Tag: நன்றி
வாக்குகளால் வலுச் சேர்த்த மக்களுக்கு நன்றி
வாக்குகளால் வலுச் சேர்த்த மக்களுக்கு நன்றி
வாக்குகளை வழங்கி மக்கள் தமக்கான பலத்தை தெரிவுசெய்திருக்கிறார்கள் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார் சிறிதரன்.
நடைபெற்று முடிந்த உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலில், தமிழ்த் தேசியப் பயணத்தை ஏற்று, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்கு மக்கள் வழங்கிய ஆணைக்கு தலைவணங்குகிறேன்,
என பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தின் மூன்று சபைகளிலும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களுடனான சந்திப்பு,
கட்சியின் மாவட்டப் பணிமனையில் நேற்று நடைபெற்றபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது,
அண்மைய தேர்தல்களைக் காட்டிலும், இந்தத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு எமது மக்கள் வாக்குகளால் வலுச்சேர்த்திருக்கிறார்கள்.
அதிலும் குறிப்பாக கிளிநொச்சி மாவட்டத்தில் எமது கட்சிக்கு வாக்களித்து, கரைச்சி, பச்சிலைப்பள்ளி,
பூநகரி ஆகிய சபைகளில் நாம் ஆட்சியமைக்க காரணமாக இருந்த மக்களுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்தச் சந்திப்பில் கலந்துகொண்ட வேட்பாளர்கள், கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்திலும்,
புனித திரேசாள் தேவாலயத்திலும் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையால் ஒழுங்கமைக்கப்பட்ட மத வழிபாட்டு ஆராதனைகளிலும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சி மாவட்டத்தின் 3 பிரதேச சபைகளையும் இலங்கை தமிழரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது. பச்சிளைப்பள்ளி பிரதேச சபை,
கரைச்சி பிரதேச சபை மற்றும் பூநகரி பிரதேச சபை ஆகிய 3 பிரதேச சபைகளையும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது.
கரைச்சி பிரதேச சபையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி 20,962 வாக்குகளைப் பெற்று 20 உறுப்பினர்களையும்
பச்சிளைப்பள்ளி பிரதேச சபையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி 3,040 வாக்குகளைப் பெற்று 6 உறுப்பினர்களையும்,
பூநகரி பிரதேச சபையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி 5,171 வாக்குகளைப் பெற்று 10 உறுப்பினர்களையும் பெற்றுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சிறிதரனின் தலைமையில் நடத்தப்பட்ட அணிகள் மிகப் பெரும் வெற்றியை தன தாக்கிய மிகப்பெரும் வரலாற்று பதிவை நிலைநாட்டியுள்ளது .
சிங்கள இனவாதத்திற்கு மிகப் பெரும் அடியை வழங்கி இருக்கிறார்கள். கரைச்சியில் தங்களது வாக்குகள் மூலமாக சிங்கள இனவாதத்தையும் சிங்கள தேசியவாதத்தையும் துடைத்து எறிந்த மக்கள் நாட்டிய சாதனை இதுதான்.
வடக்கு பகுதியில் அதிகமான பகுதிகளை இலங்கை தமிழர் கட்சி சுருட்டி மிகப்பெரும் சாதனையை படைத்துள்ளது வரலாற்று நிகழ்வாக இது உள்ளது.
தமிழ் மக்கள் வடக்கு பகுதியில் விழுந்து விட்டார்கள் ,அவர்கள் மீளவும் எழுந்து விட மாட்டார்கள் என எண்ணி கொக்கரித்த, எதிராளிகள் தற்பொழுது தோற்றுப் போயுள்ளார்கள்.
இலங்கை தமிழரசு கட்சி இல்லாமல்போகும் என நினைத்தோருக்கு இந்த மக்களின் வாக்குப்பதிவு ஒரு நெத்தியடி.
வாக்குப் பதிவுகளால் மக்கள் தமக்கான ஒரு அடையாளத்தை மீண்டும் நிலைநிறுத்தி வலுச் சேர்த்துள்ளார்கள், வாக்களித்த மக்களுக்கு நன்றிகள்.
கனடா அண்ணா செய்த செயல் |நன்றி சொல்ல வார்த்தை இல்லை
கனடா அண்ணா செய்த செயல் |நன்றி சொல்ல வார்த்தை இல்லை
கனடா அண்ணா செய்த செயல் |நன்றி சொல்ல வார்த்தை இல்லை,மலசலகூடம் இன்றி தவித்த குடும்பம் ,தெரிவித்த கண்ணீர் கதை ,காணொளியை முழுமையாக பாருங்கள் மக்களே
- ஓடும் நதியில் ஆடும் படகாய் |Odum Nathiyil Aadum padakaai |562 | VANNI MAINTHAN Song

- மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கிய Gowri German anu aka Australia

- ராகவி விது தம்பதிகள் மாணவர்களுக்கு வழங்கிய மிதிவண்டிகள் |Vanni mainthan

- கோபிகா வழங்கிய 5 மிதிவண்டி -| வவுனியா கோவில்குளம் வித்தியாலயம் |Vanni mainthan

- வவுனியா மாணவனுக்கு மிதிவண்டி வழங்கிய அமெரிக்கா பானு அக்கா |Vanni mainthan















