Tag: ஊர்தி
யாழில் தமிழினப் படுகொலை ஊர்தி
யாழில் தமிழினப் படுகொலை ஊர்தி
யாழில் தமிழினப் படுகொலை ஊர்தி தமிழினப் படுகொலை நினைவுகூரல் உலகெங்கும் தமிழர்வாழ் பிரதேசங்களில் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், தமிழினப் படுகொலையைச் சித்திரிக்கும் விதமாக யாழ்ப்பாணம் நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் இருந்து இன்றைய தினம் ஊர்தி பவனி ஆரம்பமானது.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரம் தற்போது இடம்பெற்றுவரும் நிலையில் இந்த ஊர்தி பவனி
ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் சென்று இறுதியாக முள்ளிவாய்க்காலை சென்றடையவுள்ளது.
“தமிழினப் படுகொலைக்கு சர்வதேச குற்றவியல் விசாரணை வேண்டும்”, “தேசம், இறைமை, சுயநிர்ணயம் அங்கீகரிக்கப்பட்ட சமஸ்டி வேண்டும்” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகள் கட்டப்பட்டு
இனப்படுகொலை நினைவுத்தூபி வைக்கப்பட்டுள்ள நிலையில், வீதிகளில் பயணித்த பொதுமக்கள் அஞ்சலி செலுத்துகின்றதை பார்க்க கூடியதாக இருக்கின்றது.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் போது நம் மக்கள் கொத்துக் கொத்தாக உயிரிழந்தமை வரலாற்றில் மறக்க முடியாது.
ஒவ்வொரு வருடமும் நினைவேந்திக்கொண்டே இருக்கின்றோம். இம்முறை கனடாவில் இனப்படுகொலை தூபி திறந்து வைக்கப்பட்டமை இலங்கை அரசுக்கு பெரும் தலையிடியாக மாறி உள்ளது.
இனப்படுகொலை நினைவையொட்டி இவ் வாரம் முழுவதும் ஆங்காங்கே முள்ளிவாய்க்கால் கஞ்சி கொடுக்கப்படும் காட்சிகளையும் காணக்கூடியதாக இருக்கின்றது.


திருகோணமலை வந்ததது சம்பந்தன் ஊர்தி
திருகோணமலை வந்ததது சம்பந்தன் ஊர்தி
திருகோணமலை வந்ததது சம்பந்தன் ஊர்தி ,திருகோணமலைக்கு சம்பந்தன் உடைய பூத உடல் வந்தடைந்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த பூத உடலானது தற்பொழுது சம்பந்தன் உடைய ஊரான திருகோணமலைக்கு எடுத்த வரப்பட்டுள்ளது.
தமிழ் அரசியல்வாதிகளின் மூத்த அரசியல்வாதி சம்பந்தன்
இலங்கை தமிழ் அரசியல்வாதிகளின் மூத்த அரசியல்வாதியாகவும், வயது முதிர்ந்த அரசியல்வாதியாக விளங்கியவர் இன்று உயிரை இழந்து இந்த நாட்டை விட்டு சென்றுள்ளார் .
திரு இரா ,சம்பந்தன் அவர்களுடைய உடல் சொந்த ஊரான திருகோணமலைக்கு எடுத்துவரப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது .
இவரது பூத உடலுடன் சுமந்திரன் உள்ளிட்டவர்கள் காணப்பட்டிருந்தனர்.
தமிழ் மக்களுக்கான பாரிய அளப்பரிய சேவைகளை செய்ததாகவும் அதனால் அவர் மக்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்து உள்ளார் எனவும்
இலங்கை வரலாற்றில் எதிர்க்கட்சியாக இருந்து சாதனை படைத்த மிகவும் திறமை வாய்ந்த ஒருவராக சம்பந்தன் காணப்படுவதாக அவர் சார்ந்த நபர்கள் தெரிவிக்கின்றனர் .
ஆனால் அவர் சார்பற்ற மக்களும் அவருக்கு எதிரான பல்வேறுபட்ட குற்றச்சாட்டுகளையும் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர் .
அரசமரியாதையுடன் அரச பாதுகாப்புடன் பல்வேறுபட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது இ.
திலிருந்து யார் பக்கம் இருந்து செயல்பட்டார் என்பது தொடர்பாகவும் எவ்வாறான அரசியலில் அவர் இருந்தார் என்பது தொடர்பாகவும் ,
அவர் இறந்த பொழுதும்பல்வேறுபட்ட தகவல்கள் இப்படி வெளியாகி வருகின்றனது .
தமிழ் மக்களின் அரசியல்வாதி
எது எப்படியோ தமிழ் மக்களின் அரசியல்வாதியாக திகழ்ந்துஇன்று மறைந்துள்ள சம்பந்தன் , தமிழீழ விடுதலைப் புலிகளினால், தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சி என்று உருவாக்கப்பட்டு அதற்கு தலைவராக அவர் நியமிக்கப்பட்டிருந்தார் .
ஆதலால் அவரது உடலுக்கு மக்கள் புலிகளினால் உருவாக்கப்பட்ட இவர் கூட்டமைப்பின் தலைவராக விளங்கியதன் காரணமாக,
பல ஆயிரக்கணக்கான மக்கள் அவருக்கு நேரடியாக வந்து மலர்களை செலுத்தி நமது இறுதி வணக்க அஞ்சலியை செலுத்தி கொண்டிருப்பதும் இங்கே குறிப்பாக குறிப்பிடத்தக்க விடயமாகும் .
- பெண்ணை தாக்கி தலை முடியை வெட்டிய கொடூரம்

- வெள்ளை மாளிகையில் நடைபெற்ற பௌத்த சமய நிகழ்ச்சி

- மே மாதம் முழுவதும் தடையற்ற எரிவாயு விநியோகத்திற்கு லிட்ரோ உறுதி

- எரிசக்தி அமைச்சர் செயலாளரின் ராஜினாமா ஒரு கண் துடைப்பு

- ஒரு பேரல் டீசல் 286 அமெரிக்க டாலர்

- இன்று பல மாகாணங்களில் பிற்பகல் மழை

- மத்திய கிழக்கு மோதல்களுக்குப் பிறகு முதல் கச்சா எண்ணெய் கப்பல் இன்று வருகை

- 1 ஆம் வகுப்பு கல்வி சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவது குறித்து அமைச்சு அறிவிப்பு

- அஹுங்கல்லாவில் துப்பாக்கிச் சூடு

- புத்தாண்டுக்குப் பிறகு கொழும்பு திரும்பும் பயணிகளுக்காக சிறப்புப் பேருந்து சேவை



















