மாகாண சபை தேர்தல் நடக்கும் அனுரா
Posted in இலங்கை செய்திகள்

மாகாண சபை தேர்தல் நடக்கும் அனுரா

மாகாண சபை தேர்தல் நடக்கும் அனுரா

மாகாண சபை தேர்தல் நடக்கும் அனுரா ,தேர்தல் சட்டங்களை மறுஆய்வு செய்ய 12 பேர் கொண்ட பாராளுமன்ற தெரிவுக் குழு நியமனம்

மாகாண சபை தேர்தல்

மாகாண சபை தேர்தல்கள் தொடர்பான விதிகளைத் தவிர்த்து, தேர்தல் சட்டங்களை மறுஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக 12 பேர் கொண்ட பாராளுமன்ற தெரிவுக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று (05) பாராளுமன்றத்தில் இந்த நியமனத்தை அறிவித்தார்.

பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்

மாகாண சபை தேர்தல் சட்டங்களைத் தவிர்த்து, தற்போதுள்ள தேர்தல் சட்டக் கட்டமைப்பை விரிவாக மறுஆய்வு செய்தல், அதன் கண்டுபிடிப்புகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல், மற்றும் தேர்தல் முறைமையில்

வெளிப்படைத்தன்மையை வலுப்படுத்தும் நோக்கில் முன்மொழிவுகளையும் பரிந்துரைகளையும் சமர்ப்பித்தல் ஆகிய பணிகள் இக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

பேராசிரியர் ஏ. எச். எம். எச். அபயரத்ன இக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கலாநிதி உபாலி பன்னிலகே, முனீர் முலஃபர், சட்டத்தரணி சுனில் வதகல, ரவி கருணாநாயக்க, ஜே.சி. அலவத்துவல, ஹர்ஷன ராஜகருணா, கதிரவேலு

சண்முகம் குகதாசன், ருவன்திலக ஜயகொடி, சட்டத்தரணி சந்தில்வகன், மைதீஸ்வரம, மைதிஸ்வர ஜயசிங்க ஆகியோர் குழுவிற்கு நியமிக்கப்பட்டுள்ளனர். ஹெட்டியாராச்சி

மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படும்
Posted in இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படும்

மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படும்

மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படும் ,மாகாண சபைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று நாடாளுமன்றத்தில், மாகாண சபைத் தேர்தல்கள் நிச்சயமாக நடத்தப்படும் என்று கூறினார்.

தேர்தலில் எதிர்க்கட்சி தோற்கடிக்கப்படும்

அந்தத் தேர்தலில் எதிர்க்கட்சி தோற்கடிக்கப்படும் என்று அவர் கூறினார்.

பட்ஜெட் விவாதத்தின் போது அவர் இதுபோன்ற கருத்துக்களைத் தெரிவித்தார்.

மாகாண சபைகளுக்கான தேர்தல்கள்

“மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் குறித்து பேச்சு நடந்து வருகிறது. ஆம், நாங்கள் தேர்தலை நடத்துவோம். எதிர்க்கட்சி முழுமையாக தோற்கடிக்கப்படும்” என்று அவர் கூறினார்.

மாகாண சபைத் தேர்தலுக்கு சட்டமே சிக்கல்
Posted in இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலுக்கு சட்டமே சிக்கல்

மாகாண சபைத் தேர்தலுக்கு சட்டமே சிக்கல்

மாகாண சபைத் தேர்தலுக்கு சட்டமே சிக்கல் ,மாகாண சபைச் சட்டம் பாராளுமன்றத்தால் திருத்தப்படும் வரை மாகாண சபைத் தேர்தல்களை

நடத்துவது தொடர்பாக நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணைக்குழுவுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று அதன் தவிசாளர் ஆனந்த ரத்நாயக்க கூறினார்.

மாகாண சபைத் தேர்தல்கள்

தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரங்கள் கிடைத்த பிறகு, மாகாண சபைத் தேர்தல்கள் மாகாண மட்டத்தில் தனித்தனியாக நடத்தப்படுமா அல்லது

ஒன்றாக நடத்தப்படுமா என்பதை அது முடிவு செய்யும் என்றும் அவர் கூறினார்.

முந்தைய மாகாண சபைத் தேர்தல்கள் இவ்வாறு தனித்தனியாக நடத்தப்பட்ட வழக்குகள் உள்ளன என்றும் அவர் கூறினார்.

