Tag: ஆணைக்குழு
லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் சமல் ராஜபக்ஷ
லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் சமல் ராஜபக்ஷ
லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் சமல் ராஜபக்ஷ வாக்குமூலம் அளித்துள்ளார் .
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ இன்று (டிசம்பர் 1) காலை லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில்
நடைபெற்று வரும் விசாரணை தொடர்பாக வாக்குமூலம் அளிக்க வந்தார்.
மகிந்த குடும்பம் மிக பெரும் லஞ்ச ஊழலில் ஈடுபட்டத்தை மேற்படி விடயம் அம்பல படுத்தியுள்ளது .
தொடராக நடத்த படும் கைது வேட்டை
தொடராக நடத்த படும் கைது வேட்டை என்பது மேற்படி விடயங்களை காண்பித்துள்ளது .
தமது ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழுவதை தடுக்கவே தற்போது எதிர் காட்சிகள் மற்றும் கடந்த கால ஆண்டவர்கள் மீது அனுரா அரசு கண்துடைப்பு
நடவடிக்கையை மேக்ரோண்டு வருவதை மேற்படி விடயங்கள் எடுத்து கடடுகின்றன .
- லெபனானில் இஸ்ரேலிய இராணுவ நிலையைத் தாக்க ஹிஸ்புல்லா முயற்சி

- தென் கொரியா 270 மில்லியன் பீப்பாய் எண்ணெயைப் பெற்றுள்ளது

- புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்

- புத்தாண்டில் இருவர் படுகொலை

- புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன

- இந்திய கடலில் மூழ்கிய அகதி கப்பல் 250 பேர் மாயம்

- புட்டால சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலி

- கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம் நாமல்

- ஈரானின் கடல்வழி வர்த்தகத்தை அமெரிக்கா நிறுத்தியது

- வட கொரியா தனது அணு ஆயுதத் திறனை அதிகரித்து வருவதாக ஐ.நா. கண்காணிப்பு அமைப்பு கூறுகிறது.

