Tag: நடிகை
பிரபல நடிகை கைது
நடிகை கைது
பிரபல நடிகை கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இலங்கை காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற விசேட தகவலை அடுத்து இலங்கையின் பிரபல நடிகையாக இருக்கக்கூடிய, செமினி இட மா லோகடா என்கின்ற நடிகை தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவருக்கு எதிராக ஏழு பிடிவிறாந்துகள் விடுக்கப்பட்ட நிலையில் ,இந்த நடிகை கைது செய்யப்பட்டு, தற்பொழுது தங்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடிகை சட்டவிரோத செயல்பாடுகளில் ஈடுபட்டதாக தெரிவித்தும் ,இவர் மீது விதிக்கப்பட்டிருந்த 7 பிடிவிறாந்துகளும் தற்போது அமல்படுத்தப்பட்டு ,அந்த வழக்குகளின் அடிப்படையிலேயே, தற்போது கைது செய்யப்பட்டு நீதிமன்றில் பாரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல்வாதிகளுடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டு பாரிய குற்ற நடவடிக்கையில் நடிகை ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முழுமையான விசாரணைகள் முடிவடைந்து, இவர் விடுதலை செய்யப்படுகின்ற பொழுதுதான் ,இவர் என்ன செய்தார் என்ற விடயம் தெரிய வரும் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த நடிகை கைது செய்யப்பட்டதை அடுத்து ,அவரது ரசிகர்கள் கொந்தளிப்பில் உறைந்துள்ளதாக இலங்கை உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன.
- புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்

- புத்தாண்டில் இருவர் படுகொலை

- புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன

- புட்டால சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலி

- கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம் நாமல்

- 200க்கும் மேற்பட்ட ஈரானிய கடற்படை வீரர்கள் இலங்கையிலிருந்து புறப்பட்டனர்

- யாழில் சடலம் மீட்பு

- இன்று வரையறுக்கப்பட்ட பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள்

- புலிகள் ஆயுதக் கிடங்கில் வீழ்ந்த அனுரா

- பண்டிகைக் காலத்தில் சாலை விபத்து மரணங்கள்

நடிகை சவுந்தர்யா மரணத்தில் நடிகருக்கு தொடர்பு
நடிகை சவுந்தர்யா மரணத்தில் நடிகருக்கு தொடர்பு
நடிகை சவுந்தர்யா மரணத்தில் நடிகருக்கு தொடர்பு ,நடிகை சவுந்தர்யாவின் மரணத்தின் பின்னணியில், நடிகர் மோகன்பாபுவுக்கு தொடர்புள்ளதா ? என விசாரணை நடத்த கோரி தெலங்கானா மாநிலம் கம்மம் காவல் துணை
ஆய்வாளரிடம் சமூக ஆர்வலர் ஒருவர் புகார் அளித்துள்ளார். இது தென்னிந்திய திரைத்துறையில் புயலை கிளப்பி உள்ளது.
தமிழ், தெலுங்கு, கன்னடம் என 1990-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சவுந்தர்யா. குடும்பப்பாங்கான நடிகை என இவருக்கு ஒரு ரசிகர் பட்டாளமே இருந்தது.
தமிழில் நடிகர் கார்த்திக்குடன் இவர் நடித்த பொன்னுமணி படத்தை தொடர்ந்து இவர் அருணாச்சலம், படையப்பா, காதலா காதலா,
சொக்கத்தங்கம் என ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த் முன்னணி நடிகர்கள் அனைவருடன் நடித்து புகழ் பெற்றார்.
இதேபோன்று தெலுங்கிலும் இவர் சிரஞ்சீவி, வெங்கடேஷ், நாகார்ஜுனா, பாலகிருஷ்ணா, மோகன்பாபு என அனைத்து முன்னணி நடிகர்களின் படத்திலும் நடித்து புகழ் பெற்றார்.
இந்நிலையில் இவர் 2003-ம் ஆண்டில் உறவினர் ரகு என்பவரை திருமணம் செய்து கொண்டார். பிறகு பாஜகவில் இணைந்தார்.
இந்நிலையில், கடந்த 17.4.2004 ஆம் ஆண்டு, தேர்தல் பிரச்சாரத்திற்காக நடிகை சவுந்தர்யா பெங்களூரில் இருந்து தெலங்கானா மாநிலம் கரீம்நகருக்கு செஸ்னா-180 ரக சிறப்பு விமானத்தில் புறப்பட்டார்.
அவருடன் அவரது சகோதரர் அமர்நாத்தும் உடன் இருந்தார். புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அந்த விமானம், பெங்களூரு வேளாண் பல்கலை கழகத்தின், காந்தி க்ருஷி விஷன் கேந்திரா வளாகத்தில் தீப்பிடித்து விழுந்தது.
இந்த கோர விபத்தில் சவுர்யாவும், அவரது சகோதரர் அமர்நாத்தும் பரிதாபமாக உடல் கருகி உயிர் இழந்தனர்.
அந்த சமயத்தில் நடிகை சவுர்தர்யா கர்ப்பமாக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்த சம்பவம் நடந்து சுமார் 21 ஆண்டுகளாகிவிட்டன.
