விமான நிறுவனங்களும் எச்சரிக்கை நடவடிக்கை

இதுதவிர்த்து இண்டிகோ மற்றும் ஸ்பைஸ்ஜெட் உள்ளிட்ட பல விமான நிறுவனங்களும் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளன.

சிவில் விமானப் பாதுகாப்பு பணியகம் (BCAS) அனைத்து விமான நிலையங்கள் மற்றும் விமான நிறுவனங்களுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிக்க அறிவுறுத்தியுள்ளது.

பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பயணிகள், ஊழியர்கள் மற்றும் முக்கியமான உள்கட்டமைப்புகளை அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாக்க வேண்டியதன் அவசியம் காரணமாக,

இந்தியா முழுவதும் 24 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

நோட்டீஸ் டூ ஏர்மேன் என்ற பிரிவின் கீழ் இதற்கான நடைமுறையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

இதன்காரணமாக இந்தியாவில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்படுகின்றன.

விமானப் போக்குவரத்து அமைச்சகம்

இது குறித்து சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் உறுதி செய்துள்ள தகவலில், விமான நிலையங்கள் மூடுதல் என்பது தற்காலிக முடிவு.

தேசிய பாதுகாப்பு நிலைப்பாட்டின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.

விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால், குறிப்பிட்ட விமானநிலையங்களுக்கு வர வேண்டிய பல்வேறு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும், வேறு விமான நிலையங்களுக்கு சில விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்டுள்ள பயணிகள் தாங்கள் முன் பதிவு செய்துள்ள விமான நிறுவனங்களை அணுகும்படி மத்திய அரசு அறிவித்துள்ளது.

புதிய விமான நிறுவனங்களில் ஒன்றான ஆகாசா ஏர், சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

“இந்தியா முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக விமானம் புறப்படுவதற்கு குறைந்தது மூன்று மணி நேரத்திற்கு முன்பே விமான நிலையத்துக்கு பயணிகள் வர வேண்டும்.

விமான நிலையத்திற்குள் செல்ல, அரசால் அங்கீகரிக்கப்பட்ட புகைப்பட அடையாள ஆவணங்களை எடுத்துச் செல்ல வேண்டும். விமானத்துக்குள் ஏழு கிலோ வரை எடையுள்ள ஒரு கைப்பை மட்டுமே அனுமதிக்கப்படும்.

ஒழுங்குமுறை வழிகாட்டுதல்களின்படி, அனைத்து பயணிகளும் விமானத்துக்குள் ஏறுவதற்கு முன்பு இரண்டாம் நிலை பாதுகாப்பு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட உள்ளனர்,” எனக் கூறப்பட்டுள்ளது.

இண்டிகோ நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், “இந்த அசாதாரண சூழலில், அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பு சோதனைகள் மற்றும் சம்பிரதாயங்களை எதிர்கொள்ள, திட்டமிட்ட பயண நேரத்துக்கு முன்பே விமானநிலையத்துக்கு பயணிகள் வரவேண்டும்,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும், பொதுமக்கள் நுழைவதற்கு தடை விதித்துள்ளதாக சமூக ஊடகங்களில் வதந்திகள் பரவத் தொடங்கி உள்ளன.

ஆனால், இதனை சிவில் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சகம் மறுத்துள்ளது. “நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களுக்குள் நுழைவதற்கு முழுமையான தடை இல்லை.

குறிப்பிட்ட சில விமான நிலையங்கள் மட்டுமே தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன” என்று அதிகாரி ஒருவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

தமிழரசுக் கட்சிக்கு பகிரங்க அழைப்பு
Posted in இலங்கை செய்திகள்

தமிழரசுக் கட்சிக்கு பகிரங்க அழைப்பு

தமிழரசுக் கட்சிக்கு பகிரங்க அழைப்பு

தமிழரசுக் கட்சிக்கு பகிரங்க அழைப்பு. இலங்கை தமிழரசுக் கட்சிக்கு பகிரங்க அழைப்பை விடுத்து இருக்கின்றனர் கிழக்கு தமிழர் கூட்டமைப்பு.