“மாகாண சபைத் தேர்தல்கள் பழைய முறையில் நடத்தப்பட வேண்டுமானால், சட்டத்தில் சேர்க்கப்பட்ட திருத்தத்தை நீக்க வேண்டும். அடுத்த ஆண்டு (2026)

தேர்தலுக்காக ஐந்து அல்லது ஆறு பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது

மாகாண சபைத் தேர்தலுக்காக ஐந்து அல்லது ஆறு பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதேபோல், இந்த ஆண்டும் தேர்தல்களுக்கு பணம் ஒதுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த ஆண்டு அவை நடத்தப்படாவிட்டால், அந்தப் பணம் திறைச்சேரிக்கு திருப்பி அனுப்பப்படும்

அடுத்தவருடம் மாகாண சபை தேர்தல்
Posted in இலங்கை செய்திகள்

அடுத்தவருடம் மாகாண சபை தேர்தல்

அடுத்தவருடம் மாகாண சபை தேர்தல்

அடுத்தவருடம் மாகாண சபை தேர்தல் ,மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்ட பின்னர் அரசியலமைப்புத் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தற்போதுள்ள சட்டச் சிக்கல்கள்

தற்போதுள்ள சட்டச் சிக்கல்கள் தீர்க்கப்பட்ட பின்னர், அடுத்த ஆண்டு முதல் 6 மாதங்களுக்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

கிளிநொச்சி பகுதியில் நேற்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் பிமல் ரத்நாயக்க இவ்வாறு தெரிவித்தார்.

“நாங்கள் 2025 இல் தேர்தலை நடத்தினோம். 2024 நவம்பரிலும் தேர்தலையும் நடத்தினோம்.

6 மாதங்களில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவோம்

அடுத்த ஆண்டு முதல் 6 மாதங்களில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவோம் என்று நம்புகிறோம்.

சட்டத் தடைகள் உள்ளன. அவற்றை அகற்ற முயற்சிக்கிறோம்.

அரசியலமைப்பைக் கொண்டுவருவது குறித்து எங்களிடம் கொள்கை முடிவு உள்ளது.

அரசியலமைப்பைக் கொண்டுவருவது ஒரு விரிவான செயல்முறை.

அதற்கு முன்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதே எங்கள் இலக்கு.

மாகாண சபைத் தேர்தலை நடத்திய பிறகு அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் குறித்த விரிவான அரசியல் திட்டத்தைத் தொடங்குவோம்.” என்றார்.

மாகாண சபைத் தேர்தல் விரைவில்
Posted in இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தல் விரைவில்

மாகாண சபைத் தேர்தல் விரைவில்

மாகாண சபைத் தேர்தல் விரைவில் ,மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடாத்த வேண்டி இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் என தமிழ் அரசியல்வாதிகள் தெரிவித்துள்ளனர்.

நிரந்தரமான ஒரு அரசியல் தீர்வை அடைய வேண்டுமென்ற எங்களுடைய இலக்கிற்கு வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் மீண்டும் ஆணையை தந்திருக்கின்றார்கள் என,

இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் இலங்கை தமிழரசுக்கட்சியின் அலுவலகத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனை தெரிவித்தார்.

இந்த ஊடக சந்திப்பில் இலங்கை தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், வைத்தியர் இ.சிறிநாத் ஆகியோரும் கருத்து தெரிவித்தனர்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல்

2025 ஆம் ஆண்டிற்கான உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சியானது வடக்கு கிழக்கிலே அமோகமான வெற்றியைப் பெற்றிருக்கின்றது. நாடு யாரிடமாவது இருக்கட்டும்,

தமிழர் தாயகம் தமிழரசோடு என்பது நாங்கள் தேர்தல் பரப்புரை காலத்தில் சொன்னதற்கமைவாக வடக்கு கிழக்கிலே இருக்கின்ற மக்கள் எங்களுக்கு அமோகமான வெற்றியைத் தந்திருக்கின்றார்கள்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வெற்றி

இது உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வெற்றி என்பதைத் தாண்டி இது தமிழர்களுடைய எதிர்காலத்திற்கான ஆணையொன்றை தமிழ் மக்கள் தமிழரசுக் கட்சியிடம் ஒப்படைத்திருக்கின்றார்கள்.

நிரந்தரமான ஒரு அரசியல் தீர்வை அடைய வேண்டுமென்ற எங்களுடைய இலக்கிற்கு வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் மீண்டும் ஆணையை தந்திருக்கின்றார்கள்.