இந்நிலையில், நடிகை சவுந்தர்யாவின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக தெலங்கானா மாநிலம், கம்மம் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் சிட்டிமல்லு
என்பவர் கம்மம் மாவட்ட ஆட்சியரிடமும், காவல் துறை ஆணையரிடமும் புகார் மனு அளித்துள்ளார்.
அந்த மனுவில் சிட்டிமல்லு கூறும்போது, “ஹைதராபாத் சம்ஷாபாத் விமான நிலையம் அருகே நடிகை சவுந்தர்யாவுக்கு 6 ஏக்கர் நிலம் இருந்தது.
இதனை நடிகர் மோகன்பாபு கேட்டார். ஆனால், அவருக்கு சவுந்தர்யா கொடுக்க மறுத்து விட்டார். இந்த தகராறு ஏற்பட்ட பின்னர், சவுந்தர்யா விமான விபத்தில் உயிர் துறந்தார்.
தற்போது அந்த இடம் நடிகர் மோகன்பாபு வசம் உள்ளது. இது எப்படி சாத்தியம் ? ஆதலால், நடிகை சவுந்தர்யாவின் மரணம் ஒரு சதித் திட்டமாக கூட இருக்க வாய்ப்பு உள்ளது.
இதன் காரணமாக நடிகர் மோகன்பாபுவை விசாரிக்க வேண்டும்” என்று புகார் மனுவில் கூறியுள்ளார்.
நடிகை சவுந்தர்யா இறந்த விவகாரம், 21 ஆண்டுகள் கழித்து மீண்டும் எழும்பியுள்ளது திரையுலகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
14 8 கிலோ கிராம் தங்க நகைகளை கடத்தி வந்தத நடிகை
14 8 கிலோ கிராம் தங்க நகைகளை கடத்தி வந்தத நடிகை
14 8 கிலோ கிராம் தங்க நகைகளை கடத்தி வந்தத நடிகை ,டுபாயில் இருந்து 14.8 கிலோ கிராம் தங்க நகைகளை கடத்தி வந்ததாக நடிகை ரன்யா ராவ் பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடக மாநிலம் சிக்கமகளூருவை சேர்ந்த ரன்யா ராவ் (32) கன்னடம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் நடிகர் விக்ரம் பிரபு நடித்த ‛வாகா’ திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
இந்நிலையில் திங்கட்கிழமை (03) இரவு ரன்யா ராவ் டுபாயில் இருந்து பெங்களூருக்கு எமிரேட்ஸ் விமானத்தில் வந்துள்ளார்.
அவர் அனுமதிக்கப்பட்ட அளவை காட்டிலும் அதிக தங்க நகைகளை அணிந்திருந்தார்.
அவரது உடைமைகளை சோதித்தபோது 25 தங்க கட்டிகள் இருந்துள்ளன. இதனால் சந்தேகம் அடைந்த வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள், அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
கர்நாடக பொலி டிஜிபி அந்தஸ்தில் இருக்கும் ஐபிஎஸ் அதிகாரியின் மகள் எனவும், பெங்களூரு மாநகர பொலிஸார் என்னை வீட்டுக்கு அழைத்துச் செல்வார்கள் எனவும் ரன்யா ராவ் கூறியுள்ளார்.
இருப்பினும் சந்தேகம் அடைந்த அதிகாரிகள், அவரை வருவாய் புலனாய்வு இயக்குநரக அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.
அதில் ரன்யா ராவ் கடந்த 15 நாட்களில் 4 முறை டுபாய்க்கு பயணம் செய்தது தெரியவந்துள்ளது.
ஒவ்வொரு முறையும் தங்கம் கடத்தி வந்திருப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சட்ட விரோதமாக தங்கம் கடத்தியதாக ரன்யா ராவ் மீது அதிகாரிகள் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அவரிடம் இருந்த 14.8 கிலோ கிராம் தங்கத்தையும் பறிமுதல் செய்தனர். அவரை நேற்று பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, 3 நாள் காவலில் எடுத்துள்ளனர்.
நடிகை ரன்யா ராவ் தங்கம் கடத்திய வழக்கின் பின்னணியில் முக்கிய புள்ளிகள் சிலர் இருக்கலாம் என வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
அந்த கும்பல், அவரை தங்கம் கடத்த பயன்படுத்தி இருக்கலாம் என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.
நடிகை மோசடி சொத்து முடக்கம்
நடிகை மோசடி சொத்து முடக்கம்
நடிகை ஷில்பா ஷெட்டி மோசடி வழக்கில் அவரது 97 கோடி சொத்து முடக்கம்,திரை பிரபலங்கள் நடிகை செயலினால் அதிர்ச்சி .
பிட்காயின் மோசடியில் ஷில்பா ஷெட்டி
பிட்காயின் மோசடியில் நாடிகை ஷில்பா ஷெட்டி ஈடுபட்டதாக தெரிவித்து வருமானவரி நடத்திய சோதனையின் பொழுதே மேற்படி விடயம் அம்பலத்திற்கு வந்துள்ளது .
தனது திரையுலக புகழை மைய படுத்தி, இவர் இந்த பிட் கொயின் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
உக்ரைனில் பிட்காயின் Mining Farm
உக்ரைனில் பிட்காயின் Mining Farm அமைக்க ராஜ் குந்த்ரா 285 பிட் கொயினை வாங்கியுள்ளார் .