தமிழரசுக் கட்சி பல்வேறு விட்டுக் கொடுப்பிற்கு மத்தியில் தமிழர்களின் ஆட்சியை உறுதி செய்வதற்கு

தமிழரசுக் கட்சிக்கு கிழக்கு தமிழர் கூட்டமைப்பு பகிரங்க அழைப்பு

இலங்கை தமிழரசுக் கட்சிக்கு கிழக்கு தமிழர் கூட்டமைப்பு பகிரங்க அழைப்பு விடுப்பதாக,

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் வியாழக்கிழமை (08) மாலை மட்டக்களப்பில் உள்ள

அவரது கட்சியின் அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

இதன் போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்;

கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கிழக்கு தமிழர் கூட்டமைப்பின் படகு சின்னத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட மக்கள் வழங்கிய ஆணைக்காக அந்த மக்களுக்கு எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

உள்ளூராட்சி சபைகளில் மக்கள் வழங்கிய ஆணை

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் மக்கள் எமக்கு வழங்கிய ஆணையின் பிரகாரம் 37 ஆசனங்கள் எமக்கு கிடைத்துள்ளன.

இதனை மக்கள் எமக்கு வழங்கிய பெரும் ஆணையாகவே நாம் பார்க்கின்றோம்.

அதனடிப்படையில் கிழக்கு மக்களுக்கு தனித்துவமான ஒரு அரசியல் குரல் தேவை என்பதை மக்கள் ஏற்றுக் கொண்டிருக்கின்றார்கள்.

எமது கிழக்கு தமிழர் கூட்டமைப்பானது வாகரையில் ஏழு ஆசனங்களை பெற்றிருக்கின்றோம் அதே போன்று மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திலும் இரண்டு வட்டாரங்களை தம்வசப்படுத்தியதுடன்

மண்முனை தென் மேற்கு பிரதேசத்தில் ஆறு ஆசனங்களைப் பெற்று கிழக்கு தமிழர் கூட்டமைப்பு முன்னிலையில் நிற்கின்றது.

அந்த அடிப்படையில் கிழக்கு தமிழர் கூட்டமைப்பிற்கு மக்கள் வழங்கிய ஆணையின் அடிப்படையில் தமிழர்களின் ஆட்சியினை உறுதிப்படுத்துவதற்காக

இணைந்து செயற்படுவதற்காக இலங்கை தமிழரசுக் கட்சிக்கு பகிரங்கமாக அழைப்பு விடுக்கின்றோம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் நகர சபையில் இருக்கின்ற எல்லைப் புற கிராமங்கள் இரண்டில் கிழக்கு தமிழர் கூட்டமைப்பு வெற்றி பெற்றிருக்கின்றது.

அதனடிப்படையில் மக்களின் ஆணைக்கு கட்டுப்பட்டு தனிப்பட்ட அல்லது கட்சி விருப்பு வெறுப்பிற்கு அப்பால் கிழக்கு மாகாணத்தில்

தமிழர்கள் அனைவரும் ஒருமித்து பயணிக்க வேண்டும் என்பதை மக்கள் உணர்த்தியிருக்கின்றார்கள்.

அதன் அடிப்படையில் இலங்கை தமிழரசுக் கட்சிக்கு கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு தமிழர்களின் ஆட்சியை உறுதி செய்வதற்காக அழைப்பு விடுக்கின்றோம்.

அவ்வாறு ஒன்றாக பயணிக்கின்ற போது கோறளைப்பற்று வடக்கு, கோறளைப்பற்று, ஏறாவூர்ப்பற்று, மட்டக்களப்பு மாநகர சபை, மண்முனை தென் எருவில் பற்று, மண்முனை தென் மேற்கு மற்றும் போரதீவுப்பற்று ஆகிய

உள்ளூராட்சி மன்றங்களிலும் நாங்கள் ஆட்சியமைக்க முடியும். அதாவது தமிழர்களின் ஆட்சியை உறுதிப்படுத்தும் வாய்ப்பு இருக்கின்றது.

பல்வேறு விட்டுக் கொடுப்பிற்கு மத்தியில் பயணிக்கின்ற கிழக்கு தமிழர் கூட்டமைப்பின் இந்த கோரிக்கையினை ஏற்று இலங்கை தமிழரசுக் கட்சியினர் ஒன்றாக பயணிப்பதற்கு முன் வருவார்கள் என நம்புகின்றோம்.

