Author: நலன் விரும்பி
கோர விபத்தில் தாய் ,மகள் பலி
கோர விபத்தில் தாய் ,மகள் பலி – தந்தை மகன் கவலைக்கிடம்
இலங்கை தம்புள்ளையில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த ஆட்டோ ஒன்று
,மரத்தில் மோதி விபத்தில் சிக்கியதில் , சம்பவ இடத்தில தாய் மகள் பலியாகினர்
,மேலும் தந்தை ,மகன் படுகாயமடைந்த நிலையில் அனுராதபுரம் வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டுள்ளனர்
இலங்கையில் நாள் தோறும், இடம் பெறும் விபத்தில்
சிக்கி எட்டுக்கு மேற்பட்டவர்கள் பலியாகிய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது

அஜித்-ரஜினி சந்திப்பு உண்மையா
அஜித்-ரஜினி சந்திப்பு உண்மையா
ரஜினிகாந்த்-அஜித்தை சந்தித்தது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
2011-ஆம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான “மங்காத்தா” திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. சமீபத்தில் மங்காத்தா 2-ஆம் பாகம்
எடுக்க வேண்டும் என்று சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வந்தனர்.
அஜித்-ரஜினி சந்திப்பு உண்மையா
இதைத்தொடர்ந்து, அண்மையில் அஜித்குமார் குடும்பமும், மங்காத்தா தயாரிப்பாளரான தயாநிதி அழகிரியின் குடும்பமும் சந்தித்துக் கொண்ட பொழுது
எடுத்த புகைப்படம் சமூக வளைதளத்தில் வைரலானது. இந்த சந்திப்பானது மங்காத்தாவின் 2-ஆம் பாகம் குறித்த சந்திப்பாக இருக்கலாம் என்று ரசிகர்கள் பதிவிட்டு வந்தனர்.
இந்நிலையில் ரஜினி, அஜித் சந்தித்தது போன்ற புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலானது. ரசிகர்கள் பலரும் இந்த புகைப்படம் குறித்து அவர்களின்
கருத்துக்களை தெரிவித்து வந்தனர். ஆனால், இந்த சந்திப்பானது உண்மையல்ல என்றும் ரஜினியை அஜித் சந்தித்தால் எப்படி
இருக்கும் என்று ரசிகர்களின் கற்பனையில் உருவாக்கப்பட்ட புகைப்படம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
வவுனியா வாலிபனை காணவில்லை
வவுனியா வாலிபனை காணவில்லை
வவுனியா குருமன்காடு பகுதியில் இருபது வயதுடைய வாலிபன் ஒருவர் காணாமல் போயுள்ளார்
இவர் கடந்த 31 ஆம் திகதி வீட்டில் இருந்து புறப்பட்டார் , இதுவரை வீடு திரும்பவில்லை இவ்வாறு காணாமல் போன வாலிபனை
தேடி கண்டு பிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்
மாயமான வாலிபன் உயிருடன் உள்ளாரா அல்லது கடத்தப் பட்டாரா என்பது தொடர்பில் தெரியவரவில்லை
இலங்கையில் தொடராக காணாமல் போகும் நிகழ்வுகள் அதிகரித்த வண்ணம் உள்ளது
குறிப்பிட தக்கது
சீனா மருத்துவ பொருட்கள் இலங்கை வந்தன
சீனா மருத்துவ பொருட்கள் இலங்கை வந்தன
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக தற்பொழுது
இலங்கைக்கு 500 மில்லியன் மருத்துவ உதவிகள் பொருட்களை வழங்கியுள்ளது
முதல் கட்டமாக இந்த தொகுதிகள் வந்தடைந்துள்ளது ,மேலும் இரு கட்டங்களில் ஏனைய மருத்துவ பொருட்கள் வந்தடையும் என சீனா தெரிவித்துள்ளது
வரும் வாரங்களில் அரசின் உதவிகள் முழுமையாக வந்தடையும் என எதிர்பார்க்க படுகிறது
பாரிய வெடிப்பு சம்பவம் – வீடுகள் சேதம்
பாரிய வெடிப்பு சம்பவம் – வீடுகள் சேதம்
எல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாகஹதென்ன, கஜு கஸ்வத்த பிரதேசத்தில்
வீடொன்றின் பின்புறம் வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இன்று (02) காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் சிக்கி அருகில் உள்ள பல வீடுகள் சேதமடைந்தாக தெரிவிக்கப்படுகின்றது.
