Tag: ıraq
அமெரிக்காவே உடனே இராணுத்தை வெளியேற்று – ஈராக் அழுத்தம்
அமெரிக்காவே உடனே இராணுத்தை வெளியேற்று – ஈராக் அழுத்தம்
ஈராக்கில் இருந்து உடனடியாக அமெரிக்கா இராணுவம் முற்றாக விலக வேண்டும் என ஈராக்கின் அதிபர் அடெல்
அப்துல்-மஹ்தி அமெரிக்கா செயலர் பொம்பியோவுக்கு தொலைபேசியில் கூறியுள்ளார் .
ஈராக்கிய பாராளுமன்றம் வழங்கிய கட்டளைக்கு இணங்க இராணுவத்தை ஈராக்கில் இருந்து விலக்கிடும்
பொறிமுறையை உருவாக்கி அதன் ஊடாக அங்கிருந்து அகற்றும் படி நேரடியாகவே தொலைபேசி மூலம் இடித்து உரைத்துளளார் .
ஈரான் விமான விபத்தை திசையை திருப்பி அமெரிக்கா அரசியல் செய்து வரும் நிலையில் அதனை புரிந்து கொண்ட
ஈராக்கிய அதிபர் தமது நிலைப்பாட்டை தெளிவு படுத்தி இந்த விடயத்தை அழுத்தமாக தெரிவித்துள்ளார் .
ஈராக்கில் உள்ள விமான தளங்களை நாம் புனரமைத்து நவீன மய படுத்தி விட்டோம் ,எனவே அதற்கு பல பில்லியன் டொலர்கள் செலவிட பட்டுள்ளது .
அதனை ஈராக் எமக்கு செலுத்தினால் நாம் அங்கிருந்து வெளியேறுவோம் என புதுக் கதையை அமெரிக்கா அவிழ்த்து விட்டுள்ளது .
இதன் உள்ளார்ந்த நோக்கம் நாம் அங்கிருந்து வெளியேற மாட்டோம் என்பதே .
அமெரிக்காவே உடனே இராணுத்தை வெளியேற்று – ஈராக் அழுத்தம்
அமெரிக்காவின் இந்த போக்கு ஈராக்கிற்கு சீற்றத்தை ஏற்படுத்திய நிலையில் இந்த தொலைபேசி உரையாடல்
மூலம் திட்ட வட்டமாக தமது நிலை பாட்ட்டில் இறுக்கத்தோடு தெரிவித்துள்ளார் .
ஆளும் ஈராக்கிய அதிபரின் இந்த செயல் அமெரிக்காவுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள நிலையில்
,அங்குள்ள அமெரிக்கா மற்றும் அதன் நேச நட்டு படைகள் இருப்பு கேள்வி குறியாகியுள்ளதுடன்
மத்திய கிழக்கில் இருந்து அமெரிக்காவின் பிடி தளரும் நிலை ஏற்பட்டுள்ளது .
எமது நாடு பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனின் எமது பிராந்தியத்தில் அமெரிக்கா படைகள் நிற்க லாகாது என
ஈரான் தொடர்ந்து கூறி வருவதுடன் எமது தாக்குதல் தொடரும் எனவும் அறிவித்துள்ளது .
சமாதானமாக செல்வோம் வாருங்கள், நிபந்தனையற்ற பேச்சுக்கு தாம் தயார் என அமெரிக்கா வாலாட்டி ஈரானிடம் பணிந்து செல்வதற்கு காரணம் ,மத்திய கிழக்கில் ஈரான்
,ரசியா பிடிகள் இறுக்கம் பெற போகின்றது என்பதும் ,தமது பொருளாதாரத்திற்கு இவை பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்பதும் தான் .
2040 ஆண்டுக்கு பின்னரே ஐரோப்பாவில் எரிபொருள் வாகனங்கள் பாவனையில் இருந்து நீக்க படுகிறது, எனவே
எதிர் வரும் 20 ஆண்டுகளுக்கு எரிபொருள் தேவை ஐரோப்பாவுக்கு தேவை படுகிறது .