ஏன் என்றால் 2015 ஆண்டு மாகாண சபை தேர்தலின் பின்னர் எமது கட்சியின் தலைவர் சந்திரகாந்தன் அவர்களினால் பகிரங்கமாக அழைப்பு விடுத்திருந்தோம்.

மாகாண சபை ஆட்சியினை நடாத்துவதற்கு நாங்கள் உங்களுடன் சேர்ந்து பயணிப்பதற்கு உறுதியாக இருக்கின்றோம். ஆனால் அந்த கருத்தை நிராகரித்திருந்தார்கள்.

மீண்டும் 2018 வருடமும் சேர்ந்து பயணிக்க அழைப்பு விடுத்திருந்தோம் அதனையும் நிராகரித்திருந்தார்கள். அதன் அடிப்படையில் கிழக்கு மக்கள் நில, நிருவாக, பொருளாதார இருப்புக்களில்

கிழக்கு மக்கள் பாதிக்கப்பட்டிருந்ததை அவர்கள் மறந்திருக்க மாட்டார்கள் என நாங்கள் நம்புகின்றோம் என்றார்.

இஸ்ரேல் படைகள் கடும் தாக்குதல்
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் படைகள் கடும் தாக்குதல்

இஸ்ரேல் படைகள் கடும் தாக்குதல்

இஸ்ரேல் படைகள் கடும் தாக்குதல் ,லெபனானை இலக்கு வைத்து, இஸ்ரேல் படைகள் கடும் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றன.

இந்த தாக்குதலில் லெபனான் மக்கள் வாழ்விடங்கள் ,பலமான பாதிப்புக்கு உள்ளாகி உள்ளதாக அந்த நாட்டுப்படைகள் தெரிவிக்கின்றன.

ஆனால் யூத படைகளோ எதிரிப்படைகளான லெபனான் போர்படைகள், மற்றும் முக்கிய தளபதிகள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

தனது எதிரிகளை அழித்தால் மட்டும் தான் உயிர் வாழ முடியும் என கருதும் யூத படைகள் , தற்பொழுது ஹிஸ்புல்லா கொல்லா போர்படைகளின் ,மிக முக்கியமான தளபதிகளை அழித்து வருகிறது.

அதன் ஒரு அங்கமாகவே இந்த தாக்குதலை இப்போது நடத்தி இருப்பதாக தெரிய வருகிறது.

யூத படைகள் நடத்திய இந்த இன அழிப்பு தாக்குதலில் மக்களுக்கு ஏற்பட்ட உயிரிழப்பு தொடர்பாக உடனடியாக தெரிய வரவில்லை.

தொடர்ந்து நீடிக்கும் இந்த போர் மிகப் பெரும் ஆபத்தையும், மூன்றாம் உலக யுத்தத்தை ஆரம்பிக்க கூடிய நிலைக்கு இந்த, தாக்குதல் சம்பவங்கள் எடுத்துச் செல்லும் என்பதாகவே பார்க்க முடிகிறது.

37இந்திய விமானங்கள் சுட்டு வீழ்த்தல்
Posted in உலக செய்திகள்

37இந்திய விமானங்கள் சுட்டு வீழ்த்தல்

37இந்திய விமானங்கள் சுட்டு வீழ்த்தல்

37இந்திய விமானங்கள் சுட்டு வீழ்த்தல், என பாகிஸ்தான் ராணுவம் பர பரப்பு அறிவித்தலை விடுத்துள்ளது.

இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் எல்லைகளை நோக்கி விரைந்து வந்த இந்திய தயாரிப்பு 12 தற்கொலை விமானங்கள், அதேபோன்று ஹிட்லர் தயாரிப்பான 25 விமானங்கள் என்பனவற்றை தாங்கள் வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தி உள்ளதாக பாகிஸ்தான் வான்படை அறிவித்துள்ளது.