அந்தவகையிலே விரைவில் மாகாணசபைத் தேர்தலை நடத்த வேண்டுமென்று நாங்கள் அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும்.

மாகாணசபைத் தேர்தலிலும் வடக்கு கிழக்கில் வெல்வோம்

மாகாணசபைத் தேர்தலிலும் வடக்கு கிழக்கில் நாங்கள் கூடுதலான ஆசனங்களைப் பெற்று ஆட்சியமைக்க இருக்கின்றோம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நாங்கள் போட்டியிட்ட பதினொரு சபைகளிலும் ஆசனங்களைப் பெற்றிருக்கின்றோம்.

பெரும்பான்மையாக தமிழர்கள் இருக்கின்ற அனைத்து பிரதேச சபைகளிலும் நாங்கள் பெரும்பான்மையான ஆசனங்களை வென்றிருக்கின்றோம். அனைத்து பிரதேச சபைகளிலும் ஆட்சியமைக்கக்கூடிய சூழல் இருக்கின்றது.

அத்துடன் நாங்கள் சிறுபான்மையாக இருக்கின்ற இரண்டு பிரதேச சபைகளிலும் ஆசனங்களை பெற்றிருக்கின்றோம்.

இன்று மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து முதற்கட்டமாக பட்டியல் ஆசனங்கள், சபை அமைத்தல், யாருடன் இணைவது என்பது பற்றி கலந்துரையாட இருக்கின்றோம்.

இன்று நாங்கள் போட்டியிட்ட அனைத்து பிரதேச சபை உறுப்பினர்களையும் ஒவ்வொரு சபையாக அழைத்து அந்தந்த சபைகளில் பட்டியல் உறுப்பினர்கள் யார் என்றும் தவிசாளர்,

பிரதி தவிசாளர் பற்றி எவ்வாறு தீர்மானம் எடுப்பது என்பது பற்றியும் யாருடன் நாங்கள் இணைந்து ஆட்சியமைப்பது என்பது பற்றியும் மட்டக்களப்பு மாவட்டத்தில் கலந்துரையாட இருக்கின்றோம்.

எதிர்வரும் இரண்டு, மூன்று வாரங்களுக்குள் இலங்கை தமிழரசுக் கட்சி அனைத்து சபைகளிலும் ஆட்சியமைக்கக்கூடிய ஒரு வியூகத்தை நாங்கள் அமைக்கவிருக்கின்றோம்.

இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன்,

உள்ளூராட்சி சபைகளுக்கான பிரதிநிதித்துவ முறை என்பது சற்று சிக்கலான முறை என்பதை நீங்கள் அறிவீர்கள்.

அப்படியான சிக்கலான ஒரு முறை காணப்பட்டபோதிலும் தமிழர்கள் அதிகமாக வாழ்கின்ற அனைத்து சபைகளிலும் நாங்கள் கணிசமான வாக்குகளைப் பெற்றிருக்கின்றோம்.

வாக்குத்தொகை அடிப்படையில் நாங்கள் முதலாவதாக இருக்கின்றோம், சபைகளின் பிரதிநிதித்துவத்தை கைப்பற்றியிருப்பதன் அடிப்படையிலும் நாங்கள் முதலாவதாக இருக்கின்றோம்.

பிரதிநிதித்துவ முறையில் காணப்படுகின்ற சில குறைபாடுகள் காரணமாக நாங்கள் அதிகப்படியான வாக்குகள் பெற்றிருந்தாலும் தொங்கு நிலையான ஆசனங்கள் எனப் பலவாறான ஆசனங்கள் காணப்படுகின்றபடியால்

அவற்றையெல்லாம் கடந்து ஒன்பது உள்ளுராட்சி சபைகளிலும் ஆட்சியமைக்கக்கூடிய அளவிற்கு எமது கட்சி உரிய ஆசனங்களை தக்கவைத்துக்கொண்டிருக்கின்றது.

எதிர்வரும் காலங்களில் சபைகளை அமைத்து சுமுகமான முறையில் அதனை கொண்டுசெல்லக்கூடிய வாய்ப்பினை ஏற்படுத்துவோம்.

சில கட்சிகள் கூட்டணியாகச் சேர்ந்து கடுமையான பிரயத்தனங்கள் செய்தும் கூட அவர்களுடைய முயற்சிகள் வெற்றி பெறவில்லை.

தமிழர்தாயகம் தமிழரசுக் கட்சியின் பக்கம் இருக்கின்றது என்பதை இவ்விடத்தில் கூற முடியும்.