அதன் பின்னர் வேண்டும் எனின் அமெரிக்கா,மற்றும் நேட்டோ படைகள் இந்த மத்திய கிழக்கில் தமது போரை
தொடுத்து அந்த நாடுகளை இல்லாது அழிக்கும் செயலில் தீவிரமாக செயல் படும் என்பதே அரசியல் நிகழ்வுகளில் நிரலாக உள்ளது .
- வன்னி மைந்தன் –

ஈராக்கில் இருந்து டென்மார்க்,கனடா இராணுவம் ஓட்டம் – நெருக்கடியில் அமெரிக்கா
ஈராக்கில் இருந்து டென்மார்க்,கனடா இராணுவம் ஓட்டம் – நெருக்கடியில் அமெரிக்கா
ஈராக்கில் உள்ள இரண்டு விமான தளங்களை இலக்கு வைத்து ஈரான் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது ,இந்த தாக்குதலை அடுத்து தற்பொழுது ஈராக்கில் உள்ள
Iraqi al-Asad இராணுவ விமான தள பகுதியில் நிலை கொண்டுள்ள டென்மார்க் படையின் 120 இராணுவத்தில்
நாற்பது இராணுவம் அங்கிருந்து குவைத்துக்கு பாதுகாப்பு கருதி தற்காலிகமாக இடம் மாற்றம் செய்ய படுகின்றனர் .
அதுபோலவே குறித்த முகாமில் நிலை கொண்டுள்ள கனடாவின் 500 இராணுவத்தினர் குவைத்துக்கு அவசரமாக பாதுகாப்பு கருதி இடமாற்றம் செய்ய படுகின்றனர்
அமெரிக்கா படைகளை உறங்க விடமாட்டோம் என சூளுரைத்து ஈரான் தொடர் தாக்குதலைகளை இடைவிடாது நடத்திய வண்னம் உள்ளது ,
மேலும் ஈரான் மாற்றும் அதன் ஆதரவு படைகள் எதிர் வரும் நாட்களில் மேலும் தாக்குதலை அதிகரிக்க கூடும் என்ற
உளவுத் தகவளின் அடிப் படையில் மேற்படி நாட்டு படைகள் அங்கிருந்து அவசரமாக அகற்ற படுகின்றனர் .
ஈராக்கில் இருந்து டென்மார்க்,கனடா இராணுவம் ஓட்டம் – நெருக்கடியில் அமெரிக்கா
இவ்வாறு பல் நாட்டு படைகள் அமெரிக்காவை கைவிட்டு ஓட்டம் பிடிக்கையில் அமெரிக்கா படைகள் தனித்து விடப்படும் சூழல் இறுக்கம் அடைகிறது ,அமெரிக்கா
படைகள் தனிமை படுத்தி விட்டால் அவர்கள் மீது இலகுவாக தாக்குதல் தொடுக்கலாம் என்பது ஈரானின் கணிப்பாக உள்ளது .
இந்த பல் நாட்டு படையினரின் அந்தர் பெல்ட்டி பின்வாங்கல் அமெரிக்காவை தனிமை படுத்தி தவிக்க விடும் செயலாக மாற்றம் பெறுகிறது .
ஈரான் பகுதியில் வீழ்ந்து நொறுங்கிய உக்கிரேன் பயணிகள் விமானத்தில் 63 கனடா நாட்டவர்கள் பலியாகினர் .
அதன் எதிரொலியும் இதற்கு ஒரு காரணமாக அமைந்துள்ளது ,இந்த விமானம் ஈரானால் சுட்டு வீழ்த்த
பட்டு இருந்தால் அதில் அதிகமாக பயணித்த நாட்டவர்கள் மீது நாம் இலக்கு வைத்துள்ளோம் என்பது பொருளாகிறது .
ஈராக்கில் தமது படைகள் நிலை கொண்டுள்ளதால் தமது நாடுகள் பொருளாதார மற்றும் ,அரசியல் உள்ளூர் நெருக்கடி ஏற்படும் என்ற நிலையும் அந்த நாடுகளுக்கு ஏற்பட்டுள்ளது .
தமது அரசியல் அதிகாரத்தை தக்க வைத்து கொள்ளவும் தமது இராணுவத்தை பாதுகாத்து கொள்ளவேண்டிய தேவையும் அந்த நாடுகளுக்கு ஏற்பட்டுள்ளது .