அதன் இன்றைய சந்தை மதிப்பு 150 கோடி ரூபாய் என தெரிவிக்க பட்டுள்ளது .திட்டமிட்டு பிட்கொயின் மோசடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்ற சாட்டில் வழக்கு தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
நடிகை கோடி சொத்து பறிமுதல்
இந்த மோசடி வழக்கின் அடிப்படையில் நடிகை ஷில்பா ஷெட்டியின் மும்பை ஜுகுவில் இருக்கும் வீடு, புனேயில் ராஜ் குந்த்ரா பெயரில் இருக்கும் பங்களா பறிமுதல் செய்ய பட்டன .
அவற்றுடன் கணவர் ராஜ் குந்த்ரா பெயரில் இருக்கும் பங்குகளும் பறிமுதல் செய்ய பட்டுள்ளன .
இந்திய திரையுலகில் நடிகை ஷில்பா ஷெட்டி சொத்துக்கள் பறிமுதல் செய்ய பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளதால் ,மேலும் பல திடுக்கிடும் விடயங்கள் வெளிவர கூடும் என எதிர் பார்க்க படுகிறது .
இவர்களானால் பாதிக்க பட்டவர்கள் வழங்கிய இரகசிய தகவலை அடுத்தே, இந்த வேட்டையில் அமுலாக்கள் பிரிவு ஈடுபட்டு ,இந்த பறிமுதல் செய்த்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .
நரேந்திர மோடி ஆடசியில் நடக்கும் மிரட்டல்
நரேந்திர மோடி ஆட்சியில் இவ்வாறு பிரபலகள் மிரட்டப்பட்டு அவர்களது சொத்துக்கள் பறிமுதல் செய்ய பட்டு வருவதாக ,சில சமூகவலை பதிவுகள் தெரிவிக்கின்றன .
பல அரசியல்வாதிகள் வீடுகள் ,தொழில் நிறுவனங்கள் வீடுகளில் நடத்த பட்ட அமலாக்க படையின் தேடுதலின் பொழுது, கோடி கணக்கில் பணம் வாங்க பட்டதான செய்திகள் வெளியான நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அதனால் நடிகை ஷில்பா ஷெட்டியம் அரசியல் பழிவாங்கல் ஊடாகவே பழிவாங்க பட்டுள்ளனர் எனவும் ,ஏனைய திரை பிரபலங்களுக்கும் இதன் ஊடாக எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
நடிகை ரம்யா வணிகசேகர காலமானார்
நடிகை ரம்யா வணிகசேகர காலமானார்
பழம்பெரும் சிங்கள நடிகை ரம்யா வணிகசேகர காலமானார்.
இவர் பத்திரிகையாளராகவும், வானொலி செய்தி தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.
ரம்யா வணிகசேகர காலமாகும் போது அவருக்கு வயது 73 ஆகும்
நடிகை கருக்கலைப்பு சீமான் வழக்கு சிக்கிய நடிகை பிரபலங்கள்
நடிகை கருக்கலைப்பு சீமான் வழக்கு சிக்கிய நடிகை பிரபலங்கள்
நடிகை விஜய லட்சுமி தன்னை சீமான் கற்பழித்து விட்டார் என்ற அவதூறுக்கு சீமான் வழக்கு தாக்கல் செய்துள்ளார் .
சென்னை நீதிமன்றில் வழக்கு விசாரணைக்கு வந்த பொழுது நீதிபதி காவல்துறையை தெறிக்க விட்டார் .
நடிகையுடன் ஓட்டலில் தங்கிய நடிகர் செருப்பால் அடிக்க வந்த மனைவி
நடிகையுடன் ஓட்டலில் தங்கிய நடிகர் செருப்பால் அடிக்க வந்த மனைவி
கொட்டல் ஒன்றில் நடிகரொருவருடன் நடிகை தங்கி இருந்ததை அறிந்த மனைவி நடிகையை இருப்பால் அடித்த காட்சிகள் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளன.
படங்களில் நடத்திட நடிகர் மாருடன் இவ்வாறு நடிகைகள் தங்குவது இயல்பான ஒன்றாக திரையுலகில் இடம்பெற்று வருகிறது .
அவ்வாறான நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது .
நடிகருடன் நடிகை கொட்டலில் தங்கிய விவகாரமும் மனைவி செருப்பால் அடிக்க வந்த செயலும் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதெல்லாம் சினிமாவில் சகாயமப்பா .
மீனாவின் கணவர் மரணம் அதிர்ச்சியில் திரையுலகம்
இந்தியா ;மீனாவின் கணவர் மரணம் அதிர்ச்சியில் திரையுலகம்
நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நேற்று இரவு காலமானார்.
வயது 48 வயதாகும் இவருக்கு சில தினங்களுக்கு முன் திடீரென நுரையீரலில்
தொற்று அதிகமானதால், நுரையீரல் மற்றும் இதயம் செயலிழந்து தனியார்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு உறுப்புகள் கிடைக்காத நிலையில்,
ஒவ்வொரு உறுப்புகளும் செயலிழந்து சிகிச்சை பலனின்றி நடிகை மீனா கணவர் வித்யாசாகர் நேற்று (28.06.2022) உயிரிழந்தார்.
