Author: நலன் விரும்பி
உடையார் கட்டில் புலிகளினால் புதைக்க பட்ட டீசல்,பெட்ரோல் மீட்பு- இராணுவம் குவிப்பு
உடையார் கட்டில் புலிகளினால் புதைக்க பட்ட டீசல்,பெட்ரோல் மீட்பு- இராணுவம் குவிப்பு
உடையார்கட்டு பகுதியில் இறுதி போர் உக்கிரம் பெற்ற காலத்தில் புலிகள் அமைப்பினால் பதுக்கி வைக்க பட்ட எரிபொருள் கலங்கள் மீட்க பட்டுள்ளன
போர் உக்கிரம் , பெற்று இலங்கை சிங்கள படைகள் முன்னேறி வந்த நிலையில் மக்கள்; வீடுகளில் வெட்ட பட்ட பதுங்கு குளிகளுக்குள் இந்த பொருட்கள் பதுக்கி வைக்க பட்டன
தற்போது உரிமையாளர்களினால் அந்த புட்டி பகுதி மண் நிரவப்பட்ட பொழுது ,மேற்படி கலங்கள் கண்டு பிடிக்க பட்டுள்ளது
மேற்படி விடயம் குற்ற புலனாய்வு துறையினருக்கு தெரிய வந்த நிலையில் ,குறித்த வீடு சுற்றி வளைக்க பட்டு இராணுவம் குவிக்க பட்டுள்ளது
மேலும் நீதிபதி ஒருவர் தலைமையில் அந்த அகழ்வு பணிகள் கண்காணிக்க படுவதாக தெரியவருகிறது ,
குறித்த பகுதியில் விடுதலை புலிகளின் பல்வேறு பட்ட அமைப்பின் முகாம்கள் நிர்வகிக்க பட்டு இருந்தன என்பது இங்கே கவனிக்க தக்கது
போர் முடிந்த 13 ஆண்டுகள் கழிந்த நிலையிலும் இவ்விதமான தடய பொருட்கள் தற்போது வரை கண்டு
பிடிக்க பட்டு வருகிறது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது
தற்போது குறித்த வீட்டார் ,விசாரணை வளையத்திற்குள் முடக்க பட்டுள்ளனர் ,விசாரணைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது
குளத்தில் மிதந்த பெண்ணின் சடலம்- மிரட்டும் கொலைகள்
குளத்தில் மிதந்த பெண்ணின் சடலம்- மிரட்டும் கொலைகள்
மல்லாக்க மிதந்த பெண்ணொருவரின் சடலம் இன்று (31) மீட்கப்பட்டுள்ளது.
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல் கொத்மலை நீர்தேகத்திலிருந்து
பெண்ணின் சடலமொன்று மீட்கப்பட்டதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
சடலமொன்று மிதப்பதைக்கண்டு பிரதேசவாசிகள் தலவாக்கலை பொலிஸருக்கு அறிவித்துள்ளனர். அதன்பின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட பெண் தன்னுயிரை மாய்த்துக்கொண்டாரா? அல்லது படுகொலைச்
செய்யப்பட்டாரா என்பது தொடர்பாக பலகோணங்களில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மீட்கப்பட்ட சடலம் யாருடையது என இதுவரைஅடையாளம் காணப்படவில்லை.
உருக்குலைந்த நிலையிலேயே சடலம் காணப்படுகின்றது எனவும் மேலதிக
விசாரணைகளை தொடர்வதாகவும் தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
மரண விசாரணைகளின் பின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட
வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
வீரவன்ச மனைவி பிணையில் விடுதலை
வீரவன்ச மனைவி பிணையில் விடுதலை
முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் மனைவி சஷி வீரவங்ச கொழும்பு நீதவான் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சட்டவிரோத இராஜதந்திர கடவுச்சீட்டை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் சசி வீரவன்சவுக்கு அண்மையில் இரண்டு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்கவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
புதிய இராணுவ தளபதியாக விகும் லியனகே நியமனம்
புதிய இராணுவ தளபதியாக விகும் லியனகே நியமனம்
இலங்கை இராணுவத்தின் 24வது தளபதியாக மேஜர் ஜெனரல் விகும் லியனகே
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று (31) முற்பகல் கோட்டை ஜனாதிபதி மாளிகையில் வைத்து விகும் லியனகேவிடம்
ஜனாதிபதி இதற்கான கடிதத்தை கையளித்தார்.
