சிக்கிய மஹிந்த மகன் யோஷித
Posted in இலங்கை செய்திகள்

சிக்கிய மஹிந்த மகன் யோஷித

சிக்கிய மஹிந்த மகன் யோஷித

சிக்கிய மஹிந்த மகன் யோஷித ,முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபாரெஸ்ட் ஆகியோருக்கு எதிராக இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் பணமோசடி

தடுப்புச் சட்டத்தின் கீழ் மற்றொரு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் அபேரத்ன முன்னிலையில் இந்த குற்றப்பத்திரிகை ஒப்படைக்கப்பட்டது.

பின்னர் இரு பிரதிவாதிகளையும் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதியளித்தது.

இந்த வழக்குக்கு இணையான மற்றொரு வழக்கு எதிர்வரும் 11 ஆம் திகதி மேல் நீதிமன்றம் இலக்கம் 1 இல் அழைக்கப்படவுள்ளதாக அரசு தரப்பு சட்டத்தரணி ஒஸ்வல்ட் பெரேரா நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

அந்த வழக்கின் ஆவணங்களும் இந்த வழக்கின் ஆவணங்களும் ஒன்றே என்பதை சுட்டிக்காட்டிய அரசு சட்டத்தரணி, சம்பந்தப்பட்ட ஆவணங்களில்

ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் தனக்குத் தெரிவிக்குமாறு பிரதிவாதிகள் சட்டத்தரணிகளிடம் கோருவதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி

பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ் மற்றும் அனில் சில்வா ஆகியோர், தொடர்புடைய ஆவணங்களை ஆராய்ந்து,

ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் நீதிமன்றத்திற்கு அறிவிப்பதாக தெரிவித்தனர்.

பின்னர் வழக்கை ஓகஸ்ட்மாதம் 4 ஆம் திகதி அழைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திகதி மற்றும், 2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12 ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் முறைகேடாக ஈட்டிய 59 மில்லியன் ரூபாயிக்கும் அதிகமான பணத்தை மூன்று தனியார் வங்கிக்

கணக்குகளில் நிலையான வைப்பு கணக்குகளில் வைப்பு செய்ததன் மூலம் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் செய்துள்ளதாக குறித்த

பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபாரால் மூன்று குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு வீதியில் விபத்தில் சிக்கியவான்
Posted in இலங்கை செய்திகள்

கொழும்பு வீதியில் விபத்தில் சிக்கியவான்

கொழும்பு வீதியில் விபத்தில் சிக்கியவான்

கொழும்பு வீதியில் விபத்தில் சிக்கியவான் ,விபத்தில் சிக்கிய வான் மக்கள் காயம் ,

இலங்கை ஹரனையில் இருந்து நோக்கி பயணித்த வான் ஒரு சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது .

விபத்துக்குள்ளான வான் தற்பொழுது மீட்க்கப்பட்டுள்ளது .

கார் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

கொழும்பு பிரதான வீதியில்

கார் விபத்துக்குள்ளானதாக கொழும்பு பிரதான வீதியில் வைத்த பகுதியில் இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

காரின் சாரதி துவங்கியதால் கட்டுப்பாட்டை இழந்து வான் விபத்தில் சிக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

நெடுந்தூரம் பயணிக்கின்ற வானை ஓட்டி செல்லும் சாரதிகள் தூக்கமடைந்து வருவதால் இவ்வாறான விபத்துக்கள் அதிகம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இலங்கையில் நாள்தோறும் இடம்பெறும் விபத்து க்கள் சாரதிகள் அலட்சிய போக்கும் அவர்கள் விதிமுறைகளை மீறி விதிமுறைகளை பின்பற்றாமல் வாகனங்களை செலுத்துவதாலேயே இந்த விபத்துக்கள் அதிகமாக ஏற்படுவதாக போலீசார் தெரிவித்து வருகின்றனர் .

தற்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் இவ்வாறான விபத்துகளை தடுக்க போலீசார் தற்பொழுது மேலதிக நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிய வருகிறது.

Posted in சினிமா

வாக்கியட்டை மோசடியில் சிக்கிய போனிகபூர்

வாக்கியட்டை மோசடியில் சிக்கிய போனிகபூர்

தயாரிப்பாளரான போனிகபூரின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி மர்ம நபர்கள் ரூ 3.82 லட்சம் பண பரிமாற்றம் செய்துள்ளனர்.இந்த விடயம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

கிரெடிட் கார்டு மோசடியில் சிக்கிய போனிகபூர்
போனிகபூர்


மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் ,மற்றும் தயாரிப்பாளரான ,போனிகபூர் பல படங்களை தயாரித்துள்ளார். இவர் தயாரித்த அஜித்குமாரின் வலிமை திரைப்படம்

பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷனில் சாதனை படைத்துள்ளது. மேலும், அஜித்குமாரின் அடுத்தபடமான எ.கே.61 படத்தையும் தயாரித்து வருகிறார்.