அவரது உடல் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
மீனாவின் கணவர் மரணம் அதிர்ச்சியில் திரையுலகம்
இன்று காலை நடிகர்கள் ரஜினி, சரத்குமார், பிரபுதேவா, சுந்தர்.சி, நாசர், மன்சூர் அலிகான், நடிகைகள் சினேகா,
சங்கீதா, இயக்குனர்கள் கே.எஸ்.ரவிகுமார், ரமேஷ் கண்ணா உள்ளிட்ட பல திரையுலகினர் நேரில் சென்று வித்யாசாகர்
உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அதன்பின்னர் வித்யாசாகரின் உடல் ஊர்வலமாக பெசன்ட் நகர் மின்மயானத்துக்கு
எடுத்துச்செல்லப்பட்டது. ஊர்வலம் மின்மயானத்தை அடைந்ததும் அவருக்கு இறுதி சடங்குகள் செய்யப்பட்டன.
அவருடைய மனைவி மீனா இறுதி சடங்குகளை செய்தார். அதன்பின்னர் வித்யாசாகரின் உடல் தகனம் செய்யப்பட்டது.
மலேசியா பீச்சில் மல்லு கட்டும் நடிகை
மலேசியா பீச்சில் மல்லு கட்டும் நடிகை
மாலைதீவில் தென் இந்தியாவின் பிரபல நடிகை Divyangana Jain பீச் ஒன்றில் நீச்சல் உடையில் கலக்கும் காட்சிகள் வெளியாகி ரசிகர்களை குஷி படுத்தியுள்ளது
மாலைதீவுக்கு விடுமுறைக்கு பயணித்த நடிகை Divyangana Jain நீச்சல் குளத்தில் படு கவர்ச்சி கரமாக தனது காட்சி படங்களையே பிடித்து வெளியிட்டுள்ளார்
மலேசிய நீச்சல் குளத்தில் மல்லு கட்டிய நடிகையின் இந்த காட்சிகளை சமுக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆக்கி வருகிறார்கள் இவரது பரம ரசிகர்கள்,
குளியல் காட்சியில் நடிகை காண்பித்த அட்டகாச காட்சிகள் பார்ப்பவர்களை மிரள வைக்கிறது சும்மா சொல்லப்படாது அம்மணி அட்டகாசம் அசத்துறாங்க என குசுபம்பர்கள் குலாவி மகிழ்கின்றனர்
பல ஆண் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த பெருமை நடிகை Divyangana Jain சாரும் இந்த காட்சிகளுக்கு மத்திய அரசால் ஆவ்ர்டு வழங்க வேண்டும் எனவும் பரிந்துரை செய்கினறனர்
இதன் ஊடக எனினும் பத்மபூஷன விருது கிடைக்க வேண்டுவதாக சிரிக்க வைக்கும் கமெண்டுகளை தெறிக்க விடுகின்றனர் நமட்டு ரசிப்பு ரசிகர்கள்
மலேசியா பீச்சில் மல்லு கட்டும் நடிகை
பல மொழிகளில் நடித்து தனது நடிப்பு திறமையை காண்பித்த நடிகை ,மக்கள் மனங்களில் நீங்காத இடத்தை பிடித்து வீட்டில் ஒருவராக ரசிகர்கள் மனங்களில் குடி கொண்டு விட்டார்

அவரது இந்த கவர்ச்சி காட்சிகளை கண்ணுற்றவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்
ரசிகர்களை ஏங்க வைத்து தனது மறு காட்சிகளை காண்பிக்க தயராகி வரும் நடிகையின் அடுத்த வெளியீட்டுக்கு காத்துள்ளது ஒரு கூட்டம்
கொரனோ காலத்தின் பின்னர் பட வாய்ப்பை இழந்த பல நடிகைகள் தமது சமூக வலைத்தளங்கள் வாயிலாக கவர்ச்சி காட்டும் படங்களையே வெளியிட்டு இயக்குனர்களுக்கு வலை வீசி வந்தனர்
அவ்விதம் மேலும் பல படங்களில் நடித்திட தாம் தாராளம் காட்டிட தயார் என்ற வெளிப்படையான அறிவிப்பை இந்த மலேசியா பீச்சில் மல்லு கட்டும் காட்சிகள் ஊடக தெரிவித்துள்ளார்
விடயத்தை தெரிவித்து விட்டோம் இனி நீங்கள் விடயத்தை காவி வாருங்கள் ,நீங்கள் கூறுவதை போன்று நடிக்க நாங்கள் தயார் என்ற பகிரங்க அறிவிப்பையும் நடிகை வெளியிட்டு விட்டார்
இதுவே இப்பொழுது நடிகைகள் மத்தியில் டிரெண்ட் ஆகி வரும் வியாபார தொழிலாக மாறிவிட்டது .
கவர்ச்சியில் கலக்கும் பிக்பாஸ் பிரபலம்
கவர்ச்சியில் கலக்கும் பிக்பாஸ் பிரபலம்
பிக்பாஸ்’ மூலம் பிரபலமான நடிகை சமூக வலைதளத்தில் பதிவிட்ட புகைப்படங்கள் ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமடைந்து, பிறகு சினிமாவில் வலம் வந்த பலரில் ரைசா வில்சனும் ஒருவர். பிக்பாஸ் சீசன் 1-இல் பங்கேற்று பியார் பிரேமா காதல் படத்தின்
மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். துருவிக்ரம் நடித்த வர்மா படத்திலும் நடித்தார். இவர் தற்போது தி சேஸ் படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் பல படங்களில் நடித்து வருகிறார்.