வெடிகுண்டு ஒன்றே இவ்வாறு வெடித்ததாகவும், சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும்
எல்பிட்டிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார் .
எரிந்த மருத்துவமனை மருந்துகள் – விசாரணை ஆரம்பம்
எரிந்த மருத்துவமனை மருந்துகள் – விசாரணை ஆரம்பம்
இலங்கை ஹிரிபிட்டிய பிராந்திய வைத்தியசாலையில் உள்ள மருந்துகள் வைக்க படும்
சேமிப்பு அறையில் திடீரென தீ பற்றி கொண்டதில்
அந்த மருந்துகள் எரிந்து அழிந்துள்ளன
மின்சார கசிவினால் ஏற்பட்ட மின் ஒழுக்கே இந்த தீ பரவலுக்கு காரணம் என கண்டறிய பட்டுள்ளது
தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
வெள்ளத்தில் சிக்கி அதிகாரி மரணம்
வெள்ளத்தில் சிக்கி அதிகாரி மரணம்
அனர்த்த நிவாரணப் பணிகளை முடித்துக்கொண்டு இரத்தினபுரி குருவிட்டவில் உள்ள
தனது வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்த அதிகாரி ஒருவர் நேற்று (31) வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
குருவிட்ட, கோனாபிட்டிய பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளத்தினால் கிரியெல்ல பிரதேச
செயலகத்தின் அனர்த்த நிவாரண அதிகாரி புன்சிறி கருணாரத்ன இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அவர் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு வெள்ளம் சூழ்ந்த வீதியில் சுமார் 200 மீற்றர் தூரம்
வெள்ளத்தில் சிக்கி அதிகாரி மரணம்
நடந்து சென்று கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
அடித்து பாய்ந்த வெல்ல நீரில் சிக்கி அவர் இறந்த நிலையில் காணப்பட்டுள்ளார் ,
,சடலம் அடி காயங்களுக்கு உள்ளன நிலையில் மீட்க பட்டுள்ளது ,தமக்கு உதவிய அதிகாரி இறந்த செய்தி கேட்ட மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்
படுகொலை
முள்ளி வாய்க்கால் இனப் படு கொலையின் பின்னர் சிங்கள பகுதிகள் எங்கும் ஆண்டு தோறும் இவ்விதமான வெள்ளத்தில் சிக்கி பேரழிவை சிங்கள தேசம் சந்தித்து வருகின்றமை குறிப்பிட தக்கது
இலங்கை விமானங்களுக்கு பயன் படுத்தும் எரிபொருள் இரத்து – திணறும் இலங்கை
இலங்கை விமானங்களுக்கு பயன் படுத்தும் எரிபொருள் இரத்து – திணறும் இலங்கை
இலங்கை விமானங்களுக்கு பயன் படுத்தும் எரிபொருளை மலேசியா மற்றும் ஓமானில்
இருந்து இலங்கை கொள்வனவு செய்து வருகிறது
அவை தற்போது நிறுத்த பட்ட நிலையில் இலங்கை விமான பயணங்கள் பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளன
விரைவில் இலங்கை விமான பயணங்கள் இரத்தாகலாம் என எதிர் பார்க்க படுகிறது
புலிகள் புதைத்த எண்ணெய் பெரல்கள் -பணத்தை அள்ளும் சிங்கள இராணுவம்
புலிகள் புதைத்த எண்ணெய் பெரல்கள் -பணத்தை அள்ளும் சிங்கள இராணுவம்
இலங்கை – வடக்கு பகுதியில் இடம்பெற்ற இறுதி போரின் பொழுது தமிழீழ விடுதலை
புலிகளினால் பதுங்கு குழிகளுக்குள் புதைக்க பட்ட எண்ணெய் பெறல்கள் .,வெள்ளம் மற்றும் மக்கள் வீடுகளை துப்பரவு செய்யும் பொழுது கண்டு பிடிக்க பட்டுள்ளது
இவ்விதமான எண்ணெய் பெறல்களை மீட்ட இராணுவம் அதனை கொள்ளை இலாபதில் விற்று பணம் சம்பாதித்து வருகிறது
புலிகள் அழிந்த பின்னரும் அவர்கள் பயன் படுத்திய எரிபொருள்கள் இன்றுவரை சிங்கள அரசை வாழ
வைக்கிறது என்பது புலிகளின் தியாக செயலை காண்பிக்கிறது
எதிரிகளின் வாழ்வுக்கு எதிரி யாக விளங்கிய புலிகள் வாழ்வு கொடுத்துள்ளனர்
ஆனால் குறித்த செய்திகளை ஊடகங்களால்
கசியவிடாது சிங்கள படைகள் தடுத்துள்ளன என்பதே விடயம் அறிந்த வட்டாரங்கள் தகவலாக உள்ளது
உலக வங்கியிடம் 3 பில்லியன் கடன் கேட்டு அடம் பிடிக்கும் இலங்கை
உலக வங்கியிடம் 3 பில்லியன் கடன் கேட்டு அடம் பிடிக்கும் இலங்கை
இலங்கையின் நெருக்கடியை தீர்ப்பதற்கு உலக வங்கியிடம் இலங்கை மூன்று
பில்லியன் அமெரிக்கா டொலர்களை வாங்கிட பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளது
இந்த கடனை பெற்றாலும் இலங்கைக்கு அவை போதுமானதாக இல்லை
இந்தியா சீனாவிடம் பெற்று கொண்ட கடன்களை மீள் செலுத்துவதற்கே போதாமை
உள்ளது ,ஆனால் அதை தெரிந்தும் மேலும் நாட்டை படுபாதாளத்தில் தள்ளிடவும் ,
தமது அரசை தக்க வைத்து கொள்ளவும் பிச்சை கேட்டு நிற்கிறது இலங்கை பேரினவாதம்
லண்டனில் பிட்ஸா மோசடி – வைரலாகும் வீடியோ – கடுப்பான கஸ்ட்மர்கள்
லண்டனில் பிட்ஸா மோசடி – வைரலாகும் வீடியோ – கடுப்பான கஸ்ட்மர்கள்
பிரிட்டன் Westgate Pizza in Canterbury கடையில் கஸ்ட்மர் ஒருவர் 15 இஞ்சி பிட்ஸா ஆடர்
பண்ணினார் ,ஆனால் அந்த கடைக்காரர்களோ 13 இஞ்சி பீட்ஸாவை வைத்து 15 பெட்டியில் அனுப்பியுள்ளனர்
இதனை கண்டு கடுப்பான அவர் டேப் கொண்டு அதனை அளந்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார்
அதுவோ உலகம் முழுவதும் செம வைரலாகி வருகிறது ,இந்த காணொளி ஒன்றின்
பரவலை அடுத்து குறித்த கடையினை மக்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்
சாப்பாட்டில் கலர்படம் செய்தால் என்ன நிலையாகும் என்பதற்கு இந்த ஒரு காணொளி
உதாரணமாகும் ,இந்த காணொளி வைரலான நிலையில் குறித்த கடையின் நன்மதிப்பு கெட்டு விடுவதுடன் ,
அந்த கடையின் பெயரும் மக்கள் மனதில் இடம்பிடித்து விட்டது போங்க
கணவரை அறிமுகம் செய்த பிரபல நடிகை
கணவரை அறிமுகம் செய்த பிரபல நடிகை
கேரளாவை பூர்வீகமாக கொண்ட நடிகை பூர்ணா சமூக வலைதளத்தின் மூலம் வருங்கால கணவரை அறிவித்துள்ளார்.
வருங்கால கணவரை அறிமுகம் செய்த பிரபல நடிகை.. குவியும் வாழ்த்துக்கள்
பூர்ணா.பரத் நடிப்பில் வெளியான ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு’
திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் பூர்ணா. தமிழில் பிசாசு-2,
கந்தக்கோட்டை, காப்பான், ஆடுபுலி போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து பிரபலமடைந்தார். இவர் சில வெப்சீரிஸ்களில் நடித்து ரசிகரகளை கவர்ந்தார்.
சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் பூர்ணாவிற்கு அண்மையில் இருவீட்டாரின் சம்மத்தத்துடன் நிச்சயம் நடைபெற்றது. இந்நிலையில், தனது வருங்கால கணவர் ஆசிப்
அலியுடன் இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார். அதில், என் பெற்றோரின் ஆசியுடன் வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு செல்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
இவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெர்வித்து வருகின்ற
இலங்கையில் ஜனாதிபதியாகும் பசில் – என்ன தான் நடக்கிறது
இலங்கையில் ஜனாதிபதியாகும் பசில் – என்ன தான் நடக்கிறது
அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகினால் பசில் ராஜபக்ஷ
ஜனாதிபதியாக வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார சுட்டிக்காட்டியுள்ளார்.
21ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் ஜனாதிபதி
கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகினால் இவ்வாறானதொரு நிலைமை ஏற்படாது என வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு ரணில் உத்தரவு
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு ரணில் உத்தரவு
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட
மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
இதன்படி, பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க மற்றும் மாவட்ட செயலாளர்களுக்கு இடையில் ஆரம்பக்கட்ட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
களுத்துறை, கம்பஹா, காலி மற்றும் இரத்தினபுரி மாவட்ட செயலாளர்களுடன் இது தொடர்பான கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளன.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக திறைசேரி நடவடிக்கை திணைக்களம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக பிரதமரின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
மாவட்ட செயலாளர்கள் ஊடாக நிவாரண நிதி வழங்க நடவடிக்கை எடுக்குமாறும்
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பொது திறைசேரிக்கு பணிப்புரை விடுத்துள்ளார்
கார் ரயில் மோதல் -போக்குவரத்துக்கு பாதிப்பு
காலி-பூஸ்ஸ-வெல்லபட புகையிரத கடவையில் இன்று (01) காலை காலியில் இருந்து
கொழும்பு நோக்கி பயணித்த சாகரிகா கடுகதி புகையிரதத்தில் கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.
காரில் கராப்பிட்டிய வைத்தியசாலையின் தாதி ஒருவரும் மற்றுமொரு பெண்ணும்
பயணித்துள்ளதுடன் அவர்கள் காயமின்றி உயிர் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கார் சேதமடைந்துள்ளதுடன், புகையிரத கடவையில் உள்ள மணி மற்றும் சமிக்ஞை
விளக்குகள் பல மாதங்களாக இயங்கவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றன
ர்
இலங்கைக்கு உதவ சீனா தயாராம் -பொறியில் சிக்கும் இலங்கை
இலங்கைக்கு உதவ சீனா தயாராம் -பொறியில் சிக்கும் இலங்கை
நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க சீன தூதுவர் Qi Zhenhong, 5 வகையான உதவிகள் தொடர்பில் விபரித்துள்ளார்.
அதாவது வேகமாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், அதிகளவான வெளிநாட்டு நேரடி முதலீடு, வர்த்தகம், இரு தரப்பு கடன் தீர்வு மற்றும் இலங்கைக்கான ஆதரவு
ஆகியவற்றை கருத்தில் கொண்டு சீனாவிடம் இருந்து இலங்கைக்கு ஐந்து வழி முறையிலான உதவிகளை எடுத்துரைத்தார்.
கடந்த மே 24 அன்று அவர் தனது மனைவி ஜின் கியான் உடன் இலங்கையின் கிழக்கு மாகாணத்திற்கு மூன்று நாள் பயணத்தை திருகோணமலையில் இருந்து
தொடங்கினார், இவர்களுக்கு ஆளுநர் மற்றும் பல்வேறு தரப்பினரின் அன்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
தூதுவர் மற்றும் அவரது மனைவி Jin Qian ,சீன வர்த்தக சபை பிரதிநிதிகளுடன் வணிக மன்றத்தில் சந்திப்பு இடம்பெற்றது. அதன்போது இலங்கை எதிர்கொண்டுள்ள
தற்போதைய பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க,
சீன அரசு அதிக முதலீட்டை வழங்கி ஊக்குவிக்க எண்ணி உள்ளதாக தெரிவித்துள்ளார்
எட்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
நாட்டின் எட்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு, காலி, களுத்துறை, நுவரெலியா, மாத்தறை மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் இதுபற்றி எச்சரிக்கையாக இருப்பது அவசியமாகும்.
கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட, புளத்கொஹுபிட்டிய, வரக்காபொல ஆகிய நகரங்களுக்கும், மாத்தறை மாவட்டத்தின் கொட்டபொல, பிட்டபெத்தர ஆகிய பகுதிகளுக்கும் இரண்டாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கை அறிவித்தல்
விடுக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி மாவட்டத்தின் கிரி-அல்ல, பெல்மடுல்ல, அயகம, நிவித்திகல ஆகிய பிரதேசங்களிலும் மண்சரிவு அபாயம் காணப்படுகிறது.
இரத்தினபுரி மாவட்டத்தின் அலபாத்த, கலவான, குருவிட்ட, எஹலியகொட ஆகிய நகரங்களுக்கு மண்சரிவு தொடர்பான சிவப்பு எச்சரிக்கை அறிவித்தல்
விடுக்கப்பட்டுள்ளது. மண்சரிவு பற்றிய அறிகுறிகள் தென்படுமாயின் அங்குள்ளவர்கள் உடனடியாக பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்வது அவசியமாகும். இதுபற்றிய
மேலதிக தகவல்களை 117 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும்.
நாட்டின் பல்வேறு ஆறுகளினதும் நீர்மட்டம் அதிகரித்திருக்கிறது. மாதுலுஓயா, குடாகங்கை என்பனவற்றின் நீர்மட்டம் அதிகரித்துள்ளமையால் பத்தேகம, வெலிவிட்ட
, நியாமகம, நெலுவ, அக்மீமன, நாகொட, அல்பிட்டிய, போபே, போத்தல ஆகிய இடங்களின் தாழ்நிலப் பிரதேசங்களில் சிறு வெள்ளம் ஏற்படலாம். நில்வளா கங்கை – அளுத்கம – கல்ஹாகொட ஆகிய பகுதிகளில் பெருக்கெடுக்கலாம்.
குக்குலே கங்கை, தெதுறுஓயா ஆகிய நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளமையால் பிரதேச வாசிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென்று திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. இதேவேளை,
நாட்டில் தற்சமயம் நிலவும் மழையினால் கடல் பிரதேசம் கொந்தழிப்பாக இருக்கும் எனவும் இதனால் கடலுக்குச் செல்வோர் எச்சரிக்கையாக
இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
லண்டனில் 72 பேருக்கு குரங்கு நோய்
லண்டனில் 72 பேருக்கு குரங்கு நோய்
லண்டனில் புதிதாக பரவி வரும் குரங்கு நோயானது எழுபத்தி ஒரு பேருக்கு
தொற்றியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
இது உடலில் தொப்பளங்கள் போல ஏற்படுத்தி, பலத்த காய்ச்சலை ஏற்படுத்துகிறது
இவை ஆப்பிரிக்கா நாட்டில் இருந்து தொற்றி உலக நாடுகள் எங்கும் பரவி வருகின்றமை குறிப்பிட தக்கது
இசை நிகழ்ச்சியில் மாரடைப்பால் இறந்த பாடகர்
இசை நிகழ்ச்சியில் மாரடைப்பால் இறந்த பாடகர்
பாடகர் கேகே மறைவுக்கு பிரதமர், குடியரசு துணைத் தலைவர், மத்திய மந்திரிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கொல்கத்தா இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற நிலையில் மாரடைப்பு- பிரபல பின்னணி பாடகர் கேகே மரணம்
இந்தியத் திரையுலகின் பல்மொழி பாடகர்களில் ஒருவரான கேகே என்று அழைக்கப்படுபவர் பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத்.
ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் பெங்காலி உள்ளிட்ட பல மொழிகளில் பாடல்களை அவர் பாடியுள்ளார்.
கேரளாவை சேர்ந்த 53 வயதான பாடகர் கேகே, தமிழ் சினிமாவில் 50க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார் திரைத்துறையில் அறிமுகமாவதற்கு முன்னர் 3,500 விளம்பரங்களுக்கு பாடல் பாடியுள்ளார்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் 1997 ஆம் ஆண்டு வெளியான மின்சார கனவு படத்தில் இடம் பெற்ற ஸ்ட்ராபெர்ரி கண்ணே பாடல் மூலம் தமிழில் கேகே அறிமுகமானார். அந்த பாடலை அவர் பெபிமணியுடன் இணைந்து பாடியிருப்பார்.
