Tag: மர்ம
தந்தை மகள் சடலமாக மீட்பு – தொடரும் மர்ம கொலைகள்
களுத்துறை, ஹீனடியங்கல பிரதேசத்தில் வீடொன்றுக்குள் மர்மமான முறையில்
உயிரிழந்த இருவரின் சடலங்கள் நேற்று (30) பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
உயிரிழந்தவர்கள் தந்தை மற்றும் மகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
களுத்துறை, ஹீனடியங்கல சிசில உயன பகுதியைச் சேர்ந்த 69 வயதான சமரசிங்க
சுனில் ஜயசிங்க மற்றும் அவரது 33 வயது மகள் சசித்ரா ஹன்சமலி ஜயசிங்க ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர்.
தந்தை நாற்காலியில் அமர்ந்திருந்த நிலையிலும், மகள் அறையின் தரையில் சடலமாக
கிடந்ததாகவும் பொலிஸ் அவசர பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் களுத்துறை தெற்கு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
களுத்துறை பிரதேச குற்றத்தடுப்பு பிரிவினரால் பிரேத பரிசோதனையின் பின்னர்
சடலங்கள் களுத்துறை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
துரத்தும் மர்ம கொலையாளிகள் – -சுடலைக்குள் வீச பட்ட சடலம்
துரத்தும் மர்ம கொலையாளிகள் – -சுடலைக்குள் வீச பட்ட சடலம்
இலங்கையில் காணாமல் போன வலிகிழக்கு பிரதேச சபை உறுப்பினர் ஒருவர்
சுடலை க்கு அருகில் சடலமாக மீட்க பட்டுள்ளார் .
இதுவரை கடத்தி சென்ற கும்பல் கோரமான் தாக்குதலுக்கு உள்ளான பின்னர் இவ்வாறு பாடுகொலை புரிந்து மயானத்திற்கு அருகி சடலத்தை வீசி விட்டு சென்றுள்ளனர்
தனி நபர் பழிவாங்கலின் உச்சத்தின் கோரமாக இது பார்க்க படுகிறது ,கூலிக்கு நபர்களை கொலை செய்யும் குழு ஒன்று
தற்போது இலங்கை தழுவிய ரீதியில் செயல் படுகிறது ,அவ்வாறான குழுக்களே இந்த படு கொலைகளை தொடராக புரிந்து
வருகின்றனர் .கடத்தல் ,கப்பம்,லஞ்சம்,பாலியல் ,உறவுகள் என வகை
படுத்த பட்ட பிரிவுக்குள் நபர்களை உள்ளடக்கி அதன் பின்னர் இவ்விதம் கொலை செய்து வீச படுகின்றனர்
இவ்வாறு நிழல் போல தொடரும் இந்த மர்ம கொலைகள் ,கொலையாளிகள் தொடர்பில் மக்கள் பெரிதும் அச்சம் கொண்டுள்ளனர்
ஆளும் கோட்டபாய ,மகிந்தா ஆட்சியில் இவ்வாறன மர்ம கொலைகள் ,அதிகரித்த்து செல்வது குறிப்பிட தக்கது

- இந்தியா ஈரான் மோதல் உச்சம்

- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 70000ஐ நெருங்குகின்றன

- ஈராக்கில் தீவிர ஊழல் ஒழிப்பு நடவடிக்கையில் 375 கிலோ தங்கம் பறிமுதல்

- பொதுமக்களுக்கு பொலிஸ் எச்சரிக்கை

- மொஜ்தபா கமெனி 90% அழிந்துவிட்டார் டிரம்ப்

- 20% என்பது மிக அதிகம், ஈரான் நியாயமாக நடந்துகொள்ளும்

- பள்ளிகளுக்கான இரண்டாம் பருவத் தேர்வு தேதி

- பொலிஸ் அதிகாரி போல வேடமிட்டு மோசடி செய்த மூவர் கைது

- ஏர்பஸ் கையூட்டு விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு

- நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் 31பேர் பலி