கவர்ச்சியில் கலக்கும் பிக்பாஸ் பிரபலம்
சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ரைசா அவரது புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருவது வழக்கம். அதன்படி, தற்போது தனது நண்பர்களுடன்
கோவாவிற்கு சுற்றுலா சென்றுள்ள ரைசா வித்யாசமான உடையில் கோவில் வலம் வரும் புகைப்படங்களை
சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறது.
அரைகுறை ஆடை காதலனுக்கு பிடிக்கவில்லை நடிகை
அரைகுறை ஆடை காதலனுக்கு பிடிக்கவில்லை நடிகை
புதிய காதலன் ஆதில் கான் துரானி, தான் ஆடைகளைத் தேர்ந்தெடுப்பதில் சரியில்லை என்றும், ‘அதிக மூடிய’ ஆடைகளையே அணிய வேண்டும் என விரும்புவதாகவும் ராக்கி சாவந்த் கூறினார்.
அரைகுறை ஆடை அணிவது என் காதலனுக்கு பிடிக்கவில்லை – பிரபல நடிகை
ராக்கி சாவந்த்
பிரபல பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் தன் காதல் கணவரான ரித்தேஷை பிரிந்துவிட்டதாக அண்மையில் அறிவித்தார். அதன்பிறகு ஆதில் கான் துரானி என்பவரை காதலிப்பதாக கடந்த வாரம் அறிவித்தார். ஆதிலின் குடும்பம் நான்
கவர்ச்சியான உடை அணிவதால் என்னை இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை. நான் ஆடை அணிவது அந்த குடும்பத்திற்கு பிடிக்கவில்லை என கூறி இருந்தார். இந்த
நிலையில் காதலன் ஆதில் கான் துரானி உடனான உறவின் காரணமாக ராக்கி சாவந்த் மீண்டும் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துள்ளார். ஆதில் கான் தனக்கு
பிஎம்டபிள்யூ கார் கொடுத்ததைப் பற்றி அவர் பதிவிட்டுள்ளார், மேலும் ஆதில் துபாயில்
தனது பெயரில் ஒரு வீட்டை வாங்கி உள்ளார். மற்ற அனைத்தையும் விட அவரது அன்பை தான் அதிகம் மதிக்கிறேன்.
ஒரு ஆண் தனது காதலியை உறவின் ஆரம்பத்தில் தனது குடும்பத்திற்கு அறிமுகப்படுத்துவது பெரும்பாலும் இல்லை. இருப்பினும், ஆதில் மற்றும் அவரது
குடும்பத்தினருடன் என்னை அறிமுகபடுத்தினார். அவர் தனது குடும்பத்தில் இருந்து சில ‘எதிர்ப்பு’ இருப்பதாக ஒப்புக்கொண்டார், தனது கடந்த காலத்தைப் பற்றி அவரிடம்
கூறியதற்காகவும். எதையும் மறைக்காமல் இருந்ததற்காகவும் பாராட்டினார். வேலையை விட்டு விலகுவது போன்ற எந்த கட்டுப்பாடுகளையும் ஆதில் தன் மீது
விதிக்கவில்லை. ஆனால் சில விஷயங்கள் உள்ளன. கவர்ச்சி குறைவான மற்றும் அதிக
மூடிய ஆடைகளை அணிய வேண்டும் என்று ஆதில் விரும்புகிறார் என நான் நினைக்கிறேன் என ராக்கி சாவந்த் கூறினார்.
தற்கொலைகள்.. மீண்டும் ஒரு நடிகை மரணம்
தற்கொலைகள்.. மீண்டும் ஒரு நடிகை மரணம்
நடிகை பிதிஷா தற்கொலை செய்த 2 நாளில் அவரது தோழியான பிரபல மாடல் அழகியும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தொடரும் தற்கொலைகள்.. மீண்டும் ஒரு நடிகை மரணம்
மஞ்சுஷா நியோகி
மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் டம்டம் என்ற இடத்தில் நாகர்பஜார் பகுதியில் உள்ள வாடகை குடியிருப்பு ஒன்றில் கடந்த 4 மாதங்களாக வசித்து வந்தவர் பிதிஷா டி மஜும்தார் (வயது 21). பிரபல மாடலான இவர் வங்காள மொழி படத்திலும்
நடித்து உள்ளார். சில தினங்களுக்கு முன்பு பிதிஷா தனது குடியிருப்பில் கடந்த 25ந்தேதி மாலை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மஞ்சுஷா நியோகி – பிதிஷா டி மஜும்தார்
இதுபற்றி தகவல் அறிந்து அவரது குடியிருப்புக்கு வந்த பேரக்பூர் நகர போலீசார் குடியிருப்பின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். தூக்கில் தொங்கிய பிதிஷாவின் உடலை கைப்பற்றி ஆர்.ஜி.கர் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி
வைத்தனர். அந்த குடியிருப்பில் தற்கொலை குறிப்பு ஒன்றையும் போலீசார் கைப்பற்றினர். பிதிஷாவுக்கு அனுபாப் பேஹ்ரா என்ற காதலர் உள்ளார். அவருக்கு
பிதிஷா தவிர்த்து 3 தோழிகள் இருந்துள்ளனர். பேஹ்ராவுடனான நட்புறவால் பிதிஷா மனஅழுத்தத்தில் இருந்துள்ளார் என பிதிஷாவின் தோழிகள் கூறியுள்ளனர்.