தற்போது இராணுவத்தில் மிகவும் சிரேஷ்ட அதிகாரியாக இருக்கும் விக்கும் லியனகே,
இராணுவத் தளபதியாக கடமைகளை பொறுப்பேற்றுக்கொள்வதன்
மூலம் நாளை (01) லெப்டினன்ட் ஜெனரலாக பதவி உயர்வு பெறவுள்ளார்.
தந்தை மகள் சடலமாக மீட்பு – தொடரும் மர்ம கொலைகள்
களுத்துறை, ஹீனடியங்கல பிரதேசத்தில் வீடொன்றுக்குள் மர்மமான முறையில்
உயிரிழந்த இருவரின் சடலங்கள் நேற்று (30) பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
உயிரிழந்தவர்கள் தந்தை மற்றும் மகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
களுத்துறை, ஹீனடியங்கல சிசில உயன பகுதியைச் சேர்ந்த 69 வயதான சமரசிங்க
சுனில் ஜயசிங்க மற்றும் அவரது 33 வயது மகள் சசித்ரா ஹன்சமலி ஜயசிங்க ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர்.
தந்தை நாற்காலியில் அமர்ந்திருந்த நிலையிலும், மகள் அறையின் தரையில் சடலமாக
கிடந்ததாகவும் பொலிஸ் அவசர பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் களுத்துறை தெற்கு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
களுத்துறை பிரதேச குற்றத்தடுப்பு பிரிவினரால் பிரேத பரிசோதனையின் பின்னர்
சடலங்கள் களுத்துறை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
40,000 மெட்ரிக் தொன் டீசல் இலங்கைக்கு
40,000 மெட்ரிக் தொன் டீசல் இலங்கைக்கு
மேலும் 40,000 மெட்ரிக் தொன் டீசலுடனான கப்பல் இலங்கையை வந்தடைந்துள்ளதாக
தெரிவிக்கப்படுகின்றது.
இந்திய உதவித்திட்டத்தின் கீழ் இந்த கப்பல் நேற்று மாலை கொழும்பை வந்தடைந்துள்ளது.
சிவகார்த்திகேயன் படத்தின் ரிலீஸ் அறிவிப்பு
சிவகார்த்திகேயன் படத்தின் ரிலீஸ் அறிவிப்பு
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் நடித்துள்ள படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவகார்த்திகேயன் படத்தின் தேதி அறிவிப்பு
சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த மே 13ம் தேதி வெளியான திரைப்படம் ‘டான்’. அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ள இந்த படத்தை லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து
தயாரித்திருந்தது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன்
நடித்திருந்தார். மேலும் டான் படத்தில் சூரி, சமுத்திரக்கனி, சிவாங்கி, ஆர்.ஜே.விஜய், முனிஷ்காந்த், பால சரவணன், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற டான் திரைப்படம் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது. இப்படம் வெளியான 12 நாட்களில் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளதாக லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.
இந்நிலையில் டான் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி டான் திரைப்படம் வரும் ஜூன் 10
ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது
.
வைரமுத்து நெகிழ்ச்சி பதிவு
– வைரமுத்து நெகிழ்ச்சி பதிவு
தமிழ் சினிமாவின் முன்னணி பாடலாசிரியராக வலம் வரும் வைரமுத்துவின் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
“வாழையடி வாழையென வளருமடா தமிழ்க்கூட்டம்” – வைரமுத்து நெகிழ்ச்சி பதிவு
வைரமுத்து
தமிழ் திரையுலகில் புகழ்பெற்ற திரைப்பட பாடலாசிரியராக திகழ்பவர் கவிஞர் வைரமுத்து. நிழல்கள் எனும் திரைப்படத்தில் பொன்மாலைப் பொழுது என்ற பாடலின்
மூலம் இவர் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல படங்களில் முன்னணி நடிகர்களின் படங்களில் பாடல்கள் எழுதி அனைவரின் மத்தியிலும் நீங்கா இடம்
பிடித்தார். இவர் இதுவரை 7500 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார். இவர் சிறந்த பாடலாசிரியருக்கான இந்திய அரசின் விருதை ஏழு முறை பெற்றுள்ளார்.
வைரமுத்து நெகிழ்ச்சி பதிவு
கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழாற்றுப்படை என்ற புத்தகத்தை கவிஞர் வைரமுத்து வெளியிட்டார். தமிழின் மூவாயிர ஆண்டுகால பெருமைகளைக் கூறி
தமிழை நோக்கி கேட்பவர்களை, வாசிப்பவர்களை ஆற்றுப்படுத்தும் என்கிற நம்பிக்கையால் வைரமுத்து எழுதி வெளியிட்ட இந்தப் புத்தகம் அனைவரின்
பாராட்டுகளைப் பெற்றது. இந்தப் புத்தகத்தை படித்த ரஜினிகாந்த், வைரமுத்து குறித்து புகழ்ந்திருந்தார்.