ஈரான் பகிரங்கமாக தாக்குதல் கொள்கை நிலையை அறிவித்துள்ள நிலையால் இந்த அவசர அதிரடி நகர்வுகள் இடம்பெற்ற வண்னம் உள்ளன .
எமக்கு உயிர் பாதிப்பில்லை ,ஆனால் விமான தளத்தில் சிறு சேதம் மட்டும் ஏற்பட்டுள்ளது என அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்து இருந்தார் .
அப்படி சிறு சேதம் என்றால் ஏன் அந்த இரண்டு வான் தளத்தை ,ஈரான் ஏவுகணைகள் வீழ்ந்த பகுதியை
ஊடகங்களுக்கு காண்பிக்கவிலை என்ற கேள்வி முன் வைக்க படுகிறது .
அப்படி பார்த்தல் ஈரான் ஏவிய 22 ஏவுகணைகள் நெத்தியடியாக வீழ்ந்துள்ள
அமெரிக்கா கொள்கை வகுப்பாளர்கள்,இராணுவத்தினர் , ஈரான் மீதான பார்வை தவறாக கணிக்க பட்டுள்ளது
,அதாவது ஈரான் பலத்தை குறைத்து கணிப்பிட்டுள்ளனர் என்பதே இந்த களநிலவரங்கள் காண்பிக்கின்றன
அமெரிக்கா படைகள் தனிமை படுத்த படும் ஆடுகளம் திறக்க பட்டுள்ளது ,இதற்குள் வைக்க படும் பொறியில் அமெரிக்கா சிக்குமா ..? ஈரான் சிக்குமா ..?
கேள்வியோடே விடை பெறுகிறோம் .
- வன்னி மைந்தன் –

ஈராக்கில் இருந்து ஜெர்மன் இராணுவம் விலகல்
திடீரென -ஈராக்கில் இருந்து இருந்து ஜெர்மன் இராணுவம் விலகல்
ஈராக்கில் வைத்து அமெரிக்காவினால் ஈரானிய இராணுவ தளபதி படுகொலை புரியப்பட்ட நிலையில் தற்போது அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது ,
மேலும் ஈராக்கில் இருந்து அமெரிக்கா இராணுவம் முற்றாக வெளியேற வேண்டும் என ஈராக்கிய பாரளுமன்றம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது .
இதனை அடுத்து தற்போது ஈராக்கில் நிலை கொண்டுள்ள ஜேர்மனிய படைகளில்; கணிசமானவை அங்கிருந்து
ஈராக்கின் எல்லைப்புற நாடுகளான ஜோர்டான் ,மற்றும் குவைத்துக்கு அவசரமாக அனுப்ப படுகின்றன
அமெரிக்கா இராணுவம் எங்கள் தாய் மண்ணில் இருந்து உடனடியாக விலக வேண்டும் அது தவறின் அவர்களது குடும்பங்கள் ,பிள்ளைகள் மற்றும் இராணுவத்தினர்
பிணமாகவோ,காயங்களுடனோ அனுப்பி வைக்க படுவார்கள் என ஈராக் ,அதிரடியாக அறிவித்துள்ளது .
அதே போலவே ஈரான் ,கிசு புல்லா மற்றும் ஈரானிய ஆதரவு படைகளும் கூறியுள்ளன .
அமெரிக்கா புரிந்த உலக சட்ட விதிகளுக்கு எதிரான இந்த படுகொலை முயற்சி செனட் சபையில் விவாதிக்க படவுள்ளது .
அத்துடன் சர்வதேச சட்ட நிபுணர் குழு இது தொடர்பான வழக்கினை மேற்கொள்ள கூடும் எனவும் எதிர்பார்க்க படுகிறது .
அவ்வாறு வழக்கு தொடர பட்டால் டிரம்ப் செய்த செயல் ஒரு போர்க் குற்றம் எனவும் அவர் தண்டிக்க பட கூடிய வாய்ப்பு உள்ளதாவும் தெரிவிக்க படுகிறது .
ஈராக்கில் இருந்து ஜெர்மன் இராணுவம் விலகல்
எனினும் உலக சட்டநிபுணர்கள் முடிவை ,இவர்கள் நகர்வை அவததனித்தே செனட் அடுத்த கட்ட நடவடிகை டிரம் மீது மேற்கொள்ளும் என எதிர்பார்க்க படுகிறது .