எதிர்காலத்தில் நாங்கள் சிறப்பான செயற்பாடுகளையும் முன்கொண்டு செல்வோம்.

தேசிய மக்கள் சக்தியானது தாங்கள் நடுநிலை வகிப்பதாக கூறியிருப்பதாக அறிய முடிகின்றது.

நாங்கள் தமிழ்த் தேசியம் சார்ந்து சிந்திப்பவர்களாக இருக்கின்றபடியால் தமிழ்த் தேசிய எண்ணத்தோடு இருப்பவர்களுக்குத்தான் முன்னுரிமை கொடுப்போம்.

மற்றையவர்கள் சிநேகபூர்வமாக எங்களுக்கு ஆதரவு தருவதற்கு முன்வருகின்றபோது பரஸ்பரம் நாங்கள் ஆதரவுகளை வழங்கி சபைகளை அமைக்கவேண்டிய தேவை இருக்கின்றது. நாங்கள் முதலாவதாக இருக்கின்றோம்.

ஏனென்றால் மட்டக்களப்பு பல்லினமும் வாழும் ஒரு பிரதேசமாக இருக்கின்றபடியால் பரஸ்பரம் புரிந்துணர்வு, பரஸ்பர விட்டுக்கொடுப்பு என்பது தவிர்க்க முடியாத விடயமாக இருக்கின்றபடியால்,

அவற்றை கையாளவேண்டிய தார்மீக பொறுப்பு எங்களிடம் இருக்கின்றது என தெரிவித்தார்.

மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரம் தேவை
Posted in இலங்கை செய்திகள்

மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரம் தேவை

மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரம் தேவை

மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரம் தேவை என முன்னாள் தேர்தல் ஆணையாளரும், எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவருமான மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

ஜனநாயக இளைஞர் காங்கிரஸ் மற்றும் பீபிள்ஸ் பவுண்டேசன் ஆகிய இரு நிறுவனங்கள் இணைந்து ”எமது உரிமைகள், எமது வளங்களை பாதுகாக்க எமது மாகாணத்தின் மாகாண சபையை வலுப்படுத்துவோம்” என்ற

தொனிப்பொருளிலான செயலமர்வொன்று கண்டி வரையறுக்கப்பட்ட கூட்டுறவு அலுவலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் அதிதியாக

கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரம் தேவை

ஜனநாயக நாடு என்ற அடிப்படையில் மாகாண சபை அவசியம். மாகாண சபை இந்நாட்டுக்கு அவசியமில்லை என யாராவது குறிப்பிடுவார்களாயின் ஜனாதிபதி மற்றும் அமைச்சரவை தேவையும் இல்லை.

தற்போது மாகாண சபை மக்கள் கூட்டிணைப்பற்ற அரச அதிகாரிகளால் செயற்படுத்தப்படுகின்றது. இதனால் மாகாண சபை குறித்தான கேள்வியொன்றை எழுப்பும் போது அரச அதிகாரிகள் அதற்கு நேரடியாக பொறுப்பேற்காமல் இருக்கின்றனர். மக்கள் பிரதிநிதிகள் இருந்தால் இந்நிலை மாற்றமடைந்திருக்கும்.

தற்போது மாகாண சபை செயற்திட்டங்களில் மக்கள் கருத்துக்களை கேட்டறிய வாய்ப்பு இல்லை. எனவே மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளை தெரிவு செய்தலை உடன் மேற்கொள்ள வேண்டும்.

அநேகமானோர் மாகாண சபை வெள்ளை யானை என தெரிவித்து வருவதுடன், மாகாண சபை உறுப்பினர்களை பராமரிக்க அதிக நிதி வீண்டிக்கப்படுவதாக கூறி மக்களை ஏமாற்றுகின்றனர்.

அவர்களின் பராமரிப்புக்கு அரச வருமானத்தில் 1 வீதமளவே செலவாகுகின்றது எனவும் தெரிவித்தார்.

தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவரும், எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவருமான மஹிந்த தேசப்பிரிய, முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான ஜயலத் பண்டார, முன்னாள் ராஜா உஸ்வெட

கெய்யாவ, ஜனநாயக இளைஞர் காங்கிரசின் தலைவர் கே.அர்ஜூன, பீபிள்ஸ் பவுண்டேசன் நிறுவனத்தின் தலைவர் எரிக் ஹேரத் உள்ளிட்ட கண்டி

மாவட்டத்தின் சிவிலமைப்புக்கள் உட்பட இளைஞர் யுவதிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.