இந்நிலையில், பிதிஷாவின் தோழியான வங்காளத்தின் மாடலான மஞ்சுஷா நியோகி என்பவரும் தற்கொலை செய்துள்ளார். மஞ்சுஷா கொல்கத்தாவின் படுளி பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், தனது அறையில் உள்ள
மின் விசிறியில் தூக்கு போட்டு அவர் தற்கொலை செய்துள்ளார். அவரது உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து உள்ளனர். இதுபற்றி மஞ்சுஷாவின் தாயார் கூறும்போது, பிதிஷாவுடன் ஒன்றாக வசிக்க வேண்டும் என
மஞ்சுஷா தொடர்ச்சியாக கூறினார். பிதிஷாவை பற்றியே எப்போதும் பேசி கொண்டே இருந்துள்ளார். பிதிஷாவை போன்று நமது வீட்டுக்கும் ஊடகக்காரர்கள் வருவார்கள் என மஞ்சுஷா என்னிடம் கூறியபோது அவளை திட்டினேன்.
ஆனால், அதேபோன்று நடந்துள்ளது என கூறியுள்ளார். கடந்த 15ந்தேதி வங்காளத்தின் பிரபல தொலைக்காட்சி நடிகையான பல்லவி டே கொல்கத்தாவில் உள்ள தனது குடியிருப்பில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். தொடக்க கட்ட
விசாரணையில் அவர் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார் என தெரிய வந்துள்ளது என்று போலீசார் கூறினர். இந்நிலையில்,
கொல்கத்தாவில் 12 நாட்களுக்குள் அடுத்தடுத்து 3 பிரபலங்கள் உயிரிழந்து உள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
கொழுப்பு குறைப்பு அறுவை சிகிச்சையின் போது நடிகை மரணம்
கொழுப்பு குறைப்பு அறுவை சிகிச்சையின் போது நடிகை மரணம்
கீதா, தொரசானி, ஒலவின நில்தானா போன்ற தொலைக் காட்சித் தொடர்களில் நடிகை சேத்தனா ராஜ் நடித்துள்ளார்.
கொழுப்பு குறைப்பு அறுவை சிகிச்சையின் போது நடிகை மரணம்- மருத்துவமனை மீது போலீசார் வழக்குப் பதிவு
சேத்தனா ராஜ், வரதராஜ்
கர்நாடக மாநிலம், பெங்களூரைச் சேர்ந்தவர் வரதராஜ் என்பவரது மகள் சேத்தனா ராஜ் தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.
இந்நிலையில் உடல் கொழுப்பை குறைக்கும் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று மாலை உயிரிழந்தார்.
பெங்களூரு ராஜாஜி நகரிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த நடிகை சேத்தனா ராஜிற்கு மூச்சு திணறல் ஏற்பட்ட நிலையில் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்த பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் தனியார் மருத்துவமனை மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் மருத்துவமனையின் அலட்சியத்தால் தமது மகள் உயிரிழந்ததாக நடிகையின் பெற்றோர் பெற்றோர் குற்றம் சாட்டி உள்ளனர். அறுவை சிகிச்சை வேண்டாம் என்று என் மகளிடம் கேட்டுக் கொண்டேன். ஆனால் தமக்கு தெரியாமல் அவர் மருத்துவமனையில் சேர்ந்தார் என அவரது தந்தை வரதராஜ் குறிப்பிட்டுள்ளார்.
அறுவை சிகிச்சையின் போது தமது மகளுக்கு மூச்சு விடுவதில் சிக்கல் இருப்பதாக மருத்துவமனை ஊழியர்கள் என் மனைவியிடம் தெரிவித்தனர். நாங்கள் அவளை வேறு மருத்துவமனைக்கு மாற்றினோம், அங்கு அவள் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர் என வரதராஜ் தெரிவித்துள்ளார்.
போதுமான உபகரணங்களின்றி அறுவை சிகிச்சை செய்ததால், என் மகள் உயிரிழந்தார் என்றும் அவர் கூறியுள்ளார்.
22 வயதான நடிகை சேத்தனாராஜ் கீதா, தொரசானி, ஒலவின நில்தானா உள்ளிட்ட கன்னட தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார்.
மேலும் ஹவயாமி என்ற கன்னட சினிமாவிலும் நடித்துள்ளார்.
சாய்பல்லவி எடுத்த முடிவு.. வருத்தத்தில் ரசிகர்கள்
சாய்பல்லவி எடுத்த முடிவு.. வருத்தத்தில் ரசிகர்கள்
மாரி 2 படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்த சாய்பல்லவி எடுத்த முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சாய்பல்லவி எடுத்த முடிவு.. வருத்தத்தில் ரசிகர்கள்
சாய்பல்லவி
மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் 2015-ம் ஆண்டு வெளியான ‘பிரேமம்’ திரைப்படம் மூலம் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து தென்னிந்திய
அளவில் பிரபலமானவர் நடிகை சாய் பல்லவி. தொடர்ந்து மலையாளத்திலேயே ‘களி’ என்ற படத்தில் துல்கர் சல்மானுடன் நடித்து மலையாளத்தில் முன்னணி நடிகைகளில்
ஒருவரானார். பின்னர் ‘பிடா’ என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தெலுங்குக்குச்
சென்ற சாய் பல்லவி, விஜய் இயக்கத்தில் வெளியான ‘தியா’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார்.