இந்நிலையில், போனிகபூரின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி மர்ம நபர்கள் ரூ.3.82 லட்சம் பண பரிமாற்றம் செய்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன் கிரெடிட்

கார்டின் பில் கட்டவில்லை என்று போனிகபூருக்கு வங்கியில் இருந்து அழைப்பு வந்துள்ளது. அதன் பின்னர்தான் போனிகபூருக்கு கிரெடிட் கார்ட் தவறாக

பயன்படுத்தபட்டது தெரியவந்துள்ளது. மொத்தம் ஐந்து பரிவர்த்தணைகளில் இந்த மோசடி நடந்துள்ளது.

குடும்பத்தினருடன் போனிகபூர்

தனது வங்கி கணக்கில் இருந்து முறைகேடாக பண பரிமாற்றம் நடந்துள்ளதை அறிந்த போனி கபூர் மும்பை அம்போலி போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளார்.

மேலும், தனது கிரெடிட் கார்டு எண்களை குறித்து யாரும் கேட்கவில்லை. இது தொடர்பாக எந்த அழைப்பும் வரவில்லை என்றும் போனிகபூர் கூறியுள்ளார்.

வாக்கியட்டை மோசடியில் சிக்கிய போனிகபூர்

போனிகபூர் கிரெடிட் கார்டை பயன்படுத்தும் போது அவரது விவரங்களை மர்ம நபர்கள் பெற்றிருக்கலாம் என்றும் குருகிராமில் உள்ள ஒரு நிறுவனத்தின் வங்கி கணக்கிற்கு

பணபரிமாற்றம் நடந்துள்ளது என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த முறைகேடு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Posted in குற்ற செய்திகள் பிரித்தானிய செய்தி

    லண்டனில் கள்ள வங்கி அட்டை மோசடி – சிக்கிய கும்பல் – ஆடம்பர வாழ்க்கை அம்பலம்

    லண்டனில் கடந்த 14 மாதங்களுக்கு மேலாக போலியான நிறுவனங்களை உருவாக்கி அதன் ஊடாக மக்களின் வங்கி விபரங்களை திருடி அதன் ஊடாக பணத்தை திருடி ஆடம்பர

    வாழ்ககை வாழ்ந்து வந்த வாலிப கூட்டம் ஒன்றை குற்ற தடுப்பு பிரிவினர் மடக்கி பிடித்தனர்

    ஆடம்பர வாழ்க்கை

    ஐந்து நட்சத்திர விடுதி மற்றும் ரோலெஸ்க்ஸ் கைக் கடிகாரம் ,ஆடம்பர கார்கள் ,உல்லாச விடுதிகளில் விடுமுறை என சுற்றி திரிந்த கும்பலே வசமாக சிக்கியுள்ளது

    அதிக விலை கூடிய ரோலெக்ஸ் கைக் கடிகாரம் ஒன்றை கொள்வனவு செய்திட சென்ற பொழுது மேற்படி கும்பல் சிக்கியுள்ளது

    ,கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில் மேற்படி திடுக்கிடும் விபரங்கள் வெளியாகியுள்ளது

    வாலிப திருடர்கள்

    இந்த கொள்ளையில் ஈடுபட்ட அனைவரும் 23 முதல் 32 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது ,இதில் அனைவரும் முஸ்லீம்கள் என்பதும் தெரிய வந்துள்ளது

    குற்ற தடுப்பு பிரிவினர் விசாரணையின் பின்னர் அனைவரும் நீதிமன்ற விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளனர் ,போலீஸ்

    விசாரணைகளில் 90,000 பவுண்டுகள் வரை மோசடி செய்துள்ளது தெரிய வந்துள்ளது

    எனினும் இதனை விட மோசடிகள் அதிகமாக இருக்கலாம் என நம்ப படுகிறது ,


    ஓசியில உடம்பு வளர்க்கும் கூட்டம் அப்பாவி மக்கள் விபரங்களை திருடி அதன் ஊடே இந்த ஆடம்பர வாழ்க்கையை

    அனுபவித்திருக்கின்றனர் ,வெரிஃபிகேஷன் செய்ய வேண்டும் என கூறியே விபரங்களை பெற்று இந்த மோசடியில் இந்த கும்பல் ஈடுபட்டுள்ளது

    மக்களே உசார்

    மக்களே உசார் தொலைபேசி வாயிலாக யாராவது இவ்வாறு முனைந்தால் எதுவும் தெரிவிக்காதீர்கள் ,வங்கிக்கு நேரடியாக சென்று செய்து கொள்ளுங்கள்

    இவர்களிடம் மோசம் போன அனைவரும் ,அழைத்தவர்கள் யாவரும் வங்கியில் உள்ளவர்கள் என தெரிந்தே தமது வங்கி விபரங்களை தெரிவித்தன் விளைவே இந்த விடயம் இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது