மக்களுக்குள் நுழைந்த கார் பலர்காயம்
Posted in உலக செய்திகள்

மக்களுக்குள் நுழைந்த கார் பலர்காயம்

மக்களுக்குள் நுழைந்த கார் பலர்காயம்

மக்களுக்குள் நுழைந்த கார் பலர்காயம் மக்களுக்குள் நுழைந்த கார் பலர் காயமென வாசல் யோனி செய்திகள் தெரிவிக்கின்றன.

வேகமாக வந்த காரொண்டு மக்கள் கூட்டத்திற்குள் திடீரென இடித்து மோதியது இதன் பொழுது பல மக்கள் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு காயம் அடைந்தவர்கள் இருவர் மிக ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் இருபதுக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக முதல் கட்ட செய்திகள் தெரிவிக்கின்றன .

இது திட்டமிடப்பட்ட தீவிரவாத தாக்குதலா அல்லது தற்செயலாக ஏற்பட்ட வீதி விபத்தா என்பது தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

காயமடைந்த 14 பேர் மிக ஆபத்தான நிலையில் இருந்ததாகவும், அவை பலமான காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக முதல் கட்ட செய்திகள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு காயம் அடைந்த அதி உச்ச காயமடைந்த 14 பேரில் நான்கு பேர் கால்கள் செயலிழந்துள்ளதாகவும், ஏனையவர்கள் முதுகுவல் எலும்புகள் என்பன உடைந்த நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருகின்ற தகவல் அடிப்படையில் அவர்கள் அங்க ஊன முற்றவர்களாக நிரந்தரமாக செயல்படக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

கார் பலமான சேதமா நிலையில் காணப்படுவதுடன் பக்கத்தில் இருந்த கார்களுக்கும் இந்த கார் மோதி தள்ளியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தை பார்க்கின்ற பொழுது மிகவும் ஆபத்தான விபத்தாகவும் ,திட்டமிடப்பட்ட முறையில் இந்த தாக்குதல் இடம்பெற்றதாகவே தற்பொழுது பசலோனா ஓடிய செய்திகள் தெரிவிக்கின்றன.

துருக்கியில் திடீர் நில நடுக்கம்
Posted in உலக செய்திகள்

துருக்கியில் திடீர் நில நடுக்கம்

துருக்கியில் திடீர் நில நடுக்கம்

துருக்கியில் திடீர் நில நடுக்கம் ,துருக்கியில் திடீர் நிலநடுக்க மேற்பட்டுள்ளதாக துருக்கி செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த 24 மணித்தியாலத்தில் துருக்கியின் அங்காரா பகுதியில் இடம்பெற்ற நில நடுக்கத்தில் பாரிய சேதங்கள் ஏற்பட்டு இருக்கலாம் என தெரிய வருகிறது.

இன்று இடம்பெற்ற இந்த நிலநடுக்கத்தின் அதிர்வு 5.2காணப்படுவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

துருக்கியில் கடந்த வருடம் இடம்பெற்ற நில அதிர்வில் சிக்கி. 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் பலியாகி பலர் காயமடைந்தும் இருந்தனர்.

கட்டட இடுப்பாடுகளுக்குள் சிக்கி இருந்த பல சிறுவர்கள் மீட்கப்பட்ட சம்பவங்கள் இப்பொழுது நெஞ்சை உலுக்குகிறது.

அவ்வாறான காலப்பகுதியில் தற்பொழுது துருக்கியில் இடம்பெற்றுள்ள இந்த நிலச்சரிவு பெரும் பதட்டத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்த நில அதிர்வெண் எண்ணிக்கை என்பது சுட்டென் புள்ளி என்பது மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் ஒன்றாக காணப்படுகிறது.

இந்த செய்தி பதியப்படும் வரை துருக்கி அங்காரப் பகுதியில் இடம்பெற்ற, நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட, முழுமையான பாதிப்பு இதுவரை தெரிய வரவில்லை.

வரும் மணித்தியாலங்களில் இந்த இழப்பு தெரிய வரும் எனவும் ,அவை உலகை மிகப்பெரும் அதிர்ச்சியில் உறைய வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலநடுக்கத்தில் இலங்கை மக்களுக்கும் துருக்கியில் பாதிக்கப்பட்டனரா என்பது தொடர்பாக தெரிய வரவில்லை.

உக்கிரேன் விமானம் சுட்டு விழுத்தல்
Posted in உலக செய்திகள்

உக்கிரேன் விமானம் சுட்டு விழுத்தல்

உக்கிரேன் விமானம் சுட்டு விழுத்தல்

உக்கிரேன் விமானம் சுட்டு விழுத்தல் உக்கிரேன் விமானம் ஒன்று சுட்டு விழுத்தப்பட்டுள்ளதாக உக்கிரேன் நாட்டினுடைய விமானப்படை அறிவித்துள்ளது.

எப் 16 ரக போர் விமானம் வானில் பறந்து கொண்டு இருந்த பொழுது ,அவசர நிலை காரணமாக விமானத்தில் ஏற்பட்ட கோளாறு அடுத்து விமானிபாராசூட் மூலம் குறித்து தப்பிள்ளார்.

ரஷ்யா மீது தாக்குதலை நடத்திக் கொண்டிருந்த குறித்த போர் விமானமே தற்பொழுது விமானப்படை தொடர்பிலிருந்து காணாமல் போகிறதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஷ்யா நடத்திய தாக்குதலில் இந்த விமானம் சிக்கியதாகவும் அதனால் விமானி பரசூட் மூலம் குதித்து தப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானி பரசூட் மூலம் குதித்துள்ள பொழுதும் ,அவர் ரஷ்யப்படைகளால் கைது செய்யப்பட்டாரா என்பது தொடர்பாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

உக்கிரைன் ரஷ்யாவுக்கு இடையிலான யுத்தத்தில், இவ்வாறு ரஷ்யாவால் சுடப்பட்ட விமானங்களில் இருந்து, உக்கிரன் விமானிகள் பரசூட் மூலம் குதித்து பொழுது ரசியப்படைகள் வசமே சிக்கி இருந்தனர்.

அவ்வாறு இந்த விமானியும் குதிக்கின்ற பொழுது பரசூட் குறித்த நிலையில் ரசியா பணியிடம் சிக்கி இருக்கக்கூடும் என்கின்ற விடயம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்கா எல்லையில் அமெரிக்கா இராணுவம்குவிப்பு
Posted in உலக செய்திகள்

அமெரிக்கா எல்லையில் அமெரிக்கா ஆமிகுவிப்பு

அமெரிக்கா எல்லையில் அமெரிக்கா ஆமிகுவிப்பு

அமெரிக்கா எல்லையில் அமெரிக்கா ஆமிகுவிப்பு. அமெரிக்க ராணுவம் திடீரென குவிக்கப்பட்டு பலமான பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நாள்தோறும் அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக குடியேற்றவாசிகள் நுழைந்து வருவதால் அவர்களை தடுக்கும் முகமாக இந்த தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்கா ஆளும அதிபர் டிரம்பின் உத்தரவுக்கு அமைய 20,000 ராணுவத்தினர் எல்லையோரங்கள் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்புக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது.

தொடர்ந்து சட்ட விரோத குடியேற்றவாசிகள் அமெரிக்காவில் தங்கி வாழ்வதால் அவர்களை தடுப்புக்கு நடவடிக்கையில் இது ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனரக வாகனங்கள் விமானங்கள் ட்ரோன்கள் என்பனவற்றின் ஊடாக தீவிர கண்காணிப்பு தீவிரமாக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்காக பல மில்லிய நிதி ஒதுக்கப்பட்டு ராணுவம் எல்லையில் இறக்கி விடப்பட்டுள்ளதால், சட்டவிரோத குடியத்தவாசிகள் உள்ளவர்கள் தடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்க ராணுவத்தின் இந்த சிறப்பு காவல் பாதுகாப்பு நடவடிக்கை அமெரிக்காவுக்கு பாதுகாப்பாக இருக்கும் என அமெரிக்க டம் நம்புகின்றார்.

இந்த நடவடிக்கையால் தற்போது சட்டவிரத குடியரசுகள் திணறி பெறுவதாக அமெரிக்கா செய்திகள் தெரிவிக்கின்றன.

பள்ளத்தாக்கில் பாய்ந்த வண்டி
Posted in இலங்கை செய்திகள்

பள்ளத்தாக்கில் பாய்ந்த வண்டி

பள்ளத்தாக்கில் விழுந்த வண்டி

பள்ளத்தாக்கில் பாய்ந்த வண்டி ,பள்ளத்தாக்கில் பாய்ந்த வண்டி அதிகரிக்கும் இலங்கையில் வாகன விபத்துக்கள்.

கட்டன் கொழும்பு பிரதான வலியுடாக பயணித்துக் கொண்டிருந்த கப் வாகனம் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து மலை பள்ளத்தாக்கில் விழுந்தது.

இதன் பொழுது அந்த வாகனத்தை ஒட்டிச் சென்றவர்கள் படுகாயம் அடைந்த நிலையில் தற்போது மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கப்ராக வாகனம் பலத்த சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது

இந்த வாகன விபத்தில் காயம் அடைந்தவர்கள் மற்றவள டிவிசன் கொஸ்டின் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்கள் நலமுடன் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றனர்.

இலங்கையில் ஆண்டு தோறும் 36 ஆயிரம் வாகன விபத்துக்கள் இடம் பெற்று வருவதும் மூவரசுக்கு மேற்பட்டவர்கள் வாகன விபத்தில் பலியாகி வருகின்றனர்.

இவ்வாறான துயரமான சம்பவங்கள் இடம்பெற்று வருகின்ற பொழுது அதனை தடுக்க வழி ஏற்று இலங்கை காவல்துறை மற்றும் அரசு என்பன ஈடுபட்டு வருகின்றன.

கடந்த சமீப நாட்களில் பலமான விபத்துக்கள் இடம் பெற்று வருவதும் மக்கள் பலியாகியும் காயம் அடைந்து வருகின்ற சம்பவங்கள் தொடர்கின்ற வழியில் இந்த விபத்து இந்து இடம் பெற்றுள்ளது கவலை அளிக்கிறது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம்

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம்

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தின் செய்தியை சர்வதேசத்துக்கு எடுத்துச் செல்வது இராஜதந்திரிகளின் முக்கிய பொறுப்பு என அனுர தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தின் செய்தியைச் சர்வதேச சமூகத்திற்கு எடுத்துச் செல்வதும், சர்வதேச சமூகத்தின் முன்

இலங்கையின் நற்பெயரை மேம்படுத்துவதும் தூதுவர்களின் பொறுப்பாகும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

பல்வேறு நாடுகளுக்கான இலங்கையின் தூதுவர்களாக நியமிக்கப்பட்டுச் செல்லும் புதிய தூதுக்குழுத் தலைவர்களுடன் இன்று வியாழக்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற

கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இக்கருத்துக்களைத் தெரிவித்தார்.

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு சேவைகளை வழங்குவதில் முன்னணியில் இருந்து சிறப்புக் கவனத்துடன் பணியாற்றுமாறும், எந்தவித பாகுபாடும் இல்லாமல் நியாயமாக செயல்படுமாறும்

புதிய இராஜதந்திரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

இலங்கைத் தூதரகத்தை, இலங்கையர்கள் தமது இடமாக உணரும் வகையில் செயற்படுமாறு சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நாட்டிற்கான தமது சேவையை செயற்திறன்மிக்க வகையில் மேற்கொள்ளுமாறும் தெரிவித்தார்.

வெளிநாட்டு நேரடி முதலீட்டை ஈர்ப்பதற்கும், இலங்கையில் உள்ள தொழில்முனைவோர் வெளிநாட்டு சந்தை வாய்ப்புகளைக் கண்டறிய

உதவுவதற்கும் தேவையான ஒருங்கிணைப்பு இராஜதந்திர சேவையின் ஒரு பகுதியாகும் என்று ஜனாதிபதி அநுரகுமார தெரிவித்தார்.

அதன்படி, நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக வெளிநாட்டு நேரடி முதலீடுகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பது தூதுவரின்

முக்கிய பொறுப்பாகும் என்றும், அதற்குத் தேவையான ஆதரவை வழங்க அரசு தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

இலங்கையில் நடந்த சில சம்பவங்களால் தூதுவர்கள் கடந்த காலங்களில் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர் என்றும், தற்போதைய

அரசாங்கம் தூதுவர்களின் கௌரவத்தை பாதிக்கும் எவற்றையும் செய்யாது என்றும் எந்த நேரத்திலும் தூதுவர்களுக்கு அரசு துணை நிற்கும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

புதிய தூதுக் குழுத் தலைவர்களாக, இந்தியாவிற்கான இலங்கை உயர் ஸ்தானிகராக ஜீ. எம். கொலொன்னெ, பாகிஸ்தானுக்கான இலங்கை உயர்

ஸ்தானிகராக ரியர் அட்மிரல் பிரெட் செனவிரத்ன, ஐக்கிய இராச்சியத்திற்கான இலங்கை உயர் ஸ்தானிகராக எஸ். டீ. என்.யூ.சேனாதீர,

அமெரிக்காவின் நியூயோர்க் ஐக்கிய நாடுகள் சபைக்கான நிரந்தர பிரதிநிதியாக ஜயந்த ஜயசூரிய, கியூபாவுக்கான இலங்கைத் தூதுவராக ஆர்.எம்.மஹிந்த ரத்நாயக்க, ஜப்பானுக்கான இலங்கைத் தூதுவராக

பேராசிரியர் பி. ஜனக் குமாரசிங்க, ஐக்கிய அரபு இராச்சியத்திற்கான இலங்கைத் தூதுவராக பேராசிரியர் அருஷா கூரே ஆகியோர் இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜா மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

உல்லாச பயணிகள் வருகைதிடீர் அதிகரிப்பு
Posted in இலங்கை செய்திகள்

உல்லாச பயணிகள் வருகைதிடீர் அதிகரிப்பு

உல்லாச பயணிகள் வருகைதிடீர் அதிகரிப்பு

உல்லாச பயணிகள் வருகைதிடீர் அதிகரிப்பு ,அமைச்சு உல்லாச பயணிகள் வருகை திடீர் அதிகரிப்பு சம்பவம் இம்மாதம் இடம்பெற்றுள்ளதாக உல்லாச துறை அமைச்சு அறிவித்துள்ளது.

இலங்கைக்கு வரும் உல்லாச பயணிகளில் இந்த மாதம் வருகை தந்தவர்கள் கடந்த 13 நாட்களில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன் அடிப்படையில் கடந்த 13 நாட்களில் இலங்கைக்குள் வருகை தந்தவர்கள் 59,75 பேர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உல்லாச பயணிகள் இலங்கைக்கு வருவதால் அந்நிய செலாவணி அதிகரிப்பு மற்றும் இலங்கை உடைய பல்வேறுபட்ட நகரங்கள் அதனுடைய பார்வைக்கு செல்கிறது.

அதன் அடிப்படையில் இலங்கைக்கு இம்மாதம் வருகை தந்தவர்களில் அதிகமானவர்கள் இந்திய நாட்டைச் சேர்ந்த 18,812 பேர் அடங்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்குள் உல்லாச பயணிகளாக இந்தியர்கள் மற்றும் சீனா நாட்டக்காரர்கள் அதிகமாக வருகை தந்து செல்வது பல்வேறுப்பட்ட விடயங்களில் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

இலங்கை சீனா வாசமான நிலையில் இந்தியர்களுக்கும் சீனத்தர்களுக்கும் இலங்கைக்குள் அதிகமாக உல்லாச பயணிகளாக வருகை தந்து செல்வதே சந்தேகங்களை கிளப்பியிருக்கின்றது.

திட்டமிடப்பட்டு இந்தியாவினுடைய உளவு முகவர்கள் இவ்வாறு வந்து செல்கிறார்களா என்கின்ற விடயத்தை இவை காண்பிக்கிறது.

இலங்கை மூலபாய வருமானத்தில் உல்லாச பயணத்துறை முதலிடம் பிடித்துள்ள நிலையில் .உல்லாச பயணிகள் வரவில்லாமல் விட்டால் இலங்கையினுடைய பொருளாதாரம் காணாமல் போய்விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

நாடெங்கும் கடும்மழை மக்கள் அவதி
Posted in இலங்கை செய்திகள்

நாடெங்கும் கடும்மழை மக்கள் அவதி

நாடெங்கும் கடும்மழை மக்கள் அவதி

நாடெங்கும் கடும்மழை மக்கள் அவதி,நாடெங்கும் கடுமழை மக்கள் அவதியில் அல்லல் பட்டு வருகின்றனர்.

தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட வைகாசி மாதம் இலங்கையில் நாடளாவிய ரீதியில் கடும் மழை பெய்து வருகிறது.

இந்தக் கடும் மழையில் சிக்கி பல கிராம பகுதியில் வெள்ளத்தில் மிதந்து வருகின்றன.

தென்னிலங்கை சிங்கள பகுதிகளிலும் இந்த மழை அதிகரித்து காணப்படுவதால், அங்கு பல கிராமங்கள் வெள்ளத்தில் மிதப்பதான தகவல் வந்து கொண்டிருக்கின்றன.

பல குளங்கள் நீர்நிலைகள் என்பன அதிக மழை வீழ்ச்சி காரணமாக நிரம்பி வழிகின்றன.

வான் கதவுகள் திறக்கப்பட வேண்டிய அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

வரும் நாட்களில் இந்த மலை மேலும் அதிகரித்தால் அந்த குளத்தினுடைய வாழ்வுகள் திறக்கப்படுகின்ற பொழுது, தாழ்நில பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கும் அபாயம் காணப்படுகின்றன.

தமிழர்கள் அழிக்கப்பட்ட முல்லி வாய்க்கால் நிகழ்வு இடம் பெற்றதற்கு பிற்பாடு தென்னிலங்கை உள்ளிட்ட பகுதிகள், கடும் வெள்ளத்தில் மிதந்து வருவதும் ,

மக்கள் சொல்லு என பெயருக்கு உள்ளாகி வருவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை வாகன இறக்குமதி ஜப்பான் கவலை
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை வாகனஇறக்குமதி ஜப்பான் கவலை

இலங்கை வாகனஇறக்குமதி ஜப்பான் கவலை

இலங்கை வாகனஇறக்குமதி ஜப்பான் கவலை இலங்கைக்கான வாகன இறக்குமதி தொடர்பில் ஜப்பான் கவலை தெரிவித்துள்ளது.

ஜப்பானிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்காக அறவிடப்படும் உயர் வட்டி வீதம் தொடர்பில்

இலங்கைக்கு ஜப்பான் தூதுவர்

இலங்கைக்கு ஜப்பான் தூதுவர் அகியோ இசெமாடா அண்மையில் இடம்பெற்ற வட்ட மேசை பேச்சுவார்த்தையின்போது தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்காவுக்கு ஜப்பானிலிருந்து கொண்டுவரப்படும் மின்சார வாகனங்களுக்காக விதிக்கப்படும் வட்டி வீதத்தையும் ஏனைய வாகன இறக்குமதிக்கான தடை கடந்த பெப்ரவரி மாதம் முதலாம் திகதியுடன் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து

இதுவரையில் 5,000 வரையான வாகனங்கள் கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தினூடாக நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

இறக்குமதித் தடை

அவ்வாறு இறக்குமதி செய்யப்பட்டிருந்த போதும் இறக்குமதித் தடை நீக்கப்பட்டதன் பின்னர் வாகனங்களின் விலை பெரிதும் அதிகரித்துள்ளதால் வாகனம் கொள்வனவு செய்வதற்கான

மத்திய வர்க்க மக்களின் கனவு நிராசையாகியுள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர் சங்கச் செயலாளர் பிரசாத் குலதுங்க தெரிவித்துள்ளார்.

நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட சுசுகி வேகன் ஆர் கார் 80 இலட்சம் ரூபாவிலிருந்து அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும்

கார் 100 இலட்சம் ரூபாவிலிருந்து அதிக விலைக்கு

டொயோடா யாரிஸ் கார் 100 இலட்சம் ரூபாவிலிருந்து அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் அவர் மேலும் சுட்டிக் காட்டியுள்ளார்.

மக்கள் அதிக விருப்பம் தெரிவிக்கும் சுசுகி படி வேன் தற்போதைய நிலைவரப்படி 70 இலட்சம் ரூபாவிலிருந்து 80 இலட்சம் ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாகவும்,

வெளிநாட்டு ஜப்பான் அல்ட்டோ வாகனமொன்று 60 இலட்சம் ரூபாவிலிருந்து அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உற்பத்தி வருடத்திலிருந்து 03 வருடங்களுக்கு பழைமையான வாகனங்களை மாத்திரமே நாட்டுக்கு இறக்குமதிசெய்ய முடியுமென்றாலும் வாகன இறக்குமதியின்போது

அதிகளான வரி

விதிக்கப்படும் அதிகளான வரி வீதத்தின் காரணமாக மோட்டார் வாகனங்களின் விலை இவ்வாறு அதிகரித்துள்ளதாகவும் தற்போது வரையில் வாகன இறக்குமதிக்கு தடைவிதிக்கப்பட்டபோது

மக்கள் மத்தியில் பிரபல்யமாக இருந்த சில வாகன மாதிரிகளை இறக்குமதி செய்யும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

டொயோடா எக்வா மோட்டார் வாகனத்தை நாட்டுக்கு இறக்குமதி செய்யும் அநேகமான இறக்குமதியாளர்களை இடைநிறுத் தியுள்ளதாகவும் டொயோடா பிரியஸ் மோட்டார் வாகனத்தைத் தொடர்ந்து இறக்குமதிசெய்ய முடியாமல் போயுள்ளது.

மத்தியதர மக்களின் வாகனக் கனவு தற்போதுவரை நிராசையாகியிருந்தாலும் இலங்கைச் சந்தைக்கு வருகைதந்துள்ள வாகனங்களை ஒரு சமூகத்தார் மாத்திரம் கொள்வனவு செய்துகொண்டிருப்பதால் வாகன விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளது.