தற்போது சாய்பல்லவி படங்களில் நடிப்பதைக் குறைத்து கொண்டு வருகிறார் என்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. ஷியாம் சிங்காராய் படம்
ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து அவருக்கு நிறைய படங்கள் நடிக்க வாய்ப்பு வந்தும் எந்த படத்திலும் நடிக்க ஒத்துக்கொள்ளவில்லை.
அவரது கடைசி படமாக ராணா டகுபதியுடன் விராட பர்வம் என்ற படத்தில் நடித்திருந்தார். இதன் வெளியீடு தள்ளிப்போய்க் கொண்டே இருந்தது.
சமீபத்தில் தயாரிப்பாளர்கள் ஜூலை 1-ம் தேதி இப்படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். ஆனாலும் இதன் பிறகு வேரு எந்த படங்களிலும் சாய் பல்லவி
நடிக்க சம்மதிக்காதது ரசிகர்களுக்கு ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சாய்
பல்லவிக்கு திருமண ஏற்பாடுகள் நடக்கிறதோ என்பதுதான் அந்த சந்தேகம்.
இது பற்றி இணையத்தில் ரசிகர்கள் பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.
நடிகர் மீது -நடிகை பாலியல் புகார்
நடிகர் மீது -நடிகை பாலியல் புகார்
நடிகை பாலியல் புகாரில் தலைமறைவான விஜய்பாபு விவகாரத்தில், நடிகர் சங்கத்தில் இருந்து நடிகை திடீர் என்று விலகியுள்ளார்.
மலையாள திரைப்பட உலகில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இருந்த விஜய்பாபு மீது ஒரு நடிகை பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக விஜய்பாபு மீது போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில் அவர்
தலைமறைவாகிவிட்டார். இந்த நிலையில் விஜய்பாபு மீது மேலும் சில பெண்கள் பாலியல் புகார்களை கூறி வருகின்றனர்.
இந்த சூழலில் மலையாள நடிகர் சங்கமான அம்மாவில் இருந்து விஜய்பாபுவை நீக்க வேண்டும் என பலரும் போர்க்கொடி தூக்கினர். இதனைத் தொடர்ந்து தானே
சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் பதவியில் இருந்து விலகப்போவதாக நடிகர் விஜய்பாபு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜய்பாபு
அதேநேரம் தன் மீதான புகார்கள் அனைத்தும் வேண்டுமென்றே கூறப்பட்டிருப்பதாகவும் அதில் இருந்து மீண்டு வருவேன் என்றும் அவர் கூறியிருந்தார்.
இந்த நிலையில் விஜய்பாபு மீது நடவடிக்கை எடுக்கப்படாததற்கு கண்டனம் தெரிவித்து, சங்கத்தின் பொறுப்பில் இருந்து விலகுவதாக நடிகை மாலாபார்வதி
தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, பாலியல் புகாரில் சிக்கியுள்ள விஜய்பாபு, பாதிக்கப்பட்ட நடிகையின் பெயரை வெளிப்படுத்தி உள்ளது சட்டத்தை
மீறிய செயலாகும். அவர் மீது நடவடிக்கை எடுக்க அம்மா சங்க விசாரணைக்குழுவில் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில்
இது குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.
இதனை கண்டித்து மலையாள நடிகர் சங்கத்தின் புகார்கள் விசாரணைக் குழுவில் இருந்து விலகியுள்ளேன் என்று அவர் கூறியுள்ளார்.
குஷ்பு மருத்துவமனையில் திடீர் அனுமதி
குஷ்பு மருத்துவமனையில் திடீர் அனுமதி
நடிகை குஷ்பு அண்மையில் அரசியல் காரணங்களுக்காக டெல்லி பயணம் சென்றுள்ள நிலையில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர்சிக்குள்ளாக்கி உள்ளார்.
நடிகை குஷ்பு மருத்துவமனையில் திடீர் அனுமதி
குஷ்பு
சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் குஷ்பு அண்மையில் அரசியல்
காரணங்களுக்காக டெல்லி பயணம் சென்றுள்ளார். அதை முடித்துவிட்டு வீடு திரும்புவார் என்று பார்த்தால் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திடீரென அவருக்கு என்ன ஆனது என்பது தெரியவில்லை,
ஆனால் கையில் சுற்றிய ஊசியுடன் புகைப்படம் எடுத்து
அதை டுவிட்டரில் பதிவுசெய்து குணமடைந்து வருகிறேன் என பதிவு செய்துள்ளார்.
பட வாய்ப்பு இல்லாததால் திருமணம் செய்ய ஆசைப்படும் நடிகை
பட வாய்ப்பு இல்லாததால் திருமணம் செய்ய ஆசைப்படும் நடிகை
பல வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருப்பவர், பட வாய்ப்பு இல்லாததால் திருமணம் செய்ய முடிவு செய்திருக்கிறாராம்.