மேலும் யுவன் சங்கர் ராஜா, தேவா, வித்யாசாகர், மணி சர்மா மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்டோர் இசையிலும் தமிழில் அவர் பாடியுள்ளார்.
காதல் வளர்த்தேன் (மன்மதன்), அப்படி போடு (கில்லி), காதலிக்கும் ஆசை (செல்லமே), நினைத்து நினைத்து (7ஜி ரெயின்போ காலனி), உயிரின் உயிரே (காக்க காக்க),) உள்ளிட்ட அவர் பாடிய பாடல்கள் தமிழக ரசிகர்கள் இடையே பிரபலமானவை…
இசை நிகழ்ச்சியில் மாரடைப்பால் இறந்த பாடகர்
இந்நிலையில், கொல்கத்தா மாநகரின் நஸ்ருல் மஞ்சா பகுதியில் நேற்று நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற கேகே ரசிகர்கள் முன்னிலையில் பாடல்களை பாடினார்.
அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். கச்சேரி முடிந்ததும் மயங்கி விழுந்த அவர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பால் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
முன்னாக அவர் கடைசியாக பங்கேற்றிருந்த மேடை இசை நிகழ்ச்சி குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனாது.
பாடகர் கேகே திடீர் மரணம் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், மிகுந்த சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பிரபல பாடகர் கேகே என்று அழைக்கப்படும் கிருஷ்ணகுமார் குன்னத்தின் அகால மறைவு வருத்தமளிக்கிறது.
அனைத்து வயதினரையும் கவர்ந்த அவரது பாடல்கள் பலவிதமான உணர்ச்சிகளை பிரதிபலித்தன. அவரது பாடல்கள் மூலம் நாம் எப்போதும் அவரை நினைவில்
கொள்வோம். அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். இவ்வாறு பிரதமர் தெரிவித்துள்ளார்.
இதேபோல் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, மத்திய மந்திரிகள் அமித்ஷா, அனுராக் தாக்கூர்,
கிரிக்கெட் வீரர் விரேந்திர சேவாக் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஆணாக மாறிய தமன்னா
ஆணாக மாறிய தமன்னா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான தமன்னா தற்போது புரிந்தஹ் செயல் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது
இந்தியாவின் தெலுங்கு படங்களில் அதிகம் கவனம் செலுத்தி இவர் நடித்து வருகிறார்.தமிழில் முன்னணி நடிகையாக திகழும் தமன்னா ‘கேடி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.
அன்றில் இருந்து சினிமாத்துறைக்குள் நுழைந்த சில ஆண்டுகளிலே தன் நடிப்பு திறமையால் அஜித், விஜய், சூர்யா என அனைத்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார்.
அதன்பின்னர், தெலுங்கு படங்களில் வாய்ப்பு கிடைக்க அங்கேயே அதிக கவனம் செலுத்தி வருகிறார்.தமிழில் இவர் நடித்த படங்கள் அதிக ஹிட்டான காலத்தில் அரசிகர்கள் மனதில் தமண்னா காதலியாக இடம் பிடித்தார்
தமன்னா
இந்நிலையில், தற்போது தமன்னாவின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. சேலையில் இருக்கும் தமன்னா அறையில் சென்ற சிறிது நேரத்தில்
ஆண்களுக்கான உடையணிந்து ஆணாக மாறி வரும் வீடியோவை ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
ஆணாக மாறிய தமன்னா
இந்த பதிவு ரசிகர்களை அதிகளவில் கவர்ந்து வருகிறது.மேலும் நாமமே ஆளு சூப்பராக உளளார் சுமா அங்காவே மாறி விடுங்கள் என் அநெட்டிசன்கள் கிண்டல் அடித்த வண்ணம் உள்ளனர்
தமன்னா அமெல்லிய உடல் தோற்ற கொண்ட கவர்ச்சியான நடிகையாகவும் ,ஆண்கள் மனதில் காதல் கன்னியாகவும் விளங்கி வருகிறார்
தமிழ் நடிகைகளில் முதன்மையான் இடத்தை இவர் பிடித்து தமிழக மக்கள் மனதிலும் தனக்கென்ற இடத்தை பிடித்தவர் தம்மனா என்பது குறிப்பிட தக்கது