இந்நிலையில் வைரமுத்துவின் தமிழாற்றுப்படை புத்தகத்தை, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் மகன் மாவீரன் இந்த புத்தகத்தை படிக்கும் வீடியோ
சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இது குறித்து வைரமுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில்,
“காளிமுத்து பேரன்
செந்தமிழன் சீமானின்
திருச்செல்வன் மாவீரன்
தமிழாற்றுப்படையோடு
உறவாடி விளையாடும்
ஒளிப்படங்கள் கண்டேன்
நாளையொரு பூமலர
நல்லதமிழ்த் தேன்சிதற
வாழையடி வாழையென
வளருமடா தமிழ்க்கூட்டம்
என்று வாய்விட்டுச்
சொல்லிக்கொண்டேன்
தமிழாற்றுப்படையோடும்
தமிழர் படையோடும்
வா மகனே”
என்று குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
அரைகுறை ஆடை காதலனுக்கு பிடிக்கவில்லை நடிகை
அரைகுறை ஆடை காதலனுக்கு பிடிக்கவில்லை நடிகை
புதிய காதலன் ஆதில் கான் துரானி, தான் ஆடைகளைத் தேர்ந்தெடுப்பதில் சரியில்லை என்றும், ‘அதிக மூடிய’ ஆடைகளையே அணிய வேண்டும் என விரும்புவதாகவும் ராக்கி சாவந்த் கூறினார்.
அரைகுறை ஆடை அணிவது என் காதலனுக்கு பிடிக்கவில்லை – பிரபல நடிகை
ராக்கி சாவந்த்
பிரபல பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் தன் காதல் கணவரான ரித்தேஷை பிரிந்துவிட்டதாக அண்மையில் அறிவித்தார். அதன்பிறகு ஆதில் கான் துரானி என்பவரை காதலிப்பதாக கடந்த வாரம் அறிவித்தார். ஆதிலின் குடும்பம் நான்
கவர்ச்சியான உடை அணிவதால் என்னை இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை. நான் ஆடை அணிவது அந்த குடும்பத்திற்கு பிடிக்கவில்லை என கூறி இருந்தார். இந்த
நிலையில் காதலன் ஆதில் கான் துரானி உடனான உறவின் காரணமாக ராக்கி சாவந்த் மீண்டும் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துள்ளார். ஆதில் கான் தனக்கு
பிஎம்டபிள்யூ கார் கொடுத்ததைப் பற்றி அவர் பதிவிட்டுள்ளார், மேலும் ஆதில் துபாயில்
தனது பெயரில் ஒரு வீட்டை வாங்கி உள்ளார். மற்ற அனைத்தையும் விட அவரது அன்பை தான் அதிகம் மதிக்கிறேன்.
ஒரு ஆண் தனது காதலியை உறவின் ஆரம்பத்தில் தனது குடும்பத்திற்கு அறிமுகப்படுத்துவது பெரும்பாலும் இல்லை. இருப்பினும், ஆதில் மற்றும் அவரது
குடும்பத்தினருடன் என்னை அறிமுகபடுத்தினார். அவர் தனது குடும்பத்தில் இருந்து சில ‘எதிர்ப்பு’ இருப்பதாக ஒப்புக்கொண்டார், தனது கடந்த காலத்தைப் பற்றி அவரிடம்
கூறியதற்காகவும். எதையும் மறைக்காமல் இருந்ததற்காகவும் பாராட்டினார். வேலையை விட்டு விலகுவது போன்ற எந்த கட்டுப்பாடுகளையும் ஆதில் தன் மீது
விதிக்கவில்லை. ஆனால் சில விஷயங்கள் உள்ளன. கவர்ச்சி குறைவான மற்றும் அதிக
மூடிய ஆடைகளை அணிய வேண்டும் என்று ஆதில் விரும்புகிறார் என நான் நினைக்கிறேன் என ராக்கி சாவந்த் கூறினார்.
வீரவன்சவின் மனைவி மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
போலியான ஆவணங்களை பயன்படுத்தி, இராஜதந்திர கடவுச்சீட்டை பெற்றார் என்றக்
குற்றசாட்டின் கீழ், 2 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்
விமல் வீரவன்சவின் மனைவி சஷீ வீரவன்சவின் பிணை மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
பிணை மனுமீதான விசாரணை, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால், நாளை (31) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
ரணிலுக்கு மனோ கடிதம் – தீர்வு கிடைக்குமா
ரணில் பிரதமராக பதவி ஏற்ற பின்னர் மனோ கணேசன் எழுதிய கடிதம் ,உரம் இல்லாததால், நெல் விளைச்சல் இல்லை.