இஸ்ரேல் மீது ஈரான் நடத்துகிற விமான வழி தாக்குதலை போன்று ,தற்பொழுது பாகிஸ்தானுக்கு உள்ளும் நுழைந்து மிகப்பெரும் தாக்குதலை நடத்தி பாகிஸ்தானை நிலகுலைய வைக்கும் நடவடிக்கையில் தற்பொழுது இந்தியா ஈடுபட்டு வருகிறது.

இதன் பின்னணியில் அமெரிக்க மற்றும் இஸ்ரேல் இணைந்து செயல்படுவதை இந்த விடயங்கள் கோடிட்டு காட்டுகின்றன.

இதேபோல தாக்குதலை இந்தியாவை நோக்கி பாகிஸ்தான் நடத்தினால் ,இந்தியா அதை எப்படி தடுக்க போகிறது என்பதையும், அதற்காக எவ்வளவு செலவு செய்ய வேண்டும் என்பதை இந்தியா சிந்தித்துப் பார்க்கவில்லை.

இந்தப் போரில் தாங்கள் பலமான வெற்றியை ஈட்டிக் கொள்வோம் என்பதாக இன்றும் இந்தியா நினைக்கிறது .

ஆனால் அது து எத்தகைய விளைவுகளை இந்தியாவுக்கு ஏற்படுத்தும் என்பதை இந்தியா புரிந்துகொள்ளவில்லை.

உலக நாடுகளில் ரஷ்யா ,உக்கிரேன் இஸ்ரேல் பலஸ்தீனம், என்பன நேரடி யுத்தத்தில் களமிறங்கியுள்ளது .

இவ்வாறான நிலையில் தற்போது இந்தியாவும் பாகிஸ்தானும் இறங்கினால் அது மிகப்பெரும் பேரழிவை ,இந்தியாவுக்கு ஏற்படுத்தும் என்பதை இந்தியா புரிந்து கொள்ளவில்லை.

ஆகவே இந்த தாக்குதல்கள் இந்தியாவுக்கு மிகப்பெரும் நெருக்கடியை ஏற்படுத்தக் கூடிய ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.

வரும் நாட்கள் திக் திக் நிமிடங்களாக கழிகின்றன .எங்கும் எப்பொழுது மிக பெரும் போர் நடக்கலாம் என்று நிலை காணப்படுகிறது.

பாராளுமன்றத்தில் தூக்கி வீசப்பட்ட அர்ச்சுனா
Posted in இலங்கை செய்திகள்

பாராளுமன்றத்தில் தூக்கி வீசப்பட்ட அர்ச்சுனா

பாராளுமன்றத்தில் தூக்கி வீசப்பட்ட அர்ச்சுனா

பாராளுமன்றத்தில் தூக்கி வீசப்பட்ட அர்ச்சுனா ,பாராளுமன்றத்தில் தூக்கி வீசப்பட்ட ஆச்சுடா ராமநாதன் சம்பவம் இன்று பாராளுமன்ற பர பரப்பாக இடம்பெற்றுள்ளது.

பாராளுமன்ற கூட்டத்தொடரில் மிக முக்கியமான விடயம் பேசப்பட்டு கொண்டிருந்த பொழுது, அங்கு அந்த பேச்சை குழப்பி சபையில் அநாகரிகத்தை மேற்கொண்டார் .

இதன் காரணத்தினால் அர்ச்சுனா இராமநாதன் அந்த பாராளுமன்றத் தேர்தலில் தூக்கி வீசப்பட்டார்.

தமிழ் மக்களுடைய விடுதலைக்காக தானே மீட்க வந்தவராகவும், தான் ஒருவரே பாராளுமன்றத்தை ஆட்டுவதாகவும், உருட்டி வந்து பொய்பித்தலாட்டம் ஆடிவந்த ,அர்ச்சுனா இராமநாதனுக்கு இந்த பாராளுமன்ற சாட்டையடி விழுந்திருக்கிறது.

நாள்தோறும் தமிழர் தமிழர் தேசியம் தமிழர் விடுதலை ,தமிழியம் தமிழ் பெண்கள் ,பெண்ணுரிமை எதிராக பேசி வருகின்றறார் அர்ச்சுனா.

பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப அங்கு நடத்தப்படும் விவாதங்களை திசை திருப்பி ,நேரத்தை வீணடித்து அதனை குழப்புவதை நோக்கமாகக் கொண்டு அர்ச்சுனா செயல்பட்டார்.