பெரும் எண்ணிக்கையிலானவர்கள் நாட்டுக்குள் வாகனங்களை இறக்குமதி செய்வதால் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் வாகன மாதிரிகள் மற்றும்

குறைந்த விலைக்கு விற்பனையாகும் வாகன மாதிரிகளைக் குறிப்பிட்டு அடையாளப்படுத்த முடியாதென்று குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் புதிய வாகனங்களை விலைப் பட்டியலுக்கு உட்படுத்துவதற்கிருக்கும் பிரதான இணையதளத்துக்கமைய நேற்று முன்தினமாகும்போது இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும்

அல்ட்டோ வாகனத்தின் விலை 48 இலட்சம் ரூபா என்று குறிப்பிடப்பட்டுள்ளதுடன், சுசுகி வேகன் ஆர் ரக வாகனத்தின் விலை 66 இலட்சம் ரூபா என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோன்று, டொயோடா எக்வா ஹைப்ரிட் வாகனத்தின் விலை ஒரு கோடியே 38 இலட்சம் ரூபாவாகக் குறிப்பிடப்பட்டிருந்ததுடன், டொயோடா வெசல் ரக வாகனமொன்றின் விலை ஒரு கோடியே 65 இலட்சம் ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வாகனத்தின் விலை 05 கோடி ரூபா

அந்த இணையதளத் தகவல்களுக்கமைய, டெஸ்லா வை ரக மாதிரி மோட்டார் வாகனத்தின் விலை 05 கோடி ரூபா என்பதுடன் பீ.வை.டீ. எடோ 3 மோட்டார் வாகனத்தின் விலை ஒரு கோடியே 56 இலட்சம் ரூபாவென அறிவிக்கப்பட்டுள்ளது.

மர்சிடீஸ் பென்ஸ் சீ கிலாஸ் மாதிரி மோட்டார் கார் 4 கோடீயே 75 இலட்சம் ரூபா என்றும், மெஸ்டா சீ எக்ஸ் 5 மோட்டார் கார் 3 கோடி ரூபா என்றும் அந்த இணையதளம் அறிவித்துள்ளது.

இறக்குமதித் தடை நீக்கப்பட்டதன் பின்னர் வாகன விற்பனை தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள வாகன இறக்குமதியாளர்கள்,

தற்போதைய காலப்பகுதியில் மத்தியதர மக்கள் கொள்வனவு செய்ய விரும்பும் வாகன மாதிரிகளின் விற்பனையில் வீழ்ச்சியை அவதானிக்கக்கூடியதாக இருப்பதாகவும்,

அதன் காரணமாக அதிகம் விற்பனையாகும் வாகனங்களின் மாதிரிகளை அதிக எண்ணிக்கையில் இறக்குமதி செய்வதற்கு வாகன இறக்குமதியாளர்கள் ஆர்வம் செலுத்தி வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூடு
Posted in இலங்கை செய்திகள்

காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூடு

காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூடு

காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தடை செய்யப்பட்ட மதுபானங்கள் தொடர்பான முறைப்பாட்டை அடுத்து தெலிகட காவல்துறைக்குட்பட்ட பகுதியில் போலீசார் திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதன் பொழுது குறித்த போலீஸ் அதிகாரிகளை கண்ட மதுபான தயாரிப்பு நபர்கள் திடீரென போலீஸ் அதிகாரியை தாக்க முற்பட்ட பொழுது அவர் திடீர் துப்பாக்கி சூட்டு தாக்குதலை நடத்தினராம் .

இதன் பொழுது முப்பது வயதுடைய நபர் பலமான காயமடைந்த நிலையில் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்படுகின்ற பொழுது காலுக்கு கீழே முழங்காலுக்கு கீழே சூட்டு தாக்குதல் நடத்த வேண்டும் என்கின்ற விதி இருக்கிறது.

ஆனால் இலங்கை போலீசார் அவ்வாறு அதனை மேற்கொள்கிறார்களா என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காயப்பட்ட நபர் காலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆளும் அனுரா ஆட்சியில் தொடராக பல துப்பாக்கி விட்டு சம்பவங்கள் இடம்பெற்று பெருவதும் அதனால் பலர் பலியாகியும் காயமடைந்து வருகின்றனர்.

சட்ட ஒழுங்கு நிலையாக இருந்தால் ஏன் இவ்விதமான மதுபானங்கள் தயாரிக்கப்படுகிறது என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவிலிருந்து இலங்கைக்குள் நுழைந்தவர்கள் கைது
Posted in இலங்கை செய்திகள்

இந்தியாவிலிருந்து இலங்கைள் வந்தவர்கள் கைது

இந்தியாவிலிருந்து இலங்கைள் வந்தவர்கள் கைது

இந்தியாவிலிருந்து இலங்கைள் வந்தவர்கள் கைது ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை அறிவித்துள்ளது.

இந்தியாவிலிருந்து இலங்கைக்குள் சட்ட விரோதமான முறையில் நுளைத்த நாலு இலங்கையர் உள்ளிட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறை காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இவர்கள் கடல் வழியாக நுழைய முற்பட்ட பொழுது இந்த கைது இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை மற்றும் மன்னர் மாவட்டங்களைச் சேர்ந்த ஆண் பெண் மற்றும் இரு சிறு சிறுமிகள் என ,நால்வர் இலங்கையில் சட்ட விரோதமான முறையில் இந்தியாவிற்கு சென்ற நிலையில் ,இந்திய கடலோர காவல்துறையால் கைது செய்யப்பட்டு மண்டப முகாமில் தடுத்து வைக்கப்பட்டு இருந்தனர்.

இலங்கையில் குறித்த நால்வரும் இந்தியாவுக்கு சட்ட விவரமுறையில் யில்கடல்வழியாக வழியாக திரும்பி வந்துள்ளனர்.