உள்நாட்டு நெல் விளைச்சல் இல்லாததால் அரிசி இல்லை. அதேபோல், உரப்பிரச்சினை தேயிலை உற்பத்தியையும்
பாதித்துள்ளது. தோட்டங்களில் வேலை இல்லை. ஆகவே வருமானம் இல்லை. உணவுக்காக, அரிசி, கோதுமை வாங்க பணமுமில்லை. கடைகளில் பொருளுமில்லை.
இதனால் ஏற்கனவே வாழ்வாதாரம் இல்லாமல் மிகவும் நலிவடைந்த நிலையில் இருக்கும் தோட்டங்களில் வாழும் மக்கள் மத்தியில் உணவு பஞ்சம் ஏற்படலாம்.
இன்னமும் சில மாதங்களில் பட்டினி சாவு வரலாம். இதை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுங்கள்.
தோட்டங்களில் காணப்படும் பயிரிடப்படாத தரிசு நிலங்களை பிரித்து, தோட்டங்களில் நிரந்தரமாக உழைக்கும் மக்களுக்கு வழங்கும்படி நான் உங்களை வேண்டுகிறேன்.
விவசாய அமைச்சின் அனுசரணையும் இவர்களுக்கு வழங்க சொல்லுங்கள். இந்நிலங்களில் குறுகிய காலத்தில் பயன் தரும் விளைபயிர்களை தொழிலாளர்கள்
பயிரிட்டு தங்கள் தங்கள் வீட்டு தேவைகளுக்கு பெற்றுக்கொள்வார்கள். அதேபோல் நாட்டின் உணவு தேவைக்கும் இந்த பயிரிடல் பங்களிப்பை வழங்க முடியும் என தமிழ்
முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எழுதியுள்ள அவசர கடிதத்தில் கோரியுள்ளார்.
தனது கோரிக்கை கடிதத்தில் தமுக தலைவர் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது, நுவரெலியா, கொழும்பின் அவிசாவளை, பதுளை, இரத்தினபுரி,
கண்டி, கேகாலை, மாத்தளை, களுத்துறை, காலி, மாத்தறை, மொனராகலை, குருநாகலை ஆகிய மாவட்ட பெருந்தோட்டங்களில் வாழும் உழைக்கும் மக்கள்
வருமானமின்றி நிர்க்கதி நிலையில் ஏற்கனவே பெருந்துன்பங்களை சந்தித்து வருகிறார்கள். நாட்டின் இன்றைய பொருளாதார நெருக்கடியினால், இன்னமும் சில
மாதங்களில், உண்ண உணவின்றி நம் நாட்டில் பட்டினி சாவை சந்திக்க கூடியவர்களாக கணிக்க கூடியயோர் பட்டியலில் முதன்மை நிலையில் இருப்போர் இவர்களே.
“தொழிலாளர்கள்” என்ற அடையாளத்தால் இவர்களுக்கு முறையாக சமுர்த்தி கொடுப்பனவுகள் கிடைப்பதில்லை. கிடைக்காத சம்பள கணக்குகள் காரணமாக
இவர்கள் வறுமை கோட்டுக்கு கீழே இல்லை என்ற போலி புள்ளி விபரங்கள் காரணமாக இவர்களுக்கு நியாயம் எப்போதும் கிடைப்பதில்லை. உண்மையில் கீழே ஒதுக்கப்பட்ட பிரதேசங்களில் வாழும் இந்த மக்களே வறுமை கோட்டுக்கு வாழ்கிறார்கள்.
மானிய விலையில், கோதுமை மாவு தருகிறோம், மண்ணெண்ணெய் தருகிறோம் என்று காலத்துக்கு காலம் சொல்லப்பட்டாலும் கூட எதுவும் உருப்படியாக கிடைப்பதில்லை.
ஆகவே தோட்டங்களில் அடாத்தாக கிடக்கும் தரிசு காணிகளை பிரித்து, தோட்டங்களில் நிரந்தரமாக உழைக்கும் மக்களுக்கு வழங்கும்படி நான் உங்களை
வேண்டுகிறேன். இந்த நிலங்களில் குறுகிய காலத்தில் பயன் தரும் விளைபயிர்களை கடும் உழைப்பாளிகளான இந்த உழைக்கும் மக்கள் பயிரிட்டு தங்கள் வீட்டு
தேவைகளுக்கு பெற்றுக்கொள்வார்கள். அதேபோல் நாட்டின் உணவு தேவைக்கும் இந்த பயிரிடல் கணிசமான பங்களிப்பை வழங்க முடியும்.
விவசாய அமைச்சின் அனுசரணையும் வழங்க பணிப்புரை விடுக்கும்படி கோருகிறேன். அவ்வாராயின் குறுகிய காலத்தில் பயன் தரும் உணவு பயிர்களை
பயிரிட உரிய ஆலோசனைகளையும், ஒத்தாசைகளையும் அவர்களால் பெற முடியும். நான் மேலே குறிப்பிட்ட மாவட்டங்களுக்குள் வரும் பிரதேச செயலாளர்களை அழைத்து
அவசர கலந்தாலோசனையை ஏற்பாடுமாறு அன்புடன் கோருகிறேன்.
தோட்ட பிரதேசங்களில் நிலவும் வரலாறு காணாத அசாத்திய வறுமை காரணமாக
அங்கே தங்களது ஆட்சியின் கீழ் பட்டினி சாவுகள் நிகழ முன்னர் இதை நீங்கள் செய்வீர்களாயின் மிகவும் நன்றி உடையவனாக இருப்பேன்.
ரஜினி தான் ரியல் டான் – சிவகார்த்திகேயன்
ரஜினி தான் ரியல் டான் – சிவகார்த்திகேயன்
நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற சிவகார்த்திகேயனின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
ரஜினி தான் ரியல் டான் என – பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி
பாராட்டியுள்ளார்
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடித்து வெளியான திரைப்படம் ‘டான்’. அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கியிருந்த
இப்படத்தை லைகா நிறுவனமும் சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்திருந்தது.
இப்படத்திற்கு இளம் இசை புயல் அனிருத் இசையமைத்துள்ளார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரபல நடிகை பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.
இந்த திரைப்படம் கடந்த மே 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று, வசூல் ரீதியிலும் வெற்றியை பெற்றது.
இப்படம் வெளியான 12 நாட்களில் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளதாக லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.
இந்நிலையில் டான் திரைப்படத்தை பார்த்துவிட்டு. ஏற்கனவே டான் பட குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருந்த ரஜினிகாந்த். தற்போது சிவகார்த்திகேயனை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.
இது குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள சிவகார்த்திகேயன், அதனுடன் அந்த சந்திப்பில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் அவர் குறிப்பிட்டிருப்பது,
“இந்திய சினிமாவின் “டான்” ரஜினிகாந்த் சாரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றேன். ரஜனி சாரை சந்தித்த அந்த 60 நிமிடங்கள் என் வாழ்நாள் நினைவாக இருக்கும்.
உங்கள் நேரத்திற்கும் டான் படத்திற்கான உங்கள் மதிப்பு மிக்க பாராட்டிற்கும் நன்றி தலைவா” என்று நெஞ்சுருகி சிவகார்த்திகேயன் பதிவிட்டிருக்கிறார்.
சிவகார்த்திகேயனின் இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
வாக்கியட்டை மோசடியில் சிக்கிய போனிகபூர்
வாக்கியட்டை மோசடியில் சிக்கிய போனிகபூர்
தயாரிப்பாளரான போனிகபூரின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி மர்ம நபர்கள் ரூ 3.82 லட்சம் பண பரிமாற்றம் செய்துள்ளனர்.இந்த விடயம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
கிரெடிட் கார்டு மோசடியில் சிக்கிய போனிகபூர்
போனிகபூர்
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் ,மற்றும் தயாரிப்பாளரான ,போனிகபூர் பல படங்களை தயாரித்துள்ளார். இவர் தயாரித்த அஜித்குமாரின் வலிமை திரைப்படம்
பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் சாதனை படைத்துள்ளது. மேலும், அஜித்குமாரின் அடுத்தபடமான எ.கே.61 படத்தையும் தயாரித்து வருகிறார்.
இந்நிலையில், போனிகபூரின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி மர்ம நபர்கள் ரூ.3.82 லட்சம் பண பரிமாற்றம் செய்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன் கிரெடிட்
கார்டின் பில் கட்டவில்லை என்று போனிகபூருக்கு வங்கியில் இருந்து அழைப்பு வந்துள்ளது. அதன் பின்னர்தான் போனிகபூருக்கு கிரெடிட் கார்ட் தவறாக
பயன்படுத்தபட்டது தெரியவந்துள்ளது. மொத்தம் ஐந்து பரிவர்த்தணைகளில் இந்த மோசடி நடந்துள்ளது.