ஜெர்மன் தனது படைகளை அவசரமாக அங்கிருந்து பாதுகாப்பாக அகற்றுவது ஏன் என்பது புரியவில்லை
,அச்சத்திலா …? அல்லது ஈரான் ,மற்றும் அதன் ஆதரவு படைகள் கண்டிப்பாக தாக்குவார்கள் என்ற நிலையிலா ..?
போர் மேகம் சூழ்ந்துள்ள நிலையில் கழிகின்ற நிமிடங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன .உலக சந்தையில் ,தங்கம் ,எரிபொருள் நிலை திடீரென அதிகரித்துள்ளது .
பிரதான எண்ணெய் ஏற்றுமதி ஈரான் மற்றும் ஈராக்கிடம் இருந்தே செல்கின்றன ,இந்த வளங்களை
கொள்ளையடிக்கவே அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நடுகல் அங்கே முகாம் இட்டு கொள்ளையடித்து அந்த மக்களை கொன்று வருவது இங்கே கவனிக்க தக்கது .
அதாவது கோட்டு போட்ட மகா கொள்ளையர்கள் இந்த அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பியர்கள் என்பதாக மக்கள் பார்க்கின்றனர் ,
மேலும் ஈராக்கில் இருந்து அமெரிக்கா படைகள் அகற்ற பட மாட்டாது என விழுந்து கட்டி பிரிட்டன் பாதுகாப்பபு மந்திரி அதிரடியாக கருத்து வெளியிட்டுள்ளார் .
அப்படி என்றால் இவர்கள் ஈரானை தாக்கிட இப்பொழுதே திட்டம் போட்டு விட்டனர் ,ஈரான் செய்ய போகும் ஒரு தாக்குதல் ஒன்றுக்காக காத்து உள்ளனர்
அதனை அடுத்து ஈரான் மீது தாக்குதலை இவர்கள் நடத்த போவதையே இந்த நகர்வுகள் இப்பொழுது காண்பிக்கிறது
- வன்னி மைந்தன் –

குவிக்க படும் துருக்கி ரசியா படைகள் – வீடியோ
குவிக்கபடும் துருக்கி ரசியா -அமெரிக்கா படைகளினால் ஈராக்கில் வைத்து ஈரானிய இராணுவ ,ஈராக் இராணுவ தளபதி ,லெபனான் ஹிஸ்புல்லா உப தலைவர்
உள்ளிட்ட பத்து முக்கியமானவர்களை உளவு விமான மூலம் தாக்கி பாடுகொலை புரிந்தது .
இதன் எதிரொலியாக ஈரான் , ஈராக் பாரளுமன்றம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டது ,அதில் ஈராக்கை விட்டு
அமெரிக்கா அப்படைகள் முற்றாக வெளியேற வேண்டும் என அது அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது .
இதனால் அமெரிக்காவிற்கு பெரும் இராயத்தந்திர நெருக்கடி ஏற்பட்டுள்ளது .
அமெரிக்கா படைகள் மட்டுமல்ல ,ஐரோபிய படைகளும் அங்கிருந்து வெளியேற வேண்டிய அபாகயகரம் எழுந்துள்ளது ,
ஈராக்கிய பாராளுமன்றில் இந்த முடிவை ஏற்று அமெரிக்கா படைகள் அங்கிருந்து வெளியேறுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்
இது இவ்வாறு இடம்பெற்று கொண்டிருக்க துருக்கியில் துருக்கிய இராணுவம் மற்றும் ரசியா படைகள் ஆகியன அங்கு குவிக்க படுகின்றன .
குவிக்க படும் துருக்கி ரசியா
துருக்கி ,ரசியாவுடனும் ஈரான் தீவிர பேச்சில் ஈடு பட்டதன் பின்னர் ஈராக் பாரளுமன்றில் இந்த முடிவுகள் அறிவிக்க பட்டுள்ளது .
இது டிரம்ப் எடுத்த பிழையான முடிவு என்ற கருத்து வலுத்து வருகிறது .
குவிக்க படும் துருக்கி ரசியா
தொடர்ந்து டிரம்ப் போர்குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த படலாம் என்ற வாதமும் வலுப்பெற்று வருகிறது video