திருமணம் செய்ய ஆசைப்படும் நடிகை
தமிழ் சினிமாவில் 20 வருடங்களுக்கு மேலாக கதாநாயகியாக நடித்து வரும் நடிகைக்கு தற்போது சில காலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறாராம். நடிகை நடித்த ஒரு
சில படங்கள் ரிலீசாகாமல், பிரச்சனைகளில் சிக்கி இருக்கிறதாம். இதனால் நடிகை திருமணம் செய்ய முடிவு செய்திருக்கிறாராம்.
திருமணம் தற்போது வேண்டாம் என்று தவிர்த்து வந்த நடிகை, தற்போது பட வாய்ப்புகள் இல்லாததால் தன் மனதை மாற்றி இருக்கிறாராம்.
இதற்காக பெற்றோர்கள் நடிகைக்காக வலைவீசி மாப்பிள்ளை தேடி வருகிறார்களாம்
நீச்சலுடையில் கலக்கும் காதல் இளவரசி ஓவியா
நீச்சலுடையில் கலக்கும் காதல் இளவரசி ஓவியா
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை ஓவியா கடலில் குளிக்கும் புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
நீச்சலுடையில் ஓவியா… வைரலாகும் புகைப்படங்கள்
ஓவியா
களவாணி படம் மூலம் பலருடைய கவனத்தை ஈர்த்த ஓவியா, பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் பிரபலமானார். இந்நிகழ்ச்சியில் முதல் முதலில் ஆர்மி ஆரம்பிக்கப்பட்டது
ஓவியாவுக்கு தான். ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு பல படங்களில் நடிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், எந்த பட வாய்ப்பும் இல்லாமல் இருக்கிறார்.
ஓவியா
இவர் அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிடுவதோடு தத்துவங்களையும் பதிவு செய்வார்.
இந்நிலையில், தனது சமூக வலைத்தள பக்கத்தில் பிகினி உடையில் கடலில் குளிக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
ஓவியா
மேலும் இந்த புகைப்படத்திற்கு கேப்ஷனாக ’கவலைகளை கடலில் கரைத்து விடுங்கள்’
என்றும் அவர் பதிவு செய்துள்ளார். ஓவியாவின் இந்த கிளாமர் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்
அவமானப்படுத்திய இயக்குனர்…. நடிக்க மறுத்த நடிகை
அவமானப்படுத்திய இயக்குனர்…. நடிக்க மறுத்த நடிகை
தற்போது முன்னணி நடிகையாக வலம் வருபவர், தன்னை அவமானப்படுத்திய இயக்குனர் படத்தில் நடிக்க மறுத்து விட்டாராம்.
அவமானப்படுத்திய இயக்குனர்…. நடிக்க மறுத்த நடிகை
தமிழில் முகமூடி அணிந்து வந்த நடிகை, தற்போது முன்னணி நடிகருக்கு ஜோடியாக நடித்து வருகிறாராம். ஒரு காலத்தில் நடிகை நடித்த படங்கள் தோல்வி அடைந்ததால்
அவர் அதிர்ஷ்டம் இல்லாதவர் என்று இயக்குனர்கள் முத்திரை குத்தி ஒதுக்கினார்களாம். ஆனாலும் நம்பிக்கையோடு சில படங்களில் நடித்து தற்போது அதிர்ஷ்ட தேவதையாக மாறி விட்டாராம்.
முன்னணி இந்தி இயக்குனர் ஒரு காலத்தில் நடிகையை தனது படத்துக்கு ஒப்பந்தம் செய்துவிட்டு பிறகு அவர் அதிர்ஷ்டம் இல்லாதவர் என்று நீக்கிவிட்டு வேறு
கதாநாயகியை வைத்து படம் எடுத்தாராம். அந்த சம்பவம் நடிகைக்கு வேதனையை
ஏற்படுத்தியதாம். இப்போது அதே இயக்குனர் தனது படங்களில் நடிக்க கால்ஷீட் கொடுக்கும்படி கெஞ்சிக் கொண்டிருக்கிறாராம்.
ஆனால் நடிகை ஆரம்ப காலத்தில் தன்னை அவமானப்படுத்திய அவரது படத்தில் நடிக்க முடியாது என மறுத்து விட்டாராம்
சம்பளத்தை குறைக்க மறுத்த நடிகை
சம்பளத்தை குறைக்க மறுத்த நடிகை
தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து பிரபல நடிகையாக இருப்பவர் சம்பளத்தை குறைக்க மறுத்து விட்டாராம்.
சம்பளத்தை குறைக்க மறுத்த நடிகை
வரலாற்றுப் படங்களில் நடித்து பிரபலமான தமிழ், தெலுங்கு பட நடிகை, ஒரு படத்தில்
நடிக்க ஒப்பந்தமானாராம். கொரோனா வைரஸ் பிரச்சினைக்கு முன்பாக ஒத்துக் கொண்டதால் அதிக சம்பளம் பேசி இருந்தாராம்.
இப்போது நடிகைகள் பலரும் சம்பளத்தை குறைத்துக் கொண்டதால் நீங்களும் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்று அந்த நடிகையிடம் தயாரிப்பாளர் கூறினாராம்.
இதற்கு மறுப்பு தெரிவித்த நடிகை அந்த படத்திலிருந்தே விலகி விட்டாராம். நடிகையின்
இந்த அதிரடி முடிவைப் பார்த்து படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்து விட்டார்களாம்


