தனது வங்கி கணக்கில் இருந்து முறைகேடாக பண பரிமாற்றம் நடந்துள்ளதை அறிந்த போனி கபூர் மும்பை அம்போலி போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளார்.
மேலும், தனது கிரெடிட் கார்டு எண்களை குறித்து யாரும் கேட்கவில்லை. இது தொடர்பாக எந்த அழைப்பும் வரவில்லை என்றும் போனிகபூர் கூறியுள்ளார்.
வாக்கியட்டை மோசடியில் சிக்கிய போனிகபூர்
போனிகபூர் கிரெடிட் கார்டை பயன்படுத்தும் போது அவரது விவரங்களை மர்ம நபர்கள் பெற்றிருக்கலாம் என்றும் குருகிராமில் உள்ள ஒரு நிறுவனத்தின் வங்கி கணக்கிற்கு
பணபரிமாற்றம் நடந்துள்ளது என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த முறைகேடு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமண இடத்தை மாற்றிய நயன்தாரா
திருமண இடத்தை மாற்றிய நயன்தாரா
நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெறும் இடம் மாற்றி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருமண இடத்தை மாற்றிய நயன்தாரா – விக்னேஷ் சிவன்… ஏன் தெரியுமா?
நயன்தாரா – விக்னேஷ் சிவன்
நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்ட விக்னேஷ் சிவனும் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாராவும் கடந்த ஆறு வருடங்களாக
காதலித்து வருகின்றனர். தொடர்ந்து சமூக வலைதளங்களில் தங்களின் ஜோடியான
புகைப்படங்களை இருவரும் பகிர்ந்து வரும் நிலையில் எப்போது திருமணம் என்று ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்நிலையில், ரசிகர்களுக்கு பதிலளிக்கும் விதமாக ஜூலை 9-ஆம் தேதி திருப்பதியில்
வைத்து திருமணம் நடைபெறும் என்று இருவரும் அறிவித்திருந்த நிலையில், தற்போது திருமண இடத்தை மாற்றி வைத்துள்ளனர்.
நயன்தாரா – விக்னேஷ் சிவன்
150 விருந்தினர்கள் கூட திருமணத்தில் கலந்து கொள்ள திருப்பதி கோவில் நிர்வாகம்
அனுமதிக்கவில்லை என்பதால் திருமண இடத்தை மாற்றி இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், மகாபலிபுரத்தில் உள்ள ஒரு ரெசார்ட்டில் ஜூன் 9-ம் தேதி விமர்சையாக
திருமணம்
நடக்கவுள்ளதாக அழைப்பிதழ் வெளியாகி வைரலாகியுள்ளது.
50 தாவது நாளை எட்டிய காலிமுகத்திடல் போராட்டம்
50 தாவது நாளை எட்டிய காலிமுகத்திடல் போராட்டம்
காலிமுகத்திடல் போராட்டம் இன்று 50 ஆவது நாளை எட்டியுள்ளது. இதனை
கொண்டாடும் வகையில் காலி முகத்திடலை மையமாக கொண்டு பாரிய போராட்டமொன்றை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.
சாதாரண தர மாணவர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் போராட்டம் நடத்துமாறு போராட்டக்காரர்கள் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதேவேளை, ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைவதற்கு தடை விதித்து நீதிமன்ற உத்தரவு ஒன்று பெறப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் யோர்க் வீதி, பேங்க் வீதி மற்றும் செத்தம் வீதி உட்பட சில வீதிகளுக்கு நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எந்தவொரு அரச நிறுவனத்திற்கோ அல்லது உத்தியோகபூர்வ இல்லத்திற்கோ நுழைந்து சேதப்படுத்துதல்
போன்ற எந்தவொரு சட்டவிரோத செயற்பாடுகளையும் மேற்கொள்ளக்கூடாது எனவும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வவுனியாவில் -தலை சிதறிய நிலையில் வீதியில் மிதந்த மனித சடலம்
வவுனியா நகரில் பஜார் வீதியிலுள்ள வர்த்தக நிலையத்திற்கு முன்பாக நேற்று (27) 11.30 மணியளவில் தலை சிதறிய நிலையில் வெளிநாட்டவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வவுனியா பஐார் வீதியிலுள்ள வர்த்தக நிலையத்தின் முன்பகுதியில் தலை சிதறிய நிலையில் இரத்தின் மத்தியில் ஒருவர் காணப்பட்ட நிலையில் உடனடியாக மக்கள் செயற்பட்டு வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
எனினும் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர் தெரிவித்துள்ளனர்
இவ்விடயம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்த நிலையில் குறித்த நபர் வர்த்தக நிலையத்தின் மேற்பகுதியில் விடுதி
அமைந்துள்ள மூன்றாம் மாடி கட்டிடத்திலிருந்து கீழே வீழ்ந்து மரணித்துள்ளது விசாணைகளின் ஆரம்ப கட்டத்தில் தெரியவந்துள்ளதுடன் குறித்த நபரின் மரணம்
கொலையா? அல்லது தற்காெலையா? என்ற கோணத்தில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இந்தியா நாட்டை சேர்ந்த 36 வயதுடைய சன்டிப் மலிக் என்ற நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.
சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன்
தடவியல் பொலிஸாரின் உதவியுடன் மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
லண்டனில் இலவசமாக பிட்ஸா வழங்கும் கடை -இப்படியும் வியாபாரம்
லண்டனில் இலவசமாக பிட்ஸா வழங்கும் கடை -இப்படியும் வியாபாரம்
பிரிட்டன் லண்டன் Maidstone store, the Lower High Street பகுதியில் உள்ள பிட்ஸா கடை ஒன்றின்
அதன் திறப்பு நினைவு நாளை முன்னிட்டு 3 மணி தொடக்கம் ஆறு மணிவரை இலவசமாக பிட்ஸா வழங்க படுகிறது
வாடிக்கையாளரை தம் பக்கம் இழுத்திட இவர்கள் மேற்கொள்ளும் விளம்பர
உத்தியாக இது பார்க்க படுகிறது ,அதன் பின்னர் மலிவு விற்பனை இடம்பெறுகிறது
இப்படியும் வியாபார தந்திரம் வைத்து உணவகங்கள் நடத்தும் முதலாளிகளும் இருக்கத்தான் செய்கின்றனர்
,மார்க்கட் மனச்மென்ட் தெரிந்த ஒருவராக விளங்குவார் போலும்
உக்கிரேனை கைவிடும் மேற்குலகம் – தாக்குதலை தீவிர படுத்தும் ரஷியா
உக்கிரேனை கைவிடும் மேற்குலகம் – தாக்குதலை தீவிர படுத்தும் ரஷியா
உக்கிரேன் மீது ரசிய இராணுவம் தொடர் தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளது .இவ்வேளை
இந்த தாக்குதலை தடுக்க மேற்குலக நாடுகள் தொடராக ஆயுதங்களை வழங்கி வந்தன
அவ்விதம் இருந்தும் உக்கிரேனால் ரசியாவை வெற்றி கொள்ள முடியவில்லை ,இதனை
அடுத்து பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் திடீர் பெல்ட்டி அடித்து ஆயுத உதவிகள் வழங்கிட மறுத்து வருகின்றன
இது உக்கிரேன் ரசியாவிடம் வீழ்ச்சியுறும் நிலைக்கு வித்திட்டுள்ளது
தற்கொலைகள்.. மீண்டும் ஒரு நடிகை மரணம்
தற்கொலைகள்.. மீண்டும் ஒரு நடிகை மரணம்
நடிகை பிதிஷா தற்கொலை செய்த 2 நாளில் அவரது தோழியான பிரபல மாடல் அழகியும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தொடரும் தற்கொலைகள்.. மீண்டும் ஒரு நடிகை மரணம்
மஞ்சுஷா நியோகி
மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் டம்டம் என்ற இடத்தில் நாகர்பஜார் பகுதியில் உள்ள வாடகை குடியிருப்பு ஒன்றில் கடந்த 4 மாதங்களாக வசித்து வந்தவர் பிதிஷா டி மஜும்தார் (வயது 21). பிரபல மாடலான இவர் வங்காள மொழி படத்திலும்
நடித்து உள்ளார். சில தினங்களுக்கு முன்பு பிதிஷா தனது குடியிருப்பில் கடந்த 25ந்தேதி மாலை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மஞ்சுஷா நியோகி – பிதிஷா டி மஜும்தார்
இதுபற்றி தகவல் அறிந்து அவரது குடியிருப்புக்கு வந்த பேரக்பூர் நகர போலீசார் குடியிருப்பின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். தூக்கில் தொங்கிய பிதிஷாவின் உடலை கைப்பற்றி ஆர்.ஜி.கர் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி
வைத்தனர். அந்த குடியிருப்பில் தற்கொலை குறிப்பு ஒன்றையும் போலீசார் கைப்பற்றினர். பிதிஷாவுக்கு அனுபாப் பேஹ்ரா என்ற காதலர் உள்ளார். அவருக்கு
பிதிஷா தவிர்த்து 3 தோழிகள் இருந்துள்ளனர். பேஹ்ராவுடனான நட்புறவால் பிதிஷா மனஅழுத்தத்தில் இருந்துள்ளார் என பிதிஷாவின் தோழிகள் கூறியுள்ளனர்.