- 200க்கும் மேற்பட்ட ஈரானிய கடற்படை வீரர்கள் இலங்கையிலிருந்து புறப்பட்டனர்

- யாழில் சடலம் மீட்பு

- அமெரிக்க இராணுவ ஆதரவைச் சார்ந்திருப்பதைக் குறைக்க ஸ்வீடன் அழைப்பு

- வளைகுடா நாடுகளின் இறையாண்மையை மதிக்க வேண்டும் என சீன

- இன்று வரையறுக்கப்பட்ட பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள்

மைத்திரிபால லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜரானார்
மைத்திரிபால லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜரானார்
மைத்திரிபால லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜரானார் ,முன்னாள் ஜனாதிபதி லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜரானார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று காலை வாக்குமூலம் அளிக்க லஞ்ச ஒழிப்பு அல்லது ஊழல்
குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் (CIABOC) ஆஜரானார்.
விசாரணையை மேற்கொண்டு வரும் அதிகாரிகள்
விசாரணையை மேற்கொண்டு வரும் அதிகாரிகள் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, முன்னாள் ஜனாதிபதி இன்று காலை ஆணைக்குழுவிற்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டது.
தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவித்தல்
தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவித்தல்
தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவித்தல் இலங்கைத் தேர்தல் ஆணைக்குழு விஷேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அவ் அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது,
உள்ளூராட்சி சபைகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தொடர்பான தகவல்களை இந்த வாரத்திற்குள் வழங்குமாறு அனைத்துக் கட்சிகள்
மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கு தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
உறுப்பினர்களின் பெயர்களை வர்த்தமானியில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஒவ்வொரு கட்சியும் வென்ற இடங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டிய விதம் குறித்து
தேர்தல் ஆணைக்குழு அனைத்துக் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கு எழுத்துப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அதற்கமைய, உள்ளூராட்சி சபைகளுக்கான உறுப்பினர்களின் விபரங்களை ஒரு வாரத்திற்குள் வழங்க வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு கட்சிகளுக்கு அறிவித்துள்ளது.
மேலும், பெரும்பான்மை அதிகாரம் கொண்ட உள்ளூராட்சி சபைகளுக்கான மேயர்கள், நகரசபை தலைவர்களின் பெயர்களையும் சமர்ப்பிக்குமாறும்
கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கும் தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
உள்ளூராட்சி சபைகளுக்கு தெரிவான உறுப்பினர்களின் பெயர்கள் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்ட பிறகு, பெரும்பான்மை அதிகாரங்களைப் பெற்ற உள்ளூராட்சி சபைகளுக்கான மேயர்கள்,
நகரசபை தலைவர்களின் பெயர்கள் உள்ளடக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்படும் எனவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஆணைக்குழுவுக்கு வந்தார் ரணில்
ஆணைக்குழுவுக்கு வந்தார் ரணில்
ஆணைக்குழுவுக்கு வந்தார் ரணில் ,பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க மீது அளித்த வாக்குமூலம் தொடர்பாக மணிக்கு இலஞ்சம் அல்லது
ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சற்றுமுன்னர் ஆஜரானார்.
பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ஊழல் வழக்கு தொடர்பாக அவர் அளித்த வாக்குமூலம் தொடர்பாக, ஏப்ரல் 17ஆம் திகதி இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய
சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுற்கு ரணில் விக்ரமசிங்க முதலில் அழைக்கப்பட்டார்.
முந்தைய சம்மனுக்கு பதிலளிக்கும் விதமாக, ரணில் விக்ரமசிங்க, ஆணையத்தில் ஆஜராகத் தயாராக இருப்பதாகவும், புத்தாண்டு விடுமுறை காலத்தில் தனது வழக்கறிஞர்கள் கொழும்பில் இருக்க மாட்டார்கள் என்பதால்
வேறு திகதியைக் கோருவதாகவும் குறிப்பிட்டிருந்தார். அதனடிப்படையில், இன்று (28) அவருக்கு தினம் வழங்கப்பட்டிருந்தது. அதனடிப்படி ரணில் விக்கிரமசிங்க ஆஜரானார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் காலக்கெடு இன்றுடன் நிறைவு
தேர்தல்கள் ஆணைக்குழுவின் காலக்கெடு இன்றுடன் நிறைவு
தேர்தல்கள் ஆணைக்குழுவின் காலக்கெடு இன்றுடன் நிறைவு 2024 பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளை வழங்குவதற்கான காலக்கெடு இன்று (06) நள்ளிரவுடன் முடிவடைவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேர்தலில் போட்டியிட்ட 8361 வேட்பாளர்களில் 1985 பேர் மட்டுமே அந்த அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளதாக அதன் தலைவர் ஆர்.எம்.எல்ஏ.ரத்நாயக்க குறிப்பிட்டார்.
குறித்த காலத்திற்குள் உரிய அறிக்கைகளை வழங்காத நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் உள்ளுராட்சி சபை தேர்தலை விரைந்து நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்தார்.
மற்றுமொரு தேர்தலுக்கு தயாராகும் தேர்தல் ஆணைக்குழு
மற்றுமொரு தேர்தலுக்கு தயாராகும் தேர்தல் ஆணைக்குழு
மற்றுமொரு தேர்தலுக்கு தயாராகும் தேர்தல் ஆணைக்குழு ,பொதுத் தேர்தல் முடிவடைந்ததையடுத்து இம்மாதம் 27ஆம் திகதி தேர்தல் ஆணைக்குழு மீண்டும் கூட உள்ளது.
