இஸ்ரேல் அட்டூழியம் 38பாலஸ்தீனர் பலி
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் அட்டூழியம் 38பாலஸ்தீனர் பலி

இஸ்ரேல் அட்டூழியம் 38பாலஸ்தீனர் பலி

இஸ்ரேல் அட்டூழியம் 38பாலஸ்தீனர் பலி யாகி உள்ளதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணித்தியாலத்தில் இஸ்ரேல் இராணுவம் நடத்திய திடீர் தாக்குதலில் ,அப்பாவி பலஸ்தீன பொதுமக்கள் 38 பேர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்காலிக முகாம்களில் தங்கி இருந்த மக்களை இலக்கு வைத்து, யூத இராணுவம் ,விமானங்கள் ,ஏவுகணைகள் ,மூலம் தாக்குதலை நடத்தினர்.

இதன் பொழுதே 38 அப்பாவி பலஸ்தீன மக்கள் பலியாகியும், 145க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர் .

இதுவரையான கால பகுதியில் பலஸ்தீன யூத மோதல்களில் ,52,653 பொதுமக்கள் பலியாகியும் ,ஒரு லட்சத்து 18,897 மக்கள் காயம் அடைந்துள்ளனர்.

சர்வதேச விதிகளை மீறி பலஸ்தீன மக்கள் மீது ,இஸ்ரேல் இராணுவம் நடத்தி வரும் தாக்குதலை, தடுத்து நிறுத்த முடியாது உலக நாடுகள் வேடிக்கை பார்து கொண்டுள்ளன .

தொடர்ந்தும் சர்வதேச விதிகளை மீறி ,அப்பாவி பலஸ்தீன மக்களை தாக்குதல் நடத்தி வருவதால் மிகப்பெரும் பர பரப்பு ஏற்பட்டுள்ளது.