அதன் அடிப்படையில் இப்பொழுது இன்று பாராளுமன்றத்தில் பேசுகின்ற பொழுது சபையை குழப்பினார் ,என்ற காரணத்தினால் அங்கிருந்து அவர் தூக்கி வீசப்பட்டார்.

ஆக சபை குழப்பி என்கின்ற பெயர் அர்ச்சுனா இராமநாதனுக்கு எங்கே இலங்கை உடைய பாராளுமன்றம் சூட்டியிருக்கிறது.

ஆகவே சபை குழப்பி அர்ச்சனா இராமநாதன் தமிழருடைய சபைகளையும் தமிழ் தேசிய வரலாற்றை குழப்புகின்ற குழப்படி நாயகனாக காணப்படுகிறார்.

ஆகவே ஊசி கட்சிக்கு இன்று உருட்டி உருட்டி பாராளுமன்றத்தில் ஊசி போடப்பட்டு ,அர்ச்சனா ராமநாதன் இழுத்து வந்து, பாராளுமன்றத்துக்கு முன்னிலே வீசப்பட்ட சம்பவம் ,பரவலாக மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

பருத்தித்துறையில் காய்ச்சலால் உயிரிழந்த இளைஞன்
Posted in இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் காய்ச்சலால் உயிரிழந்த இளைஞன்

பருத்தித்துறையில் காய்ச்சலால் உயிரிழந்த இளைஞன்

பருத்தித்துறையில் காய்ச்சலால் உயிரிழந்த இளைஞன் பருத்தித்துறையில் காய்ச்சலால் இளைஞர் ஒருவர் உயிரிழந்தது அப்பகுதியில் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்களாகக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த இளைஞர் உயிரிழந்த நிலையில் , உடற்கூற்று மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காகக் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த 21 வயது நிரம்பிய இளைஞன் ஒருவரே காய்ச்சலால் உயிரிழந்துள்ளார்.

மேற்படி இளைஞர் கொழும்பில் உயர் படிப்பை கற்றுவரும் நிலையில், யாழ்ப்பாணத்தில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பிய நிலையில் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்தார்.

நான்கு நாட்களாகக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிந்த நிலையில் நேற்று புதன்கிழமை உடல்நிலை மிக மோசமான நிலையில் குடும்பத்தினர் அவரை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

அவரின் உடற்கூற்று மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காகக் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், கடந்த வாரமே காய்ச்சல் தொடர்பாக சுகாதார பிரிவினரால் மக்களுக்கு அறிவிப்பு விடுக்கப்பட்டிருந்தது.

கொசுக்களால் பரவும் நோய்கள் மற்றும் வழக்கமான வைரஸ் காய்ச்சல் அதிகரித்து வருவதால், இரண்டு நாட்களுக்கு மேல் நீடிக்கும் காய்ச்சல் இருந்தால்,

மருத்துவரை அணுகுமாறு சுகாதார அதிகாரிகள் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.

இது தொடர்பில் ஆலோசகர் மருத்துவர் அச்சலா பாலசூரிய கூறியதாவது, சரியான மருத்துவ ஆலோசனை இல்லாமல் வீட்டிலேயே காய்ச்சலுக்கு சிகிச்சை அளிப்பது ஆபத்தானது.

சிலர் இது ஒரு எளிய வைரஸ் காய்ச்சல் என்று நினைக்கலாம், ஆனால், டெங்கு அல்லது சிக்குன்குனியா போன்ற கடுமையான நோய்கள் இதே போன்ற அறிகுறிகளுடன் தொடங்கலாம்.

இருப்பினும், ஆரம்பத்திலேயே பரிசோதனை செய்து கொள்வதும், நிலைமையை மோசமாக்கும் மருந்துகளைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதும் முக்கியம்.

மருத்துவரை அணுகாமல் ஆஸ்பிரின் அல்லது ஐபுப்ரூஃபன் போன்ற மருந்துச் சீட்டு வலி நிவாரணிகளை எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும் அவர் பொதுமக்களுக்கு அறிவுறுத்துகிறார்.