இச்சந்திப்பில் உள்ளூராட்சி தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடப்பட உள்ளதெனவும் தற்போது, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பாக நீதிமன்ற உத்தரவும்
வழங்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பில் கலந்துரையாடுவதே இந்த சந்திப்பின் முக்கிய நோக்கமெனவும் தெரிவித்துள்ளது
தேசியப்பட்டியல் எம்.பிகள் குறித்து ஆணைக்குழுவின் விளக்கம்
தேசியப்பட்டியல் எம்.பிகள் குறித்து ஆணைக்குழுவின் விளக்கம்
தேசியப்பட்டியல் எம்.பிகள் குறித்து ஆணைக்குழுவின் விளக்கம் ,தேசியப் பட்டியலில் இருந்து 10ஆவது பாராளுமன்றத்திற்கு பரிந்துரைக்கப்பட்ட நபர்களின் பெயர்களை சில கட்சிகள் இன்னும் அனுப்பவில்லை என, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி, சில கட்சிகள் வழங்கிய பெயர்களை அரசாங்க அச்சகத்திற்கு அனுப்பி வைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, தொகுதி மட்டத்தில் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கிய வர்த்தமானி
அறிவித்தலை வெளியிடுவதற்கு உரிய பெயர்கள் அரசாங்க அச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
மேலும், தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த வேட்பாளர்களைத் தவிர வேறு நபர்களை தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு நியமிக்க முடியாது எனவும், தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேர்தல் ஆணைக்குழுவில் விசேட சந்திப்பு
தேர்தல் ஆணைக்குழுவில் விசேட சந்திப்பு
தேர்தல் ஆணைக்குழுவில் விசேட சந்திப்பு மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் ஆணையாளர்கள் இன்று (06) தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலின் செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக குறித்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான நடவடிக்கைகள் சம்பந்தமாக விரிவாக ஆராயும் வகையிலேயே மேற்படி பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, ராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் செயலகத்தில் இன்று (06) இடம்பெறவுள்ள மேற்படி பேச்சுவார்த்தையில் அனைவரும்
பங்கேற்கவேண்டுமென, ஆணைக்குழுவினால் அனைத்து உதவி தேர்தல் ஆணையாளர்கள் மற்றும் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசேட ஜனாதிபதி ஆணைக்குழு
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசேட ஜனாதிபதி ஆணைக்குழு
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பக்கங்கள் காணாமல் போனதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் அரசாங்கம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத், புதன்கிழமை (08) தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த மாநாட்டில் அவர் கூறுகையில், விசாரணைகளின் முடிவுகள் விரைவில் வெளியாகும்.
அந்த பக்கங்கள் எவ்வாறு காணாமல் போயின என்பதும், ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் அனைத்து பக்கங்களும் அப்படியே உள்ளதா என்பதும் விசாரணைகளின் மூலம் கண்டறியப்படும் என்றார்.
தேர்தல்கள் ஆணைக்குழு பொலிஸாருக்கு அவசர அறிவிப்பு
தேர்தல்கள் ஆணைக்குழு பொலிஸாருக்கு அவசர அறிவிப்பு
தேர்தல்கள் ஆணைக்குழு பொலிஸாருக்கு அவசர அறிவிப்பு ,ஜனாதிபதி வேட்பாளர்களை விளம்பரப்படுத்தும் வகையில் வாகனங்களில் ஒட்டப்பட்டுள்ள அனைத்து ஸ்டிக்கர்களையும் உடனடியாக அகற்றுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
1981 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க ஜனாதிபதி தேர்தல் சட்டத்தின் 74 ஆவது பிரிவின் கீழ் அது குற்றமாகும் என ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
தனியார் பஸ்கள், முச்சக்கர வண்டிகள் உள்ளிட்ட தனியார் வாகனங்களில் ஜனாதிபதி வேட்பாளர்கள் மற்றும் கட்சிகளை விளம்பரப்படுத்தும் அடையாளங்கள், புகைப்படங்களுடன் கூடிய ஸ்டிக்கர்கள், கொடிகள் போன்றவற்றை காட்சிப்படுத்துவது தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
குறித்த ஸ்டிக்கர்களை அகற்றுவதற்கு அனைத்து பொலிஸ் அதிகார பிரிவுகளையும் உள்ளடக்கிய வகையில் அவசர சோதனைகளை மேற்கொள்ளுமாறும் தேர்தல்கள் ஆணைக்குழு பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இதுவரை 3,041 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அந்த முறைப்பாடுகளில் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பாக 2,947 முறைப்பாடுகளும் வன்முறைச் செயல்கள் தொடர்பாக 25 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன.
இதேவேளை, எதிர்வரும் 21ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளமையினால், எதிர்வரும் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளும் மூடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
வாக்கு எண்ணும் மையங்களாகப் பயன்படுத்தப்படும் பாடசாலைகளை தேவைக்கேற்றவாறு மூடுவதற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் சட்ட ஆணைக்குழுவின் காலம் நீடிப்பு
தேர்தல் சட்ட ஆணைக்குழுவின் காலம் நீடிப்பு
தேர்தல் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான பரிந்துரைகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவிடம் இறுதி
அறிக்கையை சமர்பிப்பதற்கான கால அவகாசத்தை அரசாங்கம் நீட்டித்துள்ளது.
அந்தக் குழுவின் பரிந்துரைகளை ஏப்ரல் 15ஆம் திகதிக்கு முன் அளிக்க வேண்டும் என்று முன்பு தெரிவிக்கப்பட்டது. இதனால் மேலும் இரண்டு
மாதங்கள் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் ஜூன் 15ம் திகதி அறிக்கை கையளிக்கவேண்டும்.






