இந்நிலையில், பிதிஷாவின் தோழியான வங்காளத்தின் மாடலான மஞ்சுஷா நியோகி என்பவரும் தற்கொலை செய்துள்ளார். மஞ்சுஷா கொல்கத்தாவின் படுளி பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், தனது அறையில் உள்ள
மின் விசிறியில் தூக்கு போட்டு அவர் தற்கொலை செய்துள்ளார். அவரது உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து உள்ளனர். இதுபற்றி மஞ்சுஷாவின் தாயார் கூறும்போது, பிதிஷாவுடன் ஒன்றாக வசிக்க வேண்டும் என
மஞ்சுஷா தொடர்ச்சியாக கூறினார். பிதிஷாவை பற்றியே எப்போதும் பேசி கொண்டே இருந்துள்ளார். பிதிஷாவை போன்று நமது வீட்டுக்கும் ஊடகக்காரர்கள் வருவார்கள் என மஞ்சுஷா என்னிடம் கூறியபோது அவளை திட்டினேன்.
ஆனால், அதேபோன்று நடந்துள்ளது என கூறியுள்ளார். கடந்த 15ந்தேதி வங்காளத்தின் பிரபல தொலைக்காட்சி நடிகையான பல்லவி டே கொல்கத்தாவில் உள்ள தனது குடியிருப்பில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். தொடக்க கட்ட
விசாரணையில் அவர் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார் என தெரிய வந்துள்ளது என்று போலீசார் கூறினர். இந்நிலையில்,
கொல்கத்தாவில் 12 நாட்களுக்குள் அடுத்தடுத்து 3 பிரபலங்கள் உயிரிழந்து உள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
அண்ணாமலை நடித்த படத்தின் டீசர் வெளியீடு ஒத்திவைப்பு
அண்ணாமலை நடித்த படத்தின் டீசர் வெளியீடு ஒத்திவைப்பு
தமிழ்நாடு பாஜக தலைவரும், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான அண்ணாமலை, நடித்த படத்தின் டீசர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அண்ணாமலை நடித்த படத்தின் தேதி வெளியீடு ஒத்திவைப்பு
அண்ணாமலை
அண்ணாமலை நடித்த “அரபி” திரைப்படத்தின் டீசர் வெளியீடு
ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி பல படங்கள் உருவாகி வெற்றிப் பெற்றுள்ளது. அந்த வகையில் கன்னட மொழியில் உருவாகி வரும் படம் ‘அரபி’. இப்படம் தன்னுடைய இரண்டு கைகளையும் இழந்த நிலையிலும்
விடாமுயற்சியினால் சர்வதேச அளவில் நீச்சலில் சாதனை படைத்த பாரா நீச்சல் வீரர் விஸ்வாஷின் வாழ்க்கையை கருபொருளாக வைத்து உருவாகி வருகிறது. இப்படத்தை
பிரபல கன்னட இயக்குனர் ராஜ்குமார் இயக்கி வருகிறார். இப்படத்தை ஸ்ரீவிஜய ராகவேந்திரா புரடொக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.
இந்தப் படத்தில் தமிழ்நாடு பாஜக தலைவரும், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான அண்ணாமலை, விஸ்வாஷின் நீச்சல் பயிற்சியாளராக நடித்துள்ளார். இப்படத்திற்காக
இயக்குனர் ராஜ்குமார், அண்ணாமலையை அனுகியபோது படத்தின் கதை கேட்டு பிடித்து போன அண்ணாமலை இதில் நடிக்க சம்மதம் தெரிவித்துவிட்டு, சம்பளமாக ரூ.1 பெற்றுக் கொண்டு நடித்துக் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ‘அரபி’ படத்தின் டீசர் இன்று மாலை வெளியாகும் என படக்குழு அறிவித்து இருந்தது. இந்த நிலையில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை
நடித்த அரபி படத்தின் டீசர் இன்று மாலை 4 மணிக்கு வெளியாக இருந்த நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும்,
இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.