அவ்வாறு வந்த பொழுது இவர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை காவல் படைகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் இருந்து கடல் வழியாக வல்வெட்டித்துறையை நோக்கி வந்தவர்களே இப்பொழுது கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்ட வருகின்றனர்.

நீதிமன்ற விசாரணையின் பின்னர் அவர்கள் விடுதலை செய்யப்படலாம் அல்லது சிறையில் வைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடல் வழியாக இந்தியாவில் இருந்து இலங்கைக்கு .இலங்கை இருந்து இந்தியாவுக்கும் செல்கின்ற மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தங்க கடத்தல் முறியடிப்பு
Posted in இலங்கை செய்திகள்

தங்க கடத்தல் முறியடிப்பு

தங்க கடத்தல் முறியடிப்பு

தங்க கடத்தல் முறியடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்கப் பிரிவு தெரிவித்துள்ளனர்.

வெளிநாடு ஒன்றிலிருந்து இலங்கைக்குள் கடத்தி வரப்பட்ட 21 மில்லியன் பெறுமதியான தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக நோக்கத்துடன் கடத்திவிடப்பட்ட இந்த தங்கங்கள் சுங்கப்பிரிவர் முயற்சியால் தடுக்கப்பட்டு அவை இப்பொழுது அரசு விடுமையாக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் 24 கரட் தங்கம் 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்ற நிலையில், இந்த பத்து மில்லியன் பெறுமதியான தங்கம் கடத்திவரப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நூதனமான முறையில் இந்த தங்கத்தை கடத்தி வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்.

அவர்கள் தற்பொழுது நீதிமன்றத்தில் பாரப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் இலங்கையில் இவ்வாறு கடத்தல் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.

இலங்கை கட்டுநாயக்க விமான தளம் ஊடாக நடத்தப்படும் கடத்தல் பல முறியடிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பித்து எனக்குப் பிடித்து
Posted in கவிதைகள்

பித்து எனக்குப் பிடித்து

பித்து எனக்குப் பிடித்து

பித்து எனக்குப் பிடித்து
நித்தம் உனை நினைத்து
சத்தமாக கவிபடிக்க
எத்தனிக்கிறேன்

பல நாள் கேட்ட குரல்
சில நாளா இனிக்கிறது
கலகலவெனும் சிரிப்பு
சலசலப்பை தருகிறது

உன் கதை கேட்காமல்
உன் கவி படிக்காமல்
என் இரவு தொடங்கவில்லை
என் கனவு முடியவில்லை

உன் சமூக தொண்டு
உன் தேசிய நோக்கம் கண்டு
மிரண்டு போகின்றேன்
துவண்டு விடாது தொடர் உன்பணி

அண்மை நாட் கவிதைகளில்
என்னை இவள் காண்கிறாள்
உண்மை அதுவென்றால்
நன்மை இது தொடர்ந்திடுவாள் ..

இப்படிக்கு
இவள் உன் கவிதை
நாயகி.

கடலில் மூழ்கி இறந்த இளைஞர்கள்
Posted in இலங்கை செய்திகள்

கடலில் மூழ்கி இறந்த இளைஞர்கள்

கடலில் மூழ்கி இறந்த இளைஞர்கள்

கடலில் மூழ்கி இறந்த இளைஞர்கள் நீர்கொழும்பு- வென்னப்புவ பகுதியில் உள்ள கடலில் நீராட சென்ற நான்கு இளைஞர்கள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (13) இடம் பெற்றதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.

நான்கு இளைஞர்களும் ஒன்றாக இணைந்து கடலில் நீராடிக் கொண்டிருந்த போது கடலலையில் அள்ளுண்டு சென்றுள்ளனர்.

அதனை தொடர்ந்து வென்னப்புவ பொலிஸார், கடற்படையினரின் உதவியோடு நால்வரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

சடலங்களாக மீட்கப்பட்ட மூவர் பொகவந்தலாவ சென் விஜயன்ஸ் தோட்டத்தை சேர்ந்தவர்கள் எனவும் மற்றுமொரு நபர் கொழும்பு பகுதியை சேர்ந்தவர்.

உதயகுமார் ஸ்ரீதரன் (வயது 17), ஸ்ரீகாந்த் சரண் ராஜ் (வயது 19), ஸ்ரீகாந்த் அஜித் குமார் (வயது 18) மற்றும் யூசுப் (வயது 27) ஆகியோரே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளன.

சடலங்களாக மீட்கப்பட்டவர்களில் ஸ்ரீகாந்த் சரண் ராஜ் மற்றும் ஸ்ரீகாந்த் அஜித் குமார் ஆகியோர் ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்கள் எனவும் உதயகுமார் ஸ்ரீதரன் உறவினர் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இந்த நால்வரில் இருவரின் சடலங்களே மீட்கப்பட்டுள்ளன. ஏனைய இருவரின் சடலங்களை தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன். சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை வென்னப்புவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உப்புக்கு மீண்டும் விலை ஏற்றம்
Posted in இலங்கை செய்திகள்

உப்புக்கு மீண்டும் விலை ஏற்றம்

உப்புக்கு மீண்டும் விலை ஏற்றம்

உப்புக்கு மீண்டும் விலை ஏற்றம் சந்தையில் உப்புக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு தற்போது அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்பட்ட உப்பு கையிருப்பு நாட்டிற்குள் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் இந்த நிலைமை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சில இடங்களில், ஒரு கிலோகிராம் உப்பு பாக்கெட் சுமார் 450-500 ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும் கூறப்படுகின்றது.

எவ்வாறாயினும், இறக்குமதி செய்யப்பட்ட உப்பு இருப்பு சந்தையை அடைந்தவுடன் இந்த நிலைமை சரியாகிவிடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், இறக்குமதி செய்யப்பட்ட உப்பு வருவதில் தாமதம் ஏற்பட்ட எதிர்காலத்தில் ஒரு பாக்கெட் உப்பு விலை மேலும் அதிகரிக்கும் என்றும் வியாபாரிகள் கூறுகின்றனர்.

இதனிடையே, தற்போதைய உப்பு தட்டுப்பாடு காரணமாக உப்பு இருப்புக்களை மறைத்து வைப்பவர்கள் கைது செய்யப்பட்டு, உப்பு இருப்புக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

உப்புக்கு செயற்கையான பற்றாக்குறையை உருவாக்கி அதிக விலைக்கு விற்பனை செய்யும் மோசடி நடப்பதாக முறைப்பாடுகள் வந்துள்ளதாகவும் நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

ஏற்கனவே உப்பு இருப்புக்களை மறைத்து வைத்திருப்பவர்களையும், அதிக விலைக்கு உப்பை விற்பனை செய்பவர்களையும் கண்டுபிடிக்க நாடு முழுவதும் சோதனைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரசபை கூறுகிறது.

இதற்கிடையில், வர்த்தகர்கள் தங்கள் கடைசி உப்பு இருப்பை தற்போது விற்பனை செய்து வருவதாகவும், மேலும் உப்பு இருப்பு எப்போது கிடைக்கும் என்பதை உறுதியாகக் கூற முடியாது என்றும் கூறுகின்றனர்.

தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவித்தல்
Posted in இலங்கை செய்திகள்

தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவித்தல்

தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவித்தல்

தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவித்தல் இலங்கைத் தேர்தல் ஆணைக்குழு விஷேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அவ் அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது,

உள்ளூராட்சி சபைகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தொடர்பான தகவல்களை இந்த வாரத்திற்குள் வழங்குமாறு அனைத்துக் கட்சிகள்

மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கு தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

உறுப்பினர்களின் பெயர்களை வர்த்தமானியில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஒவ்வொரு கட்சியும் வென்ற இடங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டிய விதம் குறித்து

தேர்தல் ஆணைக்குழு அனைத்துக் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கு எழுத்துப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அதற்கமைய, உள்ளூராட்சி சபைகளுக்கான உறுப்பினர்களின் விபரங்களை ஒரு வாரத்திற்குள் வழங்க வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு கட்சிகளுக்கு அறிவித்துள்ளது.

மேலும், பெரும்பான்மை அதிகாரம் கொண்ட உள்ளூராட்சி சபைகளுக்கான மேயர்கள், நகரசபை தலைவர்களின் பெயர்களையும் சமர்ப்பிக்குமாறும்

கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கும் தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

உள்ளூராட்சி சபைகளுக்கு தெரிவான உறுப்பினர்களின் பெயர்கள் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்ட பிறகு, பெரும்பான்மை அதிகாரங்களைப் பெற்ற உள்ளூராட்சி சபைகளுக்கான மேயர்கள்,

நகரசபை தலைவர்களின் பெயர்கள் உள்ளடக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்படும் எனவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தலவாக்கலையில் கவிழ்த்த கார்
Posted in இலங்கை செய்திகள்

தலவாக்கலையில் கவிழ்த்த கார்

தலவாக்கலையில் கவிழ்த்த கார்

தலவாக்கலையில் கவிழ்த்த கார் அதிகரிக்கு பீதி விபத்துக்கள் சாரதியின் அலட்சியம் பயணிகள் அவதி தொடரும் விபத்தை தடுப்பது யார்.

இன்று தளவாக்கலை பகுதியில் கார் ஓன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக கவிழ்ந்துள்ளது ..

நுவரலியாவிலிருந்து தலவாக்கலை நோக்கி அதி வேகமாக பயணித்த கார், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து மலை ஓமோதி தலைகீழாக கவிழ்ந்துள்ளது .

மலைப்பகுதியில் அதி வேகமாக கார்களைச் செலுத்தி சென்ற சாரதியே இவ்வாறு காரை கவிழ்த்த நிலையில் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார்.

இந்தக் காரினை சட்டத்தரணி ஒருவரை ஓட்டிச் சென்றுள்ளதாகவும் அவ்வேளை அவருக்கு பலமான பாதிப்புகள் இல்லாமல் தப்பித்துக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார் தலைகீழாக கவிழ்ந்த போதும் பல மணக்காயங்களுடன் தப்பித்துக் கொண்டார்.

நாட்டினுடைய நீதி நிர்வாகத்தை கட்டி காப்பதாக சொல்கின்ற இவ்வாறான சட்டத்தரணிகளை வீதி விதிமுறைகளை மீறி வேகமாக வாகனங்களை செலுத்துவது இதன் ஊடாக அம்பலப்பட்டுள்ளது.

இலங்கையில் ஆண்டுதோறும் 36,000 வாகன விபத்துக்கள் இடம்பெறுகின்றன.

நான்குக்கு மேற்பட்டவர்கள் பலியாகியும் 8க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்து வருவதான புள்ளி விவரங்கள் சொல்கின்றன.

அவ்வாறான நிலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

தொடரும் அதிகமான வாகன விபத்துக்களை இலங்கை அரசு எவ்வாறு தடுக்க போகிறது? அதற்கு மாற்று நடவடிக்கை என்ன..?

நாள்தோறும் பலியாகும் பல மக்களது உயிர்களை எவ்வாறு காப்பாற்ற போகிறார்கள், மீதி விபத்துக்களை எவ்வாறு தடுக்க போரால் என்பதே மீளவும் மீளவும் கேள்விகளாக எழுந்து நிற்கிறது.

பேருந்தில் பயணிக்க அச்சம் வீதியில் பயணிக்க அச்சம் அப்படியானால் ,மக்கள் என்ன செய்வது கேள்விகளோடு பீதியோடு அலைய வேண்டிய சூழலை இந்த விபத்துக்கள் ஏற்படுத்திக் காட்டுகின்றன.

யாழில் தமிழினப் படுகொலை ஊர்தி
Posted in இலங்கை செய்திகள்

யாழில் தமிழினப் படுகொலை ஊர்தி

யாழில் தமிழினப் படுகொலை ஊர்தி

யாழில் தமிழினப் படுகொலை ஊர்தி தமிழினப் படுகொலை நினைவுகூரல் உலகெங்கும் தமிழர்வாழ் பிரதேசங்களில் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், தமிழினப் படுகொலையைச் சித்திரிக்கும் விதமாக யாழ்ப்பாணம் நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் இருந்து இன்றைய தினம் ஊர்தி பவனி ஆரம்பமானது.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரம் தற்போது இடம்பெற்றுவரும் நிலையில் இந்த ஊர்தி பவனி

ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் சென்று இறுதியாக முள்ளிவாய்க்காலை சென்றடையவுள்ளது.

“தமிழினப் படுகொலைக்கு சர்வதேச குற்றவியல் விசாரணை வேண்டும்”, “தேசம், இறைமை, சுயநிர்ணயம் அங்கீகரிக்கப்பட்ட சமஸ்டி வேண்டும்” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகள் கட்டப்பட்டு

இனப்படுகொலை நினைவுத்தூபி வைக்கப்பட்டுள்ள நிலையில், வீதிகளில் பயணித்த பொதுமக்கள் அஞ்சலி செலுத்துகின்றதை பார்க்க கூடியதாக இருக்கின்றது.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் போது நம் மக்கள் கொத்துக் கொத்தாக உயிரிழந்தமை வரலாற்றில் மறக்க முடியாது.

ஒவ்வொரு வருடமும் நினைவேந்திக்கொண்டே இருக்கின்றோம். இம்முறை கனடாவில் இனப்படுகொலை தூபி திறந்து வைக்கப்பட்டமை இலங்கை அரசுக்கு பெரும் தலையிடியாக மாறி உள்ளது.

இனப்படுகொலை நினைவையொட்டி இவ் வாரம் முழுவதும் ஆங்காங்கே முள்ளிவாய்க்கால் கஞ்சி கொடுக்கப்படும் காட்சிகளையும் காணக்கூடியதாக இருக்கின்றது.

நேரில் வந்து விடு
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

நேரில் வந்து விடு

நேரில் வந்து விடு

நித்திரையில் நான் விழிக்க
சித்திரையை தேடுகிறேன்
முத்திரையை பதித்த கவி
முகத்திரையை பார்க்கிறேன்

சத்தம் இல்லா தூங்கிவிட
சத்தியமா முடியவில்லை
செத்த பிணம் ஆகிவிட்டேன்
சேதி சொல்ல யாரும் இல்லை

இத் தளத்தில் வந்த கவி
இதயமதை துளைத்ததுவே
இத் துயரை தந்த கவி
இதயமதை ஏற்றிடுமோ

பொற் கவியை நான் படிக்க
போதும் நேரம் வந்திடுமோ
நித்திரையில் நான் விழிக்க
நிஜம் வந்து கூடிடுமோ

சத்தியமாய் சொல்லி விடு
சாதனைகள் செய்திடுவேன்
செத்துவிட முன்னே நான்
சொர்க்கமதை கண்டிடுவேன் .

ஆக்கம் -15-05-2025
வன்னி மைந்தன்

( பதில் கவி }

அரச அதிகாரிகள் மீது தாக்குதல்
Posted in இலங்கை செய்திகள்

அரச அதிகாரிகள் மீது தாக்குதல்

அரச அதிகாரிகள் மீது தாக்குதல்

அரச அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறையினர் தெரிவிக்கின்றனர் .

குருநாகல் பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றை சோதனை செய்யச் சென்ற நுகர்வோர் விவகார அதிகார சபை அதிகாரிகள் இருவர் மீது, அந்த கடையில் நின்றவர்கள் திடீர் தாக்குதலை நடத்தி இருக்கிறனர் .

இந்த தாக்குதல் குறித்து வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் .மற்றும் அவரது மகன் ஆகியோர் தற்பொழுது போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட வர்த்தகநிலையத்தில் உரிமையாளர் தற்போது சேவையில் இருக்கும் காவல்துறை அதிகாரி என காவல்துறையினர் தெரிவித்த வருகின்றனர் .

இங்கு உள்ள கடையில் காலாவதியான பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக .கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து ,சோதனை நடத்த சென்ற பொழுது, இந்த காவல்துறை அதிகாரி திடீர் தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

காவல்துறையில் இருப்பவர்களே நாட்டினுடைய சட்ட திட்டங்களை மதிக்காது, தான் தோன்றி த்தனமாக ஈடுபட்டு, மக்கள் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் பொருட்களை ,விற்பனை செய்வது எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியுமென மக்கள் மன்றம் கேள்வி எழுப்பி நிக்கிறது .

இந்த விடயம் பெரும் அச்சமடைய வைத்துள்ள செயற்பாடாக பார்க்கப்படுகிறது.

இலங்கையில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது என்பதையும் ,மக்களும் அந்த சட்டங்களை கடைப்பிடிக்க மறுத்து வருகின்றனர் என்பதையும், அரச அதிகாரிகளும் அதனை கடைப்பிடிக்க மறுக்கின்றனர் என்பதையும்

இந்த கடையினுடைய உரிமையாளராக காவல்துறை அதிகாரி செயல்படும் அவர்கள் அரசு அதிகாரியை தாக்கியதிலிருந்து காண முடிகிறது.